Sunday, January 31, 2010

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான 'அரையர்'களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரணமாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், 'நாடு, நாட்டுக்கூட்டம்,நாடுகாவல்' என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும் தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது பதிப்புரையில் 'ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்' என்கிறார். நூலை வாசித்து முடித்த
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 0


நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

21 comments:

  1. சோழ மன்னர்கள் அனைவரும் மேல்கொண்டான் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழன் மகன்கள் இறந்துவிட்டதால் தனது மகளுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் பிறந்த முதலாம் குளோத்துங்கனை சுவீகாரமாக இராஜேந்திரன் மனைவி தத்து எடுத்துக்கொண்டதால் அவனும் மேல்கொண்டான் ஆனான். இச் செய்தி கலிங்கத்துப்பரணியல் உள்ளது.
    அதிகமான கல்வெட்டுகளில் இவைகள் உள்ளன

    ReplyDelete
  2. மிகச்சிறந்த நூல் அறிமுகம்.

    ReplyDelete
  3. சிலையெலுபது படித்து விட்டு பதிவிடுங்கள். கருனாகரதொண்டைமான் வன்னியர் , சாளுக்கியர்கள் இன்றும் வன்னியர்களை உள்ளனர் . சோழர்களின் குலதெய்வ கோவிலான சிதம்பரத்தில் வன்னியர் இனத்தை சேர்ந்தவருக்கே இன்றும் சோழர்களாக முடிசூடபடுகிறது . ... கள்ளர்கள் சிறுபான்மை சாதியினர் தமிழகத்தில் ...

    ReplyDelete
    Replies
    1. அதுவே சோழ வமசத்துல தஞ்சாவூர்ல முடிசூடபடவில்லை

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தமிழ் நாடு அரசுகள்
    ================
    ஆட்சி 2050 வருடம் - பாண்டிய அரசு (தமிழ் பாண்டியன்) : கி.மு.600–கி.பி.1550

    ஆட்சி 1579 வருடம் - சோழ அரசு (தமிழ் சோழன்) : கி.மு.300–கி.பி.1279

    ஆட்சி 1424 வருடம் - சேர அரசு (தமிழ் சேரன்) : கி.மு. 300 –கி.பி.1124

    ஆட்சி 622 வருடம் - பல்லவ அரசு (தமிழ் & தெலுங்கு பல்லவன்) : கி.பி.275–கி.பி.897

    ஆட்சி 409 வருடம் - யாழ்ப்பாண அரசு ( தமிழ் சேது ) : கி.பி.1215–கி.பி.1624

    ஆட்சி 400 வருடம் - களப்பிர அரசு (பாளி களப்பாளன்) : கி.பி 300- கி.பி. 700

    ஆட்சி 389 வருடம் - பூழி நாடு (தமிழ் மறவர்) : கி.பி.1378 -கி.பி.1767

    ஆட்சி 333 வருடம் - சேதுபதி அரசு (தமிழ் மறவர்) : கி.பி.1590-கி.பி.1923

    ஆட்சி 310 வருடம் - விஜயநகர அரசு (தெலுங்கு,கன்னடம் நாயக்கர்) : கி.பி.1336–கி.பி.1646

    ஆட்சி 281 வருடம் - பிரெஞ்சு குடியரசு (பிரெஞ்சு): கி.பி.1673–கி.பி. 1954

    ஆட்சி 262 வருடம் - கள்ளர் குல தொண்டைமான் அரசு (தமிழ் கள்ளர் ) : கி.பி.1686 - கி.பி.1948

    ஆட்சி 254 வருடம் - வெள்ளையர்கள் (ஆங்கில) : கி.பி.1693 - கி.பி.1947

    ஆட்சி 241 வருடம் - முத்தரையர் அரசு (தமிழ் முத்தரையன்) : கி.பி.610 - கி.பி.851

    ஆட்சி 207 வருடம் - மதுரை நாயக்கர் அரசு (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1529 - கி.பி.1736

    ஆட்சி 181 வருடம் - மராட்டிய அரசு (மராட்டி) : கி.பி.1674–கி.பி.1855

    ஆட்சி 141 வருடம் - தஞ்சாவூர் நாயக்கர்கள் (தெலுங்கு நாயக்கர்): கி.பி.1532–கி.பி.1673

    ஆட்சி 139 வருடம் - சம்புவரைய அரசு (தமிழ் சம்புவரையன் ) : கி.பி.1236- கி.பி.1375

    ஆட்சி 43 வருடம் - மதுரை சுல்தான் (உருது துலுக்கர்): கி.பி.1335–கி.பி. 1378.

