Sunday, September 28, 2008

எழுத்துகலைபற்றி இவர்கள் - 30.விந்தன்

1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது உறங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்க¨ளை, அந்த மனிதாபிமானத்துக்கு விரோதமாயிருக்கும் - இருந்து வருகின்ற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் கதைகளை.....எழுதவேண்டும். இதுவே என் எண்ணம்.

2. எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்
என்பது நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துடுக் கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?

3. கதைகள் வாழும் மக்களைப்பற்றி எழுத வேண்டும். அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும்
துன்ப துயரங்களைப்பற்றி எழுத வேண்டும். மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்களைப்பற்றி எழுதி, படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி செய்ய வேண்டும்.

4. 'மனிதன்' - ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

5. 'நாவல் எப்படிப் பிறக்கிறது?' என்னைப் பொறுத்தவரை ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது.

6. இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை. வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கிறது.
கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டு. - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29.பி.எஸ்.ராமையா.

1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம்.

2. கதை என்று பொதுவாகச் சொன்னால் அதில் எல்லாக் கதைகளும் அடங்கிவிடும்.
சிறுகதை என்று சொன்னால் அதில் குறிப்பிட்ட இலக்கணங்கள் கொண்ட கதைகள் மட்டும்தான் அடங்க முடியும். அதாவது சிறுகதைக்கு ஒரு இலக்கணம் உண்டு.

3. சிறுகதைக்குத் தாய்ச்சரக்கு மனிதமனம் அல்லது உண்மை தான். மனிதமனப்
போக்குகள் அவற்றிற்கு ஆதாரமான உள்ளத்து உணர்ச்சிகள் இவற்றை மின்வெட்டுக்கள்போல எடுத்துக்காட்டுவதுதான் சிறுகதை.

4. கடல் போன்ற வாழ்க்கையில் ஒரு தனிமனித நிலையை, மனப்போக்கை ஒரு உணர்ச்சிவேகத்தை, அழகாக எடுத்துக்காடுவதுதான் சிறுகதை. நமது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளில் அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப சிக்கி, உழன்று, அந்த நெருக்கடி ஓட்டத்தில் ஒரு சிறு நிகழ்ச்சியில் நம் கவனத்தை ஊன்றி வைத்து, அதன் காரண - காரிய தொடர்புகளை அலசிப் பார்த்து அடையும் அனுபவத்தை, பக்குவமாக, தேவையற்ற விவரங்களை வடிகட்டி ஒதுக்கிவிட்டு, சுண்டவைத்த கஷாயம்போல, சாரத்தை சுவையாகவும், கவர்ச்சிகரமாகவும் கொடுப்பதுதான் சிறுகதை.

5. ஒரு நல்ல உயர்ந்த சிறுகதையைப் படித்ததும் படிப்பவர் உள்ளம் உயர வேண்டும்.

6. மனிதனது வாழ்வில் பிறப்பும், வாழ்வும், இறப்பும் அவனைக் கட்டுப்படுத்தி விடுகின்றன.
அந்தக் கட்டுப்பாட்டை மீற, அவன் செய்யும் முயற்சிக¨ளையும், போராட்டங்களையும் அவற்றில் அவன் அடையும் வெற்றி தோல்விகளையும் எடுத்துகாட்ட முயல்வதுதான் சிறுகதை.

7. ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது லட்சியத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டாலும் அந்தக் கொள்கையிலும் லட்சியத்திலும் உண்மையின் பலம் இருக்க வேண்டும்.

8. சிறுகதையில் தொட்டுக் காட்டப்படும் மனநிலை குறுகிய, தற்காலிகமான தடைகளால் ஏற்படும் அனுபவங்களாக இருக்கக் கூடாது.

9. சமூக அநீதிகளை எதிர்த்து, திமிறி எழுந்து நியாயம் கிடைக்கச் செய்யக்கூடியதான மனோபாவம் வெளிப்படுத்தும் சிறுகதைகள் அமைக்கப்பட வேண்டும்.

10. சிறுகதைகளுக்குச் சுருக்கம் எழுத முடியாது, எழுதக் கூடாது. சிறுகதையில் ஒரு வரி விட்டுச் சொன்னால் கூட அதன் அழகு மூளியாகிவிடும். அது ஒரு வார்ப்பு.

Tuesday, September 23, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28..மாப்பசான்.

1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளிலும் எப்போதும் ரகசியம் பதுங்கிக் கிடக்கிறது.

2. மக்கள் கூட்டம் பலசுவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அவர்கள் நம்மை வேண்டிக் கேட்பவை இப்படி இருக்கின்றன:

"எனக்கு ஆறுதல் கொடு"
"என்னை மகிழ்ச்சிப்படுத்து"
"சோகத்தின் பிடியில் என்னைச் சிக்கவிடு"
"என் நெஞ்ச உணர்ச்சியைத் தொடு"
"என்னைக் கனவுலகத்திலே மிதக்க விடு"
"என்னக் கெக்கலி கொட்டிச் சிரிக்க வை"
"என்னை அச்சுறுத்து"
"என்னை அழ வை"
"என்னைச் சிந்திக்க வை".

3. இவற்றைத் தவிர ஏதோ மிகச் சிலர் இன்னொன்றைக் கூறுகிறார்கள்: "கலைஞனே! உனக்குப் பிடித்த முறையிலே - உன் உணர்ச்சி வெள்ளத்திற்கு இயைந்த வகையிலே எதையாவது நல்லதைக் கொடு" என்பதுதான். கலைஞன் இதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறான்; வெற்றி பெறுகிறான்; அல்லது தோற்றுத் தொலைகிறான்.

4. சிறுகதை என்பது ஒரு கெட்டுப் போன கலைக்குழந்தை.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- .27.லியோ டால்ஸ்டாய்.

எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)


























எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)



























எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)







































1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது சிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது
அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக 'டெக்னிக்'.
முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்' என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு
பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி
செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து
குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில்
வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.