Sunday, October 26, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 35. தாலமி.

=========
1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை' சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ''இதன் பொருள் என்ன?'' என்று விளக்கம் கேட்டால், ஒன்று அவன் எழுத்தாளனது திறமைக்குறைவை அல்லது வாசகர்களது வளர்ச்சியின்மையைக் குறிக்கும்.

2. தந்தி மூலம் வரும் செய்திகள் பல நம்மை அதிர வைக்கின்றன; அல்லது பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன. சிறுகதைகள் தந்தி மூலம ்வரும் செய்திகள். சொற்செட்டும், பொரூளட்செட்டும்் சிறுகதையின் இன்றியமையாத இலக்கியப் பண்புகள்.

3. ''அவன் கண்கள் நெருப்புப்போல் சிவந்தன,'' என்று எழுதுவதைக் காட்டிலும், நெருப்புப்போல் கண்கள் சிவந்துவிட்ட ஒருவன் சொல்லும், சொல்லத்தடுமாறும், சொல்லத்தவறிவிட்ட சொற்களை, அல்லது செய்யும், செய்ய நினைக்கும் செயல்களை உணர்த்துவதே, சிறுகதைப்பாங்கு. சிறந்த இலக்கியத்தில் உள்ளமும், உளநிலையும் சொல்லிலும், செயலிலும் பிடிபடுகின்றன.

4. சிறுகதை ஒரு நோக்குடன் அமைய வேண்டும். அது ஆசிரியனின் நோக்காவோ கதையில் வரும் பாத்திரத்தின் நோக்காவோ இருக்கலாம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை எழுத்தாளன் செய்யக்கூடாது.

5. ஏனையக் கலைகளைப்்பொல்வே, அறிவுணர்வாலொ அல்லது சிந்தனை உணர்வாலோ தொடப்படாதொன்றத் தொடுவது சிறுகதை. அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. தீ்ர்ப்பது அதன் நோக்கமோ, ஆளுகையோ அல்ல. ஜோசப் கார்நாடின் ''இளமைய''யோ , கார்க்கியின் ''ஏதாவது ஒன்று செய்வதற்காக''வோ , ஹெமிங்வேயின் ''கொலைகாரர்''களோ , ஷெர்வுட் ஆண்டர்சனின் ''காட்டிலோ ஒரு சா''வ'ோ , எந்தப் பிரச்சினையத் தீர்க்கிறது?

6. துணிந்த சிறுகதை எழுத்தாளன், ஆஸ்்கார் ஒயில்டுவின் ''்எல்லாக் கலையும் பயனற்றது'', என்ற முடிவை ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும்.

7. சிறந்த சிறுகதைகளை எழுதுவதோ, , படிபதோ பொழுதுபோக்கல்ல. இரண்டுமே மனிதத்துவம் நிறைந்த செயல்கள்.



----- o -----

No comments: