Sunday, November 11, 2007

பந்த்

பந்த்

இரண்டு நாளாய்
இடியும், மின்னலும்,
காற்றும் மழையும்-

இதனிடையே
வெற்றிகரமாய் ஒரு 'பந்த்'!

கரைவேட்டிக்காரர் யாரும்
கதவடைக்கச் சொல்லவில்லை;
பாமாகாவும்
பாதை மறியல் செய்யவில்லை;

குட்டித் தொண்டர்களின்
குறிபார்த்தக் கல்வீச்சில்
பஸ் நிறுத்தம் ஏதுமில்லை;

சாலை நடுவே
வீழ்ந்த மரங்களுக்கு
சாதிக்கட்சிகள் பொறுப்பில்லை;

மின்கம்பிகளும்
தொலைபேசிகளும்
துண்டிக்கப் பட்டதற்கு
சமூக விரோதிகள் காரணமில்லை;

அத்யாவசிய சேவைகளுக்கு
அரசு தரும் சலுகையும் இல்லை;

பொது ஜனங்களும்
புகார் ஏதும் செய்யவில்லை
போலீசுக்கும் வேலை இல்லை;

எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி
வெற்றிகரமாய் நடந்தது 'ப்ந்த்'!

எதிர்க்க யாரும் இல்லை
என்பதால் அல்ல -
எதிர்க்கத் திராணி
யாருக்கும் இல்லை
என்பதால்தான்!

இயற்கை நடத்திய
'பந்த்' துக்கு
இமாலய வெற்றி!

1 comment:

முல்லை அமுதன் said...

nantru.
nadpudan,
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/