1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், 'சிறுகதை உருவம்'
என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா?
பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்கு
சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்
போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்
கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோ
முடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரை
நான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி சிந்தித்தோ, தெரிந்தோ எழுதியது
இல்லை.
2. கேள்வி: 'மலரும் மணமும்' சிறுகதைக்குப் பிறகு உங்களுக்கு சிறுகதை
பற்றிய உருவப் பிரக்ஞை வந்து விட்டதா?
பதில்: 'மணிக்கொடி' சகவாசம் மூலம் சிறுகதை பற்றிய பிரக்ஞை தெளிவு
பெற்றது. இருந்தும் வடிவம் பிடிபடவில்லை. வெளி நாட்டிலே அதற்கு மவுசு
அதிகம். எனவே அதற்குள்ள மதிப்பு மார்க்கட்டு எல்லாம் தெளிவாகி விட்டது.
3. கேன்வி: ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரலாறு உண்டா? அப்படி இருக்கத்
தான் வேண்டுமா?
பதில்: வாழ்க்கையில் எனக்கு நிகழும் சிறு நிகழ்ச்சிகளில் கூட நாடக
ரசத்தைக் காணும் மனப் பழக்கம் வளர்ந்து வந்திருக்கிறது. இந்த மனநிலை
கதைகளில் உணர்ச்சி வேகத்தை ஏற்றுவதற்கு, நாடகச் சுழிப்புகளைக்
கொண்டு வருவதற்கு மிக மிக உதவியாக இருக்கிறது.
4. கேள்வி: தங்கள் கதைகளில் 'ஐரனி' என்கிற விடம்பனம் அதிகமாகத்
தொனிப்பதாகத் தெரிகிறது. அதனால் தங்கள் வாழ்க்கைப் பார்வையே
அதுதான் என்று கொள்ளலாமா?
பதில்: நான் பிறந்தபோது வாங்கிக் கொண்டு வந்த வரமா அல்லது வளர்ந்த
போது ஏற்பட்ட அனுபவங்களின் விளைவா என்று என்னால் சொல்ல முடியாது.
ஆனால் நான் கதை எழுதும் போது இந்த விடம்பன மனப்போக்கு பீறிக்கொண்டு
மேலோங்கி வந்து விடுகிறது. அது நான் மனதார தெரிந்து செய்வது அல்ல.
வாழ்க்கையில் இந்த விடம்பனம் நிறைந்து கிடக்கிறது. ஆகையால் நொடிகளில்
விழும்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்போக்கு
வளர்ந்திருக்கிறது. இது என் கதைகளிலிருந்து எனக்குக் கிடைத்த பலனா அல்லது
என்னிடமிருந்து கதைகளில் வெளியாகும் மன நிலையா என்பதை என்னால்
சொல்ல முடியவில்லை.
5. கேள்வி: உங்கள் கதைகளை நீண்டகாலமாகப் படிக்கிறவர்கள் பழைய ராமையா,
புதிய ராமையா என்று பிரித்துப் பேசுகிறார்களே, அது சரிதானா?
பதில்: அது சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது. என் மனப்போக்கிலோ,
அழகு உணர்ச்சியிலோ, அதை எடுத்துக் காட்டும் ஆர்வத்திலோ எவ்வித
மாறுதலும் நிகழவில்லை. ஆனால், மணிக்கொடி காலத்தில் எழுதும் போது நான்
உணர்ச்சி வெப்ப நிலையில் இருந்த வாசகர்களுக்கு எழுதினேன். இன்று வியாபாரத்
துறையில் நடத்தப்படும் பத்திரிகைகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள் படிப்ப
தற்காக எழுதுகிறேன். ஆகையால் கட்டட அமைப்பு கதை சொல்லும் நடை
ஆகியவற்றை மனதறிந்து மாற்றி எழுதுகிறேன். இரண்டிலும் இலக்கியத்தன்மை
இருக்க வேண்டும் என்ற குறிகோள் என் உள்ளே இருக்கிறது. 0
Showing posts with label இவர்களது எழுத்து முறை. Show all posts
Showing posts with label இவர்களது எழுத்து முறை. Show all posts
Saturday, June 04, 2011
Tuesday, May 31, 2011
இவர்களது எழுத்துமுறை - 39.பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்)
1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்
தாம். சமூகம், நாடக மேடையில் 'காட்சி ஜோடனையாக' மட்டும் இருந்தால்
போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்
என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.
மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்
தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,
டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்
பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்
காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் தான் என் எழுத்தில் அறிமுகப்
படுத்த ஆசைப்படுகிறேன். முயற்சி செய்கிறேன்.
3. நான் எவ்வளவு தூரத்துக்கு, நான் பார்த்த, சந்தித்த, பழகிய ஆண் பெண்
களின் சிந்தனைகளையோ, உணர்ச்சிகளையோ வெற்றிகரமாக என் எழுத்தில்
கொண்டு வந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உறுதி. வெற்றியை நாடி நான் உழைக்கிறேன்.
4. வசதியான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வயிறு வாடாமல் இருக்க ஒரு
நல்ல வேலையிலும் உள்ளவன் நான். குடும்பப் பிரச்சினைகளோ, வறுமை
வாழ்க்கையோ அறியாதவன். இதனால் எனக்கு நிறையப் படிக்கவும்,
சிந்திக்கவும், எழுதவும் நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் உழைக்கிறேன்.
எழுத்தாளனும் ஒரு தச்சனைப் போல, பொற்கொல்லனைப் போல உழைத்து
உழைத்துத்தான் முன்னுக்கு வர முடியும் என்பது என் சித்தாந்தம். 'நான் இன்று
மூடில் இல்லை. எழுதக் கதை வரவில்லை' என்று கூறும் எழுத்தாளன் பிறரையும்
ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான் என்று நான் நினைக்கிறேன்.
5. கதைகளைப் படிக்கும் போது, எல்லா வாசகர்களுக்குமே, எழுத வேண்டும்
என்ற ஆவல் பிறக்கும். ஏன் வெறி கூடக் கிளம்பும். என்னைப் பொறுத்த
வரையில், நல்ல வேளையாக கதைகளைப் படிக்கும் போதோ, படித்த பின்போ
எழுத ஆசையோ வெறியொ தோன்றுவதில்லை. என் கதாபாத்திரங்கள், என்
வாழ்க்கையிலேயே, என்னைச் சுற்றிலுமே, பல வீடுகளிலுமே இருப்பதால்
நான் கதை படித்துக் கதை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகவில்லை.
6. என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ,
பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத்
தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்
களுக்கும் ,மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்
களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த
முறை என்று கருதுகிறேன்.
7. 'கலையைத் தெரியப்படுத்தி கலைஞனை மறைத்துக் கொள்வது தான்
கலையின் விளையாட்டு' என்றார் ஆஸ்கார் ஒயில்டு. அது நூறுக்கு நூறு
உண்மை. எப்போது எழுத்தாளன் தன் தலையை நீட்டி, கலையம்சத்தை
உள்ளே தள்ளுகிறனோ அப்போதே, அவன் மடியும் முன்பே அவனுடைய
எழுத்து மடிந்து விடுகிறது. என் எழுத்து எனக்கு முன்னால் மடிய நான்
ஆசைப்படவில்லை. 0
தாம். சமூகம், நாடக மேடையில் 'காட்சி ஜோடனையாக' மட்டும் இருந்தால்
போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்
என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.
மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்
தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,
டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்
பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்
காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் தான் என் எழுத்தில் அறிமுகப்
படுத்த ஆசைப்படுகிறேன். முயற்சி செய்கிறேன்.
3. நான் எவ்வளவு தூரத்துக்கு, நான் பார்த்த, சந்தித்த, பழகிய ஆண் பெண்
களின் சிந்தனைகளையோ, உணர்ச்சிகளையோ வெற்றிகரமாக என் எழுத்தில்
கொண்டு வந்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உறுதி. வெற்றியை நாடி நான் உழைக்கிறேன்.
4. வசதியான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வயிறு வாடாமல் இருக்க ஒரு
நல்ல வேலையிலும் உள்ளவன் நான். குடும்பப் பிரச்சினைகளோ, வறுமை
வாழ்க்கையோ அறியாதவன். இதனால் எனக்கு நிறையப் படிக்கவும்,
சிந்திக்கவும், எழுதவும் நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் உழைக்கிறேன்.
எழுத்தாளனும் ஒரு தச்சனைப் போல, பொற்கொல்லனைப் போல உழைத்து
உழைத்துத்தான் முன்னுக்கு வர முடியும் என்பது என் சித்தாந்தம். 'நான் இன்று
மூடில் இல்லை. எழுதக் கதை வரவில்லை' என்று கூறும் எழுத்தாளன் பிறரையும்
ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறான் என்று நான் நினைக்கிறேன்.
5. கதைகளைப் படிக்கும் போது, எல்லா வாசகர்களுக்குமே, எழுத வேண்டும்
என்ற ஆவல் பிறக்கும். ஏன் வெறி கூடக் கிளம்பும். என்னைப் பொறுத்த
வரையில், நல்ல வேளையாக கதைகளைப் படிக்கும் போதோ, படித்த பின்போ
எழுத ஆசையோ வெறியொ தோன்றுவதில்லை. என் கதாபாத்திரங்கள், என்
வாழ்க்கையிலேயே, என்னைச் சுற்றிலுமே, பல வீடுகளிலுமே இருப்பதால்
நான் கதை படித்துக் கதை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகவில்லை.
6. என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ,
பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத்
தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்
களுக்கும் ,மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்
களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த
முறை என்று கருதுகிறேன்.
7. 'கலையைத் தெரியப்படுத்தி கலைஞனை மறைத்துக் கொள்வது தான்
கலையின் விளையாட்டு' என்றார் ஆஸ்கார் ஒயில்டு. அது நூறுக்கு நூறு
உண்மை. எப்போது எழுத்தாளன் தன் தலையை நீட்டி, கலையம்சத்தை
உள்ளே தள்ளுகிறனோ அப்போதே, அவன் மடியும் முன்பே அவனுடைய
எழுத்து மடிந்து விடுகிறது. என் எழுத்து எனக்கு முன்னால் மடிய நான்
ஆசைப்படவில்லை. 0
Monday, May 16, 2011
இவர்களது எழுத்துமுறை - 38.மீ.ப.சோமசுந்தரம்
1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும்
விரும்புகிறீர்களா?
பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும்.
பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம்
குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.
2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்?
பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே
என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று
வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். அந்த நாளில்
அதிகாலையில் எழுந்து எழுதுவேன். இந்த வழக்கத்தைப் பயிற்சியின்
மூலம் ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டேன். குறித்த நாளில்
என்னிடமிருந்து அந்த அத்தியாயம் கண்டிப்பாக வந்து விடும் என்பது
அனுபவத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.
2. கேள்வி: கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எப்படி அமைக்
கிறீர்கள்? கதைக்குக் கருப்பொருள் முக்கியமா? பாத்திரம் முக்கியமா?
பதில்: தொடர்கதைகள் என்றால் ஓரளவு மனத்திற்குள் தோராயமாக
ஒரு வடிவம் வைத்துக் கொள்ளுவது உண்டு. சரித்திரக்கதை என்றால்
ஆராய்ச்சிக் குறிப்புகளை விரிவாகச் சேகரித்து அவற்றையும் தொகுத்து
வைத்துக் கொள்வதுண்டு. மற்றப்படி அந்தந்த வாரம் அந்தந்த அத்தியா
யங்களை எழுதுவதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது.
நினைவும் கற்பனையும் துணை செய்வதைப் பொறுத்து நிகழ்ச்சிகள்
சூடேறிச் செல்ல வேண்டும். அதை ஒட்டியே பாத்திரங்களின் செயல்களும்
அமையும். எல்லாவற்றிற்கும் ஓர் அடிப்படை மனத்துள் உருவாகி
இருப்பதால் எழுதுவது ஒரு வழக்கமாகி விடுகிறது.
3. கேள்வி: தொடர் கதைகள் நீங்கள் பிரசுரத்துக்கு முன்பாக முழுதும்
எழுதி வைத்துக் கொள்வதில்லையா?
பதில்: இல்லை.
4. கேள்வி: அப்படியானால் அவற்றின் ஒருமைப்பாடு கெடாதா?
பதில்: ஒருமைப்பாடு ஒரு தரம் உட்காருவதைப் பொறுத்ததா? அது
மனத்தின் உள்ளே உள்ள சிந்தனையின் ஒருமை உணர்வைப் பொறுத்தது
அல்லவா? ஒரே மொத்தமாக ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு பிறகு
தொடராக எழுதி வெளியிடுகிற எழுத்தாளர் கூட கதை முழுவதையும்
ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவதில்லை. விட்டு விட்டுத்தான் எழுத
வேண்டி இருக்கிறது. ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும்
மத்தியில் மாதக்கணக்கில் கூட சில சமயங்களில் இடைவேளை ஏற்பட்டு
விடுவதுண்டு. எனவே ஒருமைப்பாடு என்பது மன உலகின் ஒருமை உணர்வு.
சிந்தனையின் மையம் அது. காலையில் உட்கார்ந்து மாலையில் முடித்து
விடும்ஒருமைப்பாடு இல்லை அது. என் வரையில் நான் ஒரு அத்தியாயத்
துக்கும் அடுத்ததற்கும் ஒரு வார இடைவெளி கொடுக்கிறேன். அவ்வளவு
தான் வித்தியாசம்.
5. கேள்வி: கவிதை, கட்டுரை, சிறுகதை, சமூக நாவல்கள் சரித்திர நாவல்கள்
சமைத்துள்ள தங்களுக்கு எதில் அதிக ஈடுபாடு? ஏன்?
பதில்: என்னுடைய ஈடுபாடு என்பது, வாசகர்களுக்கு அவ்வப்போது
என்னிடமிருந்து எது தேவை என்று கருதிப் பத்திரிகை ஆசிரியர்கள்
என்னிடம் கேட்கிறார்களோ அதுதான். 0
விரும்புகிறீர்களா?
பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும்.
பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம்
குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.
2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்?
பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே
என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று
வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். அந்த நாளில்
அதிகாலையில் எழுந்து எழுதுவேன். இந்த வழக்கத்தைப் பயிற்சியின்
மூலம் ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டேன். குறித்த நாளில்
என்னிடமிருந்து அந்த அத்தியாயம் கண்டிப்பாக வந்து விடும் என்பது
அனுபவத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.
2. கேள்வி: கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எப்படி அமைக்
கிறீர்கள்? கதைக்குக் கருப்பொருள் முக்கியமா? பாத்திரம் முக்கியமா?
பதில்: தொடர்கதைகள் என்றால் ஓரளவு மனத்திற்குள் தோராயமாக
ஒரு வடிவம் வைத்துக் கொள்ளுவது உண்டு. சரித்திரக்கதை என்றால்
ஆராய்ச்சிக் குறிப்புகளை விரிவாகச் சேகரித்து அவற்றையும் தொகுத்து
வைத்துக் கொள்வதுண்டு. மற்றப்படி அந்தந்த வாரம் அந்தந்த அத்தியா
யங்களை எழுதுவதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது.
நினைவும் கற்பனையும் துணை செய்வதைப் பொறுத்து நிகழ்ச்சிகள்
சூடேறிச் செல்ல வேண்டும். அதை ஒட்டியே பாத்திரங்களின் செயல்களும்
அமையும். எல்லாவற்றிற்கும் ஓர் அடிப்படை மனத்துள் உருவாகி
இருப்பதால் எழுதுவது ஒரு வழக்கமாகி விடுகிறது.
3. கேள்வி: தொடர் கதைகள் நீங்கள் பிரசுரத்துக்கு முன்பாக முழுதும்
எழுதி வைத்துக் கொள்வதில்லையா?
பதில்: இல்லை.
4. கேள்வி: அப்படியானால் அவற்றின் ஒருமைப்பாடு கெடாதா?
பதில்: ஒருமைப்பாடு ஒரு தரம் உட்காருவதைப் பொறுத்ததா? அது
மனத்தின் உள்ளே உள்ள சிந்தனையின் ஒருமை உணர்வைப் பொறுத்தது
அல்லவா? ஒரே மொத்தமாக ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு பிறகு
தொடராக எழுதி வெளியிடுகிற எழுத்தாளர் கூட கதை முழுவதையும்
ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவதில்லை. விட்டு விட்டுத்தான் எழுத
வேண்டி இருக்கிறது. ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும்
மத்தியில் மாதக்கணக்கில் கூட சில சமயங்களில் இடைவேளை ஏற்பட்டு
விடுவதுண்டு. எனவே ஒருமைப்பாடு என்பது மன உலகின் ஒருமை உணர்வு.
சிந்தனையின் மையம் அது. காலையில் உட்கார்ந்து மாலையில் முடித்து
விடும்ஒருமைப்பாடு இல்லை அது. என் வரையில் நான் ஒரு அத்தியாயத்
துக்கும் அடுத்ததற்கும் ஒரு வார இடைவெளி கொடுக்கிறேன். அவ்வளவு
தான் வித்தியாசம்.
5. கேள்வி: கவிதை, கட்டுரை, சிறுகதை, சமூக நாவல்கள் சரித்திர நாவல்கள்
சமைத்துள்ள தங்களுக்கு எதில் அதிக ஈடுபாடு? ஏன்?
பதில்: என்னுடைய ஈடுபாடு என்பது, வாசகர்களுக்கு அவ்வப்போது
என்னிடமிருந்து எது தேவை என்று கருதிப் பத்திரிகை ஆசிரியர்கள்
என்னிடம் கேட்கிறார்களோ அதுதான். 0
Monday, May 02, 2011
இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்
1. மௌனிக்கு அவரது வீடே உலகம். எனக்கோ உலகமே வீடு. நான் ஒரு
கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும்
எழுதி முடிக்கவில்லை.
2. மௌனி குறைவாக எழுதியதால் அவர் எழுத்தில் அடர்த்தி அற்புதமாய்
அமைந்திருந்தது. நான் நிறைய எழுதுவதால் நீர்த்துப்போன எழுத்துக்களை
எழுதுகிறேன் என்பது நகரத்தில், தனிமையிலிருக்கிற சித்தம் போக்கு சிவன்
போக்கு மனம் படைத்தவர்களின் சிந்தனையாக இருக்கலாம். மக்கள் திரளோடு
சேர்ந்திருக்கிற எவருக்கும் இந்த ஆபத்து இல்லை.
3. எழுத்தாளனாக வேண்டும் என்ற பொறி என்னுள் இளமையில் எப்போதுமே
நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களும், அங்கீகாரங்களும்
என்னை மேலும் முன்னேற ஊக்குவித்தன. 1964ல் இலங்கையில் இலக்கியம்
சித்தாந்தரீதியில் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். முற்போக்கு இலக்கியம்,
'இழிசனர் இலக்கியம்' என விவரிக்கப்பட்ட நேரம். அவ்வேளையில் முற்போக்கு
இலக்கியத்தின் குரலாக என் முதல் நூல் 'யோகநாதன் கதைகள்' பவ்கலைக்
கழகத்திலேயே வெளியிடப் பெற்றது. இந்த அங்கீகாரம் என்னை வலுப்படுத்தியது.
4. நான் அரசியல் மூலம் இலக்கியத்துக்கும் இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கும்
அறிமுகமானவன். என்னைப் பொறுத்தவரை இல்லக்கியமென்பதே மறைமுக
அரசியல்தான். இதில் ஒளிவு மறைவு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.
5. எனக்கு வயது தெரிந்த காலத்திலிருந்தே சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக்
குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எழுதி வருகிறேன். இதுதான் என் இலக்கிய
சித்தாந்தம். என் எழுத்துக்களும் என் சித்தத்தையே பேசுகின்றன.
6. சமூக ஒடுக்குமுறை, அதிகாரத்துவ மமதை - இவ்விரண்டுமே ஒட்டு மொத்தமான
சமுதாய மாறுதல் மூலமே அழிந்து போக முடியுமென்று நான் எண்ணுகிறேன்.
இவற்றுக்கு எதிராக என் எழுத்தை ஒரு ஆயுதமாகக் கொள்வதை என் தார்மீகக்
கடமையாக உணர்ந்து எழுதி வருகிறேன்.
7. என் எழுத்து பற்றி எனக்கு தீர்க்கமான தீர்மானமுண்டு. நான் சகல ஒடுக்குமுறை
களையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என்
எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம். என் சுவாசம். 0
கிராமத்துக்காரன். என் அனுபவத்தில் கால்வாசியைக்கூட நான் இன்னும்
எழுதி முடிக்கவில்லை.
2. மௌனி குறைவாக எழுதியதால் அவர் எழுத்தில் அடர்த்தி அற்புதமாய்
அமைந்திருந்தது. நான் நிறைய எழுதுவதால் நீர்த்துப்போன எழுத்துக்களை
எழுதுகிறேன் என்பது நகரத்தில், தனிமையிலிருக்கிற சித்தம் போக்கு சிவன்
போக்கு மனம் படைத்தவர்களின் சிந்தனையாக இருக்கலாம். மக்கள் திரளோடு
சேர்ந்திருக்கிற எவருக்கும் இந்த ஆபத்து இல்லை.
3. எழுத்தாளனாக வேண்டும் என்ற பொறி என்னுள் இளமையில் எப்போதுமே
நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களும், அங்கீகாரங்களும்
என்னை மேலும் முன்னேற ஊக்குவித்தன. 1964ல் இலங்கையில் இலக்கியம்
சித்தாந்தரீதியில் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். முற்போக்கு இலக்கியம்,
'இழிசனர் இலக்கியம்' என விவரிக்கப்பட்ட நேரம். அவ்வேளையில் முற்போக்கு
இலக்கியத்தின் குரலாக என் முதல் நூல் 'யோகநாதன் கதைகள்' பவ்கலைக்
கழகத்திலேயே வெளியிடப் பெற்றது. இந்த அங்கீகாரம் என்னை வலுப்படுத்தியது.
4. நான் அரசியல் மூலம் இலக்கியத்துக்கும் இலக்கியத்தின் மூலம் அரசியலுக்கும்
அறிமுகமானவன். என்னைப் பொறுத்தவரை இல்லக்கியமென்பதே மறைமுக
அரசியல்தான். இதில் ஒளிவு மறைவு வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.
5. எனக்கு வயது தெரிந்த காலத்திலிருந்தே சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக்
குரல் கொடுத்து வந்திருக்கிறேன். எழுதி வருகிறேன். இதுதான் என் இலக்கிய
சித்தாந்தம். என் எழுத்துக்களும் என் சித்தத்தையே பேசுகின்றன.
6. சமூக ஒடுக்குமுறை, அதிகாரத்துவ மமதை - இவ்விரண்டுமே ஒட்டு மொத்தமான
சமுதாய மாறுதல் மூலமே அழிந்து போக முடியுமென்று நான் எண்ணுகிறேன்.
இவற்றுக்கு எதிராக என் எழுத்தை ஒரு ஆயுதமாகக் கொள்வதை என் தார்மீகக்
கடமையாக உணர்ந்து எழுதி வருகிறேன்.
7. என் எழுத்து பற்றி எனக்கு தீர்க்கமான தீர்மானமுண்டு. நான் சகல ஒடுக்குமுறை
களையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என்
எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம். என் சுவாசம். 0
Monday, April 25, 2011
இவர்களது எழுத்துமுறை - 35.எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)
1. கேள்வி (சுபமங்களா): பிறந்தது யாழ்ப்பாணம், குடும்பமாகி வாழ்ந்தது
மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே
இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?
பதில்: 'தீ' நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்
மட்டக்களப்பு பழக்க வழக்கங்களையோ சொற்களையோ போட்டு அதற்கொரு
பிராந்தியத் தன்மையை நான் கொடுக்கவில்லை. ஆனால் பிராந்தியத் தன்மை
கொடுத்து செய்யப்பட்டது அனைத்துமே யாழ்ப்பாணத்தைக் களனாகக்
கொண்டவைதான். காரணம் யாழ் வாழ்க்கையைக் காரசாரமாக விவாதித்தவன்
நான் யாழ்ப்பாணத்து ஜாதியத்தின் கொடுமையை நேரடியாக அனுபவித்தவன்
நான். எனவே யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க
வழக்கங்களை உட்கொண்டு யாழ்ப்பாணத்தவனாக இருந்து கொண்டே, அதே
சமயத்தில் அதிலிருந்து வேறுபட்டவனாக இருந்து பார்க்கும் பொழுது ஒரு
அலாதியான ஒட்டுறவு அற்ற ஒரு துறவு போன்ற மனோபக்குவத்துடன் அந்த
வாழ்க்கையைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு இல்லாத பார்வை அது.
எனவேதான் மற்றவர்கள் கதைகளிலே இல்லாத ஒரு தன்மையை என்னுடைய
அணுகுமுறையிலே பார்க்கலாம். அது துறவு நிலை. அதில் பந்தபாசம் கிடையாது.
அதுதான் அந்த வித்தியாசம்.
2. கேள்வி: உங்களது படைப்புகள் மீதான விமர்சனங்களும் பாராட்டுகளும்
இருந்தாலும் அதன் உண்மை நிலை - தனித்துவம் உங்களுக்கேயான பிரத்தி
யேகமான சிறப்பு என்ன என்று சொல்ல முடியுமா?
பதில்: Plot, Theme இரண்டுக்கும் ஏற்றதாக நடையையும் உருவத்தையும்
கொடுக்க வேண்டும் என்று நான் கலைஞனாக முயற்சி செய்தபோதிலும்,
அதற்கு ஒரு முழுமையான இலக்கிய உருவம் கொடுப்பதற்கு இத்தகைய நடை
தான் உதவும் என்று நான் நினைத்த போதிலும் இந்த வேறுபட்ட நடைகளைக்
கூட என்னுடைய கதைகளைச் சுவாசிக்கும் பலரும் இது எஸ்.பொவினுடையது
தான் என்று பெயர் போடாமலே இனங்கண்டு கொள்வார்கள். இந்த நடை
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எப்படி இனம் காண்கிறார்கள்? சற்றுப்
பெருமையாகச் சொன்னாலும் ஊடுபாவாக உள்ளது இலக்கியச் சத்தியம். நான்
எதைச் சொல்லப் புறப்பட்ட போதிலும் என்னுடைய பக்குவத்திற்கேற்ப நான்
எதைச் சத்தியம் என்று நினைக்கிறேனோ அதன் ஒலி அதில் இருக்கும். இது
சத்தியத்தின் ஒலி, நடைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்ந்த வாசகனால்
இனங்காண முடியும். எனவே There was something in common in
the diversityof styles which I employ. அதை மறுக்க இயலாது.
3. கேள்வி: உங்களுக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் என்ன பிரச்சினை?
நற்போக்கு இயக்கம் என்ற ஒன்றை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள்?
பதில்: முற்போக்கு இலக்கியத்துக்கும் எனக்கும் அதிகம் முரண்பாடு
இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்த முற்போக்கு இலக்கிய கோஷத்தை
ஒரு கட்டத்தில் தலைமையேற்று நடத்த வந்தவர்கள் தவறான பாதையில்
இட்டுச் சென்றார்கள்.அது எனக்குத் தெரிந்தது. அதனால் முரண்பட்டேன்.
மார்க்ஸீயம் வளர்க்கப்பட்ட ரஷ்யாவில் உள்ள எழுத்துக்கள்தான் எங்கள்
மாதிரிகள் என்று சொல்லும் பொழுது, எங்களுடைய மண்ணிலிருந்தும்,
எங்களுடைய தேசச் சூழலிலிருந்தும் அந்நியப்படுத்தும் வேலையை அவர்கள்
செய்தார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து வந்து விட்டால் தமிழ் மொழியினதும்,
இனத்தினதும் தனித்துவமான சில விழுமியங்களும் சில மரபுகளும் இருக்கின்றன.
தமிழ்ச் சொற்களை நான் உபயோகிக்கும் போது அந்த தமிழ் இனத்தினுடைய
அடையாளத்தைப் பேணும் ஒரு பணியிலும் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் புதுமைகள் தன்மைகள்
செய்ய வேண்டும். அதுதான் நற்போக்கு.
4. கேள்வி: இன்றைய நவீன தமிழ் இலக்கியம் பற்றி?
பதில்: நம் தமிழ் வாழ்கையில் உள்ள அவலங்களை - அவதிகளை -
ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை - அவர்களுடைய நம்பிக்கைகளை -
சோகங்களை தமிழ் இலக்கியங்களாகப் படைத்துத் தர முனையும்போது
தமிழ் மண்ணின் உண்மையான உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எந்த இஸமும்
எனக்கு ஒரு புதிய வலுவைத் தராது என்றே நம்புகிறேன்.இலக்கியவாதிகள்
படைப்புச் சத்தியத்துக்கு முதன்மை கொடுத்துப்படைக்கட்டும். அதன்
உண்மையே அழகு. பொய்க்குத்தான் பூவேலையும்பூச்சுவேலையும் தேவை.
படைப்பிலே சத்தியத்தைக் கோட்டை விட்டுவிட்டு, அதன் வலிமைக்கு
இசம்களின் துணையைத் தேடுவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. 0
மட்டக்களப்பு. ஆனால் உங்கள் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மையமிட்டே
இருக்கின்றன. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?
பதில்: 'தீ' நாவல் மட்டக்களப்பு சூழலை வைத்து எழுதியபோதிலும்
மட்டக்களப்பு பழக்க வழக்கங்களையோ சொற்களையோ போட்டு அதற்கொரு
பிராந்தியத் தன்மையை நான் கொடுக்கவில்லை. ஆனால் பிராந்தியத் தன்மை
கொடுத்து செய்யப்பட்டது அனைத்துமே யாழ்ப்பாணத்தைக் களனாகக்
கொண்டவைதான். காரணம் யாழ் வாழ்க்கையைக் காரசாரமாக விவாதித்தவன்
நான் யாழ்ப்பாணத்து ஜாதியத்தின் கொடுமையை நேரடியாக அனுபவித்தவன்
நான். எனவே யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க
வழக்கங்களை உட்கொண்டு யாழ்ப்பாணத்தவனாக இருந்து கொண்டே, அதே
சமயத்தில் அதிலிருந்து வேறுபட்டவனாக இருந்து பார்க்கும் பொழுது ஒரு
அலாதியான ஒட்டுறவு அற்ற ஒரு துறவு போன்ற மனோபக்குவத்துடன் அந்த
வாழ்க்கையைப் பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு இல்லாத பார்வை அது.
எனவேதான் மற்றவர்கள் கதைகளிலே இல்லாத ஒரு தன்மையை என்னுடைய
அணுகுமுறையிலே பார்க்கலாம். அது துறவு நிலை. அதில் பந்தபாசம் கிடையாது.
அதுதான் அந்த வித்தியாசம்.
2. கேள்வி: உங்களது படைப்புகள் மீதான விமர்சனங்களும் பாராட்டுகளும்
இருந்தாலும் அதன் உண்மை நிலை - தனித்துவம் உங்களுக்கேயான பிரத்தி
யேகமான சிறப்பு என்ன என்று சொல்ல முடியுமா?
பதில்: Plot, Theme இரண்டுக்கும் ஏற்றதாக நடையையும் உருவத்தையும்
கொடுக்க வேண்டும் என்று நான் கலைஞனாக முயற்சி செய்தபோதிலும்,
அதற்கு ஒரு முழுமையான இலக்கிய உருவம் கொடுப்பதற்கு இத்தகைய நடை
தான் உதவும் என்று நான் நினைத்த போதிலும் இந்த வேறுபட்ட நடைகளைக்
கூட என்னுடைய கதைகளைச் சுவாசிக்கும் பலரும் இது எஸ்.பொவினுடையது
தான் என்று பெயர் போடாமலே இனங்கண்டு கொள்வார்கள். இந்த நடை
வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எப்படி இனம் காண்கிறார்கள்? சற்றுப்
பெருமையாகச் சொன்னாலும் ஊடுபாவாக உள்ளது இலக்கியச் சத்தியம். நான்
எதைச் சொல்லப் புறப்பட்ட போதிலும் என்னுடைய பக்குவத்திற்கேற்ப நான்
எதைச் சத்தியம் என்று நினைக்கிறேனோ அதன் ஒலி அதில் இருக்கும். இது
சத்தியத்தின் ஒலி, நடைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேர்ந்த வாசகனால்
இனங்காண முடியும். எனவே There was something in common in
the diversityof styles which I employ. அதை மறுக்க இயலாது.
3. கேள்வி: உங்களுக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் என்ன பிரச்சினை?
நற்போக்கு இயக்கம் என்ற ஒன்றை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள்?
பதில்: முற்போக்கு இலக்கியத்துக்கும் எனக்கும் அதிகம் முரண்பாடு
இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்த முற்போக்கு இலக்கிய கோஷத்தை
ஒரு கட்டத்தில் தலைமையேற்று நடத்த வந்தவர்கள் தவறான பாதையில்
இட்டுச் சென்றார்கள்.அது எனக்குத் தெரிந்தது. அதனால் முரண்பட்டேன்.
மார்க்ஸீயம் வளர்க்கப்பட்ட ரஷ்யாவில் உள்ள எழுத்துக்கள்தான் எங்கள்
மாதிரிகள் என்று சொல்லும் பொழுது, எங்களுடைய மண்ணிலிருந்தும்,
எங்களுடைய தேசச் சூழலிலிருந்தும் அந்நியப்படுத்தும் வேலையை அவர்கள்
செய்தார்கள். தமிழ் இலக்கியத்திலிருந்து வந்து விட்டால் தமிழ் மொழியினதும்,
இனத்தினதும் தனித்துவமான சில விழுமியங்களும் சில மரபுகளும் இருக்கின்றன.
தமிழ்ச் சொற்களை நான் உபயோகிக்கும் போது அந்த தமிழ் இனத்தினுடைய
அடையாளத்தைப் பேணும் ஒரு பணியிலும் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் புதுமைகள் தன்மைகள்
செய்ய வேண்டும். அதுதான் நற்போக்கு.
4. கேள்வி: இன்றைய நவீன தமிழ் இலக்கியம் பற்றி?
பதில்: நம் தமிழ் வாழ்கையில் உள்ள அவலங்களை - அவதிகளை -
ஏக்கங்களை - எதிர்பார்ப்புகளை - அவர்களுடைய நம்பிக்கைகளை -
சோகங்களை தமிழ் இலக்கியங்களாகப் படைத்துத் தர முனையும்போது
தமிழ் மண்ணின் உண்மையான உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட எந்த இஸமும்
எனக்கு ஒரு புதிய வலுவைத் தராது என்றே நம்புகிறேன்.இலக்கியவாதிகள்
படைப்புச் சத்தியத்துக்கு முதன்மை கொடுத்துப்படைக்கட்டும். அதன்
உண்மையே அழகு. பொய்க்குத்தான் பூவேலையும்பூச்சுவேலையும் தேவை.
படைப்பிலே சத்தியத்தைக் கோட்டை விட்டுவிட்டு, அதன் வலிமைக்கு
இசம்களின் துணையைத் தேடுவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. 0
Wednesday, April 20, 2011
'இவர்களது எழுத்துமுறை' - 34.வாசவன்
1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள்
என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி
உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்
கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்த நான், இப்போது தீயைக் கண்டு அஞ்சவில்லை.
தீமையைக் கண்டே அஞ்சி அலறுகிறேன். இதனலேயே சிக்கிக்கொண்ட தவிப்பொடு,
மீள வழி இருந்தாலும் கூட மீளப்பிடிக்காமல் அலறுகிறேன்.
2. 'நான் சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட
நினைக்கிறேன் என்று பொருள் அல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ள
வில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில்
கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக்
கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்.
3. எழுத்தையும் என்னையும் நான் எப்போதும் வேறாக்கிக் கொண்டதில்லை. எழுத்து
புல் நுனியில் மின்னும் பனித்துளியே. அதைக் கையில் எடுத்துப் பார்க்க ஆசைப்
பட்டால், அது 'டப்'பென்று உடைந்து போகும். இதைப் புரிந்து வைத்துக் கொண்டி
ருக்கிற பல எழுத்தாளர்கள் பிழைப்புக்கு ஓர் இடத்தில் காலை ஊன்றிக் கொண்டு,
எழுத்தின் முட்கள் வாழ்க்கையில் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பலபேர்
களுக்குப் பிழைப்பைக் கொடுக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்த நான், என்பிழைப்பில்
மண்ணை அடித்துக் கொண்டு வந்த பிறகு, முட்களுக்குப் பயந்தால் முடியுமா? நான் பயப்படாததற்காக முட்கள் குத்தாமல் இருக்குமா? இன்றுவரை குத்திக் கொண்டே இருக்கின்றன.
4. எழுத்து எனக்கும் என் குடும்பத்துக்கும் சோற்றுப்பானை. என்னுடைய
சிருஷ்டிகளில் நான் எதைக் கொண்டு வருகிறேன் என்பதில் அரிசியும் கலந்து
இருந்தது. இதற்காகநான் எத்தனையொ பத்திரிகைகளில் எப்படி எல்லாமோ
ஒத்துப் போனேன் என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன். திருக்குறளுக்கு
உரை எழுதினேன். துப்பறியும் கதை எழுதினேன். விழுந்து விழுந்து ப(பி)டிக்கக்
கூடிய காதல் கதை எழுதினேன். வெங்காய சாம்பார்க்கதை எழுதினேன். கொலு
பொம்மைக்கதை எழுதினேன். இப்படி எல்லாம் 'இன்னார்க்கு இன்னபடி' என்று
எழுதிதான் வளர்ந்தேன். என் வருமானம் மட்டும் வளரவில்லை.
5. எனக்கு ஒரு கொள்கை அல்ல; இரண்டு கொள்கைகள் இருந்தன. ஒன்று: எதை
எழுதினாலும் 'இது வாசவன்' என்று முத்திரை விழ வேண்டும். இரண்டு: எழுத்துதான்
எனக்கு ஜீவன்; ஜீவனம். இத்தனை ஆண்டு காலமாக இந்த இரண்டு கொள்கைகளையும்
நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
6. நான் அந்தக் காலத்தில் செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஒரு வகையில்
தீமையானவை.சமூகத்தின் உண்மைகளை, மறைவிடங்களை ஒரு வேட்டை நாயைப்
போல துரத்தும்போது, அந்த வெறியில் உணமையான மனித உணர்ச்சிகளை, எனக்குத்
தெரியாமல் எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனிதத் தன்மைகளை நான் காட்டத் தவறி
விட்டேன். ஆவேசம் பிடித்த எழுத்தாளனால் நேர்கிற தீமை இது. அவசரத்தில்
கண்ணை மூடிக்கொள்கிற குருட்டுத்தனம் இது. எழுத்தாளன் பொய் சாட்சி சொல்வது
தீமை.
7. பிறகு நான் நான் புரட்சியைச் செய்ததில்லை. என்னை உயரமாகக் காட்டுவதற்கு
நான் கழைக்கூத்து ஆடுவதில்லை. கவடி பாய்வதில்லை. கூச்சல் போடுவதில்லை.
கூட்டம் சேர்ப்பதில்லை. இப்பொழுது கங்கையின் அமைதியைத் தேடுவது என் எழுத்தின்
நோக்கம். ஆயிரம் புயல்கள் அழிந்து போயின. ஆனால் கங்கை இன்னும் இருக்கிறது.
நாளைக்கும் இருக்கும்.
8. ஒரு காலத்தில் நான் நிறைய எழுதினேன். பத்திரிகைகளுக்குத் தீனி கொடுத்துக்
கொடுத்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் குறைவாகவே
எழுதுகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டும் என்ற தவிப்பில் ஒவ்வொரு சொல்லாக
ஊற்றுக் கண்ணைத் திறந்து எடுக்கிறேன். 0
என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி
உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்
கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்த நான், இப்போது தீயைக் கண்டு அஞ்சவில்லை.
தீமையைக் கண்டே அஞ்சி அலறுகிறேன். இதனலேயே சிக்கிக்கொண்ட தவிப்பொடு,
மீள வழி இருந்தாலும் கூட மீளப்பிடிக்காமல் அலறுகிறேன்.
2. 'நான் சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட
நினைக்கிறேன் என்று பொருள் அல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ள
வில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில்
கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக்
கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்.
3. எழுத்தையும் என்னையும் நான் எப்போதும் வேறாக்கிக் கொண்டதில்லை. எழுத்து
புல் நுனியில் மின்னும் பனித்துளியே. அதைக் கையில் எடுத்துப் பார்க்க ஆசைப்
பட்டால், அது 'டப்'பென்று உடைந்து போகும். இதைப் புரிந்து வைத்துக் கொண்டி
ருக்கிற பல எழுத்தாளர்கள் பிழைப்புக்கு ஓர் இடத்தில் காலை ஊன்றிக் கொண்டு,
எழுத்தின் முட்கள் வாழ்க்கையில் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பலபேர்
களுக்குப் பிழைப்பைக் கொடுக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்த நான், என்பிழைப்பில்
மண்ணை அடித்துக் கொண்டு வந்த பிறகு, முட்களுக்குப் பயந்தால் முடியுமா? நான் பயப்படாததற்காக முட்கள் குத்தாமல் இருக்குமா? இன்றுவரை குத்திக் கொண்டே இருக்கின்றன.
4. எழுத்து எனக்கும் என் குடும்பத்துக்கும் சோற்றுப்பானை. என்னுடைய
சிருஷ்டிகளில் நான் எதைக் கொண்டு வருகிறேன் என்பதில் அரிசியும் கலந்து
இருந்தது. இதற்காகநான் எத்தனையொ பத்திரிகைகளில் எப்படி எல்லாமோ
ஒத்துப் போனேன் என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன். திருக்குறளுக்கு
உரை எழுதினேன். துப்பறியும் கதை எழுதினேன். விழுந்து விழுந்து ப(பி)டிக்கக்
கூடிய காதல் கதை எழுதினேன். வெங்காய சாம்பார்க்கதை எழுதினேன். கொலு
பொம்மைக்கதை எழுதினேன். இப்படி எல்லாம் 'இன்னார்க்கு இன்னபடி' என்று
எழுதிதான் வளர்ந்தேன். என் வருமானம் மட்டும் வளரவில்லை.
5. எனக்கு ஒரு கொள்கை அல்ல; இரண்டு கொள்கைகள் இருந்தன. ஒன்று: எதை
எழுதினாலும் 'இது வாசவன்' என்று முத்திரை விழ வேண்டும். இரண்டு: எழுத்துதான்
எனக்கு ஜீவன்; ஜீவனம். இத்தனை ஆண்டு காலமாக இந்த இரண்டு கொள்கைகளையும்
நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
6. நான் அந்தக் காலத்தில் செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஒரு வகையில்
தீமையானவை.சமூகத்தின் உண்மைகளை, மறைவிடங்களை ஒரு வேட்டை நாயைப்
போல துரத்தும்போது, அந்த வெறியில் உணமையான மனித உணர்ச்சிகளை, எனக்குத்
தெரியாமல் எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனிதத் தன்மைகளை நான் காட்டத் தவறி
விட்டேன். ஆவேசம் பிடித்த எழுத்தாளனால் நேர்கிற தீமை இது. அவசரத்தில்
கண்ணை மூடிக்கொள்கிற குருட்டுத்தனம் இது. எழுத்தாளன் பொய் சாட்சி சொல்வது
தீமை.
7. பிறகு நான் நான் புரட்சியைச் செய்ததில்லை. என்னை உயரமாகக் காட்டுவதற்கு
நான் கழைக்கூத்து ஆடுவதில்லை. கவடி பாய்வதில்லை. கூச்சல் போடுவதில்லை.
கூட்டம் சேர்ப்பதில்லை. இப்பொழுது கங்கையின் அமைதியைத் தேடுவது என் எழுத்தின்
நோக்கம். ஆயிரம் புயல்கள் அழிந்து போயின. ஆனால் கங்கை இன்னும் இருக்கிறது.
நாளைக்கும் இருக்கும்.
8. ஒரு காலத்தில் நான் நிறைய எழுதினேன். பத்திரிகைகளுக்குத் தீனி கொடுத்துக்
கொடுத்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் குறைவாகவே
எழுதுகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டும் என்ற தவிப்பில் ஒவ்வொரு சொல்லாக
ஊற்றுக் கண்ணைத் திறந்து எடுக்கிறேன். 0
Monday, April 11, 2011
'இவர்களது எழுத்துமுறை' - 33.எம்.வி.வெங்கட்ராம்
1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும்,
பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும்,
சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன்.
2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார்
முதலியவர்கள் தழுவலாகவோ, சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும்,
கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன்
படித்ததால் நானும் ஏன் எழுதக்கூடாது என்ற அடங்காத ஆசை என்னுள்
மூண்டது. இந்த ஆசை தவிர்க்கமுடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில்
ஈடுபட்டேன்.
3. எனக்கு பத்திரிகையில் பெயரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை
இருந்தது. அப்போது எனக்கு பதினைந்து பதினாறு வயசுதான் இருக்கும்.
எஸ்எஸ்.எல்.சி முடிப்பதற்குள்ளேயே ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி
விட்டேன். எழுதிய கதைகளை கலைமகள், ஆனந்தவிகடன், பிரசண்டவிகடன்
போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். சில கதைகள் திரும்பி வரும்.
சில அங்கேயே தங்கிவிடும். ஆனால் யாருமே வெளியிடவில்லை. ஆயிரக்
கணக்கான பக்கங்கள் எழுதியதன் பயனாக எனக்கு மொழியின்மேல் ஒரு
ஆளுமை, கட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன்.
4. பண்டிதர்களுடனோ, எழுத்தாளர்களுடனோ அப்போது எனக்குப் பழக்க
மில்லை. எனக்கு சங்கோஜம் அதிகம். அதனால் நான் எழுதிய கதையை
யாரிடமும் காண்பிப்பது கிடையாது. நான் பாட்டுக்கு எழுதி அனுப்பிக்
கொண்டே இருப்பேன்.
5. சென்னையில தங்கியிருந்தபோது என் செலவுகளையும் பார்த்துக் கொண்டு,
என்னுடைய பெரிய குடும்பத்தின் தேவைக்களுக்கும் பணம் அனுப்ப வேண்டிய
சூழ்நிலை. அதனால் ஒவ்வொரு நாளும் பத்திரிகை அலுவலகங்களுக்கும்,
புத்தக வெளியீட்டு நிறுவனங்களுக்கும் அலைந்தேன். அவர்கள் எது
கேட்டாலும் எழுதித் தர நான் தயாராய் இருந்தேன். ஆனால், என் தேவை
களுக்காக என் எழுத்தின் தரத்தைக் குறைத்து எப்போதுமே நான் காம்ப்ரமைஸ்
செய்து கொண்டதில்லை.
6. என்னுடைய குடும்பச் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இல்லாதிருந்தும் கூட
நானே விரும்பி எழுத்துப் பணியை மேற்கொண்டேன். என்னுடைய ஆன்மீகத்
தேட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இலக்கியத் தேட்டத்தையும் நான் கருதுகிறேன்.
ஆனால் இதன் எல்லையை நான் இன்னும்தொடவில்லை. சாதிக்க வேண்டியது
இன்னும் ஏராளம் உண்டு. 0
பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும்,
சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன்.
2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார்
முதலியவர்கள் தழுவலாகவோ, சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும்,
கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன்
படித்ததால் நானும் ஏன் எழுதக்கூடாது என்ற அடங்காத ஆசை என்னுள்
மூண்டது. இந்த ஆசை தவிர்க்கமுடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில்
ஈடுபட்டேன்.
3. எனக்கு பத்திரிகையில் பெயரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை
இருந்தது. அப்போது எனக்கு பதினைந்து பதினாறு வயசுதான் இருக்கும்.
எஸ்எஸ்.எல்.சி முடிப்பதற்குள்ளேயே ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி
விட்டேன். எழுதிய கதைகளை கலைமகள், ஆனந்தவிகடன், பிரசண்டவிகடன்
போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். சில கதைகள் திரும்பி வரும்.
சில அங்கேயே தங்கிவிடும். ஆனால் யாருமே வெளியிடவில்லை. ஆயிரக்
கணக்கான பக்கங்கள் எழுதியதன் பயனாக எனக்கு மொழியின்மேல் ஒரு
ஆளுமை, கட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன்.
4. பண்டிதர்களுடனோ, எழுத்தாளர்களுடனோ அப்போது எனக்குப் பழக்க
மில்லை. எனக்கு சங்கோஜம் அதிகம். அதனால் நான் எழுதிய கதையை
யாரிடமும் காண்பிப்பது கிடையாது. நான் பாட்டுக்கு எழுதி அனுப்பிக்
கொண்டே இருப்பேன்.
5. சென்னையில தங்கியிருந்தபோது என் செலவுகளையும் பார்த்துக் கொண்டு,
என்னுடைய பெரிய குடும்பத்தின் தேவைக்களுக்கும் பணம் அனுப்ப வேண்டிய
சூழ்நிலை. அதனால் ஒவ்வொரு நாளும் பத்திரிகை அலுவலகங்களுக்கும்,
புத்தக வெளியீட்டு நிறுவனங்களுக்கும் அலைந்தேன். அவர்கள் எது
கேட்டாலும் எழுதித் தர நான் தயாராய் இருந்தேன். ஆனால், என் தேவை
களுக்காக என் எழுத்தின் தரத்தைக் குறைத்து எப்போதுமே நான் காம்ப்ரமைஸ்
செய்து கொண்டதில்லை.
6. என்னுடைய குடும்பச் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இல்லாதிருந்தும் கூட
நானே விரும்பி எழுத்துப் பணியை மேற்கொண்டேன். என்னுடைய ஆன்மீகத்
தேட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இலக்கியத் தேட்டத்தையும் நான் கருதுகிறேன்.
ஆனால் இதன் எல்லையை நான் இன்னும்தொடவில்லை. சாதிக்க வேண்டியது
இன்னும் ஏராளம் உண்டு. 0
Tuesday, March 29, 2011
இவர்களது எழுத்துமுறை - 32.அ.முத்துலிங்கம்
1. ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு வருகிறேன்.
2. ஒரு சொற்தொடரை, வசனத்தை, வார்த்தையை வாசகர் ரசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவர் எழுப்பும் 'ஆ, ஓ' சத்தம்தான் ஆகக் கிடைக்காத பரிசு என்று நினைக்கிறேன்.
3.முதல் எழுத்தில் நாம் விரும்பிய உருவம் கிடைப்பதில்லை. அந்த உருவம் கிடைக்க கொஞ்சம் பாடுபடவேண்டும். பல தடவைகள் திருத்திய பிறகும் மனதிலே தோன்றியது பேப்பரில் வராமல் போவதும் உண்டு.
4.நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.
5.அந்தக் காலத்தில் இருந்து என் கதைகளில் யாழ்ப்பாண வழக்கு இருக்கும். சம்பாஷணைகளில் அது ஒரு நிஜத்தன்மையை கொடுக்கும். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று முழு வட்டார வழக்கில் நான் கதை சொன்னதில்லை.
6.ஒரே கூறு முறையை நான் பின்பற்றவில்லை. மாறுபட்ட முறைகளை பல கதைகளில் பரீட்சித்துப் பார்த்தபடியேஇருக்கிறேன்.'செங்கல்','நாளை', 'ஏவாள்', 'ஆயுள்', 'கொழுத்தாடு பிடிப்பேன்' என்று பலவிதமான உத்திகளையும், கூறு முறைகளையும் என் கதைகளில் காணலாம். இன்னும் பல முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆசையிருக்கிறது. அதற்காக முதலிலேயே உத்தியை தீர்மானித்துவிட்டு பிறகு நான் கதையை தேடுவதில்லை. சொல்லப்போகும் பொருள்தான் வடிவத்தையும் உத்தியையும் தீர்மானிக்கிறது. புதுமையை தேடுவதே இலக்கியம்.
7.என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் சில அங்கதச் சுவை கொண்டு இருக்கின்றன. அது கதைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும், அவசியமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் கால, நேரம், இடம் தெரியாமல் எல்லா கதைகளிலும் புகுந்து விட்டால் அது சரியென்று எனக்கு படவில்லை. கதையை ஒட்டி இயல்பாக அமைவதுதான் நல்லாக இருக்கும். என்னுடைய கதைகள் பலவற்றில் கிண்டல் என்பது கிட்டவும் வரவில்லை. கதையின் திசையை அவை மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்
8.உத்தி சோதனைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொருள்தான் உத்தியையும் தீர்மானித்து விடுகிறது. சமீப காலங்களில் எனக்கு anti-hero வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் சாத்தியப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கதையை நகர்த்திக்கொண்டு போகும்போது வாசகர் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது நான் மெள்ள நழுவிவிடுவேன். வாசகர் எப்படியான முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அவருடைய திண்டாட்டமே என் திருப்தி. 0
2. ஒரு சொற்தொடரை, வசனத்தை, வார்த்தையை வாசகர் ரசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவர் எழுப்பும் 'ஆ, ஓ' சத்தம்தான் ஆகக் கிடைக்காத பரிசு என்று நினைக்கிறேன்.
3.முதல் எழுத்தில் நாம் விரும்பிய உருவம் கிடைப்பதில்லை. அந்த உருவம் கிடைக்க கொஞ்சம் பாடுபடவேண்டும். பல தடவைகள் திருத்திய பிறகும் மனதிலே தோன்றியது பேப்பரில் வராமல் போவதும் உண்டு.
4.நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.
5.அந்தக் காலத்தில் இருந்து என் கதைகளில் யாழ்ப்பாண வழக்கு இருக்கும். சம்பாஷணைகளில் அது ஒரு நிஜத்தன்மையை கொடுக்கும். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று முழு வட்டார வழக்கில் நான் கதை சொன்னதில்லை.
6.ஒரே கூறு முறையை நான் பின்பற்றவில்லை. மாறுபட்ட முறைகளை பல கதைகளில் பரீட்சித்துப் பார்த்தபடியேஇருக்கிறேன்.'செங்கல்','நாளை', 'ஏவாள்', 'ஆயுள்', 'கொழுத்தாடு பிடிப்பேன்' என்று பலவிதமான உத்திகளையும், கூறு முறைகளையும் என் கதைகளில் காணலாம். இன்னும் பல முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆசையிருக்கிறது. அதற்காக முதலிலேயே உத்தியை தீர்மானித்துவிட்டு பிறகு நான் கதையை தேடுவதில்லை. சொல்லப்போகும் பொருள்தான் வடிவத்தையும் உத்தியையும் தீர்மானிக்கிறது. புதுமையை தேடுவதே இலக்கியம்.
7.என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் சில அங்கதச் சுவை கொண்டு இருக்கின்றன. அது கதைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும், அவசியமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் கால, நேரம், இடம் தெரியாமல் எல்லா கதைகளிலும் புகுந்து விட்டால் அது சரியென்று எனக்கு படவில்லை. கதையை ஒட்டி இயல்பாக அமைவதுதான் நல்லாக இருக்கும். என்னுடைய கதைகள் பலவற்றில் கிண்டல் என்பது கிட்டவும் வரவில்லை. கதையின் திசையை அவை மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்
8.உத்தி சோதனைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொருள்தான் உத்தியையும் தீர்மானித்து விடுகிறது. சமீப காலங்களில் எனக்கு anti-hero வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் சாத்தியப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கதையை நகர்த்திக்கொண்டு போகும்போது வாசகர் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது நான் மெள்ள நழுவிவிடுவேன். வாசகர் எப்படியான முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அவருடைய திண்டாட்டமே என் திருப்தி. 0
Tuesday, March 22, 2011
இவர்களது எழுத்துமுறை - 31.ஜெயமோகன்
1. கேள்வி: (அ.முத்துலிங்கம்) நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு
என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்?
ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு படிமம் இருக்கும் அல்லது ஒரு
கவிதை போன்ற வசனம். அதிலிருந்து ஆரம்பித்துத்தான் எழுதிக்கொண்டு போவேன்.
ஏற்கனவே கதையை திட்டமிட்டு அது எனக்கு தெரிந்துபோனால் எழுதும் ஆர்வம் எனக்கு
வடிந்துபோகும். அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. மெசின்போல எழுதவேண்டும்,
உற்சாகமே இல்லாமல். என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருந்தால்தான் சஸ்பென்ஸ்
போல எனக்கே எழுதி அதன் முடிவை அறியும் ஆர்வம் உண்டாகும். வாசகரைப்போல அந்த
முடிவை தெரிந்து கொள்ளும் ஆசை எனக்குள்ளும் இருக்கும்.
2. கேள்வி: குறைந்தது இருபது வெளிநாட்டு எழுத்தாளர்களிடம் நான் இதே கேள்வியைக்
கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.
ஜெ: இருக்கலாம். நான் கம்புயூட்டரின் முன்னால் உட்கார்ந்து \'ஜெயமோகன்
ஜெயமோகன்\' என்று திருப்பி திருப்பி அடித்தே என்னால் ஒரு கதையை உருவாக்க
முடியும். தமிழில் புதுமைப்பித்தன், மௌனி போன்றோர் அப்படித்தான் திட்டமிடாமல்
எழுதினார்கள் என்று நான் நினைக்கிறேன்.
3. கேள்வி: சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற அரவிந் அடிகா பற்றி ஒரு விசயம்
படித்தேன். அவர் தன்னுடைய நாவலை முதலில் படர்க்கையில் எழுதினார். ஆனால் எழுதி
முடித்தபின் அவருக்கே அது பிடிக்கவில்லை. ஆகவே முழு நாவலையும் திரும்பவும்
வேலைக்காரன் கோணத்தில் அவன் பேசுவதுபோல தன்மையில் எழுதினாராம். உங்களுக்கும்
எப்போதாவது எந்தக் கோணத்தில் எழுதுவது என்ற குழப்பம் உண்டாகியிருக்கிறதா?
ஜெ: எந்தக்கோணத்தில் எழுதுவது என்பது முற்றிலும் தற்செயலாகத்தான் தீர்மானமாக
வேண்டுமென நான் நினைக்கிறேன். தற்செயல் என்ற சொல்லை மிக கவனமாக
பயன்படுத்துகிறேன். தற்செயல் என்பது முழுக்க முழுக்க ஆழ்மனத்தை
சார்ந்திருப்பதன் விளைவு. என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஆழ்மனதை
மொழியில் வெளிப்படுத்த வேண்டிய ஒரு செயல்பாடுதான். ஆழ்மனம் மிக அருவமானது.
ஆகவேதான் கதை, கதைச்சூழல், படிமங்கள் போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகின்றன.
அதாவது என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஒருவகை கனவு காண்பதுதான். சில
பயிற்சிகள் மூலம் நாம் தானாகவே கனவுகளை உருவாக்கிக் கொள்வது. கனவுகளில்
நம்முடைய கட்டுப்பாடு ஏதுமில்லை. அவை முற்றிலும் தன்னிச்சையானவை.
4. கேள்வி: மறுபடியும் திட்டமிடுவது பற்றிய சந்தேகத்தை தீர்க்கவேண்டும் என்று
நினைக்கிறேன். Gone with the Wind நாவலை எழுதிய மார்கிரெட் மிச்செல் அதை
எழுதுவதற்காக ஒருவித திட்டமும் போடவில்லை. அவர் முதலில் எழுதியது நாவலின் கடைசி
அத்தியாயம். கடைசியில் எழுதியது நாவலின் முதல் அத்தியாயம். நேரம்
கிடைக்கும்போது அங்கும் இங்குமாக எழுதி நாவலை முடித்தாராம். அதற்கு புலிட்சர்
பரிசு கிடைத்தது. உங்கள் எழுத்துமுறையும் அப்படியானதா? அவுட்லைன் திட்டம்கூடக்
கிடையாதா?
ஜெ: நான் எப்போதுமே எந்தக் கதைக்கும், நாவலுக்கும் விரிவான திட்டங்களை முன்னரே
போட்டுக் கொண்டதில்லை. சில சமயம் ஓர் உணர்ச்சித் தூண்டலில் உடனடியாக எழுத
ஆரம்பித்துவிடுவேன். சிலசமயம் அப்படிப்பட்ட தொடக்கம் வராது. ஏழெட்டுதடவை கூட
எழுதிப் பார்ப்பேன். எழுத எழுத அந்தக் கனவு வளர்ந்தபடியே செல்ல வேண்டும். அப்படி
நிகழாதபோது அதை அப்படியே விட்டுவிட்டு வேறு வகையில் எழுத ஆரம்பித்துவிடுவேன்.
\'கொற்றவை\' நாவல் என் மனதில் ஒரே பிம்பமாகத்தான் இருந்தது. பாலைவனத்தில்
கைவிடப்பட்ட கோயில் ஒன்றின் கருவறைக்குள் கண்ணகி காளிசிலையாக நிற்கிறாள். அவள்
கண்கள் உயிருள்ள கண்கள். அதை பலவகையில் எழுதிப்பார்த்தேன். எதுவுமே
சரிவரவில்லை. பல இடங்களில் தொடங்கிப் பார்த்தேன். திருப்தியில்லை. அப்படி
நான்கு வருடங்கள் சென்றன பின்னர் ஒரு வரி மனதில் வந்தது. \'அறியமுடியாமையின்
நிறம் நீலம்.\' அந்த வரி ஒரு பெரிய எழுச்சியைக் கொடுத்தது. அந்த வரியிலேயே
நாவலின் மொழிநடையின் அமைப்பு உள்ளது. படிமங்கள் கொண்ட மொழி. உணர்ச்சிகரமானது.
செந்தமிழ். அப்படியே தொடங்கி அந்நாவலை எழுதி முடித்தேன்.
5. கேள்வி: சில நாவல்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுமே?
ஜெ: திட்டமிடுவது ஓரளவுக்கு தேவையாக இருப்பது வரலாற்றுப் பின்னணி கொண்ட
நாவல்களுக்குத்தான். தகவல்களைச் சேர்ப்பது ஒருங்கிணைப்பது போன்றவற்றுக்கு.
மற்றப்படி திட்டமிடல் என்பது பிரக்ஞை சார்ந்தது. அது இலக்கியத்தின் அக
இயக்கத்துடன் சம்பந்தமற்றது. நன்றாக திட்டமிடப்பட்ட ஒரு படைப்புக்கு
இலக்கியத்தன்மையே இருக்காது. என் பல நாவல்கள் மிகச் சிக்கலான \'பொறியியல்
அமைப்பு\' கொண்டவை என்று சொல்லப் படுகின்றன. தேர்ச்சியும் திட்டமிடலும் கொண்ட
எழுத்து என்று அவற்றைச் சொல்லி யிருக்கிறார்கள். ஆனால் அவற்றை வெளியிட்ட
வசந்தகுமார் போன்றவர்களுக்கு தெரியும் அவை தன் போக்கில் எழுதப்பட்டு அவ்வப்போது
அனுப்பப்பட்டு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே நூலாக வெளிவந்தவை. நான் என்
நூல்களை திரும்பப் படிப்பதுகூட இல்லை. வசந்தகுமார்தான் பிழைகளைக்கூட
திருத்துவார்.
6. கேள்வி: உலகப்பிரபல ரஸ்ய எழுத்தாளர் கோகொல் அவர் எழுதி வெளியிட்ட முதல்
புத்தகத்தை திரும்பவும் அவரே வாங்கி எரித்தார். அதே போல இறுதிக் காலத்தில்
இறப்பதற்கு முன்னர் அவருடைய Dead Souls இரண்டாம் பகுதியையும் எரித்தார்.
கோகொலுக்கு இறுதிவரை தன் எழுத்தில் மதிப்பு கிடையாது. பல எழுத்தாளர்களுக்கு
தாங்கள் எழுதுவது திருப்தியை கொடுப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எழுதி
முடித்ததை திருப்தியில்லாமல் தூக்கிப்போட்டதுண்டா?
ஜெ: என்னைப் பொறுத்தவரை எழுத ஆரம்பித்ததும் எழுத்து வந்துகொண்டே இருக்க
வேண்டும். வயலில் மடையை திறந்து விட்டதும் நீர் வந்து நிறைவதுபோல அந்த வடிவத்தை
என் மனதில் உள்ள மொழி வந்து நிறைக்க வேண்டும். அது நிகழாவிட்டால் தூக்கி
போட்டுவிடுவேன். அப்படி பல நாவல்களை தூக்கிப் போட்டிருக்கிறேன். கைவசம் பல
சிறுகதைகள் முடிவடையாமல் இருக்கின்றன. சில சமயம் அவை மீண்டும் தொடங்கப்படலாம்.
சிலசமயம் அப்படியே அழிந்தும் போகலாம்.
7. கேள்வி: திருத்துவதும் உங்களுக்கு பிடிக்காத ஒன்று. சு.ரா தன் எழுத்தை பல
தடவைகள் திருத்துவார். ஒரு 300 பக்க நாவலை எழுதுவதென்றால் 1500 பக்கங்கள்
எழுதவேண்டியிருக்கும் என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அசோகமித்திரன்
திருத்துவது மிகவும் கடினமான வேலை அது தனக்கு அலுப்பை தருவது என்று கூறுகிறார்.
ஒஸ்கார் வைல்டு ஓர் அரைப்புள்ளி இடுவதற்கு அரை நாள் எடுத்தது எல்லோருக்கும்
தெரியும். மார்க் ட்வெய்ன் தன்னுடைய புகழ்பெற்ற Huckleberry Finn நாவலை பல தடவை
திருத்தி எழுதுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டார். நீங்கள் திருத்தங்கள்
செய்வதே இல்லையா?
ஜெ: இல்லை. திருத்துவதென்பது எனக்கு மிக எந்திரத்தனமான வேலை. எழுதியபின்
மீண்டும் படிப்பதைக்கூட நான் விரும்புவதில்லை. திருப்பித்திருப்பி எழுதும்
எழுத்தாளர்கள் உண்டு. திருப்பி எழுதவே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு. முன்னது
என்பது ஒரு மனச்சிக்கல் தான். ஒரு சொல்லை திருப்பி எழுதுவதனால் ஒன்றும் பிரதி
மேம்பட்டுவிடப் போவதில்லை. சிலருக்கு வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது ஒரு
வகையான \'அப்ஸெஷன்\' அதுபோலத்தான் இதுவும். அத்துடன் திருத்துவது மிகவும்
பிரக்ஞைபூர்வமானது. தர்க்க பூர்வமானது. ஒரு படைப்பை உருவாக்கிய
படைப்பூக்கத்துக்கு நேர் எதிரானது. அறியமுடியாமையின் நிறம் நீலம். அதை தெரிய
முடியாமை என்று மாற்றலாம். அறியாமை என்று மாற்றலாம். அறிவின்மை என்று
மாற்றலாம். அறியப்படாமை என்று போடலாம். இந்த சாத்தியங்களை உட்கார்ந்து
சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதில்
எனக்கு படைப்பு இன்பம் இல்லை. ஆகவே அதை நான் ஈடுபட்டு செய்யமுடியாது. அந்த
நேரத்தில் நான் அடுத்த படைப்பைப் பற்றிக் கனவு காண்பேன். கடிதங்களைக்கூட நான்
முதலில் வரும் கைப்பிழைகளுடன் தான் அனுப்புவேன். திருத்தும் நேரத்தில்
இன்னொன்று எழுதலாமே.
8. கேள்வி: எழுத்து துறையைப் பற்றி சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு
முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள்,
கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச் சொல்லி வேண்டினார்.
ஆனால் நண்பர் அந்த வேண்டுகோளை நிறைவேற்றாததால் இலக்கியம் தப்பியது.
உலகம் எவ்வளவுதான் மதித்தாலும் காஃப்கா தன் எழுத்தை மதிக்கவில்லை. தான் இந்த
துறைக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவே இறுதிவரை நினைத்தார். நீங்கள் எழுத்து
துறைக்கு எப்படி வந்தீர்கள்? திட்டமிட்டு எழுத வந்தீர்களா அல்லது தற்செயலானதா?
ஜெ: நான் என் உளச்சிக்கல்களை எழுத்துமூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான்
எழுத வந்தேன். வெறிபிடித்தது போல எழுதி என் மொழி வடிவத்தைக் கண்டுகொண்டேன்.
எழுதுவது எனக்கு ஒரு சுய கண்டடைதல். தியானம். என் யோகசாதகம் அதுவே. என்
வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கும் வழியும்கூட. ஆகவே நான் எழுதுகிறேன். ஒரு
ஓட்டப்பந்தயவீரன் அவனால் முடிந்தவரை வேகமாக ஓட முயல்வதுபோல முடிந்தவரை
உச்சத்தை அடைய முயல்கிறேன். அளவிலும் தரத்திலும்.
9. கேள்வி: அசிமோவ் தன்னுடைய 21வது வயதில் Nightfall என்னும் சிறுகதையை
எழுதினார். அதற்கு பின்னர் 51 வருடங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள்
எழுதினார். ஆனால் அவரால் Nightfall சிறுகதையின் உச்சத்தை தாண்டமுடியவில்லை.
அறிவியல் சிறுகதைகளில் அது இன்றைக்கும் ஒரு மைல்கல். ஆனால் கோகொலின் எழுத்து
தரம் வரவர அதிகமாகிக்கொண்டே வந்திருக்கிறது. அவர் கடைசியாக எழுதிய The Overcoat
சிறுகதை மூலமே அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். உங்கள் விசயத்தில் வயது ஏற
ஏற படைப்பூக்கம் குறையுமா அல்லது கூடுமா? முந்திய படைப்புகளை தாண்டி உங்கள்
படைப்புகள் மேலும் உயர்ந்த தரத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?
ஜெ: முதுமையில் இப்படி எழுதுவேனா என்று கேட்டால் எழுதலாம். எழுதாமலும் போகலாம்.
என்னைப் பொறுத்தவரை எழுத்து என் கடைசி இலக்கு அல்ல. எழுத்தாளனாக இருப்பது என்
திட்டமும் அல்ல. எழுத்து ஏணி மாதிரி. ஏணியிலேயே நின்றுகொண்டிருப்பதைவிட மேலே
ஏறிவிட்டால் நல்லதுதானே?
10. கேள்வி: எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர் அப்பொழுது யூலிசிஸ் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுதுவதற்கு
அவர் பொறாமை உணர்வை முழுமையாக அனுபவிக்கவேண்டும். தன் மனைவியை
யாருடனாவது தொடர்பு வைக்கச்சொல்லி வற்புறுத்தினார். மனைவி மறுத்துவிட்டார்.
தன்னால் உச்சமான பொறாமை உணர்ச்சியை நேரடியாக அனுபவிக்காமல் அதை நாவலில்
சித்தரிக்கமுடியாது என்பது அவர் வாதம். ஆனால் உங்கள் கதைகளில் எல்லாவிதமான
உணர்ச்சிகளும் தத்ரூபமாக பதிவாகின்றன. ஏராளமான அக அனுபவங்களும் புற
அனுபவங்களும் கட்டுரை, நாவல், சிறுகதைகள் வழியாக வெளிப்பட்டவண்ணமே இருக்கின்றன.
இந்த வேகத்தில் நீங்கள் படைத்தால் விரைவில் எல்லாமே முடிந்து எழுத ஒன்றுமே
இல்லாமல் போய்விடும் என்று பயம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?
ஜெ: இல்லை. என் அக அனுபவங்களில் சிறு பகுதியை மட்டுமே எழுதியிருக்கிறேன். புற
அனுபவங்களிலும் பெரும்பகுதியை எழுதியதில்லை என்பதே உண்மை. உதாரணமாக என்
பெற்றோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எவ்வளவு பெரிய நிகழ்ச்சி அது? இன்றுவரை
அது என் படைப்புகளில் வந்ததில்லை. இனிமேல்தான் அதை நான் எழுதவேண்டும். எந்த
மனிதனுக்கும் வாழ்க்கையனுபவங்கள் எழுதித்தீராது. நான் ஓயாது பயணம் செய்பவன்.
ஓயாது வாழ்க்கையை எதிர்கொள்பவன். எழுதும் ஆற்றல் தீர்ந்து போகலாம்.
எழுதுவதற்கான தேடல் முற்றுபெறலாம். அனுபவம் தீர்ந்துபோய் யாருமே எழுதாமல்
ஆவதில்லை.
11. கேள்வி: சரி, சந்தைப்படுத்துதலுக்கு வருவோம். சி.சு.செல்லப்பா தன் நூல்களை
ஊர் ஊராக எடுத்துச் சென்று தானே விற்று வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவருக்கு பணம் தேவைப்பட்டது மட்டுமல்ல காரணம். நூல்களைப் பதிப்பித்தால் போதாது
அவை வாசகருக்கும் போய்ச்சேரவேண்டும் என்ற நல்லெண்ணமும்தான். சார்ல்ஸ் டிக்கன்ஸ்
எழுத்தில் மட்டும் திறமை காட்டவில்லை. சந்தைப்படுத்துவதிலும் வல்லவராய் இருந்தார்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் அவர் காலத்திலேயே அமோகமாக விற்றன.
அவருடைய தொடர்நாவல் பத்திரிகைகளில் வெளியானபோது அந்தப் பத்திரிகையை
காவிய கப்பல்கள் நியூயோர்க் துறைமுகத்தை அடையும்போது 6000 வாசகர்கள் அந்தக்
காலத்திலேயே காத்துக் கொண்டிருப்பார்களாம். சார்ல்ஸ் டிக்கன்ஸ் இறந்தபோது
அவருடைய புத்தக வருமானச் சேமிப்பு 93000 பவுண்டுகளாக ( இன்றைய மதிப்பில் ஒரு
கோடி டொலர்கள்) இருந்தது. எழுத்தாளருக்கு பணம் தேவை, அத்துடன் அவருடைய
நூல்கள் வாசகரையும் சென்று அடையவேண்டும். நீங்கள் ஏன் உங்கள் நூல்களை
சந்தைப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதில்லை?
ஜெ: சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டால் படைப்பூக்கத்தை இழந்துவிடவேண்டியதுதான்.
நான் அன்றாட வாழ்க்கையின் சாதாரண செயல்களைக் கூட செய்வதை தவிர்க்கிறேன்.
எழுத்து, பயணம் இவ்விரண்டுமே என் வாழ்க்கை. வேறு எதைச் செய்தாலும் என்னுடைய
எழுத்து ஆற்றலின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கிறேன். இந்நிலையில் என் எழுத்தை
\'புரமோட்\' செய்ய நான் முயல்வெதென்பது என்னை நானே அழிப்பதற்குச் சமம். அதுவும்
படைப்பூக்கம் வேகமாக இருந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதையெல்லாம்
செய்வதென்பது மிக மிக தவறான செயல். இப்போது என் நேரத்தின் கவனத்தின் ஒவ்வொரு
துளியும் இலக்கியத்துக்கு மட்டுமே உரியது.
12. கேள்வி: ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் சந்தைப்படுத்துவதால் பெரும்
பிரபலமடைந்துவிடுகிறார்களே?
ஜெ: மேலைநாடுகளில் புகழ்பெறும் இந்திய இலக்கியம் ஒரு குறிப்பிட்ட வகையானது.
அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி இரு மனப்பிம்பங்கள் உள்ளன. (ஒன்று) இந்தியா
\'பாக\' மத நம்பிக்கையால் கண்மூடிப்பழக்கங்கள் கொண்டு சீரழிந்த நிலையில்
இருக்கும் ஒரு தேசம். இது அங்கே செல்லும் இந்திய பாதிரிகள் உண்டாக்குவது.
(இரண்டு) இந்தியா ஐரோப்பியர் விட்டுச் சென்றபின் அழிந்துகொன்டிருக்கிறது.
சல்மான் ருஷ்டி முதல் இப்போது அரவிந் அடிகா வரை எல்லா எழுத்துகளிலும் உள்ள
பொது அம்சம் என்பது \'இந்தியாவைப் பழித்தல்\' தான். இந்தக் காரணத்தால்தான் நமது
ஆங்கில இந்திய எழுத்தாளர்கள் பெரும் புகழ் பெறுகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி
போன்ற மேதைகள் கூட அங்கீகாரம் பெறுவதில்லை. மேலைநாட்டு இலக்கிய வாசகர்கள்
இந்திய இலக்கியம் என்பது ஆங்கில இந்திய எழுத்து மட்டுமே என நம்ப
விரும்புகிறார்கள். மேலைநாட்டில் புகழ்பெற்ற இந்திய இலக்கியங்கள் கூட இந்த
எதிர் மறைப் பண்பு கொண்டவை. இந்தியாவை இருட்டாகக் காட்டக்கூடியவை.
உதாரணமாக வெங்கடேஷ் மாட்கூல்கரின் பன்கர் வாடி, யூ. ஆர். ஆனந்தமூர்த்தியின்
சம்ஸ்காரா போன்றவை. இந்தியாவை இகழ்ந்து வெறுத்து எழுதும் காஞ்சா ஐலயா போன்ற
விமரிசகர்களுக்கும் இதேபோல மேலைநாடுகளில் பாராட்டுகளும் பரிசுகளும்
கிடைக்கின்றன. இன்னொரு மனநிலையும் உண்டு. ஐரோப்பிய மேட்டிமைத்தனம்தான்
அதுவும். அதாவது தத்துவப்பிரச்சினைகள், ஆன்மீகப்பிரச்சினைகள் அழகியல்கூறுகள்
நம்மால் எழுதப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதை தாங்களே எழுத முடியும்
என அவர்கள் எண்ணுகிறார்கள். நமது வாழ்க்கையை \'தெரிந்துகொள்ள\' மட்டுமே
விரும்புகிறார்கள். அதாவது அவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பதை ஒட்டி தெரிந்து
கொள்ள. அதை மட்டும் நாம் எழுதினால் போதும் என்பது அவர்களின் எண்ணம்.
ஆகவே நம்முடைய \'ரிப்போர்ட்டிங்\' வகையான தட்டையான சமூக ஆவணங்களை
மட்டுமே அவர்கள் ரசிப்பார்கள். இதையெல்லாம் செய்து நான் அங்கே வெளியாக
வேண்டுமா என்ன? நம் எழுத்தை நாம் முதலில் ரசிப்போம். பிறகல்லவா அவர்கள்.
இங்கே ஒரு நாவல் வந்தால் 100 பிரதிகள் விற்க ஒருவருடம் ஆகிறது. ஒரு தமிழ்
நாவலை படித்தேன் என்று சொல்ல தமிழனுக்கு மனம் கூசுகிறது. நம் இலக்கியம்
நமக்காக எழுதப்படுவது. நாம் அதை மதித்தால் பிறரும் மதிப்பார்கள். 0
என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்?
ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு படிமம் இருக்கும் அல்லது ஒரு
கவிதை போன்ற வசனம். அதிலிருந்து ஆரம்பித்துத்தான் எழுதிக்கொண்டு போவேன்.
ஏற்கனவே கதையை திட்டமிட்டு அது எனக்கு தெரிந்துபோனால் எழுதும் ஆர்வம் எனக்கு
வடிந்துபோகும். அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. மெசின்போல எழுதவேண்டும்,
உற்சாகமே இல்லாமல். என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருந்தால்தான் சஸ்பென்ஸ்
போல எனக்கே எழுதி அதன் முடிவை அறியும் ஆர்வம் உண்டாகும். வாசகரைப்போல அந்த
முடிவை தெரிந்து கொள்ளும் ஆசை எனக்குள்ளும் இருக்கும்.
2. கேள்வி: குறைந்தது இருபது வெளிநாட்டு எழுத்தாளர்களிடம் நான் இதே கேள்வியைக்
கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.
ஜெ: இருக்கலாம். நான் கம்புயூட்டரின் முன்னால் உட்கார்ந்து \'ஜெயமோகன்
ஜெயமோகன்\' என்று திருப்பி திருப்பி அடித்தே என்னால் ஒரு கதையை உருவாக்க
முடியும். தமிழில் புதுமைப்பித்தன், மௌனி போன்றோர் அப்படித்தான் திட்டமிடாமல்
எழுதினார்கள் என்று நான் நினைக்கிறேன்.
3. கேள்வி: சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற அரவிந் அடிகா பற்றி ஒரு விசயம்
படித்தேன். அவர் தன்னுடைய நாவலை முதலில் படர்க்கையில் எழுதினார். ஆனால் எழுதி
முடித்தபின் அவருக்கே அது பிடிக்கவில்லை. ஆகவே முழு நாவலையும் திரும்பவும்
வேலைக்காரன் கோணத்தில் அவன் பேசுவதுபோல தன்மையில் எழுதினாராம். உங்களுக்கும்
எப்போதாவது எந்தக் கோணத்தில் எழுதுவது என்ற குழப்பம் உண்டாகியிருக்கிறதா?
ஜெ: எந்தக்கோணத்தில் எழுதுவது என்பது முற்றிலும் தற்செயலாகத்தான் தீர்மானமாக
வேண்டுமென நான் நினைக்கிறேன். தற்செயல் என்ற சொல்லை மிக கவனமாக
பயன்படுத்துகிறேன். தற்செயல் என்பது முழுக்க முழுக்க ஆழ்மனத்தை
சார்ந்திருப்பதன் விளைவு. என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஆழ்மனதை
மொழியில் வெளிப்படுத்த வேண்டிய ஒரு செயல்பாடுதான். ஆழ்மனம் மிக அருவமானது.
ஆகவேதான் கதை, கதைச்சூழல், படிமங்கள் போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகின்றன.
அதாவது என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பதே ஒருவகை கனவு காண்பதுதான். சில
பயிற்சிகள் மூலம் நாம் தானாகவே கனவுகளை உருவாக்கிக் கொள்வது. கனவுகளில்
நம்முடைய கட்டுப்பாடு ஏதுமில்லை. அவை முற்றிலும் தன்னிச்சையானவை.
4. கேள்வி: மறுபடியும் திட்டமிடுவது பற்றிய சந்தேகத்தை தீர்க்கவேண்டும் என்று
நினைக்கிறேன். Gone with the Wind நாவலை எழுதிய மார்கிரெட் மிச்செல் அதை
எழுதுவதற்காக ஒருவித திட்டமும் போடவில்லை. அவர் முதலில் எழுதியது நாவலின் கடைசி
அத்தியாயம். கடைசியில் எழுதியது நாவலின் முதல் அத்தியாயம். நேரம்
கிடைக்கும்போது அங்கும் இங்குமாக எழுதி நாவலை முடித்தாராம். அதற்கு புலிட்சர்
பரிசு கிடைத்தது. உங்கள் எழுத்துமுறையும் அப்படியானதா? அவுட்லைன் திட்டம்கூடக்
கிடையாதா?
ஜெ: நான் எப்போதுமே எந்தக் கதைக்கும், நாவலுக்கும் விரிவான திட்டங்களை முன்னரே
போட்டுக் கொண்டதில்லை. சில சமயம் ஓர் உணர்ச்சித் தூண்டலில் உடனடியாக எழுத
ஆரம்பித்துவிடுவேன். சிலசமயம் அப்படிப்பட்ட தொடக்கம் வராது. ஏழெட்டுதடவை கூட
எழுதிப் பார்ப்பேன். எழுத எழுத அந்தக் கனவு வளர்ந்தபடியே செல்ல வேண்டும். அப்படி
நிகழாதபோது அதை அப்படியே விட்டுவிட்டு வேறு வகையில் எழுத ஆரம்பித்துவிடுவேன்.
\'கொற்றவை\' நாவல் என் மனதில் ஒரே பிம்பமாகத்தான் இருந்தது. பாலைவனத்தில்
கைவிடப்பட்ட கோயில் ஒன்றின் கருவறைக்குள் கண்ணகி காளிசிலையாக நிற்கிறாள். அவள்
கண்கள் உயிருள்ள கண்கள். அதை பலவகையில் எழுதிப்பார்த்தேன். எதுவுமே
சரிவரவில்லை. பல இடங்களில் தொடங்கிப் பார்த்தேன். திருப்தியில்லை. அப்படி
நான்கு வருடங்கள் சென்றன பின்னர் ஒரு வரி மனதில் வந்தது. \'அறியமுடியாமையின்
நிறம் நீலம்.\' அந்த வரி ஒரு பெரிய எழுச்சியைக் கொடுத்தது. அந்த வரியிலேயே
நாவலின் மொழிநடையின் அமைப்பு உள்ளது. படிமங்கள் கொண்ட மொழி. உணர்ச்சிகரமானது.
செந்தமிழ். அப்படியே தொடங்கி அந்நாவலை எழுதி முடித்தேன்.
5. கேள்வி: சில நாவல்களுக்கு நிறைய தகவல்கள் தேவைப்படுமே?
ஜெ: திட்டமிடுவது ஓரளவுக்கு தேவையாக இருப்பது வரலாற்றுப் பின்னணி கொண்ட
நாவல்களுக்குத்தான். தகவல்களைச் சேர்ப்பது ஒருங்கிணைப்பது போன்றவற்றுக்கு.
மற்றப்படி திட்டமிடல் என்பது பிரக்ஞை சார்ந்தது. அது இலக்கியத்தின் அக
இயக்கத்துடன் சம்பந்தமற்றது. நன்றாக திட்டமிடப்பட்ட ஒரு படைப்புக்கு
இலக்கியத்தன்மையே இருக்காது. என் பல நாவல்கள் மிகச் சிக்கலான \'பொறியியல்
அமைப்பு\' கொண்டவை என்று சொல்லப் படுகின்றன. தேர்ச்சியும் திட்டமிடலும் கொண்ட
எழுத்து என்று அவற்றைச் சொல்லி யிருக்கிறார்கள். ஆனால் அவற்றை வெளியிட்ட
வசந்தகுமார் போன்றவர்களுக்கு தெரியும் அவை தன் போக்கில் எழுதப்பட்டு அவ்வப்போது
அனுப்பப்பட்டு எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே நூலாக வெளிவந்தவை. நான் என்
நூல்களை திரும்பப் படிப்பதுகூட இல்லை. வசந்தகுமார்தான் பிழைகளைக்கூட
திருத்துவார்.
