கடிதம் - 50
('சந்திரமௌலி'என்கிற பி.ச.குப்புசாமி கவிஞர்ஆதிராஜுக்கு எழுதிய கடிதங்கள்)
திருப்பத்தூர்.வ.ஆ.
1-3-65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
ஜெயகாந்தனின் 'உன்னைப்போல் ஒருவன்' படம் அருமையாக வந்திருக்கிறது.
"இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது; அவர்களின் ஆத்மாவைப் பற்றியது. எனவே இதுவும் அவர்கள் வாழ்வைப் போலவே மெதுவானது; மந்தமானது; தேக்கமானது." - என்கிற சிறு விளக்கத்தோடு படம் ஓடத் துவங்குகிறது.
சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிஷம் படம் ஓடுகிறது. 11145 அடி.
சில விமர்சனங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். படத்தின் சிறப்பை அவை விளக்கும்.
காமராஜ்:
"இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி அவர்கள் ரசனையை மாத்தணும்."
ஸாதூல் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு விமரிசகர்:
"மனித மனத்தில் பெரிய அளவுக்குச் செயல் விளைவுக¨ª உண்டாக்குகிற படங்களின் வகையைச் சேர்ந்தது அது."
இல்லஸ்ரேட்டட் வீக்லி (7 - 2 -65) :
யதார்த்தம் என்பது - ஜெயகாந்தன் சத்யஜித்ரேயை வழிகாட்டியாகக் கொண்டிருந்த போதிலும் - ரேயை விட ஜெயகாந்தனிடம்தான் உண்மையில் உள்ளது. இதைப் போன்ற படங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைவு. ஜெயகாந்தன் நேர்மையானவர்; துணிவு மிக்கவர்; புரட்சிகரமானவர். விரைவில் இவர் ரேயைப் போல் இன்னொரு தனி நட்சத்திரம் ஆகிவிடுவார்"
அநேகமாக இவ்விஷயங்களை நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்துக்கு ஜனாதிபதி பரிசு நிச்சயம் கிடைத்தே தீரவேண்டும்.
இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம். ஜெயகாந்தன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார்.
விவேகாநந்தரின் 'ஞானதீபம்' படித்ததாக எழுதியிருந்தீர்கள். எந்தச் சமயத்தினருக்கும் பொதுவாகப் பயன்படக்கூடிய சொத்துக்கள் ஹிந்துசமயத்தில் சில உள. அவைகளுள் சரஸ்வதி, கவிதை, சமஸ்கிருதம் போலவே விவேகாநந்தரும் ஒருவர்.
'ஞானதீபம்' இரண்டாவது பாகம் படியுங்கள். இந்தியாவின் வரலாறு, இந்தியா வளர்ந்தவிதம், இந்தியாவின் சமண பௌத்த சாக்த சமயங்களுக்கு, ஹிந்து சமயத்தோடு உள்ள உறவு - இவைகளையெல்லாம் பிரமிக்கத்தக்க வகையிலே ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.
விவேகாநந்தரைப் படிப்பதால் ஹிந்து சமயத்தினருக்குச் சமய ஞானமும் அது பற்றிய பலமுமே லாபமாகக் கிடைக்கிறது என்பது பலரது அறியா முடிவு. ஆனால், உண்மையில் விவேகாநந்தர் ஹிந்து சமயத்தினருக்கு மட்டும் பயன்படக் கூடியவரல்ல. வாழ்வுத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள ஹிந்து சமயமும், அறிவுபூர்வமான - ஆஸ்திகத்திற்கு ஒருவகையில் நாஸ்திக 'எதிர்விளைவு மருந்தை' அளிக்க வந்த சமண சமயமும், மனிதன் இறுதியில் ஆசையை நிராகரிக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்த வேண்டி அவன் பருவங்களின் வேறு இயல்புகளுக்கு வழிவகுக்கத் தவறிய பௌத்த சமயமும் - எல்லாம் விவேகாநந்தரால் பயன்பட முடியும்.
இந்தியாவில் ஒர் ஆன்மீகவாதிக்குச் சமுதாயத்தில் உள்ள பொறுப்பும், சமுதாய வாதிக்கு ஆன்மீகத்தில் உள்ள பொறுப்புமே விவேகாநந்தர் அறிவுறுத்துபவை.
சமுதாயமும், ஆத்மாவும் எல்லா சமயங்களுக்கும் பொது அல்லவா?
கம்பராமாயணம் படித்து வருகிறீர்களா? கவிஞர்களுக்கு அது ஒரு தெய்வீக மருந்து. தேவர்கள் ஒரு காலத்தில் அமிர்தம் உண்டதை நான் சிறுவயதில் கேட்டு அதற்காகப் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால் கவிஞனுக்கு கம்பராமாயணத்திலிருக்கிற விருந்து தேவர்களுக்குக் கூட வேறெங்கும் இருக்காது. எனவே எப்பாடு பட்டாவது கம்பனை முதலிலிருந்து கடைசிவரை ஒருமுறை படித்துவிடுங்கள். பாரதி யின் 'பாஞ்சாலி சபதத்தை'யும் அவ்வாறே சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் ஆற்காட்டிலிருந்து கொண்டுவந்ததாக எழுதிய புஸ்தகங்களுள் 'சித்தார்த்தன்' அவ்வளவு நன்றாயிருக்காது. மற்றவை பயனுள்ளவையே! படித்து முடியுங்கள்.
என்னிடம் ஜவஹர்லால் நேருஜியின் ஆங்கிலப் பிரசங்கங்கள் முழுத் தொகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ளப் படித்து வருகிறேன். மற்றபடி, வேறு புஸ்தகங்களெதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. Hindu Marriage Bill பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்டபொழுது நேருஜி ஆற்றியிருக்கிற உரை மிகப் பிரமாதமாயிருக்கிறது. ஒரு பெரும் தத்துவ ஞானியினுடைய உரை அது.
'புதுமைப்பித்தனின் கட்டுரைகள்' அங்கு லைப்ரரியில் இருந்தால் எடுத்துப் படியுங்கள்.
நமது நண்பர்களைப் பற்றி எழுதுங்கள். நண்பர்கள் பெருஞ்செல்வம் என்று எழுதினேன். அப்படி இருந்த போதிலும் யாரிடத்தும் என்னை நான் பூர்ணமாக வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. நானோ அல்லது நண்பர்களோ - யார் காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. எதுவோ அதற்குக் காரணம். நம் சிதம்பரம் அடிக்கடி கடிதம் போடுகிறது.
புதிய நண்பர்களுள் ஒருவரை, இன்னும் உங்களுக்குச் சரிவரத் தெரியப் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். சிதம்பரத்தின் ஹெட்மாஸ்டர் - தற்போது மங்கலம்பேட்டை(தெ.ஆ)யில் இருக்கிறார் - சபாநாயகம் என்பவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறேனா?
நல்ல நண்பர். நமது ரகம். ஓவியம், புகைப்படம், சங்கீதம், எழுத்து, ரேகை என்று பல விஷயங்களில் - பரிச்சயமுள்ளவர். எழுத்து சம்பந்தமாக நம்மோடு பூர்ண ஒற்றுமையுள்ள அபிப்பிராயங்களைக் கொண்டவர். 'சபா' என்கிற பெயரில் கதைகள்எழுதியிருக்கிறார். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார். நானும் பதில் போடுகிறேன். சற்று அந்தரங்கமான நண்பராக விரைவில் அமைவார். சந்தர்ப்பம் நேரும்போது தங்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்விக்கிறேன்.
தங்களது அந்த நீண்ட கடிதத்தில் ஒரு அருமையான வரி இருந்தது - "வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது" என்று.
வாழ்க்கை மாறித்தான் விட்டது. மிக மிக மாறிவிட்டது.
கடிதம் எழுதுங்கள்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
( இத்துடன் இக் கடிதஇலக்கியத் தொடர் முடிவுறுகிறது. - வே.சபாநாயகம் )
Showing posts with label கடித இலக்கியம். Show all posts
Showing posts with label கடித இலக்கியம். Show all posts
Friday, June 01, 2007
கடித இலக்கியம் - 49
கடிதம் - 49
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, 'தமிழ் ஒளி'யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கருதுகிறேன். அதிலே 'கண்ணம்மா பாட்டு' எனக்கு மிகவும் பிடித்தது. அதில் தென்படும் ஆழ்ந்த
சோகம் அற்புதமானது. என் நினைவுகளை அது அடிக்கடி தனது அந்தச் சோகத்தால் இப்பொழுதெல்லாம் இடைமறிக்கிறது. 'தமிழ் ஒளி'யின் உள்ளம், வண்ணங்கள் குழைப்பதில் தெய்வத்தின் வரப்பிரசாதம் பெற்ற ஓர் அபூர்வ சித்ரக் கலைஞனைப் போல் எத்தகைய சௌந்தர்யத்தோடிருக்கிறது! இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க் கவிஞன் அவன். அவனுக்கு டி.பி. அவனுக்கு இருப்பிடம் இல்லை! ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியவில்லை!
'தமிழ் ஒளி' அந்த நாட்களில் எழுதிய 'வீராயி' என்கிற காவியத்தை, சென்னை செல்லும்போதெல்லாம் 'கன்னிமாரா' என்கிற கடலுக்குள் வலைவீசித் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வேறு, புதிதாகவும் எதுவும் கிடைக்கவில்லை.
'தமிழ் ஓளி' இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க்கவி என்கிற விஷயத்தை நான் பிரஸ்தாபித்தபொழுது, வல்லிக்கண்ணன் வீட்டில் தி.க.சிவசங்கரன் என்ற விமரிசக நபருக்கும் ('தாமரை'யில் பார்த்திருப்பீர்கள்) எனக்கும் அது சம்பந்தமாக அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. கடைசியில், அதுபற்றி ஒரு பட்டிமன்றத்திலேயே பேசத் தயார் என்று அறிவித்துவிட்டேன்.
மறந்திருக்கக் கூடும் - இப்பொழுது நினைவுகூர்வதில் நீங்கள் மகிழக்கூடும் என்று கருதி அவனது சில பழைய கவிதைகளை எழுதுகிறேன்.
சூறைக் காற்று..........மழையைப்பற்றி:
'மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று - பெருந்
செல்வர் மணிமுடி சட்டம் சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
போயின! பொட்டென்று விட்டது காற்று
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
சேல்விழி காட்டினள் காலை'.
* * * * * * * * * * * * * * *
'தட்டி யெழுப்பினாள் காற்றை - அது
தாவி யுருட்டுது மாமரக்காட்டை'
* * * * * * * * * * * * * * *
கார்த்திகை மாதத்து மின்மினிகளைப் பற்றி வருணனை:
'கீர்த்தி இளமை கிழியாப் பழம் பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புரு பெற்றதுபோல்
தென்னையின் பாளை சிதறும் புதுமலர் போல்
பொன்னை உருக்கும் புதுமை போல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்தில்
புகழுருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம் போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
'ஐயோ' என்றேங்கி அழுத கண்ணீர்த்துளி போல்
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்தது போல்
நெற்றித் திலகம் நிறம் பெற்றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனைபோல்
அல்லுக்கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பி வைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வாளின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்
நாவின் சிறுசொல் நறுக்குப்போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!'.
இங்கே எனது இலக்கிய முயற்சிகள் சற்று ஒய்ந்திருக்கின்றன. ஒருக்கால், நிரந்தரமான சாவுக்கு இவை முன்னறிகுறிகளோ என்னவோ? P.U.Cக்குப் படிக்கிற ஒரு சாக்கு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. முன்பு விகடனுக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னேனே, அது இன்னும் ஆரம்பப் பாராவைக் கூடத் தாண்டவில்லை.
சிறுகதை என்றால் என்ன என்பது ஓரளவுக்குப் பிரக்ஞையில் நன்றாக உறைத்து விட்டது. அதன் dimensions அனைத்தையும் அறிந்திருக்கிற காரணத்தால், நம் காரியங்களை அளவுகடந்த ஜாக்கிரதையுணர்ச்சியோடு செய்ய வேண்டியிருக்கிறது. இடையில், சேகரிக்கிற ஒவ்வொரு இலக்கியத் தகவலும் நம்மை மிரட்டிக்கொண்டிருக் கின்றன. ஓ, இலக்கியம்! அது பெரிய விஷயம் -
- அதே சமயத்தில், வற்றாது வரளாது சமயாசமயங்களில் பீரிட்டுக் கிளம்புகிற நம் உற்சாகமும் இன்னும் ஓயவில்லை.
எனவே பார்ப்போம்! ஜெயகாந்தன் சொல்கிறபடி, "சரஸ்வதி தேவியின் அருள் பெற்று, அவள் கரம்பற்றி நடந்த எத்தனையோ கோடி கலைக் குழந்தைகளில்" நாம் ஒன்றாக முடியாதா?
'சரஸ்வதி' என்கிறது வெறும் சமயத்தைக் குறிக்கிற பிரதிமை மட்டுமன்று. அது ஒரு கலையின் பெரிய உருவகம். எனவே, ஜைனராகிய உங்களுக்கும் அவ்வுருவத்தின் அழகு விளங்காது போகாது. பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பத்தில் பாரதி எழுதுகிறானே அதைப் பாருங்கள்:
அவள் - அந்த சரஸ்வதி -
வேதத் திருவிழியாள் -அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்
போத மென் நாசியினாள் - நலம்
பொங்கும்நல் சாத்திர வாயுடையாள்
கற்பனைத் தேனிழதாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்'.
- எப்பொழுதாவது கவிதைகள் எழுதுகிறேன். ஆயினும் கவனம் சிறுகதைகளின் மீது அதிகம் காதல் கொள்கிறது. இது சிருஷ்டி விஷயத்தில் மட்டும்தான். ரஸனை, வாசிப்பு, லயிப்பு எல்லாம் கவிதைதான். அல்லும் பகலும் வாய் கவிதையையே அலப்பிக்கொண்டிருக்கிறது. படிப்பதும் கவிதையே. சிறுகதைகளை தொடுவதுமில்லை.
- ஏனெனில் நாம் படிக்கிற தகுதியுள்ள சிறுகதைகள் இன்று தமிழ்நாட்டில்
பிரசுரமாவதேயில்லை - ஜெ.கா.வைத் தவிர்த்து.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, 'தமிழ் ஒளி'யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று கருதுகிறேன். அதிலே 'கண்ணம்மா பாட்டு' எனக்கு மிகவும் பிடித்தது. அதில் தென்படும் ஆழ்ந்த
சோகம் அற்புதமானது. என் நினைவுகளை அது அடிக்கடி தனது அந்தச் சோகத்தால் இப்பொழுதெல்லாம் இடைமறிக்கிறது. 'தமிழ் ஒளி'யின் உள்ளம், வண்ணங்கள் குழைப்பதில் தெய்வத்தின் வரப்பிரசாதம் பெற்ற ஓர் அபூர்வ சித்ரக் கலைஞனைப் போல் எத்தகைய சௌந்தர்யத்தோடிருக்கிறது! இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க் கவிஞன் அவன். அவனுக்கு டி.பி. அவனுக்கு இருப்பிடம் இல்லை! ஏன் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே தெரியவில்லை!
'தமிழ் ஒளி' அந்த நாட்களில் எழுதிய 'வீராயி' என்கிற காவியத்தை, சென்னை செல்லும்போதெல்லாம் 'கன்னிமாரா' என்கிற கடலுக்குள் வலைவீசித் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வேறு, புதிதாகவும் எதுவும் கிடைக்கவில்லை.
'தமிழ் ஓளி' இந்த நூற்றாண்டின் மூன்றாவது தமிழ்க்கவி என்கிற விஷயத்தை நான் பிரஸ்தாபித்தபொழுது, வல்லிக்கண்ணன் வீட்டில் தி.க.சிவசங்கரன் என்ற விமரிசக நபருக்கும் ('தாமரை'யில் பார்த்திருப்பீர்கள்) எனக்கும் அது சம்பந்தமாக அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. கடைசியில், அதுபற்றி ஒரு பட்டிமன்றத்திலேயே பேசத் தயார் என்று அறிவித்துவிட்டேன்.
மறந்திருக்கக் கூடும் - இப்பொழுது நினைவுகூர்வதில் நீங்கள் மகிழக்கூடும் என்று கருதி அவனது சில பழைய கவிதைகளை எழுதுகிறேன்.
சூறைக் காற்று..........மழையைப்பற்றி:
'மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க
செக்கென ஆட்டுது காற்று - பெருந்
செல்வர் மணிமுடி சட்டம் சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
போயின! பொட்டென்று விட்டது காற்று
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
சேல்விழி காட்டினள் காலை'.
* * * * * * * * * * * * * * *
'தட்டி யெழுப்பினாள் காற்றை - அது
தாவி யுருட்டுது மாமரக்காட்டை'
* * * * * * * * * * * * * * *
கார்த்திகை மாதத்து மின்மினிகளைப் பற்றி வருணனை:
'கீர்த்தி இளமை கிழியாப் பழம் பெருமை
சீர்த்தியிவை நான்கும் சிறப்புரு பெற்றதுபோல்
தென்னையின் பாளை சிதறும் புதுமலர் போல்
பொன்னை உருக்கும் புதுமை போல், மற்றும்
அகழ்வாரைத் தாங்கும் அவல நிலத்தில்
புகழுருவம் ஒன்று புறப்பட்ட தோற்றம் போல்
பொய்யே மலிந்த புலையிடையே நன்னெஞ்சம்
'ஐயோ' என்றேங்கி அழுத கண்ணீர்த்துளி போல்
பிரிந்தார் அகத்திற் பிறந்ததோர் வேட்கை
எரிந்த பொரியாகி எங்கும் பறந்தது போல்
நெற்றித் திலகம் நிறம் பெற்றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விளக்கு
சொல்லுக் கடங்காது தோன்றுகின்ற கற்பனைபோல்
அல்லுக்கடங்காத ஆனந்த மின்விளக்கு!
ஐப்பசித் தூதை அனுப்பி வைத்துக் கார்த்திகையைக்
கைப்பிடித்த வாளின் ககனத் திருவிளக்கு!
பூவின் இதழ்ஒன்று பொன்சிறகு பெற்றதுபோல்
நாவின் சிறுசொல் நறுக்குப்போல், நல்லோர்கள்
வாழும் இடத்திற்கு வாழ்த்தாகி வான்விருந்தாய்ச்
சூழும் சுடர்போன்ற தோற்றங்காண்! மின்மினிகாண்!'.
இங்கே எனது இலக்கிய முயற்சிகள் சற்று ஒய்ந்திருக்கின்றன. ஒருக்கால், நிரந்தரமான சாவுக்கு இவை முன்னறிகுறிகளோ என்னவோ? P.U.Cக்குப் படிக்கிற ஒரு சாக்கு. ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. முன்பு விகடனுக்கு ஒரு கதை எழுதிக் கொண்டிருப்பதாய்ச் சொன்னேனே, அது இன்னும் ஆரம்பப் பாராவைக் கூடத் தாண்டவில்லை.
சிறுகதை என்றால் என்ன என்பது ஓரளவுக்குப் பிரக்ஞையில் நன்றாக உறைத்து விட்டது. அதன் dimensions அனைத்தையும் அறிந்திருக்கிற காரணத்தால், நம் காரியங்களை அளவுகடந்த ஜாக்கிரதையுணர்ச்சியோடு செய்ய வேண்டியிருக்கிறது. இடையில், சேகரிக்கிற ஒவ்வொரு இலக்கியத் தகவலும் நம்மை மிரட்டிக்கொண்டிருக் கின்றன. ஓ, இலக்கியம்! அது பெரிய விஷயம் -
- அதே சமயத்தில், வற்றாது வரளாது சமயாசமயங்களில் பீரிட்டுக் கிளம்புகிற நம் உற்சாகமும் இன்னும் ஓயவில்லை.
எனவே பார்ப்போம்! ஜெயகாந்தன் சொல்கிறபடி, "சரஸ்வதி தேவியின் அருள் பெற்று, அவள் கரம்பற்றி நடந்த எத்தனையோ கோடி கலைக் குழந்தைகளில்" நாம் ஒன்றாக முடியாதா?
'சரஸ்வதி' என்கிறது வெறும் சமயத்தைக் குறிக்கிற பிரதிமை மட்டுமன்று. அது ஒரு கலையின் பெரிய உருவகம். எனவே, ஜைனராகிய உங்களுக்கும் அவ்வுருவத்தின் அழகு விளங்காது போகாது. பாஞ்சாலி சபதத்தின் ஆரம்பத்தில் பாரதி எழுதுகிறானே அதைப் பாருங்கள்:
அவள் - அந்த சரஸ்வதி -
வேதத் திருவிழியாள் -அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்
போத மென் நாசியினாள் - நலம்
பொங்கும்நல் சாத்திர வாயுடையாள்
கற்பனைத் தேனிழதாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்'.
- எப்பொழுதாவது கவிதைகள் எழுதுகிறேன். ஆயினும் கவனம் சிறுகதைகளின் மீது அதிகம் காதல் கொள்கிறது. இது சிருஷ்டி விஷயத்தில் மட்டும்தான். ரஸனை, வாசிப்பு, லயிப்பு எல்லாம் கவிதைதான். அல்லும் பகலும் வாய் கவிதையையே அலப்பிக்கொண்டிருக்கிறது. படிப்பதும் கவிதையே. சிறுகதைகளை தொடுவதுமில்லை.
- ஏனெனில் நாம் படிக்கிற தகுதியுள்ள சிறுகதைகள் இன்று தமிழ்நாட்டில்
பிரசுரமாவதேயில்லை - ஜெ.கா.வைத் தவிர்த்து.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 48
கடிதம் - 48
திருப்பத்தூர்.வ.ஆ.
14 - 2- 65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க நேர்ந்தது வெகுவாக சந்தோஷ மளித்தது. அதற்கு நன்றி கூறுகிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகுஅதற்கு இப்போது தாமதமாகப் பதிலளிப்பதற்காக மன்னிக்கவும் கோருகிறேன்.
தங்களது கடிதம் வந்த இரண்டொரு நாட்களிலேயே நான் சென்னை செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டு விட்டது.
ஆனால் சென்னையிலிருந்து வந்தபிறகு பல வேலைகள் குறுக்கிட்டு விட்டன. சற்று ஓய்வுடன் வந்த பொங்கல் விடுமுறையையும் வெள்ளக்குட்டையிலிருந்து கழிக்க வேண்டி வந்தது. அடுத்து பல நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் பிரஜாவுரிமையை ரத்து செய்துவிட்டு பிற மாநிலங்களுக்குக் குடி போய்விடலாமா என்கிற அளவுக்கு சுயஜாதியின்மீது வெறுப்பைக் கிளப்புகிற தமிழக அரசியலின் அசிங்கங்கள்....அக்கிர மங்கள்..... ஆபாசங்கள்..... இத்யாதி.
- இவைகளைக் கண்டு சும்மாயிருக்க முடியவில்லை. 'விவேகாநந்தா சங்கம்' என்று ஒன்றைத் துவக்கினோம். மாணவர்கள் என்கிற மிருகங்களின் மந்தை மீது உள்ளூரில் ஒரு அறிக்கைத் தாக்குதல்........ இடையில் போலீஸ் விசாரிப்பு...... அது முன்னிட்ட பரபரப்பு....... பள்ளியில் நிறைய பாடங்கள் பாக்கி...... P.U.C க்கான படிப்பு....... ஜெயகாந்தனின் படத்துக்குச் சில ஏற்பாடுகள்...... பஞ்சாயத்துத் தேர்தல்கள்.....
இக்காரணங்களால் கவிதை உணர்வோடு தங்களுக்கு எழுதப்பட வேண்டிய பதில் தாமதமாகித் தவறிப் போயிற்று. எனவே தாங்கள் மன்னிக்கலாம்.
இப்பொழுது இந்தப் பதிலில், தங்களது கடிதத்திற்குப் பதிலளிப்பதா, இத்தனை நாளைய இடைவெளியில் நிகழ்ந்த விஷயங்களை எடுத்துரைப்பதா, அல்லது புதிதாய் மாறுதல் கண்டு வளர்ச்சியடைந்துள்ள அரசியல், சமூக, தத்துவ அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதா என்று குழம்பி, எல்லாவற்றையும் எழுதுவது என்று தெளிந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
எனது பெங்களூர்ப் பிரயாணத்தைப் பற்றி விசாரித்திருந்தீர்கள். அது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிரயாணம். ராகவன் என்று எழுதியிருந்தேனே, அவர் ஒரு BSc மாணவர். பிராமண வகுப்பு. ஆனால், அசல் ஐயர் தானில்லை நாம்தான் என்பதை ஆமோதிப்பவர். The most progressive type amoung students. பெங்களூருக்கு அழைத்துச் சென்றவர் அவர்தான்.
பெங்களூரில் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. பார்த்ததும், அறிமுகமானதும், அனுபவித்ததும், ஆனந்தித்ததும் வேறு உலகம்.
'போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்
பொலியுங் கள்வெறி துய்த்தல் மற்றோர்பால்'
- என பாரதியின் வரி ஒன்று உண்டு. துயர நினைவுகள் ஒழிக்கப்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு எப்பொழுதுமே ஒரு 'லிப்ட்' இருக்க வேண்டும். அதாவது உணர்வுகளின் உச்ச சிகரத்திலேயே நாம் இடையறாது உலவ வேண்டும். அதே சமயத்தில், இவை அற்பமாகிவிடாமல் ஞானபோதம் என்கிற நடுலட்சியம். இவைகளைப் பாரதி வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு ஒரே வழிதான்.
உங்கள் கடிதம் வந்த இரண்டொரு நாட்களில் சென்னைக்கு நானும் தண்டபாணியும் ராகவனும் சென்றோம். 'உன்னைப்போல ஒருவன்' படம் பார்த்தோம். பின்னணி இசை அமைக்க வேண்டி, சங்கீத டைரக்டர் வீணை சிட்டிபாபுவுக்கும், ஈ.வி.கே சம்பத்துக்கும், பிற நண்பர்களுக்கும், எங்களுக்கும் சென்ஸார்போர்டு படங் களைப் பார்க்கிற 'ப்ரிவியூ பாரடைஸ்' என்கிற தியேட்டரில் படம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. பிறகு தண்டபாணியும் ராகவனும் மதுரை சென்றுவிட்டார்கள்.
நான் சென்னையிலேயே இருந்து, ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல அவரது 'விழுதுகள்' இரண்டிரவுகள் எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு திருப்பத்தூர் வந்தேன்.
பொங்கல் விகடனில் 'விழுதுகள்' படித்தீர்களா? அற்புதமான நாவல். அதில் வருகிற ஓங்கூர் சாமியார் ஜெயகாந்தனுக்கு உண்மையிலேயே பழக்கம். பிரம்மாதமான காரெக்டர்.
வையவனும், தண்டபாணியும் நலமே. ஆறுமுகமும் சௌக்கியம். பாட்டரிக்கு அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், மனசின் கவிதைத் தன்மையும் உருக்கபாவமும் சற்றுக் குறைகிற போதெல்லாம் அதன் ஊருக்குச் சென்று நிறைவு செய்துகொள்ள முடிகிறது.
தங்கள் கவிதைகளில் 'சிறைவிடு' என்கிறதும், 'கடல்தாண்ட முயல்கிற மனிதா' என்கிறதும் நன்றாயிருந்தன. முன்னதைவிடப் பின்னது எடுத்த வேகத்துடன் கடைசி வரை வந்திருந்தது.
'அஞ்சனக் கீற்றுக் கரையினுள்.......'
என்கிற மாதிரி வருகிற நயமும் லாகவமும்,
'என்றன் உலகம் பரந்தது - புவி
ஏழு கடல்களும் என்னதே'
என்றும் தொடர்ந்து 'என்றன் சிறை விடு' என்று முடிவது நன்றாயிருந்தது. வடிவத்தை விட விஷயம் நன்று.
'வேதாந்தப் பாட்டு' பல இடங்களில் நல்ல பாவத்துடன் வந்திருக்கிறது.
கடைசியில்,
'புகழ்ஞாலக்கரை வந்து சேரும் - உனைப்
புவிமாந்தர் மரியாதை சூழும்
இகழ்ஞாலக் கடல்தாண்டி சென்றோய் - உனக்(கு)
இருகரங் கூப்பினேன் ஐயா!'
என்று முடிகிற 'ஸ்டான்ஸா' கவிதையின் மொத்த மனோபாவத்துக்கும் சிகரம்.
ருஷ்ய புரட்சியைப் பற்றிய கவிதை வளமான சொற்கோவைகளோடு வந்திருந்தபோதும் அது பழைய விஷயம் (அதுவும் பாரதி பாடியது) என்பதால், எடுப்பாகத் தோன்றவில்லை. நாம் அவைகளைப் பாட வேண்டிய அவசியமில்லை.
'கண்கவரும் ஆலைகள்நற் றொழில் வளங்கள்
கட்டிடங்கள் சாலைகள்நீள் இருப்புப் பாதை
பண்ணை விளையுள்களென இவ்வாறெல்லாம்..........'
இங்கே கவிதை நடை வெகு லகுவாக, இன்பகரமாக இருக்கிறது.
'மண்ணகத்துத் தீமைகளின் தலைமைப் பீடம்'
சரியான போடு!
இவைகளோடு நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளையும் நான் படித்து
விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள். ஒன்றிரண்டு தவறியிருக்கலாம். அல்லது,
இவைகளுக்கப்புறம் புதிதாக எழுதி இருக்கலாம். அவைகளை அனுப்பி வையுங்கள்.
'கடல்தாண்ட முயல்கின்ற மனிதா'வை கலைமகளுக்கு அனுப்புங்கள்.
'அன்பெனும் பாய்மரம் விரித்தால் - மக்கள்
ஆதரவெனுங் காற்று வீசும்'
'பொருளாசைக் கடல்மலை மோதும் - வீண்
பொறாமைச் சுறாமீன்கள் தாக்கும்'
என்பன போன்ற நல்ல உருவகங்களோடு அது சிறப்பாய் வந்திருக்கிறது.
இனி ஓய்ந்திருக்க மாட்டீர்கள்; ஓயவும் முடியாது எனக் கருதுகிறேன். நிறைய எழுதுங்கள். மற்ற எல்லோரையும் விட கவிஞன் பாக்கியசாலி. அவன் தொழில் மிக உயர்ந்தது. தனது ஆத்மாவை உணர்ச்சிகளின் உயிர்த் துடிப்போடு சிறுகச் சிறுக பிற ஹிருதயங்களுக்கு அனுப்பி, இறுதியில் பரம்பொருளைப் போல், அங்கிங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, எல்லா உயிர்களிலும் அவனேயாகிறான்.
தங்கள்
பி.ச.குப்புசாமி.
திருப்பத்தூர்.வ.ஆ.
14 - 2- 65
பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது நீண்ட கடிதம் கிடைத்தது. நெடுநாட்களுக்கப்புறம் உங்கள் கையெழுத்தை ஒரு நாலு பக்கத்துக்குமேல் பார்க்க நேர்ந்தது வெகுவாக சந்தோஷ மளித்தது. அதற்கு நன்றி கூறுகிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகுஅதற்கு இப்போது தாமதமாகப் பதிலளிப்பதற்காக மன்னிக்கவும் கோருகிறேன்.
தங்களது கடிதம் வந்த இரண்டொரு நாட்களிலேயே நான் சென்னை செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டு விட்டது.
ஆனால் சென்னையிலிருந்து வந்தபிறகு பல வேலைகள் குறுக்கிட்டு விட்டன. சற்று ஓய்வுடன் வந்த பொங்கல் விடுமுறையையும் வெள்ளக்குட்டையிலிருந்து கழிக்க வேண்டி வந்தது. அடுத்து பல நிகழ்ச்சிகள். தமிழ்நாட்டின் பிரஜாவுரிமையை ரத்து செய்துவிட்டு பிற மாநிலங்களுக்குக் குடி போய்விடலாமா என்கிற அளவுக்கு சுயஜாதியின்மீது வெறுப்பைக் கிளப்புகிற தமிழக அரசியலின் அசிங்கங்கள்....அக்கிர மங்கள்..... ஆபாசங்கள்..... இத்யாதி.
- இவைகளைக் கண்டு சும்மாயிருக்க முடியவில்லை. 'விவேகாநந்தா சங்கம்' என்று ஒன்றைத் துவக்கினோம். மாணவர்கள் என்கிற மிருகங்களின் மந்தை மீது உள்ளூரில் ஒரு அறிக்கைத் தாக்குதல்........ இடையில் போலீஸ் விசாரிப்பு...... அது முன்னிட்ட பரபரப்பு....... பள்ளியில் நிறைய பாடங்கள் பாக்கி...... P.U.C க்கான படிப்பு....... ஜெயகாந்தனின் படத்துக்குச் சில ஏற்பாடுகள்...... பஞ்சாயத்துத் தேர்தல்கள்.....
இக்காரணங்களால் கவிதை உணர்வோடு தங்களுக்கு எழுதப்பட வேண்டிய பதில் தாமதமாகித் தவறிப் போயிற்று. எனவே தாங்கள் மன்னிக்கலாம்.
இப்பொழுது இந்தப் பதிலில், தங்களது கடிதத்திற்குப் பதிலளிப்பதா, இத்தனை நாளைய இடைவெளியில் நிகழ்ந்த விஷயங்களை எடுத்துரைப்பதா, அல்லது புதிதாய் மாறுதல் கண்டு வளர்ச்சியடைந்துள்ள அரசியல், சமூக, தத்துவ அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதா என்று குழம்பி, எல்லாவற்றையும் எழுதுவது என்று தெளிந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
எனது பெங்களூர்ப் பிரயாணத்தைப் பற்றி விசாரித்திருந்தீர்கள். அது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிரயாணம். ராகவன் என்று எழுதியிருந்தேனே, அவர் ஒரு BSc மாணவர். பிராமண வகுப்பு. ஆனால், அசல் ஐயர் தானில்லை நாம்தான் என்பதை ஆமோதிப்பவர். The most progressive type amoung students. பெங்களூருக்கு அழைத்துச் சென்றவர் அவர்தான்.
பெங்களூரில் எதையும் நாங்கள் பார்க்கவில்லை. பார்த்ததும், அறிமுகமானதும், அனுபவித்ததும், ஆனந்தித்ததும் வேறு உலகம்.
'போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்
பொலியுங் கள்வெறி துய்த்தல் மற்றோர்பால்'
- என பாரதியின் வரி ஒன்று உண்டு. துயர நினைவுகள் ஒழிக்கப்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு எப்பொழுதுமே ஒரு 'லிப்ட்' இருக்க வேண்டும். அதாவது உணர்வுகளின் உச்ச சிகரத்திலேயே நாம் இடையறாது உலவ வேண்டும். அதே சமயத்தில், இவை அற்பமாகிவிடாமல் ஞானபோதம் என்கிற நடுலட்சியம். இவைகளைப் பாரதி வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு ஒரே வழிதான்.
உங்கள் கடிதம் வந்த இரண்டொரு நாட்களில் சென்னைக்கு நானும் தண்டபாணியும் ராகவனும் சென்றோம். 'உன்னைப்போல ஒருவன்' படம் பார்த்தோம். பின்னணி இசை அமைக்க வேண்டி, சங்கீத டைரக்டர் வீணை சிட்டிபாபுவுக்கும், ஈ.வி.கே சம்பத்துக்கும், பிற நண்பர்களுக்கும், எங்களுக்கும் சென்ஸார்போர்டு படங் களைப் பார்க்கிற 'ப்ரிவியூ பாரடைஸ்' என்கிற தியேட்டரில் படம் போட்டுக் காண்பிக்கப் பட்டது. பிறகு தண்டபாணியும் ராகவனும் மதுரை சென்றுவிட்டார்கள்.
நான் சென்னையிலேயே இருந்து, ஜெயகாந்தன் சொல்லச் சொல்ல அவரது 'விழுதுகள்' இரண்டிரவுகள் எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு திருப்பத்தூர் வந்தேன்.
பொங்கல் விகடனில் 'விழுதுகள்' படித்தீர்களா? அற்புதமான நாவல். அதில் வருகிற ஓங்கூர் சாமியார் ஜெயகாந்தனுக்கு உண்மையிலேயே பழக்கம். பிரம்மாதமான காரெக்டர்.
வையவனும், தண்டபாணியும் நலமே. ஆறுமுகமும் சௌக்கியம். பாட்டரிக்கு அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், மனசின் கவிதைத் தன்மையும் உருக்கபாவமும் சற்றுக் குறைகிற போதெல்லாம் அதன் ஊருக்குச் சென்று நிறைவு செய்துகொள்ள முடிகிறது.
தங்கள் கவிதைகளில் 'சிறைவிடு' என்கிறதும், 'கடல்தாண்ட முயல்கிற மனிதா' என்கிறதும் நன்றாயிருந்தன. முன்னதைவிடப் பின்னது எடுத்த வேகத்துடன் கடைசி வரை வந்திருந்தது.
'அஞ்சனக் கீற்றுக் கரையினுள்.......'
என்கிற மாதிரி வருகிற நயமும் லாகவமும்,
'என்றன் உலகம் பரந்தது - புவி
ஏழு கடல்களும் என்னதே'
என்றும் தொடர்ந்து 'என்றன் சிறை விடு' என்று முடிவது நன்றாயிருந்தது. வடிவத்தை விட விஷயம் நன்று.
'வேதாந்தப் பாட்டு' பல இடங்களில் நல்ல பாவத்துடன் வந்திருக்கிறது.
கடைசியில்,
'புகழ்ஞாலக்கரை வந்து சேரும் - உனைப்
புவிமாந்தர் மரியாதை சூழும்
இகழ்ஞாலக் கடல்தாண்டி சென்றோய் - உனக்(கு)
இருகரங் கூப்பினேன் ஐயா!'
என்று முடிகிற 'ஸ்டான்ஸா' கவிதையின் மொத்த மனோபாவத்துக்கும் சிகரம்.
ருஷ்ய புரட்சியைப் பற்றிய கவிதை வளமான சொற்கோவைகளோடு வந்திருந்தபோதும் அது பழைய விஷயம் (அதுவும் பாரதி பாடியது) என்பதால், எடுப்பாகத் தோன்றவில்லை. நாம் அவைகளைப் பாட வேண்டிய அவசியமில்லை.
'கண்கவரும் ஆலைகள்நற் றொழில் வளங்கள்
கட்டிடங்கள் சாலைகள்நீள் இருப்புப் பாதை
பண்ணை விளையுள்களென இவ்வாறெல்லாம்..........'
இங்கே கவிதை நடை வெகு லகுவாக, இன்பகரமாக இருக்கிறது.
'மண்ணகத்துத் தீமைகளின் தலைமைப் பீடம்'
சரியான போடு!
இவைகளோடு நீங்கள் எழுதிய அத்தனை கவிதைகளையும் நான் படித்து
விட்டேன் என்று எழுதி இருக்கிறீர்கள். ஒன்றிரண்டு தவறியிருக்கலாம். அல்லது,
இவைகளுக்கப்புறம் புதிதாக எழுதி இருக்கலாம். அவைகளை அனுப்பி வையுங்கள்.
'கடல்தாண்ட முயல்கின்ற மனிதா'வை கலைமகளுக்கு அனுப்புங்கள்.
'அன்பெனும் பாய்மரம் விரித்தால் - மக்கள்
ஆதரவெனுங் காற்று வீசும்'
'பொருளாசைக் கடல்மலை மோதும் - வீண்
பொறாமைச் சுறாமீன்கள் தாக்கும்'
என்பன போன்ற நல்ல உருவகங்களோடு அது சிறப்பாய் வந்திருக்கிறது.
இனி ஓய்ந்திருக்க மாட்டீர்கள்; ஓயவும் முடியாது எனக் கருதுகிறேன். நிறைய எழுதுங்கள். மற்ற எல்லோரையும் விட கவிஞன் பாக்கியசாலி. அவன் தொழில் மிக உயர்ந்தது. தனது ஆத்மாவை உணர்ச்சிகளின் உயிர்த் துடிப்போடு சிறுகச் சிறுக பிற ஹிருதயங்களுக்கு அனுப்பி, இறுதியில் பரம்பொருளைப் போல், அங்கிங்கெனாத படி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி, எல்லா உயிர்களிலும் அவனேயாகிறான்.
தங்கள்
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 47
கடிதம் - 47
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்')
திருப்பத்தூர்.வ.ஆ.
19 - 7 - 97.
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக் காரணம், உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டு என்று, அதற்காக நாளூம் வேளையும் பார்த்தது தான்.
தங்களுக்கு ஏற்பட்ட பாரிசவாயு பாதிப்பினை அறிந்து அனவருமே அதிர்ச்சியடைந்தோம். நல்ல வேளையாக உடனே சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருப்பது பெருத்த நிம்மதியை அளிக்கிறது.
இறைவனருளால் வந்த ஆபத்து இவ்வளவோடு தவிர்ந்ததே என்று அவனுக்கு நன்றி செலுத்தினோம். பழையபடி கை நன்றாக எழுதமுடிகிறது என்பதறிய மகிழ்ச்சி.
அஞ்சற்க - சபா! நிமிர்ந்து நில்லுங்கள். நம் புண்ணியங்கள் நம் முதுகெலும்பைத் தாங்குகின்றன. நமது சிந்தனைகள் நமது மூளையைச் சேமப்படுத்துகின்றன. வாழ்வை ரசித்து ரசித்து உருகினோமே, அந்த ரசனை நம் உயிர்வாழ்வை இன்னும் நெடுங்காலம் ரட்சிக்கும். அஞ்சற்க!.
வைத்தியர்கள் வகுத்த விதிப்படி நடவுங்கள். உணவுக் கட்டுப்பாடு வெகு எளிது! "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்" எனக் கருதிய மரபில் வந்த நமக்கு எல்லாமே எளிது!
படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள். தியானம் எப்பொழுதுமே புரிகிறீர்கள். உங்கள் வாழ்வு மிக அருமையாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்கிற அபூர்வமான திருப்தியும் தைரியமும் எஞ்ஞான்றும் நெஞ்சில் நிலவட்டும்.
இவையே நோயை விரட்டும் மந்திரங்கள்.
இறைவன், எப்பொழுதும் போல் இனியும் தங்களைக் காத்தருள்வான். அதற்கான பிரார்த்தனைகளை எங்கள் பூஜாவேளைகளின் போதெல்லாம் நாங்கள் புரிகின்றோம்.
விரைவில் நண்பர்களுடன் வந்து தங்களை நேரில் சந்திக்கிறேன்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
( இத்துடன், திரு.பி.ச.குப்புசாமி வே.சபாநாயகத்துக்கு எழுதிய கடிதங்கள் முடிவுறுகின்றன. அடுத்து இன்னொரு நண்பர் கவிஞர் ஆதிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்கிறது. )
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்')
திருப்பத்தூர்.வ.ஆ.
19 - 7 - 97.
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக் காரணம், உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டு என்று, அதற்காக நாளூம் வேளையும் பார்த்தது தான்.
தங்களுக்கு ஏற்பட்ட பாரிசவாயு பாதிப்பினை அறிந்து அனவருமே அதிர்ச்சியடைந்தோம். நல்ல வேளையாக உடனே சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருப்பது பெருத்த நிம்மதியை அளிக்கிறது.
இறைவனருளால் வந்த ஆபத்து இவ்வளவோடு தவிர்ந்ததே என்று அவனுக்கு நன்றி செலுத்தினோம். பழையபடி கை நன்றாக எழுதமுடிகிறது என்பதறிய மகிழ்ச்சி.
அஞ்சற்க - சபா! நிமிர்ந்து நில்லுங்கள். நம் புண்ணியங்கள் நம் முதுகெலும்பைத் தாங்குகின்றன. நமது சிந்தனைகள் நமது மூளையைச் சேமப்படுத்துகின்றன. வாழ்வை ரசித்து ரசித்து உருகினோமே, அந்த ரசனை நம் உயிர்வாழ்வை இன்னும் நெடுங்காலம் ரட்சிக்கும். அஞ்சற்க!.
வைத்தியர்கள் வகுத்த விதிப்படி நடவுங்கள். உணவுக் கட்டுப்பாடு வெகு எளிது! "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்" எனக் கருதிய மரபில் வந்த நமக்கு எல்லாமே எளிது!
படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள். தியானம் எப்பொழுதுமே புரிகிறீர்கள். உங்கள் வாழ்வு மிக அருமையாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்கிற அபூர்வமான திருப்தியும் தைரியமும் எஞ்ஞான்றும் நெஞ்சில் நிலவட்டும்.
இவையே நோயை விரட்டும் மந்திரங்கள்.
இறைவன், எப்பொழுதும் போல் இனியும் தங்களைக் காத்தருள்வான். அதற்கான பிரார்த்தனைகளை எங்கள் பூஜாவேளைகளின் போதெல்லாம் நாங்கள் புரிகின்றோம்.
விரைவில் நண்பர்களுடன் வந்து தங்களை நேரில் சந்திக்கிறேன்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
( இத்துடன், திரு.பி.ச.குப்புசாமி வே.சபாநாயகத்துக்கு எழுதிய கடிதங்கள் முடிவுறுகின்றன. அடுத்து இன்னொரு நண்பர் கவிஞர் ஆதிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்கிறது. )
Saturday, February 24, 2007
கடித இலக்கியம் - 46
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 46
திருப்பத்தூர்.வ.ஆ.
22 - 8 - 96
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும் கூட தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதைத் தெரிவித்தனர்.
உடனடியாகப் பதில் எழுதத்தான் உத்தேசித்தேன். வெண்பாவில் குழந்தையை வாழ்த்தலாம் என்று தோன்றியது. அந்த வேளைக்குக் காத்திருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.
அகிலனுக்கும் வேதத்துக்கும் எங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் கூறுங்கள்.
'அகிலத்து வேதத்தின் ஆழ்ந்த உரையாய்
மகிழ்ந்திங் கவதரித்த மகளே! - புகழ்சேர்
மணியாம் உனக்குன் மரபே அமையும்
அணிபிறவும் நீயணி வாய்!'
'குழந்தையர்க் கெல்லாம் குழந்தைகள் தோன்றும்
அழகிதின் உண்டோ அழகு? - குழந்தாய்!
கலக்கக் கலக்கக் கவின்பெறும் வண்ணத்(து)
இலக்கண மாய் நீ இரு!'
வைஷ்ணவிக்கு வரன் இன்னும் அமையவில்லை. சரசுதான் மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.
சிவகுமார் SPICல் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி ராஜிநாமா செய்து விட்டான். SQUARE - D என்கிற நந்தனத்தில் உள்ள ஒரு பன்னாட்டுக் கம்பனியில் (Software consultancy) சேர்ந்துவிட்டான்.
ஜுன் 23ல் மருமகளின் வளைகாப்புக்கு நாங்கள் சென்னை சென்று திரும்பினோம். ஸெப்டம்பர் 6 அல்லது 7 தேதியில் பிரசவத்துக்கு நாள் குறித்திருக்கின்றனர்.
JK வை ஜூலை மாத ஆரம்பத்தில் திருச்சியில் சென்று பார்த்ததுதான். அடுத்த வாரம்தான் சென்னை சென்று பார்க்க வேண்டும். அல்லது அவரைத் திருப்பத்தூருக்கு அழைக்க வேண்டும்.
எல்லா விவரங்களையும் விளக்கமாக எழுதத்தான் ஆசை. கடிதம் எழுத இன்னும் தாமதமாகிவிடுமே என்கிற ஜாக்கிரதையினால் இவ்வளவோடு நிறுத்துகிறேன்.
- தங்கள்
பி.ச.குப்புசாமி.
கடிதம் - 46
திருப்பத்தூர்.வ.ஆ.
22 - 8 - 96
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும் கூட தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதைத் தெரிவித்தனர்.
உடனடியாகப் பதில் எழுதத்தான் உத்தேசித்தேன். வெண்பாவில் குழந்தையை வாழ்த்தலாம் என்று தோன்றியது. அந்த வேளைக்குக் காத்திருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.
அகிலனுக்கும் வேதத்துக்கும் எங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் கூறுங்கள்.
'அகிலத்து வேதத்தின் ஆழ்ந்த உரையாய்
மகிழ்ந்திங் கவதரித்த மகளே! - புகழ்சேர்
மணியாம் உனக்குன் மரபே அமையும்
அணிபிறவும் நீயணி வாய்!'
'குழந்தையர்க் கெல்லாம் குழந்தைகள் தோன்றும்
அழகிதின் உண்டோ அழகு? - குழந்தாய்!
கலக்கக் கலக்கக் கவின்பெறும் வண்ணத்(து)
இலக்கண மாய் நீ இரு!'
வைஷ்ணவிக்கு வரன் இன்னும் அமையவில்லை. சரசுதான் மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.
சிவகுமார் SPICல் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி ராஜிநாமா செய்து விட்டான். SQUARE - D என்கிற நந்தனத்தில் உள்ள ஒரு பன்னாட்டுக் கம்பனியில் (Software consultancy) சேர்ந்துவிட்டான்.
ஜுன் 23ல் மருமகளின் வளைகாப்புக்கு நாங்கள் சென்னை சென்று திரும்பினோம். ஸெப்டம்பர் 6 அல்லது 7 தேதியில் பிரசவத்துக்கு நாள் குறித்திருக்கின்றனர்.
JK வை ஜூலை மாத ஆரம்பத்தில் திருச்சியில் சென்று பார்த்ததுதான். அடுத்த வாரம்தான் சென்னை சென்று பார்க்க வேண்டும். அல்லது அவரைத் திருப்பத்தூருக்கு அழைக்க வேண்டும்.
எல்லா விவரங்களையும் விளக்கமாக எழுதத்தான் ஆசை. கடிதம் எழுத இன்னும் தாமதமாகிவிடுமே என்கிற ஜாக்கிரதையினால் இவ்வளவோடு நிறுத்துகிறேன்.
- தங்கள்
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் -45
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 45
3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
22-3-94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்" என்கிற இதழின் ஆசிரியர் எழுதிக் கேட்டதால், அவருக்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்புகிற பணி, படாதபாடு பட்டு, இன்று மாலைதான் நிறைவுற்றது. இதனிடையில் தாங்கள் அருணாசலத்துக்கு எழுதிய கடித விவரங்களை அறிந்தேன்.
நமது டில்லிப் பயணத்தை அசை போட்டு அது பற்றி எழுதுங்கள். ரிஷிகேஷ், ஹரித்வார் போட்டோக்களை அருணாசலம் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். இரவு பூராவும் செய்த களைப்புமிக்க பயணத்துக்குப் பிறகும், ரிஷிகேஷில் நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு குளுகுளுவென்றிருக்கிறோம் பார்த்தீர்களா? அந்தப் போட்டோக்களை நானும்கூட இன்னும் பார்த்து முடியவில்லை. தாங்கள், JK ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பி உதவ வேண்டும் - நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக!
ஒய்வு பெற்ற பின்பு தங்களுடைய ஒவ்வொரு நாளும் அலாதியான அழகோடு கழிவதை நண்பர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறேன். இயன்ற பயணங்களுக்கு எல்லாம் தங்களை இனிமேல் இழுக்கலாம் என்று ஆசை பிறக்கிறது. பாப்பா வசிக்கும் செஷல்ஸ்தீவுக்குச் சென்று வாருங்கள். புதிய வானத்தின் வேறொரு புறத்தில் உள்ள ஒரு புதிய கடலின் எதிரே, பாப்பாவுக்கு நீங்கள் எங்கள் ஆசிகளைக் கூறுகிற பொழுது, எங்கள் ஆசிகளும் மந்திரத்தொனி கொண்டு புதிதாய் ஒலிக்கக் கடவன.
உங்களது நாவல் 'ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது' - புத்தக வேலைகள் முழுமை பெற்றுவிட்டனவா? நமது டில்லிப் பயணம் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு, சுவைபட நிறையச் சொன்னீர்களா?
JK 25-3-94 வெள்ளி இரவில் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவை போகிறார். அநேகமாக நானும் கூடப் போகவேண்டியதாய் இருக்கும். ஞாயிறு இரவு அதே வண்டியில் திரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ்!
ஒரு கடிதம் எழுதுங்கள்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி
ஒரு பின்னிணைப்பு:
சில வெண்பாக்கள் கிறுக்கினேன். உங்கள் மாதிரி நெருக்கமானவர்களோடு அதைப் பங்கிட்டுக் கொள்ள மனம் விழைகிறது.
பொய்....பொய்.....பொய்
நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யினும் பொய்யாகும் போ!
சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொயுன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!
வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என்?
- பி.ச.கு
கடிதம் - 45
3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
22-3-94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்" என்கிற இதழின் ஆசிரியர் எழுதிக் கேட்டதால், அவருக்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்புகிற பணி, படாதபாடு பட்டு, இன்று மாலைதான் நிறைவுற்றது. இதனிடையில் தாங்கள் அருணாசலத்துக்கு எழுதிய கடித விவரங்களை அறிந்தேன்.
நமது டில்லிப் பயணத்தை அசை போட்டு அது பற்றி எழுதுங்கள். ரிஷிகேஷ், ஹரித்வார் போட்டோக்களை அருணாசலம் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். இரவு பூராவும் செய்த களைப்புமிக்க பயணத்துக்குப் பிறகும், ரிஷிகேஷில் நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு குளுகுளுவென்றிருக்கிறோம் பார்த்தீர்களா? அந்தப் போட்டோக்களை நானும்கூட இன்னும் பார்த்து முடியவில்லை. தாங்கள், JK ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பி உதவ வேண்டும் - நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக!
ஒய்வு பெற்ற பின்பு தங்களுடைய ஒவ்வொரு நாளும் அலாதியான அழகோடு கழிவதை நண்பர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறேன். இயன்ற பயணங்களுக்கு எல்லாம் தங்களை இனிமேல் இழுக்கலாம் என்று ஆசை பிறக்கிறது. பாப்பா வசிக்கும் செஷல்ஸ்தீவுக்குச் சென்று வாருங்கள். புதிய வானத்தின் வேறொரு புறத்தில் உள்ள ஒரு புதிய கடலின் எதிரே, பாப்பாவுக்கு நீங்கள் எங்கள் ஆசிகளைக் கூறுகிற பொழுது, எங்கள் ஆசிகளும் மந்திரத்தொனி கொண்டு புதிதாய் ஒலிக்கக் கடவன.
உங்களது நாவல் 'ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது' - புத்தக வேலைகள் முழுமை பெற்றுவிட்டனவா? நமது டில்லிப் பயணம் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு, சுவைபட நிறையச் சொன்னீர்களா?
JK 25-3-94 வெள்ளி இரவில் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவை போகிறார். அநேகமாக நானும் கூடப் போகவேண்டியதாய் இருக்கும். ஞாயிறு இரவு அதே வண்டியில் திரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ்!
ஒரு கடிதம் எழுதுங்கள்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி
ஒரு பின்னிணைப்பு:
சில வெண்பாக்கள் கிறுக்கினேன். உங்கள் மாதிரி நெருக்கமானவர்களோடு அதைப் பங்கிட்டுக் கொள்ள மனம் விழைகிறது.
பொய்....பொய்.....பொய்
நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யினும் பொய்யாகும் போ!
சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொயுன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!
வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என்?
- பி.ச.கு
கடித இலக்கியம் - 44
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 44
3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
2 - 2 - 94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து திரும்பி இருப்பபீர்கள். ஜனவரி 9ஆம் தேதி இரவு புறப்பட்டு, 10ஆம் தேதி காலை 8 மணிக்கு JK வுடன் கோவை வந்து கொஞ்ச நேர அவகாசத்திலேயே கோத்தகிரி புறப்பட்டு விட்டோம். திரும்பி கோவை வரும்போது தங்களை பாரதியார் பல்கலைக் கழகத்தில் வந்து பார்க்க முடியும் என்று நம்பினேன். அது இயலாது போயிற்று.
கருத்தரங்கு பற்றியும், கருத்தரங்கில் தாங்கள் படித்த கட்டுரை பற்றியும், நண்பர் பூவண்ணன் அவர்களைச் சந்தித்தது பற்றியும், இடைக்கால எண்ணங்கள், அனுபவங்கள், முயற்சிகள் பற்றியும் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். நானும் இத்தனை நாட்கள் போல் அல்லாமல் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன்.
பிப்ரவரி 13ஆம் தேதி JK சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி செல்கிறார்.போன வருஷமே என்னையும் கூப்பிட்டார். என்னால் இயலவில்லை. இந்தமுறை, "நீ வருகிறாய்" அதட்டலாக உத்தரவு போட்டு விட்டார். எனவே போகலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன்.
என்னுடைய இந்தக் கடிதம் இன்னும் கூடத் தாமதமாகி விட்டிருக்கும். திடீரென்று எனக்கொரு நினைவு வந்தது. தாங்களும் டில்லி வந்தால், JKவோடு நாமெல்லாம் ஓர் ஆறு நாட்கள் வித்தியாசமான ஓய்வில் நிறைய அனுபவிக்கலாமே என்று தோன்றிற்று. டில்லியில், பாண்டிச்சேரி ஹவுஸ் என்கிற புதுவைஅரசு மாளிகை யில் தங்குகிறோம். ஓரிரு நாட்கள் JKவுக்கு சாஹித்ய அகாதெமி கூட்டங்கள். பிறகு ஹரித்துவார், ரிஷிகேஷ் என்றும், ஆக்ரா என்றும் சில டிரிப்புகள். ஆரணி நண்பர் ஆனந்தனும், சென்னையிலுள்ள பழனி என்கிற நண்பரும், திப்புசுல்தான் என்கிற நண்பர் ஒருவரும், நானும் - இதுவரை டில்லி செல்ல இருக்கிற நபர்கள் ஆவோம். நான் நம் வெள்ளக்குட்டை ஆறுமுகத்தையும் உடன் இழுக்கலாம் என்று இருக்கிறேன். அருணாசலம் விஷயம் இன்னும் தெரியவில்லை.
- இப்போதைய சூழ்நிலையில், தாங்கள் வருவது எளிது என்றும், தாங்கள் இதை மிக விரும்புவீர்கள் என்று கருதி, தங்களையும் அழைக்கும் எண்ணம் எனக்குத் தலையெடுத்தது. அதற்காகவே, தங்கள் திருப்பத்தூர் வருகையை ஒட்டிய எங்கள் உணர்ச்சி வர்ணனைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இக்கடிதத்தை எடுத்தவுடன் காரியார்த்தமாகத் தொடங்கி விட்டேன். தங்களுக்கு இது ஓய்வாகவும் இருக்கும். JKவுடனான மிகச் சிறந்த உடனிருப்பாகவும் இருக்கும். நான் உங்கள் இருவருடனும் கூட இருந்த மிகச் சிறந்த பேறு பெரூவேன். இவ்வாறு ஐந்தாறு நாட்கள் Jk, தாங்கள், நான் மற்றும் நண்பர்கள் எல்லாம் உடன் உறையும் இவ்வாய்ப்பு வாழ்வில் இனி எளிதில் நேருமா என்ன?
இது குறித்து உடனே எழுதுங்கள். உடனே எழுதுவது உத்தமம்.
- தங்கள் பி.ச.குப்புசாமி
கடிதம் - 44
3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
2 - 2 - 94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து திரும்பி இருப்பபீர்கள். ஜனவரி 9ஆம் தேதி இரவு புறப்பட்டு, 10ஆம் தேதி காலை 8 மணிக்கு JK வுடன் கோவை வந்து கொஞ்ச நேர அவகாசத்திலேயே கோத்தகிரி புறப்பட்டு விட்டோம். திரும்பி கோவை வரும்போது தங்களை பாரதியார் பல்கலைக் கழகத்தில் வந்து பார்க்க முடியும் என்று நம்பினேன். அது இயலாது போயிற்று.
கருத்தரங்கு பற்றியும், கருத்தரங்கில் தாங்கள் படித்த கட்டுரை பற்றியும், நண்பர் பூவண்ணன் அவர்களைச் சந்தித்தது பற்றியும், இடைக்கால எண்ணங்கள், அனுபவங்கள், முயற்சிகள் பற்றியும் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். நானும் இத்தனை நாட்கள் போல் அல்லாமல் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன்.
பிப்ரவரி 13ஆம் தேதி JK சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி செல்கிறார்.போன வருஷமே என்னையும் கூப்பிட்டார். என்னால் இயலவில்லை. இந்தமுறை, "நீ வருகிறாய்" அதட்டலாக உத்தரவு போட்டு விட்டார். எனவே போகலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன்.
என்னுடைய இந்தக் கடிதம் இன்னும் கூடத் தாமதமாகி விட்டிருக்கும். திடீரென்று எனக்கொரு நினைவு வந்தது. தாங்களும் டில்லி வந்தால், JKவோடு நாமெல்லாம் ஓர் ஆறு நாட்கள் வித்தியாசமான ஓய்வில் நிறைய அனுபவிக்கலாமே என்று தோன்றிற்று. டில்லியில், பாண்டிச்சேரி ஹவுஸ் என்கிற புதுவைஅரசு மாளிகை யில் தங்குகிறோம். ஓரிரு நாட்கள் JKவுக்கு சாஹித்ய அகாதெமி கூட்டங்கள். பிறகு ஹரித்துவார், ரிஷிகேஷ் என்றும், ஆக்ரா என்றும் சில டிரிப்புகள். ஆரணி நண்பர் ஆனந்தனும், சென்னையிலுள்ள பழனி என்கிற நண்பரும், திப்புசுல்தான் என்கிற நண்பர் ஒருவரும், நானும் - இதுவரை டில்லி செல்ல இருக்கிற நபர்கள் ஆவோம். நான் நம் வெள்ளக்குட்டை ஆறுமுகத்தையும் உடன் இழுக்கலாம் என்று இருக்கிறேன். அருணாசலம் விஷயம் இன்னும் தெரியவில்லை.
- இப்போதைய சூழ்நிலையில், தாங்கள் வருவது எளிது என்றும், தாங்கள் இதை மிக விரும்புவீர்கள் என்று கருதி, தங்களையும் அழைக்கும் எண்ணம் எனக்குத் தலையெடுத்தது. அதற்காகவே, தங்கள் திருப்பத்தூர் வருகையை ஒட்டிய எங்கள் உணர்ச்சி வர்ணனைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இக்கடிதத்தை எடுத்தவுடன் காரியார்த்தமாகத் தொடங்கி விட்டேன். தங்களுக்கு இது ஓய்வாகவும் இருக்கும். JKவுடனான மிகச் சிறந்த உடனிருப்பாகவும் இருக்கும். நான் உங்கள் இருவருடனும் கூட இருந்த மிகச் சிறந்த பேறு பெரூவேன். இவ்வாறு ஐந்தாறு நாட்கள் Jk, தாங்கள், நான் மற்றும் நண்பர்கள் எல்லாம் உடன் உறையும் இவ்வாய்ப்பு வாழ்வில் இனி எளிதில் நேருமா என்ன?
இது குறித்து உடனே எழுதுங்கள். உடனே எழுதுவது உத்தமம்.
- தங்கள் பி.ச.குப்புசாமி
Friday, February 09, 2007
கடித இலக்கியம் -43
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 43
திருப்பத்தூர்.வ.ஆ.
13-10-92
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை இப்பொழுது இல்லையே என்று ஒரு நொண்டிச்சாக்குக் கிடைக்க, அம்முயற்சி தவிர்ந்து போயிற்று.
இன்று திருப்பத்தூரில் அடைமழையின் காரணமாக, ஊரும் இந்த வீடும் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிப் போய்விட்டது. நான் ஓர் அறையுள் தனியாக அகப்பட்டுக் கொண்டு விட்டேன். உறக்கம் வரமாட்டேனென்கிறது. தஙகளுக்கு நம் பழைய நாட்கள் போல, எழுதுவதற்கு இது உகந்த சூழ்நிலை என்று தைரியங் கொண்டுவிட்டேன்.
தங்களிடம் அதிகம் பேச முடியவில்லையே தவிர, அகிலனின் கல்யாணத்தை நாங்கள் நன்கு அனுபவித்தோம். கால யந்திரம் ஒன்று கிடைக்கப் பெற்று நமது முன்னோரின் சமேதராய் நாங்கள் அங்கு - நான் அங்கு, சஞ்சரித்தேன். என்னோடு இருந்தவர்களும் என்னோடு அங்கெல்லாம் வந்தார்கள். எங்கள் மனநிலைகள் அகிலனுக்கு மகத்தான ஆசிகள் ஆகுக என்று நான் கோயிலில் போய்ப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஒரு மாபெரும் கடமையை முடித்த ஓய்வில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-திருமணத்திற்கு வருகிறபோது, வழியில் நான் ஆறுமுகம் கொண்டு வந்த 'ஏரெழுபது' படித்துக் கொண்டு வந்தேன். இத்தகைய பாடல்கள் பெற வேளாளர் குடி எத்தகைய பாக்கியம் செய்தது என்று வியந்தேன். திருப்பத்தூரில் பஸ் புறப்பட்ட உடனேயே நான் படிக்க ஆரம்பித்தேன். அது திருமண ஊர்வலம் கிளம்பு முன் நாதஸ்வர ஓசை கிளம்பியது போல் தொனித்தது.
வாழ்க. புறப்பொருள்கள் கொண்டும், புற நிகழ்ச்சிகள் இயற்றியும் எங்கள் ஆசீர்வாதத்தைப் பூரணமாகத் தெரிவிக்க இயலவில்லை. சோழர் படை நடந்த மண்ணில், கம்பன் வாழ்ந்த காலம் முதலாய், தங்கள் முன்னோர் இயற்றிய பெருமைகளை எல்லாம் நேருறக் கண்டவர் போல் நாங்கள் நெஞ்சு நிரம்பினோம். புதுமணத் தம்பதியர்க்குப் பல்லாண்டு கூறுகிறோம்.
தாங்கள் எப்பொழுதும் போல் இளமையாய் இருக்கிறீர்கள். பரபரவென்று செயலும், படபட வென்று பேச்சும், வாயிலே வந்து வெளியிலே விழுகின்ற மனமுமாக எப்பொழுதும் போல் திகழ்ந்தீர்கள்.
- தாங்கள் எங்களுக்கு அமர்த்திக் கொடுத்த அறை! சோழமண்டலத்தின் சமவெளிக் காற்று அலைஅலையாகப் பரவிவந்த அந்த மொட்டை மாடி, ஆண்டுகளின் இடைவெளியிலேனும் அவ்வப்பொழுது ஒரு ஞாபகார்த்தம் போல் அங்கு வந்து தங்க வேண்டும் என்கிற ஆசையைத் தோற்றுவித்தன. ஆறுமுகமும் அதை அங்கீகரித்தார். அது ஒரு சாதாரண லாட்ஜ் வாசம் போல் எங்களுக்குத் தோன்றவில்லை.
-அந்த அனுபவத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம், நாங்கள் மறுநாள் இரவு, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திரும்பி வந்து, மறுபடியும் அதே லாட்ஜில் அடுத்த அறையில் தங்கினோம். அறை தான் வித்தியாசப் பட்டது. ஆகாயமும், அடித்த காற்றும், ஆட்களின் மனோபாவமும் அகிலனின் திருமணத்துக்கான ஆசிகளும், நானும் ஆறுமுகமும் பேசின பேச்சுக்களின் பொருளும், ஓர் உற்சாகமான பொழுதின் உள்ளடக்கங்கள். பூராவும், தங்களால் என்கிற அடிப்படை இழையும் மாறாமல் அப்படியே இருந்தன.
எங்கள் சந்தோஷங்கள் பூராவும் ஆசிகளாக உருமாறி அகிலனுக்குப் போய்ச் சேரக் கடவது என்று நான் அப்பொழுதே நினைத்துக் கொண்டேன்.
கடிதம் என்பது ஒரு தகவல் பரிமாற்றுச் சாதனம் என்பதை மறந்து, அதை நாம் எழுதும் கதை அல்லது கட்டுரை அல்லது புத்தகம் என்று கருதுகிற காரணத்தால்தான் அதை நாம் இப்போதெல்லாம் எளிதில் எழுத முடிவதில்லையோ என்று நான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதிலும், கடிதம் எழுதாக் கொடுமையைத் தங்களுக்கு எவ்வளவு இழைத்து விட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியும் பெருகுகிறது. சில நேரங்களில், நீளமாக ஒரு கடிதம் எழுதுவதைவிட, நேரில் ஒரு visit செய்து விடுவது சுலபமாகவும் தெரிகிறது. எல்லாவற்றின் காரணமாகவும், தாங்களும் விரைவில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப் போவதாலும், நமது கடிதங்களையும் நேருறக் காணல்களையும் அதிகப் படுத்திக் கொள்வதற்குக் கடவுள் நம்மை அனுமதிக்கப் பிரார்த்திக்கிறேன்.
- தங்கள்
பி.ச.குப்புசாமி.
கடிதம் - 43
திருப்பத்தூர்.வ.ஆ.
13-10-92
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை இப்பொழுது இல்லையே என்று ஒரு நொண்டிச்சாக்குக் கிடைக்க, அம்முயற்சி தவிர்ந்து போயிற்று.
இன்று திருப்பத்தூரில் அடைமழையின் காரணமாக, ஊரும் இந்த வீடும் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிப் போய்விட்டது. நான் ஓர் அறையுள் தனியாக அகப்பட்டுக் கொண்டு விட்டேன். உறக்கம் வரமாட்டேனென்கிறது. தஙகளுக்கு நம் பழைய நாட்கள் போல, எழுதுவதற்கு இது உகந்த சூழ்நிலை என்று தைரியங் கொண்டுவிட்டேன்.
தங்களிடம் அதிகம் பேச முடியவில்லையே தவிர, அகிலனின் கல்யாணத்தை நாங்கள் நன்கு அனுபவித்தோம். கால யந்திரம் ஒன்று கிடைக்கப் பெற்று நமது முன்னோரின் சமேதராய் நாங்கள் அங்கு - நான் அங்கு, சஞ்சரித்தேன். என்னோடு இருந்தவர்களும் என்னோடு அங்கெல்லாம் வந்தார்கள். எங்கள் மனநிலைகள் அகிலனுக்கு மகத்தான ஆசிகள் ஆகுக என்று நான் கோயிலில் போய்ப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
ஒரு மாபெரும் கடமையை முடித்த ஓய்வில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
-திருமணத்திற்கு வருகிறபோது, வழியில் நான் ஆறுமுகம் கொண்டு வந்த 'ஏரெழுபது' படித்துக் கொண்டு வந்தேன். இத்தகைய பாடல்கள் பெற வேளாளர் குடி எத்தகைய பாக்கியம் செய்தது என்று வியந்தேன். திருப்பத்தூரில் பஸ் புறப்பட்ட உடனேயே நான் படிக்க ஆரம்பித்தேன். அது திருமண ஊர்வலம் கிளம்பு முன் நாதஸ்வர ஓசை கிளம்பியது போல் தொனித்தது.
வாழ்க. புறப்பொருள்கள் கொண்டும், புற நிகழ்ச்சிகள் இயற்றியும் எங்கள் ஆசீர்வாதத்தைப் பூரணமாகத் தெரிவிக்க இயலவில்லை. சோழர் படை நடந்த மண்ணில், கம்பன் வாழ்ந்த காலம் முதலாய், தங்கள் முன்னோர் இயற்றிய பெருமைகளை எல்லாம் நேருறக் கண்டவர் போல் நாங்கள் நெஞ்சு நிரம்பினோம். புதுமணத் தம்பதியர்க்குப் பல்லாண்டு கூறுகிறோம்.
தாங்கள் எப்பொழுதும் போல் இளமையாய் இருக்கிறீர்கள். பரபரவென்று செயலும், படபட வென்று பேச்சும், வாயிலே வந்து வெளியிலே விழுகின்ற மனமுமாக எப்பொழுதும் போல் திகழ்ந்தீர்கள்.
- தாங்கள் எங்களுக்கு அமர்த்திக் கொடுத்த அறை! சோழமண்டலத்தின் சமவெளிக் காற்று அலைஅலையாகப் பரவிவந்த அந்த மொட்டை மாடி, ஆண்டுகளின் இடைவெளியிலேனும் அவ்வப்பொழுது ஒரு ஞாபகார்த்தம் போல் அங்கு வந்து தங்க வேண்டும் என்கிற ஆசையைத் தோற்றுவித்தன. ஆறுமுகமும் அதை அங்கீகரித்தார். அது ஒரு சாதாரண லாட்ஜ் வாசம் போல் எங்களுக்குத் தோன்றவில்லை.
-அந்த அனுபவத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம், நாங்கள் மறுநாள் இரவு, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திரும்பி வந்து, மறுபடியும் அதே லாட்ஜில் அடுத்த அறையில் தங்கினோம். அறை தான் வித்தியாசப் பட்டது. ஆகாயமும், அடித்த காற்றும், ஆட்களின் மனோபாவமும் அகிலனின் திருமணத்துக்கான ஆசிகளும், நானும் ஆறுமுகமும் பேசின பேச்சுக்களின் பொருளும், ஓர் உற்சாகமான பொழுதின் உள்ளடக்கங்கள். பூராவும், தங்களால் என்கிற அடிப்படை இழையும் மாறாமல் அப்படியே இருந்தன.
எங்கள் சந்தோஷங்கள் பூராவும் ஆசிகளாக உருமாறி அகிலனுக்குப் போய்ச் சேரக் கடவது என்று நான் அப்பொழுதே நினைத்துக் கொண்டேன்.
கடிதம் என்பது ஒரு தகவல் பரிமாற்றுச் சாதனம் என்பதை மறந்து, அதை நாம் எழுதும் கதை அல்லது கட்டுரை அல்லது புத்தகம் என்று கருதுகிற காரணத்தால்தான் அதை நாம் இப்போதெல்லாம் எளிதில் எழுத முடிவதில்லையோ என்று நான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதிலும், கடிதம் எழுதாக் கொடுமையைத் தங்களுக்கு எவ்வளவு இழைத்து விட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியும் பெருகுகிறது. சில நேரங்களில், நீளமாக ஒரு கடிதம் எழுதுவதைவிட, நேரில் ஒரு visit செய்து விடுவது சுலபமாகவும் தெரிகிறது. எல்லாவற்றின் காரணமாகவும், தாங்களும் விரைவில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப் போவதாலும், நமது கடிதங்களையும் நேருறக் காணல்களையும் அதிகப் படுத்திக் கொள்வதற்குக் கடவுள் நம்மை அனுமதிக்கப் பிரார்த்திக்கிறேன்.
- தங்கள்
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 42
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 42
3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
1 - 9 - 90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
மூன்று நாட்களுக்கு முன் ஆறுமுகம் வந்திருந்தார். தோட்டத்துப் பக்கம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, "மனசு ஏனோ விருத்தாசலம் போகிறது. சபா கடிதம் எழுதுகிறாரோ என்னவோ?" என்று கருதினேன். நேற்று தங்கள் கடிதம் வந்தது.
ஆஸ்பத்திரியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் திடுக்கிட வைத்தன. குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சையின் போது உங்களது நாடித்துடிப்பு இறங்குவதைக் ஒரு நர்ஸ் கவனித்து எச்சரிக்கை செய்து உடனடியாகப் பிராண வாயு அளித்துக் காப்பாற்றப் பட்டதைக் கேட்க மனசு நடுங்குகிறது. அந்த நர்ஸின் கவனம் எவ்வளவு தெய்வீகமானது என்றும், எவ்வளவு அற்புதமான தருணங்களை நமக்காகத் தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருக்கிறார் என்கிற உணர்வும் தோன்றி, ஒரு நம்பிக்கை நன்கு நிறைவேறிய ஆறுதல் பெருமூச்சை நானும் அனுபவித்தேன்.
திட நம்பிக்கையுள்ள தீரர்களாயிருப்போம். நமது நம்பிக்கை மேலும்மேலும் திடப்படட்டும். இந்தக் கடிதம் எழுத ஆரம்பிக்கு முன்பு, 'ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகளை'ப் பிரித்து ஒரு பக்கத்தின் ஆரம்பத்தில் படித்துப் பார்க்கலாம் என்ன வருகிறதோ, என்று பிரித்துப் படித்தேன்.
"எவ்வளவுக்கு நம்பிக்கை அதிகரிக்குமோ, அவ்வளவுக்கு ஞானம் அதிகரிக்கிறது. பார்த்துப் பார்த்துத் தீனி தின்னும் பசு விட்டுவிட்டுப் பால் கொடுக்கும். ஆனால் இலை, செடி, தோல், பொட்டு என்று எதைக் கொடுத்தாலும் லபக் லபக் என்று எந்தப் பசு தின்றுவிடுமோ அந்தப் பசு தொடர்ந்து பால் கொடுக்கும்" - என்று ஸ்ரீராமகிருஷ்ணர் பேசுகிற பகுதி வந்தது. உடனே உங்களுக்கு இதை எழுதிவிட வேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிறு குறிப்பை, தங்கள் உடல் நலம் வாழ்த்தி, நான் தரும் ஒரு ஆலயப் பிரசாதம் போல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏதோ ஒன்றிற்கு நாம் எல்லை கடந்த நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரே விதமான பாஷையில் சொல்லி அதை வெறும் உளறல் ஆக்கி விட்டார்கள். விதவிதமாகச் சொன்னால் அந்த அருள் மேலும் நன்கு விளங்குகிறது. ஆபரேஷன் தொடக்கத்திலேயே அந்தப் பிரச்சினை தோன்றியதும், அப்போது மறு உத்திரவாதம் போல் அந்த நர்ஸின் பார்வையின் உன்னிப்பும், யாரோ தேவதூதர்கள் வானத்தில் நின்று நமது நலத்திற்காகக் கட்டளையிட்டது போல் இருக்கிறது. வெகு சூட்சமமான இயந்திரங்கள் செயல்பட்டன போலும் தெரிகிறது.
- சிவகுமார் பிறந்த சிசேரியன் ஆபரேஷனிலும், அப்புறம் சரசுக்கு நடந்த தைராய்டு ஆபரேஷனிலும், இதையொத்த அனுபவங்கள் ஏற்பட்டு, இப்பொழுதும் கூட எனக்குச் சொல்லச் சொல்ல உடல் சிலிர்க்கும். ஆதலால், நீங்கள் எழுதியதையெல்லாம் நன்கு உணர்ந்தேன்.
6-9-90 இரவு.
தங்கள் கடிதம் வந்தபோது, ஒரு புரொகிராம் இருந்தது, இன்னும் இருக்கிறது. (நான்தான் அதைத் தவர விட்டு விட்டேன்). 7-9-90 வெள்ளி இரவு கொல்லம் மெயிலில் புறப்பட்டு, JK தென்காசி செல்கிறார். அங்கே, குற்றாலத்தில், சாமியார் அருவியின் பக்கத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் பழப்பண்ணை வாரியத் தின் விருந்தினர் விடுதியில் தங்குகிறார். 8,9 அங்கே. முன்பொரு முறை அருணாசலமும் நானும் அதே இடத்தில் JKவோடு இருக்கும் பேறு பெற்றோம். 8 mm மூவியும் அருணாசலம் எடுத்து வைத்திருக்கிறார். "சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்ப வந்தாட விரும்புகிறேன்" என்கிற JK கவிதைப் பிரகாரம், இது நாங்கள் சென்று கலக்க வேண்டிய புரோகிராமே ஆகும். முதலில் அருணாசலம் - அவர் வருவதற்கில்லை என்றாயிற்று. சற்றுமுன்பு எட்டு மணிக்கு நான் JKவோடு போனில் பேசும் போது, நான் மட்டுமாவது போவேன் என்று தோன்றிற்று. வீடு வந்ததும், இந்த உலகம், இத்தகைய இன்பங்களின்பாலும் குற்றம் சாட்டும் என்பதறிந்த விரக்தியில், "நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலம் மட்டும்தானா உகந்த இடம்? ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல், நாங்கள் சந்திக்கும் ஸ்தலம் திருத்தலம்" என்று தீர்மானித்து, நானும் போவதில்லை என்றாயிற்று. இன்ஷா அல்லாஹ்!
- தங்களுக்காவது முன்கூட்டி எழுதி உஷார்ப்படுத்திக் கிளம்பியிருக்கலாம். செப்டம்பர் சாரலையும் அருவிக் குளியலையும் தங்கள் உடல்நிலை - சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் ஏற்குமோ என்பதுபோல் கருதித் தயங்கி விட்டேன்.
மொத்தத்தில் என்ன தோன்றுகிறது என்றால், எல்லாவற்றையும் விதியின் வழியே விட்டுவிடத் தோன்றுகிறது. இதையெல்லாம் எதிர்த்துத்தான் இத்தனை காலமும் சளைக்காமல் போராடினோம். சுற்றியுள்ள உலகம் பூராவும் சேர்ந்து நம்மைச் சபிக்கும் போலும். ஒரு குருவும் சீடர்களும் குழுமுவது பற்றித்தான் உலகத்தில் எத்தனை பேச்சு? உற்றாருக்குத்தான் எத்தனை பொறாமை?
இந்த மூடமக்களை நாம் ஏமாற்றுவோம். நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலமும் எந்த மலையின் கொடுமுடியும் தேவையில்லை. குப்பைத் தொட்டி ஓரமும் குக்கிராமங்களிலும் நாங்கள் சந்தித்துக் குதூகலித்திருப்போம்.
குற்றாலம் போவதில்லை என்று தீர்மானித்தவுடன், அடுத்து உங்களுக்கு எழுதுகிற கடிதத்தைத் தொடர்கிற வேலையை எடுத்துக் கொண்டேன்.
எனக்கு மிக விருப்பமான ஒன்றை நான் இன்று துறந்தேன். துறவுப் பாதையில் எனது வளர்ச்சிக்கு இந்த அனுபவத்தைத் துணையாகக் கொள்வேன்.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
கடிதம் - 42
3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.
1 - 9 - 90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
மூன்று நாட்களுக்கு முன் ஆறுமுகம் வந்திருந்தார். தோட்டத்துப் பக்கம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, "மனசு ஏனோ விருத்தாசலம் போகிறது. சபா கடிதம் எழுதுகிறாரோ என்னவோ?" என்று கருதினேன். நேற்று தங்கள் கடிதம் வந்தது.
ஆஸ்பத்திரியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் திடுக்கிட வைத்தன. குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சையின் போது உங்களது நாடித்துடிப்பு இறங்குவதைக் ஒரு நர்ஸ் கவனித்து எச்சரிக்கை செய்து உடனடியாகப் பிராண வாயு அளித்துக் காப்பாற்றப் பட்டதைக் கேட்க மனசு நடுங்குகிறது. அந்த நர்ஸின் கவனம் எவ்வளவு தெய்வீகமானது என்றும், எவ்வளவு அற்புதமான தருணங்களை நமக்காகத் தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்திருக்கிறார் என்கிற உணர்வும் தோன்றி, ஒரு நம்பிக்கை நன்கு நிறைவேறிய ஆறுதல் பெருமூச்சை நானும் அனுபவித்தேன்.
திட நம்பிக்கையுள்ள தீரர்களாயிருப்போம். நமது நம்பிக்கை மேலும்மேலும் திடப்படட்டும். இந்தக் கடிதம் எழுத ஆரம்பிக்கு முன்பு, 'ஸ்ரீராமகிருஷ்ண அமுதமொழிகளை'ப் பிரித்து ஒரு பக்கத்தின் ஆரம்பத்தில் படித்துப் பார்க்கலாம் என்ன வருகிறதோ, என்று பிரித்துப் படித்தேன்.
"எவ்வளவுக்கு நம்பிக்கை அதிகரிக்குமோ, அவ்வளவுக்கு ஞானம் அதிகரிக்கிறது. பார்த்துப் பார்த்துத் தீனி தின்னும் பசு விட்டுவிட்டுப் பால் கொடுக்கும். ஆனால் இலை, செடி, தோல், பொட்டு என்று எதைக் கொடுத்தாலும் லபக் லபக் என்று எந்தப் பசு தின்றுவிடுமோ அந்தப் பசு தொடர்ந்து பால் கொடுக்கும்" - என்று ஸ்ரீராமகிருஷ்ணர் பேசுகிற பகுதி வந்தது. உடனே உங்களுக்கு இதை எழுதிவிட வேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிறு குறிப்பை, தங்கள் உடல் நலம் வாழ்த்தி, நான் தரும் ஒரு ஆலயப் பிரசாதம் போல் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏதோ ஒன்றிற்கு நாம் எல்லை கடந்த நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரே விதமான பாஷையில் சொல்லி அதை வெறும் உளறல் ஆக்கி விட்டார்கள். விதவிதமாகச் சொன்னால் அந்த அருள் மேலும் நன்கு விளங்குகிறது. ஆபரேஷன் தொடக்கத்திலேயே அந்தப் பிரச்சினை தோன்றியதும், அப்போது மறு உத்திரவாதம் போல் அந்த நர்ஸின் பார்வையின் உன்னிப்பும், யாரோ தேவதூதர்கள் வானத்தில் நின்று நமது நலத்திற்காகக் கட்டளையிட்டது போல் இருக்கிறது. வெகு சூட்சமமான இயந்திரங்கள் செயல்பட்டன போலும் தெரிகிறது.
- சிவகுமார் பிறந்த சிசேரியன் ஆபரேஷனிலும், அப்புறம் சரசுக்கு நடந்த தைராய்டு ஆபரேஷனிலும், இதையொத்த அனுபவங்கள் ஏற்பட்டு, இப்பொழுதும் கூட எனக்குச் சொல்லச் சொல்ல உடல் சிலிர்க்கும். ஆதலால், நீங்கள் எழுதியதையெல்லாம் நன்கு உணர்ந்தேன்.
6-9-90 இரவு.
தங்கள் கடிதம் வந்தபோது, ஒரு புரொகிராம் இருந்தது, இன்னும் இருக்கிறது. (நான்தான் அதைத் தவர விட்டு விட்டேன்). 7-9-90 வெள்ளி இரவு கொல்லம் மெயிலில் புறப்பட்டு, JK தென்காசி செல்கிறார். அங்கே, குற்றாலத்தில், சாமியார் அருவியின் பக்கத்தில் உள்ள தோட்டக்கலை மற்றும் பழப்பண்ணை வாரியத் தின் விருந்தினர் விடுதியில் தங்குகிறார். 8,9 அங்கே. முன்பொரு முறை அருணாசலமும் நானும் அதே இடத்தில் JKவோடு இருக்கும் பேறு பெற்றோம். 8 mm மூவியும் அருணாசலம் எடுத்து வைத்திருக்கிறார். "சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்ப வந்தாட விரும்புகிறேன்" என்கிற JK கவிதைப் பிரகாரம், இது நாங்கள் சென்று கலக்க வேண்டிய புரோகிராமே ஆகும். முதலில் அருணாசலம் - அவர் வருவதற்கில்லை என்றாயிற்று. சற்றுமுன்பு எட்டு மணிக்கு நான் JKவோடு போனில் பேசும் போது, நான் மட்டுமாவது போவேன் என்று தோன்றிற்று. வீடு வந்ததும், இந்த உலகம், இத்தகைய இன்பங்களின்பாலும் குற்றம் சாட்டும் என்பதறிந்த விரக்தியில், "நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலம் மட்டும்தானா உகந்த இடம்? ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது போல், நாங்கள் சந்திக்கும் ஸ்தலம் திருத்தலம்" என்று தீர்மானித்து, நானும் போவதில்லை என்றாயிற்று. இன்ஷா அல்லாஹ்!
- தங்களுக்காவது முன்கூட்டி எழுதி உஷார்ப்படுத்திக் கிளம்பியிருக்கலாம். செப்டம்பர் சாரலையும் அருவிக் குளியலையும் தங்கள் உடல்நிலை - சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் ஏற்குமோ என்பதுபோல் கருதித் தயங்கி விட்டேன்.
மொத்தத்தில் என்ன தோன்றுகிறது என்றால், எல்லாவற்றையும் விதியின் வழியே விட்டுவிடத் தோன்றுகிறது. இதையெல்லாம் எதிர்த்துத்தான் இத்தனை காலமும் சளைக்காமல் போராடினோம். சுற்றியுள்ள உலகம் பூராவும் சேர்ந்து நம்மைச் சபிக்கும் போலும். ஒரு குருவும் சீடர்களும் குழுமுவது பற்றித்தான் உலகத்தில் எத்தனை பேச்சு? உற்றாருக்குத்தான் எத்தனை பொறாமை?
இந்த மூடமக்களை நாம் ஏமாற்றுவோம். நாங்கள் சந்திப்பதற்குக் குற்றாலமும் எந்த மலையின் கொடுமுடியும் தேவையில்லை. குப்பைத் தொட்டி ஓரமும் குக்கிராமங்களிலும் நாங்கள் சந்தித்துக் குதூகலித்திருப்போம்.
குற்றாலம் போவதில்லை என்று தீர்மானித்தவுடன், அடுத்து உங்களுக்கு எழுதுகிற கடிதத்தைத் தொடர்கிற வேலையை எடுத்துக் கொண்டேன்.
எனக்கு மிக விருப்பமான ஒன்றை நான் இன்று துறந்தேன். துறவுப் பாதையில் எனது வளர்ச்சிக்கு இந்த அனுபவத்தைத் துணையாகக் கொள்வேன்.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 41
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 41
திருப்பத்தூர்.வ.ஆ.
19-3-90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். இன்றுதான் அவருக்கு, இனிமேல் நீங்கள் என்றைக்கும் வரலாம் - வருகிற தேதியை ஊர்ஜிதப்படுத்துங்கள் என்று ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். நாளை அவரோடு போனிலும் பேசுவேன். தங்களுக்கும் தகவல் உரிய நேரத்தில் வரும். இந்த முறை நீங்கள் அவசியம் வர முயலுங்கள். தங்களுக்குப் பேரன் பிறந்ததற்கு, தாங்கள் எங்களுக்குத் தரும் treat ஆக இதைக் கருதுங்கள்.
- இடையில் எனக்கும் பல வேலைகள் உள்ளன. எங்கள் A.E.O வுடன் ஒர் இறுதி யுத்தத்துக்குத் தயாராகாவிட்டால் என்னைத் தாழ்வு மனப்பான்மை சூழ்ந்து விடும். ஆனாலும் அதை ஏப்ரல் மாதம் மூன்றாவது சனிக்கிழமை வரை ஒத்திவைக்க முடியும். அதற்குள் , JK வுக்கு விடுத்த அழைப்பையும், தங்களைச் சந்திப்பதையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் தாங்கள் என்னுடைய இன்னொரு தகவலை எதிர்பாருங்கள்.
22 - 3 - 90
20ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு JK வோடு போனில் பேசினேன். அன்றுதான் அவருக்கு என் கடிதம் கிடைத்திருந்ததாகையால், நிதானமாக யோசனை செய்து தெரிவிப்பதாகக் கூறினார். அநேகமாக நான் உங்களுக்குப் போன் மூலமாகத்தான் தகவல் தர முடியும் என்று நினைக்கிறேன். அவசியம் வருக. நிற்க, உங்களுக்கு நான் எழுதுகிற கடிதங்களில் ஒரு சுதந்திரத் தன்மையை உணர்கிறேன். மனக் கூச்சங்களிலிருந்து மட்டும் விடுபட்ட சுதந்திரம் அன்று இது. காலத் தின் தளைகளிலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் இது. ஓர் ஐந்து நிமிஷ நேரத்தின் எண்ண அலைகளை விடவும் (அதாவது குறைந்த பட்சம் ஓர் 'அர்ஜெண்ட்' டான கடிதம் எழுத ஆகும் நேரம்) அவகாசம் அதிகம் கிடைத்த - நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் கூட - எண்ணங்களின் சுதந்திரமான வெளியீடுகளாக உங்களுக்கு எழுதுகிற கடிதங்களைக் கருதுகிறேன். சுயதம்பட்டத்தின் குரல் ஒன்றுமட்டும் இதில் கேட்கக் கூடாது - அப்பொழுது சுதந்திரம் மதிப்பிழந்து போகிறது என்கிற அழுத்த மான புரியுணர்வு எனக்கு உண்டு.
என் கடிதங்கள் அதிக பட்சம், நான் எதையாவது, யாரையாவது அதிகமாகப் புகழ்கிறேன் என்கிற குறை உடையனவாக இருக்கக் கூடும். காணாத சத்தியத்தைக் கண்டவர்க்கு, அதைத் தொழுவதிலும் வழிபடுவதிலும் கட்டுப்பாடு எதற்கு? எனவே அந்தக் குற்றச்சாட்டை, நான் உணர்ந்தே ஏற்கிறேன்.
புகழ்கிறவர்கள் எல்லாம் மனதாரப் புகழ்கிறார்களோ? புகழ்ச்சிகள் எல்லாம் பொய்யையும் அறியாமையையும் கலக்காதவைதானோ? என் புகழுரைகளில் பொய்மையும் இல்லை; பிறரொடு ஒப்பிடுகையில் எனக்குப் பெரிய அறியாமையும் ஏதும் இல்லை. ஆனால் ஆர்வமும் ஆசையும் காதலும் அன்பும் தவிப்பும் அதிகம் இருக்கின் றன. அதனால் உண்டான ஆத்ம வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே, உலகின் அளவுகோல்கள் என்னும் ஆகாயத்தைக் கடந்த அப்புறத்திலிருந்து நான் எழுதுகிறேன் என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன்.
எனவே எனது கடித தாமதங்களையும் கந்தரகோளங்களையும் புரிந்துகொள் வீர்கள் என்றும் நம்புகிறேன்.
28 - 3 - 90
JK விடமிருந்து தகவல் வந்து விட்டது. 6-4-90 வெள்ளி இரவு 12.00மணிக்கு சென்னையிலிருந்து அவர் பஸ்ஸில் தோழர்கள் புடைசூழப் புறப்பட்டு, 7-3-90 சனிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டில் வந்து இறங்குகிறார். அதற்குள் பட்டுக்கோட்டையிலிருந்தும் கோவையிலிருந்தும் ஈரோட்டிலிருந் தும் ஆரணியிலிருந்தும் தோழர்கள் திருப்பத்துர் வந்து சேர்கின்றனர்; தாங்களும்! திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டிலிருந்து அப்படியே புறப்படுகிறோம். நான் முன்பு வசித்த நாகராஜம்பட்டி கிராமத்துக்கு நேர் கிழக்கே உள்ள குரும்பேரி என்னும் கிராமத்துக்கும் கிழக்கெ, ஜவ்வாது மலை அடிவாரத்தில் நண்பர் ஒருவரின் "கொல்லைக் கொட்டாய்' ஒன்றும் களம் ஒன்றும் மாட்டுக் கொட்டகை ஒன்றும் காலியாக்கப் பட்டு, நாம் தங்குவதற்குத் தயாராக வைத்திருக்கும். தாங்கள் ஒரு புதிய காட்சியைக் காண்பீர்கள். மற்றவை குறித்து இப்போது நான் குறிப்பிடுவது நயமற்றதும் பாங்கற்றதும் ஆகும்.
தாங்கள் இந்தமுறை அவசியம் வந்து விடுங்கள். இத்தகைய ஒரு காட்சியைக் காண ஏற்பாடு செய்ய அடுத்த வருஷம் எனக்கு வலிமையிருக்குமோ என அஞ்சுகிறேன். இது தங்களுக்கு, நாம் எல்லாம் கலந்து கொள்ளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்ட, பிற சந்திப்புகளுக்கெல்லாம் புறம்பான, free ஆன ஒரு சந்திப்பாக, அனுபவமாக இருக்கும் என்கிற நம்பிக்கையினால், இவ்வழைப்பை எத்தனை முறை வற்புறுத்தி எழுதவும் விரும்புகிறேன்.
- இந்த வருகை, குறைந்த பட்சம் ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போன்ற மனநிறைவையாவது அளிக்கும் என்று நம்புகிறேன்.
8-4-90 அன்று ஞாயிறு, பங்குனி உத்திரம். எங்கள் தெருவும், தெருவில் உள்ள தண்டபாணிசாமி கோயிலும் - பெரியப்பாவும் மு.வ வும் அந்தி வேளையில் லாந்தர் விளக்கில் தமிழ் பயின்ற ஸ்தலம் - பங்குனி உத்திரத்தை முன்னிட்டுக் கோலாகலமாய் இருக்கும்.
கலைமகளுக்குக் குறுநாவலை அனுப்பி விட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தாங்கள் இக்கடிதம் கிடைத்த உடனே ஒரு பதில் எழுதிப் போட்டு, தங்கள் வருகை பற்றிய எங்கள் உத்தேசத் திட்டத்தை வகுத்துக் கொள்ள உதவுங்கள்.
அனைவர்க்கும் எங்கள் அன்பும் நன்றியும் கூறுங்கள்.
- தங்கள், பி.ச.குப்புசாமி.
கடிதம் - 41
திருப்பத்தூர்.வ.ஆ.
19-3-90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தண்டபாணியின் தந்தி உங்களுக்குக் கிடைத்து, அதன் மூலம் அந்த வாரம் JK வரவில்லை என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். இன்றுதான் அவருக்கு, இனிமேல் நீங்கள் என்றைக்கும் வரலாம் - வருகிற தேதியை ஊர்ஜிதப்படுத்துங்கள் என்று ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். நாளை அவரோடு போனிலும் பேசுவேன். தங்களுக்கும் தகவல் உரிய நேரத்தில் வரும். இந்த முறை நீங்கள் அவசியம் வர முயலுங்கள். தங்களுக்குப் பேரன் பிறந்ததற்கு, தாங்கள் எங்களுக்குத் தரும் treat ஆக இதைக் கருதுங்கள்.
- இடையில் எனக்கும் பல வேலைகள் உள்ளன. எங்கள் A.E.O வுடன் ஒர் இறுதி யுத்தத்துக்குத் தயாராகாவிட்டால் என்னைத் தாழ்வு மனப்பான்மை சூழ்ந்து விடும். ஆனாலும் அதை ஏப்ரல் மாதம் மூன்றாவது சனிக்கிழமை வரை ஒத்திவைக்க முடியும். அதற்குள் , JK வுக்கு விடுத்த அழைப்பையும், தங்களைச் சந்திப்பதையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் தாங்கள் என்னுடைய இன்னொரு தகவலை எதிர்பாருங்கள்.
22 - 3 - 90
20ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு JK வோடு போனில் பேசினேன். அன்றுதான் அவருக்கு என் கடிதம் கிடைத்திருந்ததாகையால், நிதானமாக யோசனை செய்து தெரிவிப்பதாகக் கூறினார். அநேகமாக நான் உங்களுக்குப் போன் மூலமாகத்தான் தகவல் தர முடியும் என்று நினைக்கிறேன். அவசியம் வருக. நிற்க, உங்களுக்கு நான் எழுதுகிற கடிதங்களில் ஒரு சுதந்திரத் தன்மையை உணர்கிறேன். மனக் கூச்சங்களிலிருந்து மட்டும் விடுபட்ட சுதந்திரம் அன்று இது. காலத் தின் தளைகளிலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் இது. ஓர் ஐந்து நிமிஷ நேரத்தின் எண்ண அலைகளை விடவும் (அதாவது குறைந்த பட்சம் ஓர் 'அர்ஜெண்ட்' டான கடிதம் எழுத ஆகும் நேரம்) அவகாசம் அதிகம் கிடைத்த - நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் கூட - எண்ணங்களின் சுதந்திரமான வெளியீடுகளாக உங்களுக்கு எழுதுகிற கடிதங்களைக் கருதுகிறேன். சுயதம்பட்டத்தின் குரல் ஒன்றுமட்டும் இதில் கேட்கக் கூடாது - அப்பொழுது சுதந்திரம் மதிப்பிழந்து போகிறது என்கிற அழுத்த மான புரியுணர்வு எனக்கு உண்டு.
என் கடிதங்கள் அதிக பட்சம், நான் எதையாவது, யாரையாவது அதிகமாகப் புகழ்கிறேன் என்கிற குறை உடையனவாக இருக்கக் கூடும். காணாத சத்தியத்தைக் கண்டவர்க்கு, அதைத் தொழுவதிலும் வழிபடுவதிலும் கட்டுப்பாடு எதற்கு? எனவே அந்தக் குற்றச்சாட்டை, நான் உணர்ந்தே ஏற்கிறேன்.
புகழ்கிறவர்கள் எல்லாம் மனதாரப் புகழ்கிறார்களோ? புகழ்ச்சிகள் எல்லாம் பொய்யையும் அறியாமையையும் கலக்காதவைதானோ? என் புகழுரைகளில் பொய்மையும் இல்லை; பிறரொடு ஒப்பிடுகையில் எனக்குப் பெரிய அறியாமையும் ஏதும் இல்லை. ஆனால் ஆர்வமும் ஆசையும் காதலும் அன்பும் தவிப்பும் அதிகம் இருக்கின் றன. அதனால் உண்டான ஆத்ம வேகமும் அதிகமாக இருக்கிறது. எனவே, உலகின் அளவுகோல்கள் என்னும் ஆகாயத்தைக் கடந்த அப்புறத்திலிருந்து நான் எழுதுகிறேன் என்று கருதுவீர்கள் என்று நம்புகிறேன்.
எனவே எனது கடித தாமதங்களையும் கந்தரகோளங்களையும் புரிந்துகொள் வீர்கள் என்றும் நம்புகிறேன்.
28 - 3 - 90
JK விடமிருந்து தகவல் வந்து விட்டது. 6-4-90 வெள்ளி இரவு 12.00மணிக்கு சென்னையிலிருந்து அவர் பஸ்ஸில் தோழர்கள் புடைசூழப் புறப்பட்டு, 7-3-90 சனிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டில் வந்து இறங்குகிறார். அதற்குள் பட்டுக்கோட்டையிலிருந்தும் கோவையிலிருந்தும் ஈரோட்டிலிருந் தும் ஆரணியிலிருந்தும் தோழர்கள் திருப்பத்துர் வந்து சேர்கின்றனர்; தாங்களும்! திருப்பத்தூர் பஸ் ஸ்டேண்டிலிருந்து அப்படியே புறப்படுகிறோம். நான் முன்பு வசித்த நாகராஜம்பட்டி கிராமத்துக்கு நேர் கிழக்கே உள்ள குரும்பேரி என்னும் கிராமத்துக்கும் கிழக்கெ, ஜவ்வாது மலை அடிவாரத்தில் நண்பர் ஒருவரின் "கொல்லைக் கொட்டாய்' ஒன்றும் களம் ஒன்றும் மாட்டுக் கொட்டகை ஒன்றும் காலியாக்கப் பட்டு, நாம் தங்குவதற்குத் தயாராக வைத்திருக்கும். தாங்கள் ஒரு புதிய காட்சியைக் காண்பீர்கள். மற்றவை குறித்து இப்போது நான் குறிப்பிடுவது நயமற்றதும் பாங்கற்றதும் ஆகும்.
தாங்கள் இந்தமுறை அவசியம் வந்து விடுங்கள். இத்தகைய ஒரு காட்சியைக் காண ஏற்பாடு செய்ய அடுத்த வருஷம் எனக்கு வலிமையிருக்குமோ என அஞ்சுகிறேன். இது தங்களுக்கு, நாம் எல்லாம் கலந்து கொள்ளும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்ட, பிற சந்திப்புகளுக்கெல்லாம் புறம்பான, free ஆன ஒரு சந்திப்பாக, அனுபவமாக இருக்கும் என்கிற நம்பிக்கையினால், இவ்வழைப்பை எத்தனை முறை வற்புறுத்தி எழுதவும் விரும்புகிறேன்.
- இந்த வருகை, குறைந்த பட்சம் ஒரு நல்ல புத்தகத்தைப் படித்தது போன்ற மனநிறைவையாவது அளிக்கும் என்று நம்புகிறேன்.
8-4-90 அன்று ஞாயிறு, பங்குனி உத்திரம். எங்கள் தெருவும், தெருவில் உள்ள தண்டபாணிசாமி கோயிலும் - பெரியப்பாவும் மு.வ வும் அந்தி வேளையில் லாந்தர் விளக்கில் தமிழ் பயின்ற ஸ்தலம் - பங்குனி உத்திரத்தை முன்னிட்டுக் கோலாகலமாய் இருக்கும்.
கலைமகளுக்குக் குறுநாவலை அனுப்பி விட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தாங்கள் இக்கடிதம் கிடைத்த உடனே ஒரு பதில் எழுதிப் போட்டு, தங்கள் வருகை பற்றிய எங்கள் உத்தேசத் திட்டத்தை வகுத்துக் கொள்ள உதவுங்கள்.
அனைவர்க்கும் எங்கள் அன்பும் நன்றியும் கூறுங்கள்.
- தங்கள், பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 40
( 'சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள் )
கடிதம் - 40
திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல் உங்களுக்கு எழுதத் தொடங்குவதாகவும் நான் என் கடிதமொன்றில் குறிப்பிட்ட நினைவு.
இப்பொழுதோ சந்தோஷங்களின் போது கூட உங்களை மறக்க முடிகிறது. ஆனால் என் ஆழ்ந்த துன்பங்களின் போது, அது சரிதானா என்று உரசிப் பார்க்கும் கல்லோடு, அருகிலேயே நீங்கள் நிற்பது கண்டு, அப்போதெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்று இப்போது எழுதத் தோன்றுகிறது!
இரண்டின் தாத்பர்யமும் ஒன்றே. ஆழ்ந்த நேரங்களில் நாம் நமது அருமந்த நண்பர்களை நினைக்கிறோம்.
அதுவும் நமது உறவு, ஆரம்பத்திலிருந்தே தனது நீண்ட கடிதங்களால், பிறரு டையதையும் விடவும் விசேஷப் பிணைப்புடையது. எனவே, எதையுமே, எடுத்தவுட னேயே உங்களுக்குத்தான் எழுதத் தோன்றுகிறது.
'எழுத்தாளன்' என்கிற ரீதியில் என்னை இப்போது யாரேனும், " இதுவரை நீ என்ன எழுதியிருக்கிறாய்?" என்று கேட்டால், சபாவுக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று பதிலளிப்பேன்.
நான் மத்தியில், போன பௌர்ணமியன்று JK மாயவரம் செல்வதறிந்து, தங்களையும் வந்து அழைத்துக் கொண்டு நாமிருவரும் மாயவரம் போகலாமா என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். மாயவரம் பெண்கள் கல்லூரியில் பாரதிதாசன் விழாவில் JK பேசினார்.
வருகிற பௌர்ணமி 11-3-90 அன்று - 9,10 இருதேதிகளும் வெள்ளி, சனியாக வருகின்றன. JK ஒருக்கால் இந்த நாட்களில் இங்கு வரலாம். அப்படியாயின், போதிய அவகாசத்தோடு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அல்லாத பட்சத்தில், அவசரமாக ஒரு போன் போட்டாவது சொல்கிறேன். அந்த நாட்களில் தாங்கள் எங்களோடு இணைந்து கொள்ள முடிந்தால், இரு தரப்பின் பாக்கியமும் ஆகும் அது.
