'எனது களஞ்சியத்திலிருந்து - 26
==========================
உயர்வு நவிற்சி அணி;
------------------
கவிதைக்கு 'உயர்வு நவிற்சி ரு சிறப்பான அணியாகும். 'உயர்வு நவிற்சி'என்பது சொல்ல வந்த பொருளை அதீதமாக வருணித்து கேட்பதற்கு இன்பம் தருவதாக வியக்க வைப்பது.
எடுத்துக்காட்டாக கண்ணகியை விதந்து வருணிக்கிற கோவலன், எளிய சொற்களில் -
'கண்ணே, மணியே, கட்டாணி முத்தே, கட்டிகரும்பே.............
என்று இயல்பாகப் பேசுவதாகக் கவிஞர் எழுதி இருக்கலாம். ஆனால்
இளங்கோவடிகள் உயர்வு நவிற்சி அணி அழகோடு,
'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே
காசறு விரையே! கரும்பே! தேனே'
என்று வருணிக்கும்போது வாசிக்கும் நமக்கு 'ரு சிலிர்ப்பு ஏற்படுகிறதில்லையா?
அது கவிஞனின் கற்பனைத் திறத்தை எண்ணி வியக்க வைக்கிறது. அப்படிச் சில
கற்பனை நயத்தை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இப்படி அநேக உயர்வு நவிற்சி
அழகை அனுபவிக்கலாம்.
சுந்தரர் பரவை நாச்சியார் என்கிற அழகிய பெண்ணைக் கண்டு
காதல் கொள்கிறார். அவள் அவரது கண்களுக்கு எப்படிக் காட்சி தருகிறாள்
தெரியுமா?
கற்பக விருட்சத்தின் பூங்கொம்பு 'ன்று எதிரே நிற்கிறதாம்.
மன்மதனின் பெருவாழ்வே "ர் உருவெடுத்து எதிரே நிற்பதாகத் தோன்றுகிறதாம்.
புண்ணியம் அனைத்தும் சேர்ந்த புண்ணியம் அவர் எதிரே நிற்பதாகக் கருதுகிறார்.
கண்களாகக்குவளை மலரையும், செவ்விதழ்களாகப் பவளத்தையும், முகமாகச் சந்திரனையும்,
கூந்தலாகப் புயலினையும் சுமந்து வாசனைக் கொடியொன்று கண்முன் துவள்கிறது.
"ர் அற்புதம் அவர் கண்முன்னே சிறு களிநடம்புரிவதாக அதிசயிக்கிறார்.
இப்போது சேக்கிழாரது பாடலைப் பார்க்கலாம்;
''கற்பகத்தின் பூங்கொம்போ!
காமன்தன் பெருவாழ்வோ!
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ! புயல் சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ!
அற்புதமோ! சிவன் அருளோ!
அறியேன் என்று அதிசயித்தார்.''
சுந்தரர் மட்டுமா? நாமும் தான் சேக்கிழாரின் இனிய சந்த அழகுடனான
கற்பனைநயம் கண்டு அதிசயித்து நிற்கிறோம்.
'விறலி விடு தூது' என்னும் கவியின்பக் களஞ்சியத்தை ஆக்கிய
சுப்ரதீபக்கவிராயர் 'ரு மோகன முகத்தைப் பற்றிச் சொல்லும்பொது,
''சோலைப் பசுங்குயிலை, சொன்னப் பசுங்கிளியைக்
கோலப் பருவமுலைக் கோமளத்தை, வேலையன்ன
காம ரசதாழிக் கரும்பைச் செழுங்கனியைச்
தேமல் இளங் கொங்கைத் திரவியத்தைக் - காமுகர்க்கு
அற்புதத்தைத் தேனை அதிமோக ரஞ்சிததத்தைக்
கற்பகத்தைச் சர்க்கரையைக் கற்கண்டை''
என்று உயர்வு நவிற்சி அணியை அடுக்கிக் கொண்டே போகும் கற்பனைத்
திறம்எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.
மேலும் வரும் வருணனைகள் உயர்வு நவிற்சியின் உச்சம் எனலாம்
''கம்மியன் கையால் அடித்துக்
காய்ச்சி வெட்டித் தீராமல்
செம்மலரோன் கைம் மலரால்
செய்து விட்ட பொற்பாவை
கையால் பிடித் தொருவர்
கட்ட இதழ் கன்றாமல்
மையார் குழலார்
மடியிருக்கும் பூமாலை
"ங்கு மலைக் காட்டின்
உள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ர மஞ்சமிசைத்
தூங்கும் நவரசத் தேன்
மொய்த்த மலைக் காட்டு
முள்ளூடு அலையாமல்
மெத்தையின் மேலேறி
விளையாடும் தோகை மயில்
கொம்புதொறும் போய்த் தாவிக்
கூவித் திரியாமல்
அம்பொன்மணி ஊசலிருந்து
ஆடும் குயிற் பேடு
கொஞ்சி மொழி கூறிக்
கூட்டிற் கிடவாமல்
செஞ்சொல் மதனகலை
செப்புங் கிளிப் பேடு''
( பொற்பாவை - சிற்பி கையால் அடித்துச் செய்யவில்லை. பிரும்மா தன்
கையால்செய்த பாவை.
பூமாலை - பூத்தொடுப்பவர் கைபட்டு தொடுக்கும்போது கன்றிபோகாத
மாலை.
தேன் - உயர்ந்த மலைகளின் உயரத்தில் தூங்காமல் மெல்லிய
பூவணையில் தூங்குகிற சுவைமிக்க தேன்.
தோகைமயில்-மலைக்காட்டு முள்ளில் உலவாது மெத்தைமேல்
விளையாடும் மயில்.
குயிற்பேடு - பெண் குயில். இக் குயில் மரங்களில் தாவிக் குதித்துக்
கூவாது. இது ஊஞ்சலில் இருந்து ஆடுங் குயில்.
கிளிப்பேடு - பெண்கிளி. இது கூட்டினுள்ளே அடைபட்டுக் கிடந்து குழறி
மொழிபகராது. இக் கிளி மன்மதக்கலை பேசும் )
கம்பனது ராமகாவியத்தில் காணப்படும் எண்ணற்ற உயர்வு நவிற்சி
அணிகள் நம்மை இன்புறுத்துவன.
ராமனது பட்டாபிஷேகக் காட்சியில் 'ரு பாடலில் உயர்வு நவிற்சி
அணியை அமைத்திருக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.
மரகதமலை 'ன்று. அதன்மீது செந்தாமரை மலர்
காடாகப் பூத்திருக்கிறது. அம்மலையில் வேல்போன்ற கன்களை உடைய மயில் 'ன்று
வீற்றிருக்கிறது;
''மரகத சைலம் செந்தா
மரை மலர்க்காடு பூத்து
திரைகெழு கங்கை வீசும்
திவலையால் நனைந்து செய்ய
இருகுழை தொடரும் வேற்கண்
மயிலொடும் இருந்தது ஏய்ப்பப்
பெருகிய செவ்வி கண்டார்
பிறப்பெனும் பிணிகள் தீர்ந்தார்''
( சைலம் - மலை; திரை - அலை; திவலை - நீர்த்துளி; குழை - காது.
காதளவு நீண்ட கண்கள். இங்கே மரகதமலையாக ராமனையும், மயிலாக
சீதையையும் அலங்கரித்தது உயர்வு நவிற்சி. அம் மயிலோடு இருந்த மரகத
மலையைக் காணும் பேறு பெற்றவர்கள் பிறவி எனும் பிணிகள் தீர்ந்து பெருவாழ்வு பெற்றார்.)
இலக்கியக் கடலில் முத்துக் குளிப்பவர் இதுபோன்ற எண்ணற்ற
அழகுகளைக் கண்டு இன்புறலாம்.
- ஆதாரம் ; 'ராய.சொ' வின் 'காவிரி'
--- 0 ---
Showing posts with label எனது களஞ்சியத்திலிருந்து. Show all posts
Showing posts with label எனது களஞ்சியத்திலிருந்து. Show all posts
Tuesday, November 20, 2007
Friday, February 09, 2007
எனது களஞ்சியத்திலிருந்து : 25
பிணி தந்த பாடல்கள்:
திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன.
அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது
அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத்
தெரியவில்லயே!" என்று பாடுகிறார்.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
(இடும்பை - துன்பம்; வறுமை)
அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில்
இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப் பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான திருநின்றை
யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே சிந்திக்கிறார்.
நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்:
"ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார். உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ? போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!"
நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே இரு.
(உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.)
உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன.
சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச்
சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய் தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின் அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும் வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்:
கூற்று ஆயினவாறு விலக்கலீர்;
கொடுமை பல செய்தன அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றில் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
- இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து,
'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும்,
'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்'
எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார்.
நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை நகைச்சுவையுடன் பாடுகிறார்.
சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில் விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப் பட்டியலிடுகிறார்:
முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.
சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்:
செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.
வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.
முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ
திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்:
உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது.
இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார்.
ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார்.
எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி.
'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை? ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர் தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை களையும் இழக்கலாமே" என்றாராம்.
திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன.
அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது
அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத்
தெரியவில்லயே!" என்று பாடுகிறார்.
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
(இடும்பை - துன்பம்; வறுமை)
அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில்
இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப் பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான திருநின்றை
யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே சிந்திக்கிறார்.
நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்:
"ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார். உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ? போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!"
நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே இரு.
(உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.)
உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன.
சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச்
சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய் தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின் அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும் வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்:
கூற்று ஆயினவாறு விலக்கலீர்;
கொடுமை பல செய்தன அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றில் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.
- இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து,
'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும்,
'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்'
எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார்.
நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை நகைச்சுவையுடன் பாடுகிறார்.
சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில் விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப் பட்டியலிடுகிறார்:
முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.
சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்:
செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.
வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.
முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ
திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்:
உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது.
இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார்.
ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார்.
எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி.
'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை? ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர் தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை களையும் இழக்கலாமே" என்றாராம்.
Tuesday, November 28, 2006
எனது களஞ்சியத்திலிருந்து - 24
பாராட்டுக் கவி
கவிஞர்கள் எதையும் மிகைப் படுத்துபவர்கள் என்பது பொதுவான கருத்து. பாராட்டுவதானாலும் ஏசுவதானாலும் எதிலும் அதிகம்தான்.பரிசில் வழங்கியவர் மட்டுமல்ல பசிக்கு வயிறார உணவிட்டாலும் பாராட்டிப் பாடல் எழுதி விடுவார்கள்.
அவ்வையார் இப்படி அற்ப உணவுக்கும் பாராட்டுக் கவி எழுதுபவர். அவரே சொல்கிறார்,
'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்' -என்று.
ஒருமுறை மழையில் நனைந்து, மிகுந்த பசியோடு பாரி மளிர் அங்கவை, சங்கவை வாழும் குடிசைக்குச் செல்கிறார்.அந்தப் பெண்கள் அவருக்கு மாற்றுடை அளித்து, குளிருக்கு கணப்பு மூட்டிக் குளிர் போக்கி, முருங்கையுடன் சமைத்த கேழ்வரகுக் களியினையும் தந்தனர். அதை
வியந்து பாடுகிறார்."என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி, அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடை யதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து, வேண்டுமட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார் களே!" என்று வியக்கிறார்.
"வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செரிந்த கையார்".
(வெய்தாய் - வெப்ப முடையதாய்; நறுவிதாய் - நல்ல மணமுள்ளதாய்)
இதேபோல் இன்னொரு பாராட்டுக் கவி. வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் அது. சாதாரண வரிகரிசிச் சோறு; கத்தரிக்காய்ப் பொரியல்; மிகவும் புளித்த மோர். இவ்வளவுதான் அந்த விருந்து! இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறது பாடல்.
"வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்".
(வழுதுணங்காய் - கத்தரிக்காய்; முரமுரென - நுரை உண்டாகுமாறு புளித்த;
புரிந்து - விரும்பி)
கீரைக்கறியின் மகத்துவம் பற்றி நாமறிந்த நம்காலத்துக் கவிமணியும் ஒரு மணியான கவிதையை எழுதியிருக்கிறார்.
ஆரைப்பதி என்கிற ஊரில் அவர் விரும்பி உண்ட கீரைக்கறிக்கு அவர் படிய பாராட்டுக் கவி இது:
"பச்சடியும் தீண்டேன் பருப்பினிலும் கைவையேன்
கிச்சடியும் தீண்டேன் கிழங்கு மெடேன் - மெச்சு புகழ்
ஆரைப்பதியில் அவித்துக் கடைந்து வைத்த
கீரைக்கறி கிடைக்குமேல்."
வெண்பா இவரிடம் வெகு சரசமாய் விளையாடும்.
சாப்பாடு என்றில்லை, புலவர்க்குப் பிடித்த எதுவும் பாராட்டுக் கவி பெறும்.'பொடி'விஷயம் கூடப் பாராட்டுப் பெறுகிறது -தமிழ்த்தாத்தா வின் 'என்சரித்திரத்'தில்.
அய்யரின் ஆசான் தியாகராச செட்டியார் பொடி போடும் பழக்கம் உடையவர். ஆசானுக்காக திருவானைக்காவலில் சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் கடைக்கு அடிக்கடி சென்று பொடிவாங்கி வருவது வழக்கம். பொடிக்கடை சோமசுந்தரம் பிள்ளை செட்டியாரிடம் பாடம் கேட்டவர். அவர் தயாரிக்கும் பொடி மிகவும் பிரபலமானது. சுடச்சுட அப்பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்வதற்காகப் பலர் அவர் கடையில் காத்திருப்பார் களாம். வெளியூர்களுக்கும் அவரது பொடிக்கு நல்ல டிமாண்ட்.
செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் பொடி மகிமை யைக் குறிப்பிட்டு பாடல் அமைக்க வேண்டும் என்று அய்யரிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி செட்டியாரும் சாமிநாத அய்யரும் சேர்ந்து ஒரு பாடலை இயற்றினார்கள். அப் பாடல்:
'கொடியணி மாடமோங்கி குலவுசீர் ஆனைக்காவில்
படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையார் செங்கை
தொடியினர் மதனன் சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".
சாப்பாடு சுமாராய் இருந்தாலும் பாராட்டிச் சொல்லுவது மரபு. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரிகம்'பற்றிப் பேசுவார் திருவள்ளு வர். சாப்பாடு மோசமாக இருந்தால், பாராட்டாது விட்டாலும் இகழ்ந்து சொல்வதில்லை. ஆனால் ஒரு புலவர் ஒரு வீட்டில் தனக்களித்த உணவு பற்றி மிகவும் இகழ்ந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
அவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்கிற பெரும் புலவர். பிறக்கும் போதே அவருக்குப் பார்வை இல்லை.ஆனால் பிற்காலத்தில்
சிறந்த கவிஞராகவும் விளங்கியதால் 'அந்தகக்கவி' என்றழைக்கப் பட்டவர். இவர் 'சீட்டுக் கவி' பாடுவதில் வல்லவர். நகைச்சுவை ததும்பப் பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர்.
நாகதேவன் என்பவன் இவருக்கு உணவளித்தான். மகா மோசமான சாப்பாடு அது. மறக்கமுடியாத அந்த சாப்பாடு குறித்துக் கேலியும் குமுறலுமாய் இப்படிப் பாடினார்:
"வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்,
வாடலாக ஆறு மாதம் வைத்திருந்த கத்தரிக்
காயிலிட்ட கறியும், உப்பி லாத கஞ்சி அன்னமும்.
காம்பொடிந்த ஓர் அகப்பை கைப் பிடித்த வண்ணமும்,
தூயதாகத் துலக்கலின்றி அழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள்ள அசுத்த நீர் துறுத்து வந்த நேர்த்தியும்,
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்,
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே!
( தூக்கியுள்ள - முகர்ந்துள்ள; துறு - அழுக்கு )
நகைச்சுவையும், துள்ளும் சந்தமும், திட்டினாலும் பாடல் அழகுக்காகவே ரசிக்கலாம் தானே?
'போற்றினும் போற்றுவர், பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர்'அல்லவா புலவர்கள்? பொருள் என்று இல்லாது சாப்பாட்டுக்கும் அதுவே புலவர் மரபு என்பதைக் காட்டுகிறது பாடல்.
கவிஞர்கள் எதையும் மிகைப் படுத்துபவர்கள் என்பது பொதுவான கருத்து. பாராட்டுவதானாலும் ஏசுவதானாலும் எதிலும் அதிகம்தான்.பரிசில் வழங்கியவர் மட்டுமல்ல பசிக்கு வயிறார உணவிட்டாலும் பாராட்டிப் பாடல் எழுதி விடுவார்கள்.
அவ்வையார் இப்படி அற்ப உணவுக்கும் பாராட்டுக் கவி எழுதுபவர். அவரே சொல்கிறார்,
'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்' -என்று.
ஒருமுறை மழையில் நனைந்து, மிகுந்த பசியோடு பாரி மளிர் அங்கவை, சங்கவை வாழும் குடிசைக்குச் செல்கிறார்.அந்தப் பெண்கள் அவருக்கு மாற்றுடை அளித்து, குளிருக்கு கணப்பு மூட்டிக் குளிர் போக்கி, முருங்கையுடன் சமைத்த கேழ்வரகுக் களியினையும் தந்தனர். அதை
வியந்து பாடுகிறார்."என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி, அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடை யதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து, வேண்டுமட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார் களே!" என்று வியக்கிறார்.
"வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செரிந்த கையார்".
(வெய்தாய் - வெப்ப முடையதாய்; நறுவிதாய் - நல்ல மணமுள்ளதாய்)
இதேபோல் இன்னொரு பாராட்டுக் கவி. வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் அது. சாதாரண வரிகரிசிச் சோறு; கத்தரிக்காய்ப் பொரியல்; மிகவும் புளித்த மோர். இவ்வளவுதான் அந்த விருந்து! இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறது பாடல்.
"வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்".
(வழுதுணங்காய் - கத்தரிக்காய்; முரமுரென - நுரை உண்டாகுமாறு புளித்த;
புரிந்து - விரும்பி)
கீரைக்கறியின் மகத்துவம் பற்றி நாமறிந்த நம்காலத்துக் கவிமணியும் ஒரு மணியான கவிதையை எழுதியிருக்கிறார்.
ஆரைப்பதி என்கிற ஊரில் அவர் விரும்பி உண்ட கீரைக்கறிக்கு அவர் படிய பாராட்டுக் கவி இது:
"பச்சடியும் தீண்டேன் பருப்பினிலும் கைவையேன்
கிச்சடியும் தீண்டேன் கிழங்கு மெடேன் - மெச்சு புகழ்
ஆரைப்பதியில் அவித்துக் கடைந்து வைத்த
கீரைக்கறி கிடைக்குமேல்."
வெண்பா இவரிடம் வெகு சரசமாய் விளையாடும்.
சாப்பாடு என்றில்லை, புலவர்க்குப் பிடித்த எதுவும் பாராட்டுக் கவி பெறும்.'பொடி'விஷயம் கூடப் பாராட்டுப் பெறுகிறது -தமிழ்த்தாத்தா வின் 'என்சரித்திரத்'தில்.
அய்யரின் ஆசான் தியாகராச செட்டியார் பொடி போடும் பழக்கம் உடையவர். ஆசானுக்காக திருவானைக்காவலில் சோமசுந்தரம் பிள்ளை என்பவரின் கடைக்கு அடிக்கடி சென்று பொடிவாங்கி வருவது வழக்கம். பொடிக்கடை சோமசுந்தரம் பிள்ளை செட்டியாரிடம் பாடம் கேட்டவர். அவர் தயாரிக்கும் பொடி மிகவும் பிரபலமானது. சுடச்சுட அப்பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்வதற்காகப் பலர் அவர் கடையில் காத்திருப்பார் களாம். வெளியூர்களுக்கும் அவரது பொடிக்கு நல்ல டிமாண்ட்.
செட்டியார், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் பொடி மகிமை யைக் குறிப்பிட்டு பாடல் அமைக்க வேண்டும் என்று அய்யரிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி செட்டியாரும் சாமிநாத அய்யரும் சேர்ந்து ஒரு பாடலை இயற்றினார்கள். அப் பாடல்:
'கொடியணி மாடமோங்கி குலவுசீர் ஆனைக்காவில்
படியினி லுள்ளார் செய்த பாக்கிய மனையார் செங்கை
தொடியினர் மதனன் சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".
சாப்பாடு சுமாராய் இருந்தாலும் பாராட்டிச் சொல்லுவது மரபு. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நாகரிகம்'பற்றிப் பேசுவார் திருவள்ளு வர். சாப்பாடு மோசமாக இருந்தால், பாராட்டாது விட்டாலும் இகழ்ந்து சொல்வதில்லை. ஆனால் ஒரு புலவர் ஒரு வீட்டில் தனக்களித்த உணவு பற்றி மிகவும் இகழ்ந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்.
அவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்கிற பெரும் புலவர். பிறக்கும் போதே அவருக்குப் பார்வை இல்லை.ஆனால் பிற்காலத்தில்
சிறந்த கவிஞராகவும் விளங்கியதால் 'அந்தகக்கவி' என்றழைக்கப் பட்டவர். இவர் 'சீட்டுக் கவி' பாடுவதில் வல்லவர். நகைச்சுவை ததும்பப் பாடல் எழுதுவதில் புகழ் பெற்றவர்.
நாகதேவன் என்பவன் இவருக்கு உணவளித்தான். மகா மோசமான சாப்பாடு அது. மறக்கமுடியாத அந்த சாப்பாடு குறித்துக் கேலியும் குமுறலுமாய் இப்படிப் பாடினார்:
"வாயிலொன்று கல்லுமொன்று நெல்லுமான அன்னமும்,
வாடலாக ஆறு மாதம் வைத்திருந்த கத்தரிக்
காயிலிட்ட கறியும், உப்பி லாத கஞ்சி அன்னமும்.
காம்பொடிந்த ஓர் அகப்பை கைப் பிடித்த வண்ணமும்,
தூயதாகத் துலக்கலின்றி அழுக்கடைந்த பாத்திரம்
தூக்கியுள்ள அசுத்த நீர் துறுத்து வந்த நேர்த்தியும்,
ஓயலின்றி ஈக்கள் வீழ்ந்து மொலுமொலென்ற சட்டியும்,
உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் மறப்பதில்லையே!
( தூக்கியுள்ள - முகர்ந்துள்ள; துறு - அழுக்கு )
நகைச்சுவையும், துள்ளும் சந்தமும், திட்டினாலும் பாடல் அழகுக்காகவே ரசிக்கலாம் தானே?
'போற்றினும் போற்றுவர், பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர்'அல்லவா புலவர்கள்? பொருள் என்று இல்லாது சாப்பாட்டுக்கும் அதுவே புலவர் மரபு என்பதைக் காட்டுகிறது பாடல்.
Friday, July 14, 2006
எனது களஞ்சியத்திலிருந்து - 23
சிவப்பிரகாசர் செந்தமிழ்:
கற்பனைக் கருவூலமெனப் புலவர்களால் பாராட்டப் படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நாம் சிறு வயதில் படித்த 'நன்னெறி' உட்பட 32 நூல்களை எழுதி சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர். அவர் வாழ்ந்த காலம் 17-ஆம் நூற்றாண்டாகும்.