    மூவேந்தர்களுக்கு பிறகு தமிழ் நாட்டை ஆண்ட ஒரே மன்னர் இனம் முக்குலத்தோர் மட்டுமே.

    ReplyDelete
  7. வன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சொல்ல இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் அதுவும் இவர்கள் கனவே

    பிச்சாவரம் ஜமீன் கதை :

    // 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

    2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

    3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

    4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

    1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
    அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

    2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
    இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

    3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
    மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.

    4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்

    ReplyDelete
  8. கோயில் வரலாறு:

    கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
    கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

    1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.

    கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

    பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

    மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.

    21.1.1711 - வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

    19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.

    மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

    ஆதாரம் சொன்னவர்:
    புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
    முன்னாள் தலைவர்
    கல்வெட்டியல் - தொல்லியல் துறை

    ReplyDelete
  9. 800 வருடங்களாக முக்குலத்தோரை தவிர யாருக்கும் தனி அரசு உண்ட

    இன்றும் சோழ மற்றும் பல்லவர்களுடைய முறையான நாடு அதில் கோட்டம், ஊர் நாடு, கரை, கிளை என்று வைத்து வாழும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே, எங்கும் ஓரு சத்திரியனும் யாருக்கும் அடங்கி வாழ்வானா?

    இந்த 800 வருடங்களாக வன்னியர் சாதியினர் எல்லோரும் எங்க இருந்திங்க, அய்யோ பாவம்;

    எங்களுடைய ஓரு சாரார் ஆநிரை கவரும் கள்ளனா இருந்த எங்க வரலாற்றையே களவாட பார்க்கிறார்கள்.

    கள்வெட்டுகளில் மன்னர்கள் பெயர்களுக்கு முன் உள்ள கள்ள, கள்வர் என்ற உயர்ந்த சொல்லுக்கு நீங்கள் வேற அர்த்தம் சொன்னாலும் இங்கள் இன பெருமை மாறாது. கள்வெட்டுகளில் உள்ள ஸ்ரீ கள்வர் கள்வன் ராஜராஜன் இதற்கு அரசன் என்று பொருள்

    முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல் சிலையெழுபது. இவர்கள் கருணாகரத் தொண்டைமான் (இவன் பல்லவன்) முதலாம் குலோத்துங்க சோழரின் (இவன் சாளுக்கியன் ) படைத்தளபதி வன்னியர் குலம் என்று சொல்கிறார்கள் அனால் அரசனும் வன்னியரா எப்படி?, வன்னிய புகழ்பாடும் சிலையெழுபது ஏன் மன்னனை விட்டு தளபதியை புகழ்கிறார், பல்லவர் வன்னியர் குலம் என்றால் சோழ சேர பாண்டிய மன்னர்கள் எப்படி வன்னியர்கள் ஆவர்.

    வன்னியர் குலம் என்பது வன்னியரா? ஆமாம் அப்போ பள்ளி, படையாச்சி அதுவும் தான், அப்போ சூர்ய, சந்திர, அக்கினி, ருத்ர, இந்திர, வன்னிய குலமா? ஆமாம் எல்லாம் வன்னியர்களுக்கு உள்ளது மற்ற சாதியினர்க்கு உள்ள வன்னியர் பட்டம்? அதுவும் எங்களுக்கு உள்ளதுதான் அது திருடப்பட்டது
    அப்ப சோழ, சேர, பாண்டிய, பல்லவ எல்லாரும்? அதுவும் நாங்கள் தான் , நீங்கள் கடந்த 800 வருடங்களாக எங்க இருந்திங்க, அது வந்து அது வந்து முக்குலத்தோர் ஜமீன்களை யும் பட்டங்களையும் எப்படி திருடுவதுனு இருந்தோம்.