தங்கள் கதை வந்த உடனேயே ஆறுமுகம் தான் அதைப் படித்து விட்டு வந்து எனக்குச் சொன்னார். கதை என்னவென்று நான் கேட்டேன். கிராமப்புற வாழ்க்கையில் மிக நுட்பமாக நடக்கும் அந்த நாடகம் ஒரு ரசமான கதைப் பொருள்தான். கதையைக் காதால் கேட்ட மாத்திரத்திலேயே அங்ஙனம் நன்றாய் இருந்தது. ஆனால், சமீப நாட்களில் என் பழக்கம் காரணமாக ஆனந்த விகடன் என் கண்ணிலேயே படவில்லை. எந்த ஒரு விகடனையும் புரட்டிப் பார்க்கக்கூட மனம் இப்போது அயர்கிறது. அரசியலின் அதன் வாடை எனக்கு அவ்வளவு குமட்டுகிறது.
இனிமேல்தான் அந்த விகடனைத் தேடிப் பிடித்துப் படிப்பேன்.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். இந்தத் தொடர்ச்சி என்னும் அம்சம் தெய்வீகமானது - நம்மையொத்த கலைஞர்களுக்கு! அது தங்களுக்கு வாய்த்திருப்பது ஒன்றே மகிழ்ச்சிக்குரியது. இலக்கணங்களையும் விமர்சங்களையும் அதிகம் பொருட்படுத்தாதீர்கள். உங்களுக்கே இலக்கணம் தெரியும். உங்களுக்குள்ளேயே உங்களுக்கான விமர்சகன் இருக்கிறான்.
இந்தக் கடிதத்தை இன்னும்கூட எழுதலாம். நாளைய தபாலில் சேர்க்க முடியாமல் இன்னும் ஒத்திப்போய்விடும். அதனால் உடனே முடிக்கிறேன்.
- தங்கள் -
பி.ச.குப்புசாமி.
கடிதம் - 40
திருப்பத்தூர்.வ.ஆ.
24-2-90
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
முன்பொரு முறை, துன்பங்களில் நான் உழலும்போது, உங்களுக்குக் கடிதம் எழுதுவது நின்றுவிடுகிற மாதிரியும், சந்தோஷங்களின் அலை அடிக்கையில் தவிர்க்க முடியாமல் உங்களுக்கு எழுதத் தொடங்குவதாகவும் நான் என் கடிதமொன்றில் குறிப்பிட்ட நினைவு.
இப்பொழுதோ சந்தோஷங்களின் போது கூட உங்களை மறக்க முடிகிறது. ஆனால் என் ஆழ்ந்த துன்பங்களின் போது, அது சரிதானா என்று உரசிப் பார்க்கும் கல்லோடு, அருகிலேயே நீங்கள் நிற்பது கண்டு, அப்போதெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்று இப்போது எழுதத் தோன்றுகிறது!
இரண்டின் தாத்பர்யமும் ஒன்றே. ஆழ்ந்த நேரங்களில் நாம் நமது அருமந்த நண்பர்களை நினைக்கிறோம்.
அதுவும் நமது உறவு, ஆரம்பத்திலிருந்தே தனது நீண்ட கடிதங்களால், பிறரு டையதையும் விடவும் விசேஷப் பிணைப்புடையது. எனவே, எதையுமே, எடுத்தவுட னேயே உங்களுக்குத்தான் எழுதத் தோன்றுகிறது.
'எழுத்தாளன்' என்கிற ரீதியில் என்னை இப்போது யாரேனும், " இதுவரை நீ என்ன எழுதியிருக்கிறாய்?" என்று கேட்டால், சபாவுக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று பதிலளிப்பேன்.
நான் மத்தியில், போன பௌர்ணமியன்று JK மாயவரம் செல்வதறிந்து, தங்களையும் வந்து அழைத்துக் கொண்டு நாமிருவரும் மாயவரம் போகலாமா என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். மாயவரம் பெண்கள் கல்லூரியில் பாரதிதாசன் விழாவில் JK பேசினார்.
வருகிற பௌர்ணமி 11-3-90 அன்று - 9,10 இருதேதிகளும் வெள்ளி, சனியாக வருகின்றன. JK ஒருக்கால் இந்த நாட்களில் இங்கு வரலாம். அப்படியாயின், போதிய அவகாசத்தோடு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அல்லாத பட்சத்தில், அவசரமாக ஒரு போன் போட்டாவது சொல்கிறேன். அந்த நாட்களில் தாங்கள் எங்களோடு இணைந்து கொள்ள முடிந்தால், இரு தரப்பின் பாக்கியமும் ஆகும் அது.
தங்கள் கதை வந்த உடனேயே ஆறுமுகம் தான் அதைப் படித்து விட்டு வந்து எனக்குச் சொன்னார். கதை என்னவென்று நான் கேட்டேன். கிராமப்புற வாழ்க்கையில் மிக நுட்பமாக நடக்கும் அந்த நாடகம் ஒரு ரசமான கதைப் பொருள்தான். கதையைக் காதால் கேட்ட மாத்திரத்திலேயே அங்ஙனம் நன்றாய் இருந்தது. ஆனால், சமீப நாட்களில் என் பழக்கம் காரணமாக ஆனந்த விகடன் என் கண்ணிலேயே படவில்லை. எந்த ஒரு விகடனையும் புரட்டிப் பார்க்கக்கூட மனம் இப்போது அயர்கிறது. அரசியலின் அதன் வாடை எனக்கு அவ்வளவு குமட்டுகிறது.
இனிமேல்தான் அந்த விகடனைத் தேடிப் பிடித்துப் படிப்பேன்.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். இந்தத் தொடர்ச்சி என்னும் அம்சம் தெய்வீகமானது - நம்மையொத்த கலைஞர்களுக்கு! அது தங்களுக்கு வாய்த்திருப்பது ஒன்றே மகிழ்ச்சிக்குரியது. இலக்கணங்களையும் விமர்சங்களையும் அதிகம் பொருட்படுத்தாதீர்கள். உங்களுக்கே இலக்கணம் தெரியும். உங்களுக்குள்ளேயே உங்களுக்கான விமர்சகன் இருக்கிறான்.
இந்தக் கடிதத்தை இன்னும்கூட எழுதலாம். நாளைய தபாலில் சேர்க்க முடியாமல் இன்னும் ஒத்திப்போய்விடும். அதனால் உடனே முடிக்கிறேன்.
- தங்கள் -
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 39
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 39
திருப்பத்தூர்.வ.ஆ.
30-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும் கடிதங்களை இனி நான் நிறைய எழுத முடியும் என்று நம்புகிறேன்.
எனவே, எடுத்த உடனேயே அந்தக் காரியத்தைத் தொடங்குகிறேன்.
உங்கள் நூலின் மேலான பலனும் திறனும் எவ்வாறாய் இருக்க வேண்டும் என்றால், கடவுள் என்றும் பக்தி என்றும் மதம் என்றும் ஆன்மிகம் என்றும், அதற்கப்புறம் குரு சிஷ்ய உறவென்றும் சொல்லப் படுகிற - பல பெரியவர்களுக்கே தெளிவாக அத்துபடியாகாத - அவற்றின் அனுஷ்டானங்களில் பல பெரும் குருட்டுப் பிழைகள் செய்கிற அளவுக்கு, அர்த்தமாகாத, அந்த அற்புதமான விஷயங்களை எல்லாம், குழந்தைக்கு அதற்குப் பிடித்தமான பண்டத்தை - அதே நேரத்தில் ஆரோக்கியமும் ஆற்றலும் அளிக்கிற பண்டத்தை, அது விரும்பி வாங்க, நாம் எப்படி ஆர்வத்துடன் ஊட்டுவோமோ - அது போல் ஊட்டுவதாயிருக்க வேண்டும்!
இந்த நூலுக்கு இப்பொழுது அவசியம் என்னவென்று கேளுங்கள். இது இந்தக் காலத்துக்கு நாம் செய்கிற நாம் கற்ற வைத்தியம். மதங்களின் பேராலும், வகுப்புகளின் பேராலும், தத்தம் கடவுள் நம்பிக்கைகளின் பேராலும் இன்றைக்கு இந்தியாவிலும் உலகிலும் தலையெடுக்கிற எத்தனையோ விபரீதப் போக்குகளுக்கு ஆட்படாமல் நமது இளைய தலைமுறைக் குழந்தைக¨ளைக் காக்க வேண்டும் என்கிற ஆழ்ந்த உளமார்ந்த அக்கறையே இந்த அவசியத்தை உண்டாக்குகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர், மஹாமேதாவியான விவேகாநந்தருக்கே, கடவுளை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்ட அவருக்கே, கடவுளை அவர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் உணர்த்த இயன்றது. ராமகிருஷ்ணர் பற்றிய செய்திகள், ஒவ்வொருவராலும் நன்கு உணர்ந்து கொள்ளப்படுகிற அவரது வாழ்க்கை, எல்லாருக்கும் அந்த நலத்தை அளிக்க முடியும்.
பல மஹான்களின் வாழ்க்கை பற்றி நிறையப் பேசி இருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; சிறிது படித்துமிருக்கிறோம். ஆனால், கண்ணெதிரில், (கண்ணெதிரில் என்றால் காலத்தின் கண்ணெதிரில்) பல நுட்பத் தகவல்களோடும், அழகான காட்சி மாற்றங்களுடனும் கவனிக்கப்பட்டு, காலம் செய்த பெரும் பாக்கியத்தின் காரணமாக அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு, நமக்குக் காணக் கிடைக்கிறபொழுது, அந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்கிறபோது, அவர் மஹான் அல்லர், கடவுளின் அவதாரமே என்று அவரது அந்த அத்யந்த சிஷ்யர்களைப் போலவே நாமும் ஒப்புக் கொண்டோம்.
எனக்குத் தோன்றுகிற விஷயமிது. அவர் கடவுளைச் சுலபமாகக் காட்டியருளுகிறார். ஓடிப்போய் நாம் அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்.அப்புறம் அவர் நமது பக்தியில் இருக்கிற வெட்கப்பட வேண்டிய விஷயங்களை யெல்லாம் கழிக்கிறார். இவர் எல்லா மதங்களிலும், அவற்றின் ஆசாரியர்களின் ரூபத்தில் பிறந்திருக்கிறார். இவரின் சீடர்கள் எல்லாம், அந்த ஆசாரியர்களின் சீடர்களாக ஏற்கெனவே பிறந்தவர்கள்தாம் என்று அதை உறுதியாய் உணர்ந்து அனுபவிக்கிறோம். கதை, கதை, கதை, கதை என்று இவர்போல் கதைகளின் அலைகளை உண்டாக்கிய இன்னொரு உலக எழுத்தாளர் இல்லை, ஆனால் இவர் எழுதவே இல்லை. அன்னை சாரதாமணி தேவியாரின் வாக்கில் "ஒருமுறை ஸ்ரீராம கிருஷ்ணரின் பிடியில் சிக்கியவர்கள், வீழ்ச்சி அடைவது என்பதே இல்லை!"
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாமடம் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்' என்னும் நூலின் மூன்று பெரிய பாகங்களை வெளியிட்டுள்ளது. அந்த மூன்று பாகங்களையும் வாங்கிப் படியுங்கள். மகேந்திரநாத் குப்தா என்பவர், ஸ்ரீராமகிருஷ்ணரை அருகிருந்து தரிசித்த சம்பவங்களும், அப்பொழுது நிகழ்ந்த பல அற்புதமான சிறுசிறு விவரக் குறிப்புகளும் கூட - அந்தக் காலத்தின் ஒரு டயரி போல் அதில் உள்ளன. அவற்றை நீங்கள் படித்து விட்டீர்களானால், அப்புறம் வேறு என்னென்ன படிக்க வேண்டும், அறிய வேண்டும் என்கிற வேட்கை உங்களுக்கு ஆரம்பமாகி விடும். நீங்கள் எழுதப் போகிற நூலுக்கு இவ்வாறு அற்புதமான உபகரணங்கள் எல்லாம் உள்ளன.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
கடிதம் - 39
திருப்பத்தூர்.வ.ஆ.
30-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும் கடிதங்களை இனி நான் நிறைய எழுத முடியும் என்று நம்புகிறேன்.
எனவே, எடுத்த உடனேயே அந்தக் காரியத்தைத் தொடங்குகிறேன்.
உங்கள் நூலின் மேலான பலனும் திறனும் எவ்வாறாய் இருக்க வேண்டும் என்றால், கடவுள் என்றும் பக்தி என்றும் மதம் என்றும் ஆன்மிகம் என்றும், அதற்கப்புறம் குரு சிஷ்ய உறவென்றும் சொல்லப் படுகிற - பல பெரியவர்களுக்கே தெளிவாக அத்துபடியாகாத - அவற்றின் அனுஷ்டானங்களில் பல பெரும் குருட்டுப் பிழைகள் செய்கிற அளவுக்கு, அர்த்தமாகாத, அந்த அற்புதமான விஷயங்களை எல்லாம், குழந்தைக்கு அதற்குப் பிடித்தமான பண்டத்தை - அதே நேரத்தில் ஆரோக்கியமும் ஆற்றலும் அளிக்கிற பண்டத்தை, அது விரும்பி வாங்க, நாம் எப்படி ஆர்வத்துடன் ஊட்டுவோமோ - அது போல் ஊட்டுவதாயிருக்க வேண்டும்!
இந்த நூலுக்கு இப்பொழுது அவசியம் என்னவென்று கேளுங்கள். இது இந்தக் காலத்துக்கு நாம் செய்கிற நாம் கற்ற வைத்தியம். மதங்களின் பேராலும், வகுப்புகளின் பேராலும், தத்தம் கடவுள் நம்பிக்கைகளின் பேராலும் இன்றைக்கு இந்தியாவிலும் உலகிலும் தலையெடுக்கிற எத்தனையோ விபரீதப் போக்குகளுக்கு ஆட்படாமல் நமது இளைய தலைமுறைக் குழந்தைக¨ளைக் காக்க வேண்டும் என்கிற ஆழ்ந்த உளமார்ந்த அக்கறையே இந்த அவசியத்தை உண்டாக்குகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர், மஹாமேதாவியான விவேகாநந்தருக்கே, கடவுளை துளைத்துத் துளைத்து கேள்வி கேட்ட அவருக்கே, கடவுளை அவர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் உணர்த்த இயன்றது. ராமகிருஷ்ணர் பற்றிய செய்திகள், ஒவ்வொருவராலும் நன்கு உணர்ந்து கொள்ளப்படுகிற அவரது வாழ்க்கை, எல்லாருக்கும் அந்த நலத்தை அளிக்க முடியும்.
பல மஹான்களின் வாழ்க்கை பற்றி நிறையப் பேசி இருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; சிறிது படித்துமிருக்கிறோம். ஆனால், கண்ணெதிரில், (கண்ணெதிரில் என்றால் காலத்தின் கண்ணெதிரில்) பல நுட்பத் தகவல்களோடும், அழகான காட்சி மாற்றங்களுடனும் கவனிக்கப்பட்டு, காலம் செய்த பெரும் பாக்கியத்தின் காரணமாக அவையெல்லாம் பதிவு செய்யப்பட்டு, நமக்குக் காணக் கிடைக்கிறபொழுது, அந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்கிறபோது, அவர் மஹான் அல்லர், கடவுளின் அவதாரமே என்று அவரது அந்த அத்யந்த சிஷ்யர்களைப் போலவே நாமும் ஒப்புக் கொண்டோம்.
எனக்குத் தோன்றுகிற விஷயமிது. அவர் கடவுளைச் சுலபமாகக் காட்டியருளுகிறார். ஓடிப்போய் நாம் அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறோம்.அப்புறம் அவர் நமது பக்தியில் இருக்கிற வெட்கப்பட வேண்டிய விஷயங்களை யெல்லாம் கழிக்கிறார். இவர் எல்லா மதங்களிலும், அவற்றின் ஆசாரியர்களின் ரூபத்தில் பிறந்திருக்கிறார். இவரின் சீடர்கள் எல்லாம், அந்த ஆசாரியர்களின் சீடர்களாக ஏற்கெனவே பிறந்தவர்கள்தாம் என்று அதை உறுதியாய் உணர்ந்து அனுபவிக்கிறோம். கதை, கதை, கதை, கதை என்று இவர்போல் கதைகளின் அலைகளை உண்டாக்கிய இன்னொரு உலக எழுத்தாளர் இல்லை, ஆனால் இவர் எழுதவே இல்லை. அன்னை சாரதாமணி தேவியாரின் வாக்கில் "ஒருமுறை ஸ்ரீராம கிருஷ்ணரின் பிடியில் சிக்கியவர்கள், வீழ்ச்சி அடைவது என்பதே இல்லை!"
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாமடம் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்' என்னும் நூலின் மூன்று பெரிய பாகங்களை வெளியிட்டுள்ளது. அந்த மூன்று பாகங்களையும் வாங்கிப் படியுங்கள். மகேந்திரநாத் குப்தா என்பவர், ஸ்ரீராமகிருஷ்ணரை அருகிருந்து தரிசித்த சம்பவங்களும், அப்பொழுது நிகழ்ந்த பல அற்புதமான சிறுசிறு விவரக் குறிப்புகளும் கூட - அந்தக் காலத்தின் ஒரு டயரி போல் அதில் உள்ளன. அவற்றை நீங்கள் படித்து விட்டீர்களானால், அப்புறம் வேறு என்னென்ன படிக்க வேண்டும், அறிய வேண்டும் என்கிற வேட்கை உங்களுக்கு ஆரம்பமாகி விடும். நீங்கள் எழுதப் போகிற நூலுக்கு இவ்வாறு அற்புதமான உபகரணங்கள் எல்லாம் உள்ளன.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 38
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 38
திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்திருந்தேன்.
ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை தாங்கள் எங்கள் ஆசிரியர் சங்கத்தில் உரையாற்ற இயலுமா என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு எனக்குத் தெரிவியுங்கள்.
எனது பேராசை என்னவென்றால், ஒரு Decade க்குப் பிறகு இங்கெல்லாம் நல்ல மழை பெய்துள்ளது. எங்களது ஜவ்வாதுக் குன்றுகளில் உள்ள ரம்யமான இடங்களையெல்லாம் நானும் அருணாசலமும் மட்டுமே ஓடோடிச் சென்று பார்த்து உல்லாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உரையை ஆற்றும் சாக்கில், தாங்களும் -நாங்கள் அனைவரும் விரும்புகிறபடி தம்பதி சமேதராய் வந்தால், ஒரு நிர்ப்பந்தத்தின் காணமாகவாவது, நாம் எல்லாரும் நமது குடும்பங்களுக்குத் தரவேண்டிய - அவசியம் தரவேண்டிய - மாற்றுச் சூழ்நிலைகளையும், மறக்க முடியாத பொழுதுகளையும் உண்டாக்கித் தருவோமே என்பதுதான்.
தங்களது பணிமாற்றம் மகிழ்ச்சி தருகிறது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு வடலூர் ஆசிரியர்பயிற்சி நிலையத்துக்கு முதுநிலை விரிவுரையாளராகச் செல்வது அறிந்தேன். மாணாக்கர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி போரடிக்காமல், புதிது புதிதாக அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேசப்போனால், எந்த விஷயம் பற்றியும், எந்தத் தலைப்பின் கீழும், அவர்களுக்குச் சொல்லப் புதிது புதிதான அல்லது சுவை மிகுந்த விஷயங்கள் உங்களிடம் இருக்கின்றன.
பிறர் கேட்க நாம் நமது கருத்துக்களை - எண்ணங்களைச் சொல்கிற நிலை, ஒரு சன்னதம் வந்த நிலை என்பது என் சொந்த அனுபவம்! எனவே, தாங்கள் புதிய பணியில், எதுவும் சள்ளை இல்லை என்பதோடு கூட, சுவையும் மிகுந்திருக்க வேண்டுமென்று நான் கணிக்கிறேன்.
ஆகஸ்டு மூன்றாம் வாரம் இயலவில்லை எனில், எந்த மாதத்தின் மூன்றாவது வாரச் சனிக்கிழமையும் தாங்கள் இங்கு பேச வரலாம். பேசுவதையே பிரதானமாகப் பிரஸ்தாபிக்கக் காரணம், தாங்கள் இப்போது ஆற்றுகிற பணி, ஆசிரியர்களாகிய எங்களால் நிச்சயம் தவறாது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே? ஒரு சிறந்த வாக்குமூலம் எங்களுக்கெல்லாம் தங்களையன்றி யாருண்டு? எனவே, பேசவருகிறோம் என்கிற திட்டத்துடனேயே வருவது பற்றி எழுதுங்கள்.
வருவதை, மழைக்காலம் பனிக்காலத்திற்குள்தான் நான் மிகவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான், மலையும் மேகமும் மழையும் பனியும் பச்சையும் பயிருமாய், எங்கள் காய்ந்த வடார்க்காடு உங்க¨ளைக் கவர முடியும்.
எந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்தோம் என்று பார்த்தால், பேசுகிற காரியத்தைத்தான் சிறப்பாகச் செய்திருக்கிறோம். இது பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஒரு பெருமிதம் வேறு சில பாக்யங்களை இழக்கும் போலும். திருவேறு தெள்ளியராதல் வேறுதானே?
பரவாயில்லை என்றும், உத்தமமே என்றும் எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பயிற்றுவித்திருக்கிறார். நீங்கள், குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அதே நேரத்தில் பெரியவர்களும் வியக்கும் வண்ணம், அவரைப் பற்றி ஒரு புத்த்தகம் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு புத்தகம் எழுதுகிற முயற்சியில் பத்துநாள் இங்கேயே வந்து தங்கவேண்டும்.
இது ரொம்பப் பெயர் பெறும். இந்தக்காலத்துக்கு, இப்பொழுது, இப்பொழுது என்றால் இதோ இப்பொழுதே, எதிரே இருக்கும் பிரச்சினைக்கு மாற்றுச் சொல்லும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சங்கதி. இதைக் குழந்தைகளுக்குச் சொல்ல முற்படுகையில், ஓர் ஆன்மீக வாழ்க்கையின் வேதாந்தப் புதிர்களெல்லாம் கூட விலகி, ஸ்ரீராமகிருஷ்ண சத்தியம் எளிதும் தெளிவும் உடையதாகும் என்று நான் நம்புகிறேன். இந்தக் காரியத்தில் நீங்கள் இறங்குகிற க்ஷணத்திலிருந்து, நாங்கள் உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்யத் தயாராக உள்ளோம்; உண்மை என்னவெனில், அத்தகைய முயற்சியில் ஸ்ரீராமகிருஷ்ணரே தங்களுக்கு உதவுவார்.
இதைக் கருதுக.
சென்ற ஆண்டு, எனது 25 வருஷ சர்வீஸைக் கொண்டாட, முதல் வகுப்பை எடுத்துக் கொண்டு, அதே மாணவர்களுக்குத் தொடர்ந்து இப்போது இரண்டாம் வகுப்பு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் பணியாற்றிய ஆண்டுகளிலேயே மிக முக்கிய ஆண்டுகளாக இவற்றைக் கருதுகிறேன். இந்தப் பிள்ளைகளுடனேயே ஐந்தாம் வகுப்பு வரை போக ஆசை.
- தங்கள் பி.ச.குப்புசாமி.
கடிதம் - 38
திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் அன்பான கடிதத்துக்குச் சிலநாட்கள் தாமதமாகப் பதில் எழுதுகிறேன். இந்த நாட்களில் தங்களுக்கு ஆரஅமர எழுதுகிற ஒரு தருணத்ததிற்காகக் காத்திருந்தேன்.
ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை தாங்கள் எங்கள் ஆசிரியர் சங்கத்தில் உரையாற்ற இயலுமா என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு எனக்குத் தெரிவியுங்கள்.
எனது பேராசை என்னவென்றால், ஒரு Decade க்குப் பிறகு இங்கெல்லாம் நல்ல மழை பெய்துள்ளது. எங்களது ஜவ்வாதுக் குன்றுகளில் உள்ள ரம்யமான இடங்களையெல்லாம் நானும் அருணாசலமும் மட்டுமே ஓடோடிச் சென்று பார்த்து உல்லாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த உரையை ஆற்றும் சாக்கில், தாங்களும் -நாங்கள் அனைவரும் விரும்புகிறபடி தம்பதி சமேதராய் வந்தால், ஒரு நிர்ப்பந்தத்தின் காணமாகவாவது, நாம் எல்லாரும் நமது குடும்பங்களுக்குத் தரவேண்டிய - அவசியம் தரவேண்டிய - மாற்றுச் சூழ்நிலைகளையும், மறக்க முடியாத பொழுதுகளையும் உண்டாக்கித் தருவோமே என்பதுதான்.
தங்களது பணிமாற்றம் மகிழ்ச்சி தருகிறது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு வடலூர் ஆசிரியர்பயிற்சி நிலையத்துக்கு முதுநிலை விரிவுரையாளராகச் செல்வது அறிந்தேன். மாணாக்கர்கள் எப்பொழுதும் ஒரே மாதிரி போரடிக்காமல், புதிது புதிதாக அவ்வப்பொழுது மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பேசப்போனால், எந்த விஷயம் பற்றியும், எந்தத் தலைப்பின் கீழும், அவர்களுக்குச் சொல்லப் புதிது புதிதான அல்லது சுவை மிகுந்த விஷயங்கள் உங்களிடம் இருக்கின்றன.
பிறர் கேட்க நாம் நமது கருத்துக்களை - எண்ணங்களைச் சொல்கிற நிலை, ஒரு சன்னதம் வந்த நிலை என்பது என் சொந்த அனுபவம்! எனவே, தாங்கள் புதிய பணியில், எதுவும் சள்ளை இல்லை என்பதோடு கூட, சுவையும் மிகுந்திருக்க வேண்டுமென்று நான் கணிக்கிறேன்.
ஆகஸ்டு மூன்றாம் வாரம் இயலவில்லை எனில், எந்த மாதத்தின் மூன்றாவது வாரச் சனிக்கிழமையும் தாங்கள் இங்கு பேச வரலாம். பேசுவதையே பிரதானமாகப் பிரஸ்தாபிக்கக் காரணம், தாங்கள் இப்போது ஆற்றுகிற பணி, ஆசிரியர்களாகிய எங்களால் நிச்சயம் தவறாது அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே? ஒரு சிறந்த வாக்குமூலம் எங்களுக்கெல்லாம் தங்களையன்றி யாருண்டு? எனவே, பேசவருகிறோம் என்கிற திட்டத்துடனேயே வருவது பற்றி எழுதுங்கள்.
வருவதை, மழைக்காலம் பனிக்காலத்திற்குள்தான் நான் மிகவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான், மலையும் மேகமும் மழையும் பனியும் பச்சையும் பயிருமாய், எங்கள் காய்ந்த வடார்க்காடு உங்க¨ளைக் கவர முடியும்.