6. கேள்வி: உலகப்பிரபல ரஸ்ய எழுத்தாளர் கோகொல் அவர் எழுதி வெளியிட்ட முதல்
புத்தகத்தை திரும்பவும் அவரே வாங்கி எரித்தார். அதே போல இறுதிக் காலத்தில்
இறப்பதற்கு முன்னர் அவருடைய Dead Souls இரண்டாம் பகுதியையும் எரித்தார்.
கோகொலுக்கு இறுதிவரை தன் எழுத்தில் மதிப்பு கிடையாது. பல எழுத்தாளர்களுக்கு
தாங்கள் எழுதுவது திருப்தியை கொடுப்பதில்லை. நீங்கள் எப்பொழுதாவது எழுதி
முடித்ததை திருப்தியில்லாமல் தூக்கிப்போட்டதுண்டா?
ஜெ: என்னைப் பொறுத்தவரை எழுத ஆரம்பித்ததும் எழுத்து வந்துகொண்டே இருக்க
வேண்டும். வயலில் மடையை திறந்து விட்டதும் நீர் வந்து நிறைவதுபோல அந்த வடிவத்தை
என் மனதில் உள்ள மொழி வந்து நிறைக்க வேண்டும். அது நிகழாவிட்டால் தூக்கி
போட்டுவிடுவேன். அப்படி பல நாவல்களை தூக்கிப் போட்டிருக்கிறேன். கைவசம் பல
சிறுகதைகள் முடிவடையாமல் இருக்கின்றன. சில சமயம் அவை மீண்டும் தொடங்கப்படலாம்.
சிலசமயம் அப்படியே அழிந்தும் போகலாம்.
7. கேள்வி: திருத்துவதும் உங்களுக்கு பிடிக்காத ஒன்று. சு.ரா தன் எழுத்தை பல
தடவைகள் திருத்துவார். ஒரு 300 பக்க நாவலை எழுதுவதென்றால் 1500 பக்கங்கள்
எழுதவேண்டியிருக்கும் என்று என்னிடம் ஒருமுறை கூறினார். அசோகமித்திரன்
திருத்துவது மிகவும் கடினமான வேலை அது தனக்கு அலுப்பை தருவது என்று கூறுகிறார்.
ஒஸ்கார் வைல்டு ஓர் அரைப்புள்ளி இடுவதற்கு அரை நாள் எடுத்தது எல்லோருக்கும்
தெரியும். மார்க் ட்வெய்ன் தன்னுடைய புகழ்பெற்ற Huckleberry Finn நாவலை பல தடவை
திருத்தி எழுதுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டார். நீங்கள் திருத்தங்கள்
செய்வதே இல்லையா?
ஜெ: இல்லை. திருத்துவதென்பது எனக்கு மிக எந்திரத்தனமான வேலை. எழுதியபின்
மீண்டும் படிப்பதைக்கூட நான் விரும்புவதில்லை. திருப்பித்திருப்பி எழுதும்
எழுத்தாளர்கள் உண்டு. திருப்பி எழுதவே எழுதாத எழுத்தாளர்களும் உண்டு. முன்னது
என்பது ஒரு மனச்சிக்கல் தான். ஒரு சொல்லை திருப்பி எழுதுவதனால் ஒன்றும் பிரதி
மேம்பட்டுவிடப் போவதில்லை. சிலருக்கு வீட்டை சுத்தம் செய்துகொண்டே இருப்பது ஒரு
வகையான \'அப்ஸெஷன்\' அதுபோலத்தான் இதுவும். அத்துடன் திருத்துவது மிகவும்
பிரக்ஞைபூர்வமானது. தர்க்க பூர்வமானது. ஒரு படைப்பை உருவாக்கிய
படைப்பூக்கத்துக்கு நேர் எதிரானது. அறியமுடியாமையின் நிறம் நீலம். அதை தெரிய
முடியாமை என்று மாற்றலாம். அறியாமை என்று மாற்றலாம். அறிவின்மை என்று
மாற்றலாம். அறியப்படாமை என்று போடலாம். இந்த சாத்தியங்களை உட்கார்ந்து
சிந்தித்தால் ஒருவரியில் ஒரு நாளைக் கழித்துவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதில்
எனக்கு படைப்பு இன்பம் இல்லை. ஆகவே அதை நான் ஈடுபட்டு செய்யமுடியாது. அந்த
நேரத்தில் நான் அடுத்த படைப்பைப் பற்றிக் கனவு காண்பேன். கடிதங்களைக்கூட நான்
முதலில் வரும் கைப்பிழைகளுடன் தான் அனுப்புவேன். திருத்தும் நேரத்தில்
இன்னொன்று எழுதலாமே.
8. கேள்வி: எழுத்து துறையைப் பற்றி சொல்லுங்கள். ப்ரான்ஸ் காஃப்கா இறப்பதற்கு
முன்னர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய கடிதங்கள், நாட்குறிப்புகள்,
கையெழுத்துப் பிரதிகள் என்று அனைத்தையும் எரித்துவிடச் சொல்லி வேண்டினார்.
ஆனால் நண்பர் அந்த வேண்டுகோளை நிறைவேற்றாததால் இலக்கியம் தப்பியது.
உலகம் எவ்வளவுதான் மதித்தாலும் காஃப்கா தன் எழுத்தை மதிக்கவில்லை. தான் இந்த
துறைக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவே இறுதிவரை நினைத்தார். நீங்கள் எழுத்து
துறைக்கு எப்படி வந்தீர்கள்? திட்டமிட்டு எழுத வந்தீர்களா அல்லது தற்செயலானதா?
ஜெ: நான் என் உளச்சிக்கல்களை எழுத்துமூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்றுதான்
எழுத வந்தேன். வெறிபிடித்தது போல எழுதி என் மொழி வடிவத்தைக் கண்டுகொண்டேன்.
எழுதுவது எனக்கு ஒரு சுய கண்டடைதல். தியானம். என் யோகசாதகம் அதுவே. என்
வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கும் வழியும்கூட. ஆகவே நான் எழுதுகிறேன். ஒரு
ஓட்டப்பந்தயவீரன் அவனால் முடிந்தவரை வேகமாக ஓட முயல்வதுபோல முடிந்தவரை
உச்சத்தை அடைய முயல்கிறேன். அளவிலும் தரத்திலும்.
9. கேள்வி: அசிமோவ் தன்னுடைய 21வது வயதில் Nightfall என்னும் சிறுகதையை
எழுதினார். அதற்கு பின்னர் 51 வருடங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள்
எழுதினார். ஆனால் அவரால் Nightfall சிறுகதையின் உச்சத்தை தாண்டமுடியவில்லை.
அறிவியல் சிறுகதைகளில் அது இன்றைக்கும் ஒரு மைல்கல். ஆனால் கோகொலின் எழுத்து
தரம் வரவர அதிகமாகிக்கொண்டே வந்திருக்கிறது. அவர் கடைசியாக எழுதிய The Overcoat
சிறுகதை மூலமே அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார். உங்கள் விசயத்தில் வயது ஏற
ஏற படைப்பூக்கம் குறையுமா அல்லது கூடுமா? முந்திய படைப்புகளை தாண்டி உங்கள்
படைப்புகள் மேலும் உயர்ந்த தரத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா?
ஜெ: முதுமையில் இப்படி எழுதுவேனா என்று கேட்டால் எழுதலாம். எழுதாமலும் போகலாம்.
என்னைப் பொறுத்தவரை எழுத்து என் கடைசி இலக்கு அல்ல. எழுத்தாளனாக இருப்பது என்
திட்டமும் அல்ல. எழுத்து ஏணி மாதிரி. ஏணியிலேயே நின்றுகொண்டிருப்பதைவிட மேலே
ஏறிவிட்டால் நல்லதுதானே?
10. கேள்வி: எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் பற்றி ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர் அப்பொழுது யூலிசிஸ் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல் எழுதுவதற்கு
அவர் பொறாமை உணர்வை முழுமையாக அனுபவிக்கவேண்டும். தன் மனைவியை
யாருடனாவது தொடர்பு வைக்கச்சொல்லி வற்புறுத்தினார். மனைவி மறுத்துவிட்டார்.
தன்னால் உச்சமான பொறாமை உணர்ச்சியை நேரடியாக அனுபவிக்காமல் அதை நாவலில்
சித்தரிக்கமுடியாது என்பது அவர் வாதம். ஆனால் உங்கள் கதைகளில் எல்லாவிதமான
உணர்ச்சிகளும் தத்ரூபமாக பதிவாகின்றன. ஏராளமான அக அனுபவங்களும் புற
அனுபவங்களும் கட்டுரை, நாவல், சிறுகதைகள் வழியாக வெளிப்பட்டவண்ணமே இருக்கின்றன.
இந்த வேகத்தில் நீங்கள் படைத்தால் விரைவில் எல்லாமே முடிந்து எழுத ஒன்றுமே
இல்லாமல் போய்விடும் என்று பயம் உங்களுக்கு ஏற்படுவதில்லையா?
ஜெ: இல்லை. என் அக அனுபவங்களில் சிறு பகுதியை மட்டுமே எழுதியிருக்கிறேன். புற
அனுபவங்களிலும் பெரும்பகுதியை எழுதியதில்லை என்பதே உண்மை. உதாரணமாக என்
பெற்றோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எவ்வளவு பெரிய நிகழ்ச்சி அது? இன்றுவரை
அது என் படைப்புகளில் வந்ததில்லை. இனிமேல்தான் அதை நான் எழுதவேண்டும். எந்த
மனிதனுக்கும் வாழ்க்கையனுபவங்கள் எழுதித்தீராது. நான் ஓயாது பயணம் செய்பவன்.
ஓயாது வாழ்க்கையை எதிர்கொள்பவன். எழுதும் ஆற்றல் தீர்ந்து போகலாம்.
எழுதுவதற்கான தேடல் முற்றுபெறலாம். அனுபவம் தீர்ந்துபோய் யாருமே எழுதாமல்
ஆவதில்லை.
11. கேள்வி: சரி, சந்தைப்படுத்துதலுக்கு வருவோம். சி.சு.செல்லப்பா தன் நூல்களை
ஊர் ஊராக எடுத்துச் சென்று தானே விற்று வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவருக்கு பணம் தேவைப்பட்டது மட்டுமல்ல காரணம். நூல்களைப் பதிப்பித்தால் போதாது
அவை வாசகருக்கும் போய்ச்சேரவேண்டும் என்ற நல்லெண்ணமும்தான். சார்ல்ஸ் டிக்கன்ஸ்
எழுத்தில் மட்டும் திறமை காட்டவில்லை. சந்தைப்படுத்துவதிலும் வல்லவராய் இருந்தார்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் அவர் காலத்திலேயே அமோகமாக விற்றன.
அவருடைய தொடர்நாவல் பத்திரிகைகளில் வெளியானபோது அந்தப் பத்திரிகையை
காவிய கப்பல்கள் நியூயோர்க் துறைமுகத்தை அடையும்போது 6000 வாசகர்கள் அந்தக்
காலத்திலேயே காத்துக் கொண்டிருப்பார்களாம். சார்ல்ஸ் டிக்கன்ஸ் இறந்தபோது
அவருடைய புத்தக வருமானச் சேமிப்பு 93000 பவுண்டுகளாக ( இன்றைய மதிப்பில் ஒரு
கோடி டொலர்கள்) இருந்தது. எழுத்தாளருக்கு பணம் தேவை, அத்துடன் அவருடைய
நூல்கள் வாசகரையும் சென்று அடையவேண்டும். நீங்கள் ஏன் உங்கள் நூல்களை
சந்தைப்படுத்துவதைப் பற்றி யோசிப்பதில்லை?
ஜெ: சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டால் படைப்பூக்கத்தை இழந்துவிடவேண்டியதுதான்.
நான் அன்றாட வாழ்க்கையின் சாதாரண செயல்களைக் கூட செய்வதை தவிர்க்கிறேன்.
எழுத்து, பயணம் இவ்விரண்டுமே என் வாழ்க்கை. வேறு எதைச் செய்தாலும் என்னுடைய
எழுத்து ஆற்றலின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கிறேன். இந்நிலையில் என் எழுத்தை
\'புரமோட்\' செய்ய நான் முயல்வெதென்பது என்னை நானே அழிப்பதற்குச் சமம். அதுவும்
படைப்பூக்கம் வேகமாக இருந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அதையெல்லாம்
செய்வதென்பது மிக மிக தவறான செயல். இப்போது என் நேரத்தின் கவனத்தின் ஒவ்வொரு
துளியும் இலக்கியத்துக்கு மட்டுமே உரியது.
12. கேள்வி: ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் சந்தைப்படுத்துவதால் பெரும்
பிரபலமடைந்துவிடுகிறார்களே?
ஜெ: மேலைநாடுகளில் புகழ்பெறும் இந்திய இலக்கியம் ஒரு குறிப்பிட்ட வகையானது.
அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி இரு மனப்பிம்பங்கள் உள்ளன. (ஒன்று) இந்தியா
\'பாக\' மத நம்பிக்கையால் கண்மூடிப்பழக்கங்கள் கொண்டு சீரழிந்த நிலையில்
இருக்கும் ஒரு தேசம். இது அங்கே செல்லும் இந்திய பாதிரிகள் உண்டாக்குவது.
(இரண்டு) இந்தியா ஐரோப்பியர் விட்டுச் சென்றபின் அழிந்துகொன்டிருக்கிறது.
சல்மான் ருஷ்டி முதல் இப்போது அரவிந் அடிகா வரை எல்லா எழுத்துகளிலும் உள்ள
பொது அம்சம் என்பது \'இந்தியாவைப் பழித்தல்\' தான். இந்தக் காரணத்தால்தான் நமது
ஆங்கில இந்திய எழுத்தாளர்கள் பெரும் புகழ் பெறுகிறார்கள். தாராசங்கர் பானர்ஜி
போன்ற மேதைகள் கூட அங்கீகாரம் பெறுவதில்லை. மேலைநாட்டு இலக்கிய வாசகர்கள்
இந்திய இலக்கியம் என்பது ஆங்கில இந்திய எழுத்து மட்டுமே என நம்ப
விரும்புகிறார்கள். மேலைநாட்டில் புகழ்பெற்ற இந்திய இலக்கியங்கள் கூட இந்த
எதிர் மறைப் பண்பு கொண்டவை. இந்தியாவை இருட்டாகக் காட்டக்கூடியவை.
உதாரணமாக வெங்கடேஷ் மாட்கூல்கரின் பன்கர் வாடி, யூ. ஆர். ஆனந்தமூர்த்தியின்
சம்ஸ்காரா போன்றவை. இந்தியாவை இகழ்ந்து வெறுத்து எழுதும் காஞ்சா ஐலயா போன்ற
விமரிசகர்களுக்கும் இதேபோல மேலைநாடுகளில் பாராட்டுகளும் பரிசுகளும்
கிடைக்கின்றன. இன்னொரு மனநிலையும் உண்டு. ஐரோப்பிய மேட்டிமைத்தனம்தான்
அதுவும். அதாவது தத்துவப்பிரச்சினைகள், ஆன்மீகப்பிரச்சினைகள் அழகியல்கூறுகள்
நம்மால் எழுதப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதை தாங்களே எழுத முடியும்
என அவர்கள் எண்ணுகிறார்கள். நமது வாழ்க்கையை \'தெரிந்துகொள்ள\' மட்டுமே
விரும்புகிறார்கள். அதாவது அவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பதை ஒட்டி தெரிந்து
கொள்ள. அதை மட்டும் நாம் எழுதினால் போதும் என்பது அவர்களின் எண்ணம்.
ஆகவே நம்முடைய \'ரிப்போர்ட்டிங்\' வகையான தட்டையான சமூக ஆவணங்களை
மட்டுமே அவர்கள் ரசிப்பார்கள். இதையெல்லாம் செய்து நான் அங்கே வெளியாக
வேண்டுமா என்ன? நம் எழுத்தை நாம் முதலில் ரசிப்போம். பிறகல்லவா அவர்கள்.
இங்கே ஒரு நாவல் வந்தால் 100 பிரதிகள் விற்க ஒருவருடம் ஆகிறது. ஒரு தமிழ்
நாவலை படித்தேன் என்று சொல்ல தமிழனுக்கு மனம் கூசுகிறது. நம் இலக்கியம்
நமக்காக எழுதப்படுவது. நாம் அதை மதித்தால் பிறரும் மதிப்பார்கள். 0
Friday, March 18, 2011
இவர்களது எழுத்துமுறை - 30.பிரபஞ்சன்
1. சமூக உணர்வுதான் எனக்கு முக்கியம். கதை எழுதுவது, நல்லா இருக்கிறதனாலே
கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப்
பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான் நான் போவேன்.
2. எனக்குக் காலம் முழுதும் எழுத்தாளனா இருக்கணும்கிற அபிப்பிராயம் இல்லை.
இந்த சூழ்நிலையில் இலக்கியத்தில் எதை வேணும்னாலும் எழுதி பணம் பண்ண
முடியும். ஆனால் அதைச்செய்யக்கூடாதுன்னுதான் இருக்கேன்.
3. எழுத்தில் வித்தை காட்ட நான் விரும்பவில்லை.
4. கதை எழுதும்போது ரொம்ப அமைதியாக முழுமை பெற்ற மனிதனாக எழுதுகிறேன்.
கட்டுரை எழுதும்போது எப்படியோ எனக்கு ஆக்ரோஷம் வந்து விடுகிறது. ஒரு கோபம்
சகிக்க முடியாமல் வந்து விடுகிறது. சில சமயம் இன்னொரு எல்லைக்கே போய்
விடுகிறேன் என்று எனக்கே தெரிகிறது. அது என் குறைபாடுதான்.
5. மூளையைப் பிராண்டும்படி என்னால் எழுத முடியாது. உண்மை என்பது சிக்கலானது
அல்ல. எளிமையானது, தெளிவானது. எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது. அதுதான்
எனக்கு உடன்பாடு. 'இந்த எழுத்தாளர் இதை நினைச்சு எழுதியிருப்பாரோ' என்பன
போன்ற சந்தேகங்களை வாசகனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. 0
கதை எழுதிக்கிட்டிருக்கிறேன். ஒரு அரசியல் நடவடிக்கை மூலம் சிறப்பாகப்
பணியாற்ற முடியும்னா கதை எழுதுவதை விட்டுட்டு அதுக்குத்தான் நான் போவேன்.
2. எனக்குக் காலம் முழுதும் எழுத்தாளனா இருக்கணும்கிற அபிப்பிராயம் இல்லை.
இந்த சூழ்நிலையில் இலக்கியத்தில் எதை வேணும்னாலும் எழுதி பணம் பண்ண
முடியும். ஆனால் அதைச்செய்யக்கூடாதுன்னுதான் இருக்கேன்.
3. எழுத்தில் வித்தை காட்ட நான் விரும்பவில்லை.
4. கதை எழுதும்போது ரொம்ப அமைதியாக முழுமை பெற்ற மனிதனாக எழுதுகிறேன்.
கட்டுரை எழுதும்போது எப்படியோ எனக்கு ஆக்ரோஷம் வந்து விடுகிறது. ஒரு கோபம்
சகிக்க முடியாமல் வந்து விடுகிறது. சில சமயம் இன்னொரு எல்லைக்கே போய்
விடுகிறேன் என்று எனக்கே தெரிகிறது. அது என் குறைபாடுதான்.
5. மூளையைப் பிராண்டும்படி என்னால் எழுத முடியாது. உண்மை என்பது சிக்கலானது
அல்ல. எளிமையானது, தெளிவானது. எல்லோருக்கும் புரியும்படியாக உள்ளது. அதுதான்
எனக்கு உடன்பாடு. 'இந்த எழுத்தாளர் இதை நினைச்சு எழுதியிருப்பாரோ' என்பன
போன்ற சந்தேகங்களை வாசகனுக்குக் கொடுக்க விரும்பவில்லை. 0
Monday, March 07, 2011
இவர்களது எழுத்துமுறை - 29. சிவசங்கரி
1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ
இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த
நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா
யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற விஷயங்களை....
நான் ஆக்கபூர்வமாக பகிர்ந்துக்க என் எழுத்தை ஒரு கருவியாகப்
பயன்படுத்தறேன்.
2. என்னைப் பாதித்த பல விஷயங்களை அதே - பாதிப்பை வாசகரிடம்
உண்டு பண்ண.... அந்தப் பாதிப்பு கோபமாக இருக்கலாம், நல்லதாக
இருக்கலாம்.... ஒரு பாதிப்பு எனக்குள்ளே உண்டாகிற போது, தீர்வுக்கு
ஏதோ ஒரு வழி கிடைக்கிற மாதிரி எனக்குத் தோணுது. அதே மதிப்பை
என்னுடைய வாசகர்கள்கிட்டே எழுத்த வச்சு, நான் செய்ய முடிஞ்சு
துன்னா, அவங்க, அவங்க, அந்தந்த கோணத்ததுலே சிந்திச்சு, தீர்வு
வேணும்னா எடுத்துக்கலாம். பாதிப்பு உண்டாக்குவதுதான் என் நோக்கம்,
தீர்வு சொல்வதல்ல.