அவரது கவிதைகள் எளிமையும் நயமும் மிக்கவை. எடுத்துக்காட்டாக இரு கவிதைகளைக் கீழே தருகிறேன்.
சைவ நெறியைச் சார்ந்தவர் என்பதால் சிவபெருமானையே தன் கவிதைகளுக்குக் கருப் பொருளாக்கிப் பாடுபவர். புதுமணம் புரிந்த ஒரு தம்பதியரை வாழ்த்திப் பாடுகிறவர், சிவபெருமான்-உமையவள் ஊடலையும், அவர்களது மக்கட் செல்வங்களின் சிறு குறும்புகளையும் நகைச்சுவயுடன் தம் கவிதையில் அமைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
முதல் பாடல் இறைத் தம்பதிகளுக்கிடையே ஆன ஒரு ஊடலைக் காட்சிப் படுத்துகிறது.
உமையவள் சிவபெருமானின் தலையில் உள்ள கங்கா தேவியைப் பார்த்து விடுகிறாள். அது யார் என்று
கேட்கிறாள். "உமது முடியின் மீதுள்ள இளமங்கை யார்?"
"அது மங்கையல்ல; வெண்மையான அலைகளை எறிந்து அழகு கொழிக்கும் குளிர்ச்சியான ஆறு" என்கிறார் ஈசன்.
"அப்படியானால் ஒளி பொருந்திய முகமும், கரிய கண்களும், காதும், வாயும் ஆற்றுக்கு உண்டா?"
"உனக்கு அவ்விதம் தோன்றுவது முகம் போன்ற தாமரையும், கண் போன்ற குவளை மலரும், காது போன்ற வள்ளைக் கொடியும், வாய் போன்ற செவ்வல்லி மலரும் அல்லவா?" என்று சமாளிக்கிறார் இறைவன்.
அது பொய் என்றுணர்ந்த உமையவள் "கொங்கையும் கூந்தலும் கூட நீரினில் இருக்குமோ?" என்று மடக்குகிறாள்.
"அது நீரில் உண்டாகிற நீர்க் குமிழிகளும், நீர்ப்பாசியும் ஆகும். என்ன சொன்னாலும் நீ அதை மறுத்துக் கூறுவாய் பெண்ணே!" என்று மழுப்புகிறார்.
'பெண்ணே!' என்றழைத்தது தன்னைத்தான் என்று நினைத்த கங்காதேவி, " ஏன்சுவாமி" என்று கேட்க குட்டு உடைந்து விடுகிறது. ஈசன் வெட்கத்தோடு தலைகுனிந்து "என்னை மன்னித்து விடு" என்று வேண்டுகிறார். அதனால் மனமகிழ்ச்சியுற்ற அம்பிகை உங்களைக் காப்பாற்றுவாள் - என்று திருமண வாழ்த்தை முடிக்கிறார்.
பாடலைப் பார்க்கலாம்:
'ஐய! நின் சென்னி மிசை உறைகின்ற மடமங்கை
.......யார்?' என்ன உமை வினவவும்,
'அன்னது ஒரு மடமங்கையன்று; வெண்திரை கொழித்து
.......அழகு ஒழுகு தண்புனல்' எனத்,
'துய்ய ஒளி ஆனனம் கரிய விழி காது வாய்
.......தோயத்தில் உண்டோ?' எனச்,
'சொல்லரும் கமல மலர், காவி மலர், கொடிவள்ளை
.......தூய செங்குமுதம்' என்னப்
பொய்யென நினத்து 'நல் கொங்கையும், கூந்தலும்
.......புனலினிடை உண்டோ?' எனப்,
'புற்புலம் சைவலம் அது' எனவே மறுத்துப்
.......'புகன்றிடுதி நங்காய்' எனத்
தையல் அவள் 'ஏன்' என்ன, நாணொடு வணங்கி, 'எந்
.......தன் பிழை பொறுத்திடு' என்றே
சங்கரன் உரைத் திடத் திருவுள மகிழ்ந்த சிவ
.......சங்கரி உமைக் காக்கவே!
( சென்னிமிசை - தலைமீது; திரை - அலை; தண்புனல் - ஆறு; துய்ய - தூய்மையான; ஆனனம் - முகம்; தோயம் - நீர்; கமலம் - தாமரை; காவி - குவளை; வள்ளை - வசலைக்கொடி; குமுதம் - அல்லி; புற்புதம் - நீர்க்குமிழி; சைவலம் - பாசி; )
இறைத் தம்பதிகளின் ஊடலைக் காட்டி, மணமக்களுக்கு அத்தகைய ஊடல் அவர்களுக்கும் நிகழும், உமையவள் காப்பாள் என்று சொல்லி வாழ்த்தும் நயம் வித்தியாசமாக இல்லையா?
அடுத்த பாடலும் அதே மணமக்களை வாழ்த்திப் பாடியது தான். இப் பாடல் பிள்ளைப் பேறு எவ்வளவு இனிமையானது என்பதைக் காட்டுவதாகும்.
இங்கே தெய்வக் குழந்தைகளான விநாயகரும் முருகனும் தமக்குள் குறும்புகள் செய்து தந்தை அரனிடம் புகார் செய்கிற காட்சி விவரிக்கப் படுகிறது.
சிவபிரானிடம் மூத்த பிள்ளையான விநாயகர் வந்து தம்பி முருகனைப் பற்றிப் புகார் சொல்கிறார். " அப்பா! தம்பி முருகன் என்னுடைய காதுகளை மிகவும் நோகிறமாதிரி கிள்ளி விட்டான்" என்று சிணுங்குகிறார்.
ஈசன் வேலவனைப் பார்த்து, "ஏன் அப்படிச் செய்தாய்?" என்று விசாரிக்கிறார். அதற்கு முருகன் "அண்ணன் என் தலையில் உள்ள கண்களை எண்ணிப் பார்த்தான்" என்று பதில் கூறுகிறார்.
தேம்பி அழுகிற கணபதியை நோக்கி இறைவன், "நீ ஏன் அவ்வாறு வேடிக்கை செய்தாய்?' என்று வினவ, " என் முகத்தில் உள்ள தும்பிக்கையை அவன் எத்தனை முழம் என்று அளந்து பார்த்தான்" என்று சொல்லவும் முருகன் அதைக் கேட்டு சிரிக்கிறார். சிவபெருமான் அவர்களது தாயான உமாதேவியிடம், "உன் பிள்ளைகளின் குறும்புகளைப் பார்த்தாயா?" என்று கேட்க, அம்பிகை புன்னகைத்தபடி கணபதியை அருகழைத்து அணைத்து மகிழ்கிறாள். அந்த தேவி களிப்புடன் உங்களைக் காப்பார் என்று சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்துகிறார்.
பாடலைப் பார்ப்போம்:
அரனவனி டத்திலே ஐங்கரன் வந்து தான்
.......'ஐய! என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்' என்றே சிணுங்கிடவும்,
.......அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே, 'அண்ணன் என் சென்னியில்
.......விளங்கு கண் எண்ணினான்' என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து 'நீ அப்படி
.......விகடம் ஏன் செய்தாய்?' என,
மருவும் என் கைந்நீளம் முழம் அளந்தான்' என்ன
.......மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவ வரும் உமையவளை நோக்கி 'நின்
.......மைந்தரைப் பாராய்!' எனக்
கரு அரிய கடலாடை உலகு பல அண்டம்
.......கருப்பமாய்ப் பெற்ற கன்னி,
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
.......களிப்புடன் உமைக் காக்கவே!
(ஐங்ககரன் - விநாயகர்; சென்னி - நெற்றி; மருவும் - பொருந்திய ; )
- இப்படி இன்னும் பல இனிய, கற்பனை வளம் மிக்க, நயமான கவிதைகளை 'சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்' தொகுப்பில் ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் படித்துச் சுவைக்கலாம்.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
கற்பனைக் கருவூலமெனப் புலவர்களால் பாராட்டப் படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் நாம் சிறு வயதில் படித்த 'நன்னெறி' உட்பட 32 நூல்களை எழுதி சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர். அவர் வாழ்ந்த காலம் 17-ஆம் நூற்றாண்டாகும்.
அவரது கவிதைகள் எளிமையும் நயமும் மிக்கவை. எடுத்துக்காட்டாக இரு கவிதைகளைக் கீழே தருகிறேன்.
சைவ நெறியைச் சார்ந்தவர் என்பதால் சிவபெருமானையே தன் கவிதைகளுக்குக் கருப் பொருளாக்கிப் பாடுபவர். புதுமணம் புரிந்த ஒரு தம்பதியரை வாழ்த்திப் பாடுகிறவர், சிவபெருமான்-உமையவள் ஊடலையும், அவர்களது மக்கட் செல்வங்களின் சிறு குறும்புகளையும் நகைச்சுவயுடன் தம் கவிதையில் அமைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.
முதல் பாடல் இறைத் தம்பதிகளுக்கிடையே ஆன ஒரு ஊடலைக் காட்சிப் படுத்துகிறது.
உமையவள் சிவபெருமானின் தலையில் உள்ள கங்கா தேவியைப் பார்த்து விடுகிறாள். அது யார் என்று
கேட்கிறாள். "உமது முடியின் மீதுள்ள இளமங்கை யார்?"
"அது மங்கையல்ல; வெண்மையான அலைகளை எறிந்து அழகு கொழிக்கும் குளிர்ச்சியான ஆறு" என்கிறார் ஈசன்.
"அப்படியானால் ஒளி பொருந்திய முகமும், கரிய கண்களும், காதும், வாயும் ஆற்றுக்கு உண்டா?"
"உனக்கு அவ்விதம் தோன்றுவது முகம் போன்ற தாமரையும், கண் போன்ற குவளை மலரும், காது போன்ற வள்ளைக் கொடியும், வாய் போன்ற செவ்வல்லி மலரும் அல்லவா?" என்று சமாளிக்கிறார் இறைவன்.
அது பொய் என்றுணர்ந்த உமையவள் "கொங்கையும் கூந்தலும் கூட நீரினில் இருக்குமோ?" என்று மடக்குகிறாள்.
"அது நீரில் உண்டாகிற நீர்க் குமிழிகளும், நீர்ப்பாசியும் ஆகும். என்ன சொன்னாலும் நீ அதை மறுத்துக் கூறுவாய் பெண்ணே!" என்று மழுப்புகிறார்.
'பெண்ணே!' என்றழைத்தது தன்னைத்தான் என்று நினைத்த கங்காதேவி, " ஏன்சுவாமி" என்று கேட்க குட்டு உடைந்து விடுகிறது. ஈசன் வெட்கத்தோடு தலைகுனிந்து "என்னை மன்னித்து விடு" என்று வேண்டுகிறார். அதனால் மனமகிழ்ச்சியுற்ற அம்பிகை உங்களைக் காப்பாற்றுவாள் - என்று திருமண வாழ்த்தை முடிக்கிறார்.
பாடலைப் பார்க்கலாம்:
'ஐய! நின் சென்னி மிசை உறைகின்ற மடமங்கை
.......யார்?' என்ன உமை வினவவும்,
'அன்னது ஒரு மடமங்கையன்று; வெண்திரை கொழித்து
.......அழகு ஒழுகு தண்புனல்' எனத்,
'துய்ய ஒளி ஆனனம் கரிய விழி காது வாய்
.......தோயத்தில் உண்டோ?' எனச்,
'சொல்லரும் கமல மலர், காவி மலர், கொடிவள்ளை
.......தூய செங்குமுதம்' என்னப்
பொய்யென நினத்து 'நல் கொங்கையும், கூந்தலும்
.......புனலினிடை உண்டோ?' எனப்,
'புற்புலம் சைவலம் அது' எனவே மறுத்துப்
.......'புகன்றிடுதி நங்காய்' எனத்
தையல் அவள் 'ஏன்' என்ன, நாணொடு வணங்கி, 'எந்
.......தன் பிழை பொறுத்திடு' என்றே
சங்கரன் உரைத் திடத் திருவுள மகிழ்ந்த சிவ
.......சங்கரி உமைக் காக்கவே!
( சென்னிமிசை - தலைமீது; திரை - அலை; தண்புனல் - ஆறு; துய்ய - தூய்மையான; ஆனனம் - முகம்; தோயம் - நீர்; கமலம் - தாமரை; காவி - குவளை; வள்ளை - வசலைக்கொடி; குமுதம் - அல்லி; புற்புதம் - நீர்க்குமிழி; சைவலம் - பாசி; )
இறைத் தம்பதிகளின் ஊடலைக் காட்டி, மணமக்களுக்கு அத்தகைய ஊடல் அவர்களுக்கும் நிகழும், உமையவள் காப்பாள் என்று சொல்லி வாழ்த்தும் நயம் வித்தியாசமாக இல்லையா?
அடுத்த பாடலும் அதே மணமக்களை வாழ்த்திப் பாடியது தான். இப் பாடல் பிள்ளைப் பேறு எவ்வளவு இனிமையானது என்பதைக் காட்டுவதாகும்.
இங்கே தெய்வக் குழந்தைகளான விநாயகரும் முருகனும் தமக்குள் குறும்புகள் செய்து தந்தை அரனிடம் புகார் செய்கிற காட்சி விவரிக்கப் படுகிறது.
சிவபிரானிடம் மூத்த பிள்ளையான விநாயகர் வந்து தம்பி முருகனைப் பற்றிப் புகார் சொல்கிறார். " அப்பா! தம்பி முருகன் என்னுடைய காதுகளை மிகவும் நோகிறமாதிரி கிள்ளி விட்டான்" என்று சிணுங்குகிறார்.
ஈசன் வேலவனைப் பார்த்து, "ஏன் அப்படிச் செய்தாய்?" என்று விசாரிக்கிறார். அதற்கு முருகன் "அண்ணன் என் தலையில் உள்ள கண்களை எண்ணிப் பார்த்தான்" என்று பதில் கூறுகிறார்.
தேம்பி அழுகிற கணபதியை நோக்கி இறைவன், "நீ ஏன் அவ்வாறு வேடிக்கை செய்தாய்?' என்று வினவ, " என் முகத்தில் உள்ள தும்பிக்கையை அவன் எத்தனை முழம் என்று அளந்து பார்த்தான்" என்று சொல்லவும் முருகன் அதைக் கேட்டு சிரிக்கிறார். சிவபெருமான் அவர்களது தாயான உமாதேவியிடம், "உன் பிள்ளைகளின் குறும்புகளைப் பார்த்தாயா?" என்று கேட்க, அம்பிகை புன்னகைத்தபடி கணபதியை அருகழைத்து அணைத்து மகிழ்கிறாள். அந்த தேவி களிப்புடன் உங்களைக் காப்பார் என்று சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்துகிறார்.
பாடலைப் பார்ப்போம்:
அரனவனி டத்திலே ஐங்கரன் வந்து தான்
.......'ஐய! என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்' என்றே சிணுங்கிடவும்,
.......அத்தன் வேலவனை நோக்கி
விரைவுடன் வினவவே, 'அண்ணன் என் சென்னியில்
.......விளங்கு கண் எண்ணினான்' என,
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து 'நீ அப்படி
.......விகடம் ஏன் செய்தாய்?' என,
மருவும் என் கைந்நீளம் முழம் அளந்தான்' என்ன
.......மயிலவன் நகைத்து நிற்க,
மலையரையன் உதவ வரும் உமையவளை நோக்கி 'நின்
.......மைந்தரைப் பாராய்!' எனக்
கரு அரிய கடலாடை உலகு பல அண்டம்
.......கருப்பமாய்ப் பெற்ற கன்னி,
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
.......களிப்புடன் உமைக் காக்கவே!
(ஐங்ககரன் - விநாயகர்; சென்னி - நெற்றி; மருவும் - பொருந்திய ; )
- இப்படி இன்னும் பல இனிய, கற்பனை வளம் மிக்க, நயமான கவிதைகளை 'சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள்' தொகுப்பில் ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் படித்துச் சுவைக்கலாம்.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
Monday, October 10, 2005
களஞ்சியம் - 22
எனது களஞ்சியத்திலிருந்து - 22
பாடல் ஒன்று - விளக்கம் இரண்டு :
இரட்டை அர்த்தம் தொனிக்கப் பாடப்படும் பாடல் சிலேடை எனப்படும். இங்கே குறிப்பிடுவது சிலேடைப் பாடல் பற்றி அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் பாடப்படும் பாடலுக்கு நயமான இன்னொரு விளக்கம் அளிப்பது பற்றியாகும். கவிக் காளமேகம் வெண்பாவில் எல்லாவித உக்திகளையும் வெற்ற்¢கரமாகக் கையாண்டு பாடியவன். அவன் பாடிய சிலேடைப் பாடல்களைக் கையாளாத பேச்சாளர்கள் இல்லை எனலாம். அவனது சிலேடைப் பாடல்களி¢ல் பல ரசக்குறைவானவை. சமத்காரமான சில பாடல்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம். அவன் பாடிய பாடலுக்கு அவனே மாற்றுப் பொருள் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று அவன் நாகைப்பட்டினத்து சத்திரத்துக்குச் சாப்பிடப் போனபோது நேர்ந்தது.
நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.
கத்துக்கடல் நாகைக்
.....காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
.....அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
.....ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.
இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.
'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.
காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.
காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.
'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.
கன்னபுர மாலே
.....கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
.....அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
.....எண்ணத் தொலயாதே.
காலத்தால் முற்பட்ட நந்திக் கலம்பம் என்ற நூலில் இதைவிடவும் ரசமான ஒரு பாடல் இரு பொருளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
நந்திக் கலம்பத்தின் நாயகன் நந்தி வர்மனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் பாடல் அது. நந்திவர்மன் கோபத்தோடு படையெடுத்துக் கிளம்பாத போது, பகைவேந்தர்க ளின் செழிப்பான நாடுகளில் அழகான ஊர்கள் இருக்கும். அங்கே மகிழ்ச்சி ஆரவாரங்களும், பாட்டும் கூத்தும் ஏக அமர்க்களமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தாமரைகள் பூத்து வனங்களும் சோலைகளுமாய் நீர்வளத்தையும் நாட்டு வளத்தையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். பகை மன்னர்களிடம் தேர்களும் கூட இருக்கும்.
'ஊரும், அரவமும்,
....தாமரைக் காடும்,
உயர் வனமும்,
.....தேரும் உடைத்தென்பர்
சீறாத நாள்;'
ஆனால், பகை மன்னர்களின் அடங்காத்தனத்தையும், அக்கிரமங்களையும் கண்டு கோபமடைந்து நந்திவர்மன் படைகளோடு அந்நாடுகளுக்குள் புகுந்தால், அப்புறம் அவர்களது நிலை என்னவாகும் தெரியுமா? 'ஒன்றும் ஆகி விடாது; அப்படியதான் இருக்கும்' என்று கூறுவதுபோலச் சொல்லுகிறார் கவிஞர். சிலேடையும் ஹாஸ்யமும் கலந்த பேச்சு அது. நந்திவர்மனின் படைகள் புகுந்த பிறகும் அங்கே 'ஊரும் அரவமும், தாமரைக் காடும், உயர்வனமும், தேரும்' இருக்கத்தான் செய்யுமாம். ஆனால் இந்த 'ஊரும் அரவமும்' முதலியவை வேறு! தேசம் முழுதும் பாழாகிவிடும் என்பதைத்தான் கவிஞர் இங்கே சொல்ல வருகிறார்.
ஊரும் , அரவமும்,
.....தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பர்
.....சீறாத நாள்; நந்தி
சீறியபின்,
ஊரும் அரவமும்,
தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பரே
தெவ்வர் வாழும்
செழும்பதியே.
(ஊரும் அரவமும் - ஊர்ந்து செல்லும் பாம்புகளும்; தாமரைக் காடும் - தாவித்திரியும் மிருகங்களும் நிறைந்த காடுகளும் ; உயர்வனமும் - பெரிது பெரிதாக மரங்கள் நிறைந்த காடுகளும்; தேரும் - பேய்த்தேர் எனப்படும் கானல்நீரும்; தெவ்வர்-பகைவர்; செழும்பதி - செழிப்பான நாடு.)
நந்திவர்மனின் கோபத்துக்கு ஆளாகிவிட்டால் எதிரியின் நாடு காடாகிவிடும் என்ற விஷயத்தை இப்படி இரண்டு விதமாகப் பொருள்படும் படி ரசமாகப் பாடி விட்டார் நந்திக் கலம்பக ஆசிரியர். இவ்வளவு அற்புதமாகப் பாடிய கவிஞர் பெயர் தான் தெரியவில்லை.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
பாடல் ஒன்று - விளக்கம் இரண்டு :
இரட்டை அர்த்தம் தொனிக்கப் பாடப்படும் பாடல் சிலேடை எனப்படும். இங்கே குறிப்பிடுவது சிலேடைப் பாடல் பற்றி அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் பாடப்படும் பாடலுக்கு நயமான இன்னொரு விளக்கம் அளிப்பது பற்றியாகும். கவிக் காளமேகம் வெண்பாவில் எல்லாவித உக்திகளையும் வெற்ற்¢கரமாகக் கையாண்டு பாடியவன். அவன் பாடிய சிலேடைப் பாடல்களைக் கையாளாத பேச்சாளர்கள் இல்லை எனலாம். அவனது சிலேடைப் பாடல்களி¢ல் பல ரசக்குறைவானவை. சமத்காரமான சில பாடல்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் காணலாம். அவன் பாடிய பாடலுக்கு அவனே மாற்றுப் பொருள் சொன்ன சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று அவன் நாகைப்பட்டினத்து சத்திரத்துக்குச் சாப்பிடப் போனபோது நேர்ந்தது.
நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான்.
ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை இழந்து சத்தம் போட்டவனை நிர்வாகி "இதோ ஆயிற்று; கொஞ்சம் பொறுங்கள்" என்று அமைதிப் படுத்தினார். அவருக்கு வந்திருப்பவன் காளமேகம் என்று தெரியாது. நடுநிசியும் ஆயிற்று. சாப்பாடு தாயாராகவில்லை. நாழியாகஆகப் பசி அதிகமாகி கவிஞனுக்குக் கோபம் சீறிக் கொண்டு வந்தது. நிர்வாகியைக் கூப்பிட்டான். அதற்குள் அவரே அவனைச் சாப்பிட அழைத்தார். காளமேகம் "என்னய்யா சத்திரம் நடத்துகிறீர்கள்? சாப்பிட வந்தவன் என்றால் அவ்வளவு இளக்காரமா?" என்று கத்தினான். நிர்வாகி "கொஞ்சம் தாமதம் தான் ஆகிவிட்டது. மன்னிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். "கொஞ்சமா? பொழுது விடிந்து விடும் போல இருக்கிறதே!" என்று கோபப் பட்டு ஒரு பாடல் பாடினான்.
கத்துக்கடல் நாகைக்
.....காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
.....அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
.....ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
ஒலிக்கும் கடல்சூழ்ந்த நாகைப் பட்டினத்துக் 'காத்தான்' என்பவனது சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்தான் சமைப்பதற்கு அரிசி வந்திறங்கும்; அரிசியைக் களைந்து உலையிலே இடும்போதோ ஊர் அரவம் அடங்கி நள்ளிரவு ஆகிவிடும். சோறு தயாராகி, வந்தவர்க்கு ஒரு அகப்பைச் சோற்றை இலையில் இடும்போது வெள்ளி நட்சத்திரம் தோன்றுகிற விடியற்காலம் தோன்றிவிடும்.
இந்தப் பாடலலைக் கேட்ட நிர்வாகி பயந்துபோய் சத்திரத்து முதலாளி காத்தானிடம் ஓடி அழைத்து வந்தார். காத்தானுக்கு வந்திருப்பது கவி காளமேகம் என்று தெரிந்து விட்டது. காளமேகத்திம் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டினார். "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்; தயவுசெய்து மாற்றிப் பாட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்குள் சாப்பிட்டுப் பசி தணிந்த நிலையில் காளமேகம் காத்தானின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தான். "மாற்றிப் பாட வேண்டியதில்லை; இதையே பாராட்டாகக் கொள்ளலாம்" என்று சொல்லி அவனே அந்தப் பாடலை மறுபடியும் பாடி வேறு பொருள் சொன்னான்.
'காத்தானது சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் - அதாவது பஞ்ச காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். ஊரே அங்கு இடும் உணவை உண்டு பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போலப் பளீரென்று வெண்மையாக இருக்கும்'.
காத்தான் போன்ற சாதாரண மனிதரிடம் என்று இல்லை - கடவுளிடமே இந்தக் கவிதை விளையாட்டை நிகழ்த்தியவன் அவன். ஒருமுறை அவன் திருக்கண்ணபுரம் வழியே போய்க் கொண்டிருந்தான். திடீரென்று கனமழை பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் பார்த்தான். அருகில் பெருமாள் கோயில் தென்பட்டது. மழைக்கு ஒதுங்க அங்கே ஓடியபோது அங்கிருந்த வைணவர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர். ஏனென்றால் அவன் தீவிர சிவபக்தன். அதோடு வைணவர்களின் எதிரியும் கூட. சிவனைப் பற்றி ஏராளமாகப் பாடி உள்ளானே தவிர பெருமாளைப் பற்றிப் பாட மறுப்பவன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைணவர்கள், "எங்கள் பெருமாளை உன் சிவனை விட உயர்த்திப் பாடினால் உள்ளே விடுவோம்" என்றனர்.
காளமேகம் பார்த்தான். "சரி, உங்கள் பெருமாளைத்தானே உயர்த்திப் பாட வேண்டும்? இதோ..." என்று சொல்லி "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்" என்று முதலடியைப் பாடினான். தடுத்த வைணவர்கள் வெற்றிப் பூரிப்புடன் அவனை உள்ளே விட்டார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து துணியைப் பிழிந்து துடைத்துக் கொண்டு, "என்ன சொன்னேன்.? என் கடவு¨ளை விட உங்கள் கடவுள் அதிகம் என்றா சொன்னேன்? அடுத்துக் கேளுங்கள்: "கன்னபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்; உன்னை விட நான் அதிகம்" என்று சொல்லி நிறுத்தினான். வைணவர்கள் திகைத்து "அதெப்படி?" என்றார்கள். "ஓன்று கேள்- உன் பிறப்போ பத்தாம், உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை, என் பிறப்போ எண்ணத் தொளலையாதே" என்று புதிரை விடுவித்தான்.
'சிவன் தன் பக்தர்களை ரட்சிக்க பிறவி ஏதும் எடுத்ததில்லை. ஆனல் பெருமாளோ பத்து அவதாரம் எடுத்தார். அந்த வகையில் சிவனை விடப் பெருமாள் அதிகம். ஆனால் மானிடனான எனக்கு எண்ண முடியாத பிறவிகள். இதில் நான் பெருமாளை விட அதிகம். இல்லையா?' என்று விளக்கம் சொன்னான்.
கன்னபுர மாலே
.....கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான்
.....அதிகம்- ஒன்று கேள்
உன் பிறப்போ பத்தாம்
.....உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை
என் பிறப்போ
.....எண்ணத் தொலயாதே.
காலத்தால் முற்பட்ட நந்திக் கலம்பம் என்ற நூலில் இதைவிடவும் ரசமான ஒரு பாடல் இரு பொருளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
நந்திக் கலம்பத்தின் நாயகன் நந்தி வர்மனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் பாடல் அது. நந்திவர்மன் கோபத்தோடு படையெடுத்துக் கிளம்பாத போது, பகைவேந்தர்க ளின் செழிப்பான நாடுகளில் அழகான ஊர்கள் இருக்கும். அங்கே மகிழ்ச்சி ஆரவாரங்களும், பாட்டும் கூத்தும் ஏக அமர்க்களமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தாமரைகள் பூத்து வனங்களும் சோலைகளுமாய் நீர்வளத்தையும் நாட்டு வளத்தையும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும். பகை மன்னர்களிடம் தேர்களும் கூட இருக்கும்.
'ஊரும், அரவமும்,
....தாமரைக் காடும்,
உயர் வனமும்,
.....தேரும் உடைத்தென்பர்
சீறாத நாள்;'
ஆனால், பகை மன்னர்களின் அடங்காத்தனத்தையும், அக்கிரமங்களையும் கண்டு கோபமடைந்து நந்திவர்மன் படைகளோடு அந்நாடுகளுக்குள் புகுந்தால், அப்புறம் அவர்களது நிலை என்னவாகும் தெரியுமா? 'ஒன்றும் ஆகி விடாது; அப்படியதான் இருக்கும்' என்று கூறுவதுபோலச் சொல்லுகிறார் கவிஞர். சிலேடையும் ஹாஸ்யமும் கலந்த பேச்சு அது. நந்திவர்மனின் படைகள் புகுந்த பிறகும் அங்கே 'ஊரும் அரவமும், தாமரைக் காடும், உயர்வனமும், தேரும்' இருக்கத்தான் செய்யுமாம். ஆனால் இந்த 'ஊரும் அரவமும்' முதலியவை வேறு! தேசம் முழுதும் பாழாகிவிடும் என்பதைத்தான் கவிஞர் இங்கே சொல்ல வருகிறார்.
ஊரும் , அரவமும்,
.....தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பர்
.....சீறாத நாள்; நந்தி
சீறியபின்,
ஊரும் அரவமும்,
தாமரைக் காடும்,
உயர்வனமும்,
தேரும் உடைத்தென்பரே
தெவ்வர் வாழும்
செழும்பதியே.
(ஊரும் அரவமும் - ஊர்ந்து செல்லும் பாம்புகளும்; தாமரைக் காடும் - தாவித்திரியும் மிருகங்களும் நிறைந்த காடுகளும் ; உயர்வனமும் - பெரிது பெரிதாக மரங்கள் நிறைந்த காடுகளும்; தேரும் - பேய்த்தேர் எனப்படும் கானல்நீரும்; தெவ்வர்-பகைவர்; செழும்பதி - செழிப்பான நாடு.)
நந்திவர்மனின் கோபத்துக்கு ஆளாகிவிட்டால் எதிரியின் நாடு காடாகிவிடும் என்ற விஷயத்தை இப்படி இரண்டு விதமாகப் பொருள்படும் படி ரசமாகப் பாடி விட்டார் நந்திக் கலம்பக ஆசிரியர். இவ்வளவு அற்புதமாகப் பாடிய கவிஞர் பெயர் தான் தெரியவில்லை.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Tuesday, July 05, 2005
களஞ்சியம் - 21
எனது களஞ்சியத்திலிருந்து - 21
விவேகசிந்தாமணி விருந்து - 10 - பாவையரைப் பழிக்கும் பாடல்கள்:
விவேகசிந்தாமணி விருந்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கிறோம்.
பல்விதச் சுவைகளையும் கொண்ட பாடல்களை உள்ளடக்கியுள்ள விவேகசிந்தா மணியில் விரச உணர்வுக்குத் தீனி போடும் பாடல்களும் உண்டு. அவை பகிர்ந்து கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் வேண்டுபவர் தேடிப் படித்து அதில் தென்படும் கவியழகையும் இனிய ஒசை நயத்தையும் ரசிக்கலாம்.
பெண்ணின்பத்தைச் சுவைபடச் சித்தரிக்கும் பாடல்கள் உள்ள அதே நூலில் பெண்களை இழிவு படுத்திப்பாடும் பாடல்களும் உள்ளன. பெண் தொடர்பினைத் துறக்கத் துண்டுவதாக அவை தோற்றம் தந்தாலும் அவை போலித் துறவறத்தையே உள்ளே கொண்டவை. அருணகிரியாருக்குப் பின் தோன்றிய அவை அக்காலத்தின் அடிச்சுவட்டைக் கொண்டவை.
வேசியரை நம்பக் கூடாது என்று சொல்கிற பாடல் ஒன்று:
ஆலகால விடத்தையும் நம்பலாம்;
.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;
கோல மாமத யானையை நம்பலாம்;
.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;
காலனார் விடு தூதரை நம்பலாம்;
.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;
சேலை கட்டிய மாதரை நம்பினால்
.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.
ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர்- இ¢த்யாதிப் பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.
இதையே மீண்டும் வலியுறுத்துவது போல இன்னொரு பாடல்:
படியின் அப்பொழுதே வதைத்திடும்
.....பச்சைநாவியை நம்பலாம்;
பழி நமக்கென வழி மறைத்திடும்
.....பழைய கள்ளரை நம்பலாம்;
கொடுமதக்குவடு என வளர்ந்திடு
.....குஞ்சரத்தையும் நம்பலாம்;
குலுங்கப்பேசி நகைத்திடும் சிறு
.....குமரர் தம்மையும் நம்பலாம்;
கடையிலக்கமது எழுதி வைத்த
.....கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடிக்
.....காணியாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
.....நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய்
.....நம்பொணாது மெய் காணுமே.
உண்டவுடனே கொல்லத்தக்க பச்சைநாவியான கொடிய நஞ்சையும் நம்பி உட்கொள்ளலாம்; 'பழி நமக்கு வரினும் வரட்டும்' என்று அதைப் பொருட்படுத்தாது வழி மறித்துக் கொள்ளையடிக்கும் கள்வரையும் நம்பி உறவு கொள்ளலாம்; கொடிய, மதத்தை உடைய மலைபோன்று வளர்ந்துள்ள யானையையும் நம்பி அதனை நெருங்கலாம்; உடல் குலுங்க பசப்பு வார்த்தைகளைப் பேசி நகைத்து ஏமாற்றும் சிறுவர்களையும் நம்பி நேசிக்கலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயணத்தைக் காட்டாது மோசடியாய் தான் எழுதி வைத்த கட்டுத் தொகையைக் காட்டி வஞ்சிக் கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியை உடையதாயினும் கூரிய பார்வையை உடையதான காக்கையைப் போலப் பயிரிடும் குடிமக்களுக்கு யாதொரு பயனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாட்சி உடையவரையும் நம்பலாம்; நடக்கும் போது உடலைக் குலுக்கியும், மஞ்சள் முதலியவற்றால் முகத்தை மினுக்கியும் பசப்பி, மிகுதியாகச் சிரிக்கும் இயல்புடைய நங்கையரை நம்பக்கூடாது; நம்பக்கூடாது; நம்பக்கூடாது. இது உண்மை.
( 'பழி நமக்கென வழி மறைத்திடும் பழைய நீலியை நம்பலாம்' - என்றும் ஒரு பாடம் உண்டு. பழியைக் கருதாது ஒரு வணிகனை வழி மறித்துக் கொலை செய்த பழையனூர் நீலி பற்றிய குறிப்பு இது. )
இன்னொரு பாடல் வேசியரின் சாகசங்களைப் பட்டியலிடுகிறது:
வெம்புவாள் விழுவாள் பொய்யே;
.....மேல் விழுந்து அழுவாள் பொய்யே;
தம்பலம் தின்பாள் பொய்யே;
.....சாகிறேன் என்பாள் பொய்யே;
அம்பினும் கொடிய கண்ணாள்
.....ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
.....நாயினும் கடை ஆவாரே.
உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவாள்; அது பொய்யே ஆகும். மேலே விழுந்து அழுவாள்; அதுவும் பொய்யே ஆகும். உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பாள்; அது பொய்யே ஆகும். 'உனக்காக நான் உயிர் விடுவேன் என்று உரைப்பாள்; அது பொய்யே ஆகும். அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய இத்தகைய மங்கையரை நம்பியவர்
எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.
இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமாதரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் கீழ்க்கண்ட பாடல் பெண்களின் பொது இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. மாதரின் நெஞ்சை யாராலும் அறிய இயலாது என்பதை அழகான அறிவார்ந்த உவமைகளுடன் எடுத்துச் சொல்கிறது.
அத்தியின் மலரும் வெள்ளை
.....ஆக்கை கொள் காகம் தானும்
பித்தர் தம் மனமும் நீரில்
.....பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரமதேவ
.....னால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம்
.....தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தியின் பூ, வெண்மை நிறமுள்ள காகம், பைத்தியக்காரர்களது உள்ளம், நீரில் பிறந்த மீனின் கால் ஆகியவற்றை யாராலாவது பார்க்க முடியுமா? ஒருவேளை பிரம்மதேவனால் அளவிடக் கூடுமோ என்னவோ? ஆனால் சித்திரத்தில் வரையப்பெற்ற கண்களைப் போன்ற விழிகளை உடைய மாதர்களின் உள்ளத்தின் நோக்கத்தைக் கண்டு தெளிந்தவர் உலகத்தில் யாரும் இல்லை.
மற்ற பாடல்களை ஏற்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் பெண் கள்¢ன் மனம் பற்றிய இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்பார்கள்தானே?
- விவேகசிந்தாமணி திகட்டாத விருந்து. எனது எடுத்துக் காட்டுகள் இலக்கிய ரசனையுள்ள அனைவரையும் அந்நூலைத் தேடிப் படிக்க வைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்த விருந்துப் பரிமாறலை முடிக்கிறேன்.
- எனது களஞ்சியத்திலிருந்து மேலும் எடுத்தளிப்பேன்.
- வே.சபாநாயகம்.
விவேகசிந்தாமணி விருந்து - 10 - பாவையரைப் பழிக்கும் பாடல்கள்:
விவேகசிந்தாமணி விருந்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கிறோம்.
பல்விதச் சுவைகளையும் கொண்ட பாடல்களை உள்ளடக்கியுள்ள விவேகசிந்தா மணியில் விரச உணர்வுக்குத் தீனி போடும் பாடல்களும் உண்டு. அவை பகிர்ந்து கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் வேண்டுபவர் தேடிப் படித்து அதில் தென்படும் கவியழகையும் இனிய ஒசை நயத்தையும் ரசிக்கலாம்.
பெண்ணின்பத்தைச் சுவைபடச் சித்தரிக்கும் பாடல்கள் உள்ள அதே நூலில் பெண்களை இழிவு படுத்திப்பாடும் பாடல்களும் உள்ளன. பெண் தொடர்பினைத் துறக்கத் துண்டுவதாக அவை தோற்றம் தந்தாலும் அவை போலித் துறவறத்தையே உள்ளே கொண்டவை. அருணகிரியாருக்குப் பின் தோன்றிய அவை அக்காலத்தின் அடிச்சுவட்டைக் கொண்டவை.
வேசியரை நம்பக் கூடாது என்று சொல்கிற பாடல் ஒன்று:
ஆலகால விடத்தையும் நம்பலாம்;
.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;
கோல மாமத யானையை நம்பலாம்;
.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;
காலனார் விடு தூதரை நம்பலாம்;
.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;
சேலை கட்டிய மாதரை நம்பினால்
.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.
ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர்- இ¢த்யாதிப் பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.
இதையே மீண்டும் வலியுறுத்துவது போல இன்னொரு பாடல்:
படியின் அப்பொழுதே வதைத்திடும்
.....பச்சைநாவியை நம்பலாம்;
பழி நமக்கென வழி மறைத்திடும்
.....பழைய கள்ளரை நம்பலாம்;
கொடுமதக்குவடு என வளர்ந்திடு
.....குஞ்சரத்தையும் நம்பலாம்;
குலுங்கப்பேசி நகைத்திடும் சிறு
.....குமரர் தம்மையும் நம்பலாம்;
கடையிலக்கமது எழுதி வைத்த
.....கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடிக்
.....காணியாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
.....நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய்
.....நம்பொணாது மெய் காணுமே.
உண்டவுடனே கொல்லத்தக்க பச்சைநாவியான கொடிய நஞ்சையும் நம்பி உட்கொள்ளலாம்; 'பழி நமக்கு வரினும் வரட்டும்' என்று அதைப் பொருட்படுத்தாது வழி மறித்துக் கொள்ளையடிக்கும் கள்வரையும் நம்பி உறவு கொள்ளலாம்; கொடிய, மதத்தை உடைய மலைபோன்று வளர்ந்துள்ள யானையையும் நம்பி அதனை நெருங்கலாம்; உடல் குலுங்க பசப்பு வார்த்தைகளைப் பேசி நகைத்து ஏமாற்றும் சிறுவர்களையும் நம்பி நேசிக்கலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயணத்தைக் காட்டாது மோசடியாய் தான் எழுதி வைத்த கட்டுத் தொகையைக் காட்டி வஞ்சிக் கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியை உடையதாயினும் கூரிய பார்வையை உடையதான காக்கையைப் போலப் பயிரிடும் குடிமக்களுக்கு யாதொரு பயனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாட்சி உடையவரையும் நம்பலாம்; நடக்கும் போது உடலைக் குலுக்கியும், மஞ்சள் முதலியவற்றால் முகத்தை மினுக்கியும் பசப்பி, மிகுதியாகச் சிரிக்கும் இயல்புடைய நங்கையரை நம்பக்கூடாது; நம்பக்கூடாது; நம்பக்கூடாது. இது உண்மை.
( 'பழி நமக்கென வழி மறைத்திடும் பழைய நீலியை நம்பலாம்' - என்றும் ஒரு பாடம் உண்டு. பழியைக் கருதாது ஒரு வணிகனை வழி மறித்துக் கொலை செய்த பழையனூர் நீலி பற்றிய குறிப்பு இது. )
இன்னொரு பாடல் வேசியரின் சாகசங்களைப் பட்டியலிடுகிறது:
வெம்புவாள் விழுவாள் பொய்யே;
.....மேல் விழுந்து அழுவாள் பொய்யே;
தம்பலம் தின்பாள் பொய்யே;
.....சாகிறேன் என்பாள் பொய்யே;
அம்பினும் கொடிய கண்ணாள்
.....ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
.....நாயினும் கடை ஆவாரே.
உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவாள்; அது பொய்யே ஆகும். மேலே விழுந்து அழுவாள்; அதுவும் பொய்யே ஆகும். உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பாள்; அது பொய்யே ஆகும். 'உனக்காக நான் உயிர் விடுவேன் என்று உரைப்பாள்; அது பொய்யே ஆகும். அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய இத்தகைய மங்கையரை நம்பியவர்
எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.
இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமாதரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் கீழ்க்கண்ட பாடல் பெண்களின் பொது இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. மாதரின் நெஞ்சை யாராலும் அறிய இயலாது என்பதை அழகான அறிவார்ந்த உவமைகளுடன் எடுத்துச் சொல்கிறது.
அத்தியின் மலரும் வெள்ளை
.....ஆக்கை கொள் காகம் தானும்
பித்தர் தம் மனமும் நீரில்
.....பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரமதேவ
.....னால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம்
.....தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தியின் பூ, வெண்மை நிறமுள்ள காகம், பைத்தியக்காரர்களது உள்ளம், நீரில் பிறந்த மீனின் கால் ஆகியவற்றை யாராலாவது பார்க்க முடியுமா? ஒருவேளை பிரம்மதேவனால் அளவிடக் கூடுமோ என்னவோ? ஆனால் சித்திரத்தில் வரையப்பெற்ற கண்களைப் போன்ற விழிகளை உடைய மாதர்களின் உள்ளத்தின் நோக்கத்தைக் கண்டு தெளிந்தவர் உலகத்தில் யாரும் இல்லை.
மற்ற பாடல்களை ஏற்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் பெண் கள்¢ன் மனம் பற்றிய இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்பார்கள்தானே?
- விவேகசிந்தாமணி திகட்டாத விருந்து. எனது எடுத்துக் காட்டுகள் இலக்கிய ரசனையுள்ள அனைவரையும் அந்நூலைத் தேடிப் படிக்க வைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்த விருந்துப் பரிமாறலை முடிக்கிறேன்.
- எனது களஞ்சியத்திலிருந்து மேலும் எடுத்தளிப்பேன்.
- வே.சபாநாயகம்.
களஞ்சியம் - 20
எனது களஞ்சியத்திலிருந்து - 20
விவேக சிந்தாமணி விருந்து -9
காதலில் மலர்ந்த கவிதைகள்:
விவேக சிந்தாமணி ஒரு பல்சுவைக் களஞ்சியம். `எல்லாப் பொருளும் இதன் பாலுள' என்று திருக்குறளைச் சொல்வது போல, `எல்லாச் சுவையும் இதன்பால் உள' என்று விவேக சிந்தாமணியைச் சொல்லலாம். மென்மைமையான காதல் உணர்வைவைச் சித்தரிக்கும் இனிய பாடல்கள் பல இதில் உள்ளன.
ஒரு தலைவன் தன் தலைவியை இப்படிப் புகழ்கிறான்:
வண்டு மொய்த் தனைய கூந்தல்
.....மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
.....கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
.....கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க்கு எல்லாம்
.....அமுதம் என்று அளிக்கலாமே.
`என் காதலி வண்டுகள் மொய்த்தாற் போன்ற கூந்தலை உடையவள்; கயல்மீனைப் போன்ற விழிகளை உடையவள்; கிளியின் பேச்சு போன்ற மொழியினள்; `மதனக் களஞ்சியம்' என்ற கொடி போன்ற இவளது வாயின் நீர் கற்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, பழத்தோடு கூடிய பாகோ அறியேன். ஆனாலும் அதனைத் தேவர்கள் முனிவர் எல்லோருக்கும் அமுதம் என்று கொடுக்கலாம்' என்று புகழ்ந்துரைக்கிறான்.
(பண்டாரம்- களஞ்சியம்)
அதோடு மட்டுமல்ல அவள் மன்மதனும் மயங்கிப் போகும் மயக்கத்தினைத் தரக் கூடியவள் என்கிறான்:
அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகம் கண்டுஎதிர் செஞ்சிலை மாறனும்
கலகமே செயும் கண் இதுவாம் என
மலரம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.
`ஒருதடவை - கரும்பு வில்லை உடையவனான மன்மதன், என் காதலியைப் பார்த்தான். வாளாயுதத்தைப் போன்ற கண்களை உடைய அவளது அழகிய நெற்றியில் உள்ள பொட்டின் அழகைக் கண்டான். இவளுடைய கண்கள் சாதாரணமானவை அல்ல - கலகம் விளைவிப்பவை, இவள் முன்னே நம் அம்புகளுக்கு வேலை இல்லை எனக் கருதி, தன் கையில் உள்ள மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்னர் வைத்து வணங்கினான் தெரியுமா?' என்கிறான்.
( அலகு வாள் - வாளாயுதம்; ஆயிழை - பெண்; நுதல் - நெற்றி; செஞ்சிலை - செவ்விய வில்; மாறன் - மன்மதன் )
அவளை முதன் முறையாகக் கண்டபோது தனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியையும், மயக்கத்தையும் சொல்கிறான்:
அருகில் இவள், அருகில் இவள், அருகில் வர உருகும்,
கரிய குழல் மேனி இவள் கானமயில் சாயல்
பெரிய தனம் சிறிய இடை பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.
`கரிய நிறம் கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானகத்து மயிலினை ஒத்த சாயலையும், பெரிய மார்பகங்களையும், சிறுத்த இடையினையும் கொண்ட அவள் அருகில்வர அருகில்வர உள்ளம் அப்படியே உருகிப் போகும். ஐயோ, இவள் தெருவில் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச் சொல்லுதல் வேண்டும்` என உருகிப் பேசுகிறான். கம்பன் ராமனை `ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்று உருகுவதை நினைவூட்டுகிறது. சந்தமும் கூட கம்பனது சந்தமே.
அவள் அருகில் வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசிக்கிறான். அவளது நாசியைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவளிடமே கேட்கிறான்:
கொல்உலை வேல் கயல் கண்
.....கொவ்வையங் கனிவாய் மாதே!
நல்அணி மெய்யில் பூண்டு
.....நாசிகா பரண மீதில்
சொல்அரில் குன்றி தேடிச்
.....சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்
.....புதைத்தனள் வெண்முத்து என்றாள்.
''கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிக் கூர்மை செய்யப்பட்ட வேலாயுதத்தையும், கயல்மீனையும் போன்ற கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையையும் உடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களை தேகத்தில் அணிந்து மூக்கில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை அணிந்து கொண்ட காரணம் யாதோ?"
அதற்கு அந்தப் பெண் வெட்கம் கொண்டு தனது கண்களையும் சிவந்த வாயையும் மூடிக் கொண்டு, ''அது குன்றிமணி அன்று; வெண்மை நிறமுடய முத்து'' என்றாள்.
அப்பெண்ணின் வாய்ச் சிவப்பாலும் கண் மையின் கருப்பாலும் வெண்மையான முத்து குன்றிமணி போலத் தோன்றியது என்பது குறிப்பு. அவள் வாயையும் கண்ணையும் மூடியதும், முத்து வெண்மையாக விளங்கியது. (அரில் - குற்றம்)
இன்னும் இது போன்ற நயமான அநேக சிருங்கார ரசப் பாடல்கள் நிறைந் துள்ள இலக்கியப்
பெட்டகம் விவேக சிந்தாமணி.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
விவேக சிந்தாமணி விருந்து -9
காதலில் மலர்ந்த கவிதைகள்:
விவேக சிந்தாமணி ஒரு பல்சுவைக் களஞ்சியம். `எல்லாப் பொருளும் இதன் பாலுள' என்று திருக்குறளைச் சொல்வது போல, `எல்லாச் சுவையும் இதன்பால் உள' என்று விவேக சிந்தாமணியைச் சொல்லலாம். மென்மைமையான காதல் உணர்வைவைச் சித்தரிக்கும் இனிய பாடல்கள் பல இதில் உள்ளன.
ஒரு தலைவன் தன் தலைவியை இப்படிப் புகழ்கிறான்:
வண்டு மொய்த் தனைய கூந்தல்
.....மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
.....கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
.....கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க்கு எல்லாம்
.....அமுதம் என்று அளிக்கலாமே.
`என் காதலி வண்டுகள் மொய்த்தாற் போன்ற கூந்தலை உடையவள்; கயல்மீனைப் போன்ற விழிகளை உடையவள்; கிளியின் பேச்சு போன்ற மொழியினள்; `மதனக் களஞ்சியம்' என்ற கொடி போன்ற இவளது வாயின் நீர் கற்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, பழத்தோடு கூடிய பாகோ அறியேன். ஆனாலும் அதனைத் தேவர்கள் முனிவர் எல்லோருக்கும் அமுதம் என்று கொடுக்கலாம்' என்று புகழ்ந்துரைக்கிறான்.
(பண்டாரம்- களஞ்சியம்)
அதோடு மட்டுமல்ல அவள் மன்மதனும் மயங்கிப் போகும் மயக்கத்தினைத் தரக் கூடியவள் என்கிறான்:
அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகம் கண்டுஎதிர் செஞ்சிலை மாறனும்
கலகமே செயும் கண் இதுவாம் என
மலரம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.
`ஒருதடவை - கரும்பு வில்லை உடையவனான மன்மதன், என் காதலியைப் பார்த்தான். வாளாயுதத்தைப் போன்ற கண்களை உடைய அவளது அழகிய நெற்றியில் உள்ள பொட்டின் அழகைக் கண்டான். இவளுடைய கண்கள் சாதாரணமானவை அல்ல - கலகம் விளைவிப்பவை, இவள் முன்னே நம் அம்புகளுக்கு வேலை இல்லை எனக் கருதி, தன் கையில் உள்ள மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்னர் வைத்து வணங்கினான் தெரியுமா?' என்கிறான்.
( அலகு வாள் - வாளாயுதம்; ஆயிழை - பெண்; நுதல் - நெற்றி; செஞ்சிலை - செவ்விய வில்; மாறன் - மன்மதன் )
அவளை முதன் முறையாகக் கண்டபோது தனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியையும், மயக்கத்தையும் சொல்கிறான்:
அருகில் இவள், அருகில் இவள், அருகில் வர உருகும்,
கரிய குழல் மேனி இவள் கானமயில் சாயல்
பெரிய தனம் சிறிய இடை பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.
`கரிய நிறம் கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானகத்து மயிலினை ஒத்த சாயலையும், பெரிய மார்பகங்களையும், சிறுத்த இடையினையும் கொண்ட அவள் அருகில்வர அருகில்வர உள்ளம் அப்படியே உருகிப் போகும். ஐயோ, இவள் தெருவில் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச் சொல்லுதல் வேண்டும்` என உருகிப் பேசுகிறான். கம்பன் ராமனை `ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்று உருகுவதை நினைவூட்டுகிறது. சந்தமும் கூட கம்பனது சந்தமே.
அவள் அருகில் வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசிக்கிறான். அவளது நாசியைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவளிடமே கேட்கிறான்:
கொல்உலை வேல் கயல் கண்
.....கொவ்வையங் கனிவாய் மாதே!
நல்அணி மெய்யில் பூண்டு
.....நாசிகா பரண மீதில்
சொல்அரில் குன்றி தேடிச்
.....சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்
.....புதைத்தனள் வெண்முத்து என்றாள்.
''கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிக் கூர்மை செய்யப்பட்ட வேலாயுதத்தையும், கயல்மீனையும் போன்ற கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையையும் உடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களை தேகத்தில் அணிந்து மூக்கில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை அணிந்து கொண்ட காரணம் யாதோ?"
அதற்கு அந்தப் பெண் வெட்கம் கொண்டு தனது கண்களையும் சிவந்த வாயையும் மூடிக் கொண்டு, ''அது குன்றிமணி அன்று; வெண்மை நிறமுடய முத்து'' என்றாள்.
அப்பெண்ணின் வாய்ச் சிவப்பாலும் கண் மையின் கருப்பாலும் வெண்மையான முத்து குன்றிமணி போலத் தோன்றியது என்பது குறிப்பு. அவள் வாயையும் கண்ணையும் மூடியதும், முத்து வெண்மையாக விளங்கியது. (அரில் - குற்றம்)
இன்னும் இது போன்ற நயமான அநேக சிருங்கார ரசப் பாடல்கள் நிறைந் துள்ள இலக்கியப்
பெட்டகம் விவேக சிந்தாமணி.
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்.
Monday, June 13, 2005
களஞ்சியம் - 19
எனது களஞ்சியத்திலிருந்து - 19
விவேகசிந்தாமணி விருந்து - 8
மயக்க அணி:
ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.
ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் 'கெண்டைமீன்,கெண்டைமீன்' என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.
தண்டுலாவிய
.....தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
.....முகத்தருகு ஏந்தினாள்;
'கெண்டை' 'கெண்டை'
.....எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
.....நின்று தயங்கினாள்.
மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.
இன்னொரு பாடலில் கற்பனை செய்யத் தெரியாத ஆறறிவில்லாத ஜீவன் ஒன்றின் மயக்கத்தை பார்க்கிறோம்.
ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக் குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்த்¢ரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது. தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ, பழமோ? என்ன இது இது புதுமையாய் இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.
இன்னொருவித மயக்கத்தை வேறொரு பாடலில் காணலாம். தலைவன் ஒருவனின் கூற்றாக இப் பாடல் உள்ளது.
'வானத்தை முட்டும் உயரமான மேடை ஒன்றின்மீது என் தலைவி நின்று உலாவினாள்.அப்போது அவளது முகத்தை முழுமதி என்று நினைத்து நவக்கிரகங்களுள் ஒன்றான இராகு என்ற பாம்பு விழுங்குவதற்காக நெருங்கி வந்தது. அதைக் கண்டு பதறிய, பாகுபோன்ற இனிய மொழ்¢யுடைய என் காதலி பாதம் நோக நடக்க, அவளது சாயலைக் கொண்டு அழகிய தோகைமயில் எனப் பயந்து பின்வாங்கிவிட்டது' என்கிறான் தலவன்.
மாகமா மேடை மீதில்
.....மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி
.....இராகு வந்து உற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
.....பதறியே பாதம் வாங்கத்
தோகை மாமயில் என்று எண்ணித்
.....தொடர்ந்து அரா மீண்டது அன்றே.
( மாகமா - வானத்தை அளாவும்; ஏகமா மதி - முழுமதி; அரா - அரவம், பாம்பு; அன்றே - அசை )
- இப்படி இன்னும் அழகழகான அணி நலன்கள் நிறைந்த பாடல்கள் விவேக சிந்தாமணியில் நிறைந்துள்ளன.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
விவேகசிந்தாமணி விருந்து - 8
மயக்க அணி:
ஒரு பொருளை மற்றொரு பொருளாக எண்ணி மயங்கிச் செயலாற்றுவதை புனைந்து கூறுவது மயக்க அணியாகும். விவேகசிந்தாமணியில் மகிழ்ச்சியூட்டும் மயக்க அணியை உடைய பாடல்கள் சில உள்ளன.
ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் 'கெண்டைமீன்,கெண்டைமீன்' என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.
தண்டுலாவிய
.....தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை
.....முகத்தருகு ஏந்தினாள்;
'கெண்டை' 'கெண்டை'
.....எனக் கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள்
.....நின்று தயங்கினாள்.
மயக்க அணியை அற்புதமான பாடலால் புனைந்துரைக்கிறார் கவிஞர்.
இன்னொரு பாடலில் கற்பனை செய்யத் தெரியாத ஆறறிவில்லாத ஜீவன் ஒன்றின் மயக்கத்தை பார்க்கிறோம்.
ஒரு பெண் நாவல் மரங்கள் நிறைந்த சோலை ஒன்றில் உலாவிக் கொண்டிருந்தாள். மலர்களிலுள்ள தேனையுண்ட கரிய வண்டுகள் மயங்கி வழியில் கிடந்தன. அவற்றைக் கண்ட மங்கை அவற்றை நாவற் பழங்கள் என்று நினைத்து ஒன்றைத் தன் பெரிய கையில் எடுத்துக் குனிந்து பார்த்தாள். அப்போது அந்த வண்டு அவளது அழகிய முகத்தை வானத்துச் சந்த்¢ரன் அருகில் வந்து விட்டது என்று எண்ணி விட்டது. தான் கிடந்த அவளது சிவந்த கையைத் தாமரைமலர் என்று மயங்கி, சந்திரன் வந்தால் தாமரை மலர் குவிந்து விடுமே எனப் பயந்து 'குப்'பென எழும்பிப் பறந்து விட்டது. அதைக் கண்ட மங்கை 'பறந்தது வண்டோ, பழமோ? என்ன இது இது புதுமையாய் இருக்கிறது!' என்று மயங்கினாளாம்.
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
.....தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான் அதைச் சம்புவின் கனி என்று
.....தடங்கையால் எடுத்து முன் பார்த்தாள்
வான் உறு மதியம் வந்ததென்று எண்ணி
.....மலர்க் கரம் குவியுமென்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான்
.....புதுமையோ இதுவெனப் புகன்றாள்.
இன்னொருவித மயக்கத்தை வேறொரு பாடலில் காணலாம். தலைவன் ஒருவனின் கூற்றாக இப் பாடல் உள்ளது.
'வானத்தை முட்டும் உயரமான மேடை ஒன்றின்மீது என் தலைவி நின்று உலாவினாள்.அப்போது அவளது முகத்தை முழுமதி என்று நினைத்து நவக்கிரகங்களுள் ஒன்றான இராகு என்ற பாம்பு விழுங்குவதற்காக நெருங்கி வந்தது. அதைக் கண்டு பதறிய, பாகுபோன்ற இனிய மொழ்¢யுடைய என் காதலி பாதம் நோக நடக்க, அவளது சாயலைக் கொண்டு அழகிய தோகைமயில் எனப் பயந்து பின்வாங்கிவிட்டது' என்கிறான் தலவன்.
மாகமா மேடை மீதில்
.....மங்கை நின்று உலாவக் கண்டு
ஏகமா மதி என்று எண்ணி
.....இராகு வந்து உற்ற போது
பாகுசேர் மொழியினாளும்
.....பதறியே பாதம் வாங்கத்
தோகை மாமயில் என்று எண்ணித்
.....தொடர்ந்து அரா மீண்டது அன்றே.
( மாகமா - வானத்தை அளாவும்; ஏகமா மதி - முழுமதி; அரா - அரவம், பாம்பு; அன்றே - அசை )
- இப்படி இன்னும் அழகழகான அணி நலன்கள் நிறைந்த பாடல்கள் விவேக சிந்தாமணியில் நிறைந்துள்ளன.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Wednesday, March 30, 2005
களஞ்சியம் - 18
எனது களஞ்சியத்திலிருந்து - 18
விவேகசிந்தாமணி விருந்து - 7
புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்
விவேகசிந்தாமணியின் பாடல்களில் அதிகமும் பட்டியலிடுவதாகத் தோன்றுபவை. பயனற்ற ஏழு, பகைக்கக் கூடாத பன்னிருவர், விரைவில் அழிந்து போகக் கூடியவை, மற்றவர்க்குச் சொல்லத்தகாதவை, பெண் கொடுக்கத் தக்கவர், பெண் கொடுக்கத் தகாதவர் என்று நீதிகளைப் பட்டியல் இட்டே மனதில் பதியும்படி சொல்கிற பாடல்களே அதிகம். நீதியை மட்டுமல்ல சில நினைவூட்டல்களையும் பட்டியல்
இடும் பாடலும் உண்டு.
அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.
'தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு
தாளிதப் பொருள்கள் பாத்திரங்கள்
தாம்பு நீர்தேற்றும் ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கியுடன் கைவிளக்கு
கண்டகம் முகுரம் பூசை வஸ்துக்கள்
கழல் குடை அடிமை சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய்ப் பை
கரண்டகம் கண்டம் நல் உப்பில்
துண்டம் ஊறிய காய் கரண்டி நல்லெண்ணெய்
துட்டுடன் பூட்டு கைக்கத்தி
சொல்லிய இவைகள் குறைவரத் திருத்தித்
தொகுத்து வேற்று ஊர் செலும் மனிதன்
பெண்டுகள் துணையோடு எய்தும் வாகனனாய்ப்
பெருநிலை நீர்நிழல் விறகு
பின்னும் வேண்டுவ சேர் இடம் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக்கு அழகே.
(தண்டுலம் -அரிசி; நீர் தேற்றும் ஊன்றுகோல் - நீரின் ஆழத்தை அளவிடும் அளவுகோல்; கண்டகம் -அரிவாள்; முகுரம் - கண்ணாடி; கழல் - செருப்பு; அடைக்காய்ப் பை - வெற்றிலைப் பாக்குப் பை; கரண்டகம் - சுண்ணாம்புக் கரண்டகம்.)
'அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'
எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.
'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'
( கவிகை - குடை; காப்பிட்ட - பாதுகாப்பான )
விவேகசிந்தாமணி பட்டியலில் உள்ளவற்றில் காலத்திற் கேற்றபடி தேர்வு செய்த பட்டியலை புரட்சிக் கவிஞர் அளித்துள்ளார்.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்
விவேகசிந்தாமணி விருந்து - 7
புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்
விவேகசிந்தாமணியின் பாடல்களில் அதிகமும் பட்டியலிடுவதாகத் தோன்றுபவை. பயனற்ற ஏழு, பகைக்கக் கூடாத பன்னிருவர், விரைவில் அழிந்து போகக் கூடியவை, மற்றவர்க்குச் சொல்லத்தகாதவை, பெண் கொடுக்கத் தக்கவர், பெண் கொடுக்கத் தகாதவர் என்று நீதிகளைப் பட்டியல் இட்டே மனதில் பதியும்படி சொல்கிற பாடல்களே அதிகம். நீதியை மட்டுமல்ல சில நினைவூட்டல்களையும் பட்டியல்
இடும் பாடலும் உண்டு.
அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.
'தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு
தாளிதப் பொருள்கள் பாத்திரங்கள்
தாம்பு நீர்தேற்றும் ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கியுடன் கைவிளக்கு
கண்டகம் முகுரம் பூசை வஸ்துக்கள்
கழல் குடை அடிமை சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய்ப் பை
கரண்டகம் கண்டம் நல் உப்பில்
துண்டம் ஊறிய காய் கரண்டி நல்லெண்ணெய்
துட்டுடன் பூட்டு கைக்கத்தி
சொல்லிய இவைகள் குறைவரத் திருத்தித்
தொகுத்து வேற்று ஊர் செலும் மனிதன்
பெண்டுகள் துணையோடு எய்தும் வாகனனாய்ப்
பெருநிலை நீர்நிழல் விறகு
பின்னும் வேண்டுவ சேர் இடம் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக்கு அழகே.
(தண்டுலம் -அரிசி; நீர் தேற்றும் ஊன்றுகோல் - நீரின் ஆழத்தை அளவிடும் அளவுகோல்; கண்டகம் -அரிவாள்; முகுரம் - கண்ணாடி; கழல் - செருப்பு; அடைக்காய்ப் பை - வெற்றிலைப் பாக்குப் பை; கரண்டகம் - சுண்ணாம்புக் கரண்டகம்.)
'அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'
எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.
'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'
( கவிகை - குடை; காப்பிட்ட - பாதுகாப்பான )
விவேகசிந்தாமணி பட்டியலில் உள்ளவற்றில் காலத்திற் கேற்றபடி தேர்வு செய்த பட்டியலை புரட்சிக் கவிஞர் அளித்துள்ளார்.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்
Friday, March 11, 2005
களஞ்சியம் - 17
எனது களஞ்சியத்திலிருந்து -17: விவேகசிந்தாமணி விருந்து - 6
அற்பர் இயல்பு:
நம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திறார்கள். அவர்களை இனம் காணுவதெப்படி? அவர்களது இயல்புகளையும், அவர்களோடு சேர்வதால் ஏற்படும் பயன்களையும் பற்றி விவேகசிந்தாமணியில் அனேக பாடல்கள் உள்ளன.
அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.
இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.
நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
இப்படிப் பட்டவர் கல்வி கற்றாலாவது நல்லவராக மாற மாட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பாட்டில் இருக்கிறது.
தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.
வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.
( தூம்பு - வீட்டு வாயில்; துகள் - புழுதி, தூசி; துர்ச்சனர் - தீயவர், கீழானவர் )
என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப்பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில் லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர். இதைச் சுட்டுகிறது ஒரு பாடல்.
கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
பொருந்தக் காட்டும்;
சொற்பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே
சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக
நடக்கும்தானே.
( கமழ்நீர் - வாசனை நீர்; கத்தூரி - கஸ்தூரி; பொற்பு - அழகு; போதம் - அறிவு )
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
அற்பர் இயல்பு:
நம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திறார்கள். அவர்களை இனம் காணுவதெப்படி? அவர்களது இயல்புகளையும், அவர்களோடு சேர்வதால் ஏற்படும் பயன்களையும் பற்றி விவேகசிந்தாமணியில் அனேக பாடல்கள் உள்ளன.
அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.
இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.
நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
இப்படிப் பட்டவர் கல்வி கற்றாலாவது நல்லவராக மாற மாட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பாட்டில் இருக்கிறது.
தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.
வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.
( தூம்பு - வீட்டு வாயில்; துகள் - புழுதி, தூசி; துர்ச்சனர் - தீயவர், கீழானவர் )
என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப்பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில் லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர். இதைச் சுட்டுகிறது ஒரு பாடல்.
கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
பொருந்தக் காட்டும்;
சொற்பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே
சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக
நடக்கும்தானே.
( கமழ்நீர் - வாசனை நீர்; கத்தூரி - கஸ்தூரி; பொற்பு - அழகு; போதம் - அறிவு )
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Thursday, February 10, 2005
களஞ்சியம்-16
எனது களஞ்சியத்திலிருந்து - 16: விவேகசிந்தாமணி விருந்து - 5:
கூடாதவையும் தகாதவையும்:
வாழ்க்கைக்கு ஒவ்வாதவை, கூடாதவை, தகாதவை, துன்பம் தருபவைகளைக் குறிப்பிட்டு அவற்றை விலக்க அறிவுறுத்துகிறது விவேகசிந்தாமணி.
'செய்யக் கூடாதவை' எவை என்று குறிப்பிடும் பாடல்:
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க! - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யொடு இடைமிடைந்த சொல்!
தக்க சான்றோர்க்கு உதவுதலால் தனக்கு இழப்பு ஏற்பட்டு கெடுதல் நேரும் என்றாலும் அதைத் தவிர்ப்பதால் தனக்கு நன்மை பெற வேண்டி அவர்க்குத் தீமை செய்ய எண்ணுதல் கூடாது. பட்டினி கிடந்து தன் உடல் அழிய நேரினும் கீழ்மைப் பண்புகளை உடைய உண்ணத்தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணுதல் கூடாது. வையகமே கிடைக்கும் என்றாலும் பொய்யுடன் கூடிய சொல்லைச் சொல்லு
தல் கூடாது.
சமூகத்தில் பகைக்கக் கூடாதவர் யார் யார் என்று ஒரு பாடல் பட்டியலிடுகிறது.
மன்னவன், கணக்கன், பார்ப்பான்,
வலுவுள்ளோன், மந்திரவாதி,
பொன்னுளவன், குருக்கள்,
புலவன், பண்டிதன், அமைச்சன்,
அன்னம் செய்திடுவோன், எங்கும்
அடங்காத துட்டனாம் இப்
பன்னிரு பேரொடு என்றும்
பகைகன விலும்கூ டாதே.
நாடாளுபவன், ஊர்க் கணக்கன், அந்தணன், உடல் வலிமையுடையவன், மந்திரவாதி, மிக்க செல்வம் உடையவன், ஆசிரியன், புலவன், மருத்துவன், அமைச்சன், சமையல் செய்பவன், எங்கும் அடங்காத பொல்லாதவன், என்கிற இந்தப் பன்னிரெண்டு பேர்களுடன் பகை கொள்வது யாருக்கும் எப்போதும் கனவிலும் ஆகாததாகும்.
மேற்சொன்னவர்களை விரோதித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவ்வோம் தானே? எனினும் எச்சரிக்கிறது விவேக சிந்தாமணி
எதெல்லாம் செய்யாதவன் எப்படிக் கருதப்படுவான் என்றும் ஒரு பாடல் சொல்லுகிறது:
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்;
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்;
ஒர் தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்;
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்;
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலப்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்.
பரிவுசொலித் தழுவினவன் பசப்பன் ஆகும்;
பசிப்பவர்க்கு இட்டுண்ணான் பாவியாமே.
மதிக்கத் தக்க நல்ல நூல்களைக் கல்லாதவன் மூடன். அளவறிந்து பேசாதவன் குற்றமுடையவன். ஒரு தொழிலையும் செய்யாதிருப்பவன் மூதேவி. ஒரு செயலுக்கும் பயன் படாதவன் சோம்பேறி. அறிவுடையோர் முன்பாக மரம் போல நின்று அவரை வணங்காதிருப்பவன் பேயன்.
உள்ளத்தில் உண்மையான அன்பில்லாமல் ஆனால் அன்புடையவன் போலக் காட்டித் தழுவுபவன் பசப்பல்காரன். பசியுள்ளவருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாவான்.
( கசடு - குற்றம்; முகடி - மூத்தவள், மூதேவி; )
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்வதால் அவற்றின் மதிப்பு கெடும். அவை என்னென்ன என்பதைக் கீழ்க் கண்ட பாடல் சொல்கிறது:
குரு உபதேசம், மாதர்
கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,
வயதுறச் செய்த தர்மம்,
அரிய மந்திரம், விசாரம்,
ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும் தெரிய ஒண்ணாது
உரைத்திடின் அழிந்துபோமே.
ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம், மாதரிடத்து அனுபவித்த இன்பம், தன் மனதில் பொருந்திய நியாயம், தான் கற்ற கல்வி, தன்னால் செய்யப்பட்ட தர்மம், அரியதான மந்திரம், தனது கவலை, தனது வல்லமை என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும் தெரியச்
சொல்லுதல் கூடாது. சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.
( விசாரம் - கவலை )
இவ்வாறு இன்னும் பல அரிய அற்¢வுரைகளையும் எளிய நடையில் விவேக சிந்தாமணி தருகிறது.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
கூடாதவையும் தகாதவையும்:
வாழ்க்கைக்கு ஒவ்வாதவை, கூடாதவை, தகாதவை, துன்பம் தருபவைகளைக் குறிப்பிட்டு அவற்றை விலக்க அறிவுறுத்துகிறது விவேகசிந்தாமணி.
'செய்யக் கூடாதவை' எவை என்று குறிப்பிடும் பாடல்:
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க! - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யொடு இடைமிடைந்த சொல்!
தக்க சான்றோர்க்கு உதவுதலால் தனக்கு இழப்பு ஏற்பட்டு கெடுதல் நேரும் என்றாலும் அதைத் தவிர்ப்பதால் தனக்கு நன்மை பெற வேண்டி அவர்க்குத் தீமை செய்ய எண்ணுதல் கூடாது. பட்டினி கிடந்து தன் உடல் அழிய நேரினும் கீழ்மைப் பண்புகளை உடைய உண்ணத்தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணுதல் கூடாது. வையகமே கிடைக்கும் என்றாலும் பொய்யுடன் கூடிய சொல்லைச் சொல்லு
தல் கூடாது.
சமூகத்தில் பகைக்கக் கூடாதவர் யார் யார் என்று ஒரு பாடல் பட்டியலிடுகிறது.
மன்னவன், கணக்கன், பார்ப்பான்,
வலுவுள்ளோன், மந்திரவாதி,
பொன்னுளவன், குருக்கள்,
புலவன், பண்டிதன், அமைச்சன்,
அன்னம் செய்திடுவோன், எங்கும்
அடங்காத துட்டனாம் இப்
பன்னிரு பேரொடு என்றும்
பகைகன விலும்கூ டாதே.
நாடாளுபவன், ஊர்க் கணக்கன், அந்தணன், உடல் வலிமையுடையவன், மந்திரவாதி, மிக்க செல்வம் உடையவன், ஆசிரியன், புலவன், மருத்துவன், அமைச்சன், சமையல் செய்பவன், எங்கும் அடங்காத பொல்லாதவன், என்கிற இந்தப் பன்னிரெண்டு பேர்களுடன் பகை கொள்வது யாருக்கும் எப்போதும் கனவிலும் ஆகாததாகும்.
மேற்சொன்னவர்களை விரோதித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவ்வோம் தானே? எனினும் எச்சரிக்கிறது விவேக சிந்தாமணி
எதெல்லாம் செய்யாதவன் எப்படிக் கருதப்படுவான் என்றும் ஒரு பாடல் சொல்லுகிறது:
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்;
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்;
ஒர் தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்;
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்;
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலப்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்.
பரிவுசொலித் தழுவினவன் பசப்பன் ஆகும்;
பசிப்பவர்க்கு இட்டுண்ணான் பாவியாமே.
மதிக்கத் தக்க நல்ல நூல்களைக் கல்லாதவன் மூடன். அளவறிந்து பேசாதவன் குற்றமுடையவன். ஒரு தொழிலையும் செய்யாதிருப்பவன் மூதேவி. ஒரு செயலுக்கும் பயன் படாதவன் சோம்பேறி. அறிவுடையோர் முன்பாக மரம் போல நின்று அவரை வணங்காதிருப்பவன் பேயன்.
உள்ளத்தில் உண்மையான அன்பில்லாமல் ஆனால் அன்புடையவன் போலக் காட்டித் தழுவுபவன் பசப்பல்காரன். பசியுள்ளவருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாவான்.
( கசடு - குற்றம்; முகடி - மூத்தவள், மூதேவி; )
எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்வதால் அவற்றின் மதிப்பு கெடும். அவை என்னென்ன என்பதைக் கீழ்க் கண்ட பாடல் சொல்கிறது:
குரு உபதேசம், மாதர்
கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,
வயதுறச் செய்த தர்மம்,
அரிய மந்திரம், விசாரம்,
ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும் தெரிய ஒண்ணாது
உரைத்திடின் அழிந்துபோமே.
ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம், மாதரிடத்து அனுபவித்த இன்பம், தன் மனதில் பொருந்திய நியாயம், தான் கற்ற கல்வி, தன்னால் செய்யப்பட்ட தர்மம், அரியதான மந்திரம், தனது கவலை, தனது வல்லமை என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும் தெரியச்
சொல்லுதல் கூடாது. சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.
( விசாரம் - கவலை )
இவ்வாறு இன்னும் பல அரிய அற்¢வுரைகளையும் எளிய நடையில் விவேக சிந்தாமணி தருகிறது.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Tuesday, January 18, 2005
களஞ்சியம் - 15
எனது களஞ்சியத்திலிருந்து - 15 : விவேகசிந்தாமணி விருந்து - 4
ஆபத்தும் அழிவும்:
விவேகசிந்தாமணி நம்பிக்கை வறட்சியையே அதிகம் பேசுவதாகத் தோன்றும். ஆனால் நம்பிக்கை ஊட்டுவதும், அழிவு ஆபத்து பற்றி எச்சரிக்கை அளிப்பதுமான பாடல்களும் இருக்கின்றன. விரைந்து உயிர் இழக்கச் செய்வதான சில ஆபத்தான செயல்களை ஒரு பாடல் பட்டியலிடுகிறது.
அரவினை ஆட்டுவாரும், அருங்களிறு ஊட்டுவாரும், இரவினில் தனிப் போவாரும், எறியும் நீர் நீந்துவாரும், விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும், அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர்தாமே.
பாம்பை எடுத்து ஆட்டுபவர்களும், அரிய யானையை ஆட்டுவிக்கும் பாகர்களும், இரவிலே தனியே அயல் ஊர் செல்பவர்களும், நீர்நிலையில் நீந்துபவர்களும், மணமிக்க கூந்தலையுடைய வேசியரை விரும்புகிறவர்களூம், மன்னரைப் பகைத்துக் கொண்ட வர்களும் அதிலேயே தம் இன்னுயிரை இழப்பர்.
விரைவில் அழிந்துபோகக்கூடியவை எவை என்றும் ஒரு பாடல் எச்சரிக்கிறது:
மூப்பிலாக் குமரி வாழ்க்கை,
முனையிலா அரசன் வீரம்,
காப்பிலா விளைந்த பூமி,
கரையிலாதிருந்த ஏரி,
கோப்பிலான் கொண்ட கோலம்,
குருவிலான் கொண்ட ஞானம்,
ஆப்பிலாச் சகடு போலே
அழியும் என்று உரைக்கலாமே.
தனக்கு மூத்தவர் துணையில்லாமல் தனியே வாழும் இளம் பெண்ணின் வாழ்வும், கோபமில்லாத அரசனின் வீரமும், காவல் அற்ற விளைச்சலை உடைய நிலமும், கரை இல்லாத ஏரியும், தன்னிடம் இருக்க வேண்டியவை இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசாரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும், அச்சாணி இல்லாத வண்டியைப் போல அழிவுக்கு ஆட்படும் என்று சொல்லலாம்.
இன்னொரு வகை ஆகாத செயல்களையும் ஒரு பாடலில் காணலாம்:
தந்தை உரை தட்டியவன், தாய் உரை இகழ்ந்தோன்,
அந்தம் உறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தம் உறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.
தந்தையின் சொல்லைக் கேளாது மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து ஒதுக்கியவன், நல்ல குருவின் ஆணையை மறந்தவன், அழகிய வேத நெறிகளைக் கடந்தவன் ஆகிய இந்த நான்கு பேரும் சிவந்த அக்கினிவாயின் கண் அடைவது உண்மை என அறியவும்.
இயல்புக்கு மாறாக நடப்பதாலும் கேடு விளையும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:
நிட்டூரமாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் - முட்டவே
கூசி நிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.
குடிமக்களைக் கொடுமைப் படுத்தி நிதி திரட்டும் மன்னவன் அழிவான். தனக்கு அளித்த தானத்தைப் போதும் என்று பாராட்டாத யாசகனும் அழிவான். அயல் ஆடவனிடம் நெருங்கக் கூச்சமடைந்து கற்பு நிலையில் நில்லாத குலமகளும் கெடுவாள். தன்னை விரும்பி வந்தவரிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்படும் வேசியும் கெடுவாள்.
இப்படி இன்னும் பல எச்சரிக்கைகளையும் அறிவார்ந்த நெறி முறைகளையும் வரும் பாடல்களில் காணலாம்.
-தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.
ஆபத்தும் அழிவும்:
விவேகசிந்தாமணி நம்பிக்கை வறட்சியையே அதிகம் பேசுவதாகத் தோன்றும். ஆனால் நம்பிக்கை ஊட்டுவதும், அழிவு ஆபத்து பற்றி எச்சரிக்கை அளிப்பதுமான பாடல்களும் இருக்கின்றன. விரைந்து உயிர் இழக்கச் செய்வதான சில ஆபத்தான செயல்களை ஒரு பாடல் பட்டியலிடுகிறது.
அரவினை ஆட்டுவாரும், அருங்களிறு ஊட்டுவாரும், இரவினில் தனிப் போவாரும், எறியும் நீர் நீந்துவாரும், விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும், அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர்தாமே.
பாம்பை எடுத்து ஆட்டுபவர்களும், அரிய யானையை ஆட்டுவிக்கும் பாகர்களும், இரவிலே தனியே அயல் ஊர் செல்பவர்களும், நீர்நிலையில் நீந்துபவர்களும், மணமிக்க கூந்தலையுடைய வேசியரை விரும்புகிறவர்களூம், மன்னரைப் பகைத்துக் கொண்ட வர்களும் அதிலேயே தம் இன்னுயிரை இழப்பர்.
விரைவில் அழிந்துபோகக்கூடியவை எவை என்றும் ஒரு பாடல் எச்சரிக்கிறது:
மூப்பிலாக் குமரி வாழ்க்கை,
முனையிலா அரசன் வீரம்,
காப்பிலா விளைந்த பூமி,
கரையிலாதிருந்த ஏரி,
கோப்பிலான் கொண்ட கோலம்,
குருவிலான் கொண்ட ஞானம்,
ஆப்பிலாச் சகடு போலே
அழியும் என்று உரைக்கலாமே.
தனக்கு மூத்தவர் துணையில்லாமல் தனியே வாழும் இளம் பெண்ணின் வாழ்வும், கோபமில்லாத அரசனின் வீரமும், காவல் அற்ற விளைச்சலை உடைய நிலமும், கரை இல்லாத ஏரியும், தன்னிடம் இருக்க வேண்டியவை இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசாரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும், அச்சாணி இல்லாத வண்டியைப் போல அழிவுக்கு ஆட்படும் என்று சொல்லலாம்.
இன்னொரு வகை ஆகாத செயல்களையும் ஒரு பாடலில் காணலாம்:
தந்தை உரை தட்டியவன், தாய் உரை இகழ்ந்தோன்,
அந்தம் உறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தம் உறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.
தந்தையின் சொல்லைக் கேளாது மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து ஒதுக்கியவன், நல்ல குருவின் ஆணையை மறந்தவன், அழகிய வேத நெறிகளைக் கடந்தவன் ஆகிய இந்த நான்கு பேரும் சிவந்த அக்கினிவாயின் கண் அடைவது உண்மை என அறியவும்.
இயல்புக்கு மாறாக நடப்பதாலும் கேடு விளையும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:
நிட்டூரமாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் - முட்டவே
கூசி நிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.
குடிமக்களைக் கொடுமைப் படுத்தி நிதி திரட்டும் மன்னவன் அழிவான். தனக்கு அளித்த தானத்தைப் போதும் என்று பாராட்டாத யாசகனும் அழிவான். அயல் ஆடவனிடம் நெருங்கக் கூச்சமடைந்து கற்பு நிலையில் நில்லாத குலமகளும் கெடுவாள். தன்னை விரும்பி வந்தவரிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்படும் வேசியும் கெடுவாள்.
இப்படி இன்னும் பல எச்சரிக்கைகளையும் அறிவார்ந்த நெறி முறைகளையும் வரும் பாடல்களில் காணலாம்.
-தொடர்வேன்.
-வே.சபாநாயகம்.
Wednesday, January 05, 2005
களஞ்சியம்-14
எனது களஞ்சியத்திலிருந்து - 14: விவேகசிந்தாமணி விருந்து - 3:
செல்வமும் வறுமையும்:
விவேகசிந்தாமணி ஒரு யதார்த்த இலக்கியம். வாழ்க்கையில் நாம் அனுபவத்தில் காண்பவற்றையே ஒருஎச்சரிக்கை போல எடுத்துச் சொல்பவை அதன் பாடல்கள். செல்வம் இருப்பவர்க்கு நடைமுறையில் இருக்கும் மதிப்பும் அது இல்லாமல் போனால் ஏற்படும் சிறுமையும் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் ஒருவனுக்கு வாய்க்குமானால் உலகம் அவனுக்கு எப்படி மரியாதை தரும், அவன் வகை கெட்டுப் போனால் எப்படி அவனை நடத்தும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:
பொன்னொடு மணி உண்டானால்
புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
சாதியில் மணமும் செய்வர்;
மன்னாராய் இருந்த பேர்கள்
வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் ஆரோ என்று
பேசுவார் ஏசுவாரே!
- ஒருவனுக்குப் பொன்னும் புகழும் உண்டானால், அவன் புலையன் என்று மக்களால் இழித்துரைக்கப் பட்டவன் என்றாலும் அவனைத் தம் உறவினன் என்று வலிந்து போய் உறவை ஏற்படுத்திக் கொண்டு தம்மையும் புகழ்ந்து கொண்டு தம்மைவிட உயர்ந்த சாதியில் திருமணமும் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் அரசராக இருந்தவர் பொருள் வரும் வழியற்றுக் கெட்டுப் போவார் எனின், 'அவர் யாரோ' என்று இழித்துப் பேசுவார்கள்.
(கிளைஞன் - உறவினன்)
இன்னொரு பாடல் 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற குறள் வாக்கை ஒட்டி, இவ்வுலகில் பொருள் இல்லாதவருக்கு என்னென்ன இல்லாமல் போகும் என்பதைப் பட்டியலிடுகிறது:
பொருள் இல்லார்க் கின்பம் இல்லை;
புண்ணியம் இல்லை; என்றும்
மருவிய கீர்த்தி இல்லை;
மைந்தரின் பெருமை இல்லை;
கருதிய கருமம் இல்லை;
கதிபெற வழியும் இல்லை;
பெருநிலம் தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகு வாரே.
- இவ்வுலகத்தில் பொருள் இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது; புண்ணியம் ஏற்படுவதில்லை; பொருந்திய புகழ் விளைவதில்லை; மக்களால் பெருமை உண்டாவதில்லை; நினைத்தபடி ஒரு செயலை செய்து முடிக்க முடிவதில்லை; மோட்சம் பெறவும் வழி இல்லை; இந்தப் பெரிய உலகில் அவர் நடமாடும் பிணமாகமே திரிவார்கள்.
அப்படிப் பொருள் இருந்தாலும் அவரது நிலைமை தளர்ந்தால் என்ன ஆகும் என்பதையும் ஒரு பாடல் சொல்கிறது:
நிலை தளர்ந்திட்டபோது
நீணிலத்து உறவும் இல்லை;
சலம் இருந்து அகன்றபோது
தாமரைக்கு அருக்கன் கூற்றம்;
பலவனம் எரியும்போது
பற்று தீக்கு உறவாம் காற்று;
மெலிவது விளக்கே ஆகில்
மீண்டும் அக்காற்றே கூற்றாம்.
( சலம் - நீர்; அருக்கன் - கதிரவன், சூரியன் )
- நீர் நிறைந்த பொய்கையில் உள்ள தாமரை மலருக்கு நட்பாய் இருந்த கதிரவனே நீர் வற்றிய காலத்தில் அதற்குப் பகையாய் மாறி அழிப்பான். அடர்ந்த தீக் காடுகள் தீப்பற்றி எரியும்போது அத் தீயினுக்கு காற்று உதவியாய் நிற்கும். அதே தீ ஒரு சிறுவிளக்கைப் போலச் சுருங்கினால் அதே காற்று எமனாகி அந்தத் தீயினை அழித்து விடும். அதுபோல செல்வம் நிறைந்த காலத்தில் நெருக்கமாய் இருந்தவர்கள் அது தவறிய காலத்தில் உறவு நீங்கிப் பகைவர் ஆவார்கள்.
இப்படி செல்வந்தராயிருந்த ஒருவர் வறியவர் ஆக நேர்ந்தால் அவரது நிலைமை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக மாறும் என்பதை ஒரு பாடல் மிக உருக்கமாகச் சொல்கிறது:
தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரம் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்;
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்:
உலகெலாம் பழிக்கும் தானே.
- ஒருவனுக்குத் தாங்க முடியாதபடி வறுமை வருமானால் நாலுபேர் கூடியிருக்கிற சபைக்குள் செல்ல மனம் வெட்கப்படும். வேங்கையைப் போன்ற அவனது வீரம் குறையும். விருந்தினர் வந்தால் அவரை எப்படி உபசரிக்கப் போகிறோம் என்று, அவரை எதிர் கொள்ள மனம் கூசும். பூங்கொடி போன்ற மென்மையான மனைவிக்கு - என்ன சொல்லி இழித்துரைப்பாளோ என - அஞ்ச வேண்டி வரும். அற்பர்கள் எல்லாம் மலினமாய்க் கருதி சகவாசம் கொள்ள விழைய, அவருக்கு இணக்கம் காட்ட நேரிடும். மென்மேலும் வளரவேண்டிய அறிவு குறையும். உலமெலாம் அவனைப் பழிக்கும்.
இப்படி இன்னும் பல நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை விவேகசிந்தாமணி நூல் நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறது.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
செல்வமும் வறுமையும்:
விவேகசிந்தாமணி ஒரு யதார்த்த இலக்கியம். வாழ்க்கையில் நாம் அனுபவத்தில் காண்பவற்றையே ஒருஎச்சரிக்கை போல எடுத்துச் சொல்பவை அதன் பாடல்கள். செல்வம் இருப்பவர்க்கு நடைமுறையில் இருக்கும் மதிப்பும் அது இல்லாமல் போனால் ஏற்படும் சிறுமையும் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் ஒருவனுக்கு வாய்க்குமானால் உலகம் அவனுக்கு எப்படி மரியாதை தரும், அவன் வகை கெட்டுப் போனால் எப்படி அவனை நடத்தும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:
பொன்னொடு மணி உண்டானால்
புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
சாதியில் மணமும் செய்வர்;
மன்னாராய் இருந்த பேர்கள்
வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் ஆரோ என்று
பேசுவார் ஏசுவாரே!
- ஒருவனுக்குப் பொன்னும் புகழும் உண்டானால், அவன் புலையன் என்று மக்களால் இழித்துரைக்கப் பட்டவன் என்றாலும் அவனைத் தம் உறவினன் என்று வலிந்து போய் உறவை ஏற்படுத்திக் கொண்டு தம்மையும் புகழ்ந்து கொண்டு தம்மைவிட உயர்ந்த சாதியில் திருமணமும் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் அரசராக இருந்தவர் பொருள் வரும் வழியற்றுக் கெட்டுப் போவார் எனின், 'அவர் யாரோ' என்று இழித்துப் பேசுவார்கள்.
(கிளைஞன் - உறவினன்)
இன்னொரு பாடல் 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற குறள் வாக்கை ஒட்டி, இவ்வுலகில் பொருள் இல்லாதவருக்கு என்னென்ன இல்லாமல் போகும் என்பதைப் பட்டியலிடுகிறது:
பொருள் இல்லார்க் கின்பம் இல்லை;
புண்ணியம் இல்லை; என்றும்
மருவிய கீர்த்தி இல்லை;
மைந்தரின் பெருமை இல்லை;
கருதிய கருமம் இல்லை;
கதிபெற வழியும் இல்லை;
பெருநிலம் தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகு வாரே.
- இவ்வுலகத்தில் பொருள் இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது; புண்ணியம் ஏற்படுவதில்லை; பொருந்திய புகழ் விளைவதில்லை; மக்களால் பெருமை உண்டாவதில்லை; நினைத்தபடி ஒரு செயலை செய்து முடிக்க முடிவதில்லை; மோட்சம் பெறவும் வழி இல்லை; இந்தப் பெரிய உலகில் அவர் நடமாடும் பிணமாகமே திரிவார்கள்.
அப்படிப் பொருள் இருந்தாலும் அவரது நிலைமை தளர்ந்தால் என்ன ஆகும் என்பதையும் ஒரு பாடல் சொல்கிறது:
நிலை தளர்ந்திட்டபோது
நீணிலத்து உறவும் இல்லை;
சலம் இருந்து அகன்றபோது
தாமரைக்கு அருக்கன் கூற்றம்;
பலவனம் எரியும்போது
பற்று தீக்கு உறவாம் காற்று;
மெலிவது விளக்கே ஆகில்
மீண்டும் அக்காற்றே கூற்றாம்.
( சலம் - நீர்; அருக்கன் - கதிரவன், சூரியன் )
- நீர் நிறைந்த பொய்கையில் உள்ள தாமரை மலருக்கு நட்பாய் இருந்த கதிரவனே நீர் வற்றிய காலத்தில் அதற்குப் பகையாய் மாறி அழிப்பான். அடர்ந்த தீக் காடுகள் தீப்பற்றி எரியும்போது அத் தீயினுக்கு காற்று உதவியாய் நிற்கும். அதே தீ ஒரு சிறுவிளக்கைப் போலச் சுருங்கினால் அதே காற்று எமனாகி அந்தத் தீயினை அழித்து விடும். அதுபோல செல்வம் நிறைந்த காலத்தில் நெருக்கமாய் இருந்தவர்கள் அது தவறிய காலத்தில் உறவு நீங்கிப் பகைவர் ஆவார்கள்.
இப்படி செல்வந்தராயிருந்த ஒருவர் வறியவர் ஆக நேர்ந்தால் அவரது நிலைமை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக மாறும் என்பதை ஒரு பாடல் மிக உருக்கமாகச் சொல்கிறது:
தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரம் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்;
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்:
உலகெலாம் பழிக்கும் தானே.