எந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்தோம் என்று பார்த்தால், பேசுகிற காரியத்தைத்தான் சிறப்பாகச் செய்திருக்கிறோம். இது பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஒரு பெருமிதம் வேறு சில பாக்யங்களை இழக்கும் போலும். திருவேறு தெள்ளியராதல் வேறுதானே?
பரவாயில்லை என்றும், உத்தமமே என்றும் எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொள்ள ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பயிற்றுவித்திருக்கிறார். நீங்கள், குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அதே நேரத்தில் பெரியவர்களும் வியக்கும் வண்ணம், அவரைப் பற்றி ஒரு புத்த்தகம் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு புத்தகம் எழுதுகிற முயற்சியில் பத்துநாள் இங்கேயே வந்து தங்கவேண்டும்.
இது ரொம்பப் பெயர் பெறும். இந்தக்காலத்துக்கு, இப்பொழுது, இப்பொழுது என்றால் இதோ இப்பொழுதே, எதிரே இருக்கும் பிரச்சினைக்கு மாற்றுச் சொல்லும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சங்கதி. இதைக் குழந்தைகளுக்குச் சொல்ல முற்படுகையில், ஓர் ஆன்மீக வாழ்க்கையின் வேதாந்தப் புதிர்களெல்லாம் கூட விலகி, ஸ்ரீராமகிருஷ்ண சத்தியம் எளிதும் தெளிவும் உடையதாகும் என்று நான் நம்புகிறேன். இந்தக் காரியத்தில் நீங்கள் இறங்குகிற க்ஷணத்திலிருந்து, நாங்கள் உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்யத் தயாராக உள்ளோம்; உண்மை என்னவெனில், அத்தகைய முயற்சியில் ஸ்ரீராமகிருஷ்ணரே தங்களுக்கு உதவுவார்.
இதைக் கருதுக.
சென்ற ஆண்டு, எனது 25 வருஷ சர்வீஸைக் கொண்டாட, முதல் வகுப்பை எடுத்துக் கொண்டு, அதே மாணவர்களுக்குத் தொடர்ந்து இப்போது இரண்டாம் வகுப்பு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நான் பணியாற்றிய ஆண்டுகளிலேயே மிக முக்கிய ஆண்டுகளாக இவற்றைக் கருதுகிறேன். இந்தப் பிள்ளைகளுடனேயே ஐந்தாம் வகுப்பு வரை போக ஆசை.
- தங்கள் பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 37
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 37
திருப்பத்தூர்,
23-10-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
சமீபத்தில் ஒருமுறை JK ''இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!" என்றார்.
நான் சற்றுத் திடுக்கிட்டேன். 'இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத எந்த பக்தி எனக்கு இருக்கிறது? அப்படி எதுவும் இல்லை. எல்லாரிடமும் இருக்கும் எல்லா பக்தியிலும் கலந்து பிசைந்த ஏகப் பேருண்டையின் ஒரு விள்ளல் என்னிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனது பக்தி பூராவும் எனக்குப் பிறர் கொடுத்தது. நான் சம்பாதித்ததை நான் இழக்கத் துணிவேன். பிறர் எனக்குத் தந்ததைப் பறிகொடுக்க மாட்டேன்..............எனக்கும் எந்த பக்தியும் இவர்களுக்கு இருக்கும் மாபெரும் பக்தியின் சாயல்தான்...............' என்றெல்லாம் சமாதானம் செய்து கொண்டேன்.
கடந்த 15-10-89 ஈரோடில், JK வின் 'புதுச் செருப்பு கடிக்கும்' விசேஷப் படக் காட்சியும், அன்று மாலை நேரு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டமும்.
இந்தச் சந்திப்பில் JK சொன்னார்:
அவரது மனைவியிடம் 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் அவரது நாவலை மட்டும் படிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாராம். (பக்குவப் படாத பருவத்தில் எழுதியது என்று அவருக்கு நாணம்). ஆனாலும் அவர்கள் அதைப் படித்து விட்டார்களாம். "நான் படிக்க வேண்டாம் என்று சொல்லியும் ஏன் படித்தாய்?" என்று JK கேட்டாராம். "ஏன் என்றால் என்ன பதில் சொல்வது? கடவுளை எனக்குக் காட்ட முடியுமா என்று எல்லாரையும் கேட்க விவேகாநந்தருக்கு ஏன் தோன்றியது?" என்று அவர்கள் மறுமொழி சொல்ல, விஷயம் நமது ஆர்வத்துக்குகந்த இடத்தைத் தொட்டி ருக்கிறது. JK அவர்களின் மனைவியார் சொன்னாராம்: "உங்களுக்கும் ராமக்¢ருஷ்ணருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது!"
- இதைச் சொல்லி JK, "குப்பா, அப்போது உன்னை நான் நினைத்துக் கொண்டேன்" என்றார். எனக்கு எத்தகைய அற்புத உணர்ச்சி உண்டாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலும், நாம் பெரிய ராமகிருஷ்ண பக்தர் என்று நாம் பிலுக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லதே. அவரை நாம் உயிர் வாழும் காலம் தோறும் நினையாதிருக்க யாரால் இயலும்? நாம் எல்லாரும் தயக்கமின்றி ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ் ஓதுவோமாக. அவரது க்யாதியே எஞ்ஞான்றும் பரவுவதாக.
இந்தமுறை அப்புறம் நான் JKவுக்குச் சொன்னேன்:
"உங்களை நாங்கள் பருவந்தோறும் வெவேறு பாத்திரமாகப் பார்த்திருக்கிறோம். பாரதியாகப் பார்த்தோம். ஏன், பரமசிவனாகக் கூடப் பார்த்துவிட்டோம். அவ்வாறு இப்போது ராமகிருஷ்ணராகப் பார்க்கிறோம். இவ்வளவு தானே தவிர.......(இதன் நடுவில் அவர் ஏன் ராமகிருஷ்ணராகத் தெரிகிறார் என்ற விஷயத்தையும் சொன்னேன் - அந்த அதியற்புத சம்பாஷணை.......... .பேச்சொழுங்கு, கிளைபடரும் சுவை மிக்க கதைகள் .......பேசப்பேசக் convince ஆக்கும் அந்த அதிசயக்கலை ......) உங்களை ஒரு சிமிழுக்குள் அடைத்து விடவேண்டும் என்பதற்காக ராமகிருஷ்ணர் என்று கூறவில்லை" என்று நயமாகத் தெரிவித்துக் கொண்டேன்.
"நீங்க அடைச்சிடுவீங்க என்று இல்லை அப்பா, நான் அடைஞ்சிடக்கூடாது என்பதற்காக........" என்று JK சொன்னார்.
இந்த இடத்துச் சம்பாஷணையில் எனக்கு ஒரு தேவரகசியத்தின் குரல் கேட்டது.
(JK வோடு நிகழ்ந்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிற போது, அவற்றை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அவை பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று நம்புகிற முதல் ஆளாகத் தாங்கள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.)
இவரை ராமகிருஷ்ணரோடு ஒப்புமைப் படுத்துகிற எங்கள் நேர்மையான துணிச்சலை நன்பர்கள் சிலர் நாங்கள் தனியே பேசிக் கொண்டோம். உலகை ஏமாற்றுவதற்காக ராமகிருஷ்ணரோடு ஒரு மனிதரை ஒப்பிடவேண்டுமென்றால்,அதற்கு JK வினுடையது போன்ற ஒரு personality யையும் அதன் வாழ்முறையையும் தேர்ந்தெடுக்கிற ஓர் அஞ்ஞானியைக் கற்பனை செய்ய இயலுமோ? (contrast முறையிலும் சௌந்தர்யம் உதயமாவதைக் கவனம் கொள்க)
வீட்டில் தற்போது நானும் சரசுவும் பாப்பாவும் மட்டும்தான் இருக்கிறோம்.போக, ஏஞ்சல் நாயும் இரண்டு பூனைக்குட்டிகளும் உள்ளன. வீட்டை விட்டு வருவதே பெரிய கஷ்டம். இல்லையேல், நாங்கள் வந்து அங்கே பாப்பாவைப் பார்ப்போம்.
சில விஷயங்களை நினைத்துச் சும்மா விடுவது, சும்மா விடுவது ஆகாது! அவற்றை அமரத்வத்தின் வர்ணத்தில் தோய்த்து எழுதுவதற்கு நிகராகும் அவ்வாறு நினைப்பது.
தாங்கள் இனி எந்நேரத்திலும் வரலாம். இதுதான் சுருக்கமான பதில். தங்கள் வருகையைக் கொண்டாடுவதற்கு சில கனவுகள் வைத்திருக்கிறேன். நடுவில் ராமகிருஷ்ணர் பற்றியும் பேசலாம்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
கடிதம் - 37
திருப்பத்தூர்,
23-10-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
சமீபத்தில் ஒருமுறை JK ''இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!" என்றார்.
நான் சற்றுத் திடுக்கிட்டேன். 'இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத எந்த பக்தி எனக்கு இருக்கிறது? அப்படி எதுவும் இல்லை. எல்லாரிடமும் இருக்கும் எல்லா பக்தியிலும் கலந்து பிசைந்த ஏகப் பேருண்டையின் ஒரு விள்ளல் என்னிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனது பக்தி பூராவும் எனக்குப் பிறர் கொடுத்தது. நான் சம்பாதித்ததை நான் இழக்கத் துணிவேன். பிறர் எனக்குத் தந்ததைப் பறிகொடுக்க மாட்டேன்..............எனக்கும் எந்த பக்தியும் இவர்களுக்கு இருக்கும் மாபெரும் பக்தியின் சாயல்தான்...............' என்றெல்லாம் சமாதானம் செய்து கொண்டேன்.
கடந்த 15-10-89 ஈரோடில், JK வின் 'புதுச் செருப்பு கடிக்கும்' விசேஷப் படக் காட்சியும், அன்று மாலை நேரு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டமும்.
இந்தச் சந்திப்பில் JK சொன்னார்:
அவரது மனைவியிடம் 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் அவரது நாவலை மட்டும் படிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாராம். (பக்குவப் படாத பருவத்தில் எழுதியது என்று அவருக்கு நாணம்). ஆனாலும் அவர்கள் அதைப் படித்து விட்டார்களாம். "நான் படிக்க வேண்டாம் என்று சொல்லியும் ஏன் படித்தாய்?" என்று JK கேட்டாராம். "ஏன் என்றால் என்ன பதில் சொல்வது? கடவுளை எனக்குக் காட்ட முடியுமா என்று எல்லாரையும் கேட்க விவேகாநந்தருக்கு ஏன் தோன்றியது?" என்று அவர்கள் மறுமொழி சொல்ல, விஷயம் நமது ஆர்வத்துக்குகந்த இடத்தைத் தொட்டி ருக்கிறது. JK அவர்களின் மனைவியார் சொன்னாராம்: "உங்களுக்கும் ராமக்¢ருஷ்ணருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது!"
- இதைச் சொல்லி JK, "குப்பா, அப்போது உன்னை நான் நினைத்துக் கொண்டேன்" என்றார். எனக்கு எத்தகைய அற்புத உணர்ச்சி உண்டாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலும், நாம் பெரிய ராமகிருஷ்ண பக்தர் என்று நாம் பிலுக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லதே. அவரை நாம் உயிர் வாழும் காலம் தோறும் நினையாதிருக்க யாரால் இயலும்? நாம் எல்லாரும் தயக்கமின்றி ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ் ஓதுவோமாக. அவரது க்யாதியே எஞ்ஞான்றும் பரவுவதாக.
இந்தமுறை அப்புறம் நான் JKவுக்குச் சொன்னேன்:
"உங்களை நாங்கள் பருவந்தோறும் வெவேறு பாத்திரமாகப் பார்த்திருக்கிறோம். பாரதியாகப் பார்த்தோம். ஏன், பரமசிவனாகக் கூடப் பார்த்துவிட்டோம். அவ்வாறு இப்போது ராமகிருஷ்ணராகப் பார்க்கிறோம். இவ்வளவு தானே தவிர.......(இதன் நடுவில் அவர் ஏன் ராமகிருஷ்ணராகத் தெரிகிறார் என்ற விஷயத்தையும் சொன்னேன் - அந்த அதியற்புத சம்பாஷணை.......... .பேச்சொழுங்கு, கிளைபடரும் சுவை மிக்க கதைகள் .......பேசப்பேசக் convince ஆக்கும் அந்த அதிசயக்கலை ......) உங்களை ஒரு சிமிழுக்குள் அடைத்து விடவேண்டும் என்பதற்காக ராமகிருஷ்ணர் என்று கூறவில்லை" என்று நயமாகத் தெரிவித்துக் கொண்டேன்.
"நீங்க அடைச்சிடுவீங்க என்று இல்லை அப்பா, நான் அடைஞ்சிடக்கூடாது என்பதற்காக........" என்று JK சொன்னார்.
இந்த இடத்துச் சம்பாஷணையில் எனக்கு ஒரு தேவரகசியத்தின் குரல் கேட்டது.
(JK வோடு நிகழ்ந்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிற போது, அவற்றை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அவை பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று நம்புகிற முதல் ஆளாகத் தாங்கள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.)
இவரை ராமகிருஷ்ணரோடு ஒப்புமைப் படுத்துகிற எங்கள் நேர்மையான துணிச்சலை நன்பர்கள் சிலர் நாங்கள் தனியே பேசிக் கொண்டோம். உலகை ஏமாற்றுவதற்காக ராமகிருஷ்ணரோடு ஒரு மனிதரை ஒப்பிடவேண்டுமென்றால்,அதற்கு JK வினுடையது போன்ற ஒரு personality யையும் அதன் வாழ்முறையையும் தேர்ந்தெடுக்கிற ஓர் அஞ்ஞானியைக் கற்பனை செய்ய இயலுமோ? (contrast முறையிலும் சௌந்தர்யம் உதயமாவதைக் கவனம் கொள்க)
வீட்டில் தற்போது நானும் சரசுவும் பாப்பாவும் மட்டும்தான் இருக்கிறோம்.போக, ஏஞ்சல் நாயும் இரண்டு பூனைக்குட்டிகளும் உள்ளன. வீட்டை விட்டு வருவதே பெரிய கஷ்டம். இல்லையேல், நாங்கள் வந்து அங்கே பாப்பாவைப் பார்ப்போம்.
சில விஷயங்களை நினைத்துச் சும்மா விடுவது, சும்மா விடுவது ஆகாது! அவற்றை அமரத்வத்தின் வர்ணத்தில் தோய்த்து எழுதுவதற்கு நிகராகும் அவ்வாறு நினைப்பது.
தாங்கள் இனி எந்நேரத்திலும் வரலாம். இதுதான் சுருக்கமான பதில். தங்கள் வருகையைக் கொண்டாடுவதற்கு சில கனவுகள் வைத்திருக்கிறேன். நடுவில் ராமகிருஷ்ணர் பற்றியும் பேசலாம்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
கடித இலக்கியம் - 36
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 36
திருப்பத்தூர்.வ.ஆ.
8-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய விஷயம் - ஆனால் ஒரு புராதன விஷயமும் கூட - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தான். ராமகிருஷ்ணர் ஒரு வரி கூட எழுதி எதையும் உலகுக்கறிவித்தவர் அல்லர். தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் அவர் பேசியதே பெரியதோர் உலகச் செய்தி ஆயிற்று.
ஆனால், அன்பு செலுத்துவதில் தான் அவர் ரகஸ்யம் பூராவும் அடங்கியிருந்தது. நான் இதுகாறும் கண்ட உலக மாந்தர் இடத்தே, எவர் இடத்தும் அன்பு அமுதப் பிரவாகமாகப் பொங்கி வழிந்ததெனில், அது ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தே தான்!
அந்த அன்பின் சுவையை நான் மாந்த ஆரம்பித்து விட்டேன். உங்கள் தோட்டத்தில் நின்று, " எண்ணற்ற எனது முன்னோர்களையும் இனி வரப்போகும் ஏராளமான சந்தததிகளையும் ஒருங்கே சேர்ந்து கண்டு உடன் நிற்பது போல" உணர்ந்தேனே அப்போதே நான் இறையருளால் அன்பு பற்றிய இந்த மாபெரும் போதத்துக்கு ஆட்பட்டிருந்தேன் என்பது நன்கு புரிகிறது. அப்புறம், இந்த இடைக்காலத்தில், எனது ஆற்றல், அறிவு, உணர்ச்சி, கற்பனை, ஞானம், தெளிவு என எல்லாமே இந்த அன்பு கலந்து இருமடங்கு மும்மடங்கு வளர்ச்சி பெற்றன ஸ்ரீராமகிருஷ்ணரால்!
போகப்போகப் புறச்செயல்கள் ஒடுங்குகின்றன. அகத்தினுள் ஆழ்ந்த குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.
உங்களோடு உடனே ஒருபொழுது பேசி மகிழ்ந்தால்தானே, வந்த மங்கலச் சேதிக்குச் சரியான மறுமொழியாகும்? அ·தின்றி, எழுதுதில் என்ன உயிரிருக்க முடியும் என்று எண்ணினேன் போலும்! தங்களது அதீத - அநியாய - ஏக்கம், எழுத்துக்கும் உயிருண்டு என்கிற உண்மையை எனக்குச் செவிட்டில் அறைந்து கற்பித்தது. அதனால்தான் துணிந்து கிறுக்குகிறேன்.
நெடுநாள் அடைத்து நிற்கும்! அப்புறம் அதன் உச்சத்தில் புழுங்கும்! பிறகு சிறிது கசிந்து போக்குக் காட்டும். அப்புறம் பிரவாகமாக அடித்துப் பெய்யும். உங்கள் ஊரில் இப்படி ஒரு மழையைப் பற்றி உங்கள் பழைய கடிதமொன்றில் ஒருமுறை எழுதி, அதை என் கடிதத்துக்கே உவமையாக்கி இருந்தீர்கள்.
தகிக்கும் உலகுக்கு அப்படி ஒரு பெருமழை வரும் பொருட்டு, ஒரு கடித மழை பொழிந்து பூஜிப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.
சந்தித்துக் கொண்டாலும் - அதுவன்றி நினைத்துக் கொண்டாலும் மகிழ்கிற பேறுடைய மாந்தர், அவர் அவ்வாறு குழுமியதே அவர் பாக்கியமும் பாக்கியத்தின் பயனும் அன்றோ? நாமெல்லாம் சேர்ந்தது சந்தித்தது அறிந்தது பிரிந்தது எல்லாம் தெய்வீகமான விஷயங்களே!
எழுதுகிறபோது - சில பொழுது நான் பிதற்றுகிறேனோ என்ற சங்கை வந்து விடுவதுண்டு. அப்படி நின்ற கடிதங்கள் ஐந்தாறு தேடினால் கிடைக்கும். எனவே, எழுதுவது எழுதாதிருப்பதின் வித்தியாசத் திரை கிழிந்து கீழே வீழட்டும்.
மனம் புண்படுவதா? அந்த இதயத் துர்ப்பலம் யாருக்குண்டு? "நைதத் த்வய் உபபத்யதே:" என்று கீதை சொல்வதைக் கற்றுக் கொண்டு, மனம் புண்படுவது என்கிற இதய பலவீனத்துக்கு நான் எப்பொழுதும் ஆட்படுவதே இல்லை! நான் பலவீனன், நான் பாவி, நான் துக்கிக்கிறேன் என்று சொல்வதே பெரிய பலவீனம், பெரிய பாவம், பெரிய துக்கம் - இதனினும் பெரிய கொடிய பலவீனமும் பாவமும் துக்கமும் வேறில்லை.
இதை அறிந்து கடந்துவிட்டதாக நான் ஒரு தெய்வீக அகம்பாவம் கொண்டிருக்கிறேன்.
நான் கண்ட ருசிகளில் மனம் இனி சலிப்பதென்பதும் களைப்பதென்பதும் தெவிட்டலென்பதும் இல்லை. ஓர் உன்னத உறவை ஒரு மனப்புண்ணின் மூலஸ்தானமாக்கும் மடமை, என்னுள் இருக்க இடமில்லை. இது இனி எஞ்ஞான்றுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
கடிதம் - 36
திருப்பத்தூர்.வ.ஆ.
8-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய விஷயம் - ஆனால் ஒரு புராதன விஷயமும் கூட - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தான். ராமகிருஷ்ணர் ஒரு வரி கூட எழுதி எதையும் உலகுக்கறிவித்தவர் அல்லர். தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் அவர் பேசியதே பெரியதோர் உலகச் செய்தி ஆயிற்று.
ஆனால், அன்பு செலுத்துவதில் தான் அவர் ரகஸ்யம் பூராவும் அடங்கியிருந்தது. நான் இதுகாறும் கண்ட உலக மாந்தர் இடத்தே, எவர் இடத்தும் அன்பு அமுதப் பிரவாகமாகப் பொங்கி வழிந்ததெனில், அது ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தே தான்!
அந்த அன்பின் சுவையை நான் மாந்த ஆரம்பித்து விட்டேன். உங்கள் தோட்டத்தில் நின்று, " எண்ணற்ற எனது முன்னோர்களையும் இனி வரப்போகும் ஏராளமான சந்தததிகளையும் ஒருங்கே சேர்ந்து கண்டு உடன் நிற்பது போல" உணர்ந்தேனே அப்போதே நான் இறையருளால் அன்பு பற்றிய இந்த மாபெரும் போதத்துக்கு ஆட்பட்டிருந்தேன் என்பது நன்கு புரிகிறது. அப்புறம், இந்த இடைக்காலத்தில், எனது ஆற்றல், அறிவு, உணர்ச்சி, கற்பனை, ஞானம், தெளிவு என எல்லாமே இந்த அன்பு கலந்து இருமடங்கு மும்மடங்கு வளர்ச்சி பெற்றன ஸ்ரீராமகிருஷ்ணரால்!
போகப்போகப் புறச்செயல்கள் ஒடுங்குகின்றன. அகத்தினுள் ஆழ்ந்த குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.
உங்களோடு உடனே ஒருபொழுது பேசி மகிழ்ந்தால்தானே, வந்த மங்கலச் சேதிக்குச் சரியான மறுமொழியாகும்? அ·தின்றி, எழுதுதில் என்ன உயிரிருக்க முடியும் என்று எண்ணினேன் போலும்! தங்களது அதீத - அநியாய - ஏக்கம், எழுத்துக்கும் உயிருண்டு என்கிற உண்மையை எனக்குச் செவிட்டில் அறைந்து கற்பித்தது. அதனால்தான் துணிந்து கிறுக்குகிறேன்.
நெடுநாள் அடைத்து நிற்கும்! அப்புறம் அதன் உச்சத்தில் புழுங்கும்! பிறகு சிறிது கசிந்து போக்குக் காட்டும். அப்புறம் பிரவாகமாக அடித்துப் பெய்யும். உங்கள் ஊரில் இப்படி ஒரு மழையைப் பற்றி உங்கள் பழைய கடிதமொன்றில் ஒருமுறை எழுதி, அதை என் கடிதத்துக்கே உவமையாக்கி இருந்தீர்கள்.
தகிக்கும் உலகுக்கு அப்படி ஒரு பெருமழை வரும் பொருட்டு, ஒரு கடித மழை பொழிந்து பூஜிப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.
சந்தித்துக் கொண்டாலும் - அதுவன்றி நினைத்துக் கொண்டாலும் மகிழ்கிற பேறுடைய மாந்தர், அவர் அவ்வாறு குழுமியதே அவர் பாக்கியமும் பாக்கியத்தின் பயனும் அன்றோ? நாமெல்லாம் சேர்ந்தது சந்தித்தது அறிந்தது பிரிந்தது எல்லாம் தெய்வீகமான விஷயங்களே!
எழுதுகிறபோது - சில பொழுது நான் பிதற்றுகிறேனோ என்ற சங்கை வந்து விடுவதுண்டு. அப்படி நின்ற கடிதங்கள் ஐந்தாறு தேடினால் கிடைக்கும். எனவே, எழுதுவது எழுதாதிருப்பதின் வித்தியாசத் திரை கிழிந்து கீழே வீழட்டும்.
மனம் புண்படுவதா? அந்த இதயத் துர்ப்பலம் யாருக்குண்டு? "நைதத் த்வய் உபபத்யதே:" என்று கீதை சொல்வதைக் கற்றுக் கொண்டு, மனம் புண்படுவது என்கிற இதய பலவீனத்துக்கு நான் எப்பொழுதும் ஆட்படுவதே இல்லை! நான் பலவீனன், நான் பாவி, நான் துக்கிக்கிறேன் என்று சொல்வதே பெரிய பலவீனம், பெரிய பாவம், பெரிய துக்கம் - இதனினும் பெரிய கொடிய பலவீனமும் பாவமும் துக்கமும் வேறில்லை.
இதை அறிந்து கடந்துவிட்டதாக நான் ஒரு தெய்வீக அகம்பாவம் கொண்டிருக்கிறேன்.
நான் கண்ட ருசிகளில் மனம் இனி சலிப்பதென்பதும் களைப்பதென்பதும் தெவிட்டலென்பதும் இல்லை. ஓர் உன்னத உறவை ஒரு மனப்புண்ணின் மூலஸ்தானமாக்கும் மடமை, என்னுள் இருக்க இடமில்லை. இது இனி எஞ்ஞான்றுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.
தங்கள் - பி.ச.குப்புசாமி.
Wednesday, December 13, 2006
கடித இலக்கியம் - 35
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 35
3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
21-9-89
அன்புள்ள சபா அவர்களுக்கு,
வணக்கம்.
சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு மூன்று வேளைகள் தொடர்ந்தாற்போல நாம் அருகிருந்து உணவருந்திய காட்சிகள் நாம் அதிகம் கலந்துறவாடிய நிறைவையே தந்தன. நான் என் வாழ்வின் முதல் அனுபவத்தை - குருநாதர் ஒரு தந்தையாக முன் நின்று நடத்திய சௌபாக்கிய தரிசனத்தைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பில் மூழ்கி விட்டிருந்த போதிலும், நாம் பேசிக் கொண்டவை எல்லாமும் கூட அவ்வனுபவத்தின் பகுதிகளாகவே இருந்தன.
நான் மறுநாள் 11-9-89 திங்கள் இரவு திருப்பத்தூர் திரும்பினேன். 16-9-89 சனியன்று புதூர்நாடு ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. மழை சரிவரப் பெய்து, ஜவ்வாது மலை இன்னும் களைகட்டாத காரனத்தால், தங்களை அழைப்பதை ஒத்திப் போட்டேன். கூட்டமும் ஒரு பதினாறு பதினேழு பேர் உள்ள கூட்டம் தான். தங்களை அதற்குத் தவிர்த்ததும் சரியென்றே தோன்றியது.