3. என்னுடைய கண்ணோட்டம், எழுத்து எல்லாம் புத்திசாலிகளை விட
சாதாரண ஜனங்களுக்குத்தான். ஏன்னா எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்
எல்லாம் சாதாரண விஷயங்கள்தாம். வாழ்க்கையில் நல்லது, கெட்டதைப்
புரிந்து கொண்டு அடுத்தவர்கள் வேதனையை புரிந்து கொண்டு, ஒரு
நல்ல மனிதப் பிறவியாக, வாழ்க்கையில் கூடுமானவரை முரண்டல்கள்
இல்லாமே சமரசம்னு சொல்ல வரல்லே.... சூழ்நிலை மாற்றத்தை
உணர்ந்து கொண்டு அதை என் எழுத்திலே சாதாரண மக்களுக்கு
கொண்டு போனா போதும்னு நினைக்கிறேன்.
4. நான் மனுஷியாகப் பிறந்தேன். எழுத்தாளர் என்பது நடுவிலே வந்த
விஷயம். இது எத்தனை வருஷம் இருக்கும்னு நினைக்கிறீங்க.....
எழுத்தாளர் சிவசங்கரி' என்னிக்கும் மனுஷி சிவசங்கரிக்கு அடங்கின
வளாகத்தான் இருக்கணும். அதனால உங்க படைப்புத்திறன் அடிபடா
தான்னு நீங்க கேக்கலாம். அதனாலே என்னவோ, நான் நீங்க சொல்ற
அந்த class writters லெவல்ல எழுத முடியலையோ என்னவோ. எனக்கு
எது வேணுங்கறதப் பத்தி நான் தெளிவாக இருக்கேன். மனித மதிப்புகள
இழக்காம வாழத்தான் ஆசைப்படுகிறேன்.
5. எழுத்தோட மிகப் பெரிய வேலை என்னன்னா....இவர்களுக்காகத்தான்
எழுதறேன், அவர்களுக்காகத்தான் எழுதறேன்னு சொல்லக்கூடாது.
இவர்களுக்கும் எழுதணும், அவர்களையும் லேசா சிந்திக்க வைக்க
முடியும்னா அதைச் செய்யத் தவறக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க
நூறு பேர் படிக்கிறதை, லட்சம்பேர் படிக்கிறார்களா என்றுதான்
கேட்கிறேன். அந்த வீச்சு கிடைக்கும்னா, வீர்யம் குறையாம, அந்த
வீச்சை அடைய முடியும்னா, அந்த எழுத்தை நான் பாராட்டறேன். 0
இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த
நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா
யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப் பாதிக்கிற விஷயங்களை....
நான் ஆக்கபூர்வமாக பகிர்ந்துக்க என் எழுத்தை ஒரு கருவியாகப்
பயன்படுத்தறேன்.
2. என்னைப் பாதித்த பல விஷயங்களை அதே - பாதிப்பை வாசகரிடம்
உண்டு பண்ண.... அந்தப் பாதிப்பு கோபமாக இருக்கலாம், நல்லதாக
இருக்கலாம்.... ஒரு பாதிப்பு எனக்குள்ளே உண்டாகிற போது, தீர்வுக்கு
ஏதோ ஒரு வழி கிடைக்கிற மாதிரி எனக்குத் தோணுது. அதே மதிப்பை
என்னுடைய வாசகர்கள்கிட்டே எழுத்த வச்சு, நான் செய்ய முடிஞ்சு
துன்னா, அவங்க, அவங்க, அந்தந்த கோணத்ததுலே சிந்திச்சு, தீர்வு
வேணும்னா எடுத்துக்கலாம். பாதிப்பு உண்டாக்குவதுதான் என் நோக்கம்,
தீர்வு சொல்வதல்ல.
3. என்னுடைய கண்ணோட்டம், எழுத்து எல்லாம் புத்திசாலிகளை விட
சாதாரண ஜனங்களுக்குத்தான். ஏன்னா எனக்கு தெரிஞ்ச விஷயங்கள்
எல்லாம் சாதாரண விஷயங்கள்தாம். வாழ்க்கையில் நல்லது, கெட்டதைப்
புரிந்து கொண்டு அடுத்தவர்கள் வேதனையை புரிந்து கொண்டு, ஒரு
நல்ல மனிதப் பிறவியாக, வாழ்க்கையில் கூடுமானவரை முரண்டல்கள்
இல்லாமே சமரசம்னு சொல்ல வரல்லே.... சூழ்நிலை மாற்றத்தை
உணர்ந்து கொண்டு அதை என் எழுத்திலே சாதாரண மக்களுக்கு
கொண்டு போனா போதும்னு நினைக்கிறேன்.
4. நான் மனுஷியாகப் பிறந்தேன். எழுத்தாளர் என்பது நடுவிலே வந்த
விஷயம். இது எத்தனை வருஷம் இருக்கும்னு நினைக்கிறீங்க.....
எழுத்தாளர் சிவசங்கரி' என்னிக்கும் மனுஷி சிவசங்கரிக்கு அடங்கின
வளாகத்தான் இருக்கணும். அதனால உங்க படைப்புத்திறன் அடிபடா
தான்னு நீங்க கேக்கலாம். அதனாலே என்னவோ, நான் நீங்க சொல்ற
அந்த class writters லெவல்ல எழுத முடியலையோ என்னவோ. எனக்கு
எது வேணுங்கறதப் பத்தி நான் தெளிவாக இருக்கேன். மனித மதிப்புகள
இழக்காம வாழத்தான் ஆசைப்படுகிறேன்.
5. எழுத்தோட மிகப் பெரிய வேலை என்னன்னா....இவர்களுக்காகத்தான்
எழுதறேன், அவர்களுக்காகத்தான் எழுதறேன்னு சொல்லக்கூடாது.
இவர்களுக்கும் எழுதணும், அவர்களையும் லேசா சிந்திக்க வைக்க
முடியும்னா அதைச் செய்யத் தவறக்கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க
நூறு பேர் படிக்கிறதை, லட்சம்பேர் படிக்கிறார்களா என்றுதான்
கேட்கிறேன். அந்த வீச்சு கிடைக்கும்னா, வீர்யம் குறையாம, அந்த
வீச்சை அடைய முடியும்னா, அந்த எழுத்தை நான் பாராட்டறேன். 0
Monday, February 28, 2011
இவர்களது எழுத்துமுறை - 28.வாசந்தி
1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத்
துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும்
பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே
என் எண்ணம்.
2. டெல்லி, கல்கத்தா, மிசோரம், அருணாசலப்பிரதேஷ், மேகாலயா,
நேபாள் இங்கெல்லாம் இருந்தபோது பல விதமான அனுபவங்கள் எனக்கு
ஏற்பட்டன. பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்தேன். அப்போதுதான்
பெண்கள் பிரச்சினைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கே
போனாலும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று
நான் உணர்ந்தேன். நகரமாகட்டும், கிராமமாகட்டும், ஏழையாகட்டும்,
பணக்காரனாகட்டும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
குடும்பச்சூழ்நிலையில் இதை நான் உணர்ந்துகொண்டபோதுதான் இதற்கான
காரணங்களை ஆராய முற்பட்டேன். மற்றப் பெண்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். எல்லா
மானிலங்களிலும் எந்தக் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், பெண்கள்
நிலைமையில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். அடிப்படையில் நம்
தேசம் நிலமான்ய சமுதாய (fudel) அமைப்பின் மிச்சமாகவும், தந்தை வழி
சமூகமாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
அப்போது கிடைத்த நேரங்களில் பெருவாரியாக இந்தப் பிரச்சினைகள்
பற்றியும் இலக்கியங்களையும் நிறையப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் தீவிரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
3. ஜெயகாந்தன் கதைகளை விரும்பிப் படிப்பேன். ஜானகிராமன் கதை
களையும் படிப்பேன்.ஆனால் அவர்களைப்போல் எழுத வேண்டும்,
இவர்களைப்போல் எழுதவேண்டும் என்றெல்லாம் நினைத்து இல்லை.
4. நான் மத்தியதர வர்க்கத்துப் பெண்களை மட்டும் எழுதவில்லை.
பலதரப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அடிமட்டத்தில்
இருக்கும் கல்வியறிவு அற்ற பெண்களை - அவர்களது பிரச்சினைகளை
ஆராயும்போது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்த
அனுபவங்களையொட்டி சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பெண்களைப்
பற்றியும் என் கதைகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.
5. எளிமையாகப் படிக்கும்படியாக இருப்பதே என் நடை என்று
நினைக்கிறேன். It is quite easy to be too difficult. புரியாமல் எழுதுவது
ரொம்ப சுலபம். புரியும்படியாக எளிமையாக எழுதுவதுதான் ரொம்ப
கஷ்டம். தமிழ் இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்று
முயற்சிக்கிறேன். தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு இன்னும் அதிக
முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
6. நான் ஒன்றை எழுதிவிட்டு அதை உடனே பத்திகைக்கு அனுப்பும்
வழக்கமே கிடையாது. அதைத் திரும்பத் திரும்பப் படித்து எவ்வளவு
சொற்சிக்கனம் இருக்கணுமோ அதைக் கடைப்பிடித்து மீண்டும்
எழுதுகிறேன். சொல்லுகிற விஷயத்தை 'எப்படிச்சொல்கிறோம்' என்பது
தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனால் நடைக்கு ஒரு
முக்கியத்துவம் கொடுத்து கலைநயத்துடன்தான் எழுதுகிறேன். முதலில்
எழுதிக் கொண்டிருக்கிறபோது இருந்தைவிட நாமும் நமது பார்வைகளை
யும், அணுகுமுறைகளையும் காலம் வளர வளர மாற்றிக் கொண்டு
வருகிறோம். அந்தப் பக்குவம் எழுத்தில் இருக்கத்தானே வேண்டும்?
ஐந்தாறு வருடமாக நான் வடிவம், கலைநயம் இவற்றிற்கு முக்கியத்துவம்
கொடுத்துத்தான் எழுதுகிறேன். 0
துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும்
பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே
என் எண்ணம்.
2. டெல்லி, கல்கத்தா, மிசோரம், அருணாசலப்பிரதேஷ், மேகாலயா,
நேபாள் இங்கெல்லாம் இருந்தபோது பல விதமான அனுபவங்கள் எனக்கு
ஏற்பட்டன. பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்தேன். அப்போதுதான்
பெண்கள் பிரச்சினைகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கே
போனாலும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்று
நான் உணர்ந்தேன். நகரமாகட்டும், கிராமமாகட்டும், ஏழையாகட்டும்,
பணக்காரனாகட்டும் பெண்கள் நிலைமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
குடும்பச்சூழ்நிலையில் இதை நான் உணர்ந்துகொண்டபோதுதான் இதற்கான
காரணங்களை ஆராய முற்பட்டேன். மற்றப் பெண்கள் எப்படி
இருக்கிறார்கள் என்று என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். எல்லா
மானிலங்களிலும் எந்தக் கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், பெண்கள்
நிலைமையில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். அடிப்படையில் நம்
தேசம் நிலமான்ய சமுதாய (fudel) அமைப்பின் மிச்சமாகவும், தந்தை வழி
சமூகமாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன்.
அப்போது கிடைத்த நேரங்களில் பெருவாரியாக இந்தப் பிரச்சினைகள்
பற்றியும் இலக்கியங்களையும் நிறையப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.
மீண்டும் தீவிரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
3. ஜெயகாந்தன் கதைகளை விரும்பிப் படிப்பேன். ஜானகிராமன் கதை
களையும் படிப்பேன்.ஆனால் அவர்களைப்போல் எழுத வேண்டும்,
இவர்களைப்போல் எழுதவேண்டும் என்றெல்லாம் நினைத்து இல்லை.
4. நான் மத்தியதர வர்க்கத்துப் பெண்களை மட்டும் எழுதவில்லை.
பலதரப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அடிமட்டத்தில்
இருக்கும் கல்வியறிவு அற்ற பெண்களை - அவர்களது பிரச்சினைகளை
ஆராயும்போது பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்த
அனுபவங்களையொட்டி சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பெண்களைப்
பற்றியும் என் கதைகளில் நிறைய எழுதியிருக்கிறேன்.
5. எளிமையாகப் படிக்கும்படியாக இருப்பதே என் நடை என்று
நினைக்கிறேன். It is quite easy to be too difficult. புரியாமல் எழுதுவது
ரொம்ப சுலபம். புரியும்படியாக எளிமையாக எழுதுவதுதான் ரொம்ப
கஷ்டம். தமிழ் இன்னும் இயல்பாக இருக்க வேண்டும் என்று
முயற்சிக்கிறேன். தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு இன்னும் அதிக
முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
6. நான் ஒன்றை எழுதிவிட்டு அதை உடனே பத்திகைக்கு அனுப்பும்
வழக்கமே கிடையாது. அதைத் திரும்பத் திரும்பப் படித்து எவ்வளவு
சொற்சிக்கனம் இருக்கணுமோ அதைக் கடைப்பிடித்து மீண்டும்
எழுதுகிறேன். சொல்லுகிற விஷயத்தை 'எப்படிச்சொல்கிறோம்' என்பது
தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனால் நடைக்கு ஒரு
முக்கியத்துவம் கொடுத்து கலைநயத்துடன்தான் எழுதுகிறேன். முதலில்
எழுதிக் கொண்டிருக்கிறபோது இருந்தைவிட நாமும் நமது பார்வைகளை
யும், அணுகுமுறைகளையும் காலம் வளர வளர மாற்றிக் கொண்டு
வருகிறோம். அந்தப் பக்குவம் எழுத்தில் இருக்கத்தானே வேண்டும்?
ஐந்தாறு வருடமாக நான் வடிவம், கலைநயம் இவற்றிற்கு முக்கியத்துவம்
கொடுத்துத்தான் எழுதுகிறேன். 0
Wednesday, February 23, 2011
இவர்களது எழுத்துமுறை - 27.அசோகமித்திரன்
1. 'என் எழுத்து' என்று சொல்கிறபோது, 'என்' என்கிற அகங்காரம் இல்லாத,
வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் 'நான்' வரலாம். ஆனால்
அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய 'நான்'
கதையில் வரக்கூடாது. எழுத்தாளரின் அகங்காரம் தவிர்த்த எழுத்தைத்தான்
நான் ஏற்க முடிகிறது. நான் முயற்சி செய்வதும் அதைத்தான். என்னைப்
பொறுத்தமட்டில் எழுத்தில் - கதை எழுதுவதில் மட்டுமல்ல - வாழ்க்கையில்
தினசரி நடப்பில், ஒரு கடிதம் எழுதுவதில், பேசுவதில், செயலில் எதிலுமே
அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
2. எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து எதுவும் கிடையாது.
ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும், இன்னோருத்தன் ஆட்டோ டிரைவராக
இருப்பதும் எல்லாம் ஒன்றுதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்குத் தெரிந்தது எழுதுவது.
3. ஒருவன் ஒருமுறை, ஐந்து முறை, பத்துமுறை கூட சாமர்த்தியமாக
அவனுடைய உள்ளுணர்வை மறைத்து எழுதிவிடலாம். ஆனால் சுமார்
நாற்பது ஆண்டுகள் ஒருவன் தொடர்ந்து எழுதி வந்தால் அவன்
உள்ளிருப்பது அனைத்தும் வெளிக்காட்டப்படாமல் இருக்க முடியாது.
என்னை அறிவது யாருக்காவது முக்கியமானால், அவரை என் படைப்புக்
களைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். என் படைப்பு எதுவுமே முதல்
வாசிப்பில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆதலால் அவருக்கு நேரமும்
ஆர்வமும் இருக்குமானால் இரண்டாம் முறை படிக்கக் கேட்டுக்
கொள்கிறேன். என் நம்பிக்கை, அது அவருக்கு ஏமாற்றத்தைத் தராது.
4. 'என் கதைகளைப் படிக்கிற பலருக்கு அது உண்மையிலேயே நல்ல
எழுத்தா இல்லையா என்றே உணரமுடியாத சிக்கல் இருக்கிறது; இதற்குக்
காரணம் என் நடை எளிமையாக, அலங்காரம் இல்லாததாக இருப்பது;
நிறைய தகவல்கள் தொகுக்கப் படுகின்றன; அதிலிருந்து ஒரு கதை என்று
உய்த்துணர வேண்டி இருக்கிறது' என்ற உணர்வு பலருக்கு இருப்பதை
அறிந்திருக்கிறேன். உக்தி மட்டுமே இலக்கியமாகிவிடும் என்று நான்
நினைக்கவில்லை. ஒர் உக்தி கையாளப்படுகிறது என்ற நினைப்பே எழச்
செய்யாத உக்திதான் மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன். சொல்ல
வேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல்,
ஆசிரியர் சார்பு கொள்ளாமல் எழுத முயல்வதே என் பாணி.
ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றிக் கொள்ளாமல்
எழுதுவதால் வாசகர்களுக்கும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இதனால்
பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள், தெரிந்தவர்கள் போல இருந்தாலும்,
வாசகர்கள் அவற்றிலிருந்து விலகியே இருப்பார்கள். இப்படி விலகி
இருப்பதில் அதிகத் தகவல்கள் அறிய சாத்தியமுண்டு. தகவல்கள் மூலம்
சூழ்நிலையையும், கதையின் தொனியையும் தெரியவைக்கும் உக்தி
என்னுடையது மட்டுமல்ல. எல்லா உரைநடை எழுத்தாளர்களும் வெவ்வேறு
அளவுக்கு இதை உபயோகப்படுத்தித்தான் இருக்கிறார்கள். குறிப்பாகத்
திரைப்பட வடிவில் இந்த உக்தி நிறையவே பயன்படுத்தப்படுகிறது.
5. எழுத்தாளன் என்பவன் இதுவே இறுதி என்பது போன்ற எண்ணங்கள்
வைத்துக் கொள்ளக்கூடாது என்றே கருதுகிறேன். இரு நபர்கள் இடையே
பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்யவே என் எழுத்து பயன்பட வேண்டும்
என்று கருதுவதாகச் சொல்லலாம். யாரையும் வித்தியாசப்படுத்தி, பெரியவர்
சிறியவர் என்று கருதாமல் பார்க்கும் நிலையை எழுத்து செய்ய வேண்டும்.
அதுதான் வாழ்க்கையின் உயரிய நிலை. 0
வராத எழுத்துதான் நல்ல எழுத்து. என் கதையில் 'நான்' வரலாம். ஆனால்
அந்த நான், கதைப்பாத்திரத்தின் நான்தான். எழுதுகிற என்னுடைய 'நான்'
கதையில் வரக்கூடாது. எழுத்தாளரின் அகங்காரம் தவிர்த்த எழுத்தைத்தான்
நான் ஏற்க முடிகிறது. நான் முயற்சி செய்வதும் அதைத்தான். என்னைப்
பொறுத்தமட்டில் எழுத்தில் - கதை எழுதுவதில் மட்டுமல்ல - வாழ்க்கையில்
தினசரி நடப்பில், ஒரு கடிதம் எழுதுவதில், பேசுவதில், செயலில் எதிலுமே
அகங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
2. எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து எதுவும் கிடையாது.
ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும், இன்னோருத்தன் ஆட்டோ டிரைவராக
இருப்பதும் எல்லாம் ஒன்றுதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்குத் தெரிந்தது எழுதுவது.
3. ஒருவன் ஒருமுறை, ஐந்து முறை, பத்துமுறை கூட சாமர்த்தியமாக
அவனுடைய உள்ளுணர்வை மறைத்து எழுதிவிடலாம். ஆனால் சுமார்
நாற்பது ஆண்டுகள் ஒருவன் தொடர்ந்து எழுதி வந்தால் அவன்
உள்ளிருப்பது அனைத்தும் வெளிக்காட்டப்படாமல் இருக்க முடியாது.
என்னை அறிவது யாருக்காவது முக்கியமானால், அவரை என் படைப்புக்
களைப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். என் படைப்பு எதுவுமே முதல்
வாசிப்பில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆதலால் அவருக்கு நேரமும்
ஆர்வமும் இருக்குமானால் இரண்டாம் முறை படிக்கக் கேட்டுக்
கொள்கிறேன். என் நம்பிக்கை, அது அவருக்கு ஏமாற்றத்தைத் தராது.
4. 'என் கதைகளைப் படிக்கிற பலருக்கு அது உண்மையிலேயே நல்ல
எழுத்தா இல்லையா என்றே உணரமுடியாத சிக்கல் இருக்கிறது; இதற்குக்
காரணம் என் நடை எளிமையாக, அலங்காரம் இல்லாததாக இருப்பது;
நிறைய தகவல்கள் தொகுக்கப் படுகின்றன; அதிலிருந்து ஒரு கதை என்று
உய்த்துணர வேண்டி இருக்கிறது' என்ற உணர்வு பலருக்கு இருப்பதை
அறிந்திருக்கிறேன். உக்தி மட்டுமே இலக்கியமாகிவிடும் என்று நான்
நினைக்கவில்லை. ஒர் உக்தி கையாளப்படுகிறது என்ற நினைப்பே எழச்
செய்யாத உக்திதான் மிகச் சிறந்ததாகக் கருதுகிறேன். சொல்ல
வேண்டியதை நேரிடையாக அடைமொழிகளைப் பயன்படுத்தாமல்,
ஆசிரியர் சார்பு கொள்ளாமல் எழுத முயல்வதே என் பாணி.
ஆசிரியரே தம் பாத்திரங்கள் எவருடனும் ஒன்றிக் கொள்ளாமல்
எழுதுவதால் வாசகர்களுக்கும் பாத்திரத்துடன் ஒன்ற முடியாது. இதனால்
பாத்திரங்கள் எவ்வளவு பழகியவர்கள், தெரிந்தவர்கள் போல இருந்தாலும்,
வாசகர்கள் அவற்றிலிருந்து விலகியே இருப்பார்கள். இப்படி விலகி
இருப்பதில் அதிகத் தகவல்கள் அறிய சாத்தியமுண்டு. தகவல்கள் மூலம்
சூழ்நிலையையும், கதையின் தொனியையும் தெரியவைக்கும் உக்தி
என்னுடையது மட்டுமல்ல. எல்லா உரைநடை எழுத்தாளர்களும் வெவ்வேறு
அளவுக்கு இதை உபயோகப்படுத்தித்தான் இருக்கிறார்கள். குறிப்பாகத்
திரைப்பட வடிவில் இந்த உக்தி நிறையவே பயன்படுத்தப்படுகிறது.
