'பாக்கியம் ராமசாமி'(ஜ.ரா.சுந்தரேசன்) படைப்புகளிலிருந்து.
1. அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது.
- 'அப்புசாமியின்பொன்னாடை'கட்டுரையிலிருந்து.
2. அப்புறம் சற்றுக் கீழே தள்ளி மூன்று வரிகள் - கடற்கன்னி எனப்படும் 'மெர்மெய்ட்' மாதிரி பாதி இந்தி, பாதி இங்கிலீஷ் உருவில் படுத்திருந்தது.
-'இன்லண்ட் லெட்டரில் இடைஞ்சல்கள்'.
3. போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாக கிழக்கே உதித்துவிட்டு, தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட ரயில் மாதிரி 'திருதிரு' வென்று விழித்தது. 'நாம் ஒருகால் லேட்டாக உதித்துத் தொலைத்துவிட்டமோ? வழக்கமாக நாம் உதிக்கும்போது அப்புசாமி கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட,கண்ணைமூடி ஏதோ சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாரே'.
- 'அலங்காநல்லூர் அப்புசாமி'.
4. மாமியார் 'கொள்கொள்' ளென்று இருமினால் கூட சில வார்த்தைகள் புகழ்ந்து வைக்கலாம். அவர் காதில் படுகிறமாதிரி ''எங்க மாமியார் இருமினாங்கன்னா வெண்கல மணியாட்டம் பிசிறில்லாம இருக்கும். இருமல்னா 'ப்யூர்' இருமல். இழுப்பு, வீசிங் அதெல்லாம் இருக்காது. கோவிலில் சாயங்கால பூஜையிலே அடிக்கிற மணியோட நாதம் தான் எனக்கு ஞாபகம் வ்ருது. அது என்னவோ ஆச்சரியம் பாருங்கள் - ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அடுத்த ஒரு மாசம் இரும மாட்டார். மறுபடி ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அப்புறம் பதினைந்து நாள் இரும மாட்டார். எல்லோராலும் இப்படி இருமிவிட முடியாது.
மாமியாருக்கு இருமல் நின்று போய்விட்டால் கூடக் கஷ்டப்பட்டு இருமிக் கொண்டிருப்பார். - மருமகளின் சர்டிபிகேட்களால்.
- 'புகழும் கலை'.
5. எங்கள் அடுக்கக வாட்ச்மேன் டியூட்டி என்று எதையும் குறிப்பாகப் பார்த்ததாகக் கூற முடியாது. 'உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்' என்று பக்தர்கள் கடவுளைக் குறிப்பிடுவதைப் போல எங்கள் வாட்ச்மேன் இருக்கிறார் என்றால் இருக்கிறார்; இல்லை என்றால் இல்லை!
- 'வாங்கய்யா வாட்ச்மேனய்யா'.
6. ஒரு பழைய புஸ்தகத்தின்மீது வாகாக ஒரு கொசு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ''நன்றாகக் கவனி'' என்று நான் சொல்லிவிட்டு அந்தக் கொசுவைத் தொந்தரவு செய்யாமல், உஷாராக 'பேட்'டை மெதுவாக மெதுவாக...(ஆசன ஆண்டியப்பன் யோகா செய்யும் குழந்தைகளுக்குச் சொல்வது போல) மெதுவாக கொசுவுக்கு ஒரு சாண் உயரத்தில் குடைபொலப் பிடித்துக் கொண்டேன்.
- 'புது முறையில் கொசுவைக் கொலை செய்வது எப்படி?'.
7. உன் மச்சினன் எப்பவும் ரொம்பக் கோபக்காரன். மச்சினன் (muchசினன்) என்ன மூடுல இருந்தானோ? ஆபீசுலே ஸஸ்பென் ஷன்லே இருக்கானோ? அல்லது அவனுக்குக் கீழிருந்தவனுக்கு 'ஃபர்பாமென்ஸ்' இன்கிரிமெண்ட்' சேத்துக் குடுத்துட்டானோ?
- 'சம்பளம் ஒரு வம்பளம்'.
8. பழுப்புக்கவர்லே, ஏதாவது கவர் - நீலக்கலர் அதி விசேஷம் - வந்தால் என் மனசிலே ஒரு கிளுகிளுப்பு ஏற்படுவது வழக்கம். டிவி யிலிருந்து வானொலியிலிருந்து ஏதாவது சன்மானம் அல்லது லைப்ரரிகள் எதிலிருந்தாவது 'செக்', இந்த மாதிரியான விஷய மாக இருக்கும். (வெகு அபூர்வமாக வரும் என்றாலும்) பழுப்புக்கவர் வந்தாலே, மனசிலே ஒரு பழைய காதலி, காதலனைப் பார்ப்பது போன்ற ஒரு இன்பப் படபடப்பு ஏற்படுவது வழக்கம். அப்படி ஒரு கவர் போனவாரம் வந்து சேர்ந்தது.
- 'நீ செத்தாயா பிழைச்சாயா?'.
9. "ஐயோ பொறி கொள்ளாடா? இந்தப் பாழாய்ப்போன பட்டணத்திலே எந்தப் பலகாரக் கடையிலேயும் பொறிகொள்ளுங்கிற அயிட்டம் கிடைக்காதேடா! அதிசயம்டா! அது ஒரு அபூர்வம்டா! இங்கே பாம்பே மிக்ஸர்னும், நவதானிய மிக்ஸர்னும் எண்ணெயிலே போட்டுப் பொறிச்சுத் தர்ரதெல்லாம் பொறிகொள்ளாடா? உங்கப்பாட்டி பண்ணிக் கொண்டு வருவாளே, நடுநடுவே பல்லு பல்லாக் கொப்பரைத் தேங்காய் - ஒரு தரம் அவள் பல்லே கூட இருந்தது -மஞ்ச மசக்க மஞ்சள் தேச்சுக் குளிச்சுட்டு சுமார் ஈரமாக வந்தசுமங்கிலி மாதிரி அந்தப் பொறிகொள்ளோட அழகே அழகுடா! நடுநடுவே மொச்சக் கொட்டை என்ன சிரிப்பு சிரிக்கும்! காராமணி, கொள்ளு, பூண்டும் வரட்டு மிளகாயும் அரைச்சு விட்டுருப்பா.கவிதைடா!''.
- 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி'.
10. வீதிக்கு யாரோ கிசுக்கிச்சு மூட்டினார்கள். அது சிரித்தது.
-'அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்'.
Showing posts with label நான் இரசித்த வருணனைகள் உவமைகள். Show all posts
Showing posts with label நான் இரசித்த வருணனைகள் உவமைகள். Show all posts
Tuesday, November 20, 2007
Saturday, February 24, 2007
உவமைகள் - வர்ணனைகள் - 49
நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் - 49
அ.முத்துலிங்கம் படைப்புகளிலிருந்து
1. கையிலே கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். சற்றுமுன் வரை செவ்வாய்க்கிழமையாக இருந்த நாள் இப்போது உருண்டு புதன்கிழமையாக மாறி விட்டது. ஒரு நாள், தன் பெயரை மாற்றும் சடங்கை அவன் நேருக்கு நேர் கண்டு விட்டான். ஏதோ ஒரு கள்ளனை தனியாய்ப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.
- 'ஆயிரம் பொன்'.
2. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில் ஜெனிஃபர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர் எங்கள் ஊகத்துக்கு விடப் பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர். நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவே இல்லாத கண்கள்.
- 'கனடாவில் சுப்பர் மார்க்கட்'.
3. ஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சாரப் பதிவுகள் நடக்கின்றன. மறுபக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வில் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணற்றையே வெட்டிவிட்டதுதான் ஆச்சரியம்.
- 'கனடாவில் கிணறு'.
4. முன் வரிசைகளில் கதாகாலட்சேபங்களுக்கு உட்காருவதுபோல சிறுவர் கூட்டம் நாற்காலிகளிலும் நிலத்திலுமாக குவிந்துபோய் இருந்தது. நான் விடா முயற்சியாக முன்னேறி, மழைநாள் நாய் ஈர இலைகளை மூக்கால் தள்ளிப் பார்ப்பது போல, ஒவ்வொரு லேஞ்சியாக கிளப்பி கிளப்பிப் பார்த்து ஒரு சீட்டை பிடித்து விட்டேன்.
- 'காத்தவராயனுக்கு காத்திருப்பது'.
5. இவன் 21 வயது இளைஞன். கறுத்து மெலிந்து பந்தல் போடாத பயத்தங் கொடிபோல உயரமாக இருப்பான். அசைந்து அசைந்து நடந்து வரும்போது காற்றிலே நடுவில் முறிந்து விடுவானோ என்ற அச்சம் ஏற்படும்.
- 'பெரிய முள் இரண்டில் வந்தவுடன்'.
6. ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்தது போல கிழவர் விறைப்பாக பக்கவாட்டில் திரும்பினார்.
- 'அங்க இப்ப என்ன நேரம்?'
7. சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களுக்கு பூமி சாஸ்திரம் எடுத்தவர். எவ்வளவு தான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத் தைத் தாண்டாது. 20 வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி விட்டார்; ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது. நான் பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான சைஸில்தான் இருந்தார்.
- 'நான் பாடகன் ஆனது'.
8. ஒரு பத்தொன்பது வயது மெல்லிய பையன். காளான் தலை முடிவெட்டு; கிழித்துவிட்ட கால்சட்டை. ஓட்டையை மிச்சம் பிடிப்பதற்காக ஒரு காது ஓட்டையில் மாட்டிய இரண்டு வளையங்கள். ஒரு பொத்தான்களும் போடாமல் திறந்து விடப்பட்ட X அல்லது XL சைஸ் சேர்ட். அந்த சேர்ட்டின் இரண்டு நுனிகளும் கையில் அகப்படாமல் ஒரு பறவையின் செட்டைகளைப் போல படபடவென்று அடித்தன. ஒரு கார்க் கண்ணாடி துடைப்பான் போல தலையை இரண்டு பக்கமும் மாறிமாறி ஆட்டியபடி வந்து கொண்டிருந்தார்.
- 'பாப்பம்'.
9. ஜெனிவீவைப் பார்த்தேன். மேக்கப் என்பதே கிடையாது. ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கு இருந்து யாரோ வெளிச்சம் அடிப்பது போலப் பிரகாசமாக இருந்தது.
- 'உனக்கு எதிராக ஓடு'.
10. யூடி நட்பான சுபாவம் கொண்டவர். அவர் வயதைக் கேட்கமுடியாது. ஆனால் மதிக்கலாம்.எழுபத்தைந்துக்கு மேலே, எண்பதுக்குக் கீழே. ஒரு செவ்வாய்க் கிழமை காலை என் வீட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தக் காருக்கு அவர் வயதாகி இருந்தது. இதற்கு முன் நான் கேட்டிராத பலவித சப்தங்களை எழுப்பிக் கொண்டு அவருடைய கார் என் வீட்டு வாசலில் வந்து திரும்பியது. நான் ஏறியதும் காரைத் திருப்பி எடுக்க யூடிக்கு சரியாக ஐந்து நிமிடம் பிடித்தது.
- 'சேக்ஸ்பியர் என்னும் சூரியன்'.
(மேலும் வரும்)
- வே.சபாநாயகம்
அ.முத்துலிங்கம் படைப்புகளிலிருந்து
1. கையிலே கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். சற்றுமுன் வரை செவ்வாய்க்கிழமையாக இருந்த நாள் இப்போது உருண்டு புதன்கிழமையாக மாறி விட்டது. ஒரு நாள், தன் பெயரை மாற்றும் சடங்கை அவன் நேருக்கு நேர் கண்டு விட்டான். ஏதோ ஒரு கள்ளனை தனியாய்ப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.
- 'ஆயிரம் பொன்'.
2. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில் ஜெனிஃபர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர் எங்கள் ஊகத்துக்கு விடப் பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர். நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவே இல்லாத கண்கள்.
- 'கனடாவில் சுப்பர் மார்க்கட்'.
3. ஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சாரப் பதிவுகள் நடக்கின்றன. மறுபக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வில் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணற்றையே வெட்டிவிட்டதுதான் ஆச்சரியம்.
- 'கனடாவில் கிணறு'.
4. முன் வரிசைகளில் கதாகாலட்சேபங்களுக்கு உட்காருவதுபோல சிறுவர் கூட்டம் நாற்காலிகளிலும் நிலத்திலுமாக குவிந்துபோய் இருந்தது. நான் விடா முயற்சியாக முன்னேறி, மழைநாள் நாய் ஈர இலைகளை மூக்கால் தள்ளிப் பார்ப்பது போல, ஒவ்வொரு லேஞ்சியாக கிளப்பி கிளப்பிப் பார்த்து ஒரு சீட்டை பிடித்து விட்டேன்.
- 'காத்தவராயனுக்கு காத்திருப்பது'.
5. இவன் 21 வயது இளைஞன். கறுத்து மெலிந்து பந்தல் போடாத பயத்தங் கொடிபோல உயரமாக இருப்பான். அசைந்து அசைந்து நடந்து வரும்போது காற்றிலே நடுவில் முறிந்து விடுவானோ என்ற அச்சம் ஏற்படும்.
- 'பெரிய முள் இரண்டில் வந்தவுடன்'.
6. ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்தது போல கிழவர் விறைப்பாக பக்கவாட்டில் திரும்பினார்.
- 'அங்க இப்ப என்ன நேரம்?'
7. சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களுக்கு பூமி சாஸ்திரம் எடுத்தவர். எவ்வளவு தான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத் தைத் தாண்டாது. 20 வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி விட்டார்; ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது. நான் பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான சைஸில்தான் இருந்தார்.
- 'நான் பாடகன் ஆனது'.
8. ஒரு பத்தொன்பது வயது மெல்லிய பையன். காளான் தலை முடிவெட்டு; கிழித்துவிட்ட கால்சட்டை. ஓட்டையை மிச்சம் பிடிப்பதற்காக ஒரு காது ஓட்டையில் மாட்டிய இரண்டு வளையங்கள். ஒரு பொத்தான்களும் போடாமல் திறந்து விடப்பட்ட X அல்லது XL சைஸ் சேர்ட். அந்த சேர்ட்டின் இரண்டு நுனிகளும் கையில் அகப்படாமல் ஒரு பறவையின் செட்டைகளைப் போல படபடவென்று அடித்தன. ஒரு கார்க் கண்ணாடி துடைப்பான் போல தலையை இரண்டு பக்கமும் மாறிமாறி ஆட்டியபடி வந்து கொண்டிருந்தார்.
- 'பாப்பம்'.
9. ஜெனிவீவைப் பார்த்தேன். மேக்கப் என்பதே கிடையாது. ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கு இருந்து யாரோ வெளிச்சம் அடிப்பது போலப் பிரகாசமாக இருந்தது.
- 'உனக்கு எதிராக ஓடு'.
10. யூடி நட்பான சுபாவம் கொண்டவர். அவர் வயதைக் கேட்கமுடியாது. ஆனால் மதிக்கலாம்.எழுபத்தைந்துக்கு மேலே, எண்பதுக்குக் கீழே. ஒரு செவ்வாய்க் கிழமை காலை என் வீட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தக் காருக்கு அவர் வயதாகி இருந்தது. இதற்கு முன் நான் கேட்டிராத பலவித சப்தங்களை எழுப்பிக் கொண்டு அவருடைய கார் என் வீட்டு வாசலில் வந்து திரும்பியது. நான் ஏறியதும் காரைத் திருப்பி எடுக்க யூடிக்கு சரியாக ஐந்து நிமிடம் பிடித்தது.
- 'சேக்ஸ்பியர் என்னும் சூரியன்'.
(மேலும் வரும்)
- வே.சபாநாயகம்
Friday, February 09, 2007
உவமைகள் - வருணனைகள் - 48
நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் : 48
விமலாதித்த மாமல்லன் கதைகளிலிருந்து:
1. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந் திருக்கும் பெண்ணின் தாயாரைப் போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. வீட்டின் வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லிபதித்து,அதன்மேல் ஸ்நோஸிம் அடித்து வைத்தாள். தேர்தல் சமயத்தில் மாமியின் பார்வையையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை சுவரில் எழுதி விட்டார்கள். சுயேச்சை ஆசாமி கூட, தன் சின்னமான சைக்கிளைத் தாரால் வரைந்து விட்டிருந்தான். மாமிக்கு ஏகக் கோபம். அந்தத் தேர்தலில் மாமி ஓட்டுப் போடப் போகவில்லை.
-'இலை' கதையில்.
2. சுவரைக் கையால் பிடித்தபடி ஓரமாக நடந்து சப்தம் செய்து விடாதவாறு குளியல றைக் கதவை மெல்ல திறந்தான். கால், சொம்பில் பட்டுவிட பெரிய உளறல் போல அது உருண்டபடி சப்தமிட்டது. அவன் திடுக்கிட்டவனாய் அசைவொடுங்கி நின்றான். தூக்கம் அறுந்தவராய் அப்பா மிரட்டல் தொனியில் குரல் கொடுத்தார்.
- 'சரிவு'.
3. இருபத்தியெட்டு வயதிற்குள் ஒரு பெண் இப்படியா நார்நாராகி விடுவாள். பழைய ஜமுனா இவளுடைய பெண்ணோ என நினைக்குமளவுக்கு மூப்படைந்து விட்டாள் ஆறே வருஷத்தில்.
- இழப்பு'.
4. அந்த அறையில் இருந்த கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து விட்டிருந்ததால், நெடுக்காக வைத்துப் பார்க்க சாத்யப்படவில்லை. ஜன்னல் மீது குறுக்காக வைத்தால் தலைமுடியையும் கண்ணையும் சேர்ந்தாற்போல் பார்க்க முடியவில்லை. ஏதேனும் ஒன்றை மட்டுமே பார்த்துச் சீவினால் மனசுக்கு உகந்தபடி அமையாமல் போனது. கொஞ்சம் உடம்பைக் குறுக்கிக் கொண்டே தலை சீவிக்கொள்ள முடிந்தது.
- 'கயிறு'.
5. மேம்பாலம் தெரிந்தது. நடையின் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்தான்.
புதிதாகப் போடப்பட்ட விளக்குகள் - தெருவை, தெருவில் போகிற சைக்கிளை, சைக்கிளில் போகிற மனிதர்களை, பஸ்ஸ்டாப்பை, ரிக்ஷாவை எல்லாம் அறைந்து ஆரஞ்சு வண்ணம் பூசுவதைக் கண்டு,சாயங்காலம் போல இருப்பதாகச் சொல்லிக் கொண்டான்.
- 'எதிர்கொள்ளல்'.
6. சுவாரஸ்யம் ஏதுமின்றிக் கழிந்து போய்விட்ட அன்றைய தினத்தை நினைத்தபடி படுக்கையில் கிடந்தான் மூர்த்தி. ஒரு தலையணையையும் பாயையும் படுக்கை யென சொல்லலாமெனில் அவன் படுத்திருந்தது படுக்கைதான்.
- அறியாத முகங்கள்'.
7. இவன் முகத்தை என்ன பார்ப்பது, முகத்தை. முகத்தில் தெரிகிறதா என்ன இவன் செய்கிற
அட்டூழியம்.முகத்தில் என்னவோ சாந்தமான ராயர்களைதான். பவ்யமாக, நெற்றியில் பொட்டு வேறு. அயோக்கிய ராஸ்கலுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.
இவன் கெட்ட கேட்டுக்கு ஹிட்லர் மீசைவேறு.அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு
கூத்தடிக்கிற பொட்டைப் பயலுக்கு மீசை ஒரு கேடு - பேமானி. வாழ்க்கையை
ஒவ்வொரு தினமும் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறான்.
- 'பெரியவர்கள்'.
8. வழக்கம் போல் இருந்தது தெரு. மாவுமிஷின் இரைச்சல். தெருக்கோடியில்
மரத்தடியில் நிழல் வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும்
கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து
நடக்கிற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத் துணி சுமக்கும் கடைப் பையன்.
போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை உத்தரணியில் பிடிக்கும் திவசப்
புரோகிதர்.ரோகம் பீடித்த நகரோரத்தெரு வழக்கம் போல இருந்தது.
- 'சிறுமி கொண்டு வந்த மலர்'.
9. பாலக்காட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
ஒரே சீமந்தப்புத்திரன், பர்மிடோஸ் மட்டும் அணிந்து கொண்டு, பிதுங்கி வழியும்
இடுப்புச் சதைகளில் கைகளை வைத்தபடி, எருமை மாட்டைப்போல பால்கனியில்
நின்றிருந்தான். கயிற்று நாடாவை உள்ளே போட வேண்டுமென்பதில் கூடக்
கவனம் செல்லாததைப் போலக் காட்டிக் கொள்ளும் கம்ப்யூட்டர் மண்டை.
பர்மிடாஸின் நாடா வேறு பாசக்கயிறு போல ஆடிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
- 'உயித்தெழுதல்'.
10.பல்லாண்டுகளின் உறக்கம் கலைக்கப்பட்டதில் பைல்கள் துவண்டும் படபடத்தும்
சோம்பல் முறித்துக் கொண்டன. ஆரம்ப முனைப்பு மட்டுப்பட்டு, மெல்ல சத்தம் குறையத் தொடங்கி, ஒருத்தர் பின் ஒருத்தராக அன்றாட ஆஸ்திகளை சேகரித்துக்
கொண்டு, பாத்ரூம் கண்ணாடிகளில் சாயங்காலத்துக்கான முகத்தை அணிந்து, சர்வீசுக்கேற்ப
தலைமைகுமாஸ்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், சொல்லிக் கொண்டு,கேட்டுக்கொண்டு வெளியேறினர், ஐந்துமணியாகிற சமயத்தில்.
- 'தாசில்தாரின் நாற்காலி'.
- வே.சபாநாயகம்.
விமலாதித்த மாமல்லன் கதைகளிலிருந்து:
1. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந் திருக்கும் பெண்ணின் தாயாரைப் போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. வீட்டின் வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லிபதித்து,அதன்மேல் ஸ்நோஸிம் அடித்து வைத்தாள். தேர்தல் சமயத்தில் மாமியின் பார்வையையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை சுவரில் எழுதி விட்டார்கள். சுயேச்சை ஆசாமி கூட, தன் சின்னமான சைக்கிளைத் தாரால் வரைந்து விட்டிருந்தான். மாமிக்கு ஏகக் கோபம். அந்தத் தேர்தலில் மாமி ஓட்டுப் போடப் போகவில்லை.
-'இலை' கதையில்.
2. சுவரைக் கையால் பிடித்தபடி ஓரமாக நடந்து சப்தம் செய்து விடாதவாறு குளியல றைக் கதவை மெல்ல திறந்தான். கால், சொம்பில் பட்டுவிட பெரிய உளறல் போல அது உருண்டபடி சப்தமிட்டது. அவன் திடுக்கிட்டவனாய் அசைவொடுங்கி நின்றான். தூக்கம் அறுந்தவராய் அப்பா மிரட்டல் தொனியில் குரல் கொடுத்தார்.
- 'சரிவு'.
3. இருபத்தியெட்டு வயதிற்குள் ஒரு பெண் இப்படியா நார்நாராகி விடுவாள். பழைய ஜமுனா இவளுடைய பெண்ணோ என நினைக்குமளவுக்கு மூப்படைந்து விட்டாள் ஆறே வருஷத்தில்.
- இழப்பு'.
4. அந்த அறையில் இருந்த கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து விட்டிருந்ததால், நெடுக்காக வைத்துப் பார்க்க சாத்யப்படவில்லை. ஜன்னல் மீது குறுக்காக வைத்தால் தலைமுடியையும் கண்ணையும் சேர்ந்தாற்போல் பார்க்க முடியவில்லை. ஏதேனும் ஒன்றை மட்டுமே பார்த்துச் சீவினால் மனசுக்கு உகந்தபடி அமையாமல் போனது. கொஞ்சம் உடம்பைக் குறுக்கிக் கொண்டே தலை சீவிக்கொள்ள முடிந்தது.
- 'கயிறு'.
5. மேம்பாலம் தெரிந்தது. நடையின் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்தான்.
புதிதாகப் போடப்பட்ட விளக்குகள் - தெருவை, தெருவில் போகிற சைக்கிளை, சைக்கிளில் போகிற மனிதர்களை, பஸ்ஸ்டாப்பை, ரிக்ஷாவை எல்லாம் அறைந்து ஆரஞ்சு வண்ணம் பூசுவதைக் கண்டு,சாயங்காலம் போல இருப்பதாகச் சொல்லிக் கொண்டான்.
- 'எதிர்கொள்ளல்'.
6. சுவாரஸ்யம் ஏதுமின்றிக் கழிந்து போய்விட்ட அன்றைய தினத்தை நினைத்தபடி படுக்கையில் கிடந்தான் மூர்த்தி. ஒரு தலையணையையும் பாயையும் படுக்கை யென சொல்லலாமெனில் அவன் படுத்திருந்தது படுக்கைதான்.
- அறியாத முகங்கள்'.
7. இவன் முகத்தை என்ன பார்ப்பது, முகத்தை. முகத்தில் தெரிகிறதா என்ன இவன் செய்கிற
அட்டூழியம்.முகத்தில் என்னவோ சாந்தமான ராயர்களைதான். பவ்யமாக, நெற்றியில் பொட்டு வேறு. அயோக்கிய ராஸ்கலுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.
இவன் கெட்ட கேட்டுக்கு ஹிட்லர் மீசைவேறு.அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு
கூத்தடிக்கிற பொட்டைப் பயலுக்கு மீசை ஒரு கேடு - பேமானி. வாழ்க்கையை
ஒவ்வொரு தினமும் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறான்.
- 'பெரியவர்கள்'.
8. வழக்கம் போல் இருந்தது தெரு. மாவுமிஷின் இரைச்சல். தெருக்கோடியில்
மரத்தடியில் நிழல் வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும்
கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து
நடக்கிற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத் துணி சுமக்கும் கடைப் பையன்.
போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை உத்தரணியில் பிடிக்கும் திவசப்
புரோகிதர்.ரோகம் பீடித்த நகரோரத்தெரு வழக்கம் போல இருந்தது.
- 'சிறுமி கொண்டு வந்த மலர்'.
9. பாலக்காட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
ஒரே சீமந்தப்புத்திரன், பர்மிடோஸ் மட்டும் அணிந்து கொண்டு, பிதுங்கி வழியும்
இடுப்புச் சதைகளில் கைகளை வைத்தபடி, எருமை மாட்டைப்போல பால்கனியில்
நின்றிருந்தான். கயிற்று நாடாவை உள்ளே போட வேண்டுமென்பதில் கூடக்
கவனம் செல்லாததைப் போலக் காட்டிக் கொள்ளும் கம்ப்யூட்டர் மண்டை.
பர்மிடாஸின் நாடா வேறு பாசக்கயிறு போல ஆடிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
- 'உயித்தெழுதல்'.
10.பல்லாண்டுகளின் உறக்கம் கலைக்கப்பட்டதில் பைல்கள் துவண்டும் படபடத்தும்
சோம்பல் முறித்துக் கொண்டன. ஆரம்ப முனைப்பு மட்டுப்பட்டு, மெல்ல சத்தம் குறையத் தொடங்கி, ஒருத்தர் பின் ஒருத்தராக அன்றாட ஆஸ்திகளை சேகரித்துக்
கொண்டு, பாத்ரூம் கண்ணாடிகளில் சாயங்காலத்துக்கான முகத்தை அணிந்து, சர்வீசுக்கேற்ப
தலைமைகுமாஸ்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், சொல்லிக் கொண்டு,கேட்டுக்கொண்டு வெளியேறினர், ஐந்துமணியாகிற சமயத்தில்.
- 'தாசில்தாரின் நாற்காலி'.
- வே.சபாநாயகம்.
Wednesday, December 13, 2006
உவமைகள் வர்ணனைகள் - 47
நான் ரசித்த உவமைகள் வருணனைகள் - 47
க.சீ.சிவகுமார் படைப்புகளிலிருந்து:
1. வானில் கண்ணுக்குத் தெரியாத ஆலை இருப்பது போலச் சத்தம். உண்மையில் காற்று பொருட்களால் கிழிபடும் ஓசை அது. ஆடிக் காற்று ஆனியிலேயே தொடங்கி விட்டது. காற்று இல்லாதபோது பங்குனி போலக் கொளுத்தியது வெயில். பாளம் பாளமாய் வெட்டி உருவலாம் போலத் தெளிவான வெயில். நிமிடத்தில் வியர்வைச் சுரப்பிகள் கனன்றன. இன்றைக்கு மழை வருமா என்று யோசித்தான்.
- 'மேகங்கள் தீர்ப்பதில்லை' கதையில்.
2. ஊரின் மேலாக உலவித் திரியும் மேகங்கள் இரக்கமற்றவை.மேகம் பார்த்த பூமியின் பரிதவிப்பைப் பழித்துக் காட்டிய வண்ணம் ரூபம்மாறித் திரிபவை. வீட்டு நிலைகளைப் பெயர்த்தும், ஓடுகளைப் பிரித்தும் விற்றுவிட்டு பாத்திர பண்டத்தோடு வண்டியேற 'பெய்யா மழை' காரணமாய் இருந்தது.
- 'அண்டமா நதிக்கரையின் ஊரில் ஒரு வீடு'.
3. ஆறு. ஓடுகிறபோது நீரழகு. ஓடாதபோது மணலழகு. சிறு பெரு கற்கள் அழகு. கரைமரம் அழகு. மேவி ஓடிய நீர்க்காலத்தில் எய்திய வழவழப்புப் பாறை அழகு. சண்முகசித்தாறு ஒரு காட்டாறு. எப்போதாவதுதான் அது கரைமீறிப் பிரவகித்து ஓடுகிறது. பிறகெல்லாம் காய்ந்தே கிடக்க்¢றது.
- 'சண்முகசித்தாறு'.
4. சில சமயம் காலக்குயவன் விவஸ்தையற்றுத் தவறு புரிகிறான்.எனக்கு ஒரு வருஷம் முந்தி அவளை வனைந்து விட்டான். பள்ளியின் நான் பத்தில் படிக்கையில் அவள் பதினொன்றில் வந்து சேர்ந்தாள். புல்நுனித் திவலை போல. புல்லாங்குழலைப்போல. மண்துகள்களைப் பொன்னாய் மாற்ற மணல் ஆரண்யத்தின் மையத்தில் பூத்த மாயமலர் போல.
- 'வெளிச்ச நர்த்தனம்'.
5. காலத்தினதும் அனுபவத்தினதுமான ஒரு நான்கு வருடத்திய முட்கள் முகத்தில் கீறுவத்ற்கு முன்பு. தென்னைகளும், வழிந்தோடும் 'புழ'களும், அரபிக் கடலின் அருகாமையுமாக ஜீவிதமே மரகதப் பசுமையாய் திகைந்து விட்டதான தோற்றம்.
- 'காற்றாடை'.
6. அநாதரவின் பாலொளி எங்கும் வீசுகிறது. நிலவின் நீண்ட இறக்கை வெளிச்சம் புவிமேவிக் கவிந்திருப்பது ஊதாத்திட்டுகளுடன் எனது ஓட்டைக் கூரை வழியே காட்சிக்குக் கிடைக்கிறது. வேர் தேடி அலையும் மேகங்களின் கீழாக விருப்பங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.பூக்களின் தொடுநாராகி என் கைகள் மாலையாகின்றன இக்கணம். தனியே கழற்றி உதறி எங்கேனும் சுயம்வரச் சங்குக்கழுத்தில் போட்டு விடலாம் என்று தீர்மானிக்கிற நேரம் கைகளற்று உதறுவது எங்கனம் என்ற கேள்வியும் எழுகிறது.
- 'நிணநீர்ச் சுவடி'.
7. நிலவின் இணுக்கோ உயித்துள்ளலில் பன்மடங்கு வசீகர வியாபகம் பெற்றவாறிருந்தது. கூந்தல் கோதிப் போயின பறவைகள். அண்டமாநதியில் அவள் நீர் முகக்கப் போகையில் துவரையளவு வாய் திறந்து சிறுமீன்கள் பேசின. 'பாவம்! இவள் - நிரந்தரத்தின் பேரழகி... நித்யயௌவனி. 'நிலவாழிகள் அறியாததை நீர்வாழிகள் அறியும்.
- 'தீண்டாநாயகி'.
8. ஊரின்மீது முதலில் படிந்தது இரவே எனும்படி பனைகள் சூழ்ந்த ஊரில் அநேக காலம் பனைத்தண்டி பொதிந்திருந்து உயிர் பெற்றுப் பறந்தவையென காகங்கள் நிறைந்தன.அவற்றின் நிழல்களுக்கோவெனில் கால்படத் தேவையில்லை நிலத்தில். பகலின் தரைவெளுப்பில் படகுபோலச் சரிந்தோடும் அவற்றின் நிழல்கள். இரவுக்கே மரமுரையும்
காகம். முகம் ஓயும் வரை பகலிற் பறந்து இரைகாணும் அவற்றின் நிழல்படியும் சாலையிலும் தெருக்களிலும்.
- 'கன்னிவாடி'.
9. விளக்குகளை ஏற்ற முற்பட்டபோது காற்றின் வேகத்தில் அணைந்து விட்டன. பாவத்தை வாயுபகவான் மீது போட்டுவிட, விளக்குகள் சுடரின்றி ஒதுங்கின ஓரமாய்.
- 'நாற்று'.
10. மரத்தின் கீழ்க்கிளையொன்றில் தேன்கூடு அப்பியிருந்தது - ஓரத்தை தட்டி எறிந்த தோசைக் கல்லைப் போல. சலனமற்று தேனீக்களின் இயக்கமும் சிறகடிப்பும் இல்லாமல்
உண்ணிகளைப்போல ஒட்டியிருந்ததில் பளபளப்பும் காணாமலாகி இருந்தது.
- 'வான்சிறப்பு'.
- வே.சபாநாயகம்.
க.சீ.சிவகுமார் படைப்புகளிலிருந்து:
1. வானில் கண்ணுக்குத் தெரியாத ஆலை இருப்பது போலச் சத்தம். உண்மையில் காற்று பொருட்களால் கிழிபடும் ஓசை அது. ஆடிக் காற்று ஆனியிலேயே தொடங்கி விட்டது. காற்று இல்லாதபோது பங்குனி போலக் கொளுத்தியது வெயில். பாளம் பாளமாய் வெட்டி உருவலாம் போலத் தெளிவான வெயில். நிமிடத்தில் வியர்வைச் சுரப்பிகள் கனன்றன. இன்றைக்கு மழை வருமா என்று யோசித்தான்.
- 'மேகங்கள் தீர்ப்பதில்லை' கதையில்.
2. ஊரின் மேலாக உலவித் திரியும் மேகங்கள் இரக்கமற்றவை.மேகம் பார்த்த பூமியின் பரிதவிப்பைப் பழித்துக் காட்டிய வண்ணம் ரூபம்மாறித் திரிபவை. வீட்டு நிலைகளைப் பெயர்த்தும், ஓடுகளைப் பிரித்தும் விற்றுவிட்டு பாத்திர பண்டத்தோடு வண்டியேற 'பெய்யா மழை' காரணமாய் இருந்தது.
- 'அண்டமா நதிக்கரையின் ஊரில் ஒரு வீடு'.
3. ஆறு. ஓடுகிறபோது நீரழகு. ஓடாதபோது மணலழகு. சிறு பெரு கற்கள் அழகு. கரைமரம் அழகு. மேவி ஓடிய நீர்க்காலத்தில் எய்திய வழவழப்புப் பாறை அழகு. சண்முகசித்தாறு ஒரு காட்டாறு. எப்போதாவதுதான் அது கரைமீறிப் பிரவகித்து ஓடுகிறது. பிறகெல்லாம் காய்ந்தே கிடக்க்¢றது.
- 'சண்முகசித்தாறு'.
4. சில சமயம் காலக்குயவன் விவஸ்தையற்றுத் தவறு புரிகிறான்.எனக்கு ஒரு வருஷம் முந்தி அவளை வனைந்து விட்டான். பள்ளியின் நான் பத்தில் படிக்கையில் அவள் பதினொன்றில் வந்து சேர்ந்தாள். புல்நுனித் திவலை போல. புல்லாங்குழலைப்போல. மண்துகள்களைப் பொன்னாய் மாற்ற மணல் ஆரண்யத்தின் மையத்தில் பூத்த மாயமலர் போல.
- 'வெளிச்ச நர்த்தனம்'.
5. காலத்தினதும் அனுபவத்தினதுமான ஒரு நான்கு வருடத்திய முட்கள் முகத்தில் கீறுவத்ற்கு முன்பு. தென்னைகளும், வழிந்தோடும் 'புழ'களும், அரபிக் கடலின் அருகாமையுமாக ஜீவிதமே மரகதப் பசுமையாய் திகைந்து விட்டதான தோற்றம்.
- 'காற்றாடை'.
6. அநாதரவின் பாலொளி எங்கும் வீசுகிறது. நிலவின் நீண்ட இறக்கை வெளிச்சம் புவிமேவிக் கவிந்திருப்பது ஊதாத்திட்டுகளுடன் எனது ஓட்டைக் கூரை வழியே காட்சிக்குக் கிடைக்கிறது. வேர் தேடி அலையும் மேகங்களின் கீழாக விருப்பங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.பூக்களின் தொடுநாராகி என் கைகள் மாலையாகின்றன இக்கணம். தனியே கழற்றி உதறி எங்கேனும் சுயம்வரச் சங்குக்கழுத்தில் போட்டு விடலாம் என்று தீர்மானிக்கிற நேரம் கைகளற்று உதறுவது எங்கனம் என்ற கேள்வியும் எழுகிறது.
- 'நிணநீர்ச் சுவடி'.
7. நிலவின் இணுக்கோ உயித்துள்ளலில் பன்மடங்கு வசீகர வியாபகம் பெற்றவாறிருந்தது. கூந்தல் கோதிப் போயின பறவைகள். அண்டமாநதியில் அவள் நீர் முகக்கப் போகையில் துவரையளவு வாய் திறந்து சிறுமீன்கள் பேசின. 'பாவம்! இவள் - நிரந்தரத்தின் பேரழகி... நித்யயௌவனி. 'நிலவாழிகள் அறியாததை நீர்வாழிகள் அறியும்.
- 'தீண்டாநாயகி'.
8. ஊரின்மீது முதலில் படிந்தது இரவே எனும்படி பனைகள் சூழ்ந்த ஊரில் அநேக காலம் பனைத்தண்டி பொதிந்திருந்து உயிர் பெற்றுப் பறந்தவையென காகங்கள் நிறைந்தன.அவற்றின் நிழல்களுக்கோவெனில் கால்படத் தேவையில்லை நிலத்தில். பகலின் தரைவெளுப்பில் படகுபோலச் சரிந்தோடும் அவற்றின் நிழல்கள். இரவுக்கே மரமுரையும்
காகம். முகம் ஓயும் வரை பகலிற் பறந்து இரைகாணும் அவற்றின் நிழல்படியும் சாலையிலும் தெருக்களிலும்.
- 'கன்னிவாடி'.
9. விளக்குகளை ஏற்ற முற்பட்டபோது காற்றின் வேகத்தில் அணைந்து விட்டன. பாவத்தை வாயுபகவான் மீது போட்டுவிட, விளக்குகள் சுடரின்றி ஒதுங்கின ஓரமாய்.
- 'நாற்று'.
10. மரத்தின் கீழ்க்கிளையொன்றில் தேன்கூடு அப்பியிருந்தது - ஓரத்தை தட்டி எறிந்த தோசைக் கல்லைப் போல. சலனமற்று தேனீக்களின் இயக்கமும் சிறகடிப்பும் இல்லாமல்
உண்ணிகளைப்போல ஒட்டியிருந்ததில் பளபளப்பும் காணாமலாகி இருந்தது.
- 'வான்சிறப்பு'.
- வே.சபாநாயகம்.
Thursday, January 05, 2006
வர்ணனைகள் உவமைகள் - 46
நான் ரசித்த வர்ணனைகள் - உவமைகள்: 46
அசோகமித்திரன் படைப்புகளிலிருந்து:
1. ஆட்டிவிட்ட கடிகாரம் மீண்டும் நின்றுவிட்டது. இந்த நாளில் பெண்டுலம் உள்ள கடிகாரங்களே அதிகம் காணமுடியாது. பாசம் மிகுந்த வீடுகளில்தான் பார்க்க முடியும். பல வீடுகளில் அவை ஓடாமல் அப்படியே சுவரில் ஒட்டடையும் தூசும் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு கடிகாரத்தின் மீது குருவிகூடு கட்டி இருந்தது. சாவைக் குறிக்கும் கடிகாரத்தின் மீது, செத்துப் போன
கடிகாரத்தின் மீது ஒரு குருவி கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் திட்டமிட்டிருந்தது. பாசத்தைக் கிண்டல் செய்வது போலிருந்தது. வாழ்க்கையே கிண்டல் மிகுந்ததுதான். ஒவ்வொரு கணமும் மனிதனின் இயலாமையையும் அறியாமையையும் கண்டு கிண்டல் செய்வதுதான் அதன் முக்கிய பணி. இந்த வீட்டில் அதை இந்தக் கடிகாரத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிறது.
- 'கடிகாரம்' கதையில்.
2. அவன் இப்போது நிலவைப் பார்த்தான்.பௌர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. ஆதலால் நல்ல, பெரிய பிரகாசமான சந்திரன். கண்களுக்குத் தெரியாதபடி ஏதோ திரவம் போன்றது ஒன்றையும் நிலவு மேலிருந்து பூமிக்கு இறங்க வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் சூரியனுக்குக் கிடையாது. சூரியன் பலநூறு மடங்கு அதிக வெளிச்சம் தரலாம். தணலாகச் சுட்டு, வறுத்து எடுக்கலாம். ஆனால் பரிமாணமுள்ளது எதையும் தரமுடியாது. சந்திரனால் முடிந்தது. சந்திரன் இறக்கும் அப்பொருளின் பளு தாங்கமுடியாமல்தான் எல்லோரும்
படுத்துக் கொண்டு விடுகிறார்கள். மாடுகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன. பறவைகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன.
- 'குதூகலம்'.
3. எங்கெங்கோ தூரத்திலிருந்து மெல்லிய ஒலிகள் வந்து கொண்டிருந்த நகரக் கடலில் அவன் தெரு ஒரு குமிழியாக மிதந்து கொண்டிருந்தது. வெளியமைதி பொறுக்க முடியாமல் கத்தி விடலாமென்று அவனுக்குத் தோன்றியது.
- 'காத்திருத்தல்'.
4. காற்று மண்டலமே கலங்கிய திரவமாகி அதன் அடியில் தங்க விழையும் சுண்ணாம்பாக பனி இறங்கிக் கொண்டிருந்தது. பனி மூட்டத்தில் ஒரு பர்லாங் தள்ளி இருந்த மனிக்கூண்டுக் கடிகாரம் மங்கலாகத் தெரிந்தது. அந்தக் கடிகார விளக்கு வானத்து நட்சத்திரங்களுடன் ஒரு அபத்தமான போட்டி நடத்திக் கொண்டிருந்தது.
- 'காட்சி'.
5. நான் வசிக்கும் பேட்டைக்கு வடக்கு தெற்கு உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை தெற்குப் பகுதிக்குப் போனேன். அங்கு கடிகார ரிப்பேர்க்காரர் யாராவது இருப்பாரா என்று தேடினேன். வடக்குப் பகுதியில் மூவர் உண்டு. மிகவும் அருகில் இருப்பவர் கடிகாரத்தைக் கையாளும் விதம் நரசிம்மாவதாரத்தை நினைவூட்டும். இன்னொருவர் முதல்வருக்கு ஏறக்குறைய எதிர்க் கடை. அந்தக் கடை முதலாழ்வார்களை நினைவு படுத்தும். தெருவில் இருந்தபடியே எட்டிக் கொடுக்க வேண்டும்'
- கைகாட்டி மரம் கடிகாரம்....'கட்டுரையில்.
6. திடீரென்று மல்லையாவுக்கு அவன் கனமெல்லாம் கொட்டிப் போய் ஏதோ காற்றால் ஆனவன் போலிருந்தது. அவன் கை கால்கள் ஒவ்வொன்றும் தனிஅறிவு பெற்று இயங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இடது காலுக்குக் கிளட்சின் சூட்சுமம் போலீஸ்காரன் எரிச்சலோடு கையை விசிறியபோது தெரிந்துவிட்டது.
- 'திருப்பம்'.
7. சைக்கிளில் உட்கார்ந்தபடியே வலது காலைக் கீழே ஊன்றி பார்வை கொள்ளும் அளவுக்கு வயல் வெளியைப் பார்த்தான். மூன்று நான்கு வயல்களைத் தவிர அங்கே முற்றும் நன்கு ஓங்கி வளர்ந்த பயிர்க் கதிர்கள் காற்றில் அசைந்து ஏரித்தண்ணீர் மேற்பரப்பு போல் சிற்றலைகளாகத் தென்பட்டது. தொலைவில் மலைத்தொடர் அப்போதே கலையத்தொடங்கும் பனி மூட்டத்தில் பிரம்மாண்டமான நாடகத்
திரை போல் காட்சியளித்தது.
- 'விரிந்த வயல்வெளிக்கப்பால்'.
8. அத் தோட்டங்களில் அப்போது ஒரு பூக்கூட காணக் கிடைக்கவில்லை. இதே தோட்டங்கள் வெயில் காலத்தில் பல வண்ணப் புஷ்பங்களை ஏராளமாகச் சுமந்து காண்டு அடக்கம் அறியாப் பெண்கள் போலிருக்கும். இயற்கையோடு இசைந்து ருப்பவர்களுக்கு அடக்கம் எதற்கு? மனிதன் கூட ஆதிநாட்ளில் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் குளிரால் வ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டான்.
அவனுக்குக் குளிரை எதிர்க்க இவ்வளவு சாதனங்கள் தேவைப் பட்டிருக்காது.
- 'தலைமுறைகள்' நாவலில்.
9. நான் இருட்டில் பின்வாங்கினேன். மேகங்கள் வெகு அவசரமாக எங்கோ பாய்ந்து காண்டிருந்தன. நான் சிறுவனாய் இருந்தபோது இரவில் அசையும் மேகங்கள் னக்குப் பயத்துக்குரியதாக இருந்தன. கீழிருந்து பார்க்கும்போது ஒரு சிறு மூட்டை போலக் காட்சியளித்தாலும் அது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று சொன்னால் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. நான் அறிந்த
குன்றுகளையும் மலைகளையும் விடப் பெரியதாக வானத்தில் நகரும் மேகம் எனக்கு எப்போதுமே பயமூட்டியது. ஆனால் இன்று இந்த மேகங்கள் விபரீதமான உருவமும் அளவும் கொண்டதாயிருந்தாலும் எனக்கு அவை பயமூட்டவில்லை. மாறாக எனக்குத் துக்கம் மேலிட்டது.
- 'பாவம் டல்பதேடா' நாவலில்.
10. புன்னகையும் பருவநிலையும் தபால் பெட்டியில் தபாலைப் போடுவதைப் போல. கடிதத்தைப் பெட்டியின் வாயில் நுழைத்தவுடன் விஷயம் முடிந்து விடும்.
- 'இரு ஒற்றர்கள்' நாவலில்.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
அசோகமித்திரன் படைப்புகளிலிருந்து:
1. ஆட்டிவிட்ட கடிகாரம் மீண்டும் நின்றுவிட்டது. இந்த நாளில் பெண்டுலம் உள்ள கடிகாரங்களே அதிகம் காணமுடியாது. பாசம் மிகுந்த வீடுகளில்தான் பார்க்க முடியும். பல வீடுகளில் அவை ஓடாமல் அப்படியே சுவரில் ஒட்டடையும் தூசும் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு கடிகாரத்தின் மீது குருவிகூடு கட்டி இருந்தது. சாவைக் குறிக்கும் கடிகாரத்தின் மீது, செத்துப் போன
கடிகாரத்தின் மீது ஒரு குருவி கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் திட்டமிட்டிருந்தது. பாசத்தைக் கிண்டல் செய்வது போலிருந்தது. வாழ்க்கையே கிண்டல் மிகுந்ததுதான். ஒவ்வொரு கணமும் மனிதனின் இயலாமையையும் அறியாமையையும் கண்டு கிண்டல் செய்வதுதான் அதன் முக்கிய பணி. இந்த வீட்டில் அதை இந்தக் கடிகாரத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிறது.
- 'கடிகாரம்' கதையில்.
2. அவன் இப்போது நிலவைப் பார்த்தான்.பௌர்ணமிக்கு மூன்று நாட்கள் இருந்தன. ஆதலால் நல்ல, பெரிய பிரகாசமான சந்திரன். கண்களுக்குத் தெரியாதபடி ஏதோ திரவம் போன்றது ஒன்றையும் நிலவு மேலிருந்து பூமிக்கு இறங்க வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆற்றல் சூரியனுக்குக் கிடையாது. சூரியன் பலநூறு மடங்கு அதிக வெளிச்சம் தரலாம். தணலாகச் சுட்டு, வறுத்து எடுக்கலாம். ஆனால் பரிமாணமுள்ளது எதையும் தரமுடியாது. சந்திரனால் முடிந்தது. சந்திரன் இறக்கும் அப்பொருளின் பளு தாங்கமுடியாமல்தான் எல்லோரும்
படுத்துக் கொண்டு விடுகிறார்கள். மாடுகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன. பறவைகள் படுத்துக் கொண்டுவிடுகின்றன.
- 'குதூகலம்'.
3. எங்கெங்கோ தூரத்திலிருந்து மெல்லிய ஒலிகள் வந்து கொண்டிருந்த நகரக் கடலில் அவன் தெரு ஒரு குமிழியாக மிதந்து கொண்டிருந்தது. வெளியமைதி பொறுக்க முடியாமல் கத்தி விடலாமென்று அவனுக்குத் தோன்றியது.
- 'காத்திருத்தல்'.
4. காற்று மண்டலமே கலங்கிய திரவமாகி அதன் அடியில் தங்க விழையும் சுண்ணாம்பாக பனி இறங்கிக் கொண்டிருந்தது. பனி மூட்டத்தில் ஒரு பர்லாங் தள்ளி இருந்த மனிக்கூண்டுக் கடிகாரம் மங்கலாகத் தெரிந்தது. அந்தக் கடிகார விளக்கு வானத்து நட்சத்திரங்களுடன் ஒரு அபத்தமான போட்டி நடத்திக் கொண்டிருந்தது.
- 'காட்சி'.
5. நான் வசிக்கும் பேட்டைக்கு வடக்கு தெற்கு உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை தெற்குப் பகுதிக்குப் போனேன். அங்கு கடிகார ரிப்பேர்க்காரர் யாராவது இருப்பாரா என்று தேடினேன். வடக்குப் பகுதியில் மூவர் உண்டு. மிகவும் அருகில் இருப்பவர் கடிகாரத்தைக் கையாளும் விதம் நரசிம்மாவதாரத்தை நினைவூட்டும். இன்னொருவர் முதல்வருக்கு ஏறக்குறைய எதிர்க் கடை. அந்தக் கடை முதலாழ்வார்களை நினைவு படுத்தும். தெருவில் இருந்தபடியே எட்டிக் கொடுக்க வேண்டும்'
- கைகாட்டி மரம் கடிகாரம்....'கட்டுரையில்.
6. திடீரென்று மல்லையாவுக்கு அவன் கனமெல்லாம் கொட்டிப் போய் ஏதோ காற்றால் ஆனவன் போலிருந்தது. அவன் கை கால்கள் ஒவ்வொன்றும் தனிஅறிவு பெற்று இயங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இடது காலுக்குக் கிளட்சின் சூட்சுமம் போலீஸ்காரன் எரிச்சலோடு கையை விசிறியபோது தெரிந்துவிட்டது.
- 'திருப்பம்'.
7. சைக்கிளில் உட்கார்ந்தபடியே வலது காலைக் கீழே ஊன்றி பார்வை கொள்ளும் அளவுக்கு வயல் வெளியைப் பார்த்தான். மூன்று நான்கு வயல்களைத் தவிர அங்கே முற்றும் நன்கு ஓங்கி வளர்ந்த பயிர்க் கதிர்கள் காற்றில் அசைந்து ஏரித்தண்ணீர் மேற்பரப்பு போல் சிற்றலைகளாகத் தென்பட்டது. தொலைவில் மலைத்தொடர் அப்போதே கலையத்தொடங்கும் பனி மூட்டத்தில் பிரம்மாண்டமான நாடகத்
திரை போல் காட்சியளித்தது.
- 'விரிந்த வயல்வெளிக்கப்பால்'.
8. அத் தோட்டங்களில் அப்போது ஒரு பூக்கூட காணக் கிடைக்கவில்லை. இதே தோட்டங்கள் வெயில் காலத்தில் பல வண்ணப் புஷ்பங்களை ஏராளமாகச் சுமந்து காண்டு அடக்கம் அறியாப் பெண்கள் போலிருக்கும். இயற்கையோடு இசைந்து ருப்பவர்களுக்கு அடக்கம் எதற்கு? மனிதன் கூட ஆதிநாட்ளில் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்தில் குளிரால் வ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டான்.
அவனுக்குக் குளிரை எதிர்க்க இவ்வளவு சாதனங்கள் தேவைப் பட்டிருக்காது.
- 'தலைமுறைகள்' நாவலில்.
9. நான் இருட்டில் பின்வாங்கினேன். மேகங்கள் வெகு அவசரமாக எங்கோ பாய்ந்து காண்டிருந்தன. நான் சிறுவனாய் இருந்தபோது இரவில் அசையும் மேகங்கள் னக்குப் பயத்துக்குரியதாக இருந்தன. கீழிருந்து பார்க்கும்போது ஒரு சிறு மூட்டை போலக் காட்சியளித்தாலும் அது அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று சொன்னால் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. நான் அறிந்த
குன்றுகளையும் மலைகளையும் விடப் பெரியதாக வானத்தில் நகரும் மேகம் எனக்கு எப்போதுமே பயமூட்டியது. ஆனால் இன்று இந்த மேகங்கள் விபரீதமான உருவமும் அளவும் கொண்டதாயிருந்தாலும் எனக்கு அவை பயமூட்டவில்லை. மாறாக எனக்குத் துக்கம் மேலிட்டது.
- 'பாவம் டல்பதேடா' நாவலில்.
10. புன்னகையும் பருவநிலையும் தபால் பெட்டியில் தபாலைப் போடுவதைப் போல. கடிதத்தைப் பெட்டியின் வாயில் நுழைத்தவுடன் விஷயம் முடிந்து விடும்.
- 'இரு ஒற்றர்கள்' நாவலில்.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
Wednesday, November 09, 2005
உவமைகள் - வர்ணனைகள் 45
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 45:
மாலன் படைப்புகளிலிருந்து:
1. ராஜசேகர் முகத்தில் லட்சங்களைச் சுவாசிக்கிற களை தெரிந்தது. ஒழுங்காக வாரி இருந்தான். கண்களில் பணம் பண்ணும் சாமர்த்தியம் சிகப்பாக ஒளிர்ந்தது. இவனை ஒரு துரும்பைப் பார்க்கிற மாதிரி பார்த்தான்.
- 'bait' கதையில்.
2. நிமிர்ந்து பார்த்தான். முதலில் என்னைப் பார் என்னும் மூக்கு. சிரிப்பதற்கில்லை இது சாப்பிட மட்டும்தான் என்பது போல் சிறிதாய்க் கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல் இறுகிய முகம். முகத்தில்தான் எத்தனை வகை! உழுது பாத்தி கட்டின மாதிரி; திருஷ்டிப் பூசனி மாதிரி; தோய்த்து உலர்த்தின மாதிரி; எண்ணெயில் பொறித்த மாதிரி; செடியில் பூத்த மாதிரி. ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய்; அன்பாய்; சிலருக்குத் திமிராய்.......
- 'அக்னி நட்சத்திரம்'.
3. ஜனனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்வி கிளம்பும்.
- 'தப்புக் கணக்கு'.
4. இவன் கண் திறந்த போது எல்லாமே முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புக்களை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.
- 'கல்கி'.
5. அப்பா லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தது எங்கோ தொலைவில் தொடுவானத்துக்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பேரைச் சொல்லும் புண்ணியத்துக்காக அப்பா சமஸ்கிருதத்தைக் கடித்துத் துப்ப வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ் லிபியில் அச்சான புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.தமிழும் இல்லாத சமஸ்கிருதமும் இல்லாத இந்தப் புதிய பாஷை லெட்சுமிக்குப் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ ஐந்து மணிக்கு எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்சியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்டதைக் கொடுத்திருக்கலாம்.
- 'என் வீடு'.
6. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"
பாடல் கேட்கப் பரவசமாய் இருந்தது. வெதுவெதுவென்று உஷ்ணமாய் உடல் சூடேறியது. 'ஆயுதம்' என்ற குரல் உச்சத்தில் போய் நின்றது. சடாரென்று அந்த நேரத்தில் கவிதையின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆயுதம்னா கத்தி கபடாவா? பாரதி சொல்லுக்கு எழுதுவதும் நம் ஆயுதம்(writing is our weapon) என்றல்லவா அர்த்தம்? சுரண்டறவன் வயித்தில் சொருகுகிற கத்தி மாதிரி நியூஸ்பேப்பர் வந்து விழவேண்டும். நசுக்கி வைத்திருகிறவர்கள் போல், ஆட்டம் பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரைகள் வந்து விழவேண்டும்.மெஷின்கன் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வரவேண்டும் என்றல்லவா அர்த்தம்? அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று.
- 'ஆயுதம்'.
7. மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டிய மாதிரி லேசான பழுப்பில் நிலா முழுசாய் மிதந்து கொண்டிருந்தது. கையால் அள்ளித்தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மனம் இன்னும் சூடேறிப் போகவில்லை. எங்கேயோ ஒருசிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டி விட்டமாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எங்கே போனாலும், எதைத் தொட்டாலும் துரத்தித் துரத்தி வந்து ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.
- 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்'.
8. மார்ச்சு மாதத்து மத்தியானத்து வெயில். சுகமான விடுமுறைச் சோம்பல். உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞயிற்றுக் கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது. எனக்குள் சின்னதாய் ஒரு விஸ்வாமித்திரன். எதிரே என் சின்னத்தங்கை. கையிலே
ஒரு தந்தி. பார்த்தேன். உடம்பின் செல்களில் மெலிதாய் ஒரு மின்சாரம். நிறைய வியர்த்தேன். மனதுள் சோடாக் குமிழ் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.
- 'சூரிய தேசம்' கட்டுரையில்.
9. யோசித்துப் பார்த்தால் இப்படித்தான் எல்லோரும் குளவி போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக் கொண்டு இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச்சுற்றி வருகிறார்கள் அலைச்சலும் இரைச்சலுமாய்.
- 'கோட்டை' கதையில்.
10. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை.வாசிக்க வயலினை எடுத்தால் வழிதப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழியப் பிடிகிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப்போய் வில்லை வீசி விட்டு தோட்டத்தில் உலாவ வந்த நிமிஷத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென ஒரு அலை பொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக்கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணைத் திறந்து பார்த்தார்.
- 'வித்வான்'.
- மேலும் வரும்.
-வே.சபாநாயகம்.
மாலன் படைப்புகளிலிருந்து:
1. ராஜசேகர் முகத்தில் லட்சங்களைச் சுவாசிக்கிற களை தெரிந்தது. ஒழுங்காக வாரி இருந்தான். கண்களில் பணம் பண்ணும் சாமர்த்தியம் சிகப்பாக ஒளிர்ந்தது. இவனை ஒரு துரும்பைப் பார்க்கிற மாதிரி பார்த்தான்.
- 'bait' கதையில்.
2. நிமிர்ந்து பார்த்தான். முதலில் என்னைப் பார் என்னும் மூக்கு. சிரிப்பதற்கில்லை இது சாப்பிட மட்டும்தான் என்பது போல் சிறிதாய்க் கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல் இறுகிய முகம். முகத்தில்தான் எத்தனை வகை! உழுது பாத்தி கட்டின மாதிரி; திருஷ்டிப் பூசனி மாதிரி; தோய்த்து உலர்த்தின மாதிரி; எண்ணெயில் பொறித்த மாதிரி; செடியில் பூத்த மாதிரி. ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய்; அன்பாய்; சிலருக்குத் திமிராய்.......
- 'அக்னி நட்சத்திரம்'.
3. ஜனனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்வி கிளம்பும்.
- 'தப்புக் கணக்கு'.
4. இவன் கண் திறந்த போது எல்லாமே முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புக்களை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.
- 'கல்கி'.
5. அப்பா லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தது எங்கோ தொலைவில் தொடுவானத்துக்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பேரைச் சொல்லும் புண்ணியத்துக்காக அப்பா சமஸ்கிருதத்தைக் கடித்துத் துப்ப வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ் லிபியில் அச்சான புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.தமிழும் இல்லாத சமஸ்கிருதமும் இல்லாத இந்தப் புதிய பாஷை லெட்சுமிக்குப் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ ஐந்து மணிக்கு எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்சியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்டதைக் கொடுத்திருக்கலாம்.
- 'என் வீடு'.
6. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"
பாடல் கேட்கப் பரவசமாய் இருந்தது. வெதுவெதுவென்று உஷ்ணமாய் உடல் சூடேறியது. 'ஆயுதம்' என்ற குரல் உச்சத்தில் போய் நின்றது. சடாரென்று அந்த நேரத்தில் கவிதையின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆயுதம்னா கத்தி கபடாவா? பாரதி சொல்லுக்கு எழுதுவதும் நம் ஆயுதம்(writing is our weapon) என்றல்லவா அர்த்தம்? சுரண்டறவன் வயித்தில் சொருகுகிற கத்தி மாதிரி நியூஸ்பேப்பர் வந்து விழவேண்டும். நசுக்கி வைத்திருகிறவர்கள் போல், ஆட்டம் பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரைகள் வந்து விழவேண்டும்.மெஷின்கன் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வரவேண்டும் என்றல்லவா அர்த்தம்? அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று.
- 'ஆயுதம்'.
7. மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டிய மாதிரி லேசான பழுப்பில் நிலா முழுசாய் மிதந்து கொண்டிருந்தது. கையால் அள்ளித்தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மனம் இன்னும் சூடேறிப் போகவில்லை. எங்கேயோ ஒருசிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டி விட்டமாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எங்கே போனாலும், எதைத் தொட்டாலும் துரத்தித் துரத்தி வந்து ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.
- 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்'.
8. மார்ச்சு மாதத்து மத்தியானத்து வெயில். சுகமான விடுமுறைச் சோம்பல். உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞயிற்றுக் கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது. எனக்குள் சின்னதாய் ஒரு விஸ்வாமித்திரன். எதிரே என் சின்னத்தங்கை. கையிலே
ஒரு தந்தி. பார்த்தேன். உடம்பின் செல்களில் மெலிதாய் ஒரு மின்சாரம். நிறைய வியர்த்தேன். மனதுள் சோடாக் குமிழ் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.
- 'சூரிய தேசம்' கட்டுரையில்.
9. யோசித்துப் பார்த்தால் இப்படித்தான் எல்லோரும் குளவி போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக் கொண்டு இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச்சுற்றி வருகிறார்கள் அலைச்சலும் இரைச்சலுமாய்.
- 'கோட்டை' கதையில்.
10. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை.வாசிக்க வயலினை எடுத்தால் வழிதப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழியப் பிடிகிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப்போய் வில்லை வீசி விட்டு தோட்டத்தில் உலாவ வந்த நிமிஷத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென ஒரு அலை பொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக்கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணைத் திறந்து பார்த்தார்.
- 'வித்வான்'.
- மேலும் வரும்.
-வே.சபாநாயகம்.
Friday, October 28, 2005
உவமைகள் வர்ணனைகள் - 44
நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 44
வண்ணநிலவன் படைப்புகளிலிருந்து:
1. ............இத்தனைக்கும் ராமையா எல்லோரையும் விட நல்ல உயரம். ஆனால் அவனைப் பார்த்தால் யாருக்கும் ஒரு பயபக்தியோ மதிப்போ வருவதில்லை. குழிவிழுந்த கண்கள்; நீண்ட தாடை; நீளமான கழுத்து; தோள்பட்டையிலிருந்து இரண்டு கைகளும் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிடிமானமே இல்லாமல் தொங்கும்; ஆறரைஅடி உயரம்.
- 'கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன்' கதையில்.
2. 'ஸ்...ஸ்....ஸ்......' என்று சாரைப் பாம்பு சீறுகிறமாதிரி யாராவது வீட்டுக்குள் நுழைந்தால் அது பாடலிங்கம் பிள்ளைதான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அவரிடம் அசந்து மறந்து யாராவது 'சுகமில்லை' என்று சொன்னால் தொலைந்தது. காயத்தைப் பொடி பண்ணித் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார். காயம் அவருக்குச் சர்வரோக நிவாரணி. ஜலதோஷம் முதல் எலும்புமுறிவு வரை காயத்தைப் பொடித்துத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார்.
- 'ஞாயிற்றுக்கிழமை'.
3. அவர்கள் வீட்டில் ஒருத்தர் குரல் போல ஒருத்தருக்கு இல்லை. அவர்களின் அம்மாவுக்கு ஒரு குரல். விசித்திரம் நிரம்பிய - பூனை கூப்பிட்டு அழுகிறது போன்றது அம்மாவின் குரல்.
- 'அழைக்கிறவர்கள்.'
4. அப்பாவின் குரல் ரொம்ப மென்மையானது. அப்பாவைச் சந்தித்து விட்டுப் போன அவருடைய ரசிகர்களில் பலர், ஊருக்குப் போனதும் அப்பாவின் குரலைப் பாராட்டி எழுதாமல் இருந்ததில்லை. அவருடைய உள்ளங் கைகளைப் போலவே அவருடைய குரலில் சொல்ல முடியாத மிருது இருந்தது. அந்தக் குரலைக் கேட்டால், பூவால் காதைத் தொட்ட மாதிரி இருக்கும்.
- 'அண்டை வீட்டார்'.
5. பக்கத்தில் இருந்தவரை மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவருடைய குரல் வியாபாரிகளுக்கே உரிய கள்ளத்தனமுள்ள கீச்சுக் குரலாக இருந்தது. சின்ன வயசிலேயே இந்த வியாபாரக் குரல் இவருக்கு வந்திருக்கும்போல. எல்லோரும் பின்னால் ஆகப் போகிறதைச் சின்ன வயதிலேயே இனம் காட்டி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
- 'ஏழாவது நாள்'.
6. வேட்டியைப் பெரிதாக, ஒரு பிறந்த குழந்தை தூங்குகிற அளவிற்கு 'மடி'வ்¢ட்டுக் கட்டிக் கொண்டார். அப்படிக் கட்டிக் கொண்டால்தான் அவருக்கு வேட்டி கட்டிக் கொண்டது போல இருக்கும்.
- 'யுகதர்மம்'.
7. செல்லம்மா பாஷையில், வீட்டில் வாக்கரிசி முட்டிப் போகும்போது, பெரிய ஞானக்கிறுக்கன் போல் இந்தத் திண்ணையில் சாய்ந்து கொள்வான். மழுமழுவென்று, தயிர்க்காரியின் சிரட்டையைப் போல் சிரைக்கப்பட்ட தலை மேல் இரண்டு கைகளும் பின்னிக் கிடக்கும். இன்றைக்கும் அதே மோனத் தவத்தில் ஆழ்ந்து, மனம் எங்கோ பழங்கனவுகளில் லயித்துக் கிடக்கும்போதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கிற மாதிரி பீரிட்டுக் கிளம்பியது.
- 'மயான காண்டம்'.
8. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துபோர்டில் ந்¢றுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருந்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு ஒரு போதும் எஸ்தர் குடும்பத்திற்கு துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை, வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.
- 'எஸ்தர்'.
9. அது நிலாக் காலம். வண்டியின் வேகத்தில் பனை ஓலைகளினூடே தெரிந்த நிலா ஒளிந்து பார்க்கிற மாதிரி மறைந்து மறைந்து தெரிந்தது. வண்டிக்கு அடியில் நிலா வெளிச்சத்தில் வண்டிச் சக்கர நிழல்கள், ரொம்ப தூரத்துக்கு ரோட்டை விட்டுக்கீழே இறங்கி, பெரிய ராட்க்ஷஸச் சக்கரங்களாக வண்டியுடன் கூடவே உருண்டு வந்து கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.
- 'குழந்தைகள் ஆண்டில்'.
10. அவளுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆயிற்று? மாடியிலிருந்து கிழித்துப் பறக்கவிட்ட பேப்பர்த் துண்டுகள் மாதிரி எந்த இடத்தில் தலை சாய்ப்பது என்று தெரியாமல் இருக்கிறாள்.
- 'ஒரே ஒரு நாள்' நாவலில்.
- இன்னும் வரும்.
- வே.சபாநாயகம்.
வண்ணநிலவன் படைப்புகளிலிருந்து:
1. ............இத்தனைக்கும் ராமையா எல்லோரையும் விட நல்ல உயரம். ஆனால் அவனைப் பார்த்தால் யாருக்கும் ஒரு பயபக்தியோ மதிப்போ வருவதில்லை. குழிவிழுந்த கண்கள்; நீண்ட தாடை; நீளமான கழுத்து; தோள்பட்டையிலிருந்து இரண்டு கைகளும் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிடிமானமே இல்லாமல் தொங்கும்; ஆறரைஅடி உயரம்.
- 'கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன்' கதையில்.
2. 'ஸ்...ஸ்....ஸ்......' என்று சாரைப் பாம்பு சீறுகிறமாதிரி யாராவது வீட்டுக்குள் நுழைந்தால் அது பாடலிங்கம் பிள்ளைதான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அவரிடம் அசந்து மறந்து யாராவது 'சுகமில்லை' என்று சொன்னால் தொலைந்தது. காயத்தைப் பொடி பண்ணித் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார். காயம் அவருக்குச் சர்வரோக நிவாரணி. ஜலதோஷம் முதல் எலும்புமுறிவு வரை காயத்தைப் பொடித்துத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார்.
- 'ஞாயிற்றுக்கிழமை'.
3. அவர்கள் வீட்டில் ஒருத்தர் குரல் போல ஒருத்தருக்கு இல்லை. அவர்களின் அம்மாவுக்கு ஒரு குரல். விசித்திரம் நிரம்பிய - பூனை கூப்பிட்டு அழுகிறது போன்றது அம்மாவின் குரல்.
- 'அழைக்கிறவர்கள்.'
4. அப்பாவின் குரல் ரொம்ப மென்மையானது. அப்பாவைச் சந்தித்து விட்டுப் போன அவருடைய ரசிகர்களில் பலர், ஊருக்குப் போனதும் அப்பாவின் குரலைப் பாராட்டி எழுதாமல் இருந்ததில்லை. அவருடைய உள்ளங் கைகளைப் போலவே அவருடைய குரலில் சொல்ல முடியாத மிருது இருந்தது. அந்தக் குரலைக் கேட்டால், பூவால் காதைத் தொட்ட மாதிரி இருக்கும்.
- 'அண்டை வீட்டார்'.
5. பக்கத்தில் இருந்தவரை மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவருடைய குரல் வியாபாரிகளுக்கே உரிய கள்ளத்தனமுள்ள கீச்சுக் குரலாக இருந்தது. சின்ன வயசிலேயே இந்த வியாபாரக் குரல் இவருக்கு வந்திருக்கும்போல. எல்லோரும் பின்னால் ஆகப் போகிறதைச் சின்ன வயதிலேயே இனம் காட்டி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.
- 'ஏழாவது நாள்'.
6. வேட்டியைப் பெரிதாக, ஒரு பிறந்த குழந்தை தூங்குகிற அளவிற்கு 'மடி'வ்¢ட்டுக் கட்டிக் கொண்டார். அப்படிக் கட்டிக் கொண்டால்தான் அவருக்கு வேட்டி கட்டிக் கொண்டது போல இருக்கும்.
- 'யுகதர்மம்'.
7. செல்லம்மா பாஷையில், வீட்டில் வாக்கரிசி முட்டிப் போகும்போது, பெரிய ஞானக்கிறுக்கன் போல் இந்தத் திண்ணையில் சாய்ந்து கொள்வான். மழுமழுவென்று, தயிர்க்காரியின் சிரட்டையைப் போல் சிரைக்கப்பட்ட தலை மேல் இரண்டு கைகளும் பின்னிக் கிடக்கும். இன்றைக்கும் அதே மோனத் தவத்தில் ஆழ்ந்து, மனம் எங்கோ பழங்கனவுகளில் லயித்துக் கிடக்கும்போதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கிற மாதிரி பீரிட்டுக் கிளம்பியது.
- 'மயான காண்டம்'.
8. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துபோர்டில் ந்¢றுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருந்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு ஒரு போதும் எஸ்தர் குடும்பத்திற்கு துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை, வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.
- 'எஸ்தர்'.
9. அது நிலாக் காலம். வண்டியின் வேகத்தில் பனை ஓலைகளினூடே தெரிந்த நிலா ஒளிந்து பார்க்கிற மாதிரி மறைந்து மறைந்து தெரிந்தது. வண்டிக்கு அடியில் நிலா வெளிச்சத்தில் வண்டிச் சக்கர நிழல்கள், ரொம்ப தூரத்துக்கு ரோட்டை விட்டுக்கீழே இறங்கி, பெரிய ராட்க்ஷஸச் சக்கரங்களாக வண்டியுடன் கூடவே உருண்டு வந்து கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.
- 'குழந்தைகள் ஆண்டில்'.
10. அவளுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆயிற்று? மாடியிலிருந்து கிழித்துப் பறக்கவிட்ட பேப்பர்த் துண்டுகள் மாதிரி எந்த இடத்தில் தலை சாய்ப்பது என்று தெரியாமல் இருக்கிறாள்.
- 'ஒரே ஒரு நாள்' நாவலில்.
- இன்னும் வரும்.
- வே.சபாநாயகம்.
Tuesday, August 02, 2005
உவமைகள்-வருணனைகள் - 43
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 43:
வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து:
1. இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி. கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வதுபோல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கை தான்.
- 'காத்தலிங்கம்'கதையில்.
2. வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல நிறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப்புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதினான்.
- 'விழிப்பு'.
3. பார்க்கப் போனால், ஆனந்தக்குறிச்சிவாசிகள் அல்பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப் போய், 'சரி, போகலாமே!' என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது.
- 'அந்தரங்கமான ஒரு போட்டி'.
4. பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத்தினளாய் தோன்றிய அத்தை 'இளையளாய் மூத்திலள் கொல்லோ' என்ற கவிதை வரிக்கு - இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையானவளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு - கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.
- 'அன்பு வறுமை'.
5. நசுநசுவென்று அழுகுணித் தூறல் சிணுங்கிக் கொண்டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்துவிட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்டிரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள் போல் மினுமினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது.
- 'கொலைகாரன்'.
6. மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும், கனவு நெசவுகளையும் செய்து அமைதியைக் கெடுக்கிறது.
- 'பேரிழப்பு'.
7. கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி.
-'பெண்'.
8. காலவெளியில் கால் பாவி, எண்ண வலையினால் விண்மீன்களைப் பிடிக்க ஆசைப்பட்டேன் நான்.
- 'இதய ஒலி'.
9. தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அணைந்து விடுவது போல் பம்மி, குபீரென்று எவ்விப்படர்ந்தது. புகை கக்கியது. ஒளி நாக்கு நீட்டி நர்த்தனமிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்கும் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய்ச் சிரித்தது.
- ' தீ வேலி'.
10.தன் எண்ணற்ற குச்சிக்கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்து நிற்கும் ஆலமரம்......
- 'அலை மோது கடல் ஓரத்தில்' நாவலில்.
- இன்னும் வரும்.
- அடுத்து வண்ண நிலவன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து:
1. இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி. கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வதுபோல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கை தான்.
- 'காத்தலிங்கம்'கதையில்.
2. வானம், கழுவிப் போட்டது போல், அழுத்தமான நீல நிறத்தோடு பளிச்சிட்டது. விண்ணிலும் மண்ணிலும், அவன் அதுவரை கண்டிராத அதிசயப் புதுமை இணைந்து கிடந்தது போல் தோன்றியது. இயற்கை புத்துயிரோடும் புது வனப்புடனும் காட்சி தந்து கொண்டிருப்பதாக அவன் கருதினான்.
- 'விழிப்பு'.
3. பார்க்கப் போனால், ஆனந்தக்குறிச்சிவாசிகள் அல்பாயுள் பேர்வழிகள் அல்ல. மண்ணில் அவர்களுக்குப் பிடிப்பு அதிகம். அவர்களுக்கே அலுத்துப் போய், 'சரி, போகலாமே!' என்று பட்டால் தான் சாவார்கள் போல் தோன்றியது.
- 'அந்தரங்கமான ஒரு போட்டி'.
4. பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத்தினளாய் தோன்றிய அத்தை 'இளையளாய் மூத்திலள் கொல்லோ' என்ற கவிதை வரிக்கு - இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையானவளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு - கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.
- 'அன்பு வறுமை'.
5. நசுநசுவென்று அழுகுணித் தூறல் சிணுங்கிக் கொண்டிருந்தது. ரஸ்தாப் பரப்பு எங்கும் தண்ணீர் தெளித்துவிட்டது போலிருந்தது. அது வேர்வையில் குளித்தது போலுமிருந்தது. சிறிது தொலைவுக்கு ஒன்றாக நின்ற எலெக்டிரிக் கம்பங்களில் ஒளிப்பூ பூத்துத் தொங்கியது. நசுநசுத் தூற்றல் அற்புதப் பூச்சிகள் போல் மினுமினுத்தது. விளக்குகளின் கண்ணீர்த் திவலைகள் போலுமிருந்தது.
- 'கொலைகாரன்'.
6. மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும், கனவு நெசவுகளையும் செய்து அமைதியைக் கெடுக்கிறது.
- 'பேரிழப்பு'.
7. கதவு தட்டப்பட்டதும் அவள் வந்தாள் திறப்பதற்காக. நகர்ந்து வருகிற ஒளிக்கோடு மாதிரி.
-'பெண்'.
8. காலவெளியில் கால் பாவி, எண்ண வலையினால் விண்மீன்களைப் பிடிக்க ஆசைப்பட்டேன் நான்.
- 'இதய ஒலி'.
9. தீ சிறுகச் சிறுகப் பற்றியது. அணைந்து விடுவது போல் பம்மி, குபீரென்று எவ்விப்படர்ந்தது. புகை கக்கியது. ஒளி நாக்கு நீட்டி நர்த்தனமிட்டது. அகப்பட்டதை நக்கி வலிமை பெற்றது. அங்கும் இங்கும் தாவிக் குதித்து நெடுகிலும் பாய்ந்து பரவியது. செம்மையாய்ச் சிரித்தது.
- ' தீ வேலி'.
10.தன் எண்ணற்ற குச்சிக்கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்து நிற்கும் ஆலமரம்......
- 'அலை மோது கடல் ஓரத்தில்' நாவலில்.
- இன்னும் வரும்.
- அடுத்து வண்ண நிலவன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Wednesday, July 06, 2005
உவமைகள் வர்ணனைகள் - 42
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 42
பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:
1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.
- 'என் கண்மணி' நாவலில்.
2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.
- 'ஆருயிரே மன்னவரே' நாவலில்.
3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.
- 'கல்யாண மாலை' நாவலில்.
4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
- 'புருஷ விரதம்' நாவலில்.
5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.
- 'மரக்கால்' நாவலில்'.
6. "ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்."
- 'ஏதோ ஒரு நதியில்' குறுநாவலில்.
7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன....?
- 'சேவல் பண்ணை' நாவலில்.
8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.
- 'கிருஷ்ண அர்ஜுனன்' நாவலில்.
9. யாரையுமே..... எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.
- 'யானை வேட்டை' நாவலில்.
10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.
- 'அடுக்கு மல்லி நாவலில்'.
- இன்னும் வரும்.
- அடுத்து வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநயகம்.
பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:
1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.
- 'என் கண்மணி' நாவலில்.
2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.
- 'ஆருயிரே மன்னவரே' நாவலில்.
3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.
- 'கல்யாண மாலை' நாவலில்.
4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
- 'புருஷ விரதம்' நாவலில்.
5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.
- 'மரக்கால்' நாவலில்'.
6. "ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்."
- 'ஏதோ ஒரு நதியில்' குறுநாவலில்.
7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன....?
- 'சேவல் பண்ணை' நாவலில்.
8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.
- 'கிருஷ்ண அர்ஜுனன்' நாவலில்.
9. யாரையுமே..... எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.
- 'யானை வேட்டை' நாவலில்.
10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.
- 'அடுக்கு மல்லி நாவலில்'.
- இன்னும் வரும்.
- அடுத்து வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநயகம்.
Thursday, June 16, 2005
உவமைகள் வர்ணனைகள்- 41
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 41
ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:
1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.
- 'அரிசி விலையில் திருமணங்கள்' கதையில்.
2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.
- 'ஒன்றே வாழ்வு'.
3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.
- 'பாசமும் பயனும்'.
4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.
- 'சந்திப்பு'.
5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.
- 'அடிக்கடி வருகிறான்'.
6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.
- 'நான்காம் ஆசிரமம்'.
7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் 'பிரமிட்'. மாநிற....... - வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.
- 'ரோஜா பதியன்'.
8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.
- 'அத்தை'.
9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் 'பெண்ணின் தந்தை' என்று பறை சாற்றுவது போல இருந்தது.
- 'புவனாவும் வியாழக் கிரகமும்'.
10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.
- 'பன்மை'.
- மேலும் வரும்.
- அடுத்து பாலகுமாரன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:
1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.
- 'அரிசி விலையில் திருமணங்கள்' கதையில்.
2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.
- 'ஒன்றே வாழ்வு'.
3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.
- 'பாசமும் பயனும்'.
4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.
- 'சந்திப்பு'.
5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.
- 'அடிக்கடி வருகிறான்'.
6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.
- 'நான்காம் ஆசிரமம்'.
7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் 'பிரமிட்'. மாநிற....... - வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.
- 'ரோஜா பதியன்'.
8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.
- 'அத்தை'.
9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் 'பெண்ணின் தந்தை' என்று பறை சாற்றுவது போல இருந்தது.
- 'புவனாவும் வியாழக் கிரகமும்'.
10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.
- 'பன்மை'.
- மேலும் வரும்.
- அடுத்து பாலகுமாரன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Wednesday, June 08, 2005
உவமைகள் - வர்ணனைகள் - 40
நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 40
க.நா.சுப்ரமண்யம் படைப்புகளிலிருந்து:
1. ஒருதடவை பி.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. சுந்தரம் பிள்ளையிடம் ஈடுபாடுள்ளவர் வையாபுரிப் பிள்ளை. அவர்தான் தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்தை ஊன்றியவர் என்கிற நினைப்பு உண்டு அவருக்கு. இலக்கியத் தரமே இல்லாத நூல் என்பது என் கட்சி. நாடகமாகவோ, கவிதையாகவோ, வெறும் கதை என்கிற அளவில்கூட வெற்றி பெறாத நூல். ஓடாத காளை மாட்டை வாலைக் கடித்து ஓட வைப்பது போலத் தமிழை ஓட வைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை என்று நான் சொன்னபோது அவருக்குக் கோபமே வந்து விட்டது.
- 'வையாபுரிப் பிள்ளை - க.நா.சு பக்கம்'.
2. மனிதச் சிந்தனைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்கு சீல் வைக்கப் பட்ட இருட்டுக் கூடங்களாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் தெரிந்து கொள்வது நல்லதுதானே?
- 'கிருஷ்ணன் நம்பி - க.நா.சு பக்கம்'.
3. இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொறையார் திராட்¨க்ஷயின் புளிப்பு மாறிவிட்டது. திரா¨க்ஷயின் தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து புளிப்பை முழுவதும் இனிப்பாக மாற்றிவிட்டன- மனிதர்களின் மிகவும் கசப்பான நினைவுகள் கூட இனியவையாக மாறிவிடுவது மாதிரி.
- 'ஏ.கே.செட்டியார் - க.நா.சு பக்கம்'.
4. இலக்கியத் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத் தரத்துக்கு வேறு ஆளைத் தேடிக் கொள்ளலாம்.
- 'ராஜாஜியும் நானும் - க.நா.சு பக்கம்'.
5. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்மஞான மானஸ்ரோவரை எட்டி அணுகக் கற்றுக் கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன?
- 'விமர்சனக்கலை'.
6 . மேட்டுத்தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்வது பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்வதும் ..... பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடலாம்.
- 'பொய்த்தேவு' நாவலில்.
7. குறட்டுக்குக் கீழே வாசல் 'கேட்'டுக்குக் காவல் போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர் பார்த்து வேண்டுபவை போல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள் போல அவை ஆடாமல் அசையாமல் நின்றன.
- 'சர்மாவின் உயில்' நாவலில்.
8. அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனை களை அலைமோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலில் எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன.
- 'சர்மாவின் உயில்'.
9. புயல், பெரும் புயல் அடித்தால் மரம் சாய்ந்துவிடும். நாகரீகம் என்ற புயல் அடித்துப் பல குடும்பங்களை வேரோடு கல்லிக்கொண்டு போய் நகரத்திலே சாய்த்து விட்டது.
- 'சர்மாவின் உயில்'.
10. எல்லாம் மாற வேண்டியதுதானே? காலம் என்கிற ஆற்றிலே விழுந்து உருமாறிப் போவதற்குத்தனே மனிதன் பிறந்திருக்கிறான்?
- 'சர்மாவின் உயில்'.
- மேலும் வரும்.
- அடுத்து ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
க.நா.சுப்ரமண்யம் படைப்புகளிலிருந்து:
1. ஒருதடவை பி.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. சுந்தரம் பிள்ளையிடம் ஈடுபாடுள்ளவர் வையாபுரிப் பிள்ளை. அவர்தான் தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்தை ஊன்றியவர் என்கிற நினைப்பு உண்டு அவருக்கு. இலக்கியத் தரமே இல்லாத நூல் என்பது என் கட்சி. நாடகமாகவோ, கவிதையாகவோ, வெறும் கதை என்கிற அளவில்கூட வெற்றி பெறாத நூல். ஓடாத காளை மாட்டை வாலைக் கடித்து ஓட வைப்பது போலத் தமிழை ஓட வைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை என்று நான் சொன்னபோது அவருக்குக் கோபமே வந்து விட்டது.
- 'வையாபுரிப் பிள்ளை - க.நா.சு பக்கம்'.
2. மனிதச் சிந்தனைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்கு சீல் வைக்கப் பட்ட இருட்டுக் கூடங்களாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் தெரிந்து கொள்வது நல்லதுதானே?
- 'கிருஷ்ணன் நம்பி - க.நா.சு பக்கம்'.
3. இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொறையார் திராட்¨க்ஷயின் புளிப்பு மாறிவிட்டது. திரா¨க்ஷயின் தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து புளிப்பை முழுவதும் இனிப்பாக மாற்றிவிட்டன- மனிதர்களின் மிகவும் கசப்பான நினைவுகள் கூட இனியவையாக மாறிவிடுவது மாதிரி.
- 'ஏ.கே.செட்டியார் - க.நா.சு பக்கம்'.
4. இலக்கியத் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத் தரத்துக்கு வேறு ஆளைத் தேடிக் கொள்ளலாம்.
- 'ராஜாஜியும் நானும் - க.நா.சு பக்கம்'.
5. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்மஞான மானஸ்ரோவரை எட்டி அணுகக் கற்றுக் கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன?
- 'விமர்சனக்கலை'.
6 . மேட்டுத்தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்வது பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்வதும் ..... பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடலாம்.
- 'பொய்த்தேவு' நாவலில்.
7. குறட்டுக்குக் கீழே வாசல் 'கேட்'டுக்குக் காவல் போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர் பார்த்து வேண்டுபவை போல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள் போல அவை ஆடாமல் அசையாமல் நின்றன.
- 'சர்மாவின் உயில்' நாவலில்.
8. அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனை களை அலைமோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலில் எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன.
- 'சர்மாவின் உயில்'.
9. புயல், பெரும் புயல் அடித்தால் மரம் சாய்ந்துவிடும். நாகரீகம் என்ற புயல் அடித்துப் பல குடும்பங்களை வேரோடு கல்லிக்கொண்டு போய் நகரத்திலே சாய்த்து விட்டது.
- 'சர்மாவின் உயில்'.
10. எல்லாம் மாற வேண்டியதுதானே? காலம் என்கிற ஆற்றிலே விழுந்து உருமாறிப் போவதற்குத்தனே மனிதன் பிறந்திருக்கிறான்?
- 'சர்மாவின் உயில்'.
- மேலும் வரும்.
- அடுத்து ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Wednesday, May 25, 2005
உவமைகள்-வர்ணனைகள் 39
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 39
சி.சு.செல்லப்பாவின் படைப்புக்களிலிருந்து:
1. ஊரிலேயே பெரிய மனிதரான அவருக்கு பொதுவாழ்வு கை நகத்தோடே பிறந்த மாதிரி. வளர்கிற நகத்தைத்தான் வெட்டுகிறோமே தவிர அடி நகத்தை பெயர்த்து எடுக்கிறதில்லை. பொதுவாழ்வை அவர் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. வளர்ந்த நகம் மாதிரி கட்சி உறவைத்தான் துண்டித்துக் கொண்டார்.
- 'எதிர்ப்பு' கதையில்.
2. சாதாரணமாக என் தூக்கத்தை தினமும் காலையில் கலைப்பது அல்லது பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது - ரோடு மெயின் குழாய் லைனிலிருந்து ஜலத்தை வீட்டுக்கு உறிஞ்சி இழுத்துக் கொணரும், கீழே உள்ள அந்த 'வாஷர்' முழுக்கத் தேய்ந்த பம்பின் கதறல்தான். ஆனால் அன்று அந்த துரிதகால தாள வாத்ய ஒலிக்கு வெகு முன்னதாகவே கிளம்பின ஒரு இனிமையான குரல் விழிக்கச் செய்தது.
- 'பக்தி'.
3. அத்தான் ஒரு பேச்சுக் களஞ்சியம். அவர் ஒருத்தர் இருக்கிற இடத்தில் ஏற்படும் கலகலப்புக்கு, ஆடிக்காற்றிலே அலைபடும் ஆயிரம் தென்னைகள் உள்ள ஒரு தோப்பில் உண்டாகிற சலசலப்புக்கு ஈடாகாது.கொட்டி அளக்கிறது என்பது அவருக்குப் பொருந்தும். எங்கள் கேள்விக்கு அப்படிப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
- 'மச்சு வீடு'.
4. "நான் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண் நீலா தான் அது. நாம ஊரிலே இல்லாதபோது அவளுக்கென்று வந்திருக்கிறது. பாவம், பல்லாங்குழி பல்லாங்குழியாக உடல் பூராவும் அம்மைத்தழும்பு".
- 'அழகு மயக்கம்'.
5. சிறை ஒரு கோவில் மாதிரி. கடவுள் கோவிலில் இருப்பதாகக் கருதி கும்பிடுபோடப் போகிற பக்தனுக்குத்தான் கோவில். தனக்குள்ளே தெய்வத்தை வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு, தூணிலும் துரும்பிலும் தெய்வத்தைக் காண்பவனுக்கு கோவில் ஒரு அர்த்தமற்ற சின்னம். அதே மாதிரிதான் சிறையும். தேசப்பணிப் பாதையில் சிறைவாசம்தான் மகத்தான சாதனையாகும் என்று நினைப்பவனுக்குத்தான் ஜெயில்.
கண்களைச் சுழற்றி அகல விரித்து மனித ஜாதியை ஊன்றிப் பார்த்து தன் முதுகைக் கொடுத்து அதன் கால்களை உயர்த்த முயற்சிப்பவனுக்கு சிறைவாசம் அர்த்தமற்றது.
- 'மருதநாயகம்'.
6. லௌகிக உலகத்தில் துன்பமும் இன்பமும் மனிதனில் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றி ஓய்ந்து போய், ஒடிந்து விழும் மனதுக்கு கோவிலும் கடவுளும், ஆறுதலும் நம்பிக்கையும் தரும் தூரத்து கலங்கரை விளக்கமாக இருப்பது போல் தான் அசதி தோன்றிவிட்ட உடலுக்கு ஆஸ்பத்திரியும் டாக்டரும்.
- 'கிழவி'.
7. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டெஷனை விட்டுப் புறப்பட்ட ரயில் இருட்டில் வகிடு எடுத்துக்கொண்டு சென்றது. அதே சமயம் இருள் நுரையை அலையடித்து ஒதுக்கிக் கொண்டு நிலவொளி ஆகாசத்தில் பரவ ஆரம்பித்தது. என் மனதிலும் பழைய நினைவுகள் பரவலாயின.
- 'பாத்யதை'.
8. வெகு காலம் ஆகிவிட்டது நான் கதை எழுதி. மூணு நாலு வருஷங்களாய் சூன்ய ஆண்டுகள். அதற்கு முன்னே மட்டும் என்ன? கஜகர்ப்பத்தில் எப்போதாவது ஒன்று பிறக்கும்.
- 'அப்பாவின் ராட்டை'.
9. ஒரு நாள் அஸ்தமன சமயம். நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் சூரியன் மேகு மலைவாய்க்குள் போய்க்கொண்டிருந்தான். அதே சமயம், எதிரியின் கப்பல் மறையும் தருணம் பார்த்து, மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று பூர்ணசந்திரன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
- 'பந்தயம்'.
10.குலுக்கி விட்ட மரக்காலுக்குள் எல்லாம் படிந்து கொள்கிற மாதிரி இந்த மனசுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போகிறது.
- 'ஜீவனாம்சம்' நாவலில்.
- மேலும் சொல்வேன்.
- அடுத்து க.நா.சு வின் படைப்புக்களிலிருந்து.
- வே.சபாநாயகம்.
சி.சு.செல்லப்பாவின் படைப்புக்களிலிருந்து:
1. ஊரிலேயே பெரிய மனிதரான அவருக்கு பொதுவாழ்வு கை நகத்தோடே பிறந்த மாதிரி. வளர்கிற நகத்தைத்தான் வெட்டுகிறோமே தவிர அடி நகத்தை பெயர்த்து எடுக்கிறதில்லை. பொதுவாழ்வை அவர் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. வளர்ந்த நகம் மாதிரி கட்சி உறவைத்தான் துண்டித்துக் கொண்டார்.
- 'எதிர்ப்பு' கதையில்.
2. சாதாரணமாக என் தூக்கத்தை தினமும் காலையில் கலைப்பது அல்லது பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது - ரோடு மெயின் குழாய் லைனிலிருந்து ஜலத்தை வீட்டுக்கு உறிஞ்சி இழுத்துக் கொணரும், கீழே உள்ள அந்த 'வாஷர்' முழுக்கத் தேய்ந்த பம்பின் கதறல்தான். ஆனால் அன்று அந்த துரிதகால தாள வாத்ய ஒலிக்கு வெகு முன்னதாகவே கிளம்பின ஒரு இனிமையான குரல் விழிக்கச் செய்தது.
- 'பக்தி'.
3. அத்தான் ஒரு பேச்சுக் களஞ்சியம். அவர் ஒருத்தர் இருக்கிற இடத்தில் ஏற்படும் கலகலப்புக்கு, ஆடிக்காற்றிலே அலைபடும் ஆயிரம் தென்னைகள் உள்ள ஒரு தோப்பில் உண்டாகிற சலசலப்புக்கு ஈடாகாது.கொட்டி அளக்கிறது என்பது அவருக்குப் பொருந்தும். எங்கள் கேள்விக்கு அப்படிப் பதில் சொல்லிக் கொண்டு வந்தார்.
- 'மச்சு வீடு'.
4. "நான் சொல்ல மறந்து விட்டேன். அந்தப் பெண் நீலா தான் அது. நாம ஊரிலே இல்லாதபோது அவளுக்கென்று வந்திருக்கிறது. பாவம், பல்லாங்குழி பல்லாங்குழியாக உடல் பூராவும் அம்மைத்தழும்பு".
- 'அழகு மயக்கம்'.
5. சிறை ஒரு கோவில் மாதிரி. கடவுள் கோவிலில் இருப்பதாகக் கருதி கும்பிடுபோடப் போகிற பக்தனுக்குத்தான் கோவில். தனக்குள்ளே தெய்வத்தை வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு, தூணிலும் துரும்பிலும் தெய்வத்தைக் காண்பவனுக்கு கோவில் ஒரு அர்த்தமற்ற சின்னம். அதே மாதிரிதான் சிறையும். தேசப்பணிப் பாதையில் சிறைவாசம்தான் மகத்தான சாதனையாகும் என்று நினைப்பவனுக்குத்தான் ஜெயில்.
கண்களைச் சுழற்றி அகல விரித்து மனித ஜாதியை ஊன்றிப் பார்த்து தன் முதுகைக் கொடுத்து அதன் கால்களை உயர்த்த முயற்சிப்பவனுக்கு சிறைவாசம் அர்த்தமற்றது.
- 'மருதநாயகம்'.
6. லௌகிக உலகத்தில் துன்பமும் இன்பமும் மனிதனில் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றி ஓய்ந்து போய், ஒடிந்து விழும் மனதுக்கு கோவிலும் கடவுளும், ஆறுதலும் நம்பிக்கையும் தரும் தூரத்து கலங்கரை விளக்கமாக இருப்பது போல் தான் அசதி தோன்றிவிட்ட உடலுக்கு ஆஸ்பத்திரியும் டாக்டரும்.
- 'கிழவி'.
7. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஸ்டெஷனை விட்டுப் புறப்பட்ட ரயில் இருட்டில் வகிடு எடுத்துக்கொண்டு சென்றது. அதே சமயம் இருள் நுரையை அலையடித்து ஒதுக்கிக் கொண்டு நிலவொளி ஆகாசத்தில் பரவ ஆரம்பித்தது. என் மனதிலும் பழைய நினைவுகள் பரவலாயின.
- 'பாத்யதை'.
8. வெகு காலம் ஆகிவிட்டது நான் கதை எழுதி. மூணு நாலு வருஷங்களாய் சூன்ய ஆண்டுகள். அதற்கு முன்னே மட்டும் என்ன? கஜகர்ப்பத்தில் எப்போதாவது ஒன்று பிறக்கும்.
- 'அப்பாவின் ராட்டை'.
9. ஒரு நாள் அஸ்தமன சமயம். நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கப்பலைப் போல் சூரியன் மேகு மலைவாய்க்குள் போய்க்கொண்டிருந்தான். அதே சமயம், எதிரியின் கப்பல் மறையும் தருணம் பார்த்து, மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும், கொஞ்சம் கொஞ்சமாக ஜலத்துக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்று பூர்ணசந்திரன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
- 'பந்தயம்'.
10.குலுக்கி விட்ட மரக்காலுக்குள் எல்லாம் படிந்து கொள்கிற மாதிரி இந்த மனசுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போகிறது.
- 'ஜீவனாம்சம்' நாவலில்.
- மேலும் சொல்வேன்.
- அடுத்து க.நா.சு வின் படைப்புக்களிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Thursday, April 14, 2005
வருணனைகள் - உவமைகள் - 38
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 38:
இராசேந்திரசோழன்(அஸ்வகோஷ்) படைப்புகளிலிருந்து:
1. பொழுது போகிறது. இருள் வருகிறது. தெருவிளக்கு வெளிச்சம் ஒருக்களித்த கதவு வழியாக ஏதோ துயரச் செய்தியைத் தாங்கி வந்தது மாதிரி செல்வதா வேண்டாமா என்பதுபோல எட்டிப்பார்க்கிறது.
- 'உளைச்சல்' கதையில்.
2. சணல் நெசவுக்குள் அடங்காத பாயின் கோரைகள் துஷ்டப் பிள்ளைகள் போல வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன.
- 'பகல் தூக்கம்'.
3. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக்கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே "நமஸ்காரங்க" என்று
கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார் - விளக்கில்லாமல்தான்.....
- 'பக்க வாத்தியம்'.
4. வருத்தத்துடன் வழி தெரியாமல் தத்தளித்தான். பட்டணத்தில் ஜனசந்தடி அதிகம் என்று சொல்வார்கள்..... இந்தத் தெருவைப் பார்த்தால் திருடன் தெருவாட்டம் தெரிகிறதே......! இந்தத் தெருவில் மந்திரிகள் அல்லவா குடி இருப்பதாகச் சொன்னார்கள்......!
- 'மதறாசும்....மன்னார்சாமியும்.....'.
5. யாரோ ஏழெட்டுப் பேர் குந்தியிருக்கிறார்கள். எல்லாம் துண்டைக் கோவணமாகக் கட்டி, பெரிய சோமனை தோளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கத்திப் ·பேஷன் இதுதான். பார்த்தீங்களா ஆட்களை. எப்படியிருக்கிறார்கள்....கரடு பாய்ந்த முகமும் மீசையும்....கண்களில் ஏதாவது சுத்தமிருக்கிறதா...! கொடூரமாய் ரத்தம் தெறிக்க.....எல்லாம் அவர்கள்தான். பக்கத்தில் ஒருத்தன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, காடா பனியன் போட்டுக் கொண்டு சொட்டை விழுந்த நரைத்த தலையுடன் மெல்லீசாய் வீங்கி மாதிரி. அவன்தான் ஊருக்குக் கணக்கப்பிள்ளை. விஷமம் ஜாஸ்தி. எப்படியிருக்கிறான் பாருங்களேன், யாரை முழுங்கலாம் என்று.
- 'கொஞ்சம் இருட்டுக்குள் வந்து பாருங்கள்'.
6. இளவயசுக்காரி. மாஞ்செவுலு. கொசகொசவென்று மலிவான விலையில் உடம்பைச் சுற்றிய நைலக்ஸ் புடவை. வாயில் ரவிக்கை. ஆ·ப்வாயில். கைக்கு நாலு கண்ணாடி வளையல்கள். சின்ன நெற்றியில் காபி கலர் குங்குமப் பொட்டு. எதிலும் திருப்தி கொள்ளாத கொஞ்சம்
அலைச்சலான கரிய சிறுத்த கண்கள். புருவ மேட்டுக்குக் கீழே எப்போதும் எதையோ விழுங்கி விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும். மனசிலிருப்பதே குறியாய் சில சமயம் செய்கிற காரியமே மறந்துபோய் அதுபாட்டுக்கு எங்காவது லயிக்கும்.
- 'கைக்கிளை'.
7. பர்மாக்கார வீட்டம்மா வயது ஐம்பதைத் தாண்டியவள், ஒன்பது பிள்ளைகள் பெற்றவள் என்றாலும் உறுதி குலையாத கட்டை குட்டையான கனத்த சரீரம். அதற்கேற்ற நல்ல சாரீரமும். வாயைத் திறந்தாளானால் தெருக் கோடிவரை கேட்கும். எங்கே எந்த இடத்தில் சண்டை நடந்தாலும் பாய் வீட்டம்மா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாளா இல்லையா என்பதை காத தூரத்தில் இருந்தாலும் குரலை வைத்தே
சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு வளமான குரல்.
- 'விதிகள்!......விதிகள்!'.
8. கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகத்தில்வாழ முடியாது என்பது வாஸ்தவந்தான். ஆனால் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஒரு அந்தஸ்து வசதி வேண்டியிருக்கிறதே. ஆனால் அந்த அந்தஸ்து தெரியாமல் கடன் கொடுத்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.
- 'கசிவு'.
9. பூவரச மரத்தின்கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போலக் கேட்டது.
- 'தற்செயல்'.
10.என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பு என்பது நன்றாகக் காய்ந்து நெறுநெறுக்கும் சுள்ளிகளையும் சருகுகளையும் போட்டுக் கொளுத்தினால் குப்பென்று தீப்பிடித்து சடசடத்து எரியுமே,திகுதிகுவென எரியும் தீயில் கொதிப்பேறிய திரவம் பாத்திரத்தைக் கடந்து பொங்கி வெளிவந்து பிரவாகமெடுத்து வழியுமே அந்த மாதிரி. அந்த மாதிரி மனநிலையில்தான் எனது படைப்புகள் பிரசவம் கொண்டிருக்கின்றன.
- 'இராசேந்திரசோழன் கதைகள்' பின்னுரையில்.
- மேலும் சொல்வேன்.
- அடுத்து சி.சு.செல்லப்பாவின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
இராசேந்திரசோழன்(அஸ்வகோஷ்) படைப்புகளிலிருந்து:
1. பொழுது போகிறது. இருள் வருகிறது. தெருவிளக்கு வெளிச்சம் ஒருக்களித்த கதவு வழியாக ஏதோ துயரச் செய்தியைத் தாங்கி வந்தது மாதிரி செல்வதா வேண்டாமா என்பதுபோல எட்டிப்பார்க்கிறது.
- 'உளைச்சல்' கதையில்.
2. சணல் நெசவுக்குள் அடங்காத பாயின் கோரைகள் துஷ்டப் பிள்ளைகள் போல வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன.
- 'பகல் தூக்கம்'.
3. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக்கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே "நமஸ்காரங்க" என்று
கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார் - விளக்கில்லாமல்தான்.....
- 'பக்க வாத்தியம்'.
4. வருத்தத்துடன் வழி தெரியாமல் தத்தளித்தான். பட்டணத்தில் ஜனசந்தடி அதிகம் என்று சொல்வார்கள்..... இந்தத் தெருவைப் பார்த்தால் திருடன் தெருவாட்டம் தெரிகிறதே......! இந்தத் தெருவில் மந்திரிகள் அல்லவா குடி இருப்பதாகச் சொன்னார்கள்......!
- 'மதறாசும்....மன்னார்சாமியும்.....'.
5. யாரோ ஏழெட்டுப் பேர் குந்தியிருக்கிறார்கள். எல்லாம் துண்டைக் கோவணமாகக் கட்டி, பெரிய சோமனை தோளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கத்திப் ·பேஷன் இதுதான். பார்த்தீங்களா ஆட்களை. எப்படியிருக்கிறார்கள்....கரடு பாய்ந்த முகமும் மீசையும்....கண்களில் ஏதாவது சுத்தமிருக்கிறதா...! கொடூரமாய் ரத்தம் தெறிக்க.....எல்லாம் அவர்கள்தான். பக்கத்தில் ஒருத்தன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, காடா பனியன் போட்டுக் கொண்டு சொட்டை விழுந்த நரைத்த தலையுடன் மெல்லீசாய் வீங்கி மாதிரி. அவன்தான் ஊருக்குக் கணக்கப்பிள்ளை. விஷமம் ஜாஸ்தி. எப்படியிருக்கிறான் பாருங்களேன், யாரை முழுங்கலாம் என்று.
- 'கொஞ்சம் இருட்டுக்குள் வந்து பாருங்கள்'.
6. இளவயசுக்காரி. மாஞ்செவுலு. கொசகொசவென்று மலிவான விலையில் உடம்பைச் சுற்றிய நைலக்ஸ் புடவை. வாயில் ரவிக்கை. ஆ·ப்வாயில். கைக்கு நாலு கண்ணாடி வளையல்கள். சின்ன நெற்றியில் காபி கலர் குங்குமப் பொட்டு. எதிலும் திருப்தி கொள்ளாத கொஞ்சம்
அலைச்சலான கரிய சிறுத்த கண்கள். புருவ மேட்டுக்குக் கீழே எப்போதும் எதையோ விழுங்கி விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும். மனசிலிருப்பதே குறியாய் சில சமயம் செய்கிற காரியமே மறந்துபோய் அதுபாட்டுக்கு எங்காவது லயிக்கும்.
- 'கைக்கிளை'.
7. பர்மாக்கார வீட்டம்மா வயது ஐம்பதைத் தாண்டியவள், ஒன்பது பிள்ளைகள் பெற்றவள் என்றாலும் உறுதி குலையாத கட்டை குட்டையான கனத்த சரீரம். அதற்கேற்ற நல்ல சாரீரமும். வாயைத் திறந்தாளானால் தெருக் கோடிவரை கேட்கும். எங்கே எந்த இடத்தில் சண்டை நடந்தாலும் பாய் வீட்டம்மா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாளா இல்லையா என்பதை காத தூரத்தில் இருந்தாலும் குரலை வைத்தே
சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு வளமான குரல்.
- 'விதிகள்!......விதிகள்!'.
8. கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகத்தில்வாழ முடியாது என்பது வாஸ்தவந்தான். ஆனால் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஒரு அந்தஸ்து வசதி வேண்டியிருக்கிறதே. ஆனால் அந்த அந்தஸ்து தெரியாமல் கடன் கொடுத்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.
- 'கசிவு'.
9. பூவரச மரத்தின்கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போலக் கேட்டது.
- 'தற்செயல்'.
10.என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பு என்பது நன்றாகக் காய்ந்து நெறுநெறுக்கும் சுள்ளிகளையும் சருகுகளையும் போட்டுக் கொளுத்தினால் குப்பென்று தீப்பிடித்து சடசடத்து எரியுமே,திகுதிகுவென எரியும் தீயில் கொதிப்பேறிய திரவம் பாத்திரத்தைக் கடந்து பொங்கி வெளிவந்து பிரவாகமெடுத்து வழியுமே அந்த மாதிரி. அந்த மாதிரி மனநிலையில்தான் எனது படைப்புகள் பிரசவம் கொண்டிருக்கின்றன.
- 'இராசேந்திரசோழன் கதைகள்' பின்னுரையில்.
- மேலும் சொல்வேன்.
- அடுத்து சி.சு.செல்லப்பாவின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Saturday, March 26, 2005
உவமைகள் வர்ணனைகள் - 37
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 37
பாரதியார் கதைகளிலிருந்து:
1. கந்தர்வ லோகத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
- 'ஞானரதம்'.
2. குழந்தை சந்திரிகைக்கு இப்போது வயது மூன்றுதானாயிற்று. எனினும், அது சிறி தேனும் கொச்சைச் சொற்களும், மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப்புல்லாங்குழலின் ஓசையைப்போன்றது. குழந்தையின் அழகோ வருணிக்குந் தரமன்று; தெய்வீக ரூபம்; வனப்பின் இலக்கியம்.
- 'சந்திரிகையின் கதை'.
3. மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்..........
மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சினேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை, இடிபோல கர்ஜனை செய்வதையொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக் கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார்.
- 'மழை'.
4. வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருகிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களூம் காட்டுகிறான். தாள விஷயத்தில் மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணிமூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைசட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலெ பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக்
காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான்.
- ' புதிய கோணங்கி'.
5. ரவீந்திரநாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற்பங்கு காயாகவும் இருந்தது. அதாவது , முக்காற் பங்கு நரை; பாக்கி நரையில்லை.
- 'குழந்தைக் கதை'.
6. சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம். - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது- தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரச்சினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும்
குதிரையை எப்படியாவது நகர்த்த வேண்டும் மென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர்கள் நின்று அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார்.
- 'சின்னச் சங்கரன் கதை'.
7. தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வைரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்கவிடலாம். இவன் தலையில் நாற்பது பேர் அடங்கிய பெரிய தொட்டிலை
நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகாபாரத புஸ்தகத் தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.
- 'கலியுக கடோற்கசன்'.
8. "கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"
பேசிப் பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லயா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.
- 'காற்று'.
9. குள்ளச்சாமி நெடிய சாமி ஆகிவிட்டார். நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப்போல இருந்தது. குனிந்தால் பிள்ளை யார் போல் இருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது மகாவிஷ்ணுவின் முகத்தைப்போலே தோன்றியது.
- 'சும்மா'.
10. சிறிது நேரத்துக்குள் புயல் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன் நிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாய் என்னருகே வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீயொளியைப் போலே விளங்கிற்று.
- 'கடல்.
- தொடர்வேன்.
- அடுத்து இராஜேந்திரசோழன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
பாரதியார் கதைகளிலிருந்து:
1. கந்தர்வ லோகத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
- 'ஞானரதம்'.
2. குழந்தை சந்திரிகைக்கு இப்போது வயது மூன்றுதானாயிற்று. எனினும், அது சிறி தேனும் கொச்சைச் சொற்களும், மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப்புல்லாங்குழலின் ஓசையைப்போன்றது. குழந்தையின் அழகோ வருணிக்குந் தரமன்று; தெய்வீக ரூபம்; வனப்பின் இலக்கியம்.
- 'சந்திரிகையின் கதை'.
3. மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்..........
மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சினேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை, இடிபோல கர்ஜனை செய்வதையொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக் கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார்.
- 'மழை'.
4. வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருகிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களூம் காட்டுகிறான். தாள விஷயத்தில் மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணிமூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைசட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலெ பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக்
காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான்.
- ' புதிய கோணங்கி'.
5. ரவீந்திரநாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற்பங்கு காயாகவும் இருந்தது. அதாவது , முக்காற் பங்கு நரை; பாக்கி நரையில்லை.
- 'குழந்தைக் கதை'.
6. சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம். - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது- தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரச்சினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும்
குதிரையை எப்படியாவது நகர்த்த வேண்டும் மென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர்கள் நின்று அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார்.
- 'சின்னச் சங்கரன் கதை'.
7. தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வைரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்கவிடலாம். இவன் தலையில் நாற்பது பேர் அடங்கிய பெரிய தொட்டிலை
நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகாபாரத புஸ்தகத் தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.
- 'கலியுக கடோற்கசன்'.
8. "கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"
பேசிப் பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லயா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.
- 'காற்று'.
9. குள்ளச்சாமி நெடிய சாமி ஆகிவிட்டார். நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப்போல இருந்தது. குனிந்தால் பிள்ளை யார் போல் இருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது மகாவிஷ்ணுவின் முகத்தைப்போலே தோன்றியது.
- 'சும்மா'.
10. சிறிது நேரத்துக்குள் புயல் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன் நிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாய் என்னருகே வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீயொளியைப் போலே விளங்கிற்று.
- 'கடல்.
- தொடர்வேன்.
- அடுத்து இராஜேந்திரசோழன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Tuesday, March 01, 2005
உவமைகள்-வர்ணனைகள்-36
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 36
வ.ரா வின் படைப்புகளிலிருந்து:
1. நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும், ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம். இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச் சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள் அடக்கம்.
- 'வாத்தியார் நாணுவய்யர்'.
2. மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா 'ஏறி இறங்கும் திருமேனி'களாய் வாழ வேண்டிஇருப்பதால் உயரமாய் வளர்வதில்லை'. எப்போதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதுக்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே ஒழிய, கனத்தில் அவர்கள் மோசம் போகவில்லை.
அவர்கள் 'கட்டைக் குட்டை'. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.
- 'மைக் குறத்தி'.
3. வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டே இருப்பதனால் (சம்பிரதாயப் பொய். சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போகலாம். ஆனால் இராப்பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக எங்கள் வீட்டில் வேலை செய்து வரும்
அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவே இல்லை?
- 'வேலைக்காரி அம்மாக்கண்ணு'.
4. சின்னப் பையன்களுடைய பாடப் புஸ்தகங்களில் மயில் தோகை குட்டி போடும். ரொக்கப் பணமும் 'பிள்ளைத்தாச்சி போல" வட்டிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். ரொக்க லேவாதேவிப் பணம் மலடுமல்ல; அதற்குக் காய்த்து பழுத்து, அலுத்துப் போகிற காலமும் கிடையாது.
- 'செருப்புக்கு அடி அட்டையா?'.
5. குப்பண்ணாவை நீங்கள் பார்த்தால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று உங்களாலே சொல்ல முடியாது. ரொம்பவும் 'டாப்பு சிறப்பாக' இருப்பார். உயர்ந்த ரகமான துணியைத்தான் அவர் உடுத்துவார். தேகத்தில் சட்டை இராது. தெரு வழியாக அவர் சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொண்டு போகும்போது, அவர் எதையோ பாராயணம் செய்து கொண்டு, அலுவலகத்துக்குக்ப் போவதாகத் தோன்றும். தெருப் பிச்சை எடுப்பவர் குப்பண்ணா என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது.
- 'வாழ்க்கை விநோதங்கள்'.
6. பொம்மையும், பள்ளிக் கூடமும் தான் தெரியும். பாடப்புத்தகம் தெரியும்; சொல்லிக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யத் தெரியும்; வெளித் தோற்றதையே கண்டு மயங்குகிற வயது. பிறந்த சத்தத்துக்கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த் தூக்கமில்லாத வயது;
கிழிந்த மயிலிறகு குட்டி போடும் வயது. இந்த வயதிலே சுந்தரி விதவை ஆனாள். விதவை என்ற வார்த்தைக்கு இந்தியாவிலே கொடுக்கிற
முழு அர்த்தமும் அவளுக்குத் தெரியுமோ?
- 'சுந்தரி' நாவலில்.
7. கிருருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே விநோதமாய் இருக்கிறது. யாரை அவர் கேலி செய்கிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். நான் சிரிக்க மாட்டேன் என்பது போல, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டிருப்பவர்களையும், கோட்டை வாசல் திறந்தது போல வாயைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்கும் படியாகக் கிருஷ்ணன் செய்து விடுகிறார்.
- 'தமிழ்ப் பெரியார்கள்' - என்.எஸ்.கிருஷ்ணன்.
8. பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல; அமர்ந்த சிரிப்புமல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல; புன்னகையைப் புஸ்தகத்திலே பாடிக்கலாம்; ஆனால், பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது; சங்கீதச் சிரிப்பைத்தான் காண முடியும்.
- 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து.
9. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல; கத்தரிக் கோல் பட்ட 'தருக்கு' மீசை அல்ல. தானாக வளர்ந்து பக்குவப் பட்டு., அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை, எழுதாத நேரங்களில் எல்லாம் அனேகமாக மீசையில் இருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு 'டிரில்' பழகிக் கொடுப்பது
போலத் தோன்றும்.
- 'மகாகவி பாரதியார்'.
10. சுமங்கிலியைக் கண்டிக்க ஒரு மாமியாரும், ஒரு மாமனரும் தான். ஆனால் பால்ய விதவைக்கோ உலகம் முழுதும் மாமனாரும், மாமியாரும்.
-'விஜயம்' நாவலில்.
- தொடர்வேன்.
- அடுத்து பாரதியார் கதைகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
வ.ரா வின் படைப்புகளிலிருந்து:
1. நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும், ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம். இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச் சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள் அடக்கம்.
- 'வாத்தியார் நாணுவய்யர்'.
2. மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா 'ஏறி இறங்கும் திருமேனி'களாய் வாழ வேண்டிஇருப்பதால் உயரமாய் வளர்வதில்லை'. எப்போதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதுக்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே ஒழிய, கனத்தில் அவர்கள் மோசம் போகவில்லை.
அவர்கள் 'கட்டைக் குட்டை'. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.
- 'மைக் குறத்தி'.
3. வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டே இருப்பதனால் (சம்பிரதாயப் பொய். சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போகலாம். ஆனால் இராப்பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக எங்கள் வீட்டில் வேலை செய்து வரும்
அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவே இல்லை?
- 'வேலைக்காரி அம்மாக்கண்ணு'.
4. சின்னப் பையன்களுடைய பாடப் புஸ்தகங்களில் மயில் தோகை குட்டி போடும். ரொக்கப் பணமும் 'பிள்ளைத்தாச்சி போல" வட்டிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். ரொக்க லேவாதேவிப் பணம் மலடுமல்ல; அதற்குக் காய்த்து பழுத்து, அலுத்துப் போகிற காலமும் கிடையாது.
- 'செருப்புக்கு அடி அட்டையா?'.
5. குப்பண்ணாவை நீங்கள் பார்த்தால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று உங்களாலே சொல்ல முடியாது. ரொம்பவும் 'டாப்பு சிறப்பாக' இருப்பார். உயர்ந்த ரகமான துணியைத்தான் அவர் உடுத்துவார். தேகத்தில் சட்டை இராது. தெரு வழியாக அவர் சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொண்டு போகும்போது, அவர் எதையோ பாராயணம் செய்து கொண்டு, அலுவலகத்துக்குக்ப் போவதாகத் தோன்றும். தெருப் பிச்சை எடுப்பவர் குப்பண்ணா என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது.
- 'வாழ்க்கை விநோதங்கள்'.
6. பொம்மையும், பள்ளிக் கூடமும் தான் தெரியும். பாடப்புத்தகம் தெரியும்; சொல்லிக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யத் தெரியும்; வெளித் தோற்றதையே கண்டு மயங்குகிற வயது. பிறந்த சத்தத்துக்கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த் தூக்கமில்லாத வயது;
கிழிந்த மயிலிறகு குட்டி போடும் வயது. இந்த வயதிலே சுந்தரி விதவை ஆனாள். விதவை என்ற வார்த்தைக்கு இந்தியாவிலே கொடுக்கிற
முழு அர்த்தமும் அவளுக்குத் தெரியுமோ?
- 'சுந்தரி' நாவலில்.
7. கிருருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே விநோதமாய் இருக்கிறது. யாரை அவர் கேலி செய்கிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். நான் சிரிக்க மாட்டேன் என்பது போல, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டிருப்பவர்களையும், கோட்டை வாசல் திறந்தது போல வாயைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்கும் படியாகக் கிருஷ்ணன் செய்து விடுகிறார்.
- 'தமிழ்ப் பெரியார்கள்' - என்.எஸ்.கிருஷ்ணன்.
8. பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல; அமர்ந்த சிரிப்புமல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல; புன்னகையைப் புஸ்தகத்திலே பாடிக்கலாம்; ஆனால், பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது; சங்கீதச் சிரிப்பைத்தான் காண முடியும்.
- 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து.
9. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல; கத்தரிக் கோல் பட்ட 'தருக்கு' மீசை அல்ல. தானாக வளர்ந்து பக்குவப் பட்டு., அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை, எழுதாத நேரங்களில் எல்லாம் அனேகமாக மீசையில் இருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு 'டிரில்' பழகிக் கொடுப்பது
போலத் தோன்றும்.
- 'மகாகவி பாரதியார்'.
10. சுமங்கிலியைக் கண்டிக்க ஒரு மாமியாரும், ஒரு மாமனரும் தான். ஆனால் பால்ய விதவைக்கோ உலகம் முழுதும் மாமனாரும், மாமியாரும்.
-'விஜயம்' நாவலில்.
- தொடர்வேன்.
- அடுத்து பாரதியார் கதைகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Friday, February 18, 2005
உவமைகள் வர்ணனைகள் - 35
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 35:
ராஜம் க்¢ருஷ்ணன் படைப்புகளிலிருந்து:
1. அவளுடைய பசிகளுக்கு மானம், மரியாதை, நேர்மை, நாணயம் என்ற ஒன்றன் மேல் ஒன்றான உறைகள் உண்டு. வெங்காயத் தோலிகளைப் போல் ஒன்றன்மேல் ஒன்றாக உறைகளைப் போட்டுப் பச்சையான பசிகள் என்ற குருத்துக்களை மூடி வைத்துக் கொள்ளவேண்டும் என்று அவளுடைய குஞ்சுகளுக்குக் கற்பிக்கப் போராடுகிறாள்.
- 'பூந்தோட்டமும் குடிசைகளும்' குறுநாவலில்.
2. கண்கள் எங்கோ பாதாளத்தில் கிடக்கின்றன. குச்சி குச்சியாக, நரைத்து ஒடிந்து சிலும்பிய கூந்தல் - சகிக்காத இரட்டைப் பின்னல் - பிழிந்த எலுமிச்சை மூடி போல ரத்தம் சப்பிய முகத்தில் மூக்குத் தொளையிலும், காதுத் தொளையிலும் ஈர்க்குத் துண்டுகள் நீட்டிக்
கொண்டிருகின்றன. எலும்பு முட்டிய கழுத்தில் தொள தொளப்பான ஆஸ்பத்திரிச் சட்டைக்கு மேல் பிசுக்கேறிக் கறுத்த தாலிச் சரடு.
- 'பவுடர்' குறுநாவலில்.
3. அவளைப் பார்த்ததும் திகைத்தாள் லட்சுமி. பிரம்மதேவன் மனம் போனபடி கை மண்ணை உருட்டி அப்பி, ஒரு நவீனபாணி சிற்பம் உருவாக்கினாற் போல கரணை கரணையாக, கோர்வை இல்லாத அவலங்கள். இரட்டை மண்டையில் நரையில்லை; ஆனால் மண்டை தெரியும் கூந்தல். நெற்றியில் பெரிதாக கருஞ்சிவப்பு ஒட்டுப் பொட்டு. இந்தக் கருப்பு முகத்துக்கு இவ்வளவுதான் அழகு செய்ய முடியும் என்றது வெள்ளைக்கல் தோடு; பேசரி. கழுத்தில் பருமனாக விழித்துப் பார்க்கும் தாலி........... இவளைக் கல்யாணம் செய்து கொண்டவன் யாரோ!
- 'நேத்திர தரிசனம்' கதையில்.
4. ஒரு பாட்டம் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது. தாயின் முகம் இறுகிப்போகிறது. விக்கித்துப் போய் சொல் எழும்பாமல், பிடித்து வைத்த மண் குன்றுபோல் உட்கார்ந்திருக்கிறாள். வளையங்கள், சங்கிலி வளையங்கள்....ஒன்றுக்கொன்று மாட்டிக் கொண்டு திருப்ப முடியாமல் கழுத்தைப் பிணிக்கின்றன. திரும்ப முடியாது; திரும்பிப் பார்க்கவும் மறந்து போகிறது. இந்தச் சங்கிலிக் கணுக்களை யார்,
எப்போது துண்டித்து......... தாயின் தலை துவண்டு சாய்கிறது.
- 'கண்ணுக்குத் தெரியாத சங்கிலிக் கணுக்கள்'.
5. இந்த நெருக்கங்களில் டீச்சருக்கு ஒரே பசுமையாக இருந்தது அந்த மாமரம்தான். அது யார் எப்படிப் போனாலும் பூத்தது. தை, மாசி வந்து விட்டால் பூரித்துப் புது மணப்பெண் கோலம் கொள்ளும். பழைய ஒல்லிக் குமரியா அது? இப்போது கிளை களை நான்கு திசையிலும் பரப்பி, பின்புறத்து மாட்டுக் கொட்டகையிலும் ஆக்கிரமித்திருந்தது. அது பிஞ்சுகள் விட்டு, காய்த்து, கனக்கக் கனக்க நகைகள் குலுங்க மஞ்சள் பூச்சுடன் திகழும் பேரிளம் பெண்போல் காட்சி அளிக்கும் காலத்தில் பள்ளி மூடி விடுவார்கள்.
- 'டீச்சரும் மாமரமும்'.
6. ஈர்க்கு மலர்ந்தாற் போன்று,அது வயசுக்கு வந்துவிட்டது. வயசை யார் கண்டார்கள்? மழை கொட்டிய நாள் ஒன்றில் அது பிறந்ததுதான் நினைவு. பூ மலர்ந்து விட்டது. மூத்தார் மக்களும் ஓரகத்தியும் மைக்கு செட்டு வைத்து, பந்தல் சோடித்து, குறையில்லாமல் கொண்டாடினார்கள்.
- 'பக்தி'.
7. வாழ்க்கையின் இடிபாடுகளில் அவலாய் நசுங்கினாற்போன்ற உடல். வெயிலில் காய்ந்து கருகிய முகம். ஏதேதோ பொன்னாபரணக் கனவுகளுடன் வளர்த்து விடப்பட்ட காதுகள் வீண் வீண் என்று வயோதிகத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு கிழிந்து தொங்குகின்றன.
- 'அவல்காரி'.
8. மனித இதயங்களின் ஒட்டுறவின் தேனைச் சுவைத்த அவள் இப்போது, பொருள் மதிப்பின் உறவுகளில் கசப்பைச் சுவைக்க வேண்டியிருக்கிறது.
- 'தலைமுறைச் சங்கிலிகள்'.
9. ஆனால்.......கட்டிலில் படுத்திருக்கும் இந்தக் கணவன்...... மலையாக ஒரு பாம்பு கழுத்தில் ஆரமாக வளைந்தாற்போல் இருக்கிறது. இவளறியாமலே அது கழுத்துக்கு வந்திருக்கிறது. அது மலைப்பாம்பாகப் பருத்துக் கனத்து இவள் கழுத்தை நெரிக்கு
முன்.........
- 'ஆரங்கள்'.
10. 'நாட்டுப்புறக்கலை' அரங்கேறுகிறது. கறுத்த முகங்களில் அடர்ந்த கறுப்புப் புருவங்களும் கண்களும் செயற்கையாய் மிகைப் படுத்தப்பட்ட பின்னணியில், பவுடர் பூச்சுக்களில் ஜிகினாத் தூள்கள் பளிச்சிடுகின்றன. உதடுகளும் கன்னங்- களும் பளீர் ரோஸ் சிவப்பு. மார்பகங்களில் மட்டும் ஜிகினாத் தாமரைகள் ஒட்டி 'மானம்' மறைக்க, இடையில் அதே ஜிகினாச் சல்லடம் விளங்க முப்பத்தைந்துக்குக் குறையாத நான்கு உடல்களில் வயிற்றுச் சதைகள் குலுங்க, கரகமென்ற பெயரில் தலைகளில் ஏறிய வண்ணப் பிளாஸ்டிக் ஜிகினா அலங்காரங்கள் சரிந்தும் சாய்ந்தும் ரசிகர்களை மகிழ்விக்க, 'நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி' தொடங்கி விட்டது.
- 'விழிப்புணர்வு'.
- மேலும் வரும்.
- அடுத்து வ.ரா படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
ராஜம் க்¢ருஷ்ணன் படைப்புகளிலிருந்து:
1. அவளுடைய பசிகளுக்கு மானம், மரியாதை, நேர்மை, நாணயம் என்ற ஒன்றன் மேல் ஒன்றான உறைகள் உண்டு. வெங்காயத் தோலிகளைப் போல் ஒன்றன்மேல் ஒன்றாக உறைகளைப் போட்டுப் பச்சையான பசிகள் என்ற குருத்துக்களை மூடி வைத்துக் கொள்ளவேண்டும் என்று அவளுடைய குஞ்சுகளுக்குக் கற்பிக்கப் போராடுகிறாள்.
- 'பூந்தோட்டமும் குடிசைகளும்' குறுநாவலில்.
2. கண்கள் எங்கோ பாதாளத்தில் கிடக்கின்றன. குச்சி குச்சியாக, நரைத்து ஒடிந்து சிலும்பிய கூந்தல் - சகிக்காத இரட்டைப் பின்னல் - பிழிந்த எலுமிச்சை மூடி போல ரத்தம் சப்பிய முகத்தில் மூக்குத் தொளையிலும், காதுத் தொளையிலும் ஈர்க்குத் துண்டுகள் நீட்டிக்
கொண்டிருகின்றன. எலும்பு முட்டிய கழுத்தில் தொள தொளப்பான ஆஸ்பத்திரிச் சட்டைக்கு மேல் பிசுக்கேறிக் கறுத்த தாலிச் சரடு.
- 'பவுடர்' குறுநாவலில்.
3. அவளைப் பார்த்ததும் திகைத்தாள் லட்சுமி. பிரம்மதேவன் மனம் போனபடி கை மண்ணை உருட்டி அப்பி, ஒரு நவீனபாணி சிற்பம் உருவாக்கினாற் போல கரணை கரணையாக, கோர்வை இல்லாத அவலங்கள். இரட்டை மண்டையில் நரையில்லை; ஆனால் மண்டை தெரியும் கூந்தல். நெற்றியில் பெரிதாக கருஞ்சிவப்பு ஒட்டுப் பொட்டு. இந்தக் கருப்பு முகத்துக்கு இவ்வளவுதான் அழகு செய்ய முடியும் என்றது வெள்ளைக்கல் தோடு; பேசரி. கழுத்தில் பருமனாக விழித்துப் பார்க்கும் தாலி........... இவளைக் கல்யாணம் செய்து கொண்டவன் யாரோ!
- 'நேத்திர தரிசனம்' கதையில்.
4. ஒரு பாட்டம் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது. தாயின் முகம் இறுகிப்போகிறது. விக்கித்துப் போய் சொல் எழும்பாமல், பிடித்து வைத்த மண் குன்றுபோல் உட்கார்ந்திருக்கிறாள். வளையங்கள், சங்கிலி வளையங்கள்....ஒன்றுக்கொன்று மாட்டிக் கொண்டு திருப்ப முடியாமல் கழுத்தைப் பிணிக்கின்றன. திரும்ப முடியாது; திரும்பிப் பார்க்கவும் மறந்து போகிறது. இந்தச் சங்கிலிக் கணுக்களை யார்,
எப்போது துண்டித்து......... தாயின் தலை துவண்டு சாய்கிறது.
- 'கண்ணுக்குத் தெரியாத சங்கிலிக் கணுக்கள்'.
5. இந்த நெருக்கங்களில் டீச்சருக்கு ஒரே பசுமையாக இருந்தது அந்த மாமரம்தான். அது யார் எப்படிப் போனாலும் பூத்தது. தை, மாசி வந்து விட்டால் பூரித்துப் புது மணப்பெண் கோலம் கொள்ளும். பழைய ஒல்லிக் குமரியா அது? இப்போது கிளை களை நான்கு திசையிலும் பரப்பி, பின்புறத்து மாட்டுக் கொட்டகையிலும் ஆக்கிரமித்திருந்தது. அது பிஞ்சுகள் விட்டு, காய்த்து, கனக்கக் கனக்க நகைகள் குலுங்க மஞ்சள் பூச்சுடன் திகழும் பேரிளம் பெண்போல் காட்சி அளிக்கும் காலத்தில் பள்ளி மூடி விடுவார்கள்.
- 'டீச்சரும் மாமரமும்'.
6. ஈர்க்கு மலர்ந்தாற் போன்று,அது வயசுக்கு வந்துவிட்டது. வயசை யார் கண்டார்கள்? மழை கொட்டிய நாள் ஒன்றில் அது பிறந்ததுதான் நினைவு. பூ மலர்ந்து விட்டது. மூத்தார் மக்களும் ஓரகத்தியும் மைக்கு செட்டு வைத்து, பந்தல் சோடித்து, குறையில்லாமல் கொண்டாடினார்கள்.
- 'பக்தி'.
7. வாழ்க்கையின் இடிபாடுகளில் அவலாய் நசுங்கினாற்போன்ற உடல். வெயிலில் காய்ந்து கருகிய முகம். ஏதேதோ பொன்னாபரணக் கனவுகளுடன் வளர்த்து விடப்பட்ட காதுகள் வீண் வீண் என்று வயோதிகத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு கிழிந்து தொங்குகின்றன.
- 'அவல்காரி'.
8. மனித இதயங்களின் ஒட்டுறவின் தேனைச் சுவைத்த அவள் இப்போது, பொருள் மதிப்பின் உறவுகளில் கசப்பைச் சுவைக்க வேண்டியிருக்கிறது.
- 'தலைமுறைச் சங்கிலிகள்'.
9. ஆனால்.......கட்டிலில் படுத்திருக்கும் இந்தக் கணவன்...... மலையாக ஒரு பாம்பு கழுத்தில் ஆரமாக வளைந்தாற்போல் இருக்கிறது. இவளறியாமலே அது கழுத்துக்கு வந்திருக்கிறது. அது மலைப்பாம்பாகப் பருத்துக் கனத்து இவள் கழுத்தை நெரிக்கு
முன்.........
- 'ஆரங்கள்'.
10. 'நாட்டுப்புறக்கலை' அரங்கேறுகிறது. கறுத்த முகங்களில் அடர்ந்த கறுப்புப் புருவங்களும் கண்களும் செயற்கையாய் மிகைப் படுத்தப்பட்ட பின்னணியில், பவுடர் பூச்சுக்களில் ஜிகினாத் தூள்கள் பளிச்சிடுகின்றன. உதடுகளும் கன்னங்- களும் பளீர் ரோஸ் சிவப்பு. மார்பகங்களில் மட்டும் ஜிகினாத் தாமரைகள் ஒட்டி 'மானம்' மறைக்க, இடையில் அதே ஜிகினாச் சல்லடம் விளங்க முப்பத்தைந்துக்குக் குறையாத நான்கு உடல்களில் வயிற்றுச் சதைகள் குலுங்க, கரகமென்ற பெயரில் தலைகளில் ஏறிய வண்ணப் பிளாஸ்டிக் ஜிகினா அலங்காரங்கள் சரிந்தும் சாய்ந்தும் ரசிகர்களை மகிழ்விக்க, 'நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி' தொடங்கி விட்டது.
- 'விழிப்புணர்வு'.
- மேலும் வரும்.
- அடுத்து வ.ரா படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Monday, January 24, 2005
உவமைகள் வருணனைகள் - 34
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள்: 34 : எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து:
1. முப்பத்திரண்டு குணங்களில் இரண்டு குணங்கள் தவிர மற்றவையெல்லாம் பிள்ளையிடத்தில் இருக்கின்றன என்பார்களே - அதாவது, தனக்காகவும் தெரியாது, ஒருத்தர் சொன்னலும் கேட்கமாட்டான் என்று - அது துரைச்சாவுக்குத்தான் பொருத்தமானது.
- 'புது மாட்டுப் பெண்' நாவலில்.
2. அவருடைய சம்சாரம் என்னவோ ரொம்பக் கட்டுப் பெட்டி. நிரக்ஷரகுக்ஷ¢. சடகோப அய்யங்காரே குடுமி வைத்துக் கொண்டிருக்கிற மனுஷர். குடுமி ஒரு பாபமும் பண்ணவில்லை. ஆனாலும் குடுமி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இம்மாதிரி முற்போக்கான விஷயங்களை ஆதரிப்பது அசம்பாவிதம் போல் ஏதோ ஒரு உணர்ச்சி நமக்குத் தட்டுகிறது. கிராப்புக்குத்தான் அவை பொருத்தமாக இருக்கின்றன.
- 'பத்மநாபன்' கதையில்.
3. சுகுமாரி என்றது எங்க வீட்டுக்காரி. சுகுமாரி என்ற பெயரைச் சுருக்கி 'சுக்கு' என்று நான் அவளைக் கூப்பிடுகிறது. பேருக் கேத்தாப்போல் அவள் கொஞ்சம் காரமாகவே இருப்பாள். அவள் வீட்டிற்கு வந்தது முதல் அவள் சொல்லுகிற பேச்சை நான் கேட்கிறது என்கிறதே தவிர நான் சொல்லுவதை அவள் கேட்கிறது என்பது என்னவோ கிடையாது.
- 'மூக்குத்திருகு'.
4. அந்தக் கணவனை கல்யாணத்துக்கு முன் அவள் முன்பின் அறிந்தவளல்ல. தற்கால கல்யாணங்களைப் போல் அவள் தகப்பனார் இரவாய்ப் பகலாய் ரெயில் பிரயாணம் செய்து, தந்தியும், தபாலுமாய்ப் பறக்க வைத்து, காசி முதல் ராமேஸ்வரம் வரையில் சல்லடை போட்டுச் சலித்து, அலுத்துப்போய்க் கடைசியாய்ப் பிடித்துக் கொண்டு வந்த சரக்கு அந்தப் புருஷன். கல்யாண காலத்தில் கோணியில் போட்டுத் தைக்கப் பட்டிருக்கும் சரக்கு போலவே இருந்தான். அவிழ்த்துப் பார்த்தால் 'ரேஷன்' அரிசி மாதிரி ஆய்விட்டாலும் ஆய்விடலாம். இந்த ரீதியில் ருக்மணிக்குச் சாரங்கபாணி புருஷன் ஆனான்.
- 'அங்குசம்'.
5. மாமியார் ரகத்தில் எத்தனையோ விதம். பிள்ளைக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் சண்டை மூட்டிவிட்டுப் பிள்ளை சம்சாரத்தை அடிக்கும்போது "அடே அப்பா கையால் அடிக்காதேடா! பெண் பாவம் பொல்லாது. பெண்ணைக் கைதீண்டி அடிக்கக் கூடாதுடா, ஒரு கட்டையாவது எடுத்துக் கொள்ளுடா!" என்று சொல்லுகிற மாமியார்களும் இருக்கிறார்கள். இன்னும் இம்மாதிரியே படிப்படியாய் எத்தனையோ ரகங்கள்.
பஞ்சாமியின் தாயார் இதிலொன்றிலும் சேர்ந்தவளல்ல.
- 'அம்மாவுக்கு ஜுரம்'.
6. பல் கட்டிக் கொண்டவர்கள் முகத்திலேயே ஒரு களை உண்டு. கொஞ்சம் அசட்டுக் களையானாலும் பரவாயில்லை. கடவுள் கொடுத்த பற்களைவிட இவைகள் நன்றாய்த் தான் இருக்கின்றன. இதனாலேயே கடவுள் அவ்வளவு வேலைக்காரர் இல்லை என்று தெரிகிறது.
- 'ருக்மணிக்கு வயிற்றிலே பல்'.
7. அவளுக்கு இப்போது வயது நாற்பத்தைந்து ஆயிற்று. அவள் பருமனும் மூஞ்சியின் கோரமும், ரிக்ஷாவில் உட்கார வேண்டுமானால் ரிக்ஷா போதுகிறதில்லை. ஒவ்வொரு கையும் ஆனை தும்பிக்கை மாதிரி இருக்கிறது. தலை உடம்போடு இறுகிப்போய்க் கழுத்தே இல்லை. இதில் குள்ளம் வேறு.
- 'புருஷர்களை நம்பக் கூடாது'.
8. எட்டு நாய்கள், ஒன்பது ஓநாய்கள், இருபத்தைந்து குள்ள நரிகள், மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், ஐம்பது குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரே சமயத்தில் 'பீபில்ஸ் பார்க்கில்' ஊளையிட ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது நம் வீடு. காரணம் காலையில் மணி ஏழாகியும் பால்காரன் இன்னும் வரவில்லை.
- 'பால்காரன்'.
9. விடாமுயற்சிக்குப் பகீரதனை உதாரணமாகச் சொல்லுவார்கள். பிச்சைக்காரர்களையும் சொல்லலாம். பிசைக்கு வந்தவன் பிச்சை வாங்காமல் போனால் அவன் அந்தத் தொழிலுக்கே புதியவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த வேலைக்கே லாயக்கில்லாதவனாக இருக்கவேண்டும். பிச்சைக்காரனை வீட்டை விட்டு அனுப்புவதற்கு ஒரே வழிதான் உண்டு; அதாவது பிசை போட்டு அனுப்பிவிடுவது. பிச்சை போடாமல் அவனை அனுப்பிவிடுவதற்கு எவ்வளவோ தந்திரங்கள் கற்றிருக்கவேண்டும். உருட்டல், மிரட்டல், பயமுறுத்தல் இவற்றால் ஆகிற காரியமில்லை.
- 'பிச்சைக்காரர்கள்.
10.ஜி.வி.டேவ் என்பவர் திவான்பகதூர் கருடாச்சாரியருடைய அருமைப் புதல்வன். ஆதியில் அவருக்கு வாசுதேவன் என்று நாமகரணம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளைக்காரர் நம்மை ஆளவந்த பிறகு இந்தியர்கள் என்று தெரியாவண்ணம் வெளித் தோற்றத்தை மாற்றிக் கொள்வதோடு நம்மவர்களுடைய ஆசை நிற்கவில்லை. பேரையும் மாற்றிப் பெருமை அடைவதில் நமக்கு உற்சாகம் ஏற்பட்டது. அந்த மோகத்திற்கு இணங்க வாசுதேவனுடைய பெயர் முதலில் உடல் குறுகி வி.தேவ் என்றாயிற்று. வெள்ளைக்காரப் பெயராய்த் தொனிப்பது மேலும் விசேஷம் என்று 'த' காரம் 'ட' காரமாய் மாறி வி.டேவ் என்றாயிற்று. ஜி என்பது அவன் தகப்பனார் கருடச்சாரியர் பெயரைக் குறிப்பது. இவ்வாறு, வாசுதேவன் ஜி.வி.டேவ் என்று பெருமையையும் ஆத்ம திருப்தியையும் விளைவிக்கும்படியான பெயயருடன் விளங்கி வந்தான்.
- 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் டேவ்'.
- தொடர்வேன்.
- அடுத்து ராஜம்கிருஷ்ணன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
1. முப்பத்திரண்டு குணங்களில் இரண்டு குணங்கள் தவிர மற்றவையெல்லாம் பிள்ளையிடத்தில் இருக்கின்றன என்பார்களே - அதாவது, தனக்காகவும் தெரியாது, ஒருத்தர் சொன்னலும் கேட்கமாட்டான் என்று - அது துரைச்சாவுக்குத்தான் பொருத்தமானது.
- 'புது மாட்டுப் பெண்' நாவலில்.
2. அவருடைய சம்சாரம் என்னவோ ரொம்பக் கட்டுப் பெட்டி. நிரக்ஷரகுக்ஷ¢. சடகோப அய்யங்காரே குடுமி வைத்துக் கொண்டிருக்கிற மனுஷர். குடுமி ஒரு பாபமும் பண்ணவில்லை. ஆனாலும் குடுமி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இம்மாதிரி முற்போக்கான விஷயங்களை ஆதரிப்பது அசம்பாவிதம் போல் ஏதோ ஒரு உணர்ச்சி நமக்குத் தட்டுகிறது. கிராப்புக்குத்தான் அவை பொருத்தமாக இருக்கின்றன.
- 'பத்மநாபன்' கதையில்.
3. சுகுமாரி என்றது எங்க வீட்டுக்காரி. சுகுமாரி என்ற பெயரைச் சுருக்கி 'சுக்கு' என்று நான் அவளைக் கூப்பிடுகிறது. பேருக் கேத்தாப்போல் அவள் கொஞ்சம் காரமாகவே இருப்பாள். அவள் வீட்டிற்கு வந்தது முதல் அவள் சொல்லுகிற பேச்சை நான் கேட்கிறது என்கிறதே தவிர நான் சொல்லுவதை அவள் கேட்கிறது என்பது என்னவோ கிடையாது.
- 'மூக்குத்திருகு'.
4. அந்தக் கணவனை கல்யாணத்துக்கு முன் அவள் முன்பின் அறிந்தவளல்ல. தற்கால கல்யாணங்களைப் போல் அவள் தகப்பனார் இரவாய்ப் பகலாய் ரெயில் பிரயாணம் செய்து, தந்தியும், தபாலுமாய்ப் பறக்க வைத்து, காசி முதல் ராமேஸ்வரம் வரையில் சல்லடை போட்டுச் சலித்து, அலுத்துப்போய்க் கடைசியாய்ப் பிடித்துக் கொண்டு வந்த சரக்கு அந்தப் புருஷன். கல்யாண காலத்தில் கோணியில் போட்டுத் தைக்கப் பட்டிருக்கும் சரக்கு போலவே இருந்தான். அவிழ்த்துப் பார்த்தால் 'ரேஷன்' அரிசி மாதிரி ஆய்விட்டாலும் ஆய்விடலாம். இந்த ரீதியில் ருக்மணிக்குச் சாரங்கபாணி புருஷன் ஆனான்.
- 'அங்குசம்'.
5. மாமியார் ரகத்தில் எத்தனையோ விதம். பிள்ளைக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் சண்டை மூட்டிவிட்டுப் பிள்ளை சம்சாரத்தை அடிக்கும்போது "அடே அப்பா கையால் அடிக்காதேடா! பெண் பாவம் பொல்லாது. பெண்ணைக் கைதீண்டி அடிக்கக் கூடாதுடா, ஒரு கட்டையாவது எடுத்துக் கொள்ளுடா!" என்று சொல்லுகிற மாமியார்களும் இருக்கிறார்கள். இன்னும் இம்மாதிரியே படிப்படியாய் எத்தனையோ ரகங்கள்.
பஞ்சாமியின் தாயார் இதிலொன்றிலும் சேர்ந்தவளல்ல.
- 'அம்மாவுக்கு ஜுரம்'.
6. பல் கட்டிக் கொண்டவர்கள் முகத்திலேயே ஒரு களை உண்டு. கொஞ்சம் அசட்டுக் களையானாலும் பரவாயில்லை. கடவுள் கொடுத்த பற்களைவிட இவைகள் நன்றாய்த் தான் இருக்கின்றன. இதனாலேயே கடவுள் அவ்வளவு வேலைக்காரர் இல்லை என்று தெரிகிறது.
- 'ருக்மணிக்கு வயிற்றிலே பல்'.
7. அவளுக்கு இப்போது வயது நாற்பத்தைந்து ஆயிற்று. அவள் பருமனும் மூஞ்சியின் கோரமும், ரிக்ஷாவில் உட்கார வேண்டுமானால் ரிக்ஷா போதுகிறதில்லை. ஒவ்வொரு கையும் ஆனை தும்பிக்கை மாதிரி இருக்கிறது. தலை உடம்போடு இறுகிப்போய்க் கழுத்தே இல்லை. இதில் குள்ளம் வேறு.
- 'புருஷர்களை நம்பக் கூடாது'.
8. எட்டு நாய்கள், ஒன்பது ஓநாய்கள், இருபத்தைந்து குள்ள நரிகள், மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், ஐம்பது குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரே சமயத்தில் 'பீபில்ஸ் பார்க்கில்' ஊளையிட ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது நம் வீடு. காரணம் காலையில் மணி ஏழாகியும் பால்காரன் இன்னும் வரவில்லை.
- 'பால்காரன்'.
9. விடாமுயற்சிக்குப் பகீரதனை உதாரணமாகச் சொல்லுவார்கள். பிச்சைக்காரர்களையும் சொல்லலாம். பிசைக்கு வந்தவன் பிச்சை வாங்காமல் போனால் அவன் அந்தத் தொழிலுக்கே புதியவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த வேலைக்கே லாயக்கில்லாதவனாக இருக்கவேண்டும். பிச்சைக்காரனை வீட்டை விட்டு அனுப்புவதற்கு ஒரே வழிதான் உண்டு; அதாவது பிசை போட்டு அனுப்பிவிடுவது. பிச்சை போடாமல் அவனை அனுப்பிவிடுவதற்கு எவ்வளவோ தந்திரங்கள் கற்றிருக்கவேண்டும். உருட்டல், மிரட்டல், பயமுறுத்தல் இவற்றால் ஆகிற காரியமில்லை.
- 'பிச்சைக்காரர்கள்.
10.ஜி.வி.டேவ் என்பவர் திவான்பகதூர் கருடாச்சாரியருடைய அருமைப் புதல்வன். ஆதியில் அவருக்கு வாசுதேவன் என்று நாமகரணம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளைக்காரர் நம்மை ஆளவந்த பிறகு இந்தியர்கள் என்று தெரியாவண்ணம் வெளித் தோற்றத்தை மாற்றிக் கொள்வதோடு நம்மவர்களுடைய ஆசை நிற்கவில்லை. பேரையும் மாற்றிப் பெருமை அடைவதில் நமக்கு உற்சாகம் ஏற்பட்டது. அந்த மோகத்திற்கு இணங்க வாசுதேவனுடைய பெயர் முதலில் உடல் குறுகி வி.தேவ் என்றாயிற்று. வெள்ளைக்காரப் பெயராய்த் தொனிப்பது மேலும் விசேஷம் என்று 'த' காரம் 'ட' காரமாய் மாறி வி.டேவ் என்றாயிற்று. ஜி என்பது அவன் தகப்பனார் கருடச்சாரியர் பெயரைக் குறிப்பது. இவ்வாறு, வாசுதேவன் ஜி.வி.டேவ் என்று பெருமையையும் ஆத்ம திருப்தியையும் விளைவிக்கும்படியான பெயயருடன் விளங்கி வந்தான்.
- 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் டேவ்'.
- தொடர்வேன்.
- அடுத்து ராஜம்கிருஷ்ணன் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Thursday, December 30, 2004
உவமைகள் வர்ணனைகள் - 33
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 33: ஜெயந்தன் படைப்புகளிலிருந்து:
1. சுப்ரமணியம் உறக்கத்திலிருந்தார். அது நிம்மதியான தூக்கம். சந்தோஷமான தூக்கம். இத்தனை நாள் இல்லாத ஒரு மன அமைதியும் கவலை விடுதலையும் நேற்று மாலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக இந்த வரன் அமைந்த மாதிரிதான். இரவு ஒன்றிரண்டு முறை விழிப்பு வந்தபோதுகூட தான் இந்த சந்தோஷத்துடனேயே தூங்கிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. நீண்ட நாள் ஒழுகும் வீட்டிலிருந்தே கஷ்டப்பட்டு பழகிய ஒருவன் ஒருநாள் அந்தக் கூரை வேயப்பட்ட பிறகு, அதன் மீது மழை கொட்டித் தீர்க்கும்போது அவன் உள்ளிருந்து அடைகிற சந்தோஷத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்- தூக்க நிலையிலும்.
- 'முறிவு' நாவலில்.
2. வனஜா அவனது அருமைக் காதலி. ஒரு காலத்தில் இவனது கையில் இருந்த ஐஸ் கட்டி. அது கரைவதற்கு முன்பே, தட்டிப் போன ஒன்று. அதனால் என்றுமே கரையாத ரூபத்தில் இவன் நினைவில் இருப்பவள். இன்னும் இவன் நினைவாகவே இருப்பாள் என்று இவனால் நம்பப்படுபவள்.
- 'பச்சை' சிறுகதையில்.
3. அவனுக்கு இப்படித்தான் தோன்றியது. சில கவிஞர்கள் கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே நல்ல கவிதைகளை எழுதி விடுவதைப் போலவே, இவர்களும் வியாபாரம் என்றால் என்னவென்று தெரியாமலே வியாபாரத்தில் நிலைத்து நின்று நின்று கொண்டிருக்கிறார்கள்.
- 'வாணிகம்'.
4. யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம பிடியிலே இருக்கணும். அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம ஓடக்கூடாது.
- 'சங்கிலி'.
5. - ஆமாம். மனுஷக் குரங்குக்கு எந்தப் பூமாலையும் ஒன்றுதான். புத்தனிலிருந்து மார்க்ஸ் வரை எல்லாப் பூமாலைகளையும் இது பிய்த்துத்தான் போட்டிருக்கிறது.
- '542'.
6. நீ குயவன் பானை வனையும்போது பார்த்திருக்கிறாயா? பாற்கடலிலிருந்து அமுதம் வந்தமாதிரி அந்த மாய விரல்களை வணங்கிக் கொண்டே வெறும் களி மண்ணிலிருந்து பானை வரும்.
- 'பட்டம்'.
7. -அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72. இந்தப் பெரிய சாவுகளில் ஒரு பெரிய முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. 'பெரிய சாவுடா, போய்ட்டு வந்துடு'.
- வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.
- ஆண்களிடம் ஒரு social gathering- கிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப்போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.
- 'துக்கம்'.
8. அவளுக்கு அவளது உடம்பின் பரிமாணத்திற்கு எதிரிடையான சிறிய இடுங்கிய கண்கள். அவை ஆண்களில் யாரைப் பார்த்தாலும் இவன் நமது இரையா என்று ஒளியைப் பாய்ச்சும். இல்லையென்று அறிகிற போது தாட்சண்யமற்ற ஒரு குரோதத்தை வீசும்.
- 'சம்மதங்கள்'.
9. நல்ல ஆஜானுபாகுவான உருவம். வயது ஐம்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் முப்பதின் முறுக்கு உடலில் தெரிந்தது. இப்போதும் தனி ஆளாய் நின்று இவரால் நான்கு பேரைச் சமாளிக்க முடியும் என்கிற தோற்றம். அந்த் உடல் பலமே சதைத்திமிராகி, அவரது ஆகாத செயல்களுக்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படியான திரண்டு முறுகிய உடல் அமைப்பு.
- 'துப்பாக்கி நாய்க்கர்'.
10. எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை. மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க முடியாது என்று மனம் குமைகிறது.
- 'மாரம்மா'.
- தொடர்வேன்.
- அடுத்து எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
1. சுப்ரமணியம் உறக்கத்திலிருந்தார். அது நிம்மதியான தூக்கம். சந்தோஷமான தூக்கம். இத்தனை நாள் இல்லாத ஒரு மன அமைதியும் கவலை விடுதலையும் நேற்று மாலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக இந்த வரன் அமைந்த மாதிரிதான். இரவு ஒன்றிரண்டு முறை விழிப்பு வந்தபோதுகூட தான் இந்த சந்தோஷத்துடனேயே தூங்கிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. நீண்ட நாள் ஒழுகும் வீட்டிலிருந்தே கஷ்டப்பட்டு பழகிய ஒருவன் ஒருநாள் அந்தக் கூரை வேயப்பட்ட பிறகு, அதன் மீது மழை கொட்டித் தீர்க்கும்போது அவன் உள்ளிருந்து அடைகிற சந்தோஷத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்- தூக்க நிலையிலும்.
- 'முறிவு' நாவலில்.
2. வனஜா அவனது அருமைக் காதலி. ஒரு காலத்தில் இவனது கையில் இருந்த ஐஸ் கட்டி. அது கரைவதற்கு முன்பே, தட்டிப் போன ஒன்று. அதனால் என்றுமே கரையாத ரூபத்தில் இவன் நினைவில் இருப்பவள். இன்னும் இவன் நினைவாகவே இருப்பாள் என்று இவனால் நம்பப்படுபவள்.
- 'பச்சை' சிறுகதையில்.
3. அவனுக்கு இப்படித்தான் தோன்றியது. சில கவிஞர்கள் கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே நல்ல கவிதைகளை எழுதி விடுவதைப் போலவே, இவர்களும் வியாபாரம் என்றால் என்னவென்று தெரியாமலே வியாபாரத்தில் நிலைத்து நின்று நின்று கொண்டிருக்கிறார்கள்.
- 'வாணிகம்'.
4. யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம பிடியிலே இருக்கணும். அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம ஓடக்கூடாது.
- 'சங்கிலி'.
5. - ஆமாம். மனுஷக் குரங்குக்கு எந்தப் பூமாலையும் ஒன்றுதான். புத்தனிலிருந்து மார்க்ஸ் வரை எல்லாப் பூமாலைகளையும் இது பிய்த்துத்தான் போட்டிருக்கிறது.
- '542'.
6. நீ குயவன் பானை வனையும்போது பார்த்திருக்கிறாயா? பாற்கடலிலிருந்து அமுதம் வந்தமாதிரி அந்த மாய விரல்களை வணங்கிக் கொண்டே வெறும் களி மண்ணிலிருந்து பானை வரும்.
- 'பட்டம்'.
7. -அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72. இந்தப் பெரிய சாவுகளில் ஒரு பெரிய முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. 'பெரிய சாவுடா, போய்ட்டு வந்துடு'.
- வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.
- ஆண்களிடம் ஒரு social gathering- கிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப்போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.
- 'துக்கம்'.
8. அவளுக்கு அவளது உடம்பின் பரிமாணத்திற்கு எதிரிடையான சிறிய இடுங்கிய கண்கள். அவை ஆண்களில் யாரைப் பார்த்தாலும் இவன் நமது இரையா என்று ஒளியைப் பாய்ச்சும். இல்லையென்று அறிகிற போது தாட்சண்யமற்ற ஒரு குரோதத்தை வீசும்.
- 'சம்மதங்கள்'.
9. நல்ல ஆஜானுபாகுவான உருவம். வயது ஐம்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் முப்பதின் முறுக்கு உடலில் தெரிந்தது. இப்போதும் தனி ஆளாய் நின்று இவரால் நான்கு பேரைச் சமாளிக்க முடியும் என்கிற தோற்றம். அந்த் உடல் பலமே சதைத்திமிராகி, அவரது ஆகாத செயல்களுக்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படியான திரண்டு முறுகிய உடல் அமைப்பு.
- 'துப்பாக்கி நாய்க்கர்'.
10. எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை. மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க முடியாது என்று மனம் குமைகிறது.
- 'மாரம்மா'.
- தொடர்வேன்.
- அடுத்து எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Tuesday, November 30, 2004
உவமைகள்-வருணனைகள் - 32: இந்திரா பார்த்தசாரதி
நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 32 : இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளிலிருந்து:
1. மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக்கொண்டு சாகின்றன.
- 'ஒரு ரூபாய்' கதையில்.
2. சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்த ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகர்யங்களும் இருந்தன; ஆனால் அதற்கு ஒரு ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.
- 'வழித்துணை'.
3. மந்திரிகளின் பூதாகரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?
- 'கருகத் திருவுளமோ?'.
4. நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்றுப்பெற்ற ஓய்வில் கலைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பில் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.
- 'குன்று'.
5. சாமான்களையெல்லாம் சரிபார்த்து. நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு என் சீட்டில் உட்காரப் போன போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களைத் தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கே உட்காரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
- 'அவஸ்தைகள்'.
6. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர்பெற்றெழும் அந்த ஓட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச் சென்ற முகத்துடன், உடையுடன், 'காப்பியா அண்ணா?' என்று ஒருவர் கேட்கும்போது உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. காலம் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி அய்யர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.
- 'கோட்சேக்கு நன்றி'.
7. அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார் இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.
- 'இறுதிக் கடிதம்'.
8. நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுதும் வாரியிறைத்தது.
- 'அறியாமை என்னும் பொய்கை'.
9. அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பஸ் கூட வரவில்லை. பஸ் நிலையத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கி வழியாவிட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டுமானால் தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்.
- 'பிரச்சினையின் நிறம்'.
10. 'ஸிந்தியா ஹவுஸ்' அருகே அவன் நின்ற போது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை 'வா'என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது பொல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான்.
- 'அவன் பெயர் நாகராஜன்'.
- தொடர்வேன்.
- அடுத்து ஜெயந்தன் படடைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
1. மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக்கொண்டு சாகின்றன.
- 'ஒரு ரூபாய்' கதையில்.
2. சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்த ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகர்யங்களும் இருந்தன; ஆனால் அதற்கு ஒரு ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.
- 'வழித்துணை'.
3. மந்திரிகளின் பூதாகரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?
- 'கருகத் திருவுளமோ?'.
4. நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்றுப்பெற்ற ஓய்வில் கலைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பில் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.
- 'குன்று'.
5. சாமான்களையெல்லாம் சரிபார்த்து. நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு என் சீட்டில் உட்காரப் போன போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களைத் தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கே உட்காரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
- 'அவஸ்தைகள்'.
6. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர்பெற்றெழும் அந்த ஓட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச் சென்ற முகத்துடன், உடையுடன், 'காப்பியா அண்ணா?' என்று ஒருவர் கேட்கும்போது உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. காலம் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி அய்யர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.
- 'கோட்சேக்கு நன்றி'.
7. அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார் இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.
- 'இறுதிக் கடிதம்'.
8. நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுதும் வாரியிறைத்தது.
- 'அறியாமை என்னும் பொய்கை'.
9. அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பஸ் கூட வரவில்லை. பஸ் நிலையத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கி வழியாவிட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டுமானால் தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்.
- 'பிரச்சினையின் நிறம்'.
10. 'ஸிந்தியா ஹவுஸ்' அருகே அவன் நின்ற போது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை 'வா'என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது பொல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான்.
- 'அவன் பெயர் நாகராஜன்'.
- தொடர்வேன்.
- அடுத்து ஜெயந்தன் படடைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Wednesday, November 17, 2004
வருணனைகள்- உவமைகள் - 31: நாஞ்சில்நாடன்
வருணனைகள்- உவமைகள் - 31
நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து:
1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.
- 'பாலம்' கதையில்.
2. கொம்புச் சீப்பை எடுத்துப் 'பறட் பறட்' டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.
- 'ஆசையெனும் நாய்கள்'.
3. ஏனோ தெரியவில்லை., சமீப காலமாய்த் தமிழ் சினிமா தியேட்டருக்குள் நுழைவது என்பது ஏதோ தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டிருந்தன.
- 'ஒரு வழிப் பயணம்'.
4. தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம், 'கடக் கடக்' என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கிமூச்சு விட்டுக் 'கட கட'வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின்
ரேகைகள் கண் மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர் சொட்ட மேலுதட்டை உயர்த்தி£ இள்¢த்து 'ங்றீங்ங்....'என்று குரலெழுப்பும் தாய் எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக் கன்று, "சவத்துப் பய சாதிக்கு ஒரு
வகுதரவு கெடையாது!" என்று கிடாக்கன்றின் புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா-
இதையெல்லாம் மௌனமாய்க் கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம்.
- 'தேடல்'.
5. பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவது போல அந்தக் குடும்பம் ஏறியது.
- 'சிறு வீடு'.
6. வேறு குத்தகையில் தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளைஅழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத் தான் சரியாக இருக்கும்.
- 'புளி மூடு'.
7. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. ஒரு புராண கதா பாத்திரம் போல இருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி,தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி....கொண்டு போன ஆறவுன்சு குப்பியில் 'முள்ளெலித் தைலம்' என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நாலு அவுன்சு ஊற்றிக் கொடுத்தார்.
- 'முள்ளெலித்தைலம்.'
8. அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும்.
- 'பேய்க்கொட்டு'.
9. சுப்பையாப் பிள்ளைக்கு ஒரே புழுக்கமாய் இருந்தது. காற்று நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தது.
- 'சைவமும் சாரைப்பாம்பும்'.
10. அது 1951ல் கட்டப்பட்ட கட்டிடம். மாடிப்படிகள், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் மூளிபட்டுக் கிடந்தது. சொசைட்டிக் காரர்கள் எல்லா நிலைகளிலும் பதிமூன்று வாட் பல்பு போட்டிருந்தார்கள். வெளிச்சுவர்கள் சுண்ணாம்பு கண்டு பதினேழு ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் மின் விளக்கின் ஒளியில் முக்கால் பாகத்தைச் சுவர்கள் உண்டு ஜீவித்திருந்தன. எலியன்று மூன்றாம் மாடியிலிருந்து யாரையோ சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அவசரமாக.
- 'சதுரங்கக் குதிரை' நாவலில்.
- தொடர்வேன்.
- அடுத்து இந்திராபார்த்தசாரதி படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து:
1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.
- 'பாலம்' கதையில்.
2. கொம்புச் சீப்பை எடுத்துப் 'பறட் பறட்' டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.
- 'ஆசையெனும் நாய்கள்'.
3. ஏனோ தெரியவில்லை., சமீப காலமாய்த் தமிழ் சினிமா தியேட்டருக்குள் நுழைவது என்பது ஏதோ தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டிருந்தன.
- 'ஒரு வழிப் பயணம்'.
4. தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம், 'கடக் கடக்' என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கிமூச்சு விட்டுக் 'கட கட'வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின்
ரேகைகள் கண் மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர் சொட்ட மேலுதட்டை உயர்த்தி£ இள்¢த்து 'ங்றீங்ங்....'என்று குரலெழுப்பும் தாய் எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக் கன்று, "சவத்துப் பய சாதிக்கு ஒரு
வகுதரவு கெடையாது!" என்று கிடாக்கன்றின் புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா-
இதையெல்லாம் மௌனமாய்க் கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம்.
- 'தேடல்'.
5. பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவது போல அந்தக் குடும்பம் ஏறியது.
- 'சிறு வீடு'.
6. வேறு குத்தகையில் தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளைஅழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத் தான் சரியாக இருக்கும்.
- 'புளி மூடு'.
7. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. ஒரு புராண கதா பாத்திரம் போல இருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி,தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி....கொண்டு போன ஆறவுன்சு குப்பியில் 'முள்ளெலித் தைலம்' என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நாலு அவுன்சு ஊற்றிக் கொடுத்தார்.
- 'முள்ளெலித்தைலம்.'
8. அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும்.
- 'பேய்க்கொட்டு'.
9. சுப்பையாப் பிள்ளைக்கு ஒரே புழுக்கமாய் இருந்தது. காற்று நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தது.
- 'சைவமும் சாரைப்பாம்பும்'.
10. அது 1951ல் கட்டப்பட்ட கட்டிடம். மாடிப்படிகள், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் மூளிபட்டுக் கிடந்தது. சொசைட்டிக் காரர்கள் எல்லா நிலைகளிலும் பதிமூன்று வாட் பல்பு போட்டிருந்தார்கள். வெளிச்சுவர்கள் சுண்ணாம்பு கண்டு பதினேழு ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் மின் விளக்கின் ஒளியில் முக்கால் பாகத்தைச் சுவர்கள் உண்டு ஜீவித்திருந்தன. எலியன்று மூன்றாம் மாடியிலிருந்து யாரையோ சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அவசரமாக.
- 'சதுரங்கக் குதிரை' நாவலில்.
- தொடர்வேன்.
- அடுத்து இந்திராபார்த்தசாரதி படைப்புகளிலிருந்து.
- வே.சபாநாயகம்.
Subscribe to:
Posts (Atom)