- ஒருவனுக்குத் தாங்க முடியாதபடி வறுமை வருமானால் நாலுபேர் கூடியிருக்கிற சபைக்குள் செல்ல மனம் வெட்கப்படும். வேங்கையைப் போன்ற அவனது வீரம் குறையும். விருந்தினர் வந்தால் அவரை எப்படி உபசரிக்கப் போகிறோம் என்று, அவரை எதிர் கொள்ள மனம் கூசும். பூங்கொடி போன்ற மென்மையான மனைவிக்கு - என்ன சொல்லி இழித்துரைப்பாளோ என - அஞ்ச வேண்டி வரும். அற்பர்கள் எல்லாம் மலினமாய்க் கருதி சகவாசம் கொள்ள விழைய, அவருக்கு இணக்கம் காட்ட நேரிடும். மென்மேலும் வளரவேண்டிய அறிவு குறையும். உலமெலாம் அவனைப் பழிக்கும்.
இப்படி இன்னும் பல நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை விவேகசிந்தாமணி நூல் நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறது.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Tuesday, December 14, 2004
களஞ்சியம் - 13
எனது களஞ்சியத்திலிருந்து - 13: விவேகசிந்தாமணி விருந்து - 2
பயனற்றவை:
காந்தியடிகள் 'ஒழுக்கமில்லாத கல்வி, நாணயமில்லாத வியாபாரம்........என்பதாக பயனற்ற ஏழைக் குறிப்பிடுவார். விவேகசிந்தாமணி இப்படிப் பல 'பயனற்றவை'களைப் பட்டியலிடுகிறது.
"தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறிஞர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர்தம் மௌன நாசமும்,
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்."
தெளிவு இல்லாத கல்வி கற்றவர்களின் கர்வமும் மன ஊக்கமும், செல்வம் இல்லாத வறியவரின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லாத ஞானியரின் மௌன அழிவும், பிள்ளைப்பேறு இல்லாத பெண்களின் கற்பும் பயனற்றவை. இவை நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை எனலாம்.
இன்னொரு விதமான ஆறு பயனற்றவைகளும் சொல்லப் பட்டுள்ளன. அவை-
"திருப்பதி மிதியாப் பாதம்,
சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள்,
இனியசொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே".
இறைவன் எழுந்தருளி உள்ள தலங்களை மிதியாத பாதமும், சிவனின் திருவடியை வணங்காத தலையும், யாசிப்பவர்க்கு ஏதும் அளிக்காத கைகளும், இனிய சொற்களைக் கேளாத செவிகளும், தம்மை ரட்சிப்பவர்கள் கண்ணீர் பொழிவதைப் பார்த்தும் உயிர் கொடாத தேகமும் பயனில்லாதவை. இந்த ஆறும் இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் ஒன்றும் பயன் இராது.
அடுத்து, பயனில்லாத ஏழினை முதல் பாடல் கூறுகிறது:
"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தை தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே".
மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும் - என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.
தக்க சமயத்துக்கு உதவாத இன்னொரு எட்டு வகை பற்றியும் விவேகசிந்தாமணி கூறுகிறது. அவை-
"தன்னுடன் பிறவாத் தம்பி,
தனைப்பெறாத் தாயார் தந்தை,
அன்னியரிடத்துச் செல்வம்,
அரும்பொருள், வேசியாசை,
மன்னிய ஏட்டின் கல்வி,
மறு மனையாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் எட்டும்,
இடுக்கத்துக்கு உதவா தன்றே".
உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தை, அயலவரிடம் உள்ள செல்வம், கைக்குக் கிடைத்தற்கு அரிய பொருள், வேசியரிடம் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி, அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை என்னும் இந்த எட்டு வகைகளும் (ஏழு தான் உள்ளன) தக்க சமயத்துக்கு உதவமாட்டா.
கடையாக, பயனளிக்காத சிலவற்றையும் விவேகசிந்தாமணி பட்டியலிடுகிறது.
"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை.
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை சுதரில் வாழ்வு,
தந்திகளில்லா வீணை,
தனமில்லாக் கொங்கை போலாம்"
நிலவு இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத நீர்நிலை, நல்ல அமைச்சரைப் பெறாத அரசன், மதங்கொண்ட மலைபோன்ற யானைகள் இல்லாத படை, அழகிய மொழியாளுமை மிக்க புலவர் இல்லாத தொன்மையான சபை, பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை - இவை யாவும் கொங்கை இரண்டுமில்லாத மங்கையர் இன்பம் போல வீணாகும்.
- இப்படி அருமையான கருத்துப் பெட்டகமாகவும் இனிய யாப்புவகைகள் நிரம்பியதாகவும் உள்ள விவேகசிந்தாமணி, வாசிக்கும் தோறும் நல்வ்¢ருந்தாய் இருப்பதை இன்னும் வரவிருக்கிற பாடல்களால் உணரலாம்.
-மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
பயனற்றவை:
காந்தியடிகள் 'ஒழுக்கமில்லாத கல்வி, நாணயமில்லாத வியாபாரம்........என்பதாக பயனற்ற ஏழைக் குறிப்பிடுவார். விவேகசிந்தாமணி இப்படிப் பல 'பயனற்றவை'களைப் பட்டியலிடுகிறது.
"தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறிஞர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர்தம் மௌன நாசமும்,
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்."
தெளிவு இல்லாத கல்வி கற்றவர்களின் கர்வமும் மன ஊக்கமும், செல்வம் இல்லாத வறியவரின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லாத ஞானியரின் மௌன அழிவும், பிள்ளைப்பேறு இல்லாத பெண்களின் கற்பும் பயனற்றவை. இவை நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை எனலாம்.
இன்னொரு விதமான ஆறு பயனற்றவைகளும் சொல்லப் பட்டுள்ளன. அவை-
"திருப்பதி மிதியாப் பாதம்,
சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள்,
இனியசொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே".
இறைவன் எழுந்தருளி உள்ள தலங்களை மிதியாத பாதமும், சிவனின் திருவடியை வணங்காத தலையும், யாசிப்பவர்க்கு ஏதும் அளிக்காத கைகளும், இனிய சொற்களைக் கேளாத செவிகளும், தம்மை ரட்சிப்பவர்கள் கண்ணீர் பொழிவதைப் பார்த்தும் உயிர் கொடாத தேகமும் பயனில்லாதவை. இந்த ஆறும் இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் ஒன்றும் பயன் இராது.
அடுத்து, பயனில்லாத ஏழினை முதல் பாடல் கூறுகிறது:
"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தை தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே".
மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும் - என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.
தக்க சமயத்துக்கு உதவாத இன்னொரு எட்டு வகை பற்றியும் விவேகசிந்தாமணி கூறுகிறது. அவை-
"தன்னுடன் பிறவாத் தம்பி,
தனைப்பெறாத் தாயார் தந்தை,
அன்னியரிடத்துச் செல்வம்,
அரும்பொருள், வேசியாசை,
மன்னிய ஏட்டின் கல்வி,
மறு மனையாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் எட்டும்,
இடுக்கத்துக்கு உதவா தன்றே".
உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தை, அயலவரிடம் உள்ள செல்வம், கைக்குக் கிடைத்தற்கு அரிய பொருள், வேசியரிடம் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி, அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை என்னும் இந்த எட்டு வகைகளும் (ஏழு தான் உள்ளன) தக்க சமயத்துக்கு உதவமாட்டா.
கடையாக, பயனளிக்காத சிலவற்றையும் விவேகசிந்தாமணி பட்டியலிடுகிறது.
"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை.
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை சுதரில் வாழ்வு,
தந்திகளில்லா வீணை,
தனமில்லாக் கொங்கை போலாம்"
நிலவு இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத நீர்நிலை, நல்ல அமைச்சரைப் பெறாத அரசன், மதங்கொண்ட மலைபோன்ற யானைகள் இல்லாத படை, அழகிய மொழியாளுமை மிக்க புலவர் இல்லாத தொன்மையான சபை, பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை - இவை யாவும் கொங்கை இரண்டுமில்லாத மங்கையர் இன்பம் போல வீணாகும்.
- இப்படி அருமையான கருத்துப் பெட்டகமாகவும் இனிய யாப்புவகைகள் நிரம்பியதாகவும் உள்ள விவேகசிந்தாமணி, வாசிக்கும் தோறும் நல்வ்¢ருந்தாய் இருப்பதை இன்னும் வரவிருக்கிற பாடல்களால் உணரலாம்.
-மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
Wednesday, December 08, 2004
களஞ்சியம் - 12
எனது களஞ்சியத்திலிருந்து - 12: விவேகசிந்தாமணி விருந்து:
1. அறிமுகம்:
தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது. அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக் கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு நிச்சயமான இடம் என்றும் உண்டு.
விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர் பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வீரம், காதல் போன்ற சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன.
'விவேக சிந்தாமணியைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம், இடம் ஏதும் அறிய முடியவில்லை. பாடல்களை இயற்றியவர், பாடல் தோன்றிய சூழல் எதுவும் குறிப்பிடப் படவில்லை. பாடல்களைத் தொகுத்து வரிசைப் படுத்துவதற்குப் பாடலின் சிறப்பு, யாப்பு, கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டு ஒரு வரன்முறையைப் பின் பற்றவில்லை. அதனால் விவேக சிந்தாமணி பல்சுவை இலக்கிய மாய் - ஒர் கலவை நூலாக உள்ளது' என்பார் புலவர் மாணிக்கம்.
கடந்த நூறு ஆண்டுகளில் ஏறக்குறைய இருநூறு பதிப்புகள் போல மூலமும் உரையுமாய் விவேக சிந்தாமணி வந்திருப்பதே அதன் செல்வாக்கை உணர்த்தும். கடவுள் வாழ்த்து உட்பட 135 பாடல்கள் பல்வகை யாப்பில் உள்ளன. வெண்பாக் களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆசிரிய விருத்தங்களும் அமைந்த பாடல்கள். முதற்பாடல் கணபதி துதியாக அமைந்த வெண்பாவாகும். பிற 134 பாடல்களும் பெரும்பாலும் நீதிக்கருத்தை உணர்த்தும் பாடல்களே. சில பாடல்கள் நாட்டில் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருபவை. சில திருக்குறளுக்கு விளக்க உரை போல்வன. புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டில் வழங்கும் பழங்கதைகள், புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்தோடு கூறும் கதைகள் பல பாடல்களில் உள்ளன. வடமொழியில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பாகவும் சில பாடல்கள் உள்ளன. காதல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்பச்சுவையை மிகைப்படுத்தும் பாடல்களும் உள்ளன. பெண்ணையும் சிற்றின்பத்தையும் பழித்துரைக்கும் பாடல்களும் பல உள்ளன.
டி.கே.எஸ். சகோதரர்கள் தங்களது 'இராஜ ராஜ சோழன்' என்னும் வரலாற்று நாடகத்தில் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்றை இனிய இசையோடு பாடச் செய்தனர்.
"சங்கு முழங்கும் தமிழ்நாடன்
தன்னை நினைந்த போதெல்லாம்,
பொங்கு கடலும் உறங்காது!
பொழுதோர் நாளும் விடியாது!
திங்கள் உறங்கும்! புள் உறங்கும்!
தென்றல் உறங்கும் சில காலம்!
எங்கும் உறங்கும் இராக் காலம்!
என் கண் இரண்டும் உறங்காவே!
இந்தப் பாடலின் கருத்து, இனிமை, கற்பனை காரணமாய் நாடகத்தில் இடம் பெற்ற போது மக்களின் போற்றுதலுகு உள்ளானது. இது போன்ற அரிய இனிய பாடல்களை நான் ஆரம்பப்பள்ளிப் பருவகாலத்தில் மனப்பாடம் செய்ததால் இன்று பேச்சிலும் எழுத்திலும் அவை தாமாகவே வந்து விழுகின்றன. அந்த அற்புதப் பாடல்கள் சிலவற்றை பல் வேறு தலைப்புகளில் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெரு நோக்கில் குழுமத்தில் எழுத விழைந்தேன்.
- தொடரும்.
-வே.சபாநாயகம்.
1. அறிமுகம்:
தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது. அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக் கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு நிச்சயமான இடம் என்றும் உண்டு.
விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர் பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வீரம், காதல் போன்ற சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன.
'விவேக சிந்தாமணியைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம், இடம் ஏதும் அறிய முடியவில்லை. பாடல்களை இயற்றியவர், பாடல் தோன்றிய சூழல் எதுவும் குறிப்பிடப் படவில்லை. பாடல்களைத் தொகுத்து வரிசைப் படுத்துவதற்குப் பாடலின் சிறப்பு, யாப்பு, கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டு ஒரு வரன்முறையைப் பின் பற்றவில்லை. அதனால் விவேக சிந்தாமணி பல்சுவை இலக்கிய மாய் - ஒர் கலவை நூலாக உள்ளது' என்பார் புலவர் மாணிக்கம்.
கடந்த நூறு ஆண்டுகளில் ஏறக்குறைய இருநூறு பதிப்புகள் போல மூலமும் உரையுமாய் விவேக சிந்தாமணி வந்திருப்பதே அதன் செல்வாக்கை உணர்த்தும். கடவுள் வாழ்த்து உட்பட 135 பாடல்கள் பல்வகை யாப்பில் உள்ளன. வெண்பாக் களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆசிரிய விருத்தங்களும் அமைந்த பாடல்கள். முதற்பாடல் கணபதி துதியாக அமைந்த வெண்பாவாகும். பிற 134 பாடல்களும் பெரும்பாலும் நீதிக்கருத்தை உணர்த்தும் பாடல்களே. சில பாடல்கள் நாட்டில் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருபவை. சில திருக்குறளுக்கு விளக்க உரை போல்வன. புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டில் வழங்கும் பழங்கதைகள், புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்தோடு கூறும் கதைகள் பல பாடல்களில் உள்ளன. வடமொழியில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பாகவும் சில பாடல்கள் உள்ளன. காதல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்பச்சுவையை மிகைப்படுத்தும் பாடல்களும் உள்ளன. பெண்ணையும் சிற்றின்பத்தையும் பழித்துரைக்கும் பாடல்களும் பல உள்ளன.
டி.கே.எஸ். சகோதரர்கள் தங்களது 'இராஜ ராஜ சோழன்' என்னும் வரலாற்று நாடகத்தில் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்றை இனிய இசையோடு பாடச் செய்தனர்.
"சங்கு முழங்கும் தமிழ்நாடன்
தன்னை நினைந்த போதெல்லாம்,
பொங்கு கடலும் உறங்காது!
பொழுதோர் நாளும் விடியாது!
திங்கள் உறங்கும்! புள் உறங்கும்!
தென்றல் உறங்கும் சில காலம்!
எங்கும் உறங்கும் இராக் காலம்!
என் கண் இரண்டும் உறங்காவே!
இந்தப் பாடலின் கருத்து, இனிமை, கற்பனை காரணமாய் நாடகத்தில் இடம் பெற்ற போது மக்களின் போற்றுதலுகு உள்ளானது. இது போன்ற அரிய இனிய பாடல்களை நான் ஆரம்பப்பள்ளிப் பருவகாலத்தில் மனப்பாடம் செய்ததால் இன்று பேச்சிலும் எழுத்திலும் அவை தாமாகவே வந்து விழுகின்றன. அந்த அற்புதப் பாடல்கள் சிலவற்றை பல் வேறு தலைப்புகளில் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெரு நோக்கில் குழுமத்தில் எழுத விழைந்தேன்.
- தொடரும்.
-வே.சபாநாயகம்.
Monday, November 29, 2004
களஞ்சியம் - 11: பாட்டுக்குப் பாட்டு
எனது களஞ்சியத்திலிருந்து - 11: பாட்டுக்குப் பாட்டு:
"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்
பாட்டனாரைத் தோற்கடிப்பேன்
எதிர்ப் பாட்டுப் பாட வந்தா
ஏணி வச்சுப் பல்லுடைப்பேன்"
- என்று தெருக் கூத்தில், நடிக நடிகையர் தம் மீது வீசப்படும் பாட்டுக் கணைகளுக்கு அதே பாணியில் பதிலளிப்பது உண்டு. இலக்கியத்திலும் இது போன்று பாட்டுக்குப் பாட்டாலேயே பதிலளித்திருப்பதைக் காணலாம்.
கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.
கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:
"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!
( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)
இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!
கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:
"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு
"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.
- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள். கூனை - சால்.
நமது புதுமைப்பித்தனும் இப்படி ஒரு கவிஞரைச் சாட நேர்ந்தது சுவாரஸ்ய மானது.
'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் ஆண்டுமலரில் புதுமைப்பித்தன் 'ஓடாதீர்' என்றொரு பாடல் எழுதினார். 'வேளூர் வே.கந்தசாமிப் பிள்ளை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அதற்குச் சில மாதங்களுக்கு முன் காலமான எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் குடும்பத்துக்கு நிதி திரட்டிய தமிழர்களின் தாராள மனப்பான்மை நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிறெரிச்சலைத்தான், இந்தப்பாடலில்,
"ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண்! வந்ததுபோல்
போனான்காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டுவிடும்". - என்று எழுதினார்.
கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த 'வீராப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.
'ஓடாதீர்' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத்தாளர், 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார்' என்ற புனைபெயரில், 'ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது' என்று புதுமைப்பித்தன்பாணியிலேயே புதுமைப்பித்தன் பாட்டுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி 'கலாமோகினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியாரு'க்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில் இது:
'உருக்கமுள்ள வித்தகரே' என்ற தலைப்பிலான் அந்தப் பாடலில்,
'ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழுமென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்ல வந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கட்டுப்பாடு!
குப்பைகூளம், செத்தை
கூட்டிவைத்த தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும்-
உப்பு, பருப்பு,
உளுத்தம்பயறு,
சித்தரத்தை, புளி,
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக்கு
ஒத்து வருமோ
உயர் கவிதை?
புத்தி சொல வந்தவர் போல்,
ஏனையா
வித்தாரக் கவிதை
கையாண்டீர்?
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு;
உமக்கேன் இந்தப் பொல்லாப்பு!
விட்டுவிடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும்!
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்
ஆசைக் கனவெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா
கவைக்குதவா,
கதையிலே
செல்லாதீர்!
புத்தி சொல வந்தவரே
புத்தி தடுமாறி விட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும்!
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டு
பெட்டியடிச் சொர்க்கத்தில்
புகுந்து விடும்!
.........................
........................
சொத்தைக் கதை எல்லாம் அளக்காதீர்
ஒற்றச்சிதையினிலே
உம்மெல்லோரையும்
வைத்து எரித்திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது! - என்று திட்டித் தீர்த்தார்!.
- மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்
பாட்டனாரைத் தோற்கடிப்பேன்
எதிர்ப் பாட்டுப் பாட வந்தா
ஏணி வச்சுப் பல்லுடைப்பேன்"
- என்று தெருக் கூத்தில், நடிக நடிகையர் தம் மீது வீசப்படும் பாட்டுக் கணைகளுக்கு அதே பாணியில் பதிலளிப்பது உண்டு. இலக்கியத்திலும் இது போன்று பாட்டுக்குப் பாட்டாலேயே பதிலளித்திருப்பதைக் காணலாம்.
கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.
கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:
"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!
( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)
இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!
கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:
"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு
"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.
- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள். கூனை - சால்.
நமது புதுமைப்பித்தனும் இப்படி ஒரு கவிஞரைச் சாட நேர்ந்தது சுவாரஸ்ய மானது.
'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் ஆண்டுமலரில் புதுமைப்பித்தன் 'ஓடாதீர்' என்றொரு பாடல் எழுதினார். 'வேளூர் வே.கந்தசாமிப் பிள்ளை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அதற்குச் சில மாதங்களுக்கு முன் காலமான எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் குடும்பத்துக்கு நிதி திரட்டிய தமிழர்களின் தாராள மனப்பான்மை நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிறெரிச்சலைத்தான், இந்தப்பாடலில்,
"ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண்! வந்ததுபோல்
போனான்காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டுவிடும்". - என்று எழுதினார்.
கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த 'வீராப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.
'ஓடாதீர்' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத்தாளர், 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார்' என்ற புனைபெயரில், 'ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது' என்று புதுமைப்பித்தன்பாணியிலேயே புதுமைப்பித்தன் பாட்டுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி 'கலாமோகினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியாரு'க்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில் இது:
'உருக்கமுள்ள வித்தகரே' என்ற தலைப்பிலான் அந்தப் பாடலில்,
'ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழுமென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்ல வந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கட்டுப்பாடு!
குப்பைகூளம், செத்தை
கூட்டிவைத்த தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும்-
உப்பு, பருப்பு,
உளுத்தம்பயறு,
சித்தரத்தை, புளி,
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக்கு
ஒத்து வருமோ
உயர் கவிதை?
புத்தி சொல வந்தவர் போல்,
ஏனையா
வித்தாரக் கவிதை
கையாண்டீர்?
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு;
உமக்கேன் இந்தப் பொல்லாப்பு!
விட்டுவிடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும்!
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்
ஆசைக் கனவெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா
கவைக்குதவா,
கதையிலே
செல்லாதீர்!
புத்தி சொல வந்தவரே
புத்தி தடுமாறி விட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும்!
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டு
பெட்டியடிச் சொர்க்கத்தில்
புகுந்து விடும்!
.........................
........................
சொத்தைக் கதை எல்லாம் அளக்காதீர்
ஒற்றச்சிதையினிலே
உம்மெல்லோரையும்
வைத்து எரித்திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது! - என்று திட்டித் தீர்த்தார்!.
- மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
Friday, October 29, 2004
களஞ்சியம் 10 - அசலும் நகலும்
கவிஞர்கள் தங்களுடைய முன்னோடிகளின் படைப்புகளிருந்து சொல்லாட்சிகள், உவமைகள், வருணனைகள், கருத்துக்களை அழகாக எடுத்தாண்டிருப்பதைப் பார்க்கிறோம். திருக்குறள் அப்படி கம்பனது காவியத்திலும் பிறகாப்பியங்களிலும் நிறைய எடுத்தாளப் பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் தன் சினிமாப் பாடல்களில் பழம்பாடல்களையும் பாரதியின் பாடலையும் முன் மாதிரியாகக் கொண்டு அதே சொல்லாட்சி, சந்தம், யாப்புகளை அசலைப் போலவே - இன்னும் சொன்னால் அசலை விடவும் அற்புதமாய்ப் போலச் செய்திருக்கிறார். அவரது 'அத்திக்காய் ஆலங்காய்...' பாடலும், 'உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ.....' போன்றவை தனிப்பாடல்கள் சிலவற்றின் நகலாக இருப்பதை, தனிப்பாடல் திரட்டுகளைப் படித்தவர் அறிவர். அவரது 'மெதுவா மெதுவா தொடலாமா?' என்பதும், 'வளையல், வளையல் கல்யாண வளையலுங்க....' என்பதும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் ஆங்கிலக் கவிதைகளான 'பல்லக்குத் தூக்கிகள்'(Palanquin Bearers) - 'Lightly O lightly we bear her along' என்பதையும், 'வளையல் விற்பவர்கள்'(Bangle sellers) - 'Bangle sellers are we, who bear the shining loads to the temple fair...' என்பதையும் நினைவூட்டுவன.
இவையெல்லாம் ஓரளவே போலச் செய்யப்பட்டவை. ஆனால் பாரதியின் கண்ணன் துதியான,
'காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே!'
என்ற வரிகளை அப்படியே அடியற்றி அதே பாணியில் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் பாடியுள்ள பாடல் அற்புதமானது.
'கண்ணிலே இருப்பதென்ன? கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ? கன்னி இளமானே!
கார்குழலை ஏன் வளர்த்தாய்? கன்னி இளமானே
காளையரைக் கட்டுதற்கோ? கன்னி இளமானே!
பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே,
பாடும் வண்டாய் நான் வரவா? கன்னி இளமானே!