    அது சரி வன்னியன் உங்களுக்கு 100 அல்லது 150 பட்டம் இருக்கலாம் ஆனால் முக்குலத்தோர்க்கு 2000 பட்டம் உள்ளது அது வன்னியர் களிடம் இருந்து திருடியதாக சொல்லுறிங்க ஆனால 80 % வன்னியர்களுக்கு பட்டமே இல்லையே, அதுவதான் முக்குலத்தோர் திருடினார்களா? டேய் உங்கள் அக்கப்போருக்கு அளவேயில்லையா, நீங்கள் என்னதான் முக்கினாலும் வன்னியர் ராசாவா ஆகமுடியாது.

    Hindu Castes and sects, 1896, Jogendra Nath Bhattacharya;
    ஹிந்து சாதிகளும் பிரிவுகளும் என்ற நூலிலும் மிலிட்டரி, அதாவது போற்குடிகள் என்ற பிரிவில் பள்ளிகள் இல்லை. மாறாக விவசாய கூலிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் போற்குடிகள் முக்குலத்தோர் மட்டுமே . வன்னியர் 1871 ல் புள்ளிவிவர கணக்கெடுக்கும் போது, தங்களை சத்திரியர் என்று வகைப்படுத்த கெஞ்சி-மன்றாடி கோரிக்கை வைத்தனர். ஓட்டுக்காக இது தரப்பட்டது இது மட்டுமா BC லிருந்து MBC கெஞ்சி-மன்றாடி வாங்கியது.

    இங்கு வன்னி-வன்னியன், மள்ளர் -மல்லர், மறவர் - கள்ளர் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மன்னரை மட்டும் குறிக்கும் அதனால் நான் தான் மாமன்னன் என்றால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு பிறகு உங்கள் வீர வரலாறு என்ன.

    வன்னியர்கள் இப்போது சொல்ல வரலாறு இல்லை அதான் வாரிசுகள் இல்லாத மறவர் கள்ளர் ஜமீன்களை தங்களுடைய திருட்டு வரலாறு க்கு சேர்த்துக் கொண்டு மேலும் கள்ளர் பட்டங்களான வன்னியர், கொங்கரையர், வல்லவரையன், தொண்டைமான் மற்றும் மறவர் பட்டங்களான வன்னியனார் (வன்னி கொத்து மறவர் ) தங்களுடையது என்று கூறுவது மிகவும் கேவலமாக இருக்கிறது.

    முக்குலத்தோரை சேர்ந்த மக்கள் என்றுமே வன்னியர் ஜமீன்கள் கீழே இருந்ததில்லை இவர்கள் விஜயநகர நாயக்கர் மன்னர்கள் கீழே மட்டுமே சில இடங்களில் இருந்திருக்கிறார்கள்.

    வ.சூரக்குடி (வன்னிய சூரைக்குடி (அ) வளநாடு சூரக்குடி) யில் வாழும் வன்னியர் பட்டம் தாங்கிய கள்ளர் இனத்து வழி வந்த பாளையத்தை அவர்களும் வன்னியர் சாதி என்று கூறும் கேவலமான செயல், மேலும் மறவர் ஜமீன்களான தலைவன் கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சிவகிரி ஜமீன்கள் தங்களது என்று முக்குலத்தோர் ஜமீன்களை திருடுவது.

    சிவகிரி ஜமீன் வாரிசு நான் மறவர் என்று அவர் சொல்லிய பிறகும் அதற்கு ஓரு கதை சொல்வது

    மதுரையில் முஸ்லிம்கள் மீனாட்சி கோயிலை 100 ஆண்டுகள் மூடி மக்களை சொல்லாதுயராக்கிய நேரத்தில் முக்குலத்தோர்க்கு ஆதரவாக வந்த நாயக்கர்களை எதிர்த்த சம்புவராயன் வழி வந்தவர்கள்தான் இந்த வன்னியர்கள், பின்பு நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்தார்கள் . அதே நாயக்கர்கள் முக்குலத்தோரை அடிமையாக்க நினைக்கும் போது எதிர்த்து தனியரசாக செயல்ப்பட்ட னர் என்பது வரலாறு.

    ReplyDelete
  10. கோயில் வரலாறு:

    கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
    கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.

    1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார்.

    கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.