இப்போது இரண்டு நாட்களாகச் சுமாரான மழை. இன்னும் போகப்போக ஜவ்வாது மலை கோலாகலமாகிவிடும். கானாறுகள் உயிர்பெற்றெழுந்து துள்ளிக் குதித்து ஓடும். தங்கள் பெரும்பாலும் அக்டோபரில் திருப்பத்தூர் தவறாது விஜயம் செய்வீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றித் தாங்கள் எழுதப் போகிற நூலுக்குத் தேவையான பல ஆதாரங்களை நான் தாங்கள் திருப்பத்தூர் வருகிறபோது தர இயலும்.
இப்பொழுது ஒன்று தருகிறேன். அந்த நூலை எழுதும் முன், தங்களுக்கு உருவாக வேண்டிய முக்கியமான மனோபாவம் ஒன்றை இது உங்களுக்கு உண்டாக் கும். கீழ்க் கண்ட வரிகள் ஸ்வாமி விவேகாநந்தருடையவை.
"இப்போது கீதையில் விளக்கப்படும் சில சிறந்த கருத்துக்களைக் கவனிப்போம். இதற்கு முன்னுள்ள சமய நூல்களைவிடச் சிறந்தாகக் கருதப்படும் கீதையின் புதுமை எதில் உள்ளது? அது இதுதான்: அது தோன்றுவதற்கு முன் யோகம், ஞானம், பக்தி முதலியவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் ஒருவரோடொருவர் வாதம் செய்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான நெறியே சிறந்ததெனக் கூறி வந்தனர் என்றும் அறிகிறோம். இந்த நெறிகளைச் சமரசப் படுத்த யாரும் முயலவில்லை. கீதாச்சாரியரே முதன்முதலாக இவற்றைச் சமரசப்படுத்த முயன்றார். அந்தக் காலத்திலிருந்த ஒவ்வொரு பிரிவினருடையவும் சிறந்த பகுதிகளை எடுத்துக் கீதையில் அவர் தொகுத்தார். எதிர்வாதம் புரியும் சமயங்களுள் ஸ்ரீகிருஷ்ணர் சமரசப் படுத்தாமல் விட்ட இடங்களை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வந்து முற்றிலுமாக நிறைவேற்றினார்."
தாங்கள் திருப்பத்துர் வருகிறபோது, அருகிலுள்ள நாட்றம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்கும் நாம் போவோம். அங்கு கிடைக்கும் புத்தகங்களும் துறவிகளும் நாம் வினவும் பலவிஷயங்களை நமக்குத் தெரிவிப்பர். அதுவுமின்றி, ஸ்ரீராம கிருஷ்ணப் பேராற்றின் கிளைகள் எந்தெந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் பாய்ந்தன, அவை இன்று எவ்வாறிருக்கின்றன எனதையும் நாம் நேர்முகமாகக் காண்போம்.
- புத்தகங்களைப் பொறுத்தவரை அந்த மடத்தில் தங்கள் தேவைகள் பூராவும் பூர்த்தியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
தங்கள் - பி.ச.குப்புசாமி
கடிதம் - 35
3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
21-9-89
அன்புள்ள சபா அவர்களுக்கு,
வணக்கம்.
சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு மூன்று வேளைகள் தொடர்ந்தாற்போல நாம் அருகிருந்து உணவருந்திய காட்சிகள் நாம் அதிகம் கலந்துறவாடிய நிறைவையே தந்தன. நான் என் வாழ்வின் முதல் அனுபவத்தை - குருநாதர் ஒரு தந்தையாக முன் நின்று நடத்திய சௌபாக்கிய தரிசனத்தைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பில் மூழ்கி விட்டிருந்த போதிலும், நாம் பேசிக் கொண்டவை எல்லாமும் கூட அவ்வனுபவத்தின் பகுதிகளாகவே இருந்தன.
நான் மறுநாள் 11-9-89 திங்கள் இரவு திருப்பத்தூர் திரும்பினேன். 16-9-89 சனியன்று புதூர்நாடு ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது. மழை சரிவரப் பெய்து, ஜவ்வாது மலை இன்னும் களைகட்டாத காரனத்தால், தங்களை அழைப்பதை ஒத்திப் போட்டேன். கூட்டமும் ஒரு பதினாறு பதினேழு பேர் உள்ள கூட்டம் தான். தங்களை அதற்குத் தவிர்த்ததும் சரியென்றே தோன்றியது.
இப்போது இரண்டு நாட்களாகச் சுமாரான மழை. இன்னும் போகப்போக ஜவ்வாது மலை கோலாகலமாகிவிடும். கானாறுகள் உயிர்பெற்றெழுந்து துள்ளிக் குதித்து ஓடும். தங்கள் பெரும்பாலும் அக்டோபரில் திருப்பத்தூர் தவறாது விஜயம் செய்வீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றித் தாங்கள் எழுதப் போகிற நூலுக்குத் தேவையான பல ஆதாரங்களை நான் தாங்கள் திருப்பத்தூர் வருகிறபோது தர இயலும்.
இப்பொழுது ஒன்று தருகிறேன். அந்த நூலை எழுதும் முன், தங்களுக்கு உருவாக வேண்டிய முக்கியமான மனோபாவம் ஒன்றை இது உங்களுக்கு உண்டாக் கும். கீழ்க் கண்ட வரிகள் ஸ்வாமி விவேகாநந்தருடையவை.
"இப்போது கீதையில் விளக்கப்படும் சில சிறந்த கருத்துக்களைக் கவனிப்போம். இதற்கு முன்னுள்ள சமய நூல்களைவிடச் சிறந்தாகக் கருதப்படும் கீதையின் புதுமை எதில் உள்ளது? அது இதுதான்: அது தோன்றுவதற்கு முன் யோகம், ஞானம், பக்தி முதலியவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் ஒருவரோடொருவர் வாதம் செய்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான நெறியே சிறந்ததெனக் கூறி வந்தனர் என்றும் அறிகிறோம். இந்த நெறிகளைச் சமரசப் படுத்த யாரும் முயலவில்லை. கீதாச்சாரியரே முதன்முதலாக இவற்றைச் சமரசப்படுத்த முயன்றார். அந்தக் காலத்திலிருந்த ஒவ்வொரு பிரிவினருடையவும் சிறந்த பகுதிகளை எடுத்துக் கீதையில் அவர் தொகுத்தார். எதிர்வாதம் புரியும் சமயங்களுள் ஸ்ரீகிருஷ்ணர் சமரசப் படுத்தாமல் விட்ட இடங்களை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வந்து முற்றிலுமாக நிறைவேற்றினார்."
தாங்கள் திருப்பத்துர் வருகிறபோது, அருகிலுள்ள நாட்றம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்கும் நாம் போவோம். அங்கு கிடைக்கும் புத்தகங்களும் துறவிகளும் நாம் வினவும் பலவிஷயங்களை நமக்குத் தெரிவிப்பர். அதுவுமின்றி, ஸ்ரீராம கிருஷ்ணப் பேராற்றின் கிளைகள் எந்தெந்த மூலைமுடுக்குகளிலெல்லாம் பாய்ந்தன, அவை இன்று எவ்வாறிருக்கின்றன எனதையும் நாம் நேர்முகமாகக் காண்போம்.
- புத்தகங்களைப் பொறுத்தவரை அந்த மடத்தில் தங்கள் தேவைகள் பூராவும் பூர்த்தியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
தங்கள் - பி.ச.குப்புசாமி
கடித இலக்கியம் - 34
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 34
களர்பதி - முகாம்
1-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக் கேட்டால் போதாது. அந்தத் துடிப்பைப் பரவசத் துடிப்பாக மாற்றுவதுதான் தக்க பரிகாரம். எனவே நாங்கள் எல்லாம் பெருங்குழுவாகப் பாப்பாவின் கல்யாணத்திற்கு வந்து மகிழப் போகிறோம் என்கிற தகவலை முன் வைக்கிறேன்.
உங்களையத்த மனிதர்களுக்கு எழுதுகிற விஷயத்தை, சம்பிரதாயத்துக்கும் சகட்டுமேனிக்கும் செய்ய என்னால் என்றும் இயன்றதே இல்லை. அதையெல்லாம் விசேஷமாகக் கற்பனை செய்தே எனக்குப் பழக்கமாகி விட்டது. எனவே, எழுத வேண்டும் என்று நான் நினைத்த ஆயிரம் வேளைகளிலும் அதை நான் ஒத்திவைத்தேன். இதுதான் உண்மை.
ஒருவரி இரண்டு வரி எழுதிப் போட்டிருக்கலாம்தான்! ஆனால் நாம் அனைவரும் இந்நிலவுலகில் வாழ்கிறோம் என்கிற உண்மை அதனினும் போதுமானது! எனது புலன் அதை எஞ்ஞான்றும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவனம் எனக்கு இல்லை என்கிற காரணத்தைத் தவிரவும், உங்களால் என் மனம் புண்பட்டி ருக்கக் கூடும் என்கிற காரணத்தை தவிரவும், வேறு காரணங்களை நான் கடிதம் எழுதாது இருந்ததற்குக் கற்பனை செய்துபாருங்கள். அவை அனைத்தும் எனக்கு அற்புதமாகப் பொருந்தும்.
ஆனால் எனக்குள் ஒரு ரகசிய விம்மல் இருக்கிறது. இத்தகைய அன்பிற்கும், இத்தகைய இடங்களின் பரிச்சயத்திற்கும், நான் எப்பொழுது எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என்கிற விம்மல் அது.
அப்படி ஒரு எட்டா உயரத்தில் அதை நான் வைத்ததனால், எழுதாமல் விட்ட கொடுமை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
அதுவுமன்றி, வாழ்வில் நான் பெறுகிற பிற தாக்கங்களை, நான், சகலத்தையும் மறந்த ஒரு மெய்ம்மறதியில், மூர்த்தாட்சண்யத்தில், ஒடுக்கத்தில், ஒரே குறியாய் இருந்து எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது.
தூர தூரங்களில் என் மனசு சஞ்சரிக்கிறது! நான் எதைச் சொல்வேன்! எதை எண்ணுவேன்!
இந்த வரி எனது என்று கருதற்க! இது ரிக்வேதத்தில் ஒரு சுலோகம்!
எனவே, எக்காலத்தும் எனது மௌனத்தைப் பொருட்படுத்தாது, அதை அறவே புறக்கணித்து வீழ்த்துக.!
--------------------------------------------------------------------------------
மகளே, நீ ஒரு தனி நபரா? ஒரு மரமே அல்லவா? எங்கள் தலைமுறைகளின் புண்ணியம் பூராவும் உன்னைச் சாரும் - என்கிற முதல்வரி என்னுள் எந்நேரமும் ஒரு மந்திர உச்சாடனம் போல் முணுமுணுக்கப் பட்டுக் கொண்டிருந்ததாலும் என்னால் கடிதம் எழுதுவதில் இவ்வளவு நிதானமாக இருக்க நேர்ந்துவிட்டது.
--------------------------------------------------------------------------------
திருப்பத்தூர்.வ.ஆ.
7-4-88
6ஆம் தேதி புதன் இரவு ஆறுமுகம் வந்து, தங்களிடமிருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது என்றார். அத்ற்கு முன்பு 5ஆம் தேதி நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டிருந்தேன்.
முன் பகுதியில் உள்ள கடிதம், எல்லாவற்றுற்கும் முன்பு 1-4-88ல் எழுதி நிறுத்தப்பட்டதாகும். இம்மாதிரி இவ்வருடத்தில் நான்கைந்து நிற்கின்றன. ஆறுமுகம் படித்து இதையும் அனுப்புங்கள் என்றதால் இந்தப் பழையதையும் அனுப்பத் துணிந் தேன்.
எல்லார்க்கும் ஆசியும் வாழ்த்தும் எஞ்ஞான்றும் உள!
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
கடிதம் - 34
களர்பதி - முகாம்
1-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக் கேட்டால் போதாது. அந்தத் துடிப்பைப் பரவசத் துடிப்பாக மாற்றுவதுதான் தக்க பரிகாரம். எனவே நாங்கள் எல்லாம் பெருங்குழுவாகப் பாப்பாவின் கல்யாணத்திற்கு வந்து மகிழப் போகிறோம் என்கிற தகவலை முன் வைக்கிறேன்.
உங்களையத்த மனிதர்களுக்கு எழுதுகிற விஷயத்தை, சம்பிரதாயத்துக்கும் சகட்டுமேனிக்கும் செய்ய என்னால் என்றும் இயன்றதே இல்லை. அதையெல்லாம் விசேஷமாகக் கற்பனை செய்தே எனக்குப் பழக்கமாகி விட்டது. எனவே, எழுத வேண்டும் என்று நான் நினைத்த ஆயிரம் வேளைகளிலும் அதை நான் ஒத்திவைத்தேன். இதுதான் உண்மை.
ஒருவரி இரண்டு வரி எழுதிப் போட்டிருக்கலாம்தான்! ஆனால் நாம் அனைவரும் இந்நிலவுலகில் வாழ்கிறோம் என்கிற உண்மை அதனினும் போதுமானது! எனது புலன் அதை எஞ்ஞான்றும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவனம் எனக்கு இல்லை என்கிற காரணத்தைத் தவிரவும், உங்களால் என் மனம் புண்பட்டி ருக்கக் கூடும் என்கிற காரணத்தை தவிரவும், வேறு காரணங்களை நான் கடிதம் எழுதாது இருந்ததற்குக் கற்பனை செய்துபாருங்கள். அவை அனைத்தும் எனக்கு அற்புதமாகப் பொருந்தும்.
ஆனால் எனக்குள் ஒரு ரகசிய விம்மல் இருக்கிறது. இத்தகைய அன்பிற்கும், இத்தகைய இடங்களின் பரிச்சயத்திற்கும், நான் எப்பொழுது எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என்கிற விம்மல் அது.
அப்படி ஒரு எட்டா உயரத்தில் அதை நான் வைத்ததனால், எழுதாமல் விட்ட கொடுமை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
அதுவுமன்றி, வாழ்வில் நான் பெறுகிற பிற தாக்கங்களை, நான், சகலத்தையும் மறந்த ஒரு மெய்ம்மறதியில், மூர்த்தாட்சண்யத்தில், ஒடுக்கத்தில், ஒரே குறியாய் இருந்து எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது.
தூர தூரங்களில் என் மனசு சஞ்சரிக்கிறது! நான் எதைச் சொல்வேன்! எதை எண்ணுவேன்!
இந்த வரி எனது என்று கருதற்க! இது ரிக்வேதத்தில் ஒரு சுலோகம்!
எனவே, எக்காலத்தும் எனது மௌனத்தைப் பொருட்படுத்தாது, அதை அறவே புறக்கணித்து வீழ்த்துக.!
--------------------------------------------------------------------------------
மகளே, நீ ஒரு தனி நபரா? ஒரு மரமே அல்லவா? எங்கள் தலைமுறைகளின் புண்ணியம் பூராவும் உன்னைச் சாரும் - என்கிற முதல்வரி என்னுள் எந்நேரமும் ஒரு மந்திர உச்சாடனம் போல் முணுமுணுக்கப் பட்டுக் கொண்டிருந்ததாலும் என்னால் கடிதம் எழுதுவதில் இவ்வளவு நிதானமாக இருக்க நேர்ந்துவிட்டது.
--------------------------------------------------------------------------------
திருப்பத்தூர்.வ.ஆ.
7-4-88
6ஆம் தேதி புதன் இரவு ஆறுமுகம் வந்து, தங்களிடமிருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது என்றார். அத்ற்கு முன்பு 5ஆம் தேதி நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டிருந்தேன்.
முன் பகுதியில் உள்ள கடிதம், எல்லாவற்றுற்கும் முன்பு 1-4-88ல் எழுதி நிறுத்தப்பட்டதாகும். இம்மாதிரி இவ்வருடத்தில் நான்கைந்து நிற்கின்றன. ஆறுமுகம் படித்து இதையும் அனுப்புங்கள் என்றதால் இந்தப் பழையதையும் அனுப்பத் துணிந் தேன்.
எல்லார்க்கும் ஆசியும் வாழ்த்தும் எஞ்ஞான்றும் உள!
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
Tuesday, November 28, 2006
கடித இலக்கியம் - 33
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
திருப்பத்துர்.வ.ஆ.
26 - 7 - 85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
எனது நேற்றைய கடிதத்துக்குத் தாங்கள் பதில் எழுது முன்பாகவே அடுத்த கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீயச் சம்மேளனத்தில், தமிழ் மாநிலக்கிளைதான் அதிக விறுவிறுப்பாகச் செயல்படுவதாக 'மத்தியில்' பெயராம். நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை; உலகளாவிய கோஷங்களை உடனுக்குடன் வழங்குகிறோம். 'மகாநதி' என்று ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்க முயன்று தோற்றோம். மூன்று நான்குமாதங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கே 'எழுத்தாளர் முகாம்' நடத்துகிறோம். சுமார் நாற்பது ஐம்பது எழுதாளர்கள் - பிரபல்யமுள்ளோர் இல்லாதோர் - சேருகிறார்கள். முதல் முகாமைத் திருப்பத்தூரில் நாங்கள் நடத்தினோம். அடுத்து, திண்டுக்கல்லில் ஒன்று வெகு சிறப்பாக நடந்தது. JK வைச் சந்தித்துக் கால் நூற்றாண்டு இந்த செப்டம்பரில் பூர்த்தியாவதால், அதையொட்டியும் சம்மேளனத்தின் செயல்பாடாகவும், அடுத்த முகாம் ஜம்னாமரத்துரில் செப்டம்பர் 6,7,8 தேதிகளில் வைக்க இருக்கிறோம்.
- பாவனை மிக முக்கியம் என்கிறார் விவேகானந்தர். பாவனை இல்லாமல் பக்தி என்பதே இருக்க முடியாது. நான் எனது சிறுசிறு போராட்டங்களையும் இதிகாச யுத்தங்களாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் தேவாசுர யுத்தம்தான் தெரிகிறது. எங்கும் தேவர்கள். எங்கும் அசுரர்கள். இலக்கியம் என்பதும், இலக்கிய புருஷர்கள் என்பதும் போல நான் ஈடுபட்டறிந்தது இன்னொன்று இல்லை. எனவே எனக்குப் பாரதி வாழ்ந்த காலமும் கம்பன் வாழ்ந்த காலமும் புஷ்கினும் டால்ஸ்டாயும் வாழ்ந்த காலமும் எந்தத் தேசத்தின் எந்தக் காலத்தின் கதைகளோ அன்று. அவையே ஒத்தது என் காலம். அவர்களின் நேரடிச் சந்ததியுடன் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் நான். இந்தப் பாவனையே இந்த முகாம்கள் விஷயத்தில் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.
இந்த முகாமில் நான் 'பால்ய இலக்கிய'த் தோழர்களில் ஒருவரையும் இதுவரை சந்திக்கவில்லை. - JK வையும் தேவபாரதியையும் தவிருங்கள். வையவன் இல்லை. நீங்கள் இல்லை. ஆதிராஜ் இல்லை. நீலவன் இல்லை. இது குறைபாடும் அன்று. குற்றச்சாட்டும் அன்று. ஒரு யதார்த்தம். யார் யாரோ புது முகங்கள். சா.கந்தசாமி, இதயன், பரிணாமன் போன்றோரும் உண்டு.
சில நேரங்களில் எங்கள் முகாம் வீண் அரட்டை போலவும் தோன்றும். ஆனால் அப்போது காதிலே விழுகிற வார்த்தைகள் போன்று அவ்வளவு அழகான வற்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரலாற்றில் எப்பொழுதும் வெகு காலம் காத்திருந்த பிறகே கேட்கிறது.
கவிதைகள் கூடப் படித்துவிட்டுப் போகிறார்கள்.
முகாமின் நடுநாயகம் JK என்பதால் நிகழ்ச்சிநிரல்களின் போக்கை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.
அணு ஆயுத எதிர்ப்பு, உலசமாதானம், மனிதகுல நம்பிக்கை இவற்றை ஏந்திச் செல்லும் பேரணிப் பொதுக்கூட்ட அலைகளிலும் கூட, நான் முதலில் சொன்ன பாவனையின் மகத்துவத்தால், எங்களாலும் அணிவகுக்க முடிகிறது. அதற்காக இறும்பூதெய்துகிறோம்.
எழுத்தாளர் சம்மேளன நடைமுறைகளை அறிமுகப்படுத்த இவ்வளவும் எழுதினேன்.
காடு வனங்களின் மீதெல்லாம் காதல் அதிகரித்து விட்டது. அருணாசலத்திடம் ஒரு 'புல்லட்' இருக்கிறது. அவர் தந்தையார் பாரஸ்டராயிருந்தவர். ஹாஸ்டலில் படித்திருந்த பிள்ளை அவ்வப்பொழுது விடுமுறையில் அப்பாவைக் காண தனியாகக் காட்டுவழி நடந்து சென்றதில் எவ்வளவு கவிதை இருக்கும் பாருங்கள்! எனவே அருணாசலத்துக்கும் காட்டுப் பித்து. நன்றாக எங்கள் ஜவ்வாது மலைப்புறங்களில் எல்லாம் சுற்றுகிறோம். அவரது பூர்வீகம் செஞ்சி பக்கம்தான். 'முட்டிப்பூ' என்று ரோட்டோரம் பூக்கிற ஒரு பூவைக் காண்பிப்பதற்காக அங்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்றார். தென்னாற்காட்டுக்கும் எனக்கும் எப்பொழுதும் விசேஷ உறவு. JK, நீங்கள், இவர். தொண்டை நன்னாட்டின் தொடர்பிது.
கூட்டங்கள் முன்னைவிடவும் இப்போது தீர்மானகரமாக அமைகின்றன. எத்தனையோ காலமாக எவ்வளவோ பேர் இயற்றிச் சலித்த இந்தக் காரியத்தில் நமக்கு மட்டும் இன்னும் ஏன் சலிப்பில்லை என்று தோன்றும்.
இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன்னதாக, காப்புச் செய்யுள் போல சோவியத் யூனியனில் உள்ள டாக்டர் விதாலி பூர்ணிகோவிற்கு, JK வைப் பற்றியும் நமது இலக்கிய வளர்ச்சியைப் பற்றியும் இரு கூறுகளும் இணைந்து நடந்த பகுதிகள் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் - ஒரு நீண்ட கட்டுரை ஆகிறாற் போல.
- இல்லை. மேல்கண்ட பாராவில் நான் தெளிவாகச் சொல்லவில்லை. JKவை
எந்தப் பருவத்தில் எவ்வாறிருந்து, நான் சந்தித்தேனோ அதிலிருந்து இந்தக் கால் நூற்றாண்டுக் கால JK + நாம் + தமிழிலக்கியம் பற்றிய விவரிப்பு இது.
இது பாயிரமாக, பின்னால் நிறைய எழுத வேண்டும். புனைகதைகள் அல்லாததோர் இலக்கிய வடிவத்தை என் மனம் நாடுகிறது. "My land, my people" "எனது பூமி, எனது மக்கள்" என்று, வாழ்க்கை நமக்குத் தந்த காட்சிகளையும் தரிசனங்களையுமே விவரித்து எழுதலாமா என்று தோன்றுகிறது.
ஒர் விரதம் பூண்டுள்ளேன். பத்திரிகைகளை மறந்து எழுதுவேன்.
எவ்வாறோ உங்களுக்கு இம்முறை உடனுக்குடன் இவ்வளவு பெரிய கடிதம் எழுதிவிட்டேன். அன்றாடம் எழுதினால் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் பற்றி எழுதலாம். சீக்கிரம் தபாலில் சேர்த்து தங்கள் கைக்குக் கிடைக்கட்டும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.
- தங்கள், பி.ச.குப்புசாமி
திருப்பத்துர்.வ.ஆ.
26 - 7 - 85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
எனது நேற்றைய கடிதத்துக்குத் தாங்கள் பதில் எழுது முன்பாகவே அடுத்த கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீயச் சம்மேளனத்தில், தமிழ் மாநிலக்கிளைதான் அதிக விறுவிறுப்பாகச் செயல்படுவதாக 'மத்தியில்' பெயராம். நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை; உலகளாவிய கோஷங்களை உடனுக்குடன் வழங்குகிறோம். 'மகாநதி' என்று ஒரு மாதப் பத்திரிகை ஆரம்பிக்க முயன்று தோற்றோம். மூன்று நான்குமாதங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கே 'எழுத்தாளர் முகாம்' நடத்துகிறோம். சுமார் நாற்பது ஐம்பது எழுதாளர்கள் - பிரபல்யமுள்ளோர் இல்லாதோர் - சேருகிறார்கள். முதல் முகாமைத் திருப்பத்தூரில் நாங்கள் நடத்தினோம். அடுத்து, திண்டுக்கல்லில் ஒன்று வெகு சிறப்பாக நடந்தது. JK வைச் சந்தித்துக் கால் நூற்றாண்டு இந்த செப்டம்பரில் பூர்த்தியாவதால், அதையொட்டியும் சம்மேளனத்தின் செயல்பாடாகவும், அடுத்த முகாம் ஜம்னாமரத்துரில் செப்டம்பர் 6,7,8 தேதிகளில் வைக்க இருக்கிறோம்.
- பாவனை மிக முக்கியம் என்கிறார் விவேகானந்தர். பாவனை இல்லாமல் பக்தி என்பதே இருக்க முடியாது. நான் எனது சிறுசிறு போராட்டங்களையும் இதிகாச யுத்தங்களாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் தேவாசுர யுத்தம்தான் தெரிகிறது. எங்கும் தேவர்கள். எங்கும் அசுரர்கள். இலக்கியம் என்பதும், இலக்கிய புருஷர்கள் என்பதும் போல நான் ஈடுபட்டறிந்தது இன்னொன்று இல்லை. எனவே எனக்குப் பாரதி வாழ்ந்த காலமும் கம்பன் வாழ்ந்த காலமும் புஷ்கினும் டால்ஸ்டாயும் வாழ்ந்த காலமும் எந்தத் தேசத்தின் எந்தக் காலத்தின் கதைகளோ அன்று. அவையே ஒத்தது என் காலம். அவர்களின் நேரடிச் சந்ததியுடன் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் நான். இந்தப் பாவனையே இந்த முகாம்கள் விஷயத்தில் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறது.
இந்த முகாமில் நான் 'பால்ய இலக்கிய'த் தோழர்களில் ஒருவரையும் இதுவரை சந்திக்கவில்லை. - JK வையும் தேவபாரதியையும் தவிருங்கள். வையவன் இல்லை. நீங்கள் இல்லை. ஆதிராஜ் இல்லை. நீலவன் இல்லை. இது குறைபாடும் அன்று. குற்றச்சாட்டும் அன்று. ஒரு யதார்த்தம். யார் யாரோ புது முகங்கள். சா.கந்தசாமி, இதயன், பரிணாமன் போன்றோரும் உண்டு.
சில நேரங்களில் எங்கள் முகாம் வீண் அரட்டை போலவும் தோன்றும். ஆனால் அப்போது காதிலே விழுகிற வார்த்தைகள் போன்று அவ்வளவு அழகான வற்றைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரலாற்றில் எப்பொழுதும் வெகு காலம் காத்திருந்த பிறகே கேட்கிறது.