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே!
அன்ன நடை பின்னுவதேன்? கன்னி இளமானே
ஆர்விழிகள் பட்டனவோ கன்னி இளமானே!'
- காலம் பல கடந்தும் காதுகளில் ரீங்கரிக்கிற இப்பாடலை மறக்க முடிகிறதா?
இன்றைய நவீன கவிஞர்களும் இதே போல சங்கப் பாடல்களை அடியற்றி போலச் செய்திருக்கிறார்கள்.
பிசிராந்தையார் என்ற புலவரை 'இவ்வளவு வயதாகியும் உங்களது தலை முடி நரைக்காதிருப்பது எப்படி?' என்று கேட்டபோது அவர் அளித்த பதிலாக ஒரு பாடல் 'புறநானூறு' தொகுப்ப்¢ல் உள்ளது:
'யாண்டு பல ஆக
நரையில ஆகுதல்
யாங்காகியர் என
வினவுதிராயின்
மாண்ட என் மனைவியடு
மக்களும் நிரம்பினர்
நான் கண்டனையர்
என் இளையரும்
வேந்தனும் அல்லவை
செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய
கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே!'
இதை ஒட்டி கவிஞர் சிவசக்தி என்பவர் எழுதிய ரசமான கவிதை இது:
`யாண்டு சில ஆகியும்
நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்.....
மாண்பிலா மனைவி
தறுதலைத் தனையர்
சுரண்டிடும் சுற்றம்
நன்றியிலா நண்பர்
அரசியல் பேய்கள்
ஆகியோர் உறைகாடு
யான் வாழும் காடே!
காலத்துக் கேற்ற பாட்டு தானே!
கவிஞர் மீராவும் இதே போல `செம்புலப் பெயல் நீரார்' என்ற சங்கப் புலவரின் பாடலை ஒட்டி அங்கதச் சுவையடு ஒரு கவிதை எழுதியுள்ளார்.
`யாயும் யாயும்
யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீனும்
எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே! - இது சங்கப் பாடல்.
மீரா பாடுகிறார்:
`என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!
- மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
இவையெல்லாம் ஓரளவே போலச் செய்யப்பட்டவை. ஆனால் பாரதியின் கண்ணன் துதியான,
'காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே!'
என்ற வரிகளை அப்படியே அடியற்றி அதே பாணியில் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் பாடியுள்ள பாடல் அற்புதமானது.
'கண்ணிலே இருப்பதென்ன? கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ? கன்னி இளமானே!
கார்குழலை ஏன் வளர்த்தாய்? கன்னி இளமானே
காளையரைக் கட்டுதற்கோ? கன்னி இளமானே!
பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே,
பாடும் வண்டாய் நான் வரவா? கன்னி இளமானே!
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே!
அன்ன நடை பின்னுவதேன்? கன்னி இளமானே
ஆர்விழிகள் பட்டனவோ கன்னி இளமானே!'
- காலம் பல கடந்தும் காதுகளில் ரீங்கரிக்கிற இப்பாடலை மறக்க முடிகிறதா?
இன்றைய நவீன கவிஞர்களும் இதே போல சங்கப் பாடல்களை அடியற்றி போலச் செய்திருக்கிறார்கள்.
பிசிராந்தையார் என்ற புலவரை 'இவ்வளவு வயதாகியும் உங்களது தலை முடி நரைக்காதிருப்பது எப்படி?' என்று கேட்டபோது அவர் அளித்த பதிலாக ஒரு பாடல் 'புறநானூறு' தொகுப்ப்¢ல் உள்ளது:
'யாண்டு பல ஆக
நரையில ஆகுதல்
யாங்காகியர் என
வினவுதிராயின்
மாண்ட என் மனைவியடு
மக்களும் நிரம்பினர்
நான் கண்டனையர்
என் இளையரும்
வேந்தனும் அல்லவை
செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய
கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே!'
இதை ஒட்டி கவிஞர் சிவசக்தி என்பவர் எழுதிய ரசமான கவிதை இது:
`யாண்டு சில ஆகியும்
நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்.....
மாண்பிலா மனைவி
தறுதலைத் தனையர்
சுரண்டிடும் சுற்றம்
நன்றியிலா நண்பர்
அரசியல் பேய்கள்
ஆகியோர் உறைகாடு
யான் வாழும் காடே!
காலத்துக் கேற்ற பாட்டு தானே!
கவிஞர் மீராவும் இதே போல `செம்புலப் பெயல் நீரார்' என்ற சங்கப் புலவரின் பாடலை ஒட்டி அங்கதச் சுவையடு ஒரு கவிதை எழுதியுள்ளார்.
`யாயும் யாயும்
யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீனும்
எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே! - இது சங்கப் பாடல்.
மீரா பாடுகிறார்:
`என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!
- மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
Monday, October 18, 2004
களஞ்சியம் 9: வறுமைப்பாட்டு
எனது களஞ்சியத்திலிருந்து - 9 - வறுமைப் பாட்டு:
'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். 'நல்குரவு' என்று ஒரு அதிகாரமே வறுமையின் துன்பம் பற்றி வள்ளுவர் எழுதி இருக்கிறார். வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால் வறுமையேதான் என்கிறார்.
'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'.
அது மட்டுமல்ல - வறுமை என்கிற பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் இம்மை இன்பம் மட்டுமின்றி மறுமை இன்பமும்கூட இல்லாது செய்து விடுமாம்.
'இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்' என்கிறது குறள்.
இந்த இல்லாமை என்கிற வறுமை அதிகமும் புலவர்களையே பீடிக்கிறது. அதன் கடுமை தாளாமல் அது தரும் துன்பத்தையும் அவர்கள் கவிதை ஆக்குகிறார்கள் என்பதைப் பழம் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன.
வறுமையின் துன்பத்தை அனுபவித்த சுந்தர கவிராயர் என்கிற புலவர், வறுமை வந்தால் என்னென்னவெல்லாம் அரிதாகிவ்¢டும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். 'வறுமை ஒருவனை வந்து அடையுமானால் உண்பதற்குச் சோறு கிடைப்பது அரிதாகும்; அறுசுவை உணவும், பால், தயிர், நெய் மூன்றும் கிடைப்பதற்கு அரிதாகும்; பகற்பொழுதில் வெற்றிலைப் பாக்கு கிடைப்பது அரிதாகும்; இருள் நிறைந்த நள்ளிரவ்¢ல் அன்புடைய காதலி அருகில் இருப்பது அரிதாகும்; படுத்துத் தூங்குவதற்குப் பாய் கிடைப்பது அரிதாகும்; உடம்பை மறைப்பதற்குரிய ஆடை கிடைப்பது அரிதாகும்,' என்கிறார்.
அன்னம் உணற்கு அரிதாம்;
ஆமாறு மூன்றும் அரிதாம்;
பள்ளம் அரிதாம்
பகலின்கண்; - துன்ந்¢சியில்
நேயம் அரிதாகும்;
நித்திரைக்கும் பாய் அரிதாம்;
காயக்கு அரிதாம்
கலை.
(அன்னம் - சோறு; ஆமாறு மூன்று - ஆவினிடத்தில் இருந்து பெறும் பால் தயிர், நெய் ஆகிய மூன்று; பள்ளம் - வெற்றிலைப் பாக்கு; துன் - நெருங்கிய; நேயம் - அன்பு, அன்புடைய காதலி; காயம் - உடல்; கலை - ஆடை.)
'வறுமையானது உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும் இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்' என்கிறார் வள்ளுவர்.
'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு வரும்.'
இதனை விவேக சிந்தாமணி உருக்கமாகச் சித்தரிக்கிறது.
'தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்:
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்;
உலகெலாம் பழிக்கும் தானே.
பொறுக்க முடியாத வறுமை ஒருவனுக்கு வருமானால், பலர் கூடிய அவைக்குள் செல்ல அவனுக்கு நாணம் உண்டாகும். வேங்கையைப் போன்ற அவனது வீரமும் குன்றி விடும். விருந்தினரைப் பார்க்க நேரின் வெட்கம் ஏற்படும். மலர்க்கொடி போன்ற மனை விக்கு அச்சப்பட நேரிடும். அற்பருடன் சேருமாறு செய்யும். மென்மேலும் வளர வேண்டிய அறிவும் குறையும். உலகமெல்லாம் அவனைப் பழிக்கும்.
'வறுமைக்கு ஆட்பட்டவன், நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னை வந்து துன்புறுத்துமோ?' எனத் தினமும் அஞ்ச வைக்கும் என்கிறார் வள்ளுவர்.
'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.'
(நெருநல் - நேற்று; ந்¢ரப்பு - வறுமை)
மதுர கவியார் என்னும் புலவர் வறுமையால் மிகவும் வாடினார். காளத்தியப்பர் என்கிற வள்ளலைத் தேடி தன் வறுமை தீரப் பரிசில் பெறச் சென்றார். வழியில் ஒரு சத்திரத்தில் இரவு தங்கும்படி நேர்கிறது. படுத்தவரின் சிந்தனை விரிகிறது. வறுமையை விளித்து, 'ஏ வறுமையே! நிழலைப் போல என்னைப் பின்பற்றி என்னோடு இவ்வளவு நாட்கள் திரிந்து வருந்தினாய். நாளைக்கு இருப்பாயோ? நாளைக்கு நான் திருநின்றை யூருக்குப் போய் வள்ளல் காளத்தியப்பரைப் பார்த்தபின் என் பாடலைக் கேட்டு உன்னை அவர் ஓட்டிவிடுவார். அதற்ககப்புறம் நீ எங்கோ நான் எங்கோ? போனால் போகிறது! இன்று மட்டும் சற்றே என்னோடு இருந்து விட்டுப் போ!' என்று நக்கலாகப் பாடுகிறார்.
`நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல் போல
நாளைக்கு இருப்பாயோ
நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே
இரு!
(உழன்றாய் - வருந்தினாய்; நின்றை - திருந்¢ன்றையூர்)
'இப்படி வறுமையில் வாடுபவர் நெருப்பிலே கூட இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்துற்றபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிதாம்' என்கிறார் வள்ளுவர்.
'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்ப்¢னுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.'
புலவர்கள் தாம் வறுமையால் வாடுகிறவர்களா வேறு யாரும் இல்லையா என்றால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் எனும் பெரும் புலவர் எப்போதும் வறுமை நீங்காத எட்டு பேரைப் பட்டியலிடுகிறார்
'கவிகற்றவர்க்கும், கணிகற்றவர்க்கும், கம்மாளருக்கும், ஓவிகற்றவர்க்கும், உபாத்திகளுக்கும், உயர்ந்த மட்டும் குவிவைக்கும் ஒட்டர்க்கும், கூத்தாடிகட்கும், குருக்களுக்கும் இவரெட்டுப் பேர்கட்கு நீங்கா தரித்திரம் என்றைக்குமே!'
பாட்டிசைக்கும் பாவலர்க்கும், சோதிடம் கணிக்கத் தெரிந்தவர்க்கும், உலோகவேலை செய்யும் தொழிலாளருக்கும் , ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயரமான சுவர் வைக்கிற ஒட்டர்களுக்கும், கூத்தாடும் நடிகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், வறுமை எப்போதும் நீங்காது.
இன்றைக்கு அந்தகக் கவி வீரராகவர் இருந்தால் ஆசிரியர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடும்!
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்
'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். 'நல்குரவு' என்று ஒரு அதிகாரமே வறுமையின் துன்பம் பற்றி வள்ளுவர் எழுதி இருக்கிறார். வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால் வறுமையேதான் என்கிறார்.
'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'.
அது மட்டுமல்ல - வறுமை என்கிற பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் இம்மை இன்பம் மட்டுமின்றி மறுமை இன்பமும்கூட இல்லாது செய்து விடுமாம்.
'இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்' என்கிறது குறள்.
இந்த இல்லாமை என்கிற வறுமை அதிகமும் புலவர்களையே பீடிக்கிறது. அதன் கடுமை தாளாமல் அது தரும் துன்பத்தையும் அவர்கள் கவிதை ஆக்குகிறார்கள் என்பதைப் பழம் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன.
வறுமையின் துன்பத்தை அனுபவித்த சுந்தர கவிராயர் என்கிற புலவர், வறுமை வந்தால் என்னென்னவெல்லாம் அரிதாகிவ்¢டும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். 'வறுமை ஒருவனை வந்து அடையுமானால் உண்பதற்குச் சோறு கிடைப்பது அரிதாகும்; அறுசுவை உணவும், பால், தயிர், நெய் மூன்றும் கிடைப்பதற்கு அரிதாகும்; பகற்பொழுதில் வெற்றிலைப் பாக்கு கிடைப்பது அரிதாகும்; இருள் நிறைந்த நள்ளிரவ்¢ல் அன்புடைய காதலி அருகில் இருப்பது அரிதாகும்; படுத்துத் தூங்குவதற்குப் பாய் கிடைப்பது அரிதாகும்; உடம்பை மறைப்பதற்குரிய ஆடை கிடைப்பது அரிதாகும்,' என்கிறார்.
அன்னம் உணற்கு அரிதாம்;
ஆமாறு மூன்றும் அரிதாம்;
பள்ளம் அரிதாம்
பகலின்கண்; - துன்ந்¢சியில்
நேயம் அரிதாகும்;
நித்திரைக்கும் பாய் அரிதாம்;
காயக்கு அரிதாம்
கலை.
(அன்னம் - சோறு; ஆமாறு மூன்று - ஆவினிடத்தில் இருந்து பெறும் பால் தயிர், நெய் ஆகிய மூன்று; பள்ளம் - வெற்றிலைப் பாக்கு; துன் - நெருங்கிய; நேயம் - அன்பு, அன்புடைய காதலி; காயம் - உடல்; கலை - ஆடை.)
'வறுமையானது உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும் இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்' என்கிறார் வள்ளுவர்.
'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு வரும்.'
இதனை விவேக சிந்தாமணி உருக்கமாகச் சித்தரிக்கிறது.
'தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்:
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்;
உலகெலாம் பழிக்கும் தானே.
பொறுக்க முடியாத வறுமை ஒருவனுக்கு வருமானால், பலர் கூடிய அவைக்குள் செல்ல அவனுக்கு நாணம் உண்டாகும். வேங்கையைப் போன்ற அவனது வீரமும் குன்றி விடும். விருந்தினரைப் பார்க்க நேரின் வெட்கம் ஏற்படும். மலர்க்கொடி போன்ற மனை விக்கு அச்சப்பட நேரிடும். அற்பருடன் சேருமாறு செய்யும். மென்மேலும் வளர வேண்டிய அறிவும் குறையும். உலகமெல்லாம் அவனைப் பழிக்கும்.
'வறுமைக்கு ஆட்பட்டவன், நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னை வந்து துன்புறுத்துமோ?' எனத் தினமும் அஞ்ச வைக்கும் என்கிறார் வள்ளுவர்.
'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.'
(நெருநல் - நேற்று; ந்¢ரப்பு - வறுமை)
மதுர கவியார் என்னும் புலவர் வறுமையால் மிகவும் வாடினார். காளத்தியப்பர் என்கிற வள்ளலைத் தேடி தன் வறுமை தீரப் பரிசில் பெறச் சென்றார். வழியில் ஒரு சத்திரத்தில் இரவு தங்கும்படி நேர்கிறது. படுத்தவரின் சிந்தனை விரிகிறது. வறுமையை விளித்து, 'ஏ வறுமையே! நிழலைப் போல என்னைப் பின்பற்றி என்னோடு இவ்வளவு நாட்கள் திரிந்து வருந்தினாய். நாளைக்கு இருப்பாயோ? நாளைக்கு நான் திருநின்றை யூருக்குப் போய் வள்ளல் காளத்தியப்பரைப் பார்த்தபின் என் பாடலைக் கேட்டு உன்னை அவர் ஓட்டிவிடுவார். அதற்ககப்புறம் நீ எங்கோ நான் எங்கோ? போனால் போகிறது! இன்று மட்டும் சற்றே என்னோடு இருந்து விட்டுப் போ!' என்று நக்கலாகப் பாடுகிறார்.
`நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல் போல
நாளைக்கு இருப்பாயோ
நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே
இரு!
(உழன்றாய் - வருந்தினாய்; நின்றை - திருந்¢ன்றையூர்)
'இப்படி வறுமையில் வாடுபவர் நெருப்பிலே கூட இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்துற்றபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிதாம்' என்கிறார் வள்ளுவர்.
'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்ப்¢னுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.'
புலவர்கள் தாம் வறுமையால் வாடுகிறவர்களா வேறு யாரும் இல்லையா என்றால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் எனும் பெரும் புலவர் எப்போதும் வறுமை நீங்காத எட்டு பேரைப் பட்டியலிடுகிறார்
'கவிகற்றவர்க்கும், கணிகற்றவர்க்கும், கம்மாளருக்கும், ஓவிகற்றவர்க்கும், உபாத்திகளுக்கும், உயர்ந்த மட்டும் குவிவைக்கும் ஒட்டர்க்கும், கூத்தாடிகட்கும், குருக்களுக்கும் இவரெட்டுப் பேர்கட்கு நீங்கா தரித்திரம் என்றைக்குமே!'
பாட்டிசைக்கும் பாவலர்க்கும், சோதிடம் கணிக்கத் தெரிந்தவர்க்கும், உலோகவேலை செய்யும் தொழிலாளருக்கும் , ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயரமான சுவர் வைக்கிற ஒட்டர்களுக்கும், கூத்தாடும் நடிகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், வறுமை எப்போதும் நீங்காது.
இன்றைக்கு அந்தகக் கவி வீரராகவர் இருந்தால் ஆசிரியர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடும்!
- மேலும் வரும்.
- வே.சபாநாயகம்
Friday, September 03, 2004
எனது களஞ்சியத்திலிருந்து - 8: புலம்பல் கவி
பொருள் கொடுத்தால் போற்றிப் பாடுவதும் பொருள் கொடாவிடில் தூற்றிப் பாடுவதும் புலவர்களது இயல்பு என்பார்கள். சில சாதுப் புலவர்கள் தகுதி இல்லா தவரைப் பாடச் நேர்ந்ததற்காக சுயபச்சாதாபத்துடன் புலம்புவதும், இறைவனிடம் முறையிடுவதும் உண்டு.
இராமச்சந்திரக் கவிராயருக்கு இப்படி நிறைய அனுபவம் உண்டு. பணம் படைத்த பலருக்குப் புலவர்களின் அருமையோ அவர்தம் கவிதைகளின் பெருமையோ தெரிவதில்லை. அவர்களுக்குப் பணம்தான் பெரிது. பணம் படைத்திருப்பதால் தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் அவர்கள் புலவர்களை மதிப்ப தில்லை. கவிஞர்கள் உதவி நாடி வந்து விட்டால் ஒரு சமயம் வெறும் கும்பிடு போட்டு அனுப்பி விடுவார்கள்; மற்றொரு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்; வேறொரு சமயம் ஏதோ கணக்குப் போடுகிறவர்களைப் போல விரல்களை மடக்கிக் கொண்டு வாயால் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்; பிறிதொரு சமயமோ வேட்டைநாய் போலச் சீறி விழுவார்கள். இவர்கள் மனம் ஒத்து வரும்படி கவிகள் பாடி அவருக்கு அலுத்துப் போய்விட்டது. 'இப்படி நான் எத்தனை நாள் கயவர்களிடம் போய் அலைந்து திரிவது - திருப்பரங்குன்றில் வாழும் மூருகப் பெருமானே' என்று முறையிடுகிறார்:
வணக்கம் வரும் சில நேரம்,
குமர! கண்ட
வலிப்பு வரும் சில நேரம்;
வலியச் செய்யக்
கணக்கு வரும் சிலநேரம்;
வேட்டைநாய் போல்
கடிக்க வரும் சில நேரம்;
கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப்
பாடிப் பாடி
எத்தனை நாள் திரிந்து திரிந்(து)
உழல்வேன், ஐயா?
குணக்கடலே! அருட்கடலே!
அசுர ரான
குரைகடலை வென்ற பரங்-
குன்றுளானே!
( குமர - குமரக் கடவுளே. கண்ட வலிப்பு - கழுத்து வலிப்பு. அசுரரான குரைகடலை - அரக்கர்களன் கடல் போன்ற கூட்டத்தை. குரை - சப்திக்கும்.)
பொதியமலைச் சாரலில் உள்ள பெரியம்மை கோவிலுக்கும் போய் இராமச்சந்திரக் கவிராயர் தன் தலை விதியை நொந்து கொண்டு புலம்புகிறார். ' புல்லுக் கட்டும், விறகும் சுமந்து பிழைத்தவர்கள் பூர்வபுண்ணிய வசத்தினால் இன்று சீமான்கள் ஆகி விட்டார்கள்.ஏராளமாக விளைந்த நெல்லை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பண மூட்டையும் சேர்ந்திருக்கிறது. அந்தஸ்தைக்காட்டிக் கொள்ள நீலக் கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொல்லால் கவிதை கட்டும் புலவர்களைக் கண்டு விட்டால், பாய்ந்து கதவை அடைத்துக் கொள்ளுகிறார்கள். புலவரோடு மல்யுத்தம் நிகழ்த்த எதிரே வருகிறார்கள். இப்படிப் பட்ட மடையர்களைப் பாடி நான் காலம் தள்ளவா? இதுதான் என் தலை விதியா?'
'புல்லுக் கட்டும்
விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்,
நெல்லுக் கட்டும்
பணக்கட்டும் கண்டபின்
நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்;
சொல்லுக் கட்டும்
புலவரைக் கண்டக்கால்
தூரிப் பாய்ந்து
கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும்
மடையரைப் பாடவோ,
மலயச் சாரலில்
வாழ் பெரியம்மையே?'
( தூரி - நெருங்கி, மலயம் - பொதிகைமலை.)
இதே கவிராயர் ஒரு பிரபுவிடம் சென்றார். பலவாறாக அவனுக்கு ஏற்பில்லாத பல பெருமைகளை அவன் மீது ஏற்றிப் புகழ்ந்து பாடினார். அப்படியும் பயனில்லை. 'இல்லை' என்று அவன் கைவிரித்துவிட்ட சோகத்தைப் பாடுகிறார்:
'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!'
அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் என்றொரு புலவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் கவிநயத்துடனும் நகைச் சுவையுடனும் பாடியிருக்கிறார்.
பெருஞ்செல்வன் ஒருவன் ஒருநாள் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் ஈயாத உலோபி. ஏழைகளையும் புலவர்க¨ளையும் அருகே அண்ட விட மாட்டான். அவனிடம் பொருட் செல்வம் இருந்ததே ஒழிய கல்விச் செல்வம் இல்லை. அவனைக் காண புலவர் வந்தார். அவர் புலவர் என்று அவனுக்குத் தெரியாது. அதனால் 'வாரும், நீர் யார்' என்று கேட்டுவிட்டான். அது கேட்ட புலவர் 'யான் வித்து வான்' என்றார். அதைக் கேட்டதும் அவனது உடல் மின்சாரம் தாக்கியதுபோல நடுங்கியது; வாய் குழறியது; உள்ளம் ஒடுங்கியது; மதிமோசம் வந்து விட்டதே என்று பதறினான்; மெல்ல சுதாரித்துக் கொண்டு 'நீர் வந்த காரியம் எது?' என்றான். புலவரிடம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை. பேச்சு வளர்ந்தால் இந்தப் பொல்லாத புலவர்கள் சொல்லால் மயக்கிப் பணம் பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். சுருக்கமாய்ப் பேசி அனுப்பி விட எண்ணினான்.