    பீஜப்பூர் சுல்தான் படைத் தாக்குதலில் 24.12.1648 லிருந்து குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர்.

    மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. தஞ்சையில் ஆட்சி செய்த வீர சிவாசியின் மூத்த மகன் தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். 21.11.1684 (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது.

    21.1.1711 - வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவரிடம் நிர்வாகம் இருந்தது

    19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது.

    மூவர் தமிழ்த் தேவாரப் பாடலைச் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். வடமொழிக்கு நிகராகத் தமிழ் இருக்கக் கூடாது என்றனர்.

    ஆதாரம் சொன்னவர்:
    புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
    முன்னாள் தலைவர்
    கல்வெட்டியல் - தொல்லியல் துறை

    ReplyDelete
  11. வன்னியர்கள் வடக்கில் ஏதாவது உங்கள் வீர வரலாறு சொல்ல இருக்கா என்று பாருங்கள், பிச்சாவரம் ஜமீன் (இவர்களுக்கு வீர வரலாறு ஓன்றும் இல்லை) பட்டம் கட்டுவதை வைத்துக் கொண்டு சோழர்கள் என்று பெருமை பேசலாம் அதுவும் இவர்கள் கனவே

    பிச்சாவரம் ஜமீன் கதை :

    // 1) களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

    2) தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

    3) இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

    4. இங்கு மற்ற இனத்தவர் பட்டம் கட்ட முடியாது. // இது தான் வன்னியர்கள் சோழர்கள் என்று சொல்ல காரணம். அதற்கு விளக்கம்

    1. களப்பிர அரசன் (காலம் கி.பி 300) - வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள், இவர் சைவத்தை ஆதரிக்க வில்லை, இவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற கருத்தும்உண்டு (களப்பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருத்தும்உண்டு : ஆதாரம் விக்கி ) அதனால் அந்தணர்கள் இவர்களுக்கு முடி சூட்டப்படாது தவிர்த்திருக்கலாம்.
    அதனால் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்திருக்கலாம்.

    2) அப்போது உள்ள அந்தணர்கள் காலம் (கி.பி 300 ) இப்போது உள்ள தில்லை வாழ் அந்தணரால் காலம் ( கி.பி 1800) கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள
    இவர்கள் அதே அந்தணர்களா? (இப்பொழுது உள்ள அந்தணர்கள் கோவில் தங்களது என்று பொய்யாக வழக்கு போட்டதை எல்லோரும் அரிந்ததே). நிர்வாகம் சோழனுக்கு பிறகு பல பேரிடம் போய் 18ஆம் நூற்றாண்டில் இவர்களிடம் வந்தது, ஆதாரம் கீழே

    3) கி.பி 1844 முன்பாக இவர்கள் யாருக்கும் முடி சூட்டவில்லை
    மேலாக சோழனாரே தம்மை இரண்யவர்ம பல்லவன் வழியினர் என்று கூறுகிறார். 1844 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் கட்டப்பட்ட ஆதாரமும் இல்லை.

    4) வெள்ளையர் காலத்தில் அந்த அந்த பகுதியில உள்ள ஜமீன்களே அங்குள்ள கோயிலுக்கு முடி சூட்டப்படும் உரிமையைப் பெற்றார்கள். அதர்க்கு உதாரணம் இப்பொழுதும் தஞ்சை கோவிலில் மராட்டிய சரோபோஜி வாரிசுக்கும், இன்றும் பட்டம் கட்டுவதை காணமுடிகிறது. இது போல தான் பிச்சாவரம் ஜமீன்களுக்கும்

    ReplyDelete
  12. https://www.facebook.com/தேவர்-பெருமைகள்-1630516537214329/?hc_ref=SEARCH&fref=nf

    இந்த தளம் சொல்லும் திருட்டு கள்ளரின் வீரவரலாற்றை ஆதாரத்துடன் .

    ReplyDelete
    Replies
    1. திருடன் தான்டா அடுத்தவன்கிட்ட இருந்து உடமையை திருடுனவன் இல்ல ஏமன் கிட்ட ஊயிர பறிக்குற உரிமையை திருடுனவங்க சத்திரியன்....