கவிதைகள் கூடப் படித்துவிட்டுப் போகிறார்கள்.
முகாமின் நடுநாயகம் JK என்பதால் நிகழ்ச்சிநிரல்களின் போக்கை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.
அணு ஆயுத எதிர்ப்பு, உலசமாதானம், மனிதகுல நம்பிக்கை இவற்றை ஏந்திச் செல்லும் பேரணிப் பொதுக்கூட்ட அலைகளிலும் கூட, நான் முதலில் சொன்ன பாவனையின் மகத்துவத்தால், எங்களாலும் அணிவகுக்க முடிகிறது. அதற்காக இறும்பூதெய்துகிறோம்.
எழுத்தாளர் சம்மேளன நடைமுறைகளை அறிமுகப்படுத்த இவ்வளவும் எழுதினேன்.
காடு வனங்களின் மீதெல்லாம் காதல் அதிகரித்து விட்டது. அருணாசலத்திடம் ஒரு 'புல்லட்' இருக்கிறது. அவர் தந்தையார் பாரஸ்டராயிருந்தவர். ஹாஸ்டலில் படித்திருந்த பிள்ளை அவ்வப்பொழுது விடுமுறையில் அப்பாவைக் காண தனியாகக் காட்டுவழி நடந்து சென்றதில் எவ்வளவு கவிதை இருக்கும் பாருங்கள்! எனவே அருணாசலத்துக்கும் காட்டுப் பித்து. நன்றாக எங்கள் ஜவ்வாது மலைப்புறங்களில் எல்லாம் சுற்றுகிறோம். அவரது பூர்வீகம் செஞ்சி பக்கம்தான். 'முட்டிப்பூ' என்று ரோட்டோரம் பூக்கிற ஒரு பூவைக் காண்பிப்பதற்காக அங்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்றார். தென்னாற்காட்டுக்கும் எனக்கும் எப்பொழுதும் விசேஷ உறவு. JK, நீங்கள், இவர். தொண்டை நன்னாட்டின் தொடர்பிது.
கூட்டங்கள் முன்னைவிடவும் இப்போது தீர்மானகரமாக அமைகின்றன. எத்தனையோ காலமாக எவ்வளவோ பேர் இயற்றிச் சலித்த இந்தக் காரியத்தில் நமக்கு மட்டும் இன்னும் ஏன் சலிப்பில்லை என்று தோன்றும்.
இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன்னதாக, காப்புச் செய்யுள் போல சோவியத் யூனியனில் உள்ள டாக்டர் விதாலி பூர்ணிகோவிற்கு, JK வைப் பற்றியும் நமது இலக்கிய வளர்ச்சியைப் பற்றியும் இரு கூறுகளும் இணைந்து நடந்த பகுதிகள் பற்றி விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும் - ஒரு நீண்ட கட்டுரை ஆகிறாற் போல.
- இல்லை. மேல்கண்ட பாராவில் நான் தெளிவாகச் சொல்லவில்லை. JKவை
எந்தப் பருவத்தில் எவ்வாறிருந்து, நான் சந்தித்தேனோ அதிலிருந்து இந்தக் கால் நூற்றாண்டுக் கால JK + நாம் + தமிழிலக்கியம் பற்றிய விவரிப்பு இது.
இது பாயிரமாக, பின்னால் நிறைய எழுத வேண்டும். புனைகதைகள் அல்லாததோர் இலக்கிய வடிவத்தை என் மனம் நாடுகிறது. "My land, my people" "எனது பூமி, எனது மக்கள்" என்று, வாழ்க்கை நமக்குத் தந்த காட்சிகளையும் தரிசனங்களையுமே விவரித்து எழுதலாமா என்று தோன்றுகிறது.
ஒர் விரதம் பூண்டுள்ளேன். பத்திரிகைகளை மறந்து எழுதுவேன்.
எவ்வாறோ உங்களுக்கு இம்முறை உடனுக்குடன் இவ்வளவு பெரிய கடிதம் எழுதிவிட்டேன். அன்றாடம் எழுதினால் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் பற்றி எழுதலாம். சீக்கிரம் தபாலில் சேர்த்து தங்கள் கைக்குக் கிடைக்கட்டும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.
- தங்கள், பி.ச.குப்புசாமி
கடித இலக்கியம் - 32
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 32
திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கிடைத்தது. க்ஷண நேரத்தில் எந்தப் பழைய காலத்துக்கும் போய்விடுவது சாத்யந்தான் என்று இருந்தது அந்த அனுபவம்.
கையெழுத்தின் பழைய அழகேகூட, நடுவில் காணாமல் போயிருந்து - இப்போது காணப்படுவது, தங்கள் கடிதம் தன் பூர்வீக அழகுகள் பூராவும் பொருந்தி வந்திருப்பதற்குப் புலப்பாடு.
கடிதம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. கடிதம் பூராவையும் புன்சிரிப்புடன் படித்தேன். அதில் கண்டுள்ள நல்ல நல்ல விஷயங்களுக்கெல்லாம் மேலும் எங்கள் நல்வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் அழைப்பு touching ஆக இருந்தது. அது குறித்து என் பெருமையை - பெருமிதத்தை இவ்வªவு சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். குடும்பத்தோடு அங்கு வருவது எளிதில் சாத்தியப்படுகிற விஷயமா என்ன? திருப்பதி யாத்திரை போவது போன்றதோர் திட்டம் அது. எவ்வளவு சிரமம் இருந்தாலும் பக்தர்கள் அதை வெகு நாளைக்குத் தட்டிக்கழிப்பதில்லை. யாதும் எவ்வாறோ கூடும்!
- இவ்வாறு அந்த அழைப்பை மிகச் சிரத்தையுடன் கருதி, எடுத்து வைத்துக் கொள்கிறேன்.
பல நேரங்களில் என்னால் அகஸ்திய அவதாரம் எடுக்க முடிகிறது. எங்கோ இருந்து கொண்டு எதையெதையோ காண முடிகிறது. தங்களது மங்கள நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அவ்வாறுதான் நான் கண்டு வருகிறேன். அத்தகைய நிகழ்ச்சிகள் அணி அணியாக வரட்டும். வாழ்க்கை ஆறு அழகாக ஓடட்டும்.
25-7-85
நல்ல மழை. ஆடி மாதத்தில் இம்மாதிரி பெய்து ஐந்தாறு வருஷமாயிற்று என்கிறார்கள். நமது கடிதங்கள் முன்பொரு முறை புனர்ஜன்மம் எடுத்தபோதும், இப்படித்தான் நல்ல மழை என்று எழுதியிருந்தீர்கள்.
நம்மிடையே நிலவிய மௌனத்தில், நான் துருப்பிடித்துப் போய் விட்டே னோ என்று நீங்கள் ஐயுற்றிருந்தாலும் நியாயமே! ஆனால் நன்கு துலங்கிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு! பள்ளி, வீடு, ஆசிரியர் கூட்டணி, இலக்கிய வட்டங்கள், எழுத்தாளர் சம்மேளனம், மாட்டுத் தொழுவம், நாலைந்து நாட்களாய் மூன்று சிறுமிகளுக்கு ட்யூஷன் - என்று எல்லா அரங்குகளிலும்
அதிக பட்சம் உழைக்கிறேன். அதே நேரத்தில் என்னுள் இன்னும் ஒரு மாளாச் சோம்பல் இருக்கிற ரகசியத்தையும் அறிந்திருக்கிறேன். நகரத்துக்கு வந்து அலைச்சல் அதிகம் என்று பட்டாலும், நகரத்துக்கு வந்தது நல்லது என்றே தெரிகிறது. புதிய புதிய ரசிகர்கள், புதிய புதிய அறிமுகங்கள் போகிற இடமெல் லாம் கிடைக்கின்றன. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் - பொறிகளின் மீது தனியரசாணை மட்டும் இன்னும் மேலும் பழக வேண்டும். கருமயோகத்தில் நிலைத்திடல் என்பது இன்னும் கைவர வேண்டும். கோபத்தை அடக்கவும், அடக்கவியலாத போது அதை, சீறிப்பாயும் அழகிய வார்த்தைகளில் ஆற்றிக் கொள்ளவும் கற்று வருகிறேன்.
நாற்பதைக் கடந்த பிறகு "கடந்து செல்லுதல்" பற்றிய கருத்து நாட்டம் அதிகமாகிறது. இபோது எங்கள் பள்ளியின் குறிக்கோள்: குறைந்தபட்சம் அன்பு! அதிகபட்சம் அமரத்வம்! மனிதன் மீண்டும் திரும்பி வருகிற மார்க்கம், மார்க்ஸீயப் போதனைகளில்தான் எனக்கு ஸ்தூலமான நிஜமாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. அதுவே convince ஆகவும் இருக்கிறது. மரணத்திற்குப் பின்பு திரும்பி வருகிற கருத்தாக்கங்கள் முயற்சிகள் எல்லாம் போதிய பலன் தராதவையாகவும் பெரும்பாலும் பொய்யாகவும் உள்ளன.
தம்பி திருநாவுக்கரசுவின் கல்யாணத்தன்று மாலை பாப்பா விசேஷம் நேர்ந்தது. நான் கேள்விப்பட்ட தந்தைகள் எல்லாம் அத்தருணத்தில் ஒரு மறந்திருந்த விசனத்தை நினைவுகூர்ந்தவர்கள் போலும், வாழ்வில் இனிமேல் உஷராக இருக்க வேண்டும் என்று புதுத் தீர்மானம் கொள்கிறவர்கள் போலும் எனக்குத் தோற்றமளித்தார்கள். எனக்கு அது ஒரு இறக்கை கட்டிப் பறக்கிற அனுபவமாகவும் இருந்தது. திடீரென்று என் ஹிருதயம் அகண்டமாகிவிட்டது. வாழ்வில் தீர்ந்து விட்டது என்று சம்சயப்பட்ட அழகுகள் எல்லாம் மறு தலைமுறைக்கு மேலும் பல தலைமுறைக்கு முளைத்துத் துளிர்த்துத் தழைத்துப் பூத்தது போன்ற தரிசனம் நிகழ்ந்தது. நான் மிகவும் உன்னதமானவன் ஆனேன்.
இங்கே பெரியப்பா எங்கள் போஷிப்பில். அவரோடு பல சிலுவை யுத்தங்கள் நிகழ்த்தி, எனக்கு நானே ஞானம் புகட்டிக் கொண்டு, சினத்தின் தூண்டுதல் களுக்கு இரையாகாமல் சிறிது காலமாய் சாத்வீகம் காத்து வருகிறேன். அவர்
பிரக்ஞை வலியது. பேரன்தான் எல்லாம். உயிர் வாழ்வதே அவனுக்காகத்தான். இன்னும் கொஞ்சகாலம் இருந்தால் அவ்வப்பொழுது வரும் பென்ஷனை அவனுக்குச் செலவழிக்கலாம். வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்ற ஒரு துயர் நிலையை - அதன் கொடுமை பூராவையும் - பேரன் நினைவில் சகித்துக் கொள்ள முடிகிறது போலும். அவருக்கும் உடம்பு மிகவும் தளர்ந்து விட்டது.
- வாருங்கள்! நீங்கள் இன்னொரு முறை வந்தால், பார்த்து மிகவும் மகிழ்வார். Slide projectorல், தாங்கள் எடுத்த 'பெரியப்பா -பெரியம்மா' போட்டோவை ஆளுயரத்துக்குச் சுவரில் போட்டுக் காட்டினால் - பெரியம்மா அசலாக எதிர் நிற்பது போன்ற அந்தக் காட்சி - இயலுமானால் - அவருக்கு வரப் பிரசாதம்.
தங்கள்- பி.ச.குப்புசாமி
கடிதம் - 32
திருப்பத்தூர்.வ.ஆ.
24-7-85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கிடைத்தது. க்ஷண நேரத்தில் எந்தப் பழைய காலத்துக்கும் போய்விடுவது சாத்யந்தான் என்று இருந்தது அந்த அனுபவம்.
கையெழுத்தின் பழைய அழகேகூட, நடுவில் காணாமல் போயிருந்து - இப்போது காணப்படுவது, தங்கள் கடிதம் தன் பூர்வீக அழகுகள் பூராவும் பொருந்தி வந்திருப்பதற்குப் புலப்பாடு.
கடிதம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. கடிதம் பூராவையும் புன்சிரிப்புடன் படித்தேன். அதில் கண்டுள்ள நல்ல நல்ல விஷயங்களுக்கெல்லாம் மேலும் எங்கள் நல்வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் அழைப்பு touching ஆக இருந்தது. அது குறித்து என் பெருமையை - பெருமிதத்தை இவ்வªவு சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். குடும்பத்தோடு அங்கு வருவது எளிதில் சாத்தியப்படுகிற விஷயமா என்ன? திருப்பதி யாத்திரை போவது போன்றதோர் திட்டம் அது. எவ்வளவு சிரமம் இருந்தாலும் பக்தர்கள் அதை வெகு நாளைக்குத் தட்டிக்கழிப்பதில்லை. யாதும் எவ்வாறோ கூடும்!
- இவ்வாறு அந்த அழைப்பை மிகச் சிரத்தையுடன் கருதி, எடுத்து வைத்துக் கொள்கிறேன்.
பல நேரங்களில் என்னால் அகஸ்திய அவதாரம் எடுக்க முடிகிறது. எங்கோ இருந்து கொண்டு எதையெதையோ காண முடிகிறது. தங்களது மங்கள நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அவ்வாறுதான் நான் கண்டு வருகிறேன். அத்தகைய நிகழ்ச்சிகள் அணி அணியாக வரட்டும். வாழ்க்கை ஆறு அழகாக ஓடட்டும்.
25-7-85
நல்ல மழை. ஆடி மாதத்தில் இம்மாதிரி பெய்து ஐந்தாறு வருஷமாயிற்று என்கிறார்கள். நமது கடிதங்கள் முன்பொரு முறை புனர்ஜன்மம் எடுத்தபோதும், இப்படித்தான் நல்ல மழை என்று எழுதியிருந்தீர்கள்.
நம்மிடையே நிலவிய மௌனத்தில், நான் துருப்பிடித்துப் போய் விட்டே னோ என்று நீங்கள் ஐயுற்றிருந்தாலும் நியாயமே! ஆனால் நன்கு துலங்கிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு உழைப்பு! பள்ளி, வீடு, ஆசிரியர் கூட்டணி, இலக்கிய வட்டங்கள், எழுத்தாளர் சம்மேளனம், மாட்டுத் தொழுவம், நாலைந்து நாட்களாய் மூன்று சிறுமிகளுக்கு ட்யூஷன் - என்று எல்லா அரங்குகளிலும்
அதிக பட்சம் உழைக்கிறேன். அதே நேரத்தில் என்னுள் இன்னும் ஒரு மாளாச் சோம்பல் இருக்கிற ரகசியத்தையும் அறிந்திருக்கிறேன். நகரத்துக்கு வந்து அலைச்சல் அதிகம் என்று பட்டாலும், நகரத்துக்கு வந்தது நல்லது என்றே தெரிகிறது. புதிய புதிய ரசிகர்கள், புதிய புதிய அறிமுகங்கள் போகிற இடமெல் லாம் கிடைக்கின்றன. அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் - பொறிகளின் மீது தனியரசாணை மட்டும் இன்னும் மேலும் பழக வேண்டும். கருமயோகத்தில் நிலைத்திடல் என்பது இன்னும் கைவர வேண்டும். கோபத்தை அடக்கவும், அடக்கவியலாத போது அதை, சீறிப்பாயும் அழகிய வார்த்தைகளில் ஆற்றிக் கொள்ளவும் கற்று வருகிறேன்.
நாற்பதைக் கடந்த பிறகு "கடந்து செல்லுதல்" பற்றிய கருத்து நாட்டம் அதிகமாகிறது. இபோது எங்கள் பள்ளியின் குறிக்கோள்: குறைந்தபட்சம் அன்பு! அதிகபட்சம் அமரத்வம்! மனிதன் மீண்டும் திரும்பி வருகிற மார்க்கம், மார்க்ஸீயப் போதனைகளில்தான் எனக்கு ஸ்தூலமான நிஜமாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. அதுவே convince ஆகவும் இருக்கிறது. மரணத்திற்குப் பின்பு திரும்பி வருகிற கருத்தாக்கங்கள் முயற்சிகள் எல்லாம் போதிய பலன் தராதவையாகவும் பெரும்பாலும் பொய்யாகவும் உள்ளன.
தம்பி திருநாவுக்கரசுவின் கல்யாணத்தன்று மாலை பாப்பா விசேஷம் நேர்ந்தது. நான் கேள்விப்பட்ட தந்தைகள் எல்லாம் அத்தருணத்தில் ஒரு மறந்திருந்த விசனத்தை நினைவுகூர்ந்தவர்கள் போலும், வாழ்வில் இனிமேல் உஷராக இருக்க வேண்டும் என்று புதுத் தீர்மானம் கொள்கிறவர்கள் போலும் எனக்குத் தோற்றமளித்தார்கள். எனக்கு அது ஒரு இறக்கை கட்டிப் பறக்கிற அனுபவமாகவும் இருந்தது. திடீரென்று என் ஹிருதயம் அகண்டமாகிவிட்டது. வாழ்வில் தீர்ந்து விட்டது என்று சம்சயப்பட்ட அழகுகள் எல்லாம் மறு தலைமுறைக்கு மேலும் பல தலைமுறைக்கு முளைத்துத் துளிர்த்துத் தழைத்துப் பூத்தது போன்ற தரிசனம் நிகழ்ந்தது. நான் மிகவும் உன்னதமானவன் ஆனேன்.
இங்கே பெரியப்பா எங்கள் போஷிப்பில். அவரோடு பல சிலுவை யுத்தங்கள் நிகழ்த்தி, எனக்கு நானே ஞானம் புகட்டிக் கொண்டு, சினத்தின் தூண்டுதல் களுக்கு இரையாகாமல் சிறிது காலமாய் சாத்வீகம் காத்து வருகிறேன். அவர்
பிரக்ஞை வலியது. பேரன்தான் எல்லாம். உயிர் வாழ்வதே அவனுக்காகத்தான். இன்னும் கொஞ்சகாலம் இருந்தால் அவ்வப்பொழுது வரும் பென்ஷனை அவனுக்குச் செலவழிக்கலாம். வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போன்ற ஒரு துயர் நிலையை - அதன் கொடுமை பூராவையும் - பேரன் நினைவில் சகித்துக் கொள்ள முடிகிறது போலும். அவருக்கும் உடம்பு மிகவும் தளர்ந்து விட்டது.
- வாருங்கள்! நீங்கள் இன்னொரு முறை வந்தால், பார்த்து மிகவும் மகிழ்வார். Slide projectorல், தாங்கள் எடுத்த 'பெரியப்பா -பெரியம்மா' போட்டோவை ஆளுயரத்துக்குச் சுவரில் போட்டுக் காட்டினால் - பெரியம்மா அசலாக எதிர் நிற்பது போன்ற அந்தக் காட்சி - இயலுமானால் - அவருக்கு வரப் பிரசாதம்.
தங்கள்- பி.ச.குப்புசாமி
கடித இலக்கியம் - 31
('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் - 31
மட்றபள்ளி
4 2-85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது. கடிதங்களில் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்ட பொற்காலம் மலையேறிப் போய்விட்டதோ என்கிற பிரமை பிறக்கிறது.
எழுதாமலிருப்பதைவிடவும், சாத்தியப்படுகிறதோ சாத்தியப்படாதோ ஒரு விஷயம் சம்பந்தமாக இந்தக் கடிதம் எழுதுவதில் மகிழ்கிறேன்.
திண்டுக்கல்லில், பிப்ரவரி 9,10 (சனி,ஞாயிறு) தேதிகளில், இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீய சம்மேளனத்தின் இரண்டு நாள் முகாம் நடைபெறுகிறது. JKயும் தேவபாரதியும் 8ஆம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு 9 காலை திண்டுக்கல் வருகிறார்கள். திருப்பத்தூரிலிருந்து நான், வெங்கடாசலம், தண்டபாணி உள்ளிட்ட ஐவர் குழு ஒன்று 9ஆம் தேதி காலை அங்கு வந்து விடும். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பல எழுத்தாளர்கள் அங்கு குழுமுவர். 10ஆம் தேதி ஞாயிறு, அணு ஆயுத எதிர்ப்புப் பேரணியும், பொதுக் கூட்டமும். 9ஆம் தேதி எழுத்தாள நண்பர்கள் கதை, கட்டுரை, கவிதை வாசிக்கலாம்; கலந்து பேசலாம்.
தங்களோடு பல நேரங்களில் தொடர்பு கொள்ள விழைகிறேன். காண்பதொன்றே களிப்பு தருகிற விஷயம். சகல வித்தைகளையும் காட்டி ஓய்ந்து, கடிதக் கலை அலுத்துவிட்டது. திண்டுக்கல் வரை இவ்வளவு பெரிய பயணம் போகிறோமே,
இந்த §க்ஷத்திராடனத்தில் சபாவும் சங்கமித்தால் நன்றாயிருக்கும் என்று மனசு நினைக்கிறது. அதுவுமின்றி, எழுத்தாளர் முகாமில், நம் ஆர்க்காட்டு ஜில்லாக்களின் தரப்பில் தாங்கள் இடம் பெறுவதும், நண்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்த நேர்வதும் - கடமையை ரொம்ப திவ்யமாக ஆற்றியது போல் ஆகும். தாங்கள் முகாமில் ஒரு சிறுகதையோ அல்லது வேறெதேனும் ஒரு படைப்போ வாசிப்பது சிலாக்கியமாக அமையும். அதற்குத் தக வருக.
வேலைப்பளு, நெருக்கடி, நேரமின்மை முதலிய எல்லா விஷயங்களும் எல்லோர் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வளவு பெரிய நீண்ட அற்புதமான வாழ்நாட்களைக் கவ்வி நிற்பது போதாதா? வெடுக்கென்று பிய்த்துக் கொண்டு இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலாவது, எதிர்பாரா விரைவில், எல்லாம் நல்ல படி அமைய நாம் சந்தித்தால், அது இறையருளுக்கு ஒரு நிரூபணம் போன்றதோர் நிகழ்ச்சியாகாதா - என்றெல்லாம் மனசு ஏங்குகிறது.
நாங்கள் திருப்பத்தூர் - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் பாதையில் வருகிறோம். நீங்கள் வருவதானால், தங்களுக்குச் சௌகரியமான பாதையைத் தேர்க! நேரிலேயே சந்தித்து விடுகிற மகிழ்ச்சி கிட்டும் என்று நினக்கிறேன். அவசியம் வருவதற்கு முயற்சி செய்யவும்.
தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்? மனப்பாங்கை விவரியுங்கள். முடிந்தால் எனக்கு, பள்ளி விலாசத்துக்கு 8-2-85 வெள்ளி காலைத் தபாலில் கிடைக்கிற மாதிரியான ஒரு பதிலை எழுதுங்கள்.
தங்கள் பி.ச.குப்புசாமி
கடிதம் - 31
மட்றபள்ளி
4 2-85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது. கடிதங்களில் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்ட பொற்காலம் மலையேறிப் போய்விட்டதோ என்கிற பிரமை பிறக்கிறது.
எழுதாமலிருப்பதைவிடவும், சாத்தியப்படுகிறதோ சாத்தியப்படாதோ ஒரு விஷயம் சம்பந்தமாக இந்தக் கடிதம் எழுதுவதில் மகிழ்கிறேன்.
திண்டுக்கல்லில், பிப்ரவரி 9,10 (சனி,ஞாயிறு) தேதிகளில், இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீய சம்மேளனத்தின் இரண்டு நாள் முகாம் நடைபெறுகிறது. JKயும் தேவபாரதியும் 8ஆம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு 9 காலை திண்டுக்கல் வருகிறார்கள். திருப்பத்தூரிலிருந்து நான், வெங்கடாசலம், தண்டபாணி உள்ளிட்ட ஐவர் குழு ஒன்று 9ஆம் தேதி காலை அங்கு வந்து விடும். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பல எழுத்தாளர்கள் அங்கு குழுமுவர். 10ஆம் தேதி ஞாயிறு, அணு ஆயுத எதிர்ப்புப் பேரணியும், பொதுக் கூட்டமும். 9ஆம் தேதி எழுத்தாள நண்பர்கள் கதை, கட்டுரை, கவிதை வாசிக்கலாம்; கலந்து பேசலாம்.
தங்களோடு பல நேரங்களில் தொடர்பு கொள்ள விழைகிறேன். காண்பதொன்றே களிப்பு தருகிற விஷயம். சகல வித்தைகளையும் காட்டி ஓய்ந்து, கடிதக் கலை அலுத்துவிட்டது. திண்டுக்கல் வரை இவ்வளவு பெரிய பயணம் போகிறோமே,
இந்த §க்ஷத்திராடனத்தில் சபாவும் சங்கமித்தால் நன்றாயிருக்கும் என்று மனசு நினைக்கிறது. அதுவுமின்றி, எழுத்தாளர் முகாமில், நம் ஆர்க்காட்டு ஜில்லாக்களின் தரப்பில் தாங்கள் இடம் பெறுவதும், நண்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்த நேர்வதும் - கடமையை ரொம்ப திவ்யமாக ஆற்றியது போல் ஆகும். தாங்கள் முகாமில் ஒரு சிறுகதையோ அல்லது வேறெதேனும் ஒரு படைப்போ வாசிப்பது சிலாக்கியமாக அமையும். அதற்குத் தக வருக.
வேலைப்பளு, நெருக்கடி, நேரமின்மை முதலிய எல்லா விஷயங்களும் எல்லோர் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வளவு பெரிய நீண்ட அற்புதமான வாழ்நாட்களைக் கவ்வி நிற்பது போதாதா? வெடுக்கென்று பிய்த்துக் கொண்டு இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலாவது, எதிர்பாரா விரைவில், எல்லாம் நல்ல படி அமைய நாம் சந்தித்தால், அது இறையருளுக்கு ஒரு நிரூபணம் போன்றதோர் நிகழ்ச்சியாகாதா - என்றெல்லாம் மனசு ஏங்குகிறது.
நாங்கள் திருப்பத்தூர் - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் பாதையில் வருகிறோம். நீங்கள் வருவதானால், தங்களுக்குச் சௌகரியமான பாதையைத் தேர்க! நேரிலேயே சந்தித்து விடுகிற மகிழ்ச்சி கிட்டும் என்று நினக்கிறேன். அவசியம் வருவதற்கு முயற்சி செய்யவும்.
தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்? மனப்பாங்கை விவரியுங்கள். முடிந்தால் எனக்கு, பள்ளி விலாசத்துக்கு 8-2-85 வெள்ளி காலைத் தபாலில் கிடைக்கிற மாதிரியான ஒரு பதிலை எழுதுங்கள்.
தங்கள் பி.ச.குப்புசாமி
Subscribe to:
Posts (Atom)