5. எழுத்தாளன் என்பவன் இதுவே இறுதி என்பது போன்ற எண்ணங்கள்
வைத்துக் கொள்ளக்கூடாது என்றே கருதுகிறேன். இரு நபர்கள் இடையே
பிளவு ஏற்படாமல் இருக்கச் செய்யவே என் எழுத்து பயன்பட வேண்டும்
என்று கருதுவதாகச் சொல்லலாம். யாரையும் வித்தியாசப்படுத்தி, பெரியவர்
சிறியவர் என்று கருதாமல் பார்க்கும் நிலையை எழுத்து செய்ய வேண்டும்.
அதுதான் வாழ்க்கையின் உயரிய நிலை. 0
Wednesday, February 16, 2011
இவர்களது எழுத்துமுறை - 26. ஆதவன்
1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான
ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை
சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என்
பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக்கொட்டிக் கொண்டு
படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர்குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்
படாதவனாக - இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும்
தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால், பெரும்பாலும் புறக்கணிக்கப்
பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்
தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒரு நாள் நான் எழுதத் தொடங்கினேன்.
எனக்கென்று ஒரு புதியஉலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன்.
இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்.
2. 1962ல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாகக்
காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும்
உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில், ஏதோ எழுதித்தள்ள வேண்டு
மென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுதவேண்டும்
என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான
விஷயங்களும்கூட, வாழ்க்கையின் சில நிஜமான கணங்களுக்கு முன்னால்
எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற
பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகி
விட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் அவள் பெரும் உதவி
செய்திருக்கிறாள்.
3. கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும்,
சினிமாத் தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்
விட்டது. ஆனால் அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும்
பெண்களும், ரெஸ்டாரெண்டுகள், சினிமாத் தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன்,
ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள்,
அளவளாவினர்கள். ''ரெஸ்டாரெண்டும், சினிமாத் தியேட்டரும் வராத கதை
ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?'' என்று என் நண்பன் ஒருவன் கேட்டான்.
என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும், இடங்களையும் வைத்துத்
தானே என்னால் எழுத முடியும்?
4. என்னிடம் கதை எழுத ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு
கதையையும் மிகவும் யோசித்து , மிகக் கஷ்டப்பட்டுதான் எழுதுகிறேன்.
ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்கமுடியாமல் ஈடுபடும் தேடல். என்னை
நானே உட்படுத்திக் கொள்ளும் ஒர் பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து,
ஒரு அனுபவம் அல்லது உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு,
விவரணை, பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை,
என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின்,
சலனங்களின் தேடல்.
5. ஒவ்வொரு கதையையும் எழுதியபின்பு என்னையும் என்னைச் சுற்றியுள்ள
மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும்
முடிகிறது. தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன்-மனைவி சமத்துவம்
என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்து கொண்டேன்.
6. எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத்
தொலைவில், எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப்
போய்ப பார்க்கும் ஆசையினால், பிரத்தியேக உலகத்தினுள்ளே சதா இயங்கிக்
கொண்டிருக்கும் பல சூட்சமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால்,
அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக்கொள்ளும் ஆசையினால்,
நான் மேற்கொண்டுள்ள பயணம்.
7. எழுத்து எனக்கொரு அலங்காரச்சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வ
தற்காககோ, யாராலும் ஒப்புக்கொள்ளப்படுதற்கோ நான் எழுதவில்லை. இது
பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல அல்ல.எழுதுவதை
என்னால் தவிர்க்கமுடியவில்லை. எனவேதான் எழுதுகிறேன். 0
ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை
சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என்
பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும் சப்புக்கொட்டிக் கொண்டு
படிக்க ஆவலுடன் ஒரு ரசிகர்குழாம் இருக்கவில்லை. நான் தனியாக - கவனிக்கப்
படாதவனாக - இருந்தேன். படிப்பிலும் சராசரியாக, விளையாட்டுக்களிலும்
தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத காரணத்தால், பெரும்பாலும் புறக்கணிக்கப்
பட்டவனாக, என்னையே எனக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்
தினாலும் ஏக்கத்தினாலும் திடீரென்று ஒரு நாள் நான் எழுதத் தொடங்கினேன்.
எனக்கென்று ஒரு புதியஉலகம் - தனி உலகம் - நிர்மாணிக்கத் தொடங்கினேன்.
இந்த உலகத்தில் நான்தான் ராஜா; நான் வைத்ததுதான் சட்டம்.
2. 1962ல் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாகக்
காதலித்தேன். அந்த அனுபவம் என்னுள்ளே ஒரு புதுமையான கிளர்ச்சியையும்
உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அதுவரையில், ஏதோ எழுதித்தள்ள வேண்டு
மென்ற வெறியும் ஆசையும் இருந்ததே தவிர, எதை, எப்படி எழுதவேண்டும்
என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏட்டில் படிக்கும் மிகப் பிரமாதமான
விஷயங்களும்கூட, வாழ்க்கையின் சில நிஜமான கணங்களுக்கு முன்னால்
எவ்வளவு அற்பமானவையென நான் உணர்ந்தேன். எதை எழுதுவது என்ற
பிரச்சினை போய், எதை எழுதாமலிருப்பது என்பது என் பிரச்சினையாகி
விட்டது. என் எழுத்து மலருவதற்குத் தன்னையறியாமல் அவள் பெரும் உதவி
செய்திருக்கிறாள்.
3. கல்லூரி வராந்தாவில் முளைவிட்ட என் முதல் காதல், ரெஸ்டாரெண்டுகளிலும்,
சினிமாத் தியேட்டர்களிலும் விகசித்து மலருவதற்கு வாய்ப்பில்லாமலே போய்
விட்டது. ஆனால் அதன்பின் நான் எழுதிய கதைகளில் வரும் ஆண்களும்
பெண்களும், ரெஸ்டாரெண்டுகள், சினிமாத் தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன்,
ரயில் முதலிய எல்லா இடங்களிலும் தடையில்லாமல் சந்தித்துக் கொண்டார்கள்,
அளவளாவினர்கள். ''ரெஸ்டாரெண்டும், சினிமாத் தியேட்டரும் வராத கதை
ஏதாவது நீ எழுதியிருக்கிறாயா?'' என்று என் நண்பன் ஒருவன் கேட்டான்.
என்ன செய்வது, நான் புழங்கிய சூழ்நிலைகளையும், இடங்களையும் வைத்துத்
தானே என்னால் எழுத முடியும்?
4. என்னிடம் கதை எழுத ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு
கதையையும் மிகவும் யோசித்து , மிகக் கஷ்டப்பட்டுதான் எழுதுகிறேன்.
ஒவ்வொரு கதையும் நான் தவிர்க்கமுடியாமல் ஈடுபடும் தேடல். என்னை
நானே உட்படுத்திக் கொள்ளும் ஒர் பரீட்சை. ஒரு பிரச்சினை, ஒரு கருத்து,
ஒரு அனுபவம் அல்லது உணர்ச்சி - இவற்றின் சொல் உருவாக்கம், சித்தரிப்பு,
விவரணை, பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றில் எனக்குள்ள திறமையின் பரீட்சை,
என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒளிந்திருக்கக்கூடிய ஆழங்களின்,
சலனங்களின் தேடல்.
5. ஒவ்வொரு கதையையும் எழுதியபின்பு என்னையும் என்னைச் சுற்றியுள்ள
மனிதர்களையும் முன்னைவிட நன்றாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும்
முடிகிறது. தாஜ்மகால் கதையை எழுதிய பிறகு, கணவன்-மனைவி சமத்துவம்
என்பது ஒரு இலட்சிய உருவகம் தானென்பதை நான் புரிந்து கொண்டேன்.
6. எழுத்து எனக்கு ஒரு பயணம். பூடகமாகவும் மர்மமாகவும் எனக்குச் சற்றுத்
தொலைவில், எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்றைக் கிட்டப்
போய்ப பார்க்கும் ஆசையினால், பிரத்தியேக உலகத்தினுள்ளே சதா இயங்கிக்
கொண்டிருக்கும் பல சூட்சமமான உலகங்களை வெளிக்கொணரும் ஆசையினால்,
அல்லது எனக்கென்று ஒரு புதிய உலகம் நிர்மாணித்துக்கொள்ளும் ஆசையினால்,
நான் மேற்கொண்டுள்ள பயணம்.
7. எழுத்து எனக்கொரு அலங்காரச்சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வ
தற்காககோ, யாராலும் ஒப்புக்கொள்ளப்படுதற்கோ நான் எழுதவில்லை. இது
பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல அல்ல.எழுதுவதை
என்னால் தவிர்க்கமுடியவில்லை. எனவேதான் எழுதுகிறேன். 0
Friday, January 28, 2011
இவர்களது எழுத்துமுறை - 24.ஆர்வி.
1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை
எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி
ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால்
உணர முடிந்தது. அந்த மயக்கத்திலே என்னுள்ளே ஆண்மையாக உள்ள
கலையுணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவருவதைக காண்கிற புதுமை
இன்பத்தை அனுபவிக்கிறேன். நானே ஒரு புதுப் பிறவி எடுப்பது போன்ற
ஆனந்தத்தை உணர்கிறேன். என்னை நானே புதிதாக அறிந்து கொள்கிற
முயற்சியாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நல்ல வகையை
அறிந்துகொண்டுவிட்ட முயற்சியாகவும் அந்த அனுபவம் விளங்குகிறது.
2. எழுத்தாளன் என்கிற முறையில் நான் எனக்காக மட்டுமல்ல பிறருக்காகவும்
எழுதுகிறேன். அதாவது நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்
என்று அதைச் சொல்லிக்கொள்ளலாம்.
3. என்னைப் பாதிக்கிற விஷயங்கள், பாதிக்காத விஷயங்கள், நான்
விரும்புகிற விஷயங்கள், விரும்பாத விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றித்
தான் எழுதுகிறேன். காசுக்காக எழுதுகிறேன்; புகழுக்காக எழுதுகிறேன்;
தாட்சண்யத்துக்காக எழுதுகிறேன்; மிரட்டுவதற்காக எழுதுகிறேன்; மிரளாமல்
இருப்பதற்காக எழுதுகிறேன்; என்னுடைய எழுத்தைக்கொண்டு ஜகத்ஜாலம்
எல்லாம் பண்ணிவிட வேண்டும் என்று எழுதுகிறேன். என்னை உயர்த்திக்
கொள்ள எழுதுகிறேன். பிறரை உயர்த்தவும் எழுதுகிறேன். கீதாச்சாரியன்
சொன்னது பார்த்தனுக்கு மட்டும்தானா? எனக்கும் சரி. பலனைக் கருதாமல்
எழுதுகிறேன். பலன் கருதியும் எழுதுகிறேன். தன்னுடைய விருப்பு
வெறுப்பெல்லாம் அழுகல் சொத்தைக்கருத்தெல்லாம் விமர்சனம் என்று
ஓயாமல் புலம்புகிறானே அவனுடைய பட்டியலில் என்னுடைய பெயர்
இருக்கிறதா என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன். அதில் பெயர் இருக்க
வேண்டியதில்லை என்பதற்காகவும் எழுதுகிறேன்.
4. எனக்கு இன்னும் ஒரு நிறைவு பிறக்கவில்லை. எதையோ ஒன்றை
சாதிக்கிற வேகம் இன்னும் தணியவில்லை. என் சிந்தனையெல்லாம் எங்கோ
இருக்கிறது. என்னைச் சுற்றியுள்ள சிறுமைகள், என்னிடமே உள்ள குற்றங்
குறைகள், பலவீனங்கள் ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் வற்றாத
ஜீவநதிகள் போல் வடிவதும் பெருக்கெடுத்து வருவதுமாக இருந்துகொண்டே
இருந்தாலும் என் சிந்தனை மட்டும் இமயத்தின் பனிச்சிகரத்தில் தூய்மையான
இடம் ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. பேதம் சிறிதும் இல்லாத
அந்த இடத்துக்குத்தான் நான் என் எழுத்து மூலமாக யாத்திரையைத் தொடங்கி
இருக்கிறேன்.
5. நான் எழுதியது போதாது. எழுத வேண்டியது எவ்வளவோ? எழுத
வேண்டியதை முழுதும் எழுதவில்லை. எழுதியதை எழுதியிருக்க வேண்டிய
தில்லை. எனக்கே என்னிடம் திருப்தி இல்லை. ஆகவே நான் இனித்தான்
நான் விரும்பிய வண்ணம் எழுதப் போகிறேன். வாழ, வாழவிட எழுதுகிறேன்.
6. இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. வாழ்க்கையேதான் இலக்கியம்.
ஆகவே என் நெஞ்சை விட்டகலாத - எனது இளம் பருவத்தில் சந்தித்த
நபர்களை உங்கள் நெஞ்சிலும் பதியும்படி உலவ விடுகிறேன். 0
எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி
ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால்
உணர முடிந்தது. அந்த மயக்கத்திலே என்னுள்ளே ஆண்மையாக உள்ள
கலையுணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவருவதைக காண்கிற புதுமை
இன்பத்தை அனுபவிக்கிறேன். நானே ஒரு புதுப் பிறவி எடுப்பது போன்ற
ஆனந்தத்தை உணர்கிறேன். என்னை நானே புதிதாக அறிந்து கொள்கிற
முயற்சியாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நல்ல வகையை
அறிந்துகொண்டுவிட்ட முயற்சியாகவும் அந்த அனுபவம் விளங்குகிறது.
2. எழுத்தாளன் என்கிற முறையில் நான் எனக்காக மட்டுமல்ல பிறருக்காகவும்
எழுதுகிறேன். அதாவது நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்
என்று அதைச் சொல்லிக்கொள்ளலாம்.
3. என்னைப் பாதிக்கிற விஷயங்கள், பாதிக்காத விஷயங்கள், நான்
விரும்புகிற விஷயங்கள், விரும்பாத விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றித்
தான் எழுதுகிறேன். காசுக்காக எழுதுகிறேன்; புகழுக்காக எழுதுகிறேன்;
தாட்சண்யத்துக்காக எழுதுகிறேன்; மிரட்டுவதற்காக எழுதுகிறேன்; மிரளாமல்
இருப்பதற்காக எழுதுகிறேன்; என்னுடைய எழுத்தைக்கொண்டு ஜகத்ஜாலம்
எல்லாம் பண்ணிவிட வேண்டும் என்று எழுதுகிறேன். என்னை உயர்த்திக்
கொள்ள எழுதுகிறேன். பிறரை உயர்த்தவும் எழுதுகிறேன். கீதாச்சாரியன்
சொன்னது பார்த்தனுக்கு மட்டும்தானா? எனக்கும் சரி. பலனைக் கருதாமல்
எழுதுகிறேன். பலன் கருதியும் எழுதுகிறேன். தன்னுடைய விருப்பு
வெறுப்பெல்லாம் அழுகல் சொத்தைக்கருத்தெல்லாம் விமர்சனம் என்று
ஓயாமல் புலம்புகிறானே அவனுடைய பட்டியலில் என்னுடைய பெயர்
இருக்கிறதா என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன். அதில் பெயர் இருக்க
வேண்டியதில்லை என்பதற்காகவும் எழுதுகிறேன்.
4. எனக்கு இன்னும் ஒரு நிறைவு பிறக்கவில்லை. எதையோ ஒன்றை
சாதிக்கிற வேகம் இன்னும் தணியவில்லை. என் சிந்தனையெல்லாம் எங்கோ
இருக்கிறது. என்னைச் சுற்றியுள்ள சிறுமைகள், என்னிடமே உள்ள குற்றங்
குறைகள், பலவீனங்கள் ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் வற்றாத
ஜீவநதிகள் போல் வடிவதும் பெருக்கெடுத்து வருவதுமாக இருந்துகொண்டே
இருந்தாலும் என் சிந்தனை மட்டும் இமயத்தின் பனிச்சிகரத்தில் தூய்மையான
இடம் ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. பேதம் சிறிதும் இல்லாத
அந்த இடத்துக்குத்தான் நான் என் எழுத்து மூலமாக யாத்திரையைத் தொடங்கி
இருக்கிறேன்.
5. நான் எழுதியது போதாது. எழுத வேண்டியது எவ்வளவோ? எழுத
வேண்டியதை முழுதும் எழுதவில்லை. எழுதியதை எழுதியிருக்க வேண்டிய
தில்லை. எனக்கே என்னிடம் திருப்தி இல்லை. ஆகவே நான் இனித்தான்
நான் விரும்பிய வண்ணம் எழுதப் போகிறேன். வாழ, வாழவிட எழுதுகிறேன்.
6. இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. வாழ்க்கையேதான் இலக்கியம்.
ஆகவே என் நெஞ்சை விட்டகலாத - எனது இளம் பருவத்தில் சந்தித்த
நபர்களை உங்கள் நெஞ்சிலும் பதியும்படி உலவ விடுகிறேன். 0
Tuesday, January 18, 2011
இவர்களது எழுத்துமுறை - 23.நகுலன்
1. 'ஏன் எழுதுகிறேன்?' என்றால் 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது
என்பதால் எழுதுகிறேன்'.
2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால்,
என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க
நான் எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. ஆனால் என்னை
நான் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புத்தான் பயன்படுகிறது;
அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதாலேயே, என் நிதர்சனக்
காட்சியைத் தருவதில்லை; ஆனால் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற
பிரதிபலிப்புகளைவிட இந்தப் பிரதிபலிப்பு ஒரளவு எனக்கு நிதானத்தைத்
தருகிறது.
3. எப்படி எழுதுகிறேன்? என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில்
சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடம் கிடைக்காத
எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால்
புளித்துவிட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த
நான், இப்போது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டி
ருக்கிறேன். குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத
பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி,
பகல் வேளை, மாலை, இந்தப் பரபரப்பை கழித்துத் தீர்க்க நான் எழுத
ஆரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறுகவிதையாக இருந்தால் ஒரே
இருப்பில் இருந்து எழுதிவிடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட
சிருஷ்டிவேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில்
சென்று நான் படுத்துக்கொள்வதும் உண்டு! பல ஆசிரியர்கள் கூறியபடி,
இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சனாக மாறி நின்று
பார்க்க முடிவதில்லை. நான் செய்ததை சீர்திருத்தச் சில சமயங்களில்
ஒரு கால இடை இடையீடு வேண்டிஇருக்கிறது. ஆங்கிலக் கவிஞன்
கூறியபடி சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக
மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது;
இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது.
4. கதைகளுக்குக் கரு எவ்வாறு அமைகிறது? ராமசாமி எழுதிய மாதிரி
அனுபவம் கண்ணாடிச் சில்; எழுதுவனின் திறமைதான் அதற்கு ரசப்பூச்சுப்
பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் என் மன
வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடிமனத்திலிருந்து
சிருஷ்டிப் பரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூர்ணத்
துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோவிலாசம் அனுபவம்
மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின் செழிப்புதான்.
5. ஒரு நோட்புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத்திறனை
சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில
சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று
கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்குமேல்
என்னால் எதுவும் செய்ய என்று தோன்றவில்லை. இவைகளைத்
திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பைக்கூடை
என்பதும், இந்தக் குப்பைக கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு
தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். 0
என்பதால் எழுதுகிறேன்'.
2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால்,
என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க
நான் எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. ஆனால் என்னை
நான் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புத்தான் பயன்படுகிறது;
அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதாலேயே, என் நிதர்சனக்
காட்சியைத் தருவதில்லை; ஆனால் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற
பிரதிபலிப்புகளைவிட இந்தப் பிரதிபலிப்பு ஒரளவு எனக்கு நிதானத்தைத்
தருகிறது.
3. எப்படி எழுதுகிறேன்? என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில்
சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடம் கிடைக்காத
எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால்
புளித்துவிட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த
நான், இப்போது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டி
ருக்கிறேன். குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத
பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி,
பகல் வேளை, மாலை, இந்தப் பரபரப்பை கழித்துத் தீர்க்க நான் எழுத
ஆரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறுகவிதையாக இருந்தால் ஒரே
இருப்பில் இருந்து எழுதிவிடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட
சிருஷ்டிவேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில்
சென்று நான் படுத்துக்கொள்வதும் உண்டு! பல ஆசிரியர்கள் கூறியபடி,
இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சனாக மாறி நின்று
பார்க்க முடிவதில்லை. நான் செய்ததை சீர்திருத்தச் சில சமயங்களில்
ஒரு கால இடை இடையீடு வேண்டிஇருக்கிறது. ஆங்கிலக் கவிஞன்
கூறியபடி சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக
மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது;
இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது.
4. கதைகளுக்குக் கரு எவ்வாறு அமைகிறது? ராமசாமி எழுதிய மாதிரி
அனுபவம் கண்ணாடிச் சில்; எழுதுவனின் திறமைதான் அதற்கு ரசப்பூச்சுப்
பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் என் மன
வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடிமனத்திலிருந்து
சிருஷ்டிப் பரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூர்ணத்
துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோவிலாசம் அனுபவம்
மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின் செழிப்புதான்.