      Delete
  13. இவ்வளவு கதை எழுதுனவனுங்க மன்னார்குடி தஞ்சாவூர் பகுதியில இருந்துகிட்டு எல்லா இடத்துலயும் ஆட்சி செய்தானுங்கலாம் . சோழர்களில் பல சோழர்கள் உள்ளனர் அவர்கள் ஆட்சி செய்த பகுதியிலும் அவர்கள் கட்டிய கோவில்களிலும் வன்னியர்களுக்கே மரபு உரிமைகள் உள்ளன . ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் கள்ளன் = திருடன் , கள்ளர் = திருடர்

    ReplyDelete
    Replies
    1. தஞ்சை பெரிய கோவிலில் என்ன மரபு உரிமை இருக்கிறது

      Delete
  14. பள்ளு முத்திய பள்ளி பசங்களுக்கு வரலாறு ஏதும் கிடையாது. சொந்த சாதி பேரு சொல்லாம புதுசா வன்னியர் என்று சாதிய மாத்தி கத சொல்லுரானுங்க. சரி எழுபது வன்னியர் என்பது பள்ளி சாதிய குறிக்குமா அதுவும் இல்லை. சரி வன்னியர் சாதிய சிலை எழுபது குறிக்கும் என்றால் அதுவும் இல்லை. ஒரிசா வந்தேரியான பள்ளி சோழனா. பிச்சாவரம் குடும்பத்தினரிடம் 1850 முன்னாடி உள்ள பேர கேட்ட தெரியது. மராட்டியர் கூட வந்த வேலைகார பசங்க மன்னர்களா

    ReplyDelete
  15. கள்ளர் எனப்படுவோர் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஒரு பெருங் குழுவினரைக் குறிக்கும். அதே போல இங்கே மறவனும், அகமுடையனும் பெருங் குடியினராக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. தமிழ் இனத்தின் உண்மையான அடையாளம்
    =====================================

    பல ஆயிரம் ஆண்டுகளாக முக்குலத்தோர் மூவேந்தர்களாகவும், பலர் சிற்றரசாகவும் தமிழகத்தில் ஆட்சி செய்து வந்துள்ளனர், அவர்களில் பலர் மாமன்னர்களாக மக்கள் மனதிலும், வரலாற்றிலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள்,

    அவர்களில் 14 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சிறப்பு பெற்று விளங்கிய மாமன்னர்கள், தளபதிகள் மற்றும் போராளிகள் பலர் இருந்தாலும் அவர்களில் சிலர்

    * மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி

    * மன்னர் ஆவுடை ராயத் தொண்டைமான்

    * மன்னர் இரகுநாத கிழவன் சேதுபதி

    * மன்னர் இரகுநாதராய தொண்டைமான்

    * தளபதி வீர தளவாய் வயிரவன் சேர்வை

    * மன்னர் பூலித்தேவர்

    * மன்னர் வாண்டாயதேவர்

    * மன்னர் சசிவர்ம பெரிய உடைய தேவர்

    * மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

    * மன்னர் முத்துவடுகநாத தேவர்

    * ராணி வேலுநாச்சியார்

    * மன்னர் மருது பாண்டியர்கள்

    * தளபதி மயிலப்பன் சேர்வைகாரர்

    * மன்னர் வாளுக்கு வேலி அம்பலம் மற்றும் கள்ளர் நாடு அம்பலகாரர்கள்

    * சிங்கம்பட்டி மன்னர் பெரியசாமி தேவர் (தூக்குத் துரை தேவர் )

    * தளபதி வெள்ளைய தேவன்

    * தளபதி கருப்பசேர்வை

    * சின்ன மருது மகன் துரைச்சாமி

    * போராளி பெருநாழி ரணசிங்கம்

    * வரி கட்ட மறுத்து உயிர் விட்ட 6000 வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள்

    * வெள்ளையர்களுக்கு எதிராக உயிர் விட்ட மாயக்காள் மற்றும் தன்னரசு நாட்டு கள்ளர்கள்.