ஆனால் புலவர் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாரா? கடல் மடை திறந் தாற்போல் புகழுரைகளை அள்ளி வீசலானர். 'விண்ணுகில் காமதேனு என்றொரு பசு இருக்கிறது. அது கேட்டவர்க்கு எதையும் இல்லை என்னாது அளிக்கும் என்பார்கள். அத்தகைய - மண்ணுலகக் காமதேனு நீதான்! விண்ணுலகில் கற்பக விருட்சம் என்றொரு மரம் உண்டு. அதனடியில் நின்று என்ன கேட்டாலும் அது உடனே வழங்கும். நீ மண்ணுலகக் கற்பக விருட்சம்! தேவருலகில் சிந்தாமணி என்றொரு அரிய கல் உள்ளது. அது கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டது. அந்த சிந்தாமணி நீயே! அரிச்சந்திரன் என்ற மன்னன் சொன்ன சொல் தவறாதவன். நீயும் அவனைப் போல வாக்குத் தவறாதவன். இந்தக் காலத்து அரிச்சந்திரன் நீதான்!' என்றெல்லாம் புகழ்மொழிகளை எடுத்து விட்டார். இத்தகைய புகழ்மொழிக்கு மயங்காதிருக்கவும் முடியுமா?
ஆனால் அவனது முகம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதில் சிவந்தது. கண்கள் சினத்தால் சிவப்பேறியது. அவரது புகழுரைகளை எல்லா இகழுரைகளாகக் கருதினான். கோபம் கொப்பளிக்கப் புலவரை நோக்கி, 'யாரைப் பார்த்து மாடு, மரம், கல் என்று கூறினீர்?' என்று கேட்டான். 'அய்யா! நான் எங்கே தங்களை அப்படியெல்லாம் சொன்னேன்?' என்று அச்சத்துடன் கேட்டார். ' காமதேனு என்று அழைத்தீரே- மாடே என்று சொல்லாமல் சொல்கிறீரா? மரமே என்று சொல்லாமல் கற்பக விருட்சமே என்றீர். கல்லே என்று சொல்லாமல் சிந்தாமணியே என்றீர். நீர் குறிப்பினால் சொன்னதை நான் உணரமட்டேன் என்று நினத்தீரா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம்- கடைசியாக ஒரு அவதூறு சொன்னீரே அதை மன்னிக்கவே முடியாது. அரிச்சந்திரன் என்றீரே எத்தைய இழிசொல் அது! அரிச்சந்திரன் போல நான் யாருக்காவது அடிமைத் தொழில் செய்தேனா? யார் கையில் என் மனைவியை விற்றேன்? அடாத சொல் சொன்னீரே? இந்த வசை தீருமோ?' என்று கடுமையாய்ப் பேசினான்.
'வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய் குழறி மெய்எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் எது எனச்
சீருலாவிய காமதேனுவே தாருவே
சிந்தாமணிக்கு நிகரே
செப்புவனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கணும் சிவந்தே
யாரை நீர் மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே`.
என்று புலம்புகிறார் புலவர்.
இவையெல்லாம் இடைக்காலப் புலவர்களின் புலம்பல். நம் காலத்து நாயகர் ஒருவரின் புலம்பலைப் பார்க்கலமா?
ஜெமினியின் ஔவையார் படத்துக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது நண்பரும் ஜெமினியின் கதை இலாகா பொறுப் பாளருமான கொத்தமங்கலம் சுப்புதான் அவரை அப்பணிக்கு திரு வாசனிடம் சிபாரிசு
செய்தவர். புதுமைப்பித்தனின் பணிக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லை; அதற்கான அங்கீகாரமும் கௌரவமாக இல்லை. யாரோ அது பற்றி புதுமைப்பித்தனிடம் கேட்டபோது எரிச்சலோடு புலம்பிய கவிதை இது:
அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா - சவ்வாது
பொட்டு வச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடை கட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.
கொத்தமங்கலம் சுப்புவைப் பார்த்திராதவர்களுக்கு காட்டப்படும் ஒரு சின்ன சித்திரம் கசப்பின் முழுமையைக் காட்டுகிறதல்லவா!
-மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
இராமச்சந்திரக் கவிராயருக்கு இப்படி நிறைய அனுபவம் உண்டு. பணம் படைத்த பலருக்குப் புலவர்களின் அருமையோ அவர்தம் கவிதைகளின் பெருமையோ தெரிவதில்லை. அவர்களுக்குப் பணம்தான் பெரிது. பணம் படைத்திருப்பதால் தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் அவர்கள் புலவர்களை மதிப்ப தில்லை. கவிஞர்கள் உதவி நாடி வந்து விட்டால் ஒரு சமயம் வெறும் கும்பிடு போட்டு அனுப்பி விடுவார்கள்; மற்றொரு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்; வேறொரு சமயம் ஏதோ கணக்குப் போடுகிறவர்களைப் போல விரல்களை மடக்கிக் கொண்டு வாயால் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்; பிறிதொரு சமயமோ வேட்டைநாய் போலச் சீறி விழுவார்கள். இவர்கள் மனம் ஒத்து வரும்படி கவிகள் பாடி அவருக்கு அலுத்துப் போய்விட்டது. 'இப்படி நான் எத்தனை நாள் கயவர்களிடம் போய் அலைந்து திரிவது - திருப்பரங்குன்றில் வாழும் மூருகப் பெருமானே' என்று முறையிடுகிறார்:
வணக்கம் வரும் சில நேரம்,
குமர! கண்ட
வலிப்பு வரும் சில நேரம்;
வலியச் செய்யக்
கணக்கு வரும் சிலநேரம்;
வேட்டைநாய் போல்
கடிக்க வரும் சில நேரம்;
கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப்
பாடிப் பாடி
எத்தனை நாள் திரிந்து திரிந்(து)
உழல்வேன், ஐயா?
குணக்கடலே! அருட்கடலே!
அசுர ரான
குரைகடலை வென்ற பரங்-
குன்றுளானே!
( குமர - குமரக் கடவுளே. கண்ட வலிப்பு - கழுத்து வலிப்பு. அசுரரான குரைகடலை - அரக்கர்களன் கடல் போன்ற கூட்டத்தை. குரை - சப்திக்கும்.)
பொதியமலைச் சாரலில் உள்ள பெரியம்மை கோவிலுக்கும் போய் இராமச்சந்திரக் கவிராயர் தன் தலை விதியை நொந்து கொண்டு புலம்புகிறார். ' புல்லுக் கட்டும், விறகும் சுமந்து பிழைத்தவர்கள் பூர்வபுண்ணிய வசத்தினால் இன்று சீமான்கள் ஆகி விட்டார்கள்.ஏராளமாக விளைந்த நெல்லை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பண மூட்டையும் சேர்ந்திருக்கிறது. அந்தஸ்தைக்காட்டிக் கொள்ள நீலக் கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொல்லால் கவிதை கட்டும் புலவர்களைக் கண்டு விட்டால், பாய்ந்து கதவை அடைத்துக் கொள்ளுகிறார்கள். புலவரோடு மல்யுத்தம் நிகழ்த்த எதிரே வருகிறார்கள். இப்படிப் பட்ட மடையர்களைப் பாடி நான் காலம் தள்ளவா? இதுதான் என் தலை விதியா?'
'புல்லுக் கட்டும்
விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்,
நெல்லுக் கட்டும்
பணக்கட்டும் கண்டபின்
நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்;
சொல்லுக் கட்டும்
புலவரைக் கண்டக்கால்
தூரிப் பாய்ந்து
கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும்
மடையரைப் பாடவோ,
மலயச் சாரலில்
வாழ் பெரியம்மையே?'
( தூரி - நெருங்கி, மலயம் - பொதிகைமலை.)
இதே கவிராயர் ஒரு பிரபுவிடம் சென்றார். பலவாறாக அவனுக்கு ஏற்பில்லாத பல பெருமைகளை அவன் மீது ஏற்றிப் புகழ்ந்து பாடினார். அப்படியும் பயனில்லை. 'இல்லை' என்று அவன் கைவிரித்துவிட்ட சோகத்தைப் பாடுகிறார்:
'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!'
அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் என்றொரு புலவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் கவிநயத்துடனும் நகைச் சுவையுடனும் பாடியிருக்கிறார்.
பெருஞ்செல்வன் ஒருவன் ஒருநாள் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் ஈயாத உலோபி. ஏழைகளையும் புலவர்க¨ளையும் அருகே அண்ட விட மாட்டான். அவனிடம் பொருட் செல்வம் இருந்ததே ஒழிய கல்விச் செல்வம் இல்லை. அவனைக் காண புலவர் வந்தார். அவர் புலவர் என்று அவனுக்குத் தெரியாது. அதனால் 'வாரும், நீர் யார்' என்று கேட்டுவிட்டான். அது கேட்ட புலவர் 'யான் வித்து வான்' என்றார். அதைக் கேட்டதும் அவனது உடல் மின்சாரம் தாக்கியதுபோல நடுங்கியது; வாய் குழறியது; உள்ளம் ஒடுங்கியது; மதிமோசம் வந்து விட்டதே என்று பதறினான்; மெல்ல சுதாரித்துக் கொண்டு 'நீர் வந்த காரியம் எது?' என்றான். புலவரிடம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை. பேச்சு வளர்ந்தால் இந்தப் பொல்லாத புலவர்கள் சொல்லால் மயக்கிப் பணம் பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். சுருக்கமாய்ப் பேசி அனுப்பி விட எண்ணினான்.
ஆனால் புலவர் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாரா? கடல் மடை திறந் தாற்போல் புகழுரைகளை அள்ளி வீசலானர். 'விண்ணுகில் காமதேனு என்றொரு பசு இருக்கிறது. அது கேட்டவர்க்கு எதையும் இல்லை என்னாது அளிக்கும் என்பார்கள். அத்தகைய - மண்ணுலகக் காமதேனு நீதான்! விண்ணுலகில் கற்பக விருட்சம் என்றொரு மரம் உண்டு. அதனடியில் நின்று என்ன கேட்டாலும் அது உடனே வழங்கும். நீ மண்ணுலகக் கற்பக விருட்சம்! தேவருலகில் சிந்தாமணி என்றொரு அரிய கல் உள்ளது. அது கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டது. அந்த சிந்தாமணி நீயே! அரிச்சந்திரன் என்ற மன்னன் சொன்ன சொல் தவறாதவன். நீயும் அவனைப் போல வாக்குத் தவறாதவன். இந்தக் காலத்து அரிச்சந்திரன் நீதான்!' என்றெல்லாம் புகழ்மொழிகளை எடுத்து விட்டார். இத்தகைய புகழ்மொழிக்கு மயங்காதிருக்கவும் முடியுமா?
ஆனால் அவனது முகம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதில் சிவந்தது. கண்கள் சினத்தால் சிவப்பேறியது. அவரது புகழுரைகளை எல்லா இகழுரைகளாகக் கருதினான். கோபம் கொப்பளிக்கப் புலவரை நோக்கி, 'யாரைப் பார்த்து மாடு, மரம், கல் என்று கூறினீர்?' என்று கேட்டான். 'அய்யா! நான் எங்கே தங்களை அப்படியெல்லாம் சொன்னேன்?' என்று அச்சத்துடன் கேட்டார். ' காமதேனு என்று அழைத்தீரே- மாடே என்று சொல்லாமல் சொல்கிறீரா? மரமே என்று சொல்லாமல் கற்பக விருட்சமே என்றீர். கல்லே என்று சொல்லாமல் சிந்தாமணியே என்றீர். நீர் குறிப்பினால் சொன்னதை நான் உணரமட்டேன் என்று நினத்தீரா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம்- கடைசியாக ஒரு அவதூறு சொன்னீரே அதை மன்னிக்கவே முடியாது. அரிச்சந்திரன் என்றீரே எத்தைய இழிசொல் அது! அரிச்சந்திரன் போல நான் யாருக்காவது அடிமைத் தொழில் செய்தேனா? யார் கையில் என் மனைவியை விற்றேன்? அடாத சொல் சொன்னீரே? இந்த வசை தீருமோ?' என்று கடுமையாய்ப் பேசினான்.
'வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய் குழறி மெய்எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் எது எனச்
சீருலாவிய காமதேனுவே தாருவே
சிந்தாமணிக்கு நிகரே
செப்புவனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கணும் சிவந்தே
யாரை நீர் மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே`.
என்று புலம்புகிறார் புலவர்.
இவையெல்லாம் இடைக்காலப் புலவர்களின் புலம்பல். நம் காலத்து நாயகர் ஒருவரின் புலம்பலைப் பார்க்கலமா?
ஜெமினியின் ஔவையார் படத்துக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது நண்பரும் ஜெமினியின் கதை இலாகா பொறுப் பாளருமான கொத்தமங்கலம் சுப்புதான் அவரை அப்பணிக்கு திரு வாசனிடம் சிபாரிசு
செய்தவர். புதுமைப்பித்தனின் பணிக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லை; அதற்கான அங்கீகாரமும் கௌரவமாக இல்லை. யாரோ அது பற்றி புதுமைப்பித்தனிடம் கேட்டபோது எரிச்சலோடு புலம்பிய கவிதை இது:
அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா - சவ்வாது
பொட்டு வச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடை கட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.
கொத்தமங்கலம் சுப்புவைப் பார்த்திராதவர்களுக்கு காட்டப்படும் ஒரு சின்ன சித்திரம் கசப்பின் முழுமையைக் காட்டுகிறதல்லவா!
-மேலும் சொல்வேன்.
-வே.சபாநாயகம்.
Friday, August 20, 2004
எனது களஞ்சியத்திலிருந்து - 7: இரங்கற்பா
கவிவளம் மிக்க கவிஞர்கள் எது பாடினாலும் - அது பாராட்டோ, வசையோ, பரவசமோ எதுவாக இருந்தாலும் கவிநயத்துடனும் நெஞ்சைத் தொடுவதாகவுமே இருக்கும். அப்படியே, தமக்கு அருமையானவர் மறைந்தால் மனம் நொந்து கவிஞர்கள் பாடும் இரங்கற்பாக்களும் அற்புதமானவை.
கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். வாணியன் தாதன் என்பது அவரது பெயர். தமிழில் உத்தரகாண்டத்தைப் பாடியவர். கம்பருடன் சதாபோட்டி. கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம் பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன் மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் அவர் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடை யவர்கள் பாடு கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும் சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத் துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும் போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:
` இன்றோ நம் கம்பன்
இறந்தநாள்! இப்புவியில்
இன்றோ அப் புன்கவிகட்கு
ஏற்ற நாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்
புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!`
நமச்சிவாயப் புலவர் என்பவர் வள்ளல் சீதக்காதியால் மிகவும் மதிக்கப் பெற்றவர். சீதக்காதி இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரம் கொண்டார். `சீமான் இறந்திட்டபோதே புலமையும் இறந்ததுவே` என்று புலம்பினார். மனம் குழைந்து அவர் வருந்திப் பாடுகிறார்:
பூமாது இருந்தென்
புவிமாது இருந்தென்? பூதலத்தில்
நாமாது இருந்தென்?
நாம் இருந்தென்? நல் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்
சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே
புலமையும் செத்ததுவே!
( பூமாது- லட்சுமி; புவிமாது - நிலமகள்; நாமாது- பிரமன் நாவிலிருக்கும் சரஸ்வதி; பூதலம்-நிலவுலகம்; மால் - திருமால் )
இந் நிலவுலகில் இலக்குமி இருந்து என்ன பயன்? நிலமகள் இருந்தும் யாது பயன்? நல்ல புலமை வாய்ந்த புலவர்களுக்கு வள்ளலும் திருமால் போன்று அழகு பொருந்தியவனுமான மன்னன் சீதக்காதி உயிர் நீத்தபோதே புலவரின் கல்விச் சிறப்பும் ஒழிந்து போயிற்று.
தமக்கு அருமையானவர் இறந்தால் மனம் வெதும்பி சாபமிடும் புலவர்களும் உண்டு. கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு புலவர் கதறிப் புலம்பினார். அவரது உயிரைப் பறித்த எமனை வயிறெரிந்து சாபமிட்டார்.
`உலகத்தில் வள்ளல்கள் ஒரு சிலர் தான். ஆனால் உதவி நாடி யாசிப்பவர்களோ மிகப் பலர். இதைத் தெரிந்திருந்தும் கூவத்து நாரணன் உயிரை எமன் கொண்டு போய் விட்டான். எமனே! நீ நாசமாய்ப் போக! கரி வேண்டுமென்றால் ஏதாவது காட்டு மரங்களை வெட்டி எரித்துக் கொள்ளாமல் கற்பக விருட்சங்களையா வெட்டுவது? அநியாயமாகக் கூவத்து நாரணனைக் கொன்று விட்டாயே?`
`இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?
கூவத்து நாரணன் உயிரை அபகரித்து விட்டான் எமன் என்று சொல்லாமல், அவனைக் கொலை செய்துவிட்டான் என்றே புலவர் உக்கிரத்துடன் சொல்லுகிறார்.
ரசிகமணி டி.கே.சியின் அருமைப் புதல்வர் தீத்தாரப்பன் நல்ல கவிஞர்; கதாசிரியர்; அவரது கதை - கவிதை சேர்ந்த தொகுப்பு ஒன்று `அரும்பிய முல்லை` என்ற பெயரில் வெளியாகியுள்ளது. டி.கே.சியின் இந்த அருமைப் புதல்வர் 32 வயதில் இறைவனடி சேர்ந்தார். டி.கே.சியின் சோகம் அவரது ரசிகர்களின் சோகம் அல்லவா? கவிமணி டி.கே.சியின் அரிய நண்பர். அவரது அருமை மகன் இறந்த செய்தி கேட்டதும் ஒரு பாடல் எழுதி டி.கே.சிக்கு அனுப்பி வைக்கிறார்.
`எப்பாரும் போற்றும்
இசைத் தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்
லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச்
சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன்
இனி?`
(செல்லையா என்பது தீத்தாரப்பனின் செல்லப் பெயர். தீபன் என்ற புனை பெயரில் எழுதினார்.)
இந்தப் பாடலைப் பார்த்ததும் டி.கே.சி எப்படித் துடித்தாரோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது? அதுதான் இல்லை! டி.கே.சி மகனை மறந்தார்; அவர் இறந்ததை மறந்தார்; பாட்டின் அருமையை மிக ரசித்து அனுபவித்தார். அதன் பிறகு அவர் சொன்னார்: " இப்படி ஓர் அற்புதமான கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்!''
" இப்படி மகனைப் பிரிந்த காலத்தும் அவன் மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது! அவரை `ரஸஞ்ஞான்¢` என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத்தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப் பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போதுகூட, ஞான திறமும் மீறி ரஸமாகப் பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பவரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்க முடியும்? " என்று எழுதுகிறார் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். வாணியன் தாதன் என்பது அவரது பெயர். தமிழில் உத்தரகாண்டத்தைப் பாடியவர். கம்பருடன் சதாபோட்டி. கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம் பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன் மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் அவர் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடை யவர்கள் பாடு கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும் சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத் துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும் போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:
` இன்றோ நம் கம்பன்
இறந்தநாள்! இப்புவியில்
இன்றோ அப் புன்கவிகட்கு
ஏற்ற நாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்
புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!`
நமச்சிவாயப் புலவர் என்பவர் வள்ளல் சீதக்காதியால் மிகவும் மதிக்கப் பெற்றவர். சீதக்காதி இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரம் கொண்டார். `சீமான் இறந்திட்டபோதே புலமையும் இறந்ததுவே` என்று புலம்பினார். மனம் குழைந்து அவர் வருந்திப் பாடுகிறார்:
பூமாது இருந்தென்
புவிமாது இருந்தென்? பூதலத்தில்
நாமாது இருந்தென்?
நாம் இருந்தென்? நல் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்
சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே
புலமையும் செத்ததுவே!
( பூமாது- லட்சுமி; புவிமாது - நிலமகள்; நாமாது- பிரமன் நாவிலிருக்கும் சரஸ்வதி; பூதலம்-நிலவுலகம்; மால் - திருமால் )
இந் நிலவுலகில் இலக்குமி இருந்து என்ன பயன்? நிலமகள் இருந்தும் யாது பயன்? நல்ல புலமை வாய்ந்த புலவர்களுக்கு வள்ளலும் திருமால் போன்று அழகு பொருந்தியவனுமான மன்னன் சீதக்காதி உயிர் நீத்தபோதே புலவரின் கல்விச் சிறப்பும் ஒழிந்து போயிற்று.
தமக்கு அருமையானவர் இறந்தால் மனம் வெதும்பி சாபமிடும் புலவர்களும் உண்டு. கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு புலவர் கதறிப் புலம்பினார். அவரது உயிரைப் பறித்த எமனை வயிறெரிந்து சாபமிட்டார்.
`உலகத்தில் வள்ளல்கள் ஒரு சிலர் தான். ஆனால் உதவி நாடி யாசிப்பவர்களோ மிகப் பலர். இதைத் தெரிந்திருந்தும் கூவத்து நாரணன் உயிரை எமன் கொண்டு போய் விட்டான். எமனே! நீ நாசமாய்ப் போக! கரி வேண்டுமென்றால் ஏதாவது காட்டு மரங்களை வெட்டி எரித்துக் கொள்ளாமல் கற்பக விருட்சங்களையா வெட்டுவது? அநியாயமாகக் கூவத்து நாரணனைக் கொன்று விட்டாயே?`
`இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?
கூவத்து நாரணன் உயிரை அபகரித்து விட்டான் எமன் என்று சொல்லாமல், அவனைக் கொலை செய்துவிட்டான் என்றே புலவர் உக்கிரத்துடன் சொல்லுகிறார்.
ரசிகமணி டி.கே.சியின் அருமைப் புதல்வர் தீத்தாரப்பன் நல்ல கவிஞர்; கதாசிரியர்; அவரது கதை - கவிதை சேர்ந்த தொகுப்பு ஒன்று `அரும்பிய முல்லை` என்ற பெயரில் வெளியாகியுள்ளது. டி.கே.சியின் இந்த அருமைப் புதல்வர் 32 வயதில் இறைவனடி சேர்ந்தார். டி.கே.சியின் சோகம் அவரது ரசிகர்களின் சோகம் அல்லவா? கவிமணி டி.கே.சியின் அரிய நண்பர். அவரது அருமை மகன் இறந்த செய்தி கேட்டதும் ஒரு பாடல் எழுதி டி.கே.சிக்கு அனுப்பி வைக்கிறார்.
`எப்பாரும் போற்றும்
இசைத் தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்
லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச்
சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன்
இனி?`
(செல்லையா என்பது தீத்தாரப்பனின் செல்லப் பெயர். தீபன் என்ற புனை பெயரில் எழுதினார்.)
இந்தப் பாடலைப் பார்த்ததும் டி.கே.சி எப்படித் துடித்தாரோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது? அதுதான் இல்லை! டி.கே.சி மகனை மறந்தார்; அவர் இறந்ததை மறந்தார்; பாட்டின் அருமையை மிக ரசித்து அனுபவித்தார். அதன் பிறகு அவர் சொன்னார்: " இப்படி ஓர் அற்புதமான கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்!''
" இப்படி மகனைப் பிரிந்த காலத்தும் அவன் மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது! அவரை `ரஸஞ்ஞான்¢` என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத்தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப் பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போதுகூட, ஞான திறமும் மீறி ரஸமாகப் பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பவரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்க முடியும்? " என்று எழுதுகிறார் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Subscribe to:
Posts (Atom)