5. ஒரு நோட்புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத்திறனை
சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில
சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று
கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்குமேல்
என்னால் எதுவும் செய்ய என்று தோன்றவில்லை. இவைகளைத்
திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பைக்கூடை
என்பதும், இந்தக் குப்பைக கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு
தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். 0
Monday, January 03, 2011
இவர்களது எழுத்துமுறை - 22.நாஞ்சில்நாடன்
1. சிறுகதையின் இலக்கணம், அழகு, சீர்மை, கலைவெளிப்பாடு, சமூகஅக்கறை,
தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம்,
கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில
உண்டு. மனிதநேயம், சொல்வதில் நேர்மை....நான் வரித்துக் கொண்ட
இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை தளர்வில்லை இன்றும் எனக்கு.
2. கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு
வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் எனும் தளகட தொடர்
ஓட்டத்தில் என்னாலும் சிறிது தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம்
தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதில்லை
என் ஆர்வம். ஓட்டம் தொடர்ந்து கொண்டிருகிறது என்பதிலும் ஜீவன்
வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு.
3. எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை
அல்ல; ஆத்மசோதனையோ சத்யசோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும்
முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!
4. எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால்
அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது
என் எதிர் பார்ப்பு.
5. பிறந்து வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, என்னுடைய
நேரடி அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை
ஒரு பகிர்தல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு
என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை
ஏற்பட்டது. இது சிறு வயதிலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால் அது
துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு
மேலும் தீவிரமாய் என்னால் எழுத முடிந்தது.
6. இந்த வடிவங்கள் உக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத்
தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்தோ,
எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில் தான் நான் தொடர்ந்து
சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும்
திகைத்து நின்றதில்லை. 0
தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம்,
கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில
உண்டு. மனிதநேயம், சொல்வதில் நேர்மை....நான் வரித்துக் கொண்ட
இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை தளர்வில்லை இன்றும் எனக்கு.
2. கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு
வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் எனும் தளகட தொடர்
ஓட்டத்தில் என்னாலும் சிறிது தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம்
தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதில்லை
என் ஆர்வம். ஓட்டம் தொடர்ந்து கொண்டிருகிறது என்பதிலும் ஜீவன்
வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு.
3. எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை
அல்ல; ஆத்மசோதனையோ சத்யசோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும்
முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!
4. எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால்
அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது
என் எதிர் பார்ப்பு.
5. பிறந்து வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, என்னுடைய
நேரடி அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை
ஒரு பகிர்தல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு
என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை
ஏற்பட்டது. இது சிறு வயதிலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால் அது
துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு
மேலும் தீவிரமாய் என்னால் எழுத முடிந்தது.
6. இந்த வடிவங்கள் உக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத்
தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்தோ,
எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில் தான் நான் தொடர்ந்து
சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும்
திகைத்து நின்றதில்லை. 0
Monday, December 27, 2010
இவர்களது எழுத்துமுறை - 21.நீல.பத்மநாபன்
1. 'ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை
ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது.
ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான
அறிவாற்றல் செழுமையில் திருப்தி அடைந்து விடுகிறோம்' என்று
ஜான் பரோஸ் குறிப்பிட்ட ஆத்மானந்தத்தை ஒரு எழுத்தாளன் என்ற
முறையில் என் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுயஉணர்தலும்
பயில்வதின் வழி நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
2. தப்போ, சரியோ தன்னிச்சையாக இயல்பாக என்னைச்சுற்றிய மனிதர்கள்
பேசும் பழமொழிகள், கொச்சைச் சொற்கள் கலந்த ஜீவத்துடிப்பான
மொழிநடைக்குப் பதிலாக ஒரு பொதுநிலை மொழியை என் அநாயசமான
எழுத்து முயற்சிக்குப் பயன்படுத்த என் அகம் துணியவில்லை. வளமையான
வக்கணையான நடையை நான் நாடவில்லை. எடுத்துக்கொண்ட கருத்தை
சுருக்கமாய் அழுத்தமாய் சொல்ல முயல்வதே என் பாணி. இவை எல்லாம்
என் தனித்தன்மை முன்னிலை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடைக்கு என்னை
இட்டுச் சென்றன.
3. எல்லா படைப்பு எழுத்தாளர்களையும் போல நானும் ஒரு முழுமைநாடி.
எனவே அசல் வாழ்வில் லட்சியத்துக்கும் நடப்பியலுக்கும் இடையே நிலவும்
முரண்பாடுகளையும் போராட்டங்களையும் கண்டுணர்ந்து எப்போதும்
அமைதியற்ற மனநிலைமை...இந்த மனநிலைதான் என் படைப்பாக்கத்தை,
கடந்த 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றத் தூண்டவும்
சீண்டவும் செய்து கொண்டிருக்கிறது.
4. நெகிழ்வாய் இருக்க வேண்டியுள்ளது. இறுக்கத்துக்கும் நெகிழ்வுக்குமான
யுத்தத்தில் செத்தொழிபவன் கலைஞன். என் எழுத்தில் நான் கொஞ்சம்
இருக்கலாம். முழுதும் நானல்ல. எழுதும்போது நான் நானல்ல. பேனா
பிடித்ததும் அவன் தேவதையாகி விடுகின்றான்.
5. ஒரு கலைஞனை - எழுத்தாளனைப் பொறுத்தவரையில் முதலாவதும்
முடிவாவதும் அவனது ஆன்ம பலம்தான் அவன் உந்து சக்தி. அன்றும்
இன்றும் விமர்சகர்களிடம் சிலரைப்போல் எனக்கு அலர்ஜி இல்லை. ஏன்
என்றால் நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை
விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன.
6. வாழ்க்கை என்னில் விளைவிக்கும் அனுபவத் தழும்புகள் என்னை
எழுதத் தூண்டும்போது நான் அறியாமல், எழுதும் பகைப்புலனுக்கு -
அட்மாஸ்பியருக்கு ஏற்ப ஒரு உருவம் அமைகிறது. எல்லா இஸம்களையும்
தன்னுள் அடக்கியாண்டு கலை அனுபவத்தை விளைவித்துக்கொண்டு,
நிலைத்து நிற்கும் வலு என் படைப்புகளுக்கு இருக்க வேண்டும்.
இல்லையேல் அவை செத்துவிடும். 0
ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது.
ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான
அறிவாற்றல் செழுமையில் திருப்தி அடைந்து விடுகிறோம்' என்று
ஜான் பரோஸ் குறிப்பிட்ட ஆத்மானந்தத்தை ஒரு எழுத்தாளன் என்ற
முறையில் என் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுயஉணர்தலும்
பயில்வதின் வழி நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
2. தப்போ, சரியோ தன்னிச்சையாக இயல்பாக என்னைச்சுற்றிய மனிதர்கள்
பேசும் பழமொழிகள், கொச்சைச் சொற்கள் கலந்த ஜீவத்துடிப்பான
மொழிநடைக்குப் பதிலாக ஒரு பொதுநிலை மொழியை என் அநாயசமான
எழுத்து முயற்சிக்குப் பயன்படுத்த என் அகம் துணியவில்லை. வளமையான
வக்கணையான நடையை நான் நாடவில்லை. எடுத்துக்கொண்ட கருத்தை
சுருக்கமாய் அழுத்தமாய் சொல்ல முயல்வதே என் பாணி. இவை எல்லாம்
என் தனித்தன்மை முன்னிலை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடைக்கு என்னை
இட்டுச் சென்றன.
3. எல்லா படைப்பு எழுத்தாளர்களையும் போல நானும் ஒரு முழுமைநாடி.
எனவே அசல் வாழ்வில் லட்சியத்துக்கும் நடப்பியலுக்கும் இடையே நிலவும்
முரண்பாடுகளையும் போராட்டங்களையும் கண்டுணர்ந்து எப்போதும்
அமைதியற்ற மனநிலைமை...இந்த மனநிலைதான் என் படைப்பாக்கத்தை,
கடந்த 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றத் தூண்டவும்
சீண்டவும் செய்து கொண்டிருக்கிறது.
4. நெகிழ்வாய் இருக்க வேண்டியுள்ளது. இறுக்கத்துக்கும் நெகிழ்வுக்குமான
யுத்தத்தில் செத்தொழிபவன் கலைஞன். என் எழுத்தில் நான் கொஞ்சம்
இருக்கலாம். முழுதும் நானல்ல. எழுதும்போது நான் நானல்ல. பேனா
பிடித்ததும் அவன் தேவதையாகி விடுகின்றான்.
5. ஒரு கலைஞனை - எழுத்தாளனைப் பொறுத்தவரையில் முதலாவதும்
முடிவாவதும் அவனது ஆன்ம பலம்தான் அவன் உந்து சக்தி. அன்றும்
இன்றும் விமர்சகர்களிடம் சிலரைப்போல் எனக்கு அலர்ஜி இல்லை. ஏன்
என்றால் நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை
விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன.
6. வாழ்க்கை என்னில் விளைவிக்கும் அனுபவத் தழும்புகள் என்னை
எழுதத் தூண்டும்போது நான் அறியாமல், எழுதும் பகைப்புலனுக்கு -
அட்மாஸ்பியருக்கு ஏற்ப ஒரு உருவம் அமைகிறது. எல்லா இஸம்களையும்
தன்னுள் அடக்கியாண்டு கலை அனுபவத்தை விளைவித்துக்கொண்டு,
நிலைத்து நிற்கும் வலு என் படைப்புகளுக்கு இருக்க வேண்டும்.
இல்லையேல் அவை செத்துவிடும். 0
Friday, December 24, 2010
இவர்களது எழுத்துமுறை - 20.பாலகுமாரன்
1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆரம்பிக்க
வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின்
உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச்
சுற்றி உள்ள என் சித்தி, அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரிகள்
போன்ற எல்லா பெண்களுமே ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு
வேதனைப்படுகிறவர்கள். இதற்கெல்லாம் புகலிடமாக வேறு வழி இல்லாமல்
இலக்கியத்தில் போய்ச் சேர்ந்தோனோ என்று தோன்றுகிறது. அதனால்
எனக்கு நானே வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு நல்ல அப்பாவைக்
கற்பனை செய்து கொள்வேன். எங்கம்மாவுக்கு வேறு ஒரு நல்ல அப்பாவைக
கல்யாணம் செய்துவைத்துப் பார்ப்பேன். இதனுடைய விளைவுதான் நான்
கதை எழுத ஆரம்பித்தது.
2. 'கசடதபற'வில் சேர்ந்தபோது இலக்கியம் கற்க வேண்டும் என்ற,
நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னை
அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருந்தது.
என் பேரு எப்படியாவது வெளியே வர வேண்டும். அதுவே எனக்கு
முக்கியமாய் இருந்தது அப்போது!
3. பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை. நான் எழுதுவது ஜனங்களுக்குப்
பிடித்திருக்கிறது. அதே சமயம் நான் என்ன எழுத வேண்டும் என்று
விரும்புகிறேனோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படி எழுதக்கூடாது
என்பதைக் 'கசடதபற'வில் கற்றுக்கொண்டேன்.
4. நாவல் எழுதும் பிராயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பெரிய பனிக்கட்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த பனிக்கட்டி
என் நாவல் மூலம் உடைய வேண்டும் என்று எண்ணினேன். ஆண்களைக்
கண்டு அச்சப்படும் பெண்கள். பெண்களைத் துச்சமாக மதிக்கும் ஆண்கள்.
இவர்கள் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் இந்த தேசத்தில் எந்த
யோக்கியதையுமற்று நல்ல அரசியலோ, நல்ல கலை இலக்கியமோ, நல்ல
வாழ்கையோ, நல்ல மதமோ கொள்ள முடியாமல் வீரியமில்லாத
வித்துக்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் நாவல் இந்த ஒரு விஷயத்தைப்
பற்றித்தான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
5. எனக்குக் கிராமம் அதிகமாகத் தெரியாது. எனக்கு என்ன தெரிந்ததோ
அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைத் தவிரவும் என்னுடைய
கதையை இந்த மத்தியதர வர்க்கத்து நகர்ப்புற குடும்பங்கள்தான் அதிகம்
படிக்கின்றன. யார் என்னைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
6. திருப்தி என்பது மனதுக்கு ஏற்பட்டால் காரியம் நின்றுவிடும். என்
எந்த ஒரு நாவலும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான்
உண்மை. எந்த நூலையும் திரும்பப் படிக்கும்போதும் இன்னும் நன்றாகச்
செய்திருக்கலாமே என்று நினைக்கிறேன். ஆனால் எந்த ஒரு நாவலையும்
நான் ஆன்ம ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். I am a very sincere and
a very hard worker. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நான்
ஒரு வெறியனைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். 0
வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின்
உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச்
சுற்றி உள்ள என் சித்தி, அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரிகள்
போன்ற எல்லா பெண்களுமே ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு
வேதனைப்படுகிறவர்கள். இதற்கெல்லாம் புகலிடமாக வேறு வழி இல்லாமல்
இலக்கியத்தில் போய்ச் சேர்ந்தோனோ என்று தோன்றுகிறது. அதனால்
எனக்கு நானே வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு நல்ல அப்பாவைக்
கற்பனை செய்து கொள்வேன். எங்கம்மாவுக்கு வேறு ஒரு நல்ல அப்பாவைக
கல்யாணம் செய்துவைத்துப் பார்ப்பேன். இதனுடைய விளைவுதான் நான்
கதை எழுத ஆரம்பித்தது.
2. 'கசடதபற'வில் சேர்ந்தபோது இலக்கியம் கற்க வேண்டும் என்ற,
நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னை
அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருந்தது.
என் பேரு எப்படியாவது வெளியே வர வேண்டும். அதுவே எனக்கு
முக்கியமாய் இருந்தது அப்போது!
3. பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை. நான் எழுதுவது ஜனங்களுக்குப்
பிடித்திருக்கிறது. அதே சமயம் நான் என்ன எழுத வேண்டும் என்று
விரும்புகிறேனோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படி எழுதக்கூடாது
என்பதைக் 'கசடதபற'வில் கற்றுக்கொண்டேன்.
4. நாவல் எழுதும் பிராயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பெரிய பனிக்கட்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த பனிக்கட்டி
என் நாவல் மூலம் உடைய வேண்டும் என்று எண்ணினேன். ஆண்களைக்
கண்டு அச்சப்படும் பெண்கள். பெண்களைத் துச்சமாக மதிக்கும் ஆண்கள்.
இவர்கள் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் இந்த தேசத்தில் எந்த
யோக்கியதையுமற்று நல்ல அரசியலோ, நல்ல கலை இலக்கியமோ, நல்ல
வாழ்கையோ, நல்ல மதமோ கொள்ள முடியாமல் வீரியமில்லாத
வித்துக்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் நாவல் இந்த ஒரு விஷயத்தைப்
பற்றித்தான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.
5. எனக்குக் கிராமம் அதிகமாகத் தெரியாது. எனக்கு என்ன தெரிந்ததோ
அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைத் தவிரவும் என்னுடைய
கதையை இந்த மத்தியதர வர்க்கத்து நகர்ப்புற குடும்பங்கள்தான் அதிகம்
படிக்கின்றன. யார் என்னைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
6. திருப்தி என்பது மனதுக்கு ஏற்பட்டால் காரியம் நின்றுவிடும். என்
எந்த ஒரு நாவலும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான்
உண்மை. எந்த நூலையும் திரும்பப் படிக்கும்போதும் இன்னும் நன்றாகச்
செய்திருக்கலாமே என்று நினைக்கிறேன். ஆனால் எந்த ஒரு நாவலையும்
நான் ஆன்ம ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். I am a very sincere and
a very hard worker. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நான்
ஒரு வெறியனைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். 0
Monday, December 13, 2010
இவர்களது எழுத்துமுறை -19.வல்லிக்கண்ணன்
1.எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற துடிப்போடுதான் நான் எழுதினேன்.
எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற
நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.
2. எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை
ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிகு வெற்றியாகத்
தோன்றியது. 'எழுத்து எனக்குச் சோறு போடுமா? வாக்கை வசதிகள் பெற்றுத்
தருமா? பகட்டான உலகத்திலே படாடோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு
கருவியாகப் பயன்படுமா?' என்று நான் யோசிக்கவே இல்லை.
3. எழுத்தை தொழில் (profession) ஆகக் கொண்டிருந்தால் நான் எழுதிய -
எழுதுகிற விஷயங்களே வேறுவேறாக இருந்திருக்கும். படிப்பதும் எழுதுவதும்
எனக்குத் தொழில் இல்லை. அதுவே என் வாழ்க்கை.
4. முதலில் நான் வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். படிப்பது எனக்குப்
பொழுதுபோக்கு அன்று; எழுதுவது எனக்கு வேலையும் இல்லை. படிப்பது -
எழுதுவது - ஊர்சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வகுத்துக்
கொண்டவன் நான். 'ஊருக்கு நல்லநு சொல்வேன். உண்மை தெரிந்து
சொல்வேன்' என்ற வாக்குத்தான் எனது நோக்கும் போக்கும் ஆகும்.
5. என் எழுத்துக்களை யார் யார் படிக்கிறார்கள், எப்படி வரவேற்கிறார்கள்
என்று அறிய நான் கவலைப்படுவதே இல்லை. 'நான் இப்படி எழுதி
இருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்தீர்களா?' என்று எவரிடமும் நான்
கேட்பதுமில்லை. எழுத வேண்டியவற்றை எழுதுகிறேன். படிக்க விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவர்கள் படிக்கட்டும்; அல்லது படிக்காமலே ஒதுக்கி
விடட்டும்; அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?
6. நான்ன ஏன் எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள
வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. 'ஏன் எழுதவேண்டும் என்ற
விரக்தியும் எனக்கு ஏறபடவில்லை. மாறாக 'ஐயோ எழுத நேரம் இல்லையே,
வசதிகள் போதுமானபடி இல்லையே, தான் இன்னும் எவ்வளவோ எழுதியாக
வேண்டுமே, நான் எழுத ஆசைப்படுகிறவற்றுள் - எழுத வேண்டும் என்று
திட்டமிட்டிருப்பனவற்றுள் அரைவாசி கூட இன்னும் எழுதப்படவில்லையே!'
என்ற வேதனைதான் என்னை வருத்துகிறது. 0
எழுதிப் பணம் பெற்று, பிழைப்பு நடத்த வேண்டும் - நடத்த முடியும் - என்ற
நோக்கத்தோடு நான் எழுதத் தொடங்கியதில்லை; இன்றும் எழுதவுமில்லை.
2. எழுத்து என்னை வசீகரித்தது. அதனிடம் நான் ஆட்பட்டேன். அதை
ஆளும் ஆற்றலும் பெற்றேன். அதுவே எனக்கு மாண்புமிகு வெற்றியாகத்
தோன்றியது. 'எழுத்து எனக்குச் சோறு போடுமா? வாக்கை வசதிகள் பெற்றுத்
தருமா? பகட்டான உலகத்திலே படாடோபமாக வாழ்வதற்கு எழுத்து ஒரு
கருவியாகப் பயன்படுமா?' என்று நான் யோசிக்கவே இல்லை.
3. எழுத்தை தொழில் (profession) ஆகக் கொண்டிருந்தால் நான் எழுதிய -
எழுதுகிற விஷயங்களே வேறுவேறாக இருந்திருக்கும். படிப்பதும் எழுதுவதும்
எனக்குத் தொழில் இல்லை. அதுவே என் வாழ்க்கை.
4. முதலில் நான் வாசகன்; அப்புறம்தான் எழுத்தாளன். படிப்பது எனக்குப்
பொழுதுபோக்கு அன்று; எழுதுவது எனக்கு வேலையும் இல்லை. படிப்பது -
எழுதுவது - ஊர்சுற்றுவது என்பதை ஒரு வாழ்க்கை முறையாகவே வகுத்துக்
கொண்டவன் நான். 'ஊருக்கு நல்லநு சொல்வேன். உண்மை தெரிந்து
சொல்வேன்' என்ற வாக்குத்தான் எனது நோக்கும் போக்கும் ஆகும்.
5. என் எழுத்துக்களை யார் யார் படிக்கிறார்கள், எப்படி வரவேற்கிறார்கள்
என்று அறிய நான் கவலைப்படுவதே இல்லை. 'நான் இப்படி எழுதி
இருக்கிறேனே அதைப் படித்துப் பார்த்தீர்களா?' என்று எவரிடமும் நான்
கேட்பதுமில்லை. எழுத வேண்டியவற்றை எழுதுகிறேன். படிக்க விருப்பமும்
வாய்ப்பும் இருக்கிறவர்கள் படிக்கட்டும்; அல்லது படிக்காமலே ஒதுக்கி
விடட்டும்; அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?
6. நான்ன ஏன் எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள
வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. 'ஏன் எழுதவேண்டும் என்ற
விரக்தியும் எனக்கு ஏறபடவில்லை. மாறாக 'ஐயோ எழுத நேரம் இல்லையே,
வசதிகள் போதுமானபடி இல்லையே, தான் இன்னும் எவ்வளவோ எழுதியாக
வேண்டுமே, நான் எழுத ஆசைப்படுகிறவற்றுள் - எழுத வேண்டும் என்று
திட்டமிட்டிருப்பனவற்றுள் அரைவாசி கூட இன்னும் எழுதப்படவில்லையே!'
என்ற வேதனைதான் என்னை வருத்துகிறது. 0
Subscribe to:
Posts (Atom)