    * ஒற்றன் இராமு தேவர் ( நேதாஜி தேசிய படை)

    * தளபதி ஜானகி தேவர் (நேதாஜி தேசிய படை)

    * வாய்பூட்டு சட்டம் போட்டு அடக்க நினைத்த ஐயா முத்துராமலிங்க தேவர்

    * போராளி வாட்டாகுடி இரணியன்

    மேலும் இவர்களுடன் சேர்ந்து உயிர் விட்ட நம் குல வீரர்கள் மற்றும் நம் குல மக்கள் பல இலட்சம் பேர். முக்குலத்தோர் மட்டுமே இறுதிவரை யாருக்கும் அடங்காமல் வீரத்தோடு வாழ்ந்தவர்கள்.
    .
    .
    .

    * சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் :

    நான்காம் தமிழ்ச் சங்கம் - "பைந்தமிழ்க் காவலர்" பாண்டித்துரைத் தேவர்

    தஞ்சைத் தமிழ்ச் சங்கம் - பாப்பாநாடு சமீன்தார் சாமிநாத விசய தேவர்

    கரந்தைத் தமிழ்ச் சங்கம் - "செம்மொழிப்புரவலர்" வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்,
    "தமிழவேள்" உமாமகேசுவரனார்

    மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'பண்டிதர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'புலவர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டுவந்தது.
    .
    .
    .
    * மேலும் முக்குலத்தோர் பெருமைகளாக இன்றும் விளங்குபவை :

    1) சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் நாடு என்ற அமைப்பை உருவாக்கி வாழ்பவர்கள் முக்குலத்தோர் மட்டுமே

    2) சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் அனைத்து பட்டங்களையும் மற்றும் 2000 கும் மேலான சிறப்பு பட்டங்களை இன்றும் பயன்படுத்தி வருபவர்கள்.

    3) கடந்த நூற்றாண்டு முன்பு வரை போர் தொழில் மட்டும் செய்தவர்கள்

    4) தமிழனின் பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் ஏறு தழுவுதல் இன்றும் தன் வாழும் பகுதிகளில் நடத்தி வருபவர்கள்.

    5) வளரி என்ற பழமையான ஆயுதத்தை கடந்த நூற்றாண்டு முன்பு வரை பயன்படுத்தியவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.

    6) சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் குடும்ப பெண்கள் அழைக்கப்பட்ட நாச்சியார் என்பதை இன்றும் பயன்படுத்தி வருபவர்கள் முக்குலத்தோர் மட்டுமே.

    ReplyDelete
  18. புதுக்கோட்டை மன்னர் தெ்ாண்டைமான்கூட படையாச்சித்தானோ நீலன் முத்தரையன் (பரகாலன்)திருமங்கை மன்னர் இவனும் படையாச்சிதானோ?
    வன்னியன்,சேர்வை,சேர்வைக்காரர் இவைகள் அனைத்து ஜாதி படைவீரர்களுக்குக் கொடுத்த பட்டம்.
    இத்தணை பட்டமும் அனைத்து ஜாதியருக்கும் உண்டு பிச்சாரவத்தின் ஜமீனுக்கு பென்கொடுப்பர்கள் காலாட்கள் தோழ உடையார் அதாவது உடையார் பாளைய ஜமீன்
    அவர்கள் தெழுங்கர்கள்
    விஜயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரஸிம்ம ராயரென்னும் அரசருடைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையகாரராகப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையாரென்பவர் ஆண்டு வந்தார். விஜய நகரத் தரசரின் ஆளூகைக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ்வரசர் பிரதிநிதியாக ஆண்டு வந்த உதயகிரி, ராமபத்ரநாயக்க ரென்பவருக்குப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் பலவகையில் உதவி புரிந்தார். வட நாட்டிலிருந்து போர் புரிய வந்த 'பரீத் ஷா' என்னும் மஹம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜயநகரத்தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றி பெற்றார். அதனால் விஜயநகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கினார். பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரைகளையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சீபுரப் புரவலன்' என்பது ஒன்று. உடையார் பின்னும் பலவகையில் விஜய நகரத்தாருக்கு உதவி செய்து பலவகை ஊதியங்களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவினரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரக்குடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.
    சின்ன நல்லப்ப உடையார்
    பள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவருடைய மூத்தகுமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பியான சின்ன நல்லப்பக் காலாட்கள் தோழ உடையார் தலை வரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகையான தர்மங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயரென்னும் பெரியோரிடம் உபதேசம் பெற்றவர். குருநமச் சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.

    ReplyDelete