Saturday, December 20, 2008

'வண்ணநிலவனி'ன் கடல்புரத்தில் - ஒரு பார்வை

கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த 'தகழி'யின் 'செம்மீன்' நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் 'வண்ணநிலவனி'ன் 'கடல்புரத்தில்' நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். 'செம்மீனை'ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்
ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் நெஞ்சை உருக்குவதாகவும், நீண்ட நாட்கள் நெஞ்சில் அகலாமல் நிலைபெற்று நிற்பதாவும் உள்ளது.

'தலித்தியம்', 'பெண்ணியம்' ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுத
முடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

நாவலின் அடிநாதம் அன்புதான். 'மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான்
இருக்கிறது' என்பதுதான் இந்த நாவலின் மூலம் அவர் சொல்லும் செய்தி எனலாம்.

கதை மெதுவாக, அவரைப் போலவே ஆரவாரமின்றி - ஆரம்பிக்கிறது. எல்லா இடங்களிலும் காலம் காலமாய் பூர்வீக சொத்தை விற்பதில் அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படுகிற உரசலோடு கதை தொடங்குகிறது. அப்பா குரூஸ் தன் பரம்பரைத் தொழிலான மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, நகரத்தில் ஆசிரியராக வேலை செய்யும் மகன் செபஸ்தியுடன் செல்ல விரும்பவில்லை. அவன் சொல்கிறபடி பரம்பரைச் சொத்தான வள்ளத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு நகரத்தில் கடை வைத்துப் பிழைக்க மறுக்கிறான். அம்மா மரியம்மைக்கும் அவளது சினேகிதனான
வாத்தியைவிட்டு இடம் பெயர விரும்பவில்லை. தங்கை பிலோமிக்குட்டிக்கு அவளது
காதலன் சாமிதாஸோடு அங்கேயே தங்குவதற்குத்தான் விருப்பம். இதில் கசப்பும் மறுப்பும் அதிகமிருப்பினும் அவர்களுக்குள்ளான உறவு கசந்து விடுவதில்லை. நிறைய ஏமாற்றங்களும் இழப்புகளும் ஏற்படுகின்றன. சாமிதாஸிடம் தன்னை இழந்த பிலோமி அவன் வேறு திருமணம் செய்ததும் ஏமாற்றத்துக்குள்ளாகிறாள். அவளது அம்மா
மரியம்மை அதிகம் குடித்துவிட்டு இடறி விழுந்து இறக்கிறாள். மனைவியின் இழப்போடு, படகுக்காரர்களுக்கும் லாஞ்சுக்காரர்களுக்கும் எழும் பிரச்சினையால் மேலும் அங்கே தங்கி தொழிலை நடத்த முடியாத நிலையைப் புரிந்து கொண்ட குரூஸ், வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் செல்ல முடிவு செய்கிறான். ஆனால் வீட்டையும் வள்ளத்தையும் விற்றதிலும் ஏமாற்றம் ஏற்படுகிறது. புத்தி பிறழ்ந்தவனாய் குடித்துவிட்டுத் திண்ணையில் எப்போதும் விழுந்து கிடக்கிறான். பிலோமி சாமிதாஸின் துரோகத்தை
நினைத்து மறுகாமல், ஆதரவு காட்டிய அம்மாவின் சினேகிதன் வாத்தியின் வீட்டிலேயே தன் நினைவுகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள் என்பதாகக் கதை முடிகிறது.

வண்ணநிலவனின் கதைகளிலும் நாவல்களிலும் வரும் மாந்தர்கள் மறக்க முடியாதவர்கள். சா.கந்தசாமி குறிப்பிடுவதைப் போல் 'இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாகவே நம் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்'. படித்த பின்னும்
நம் நெஞ்சைவிட்டு இறங்க மறுப்பவர்கள். அவரது பாத்திரப்படைப்பு அத்தகையது. இந்த நாவலிலும் அப்படி நம் நினைவில் நீங்கா இடம் பெறுபவர்கள் நாவலின் மையப்பாத்திரமான பிலோமிக்குட்டியும் அவளது அப்பா குரூஸ், அம்மா மரியம்மை, அவளது சினேகிதன் வாத்தி ஆகியோர்.

வண்ணநிலவன் படைக்கும் பெண்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களது ஏமாற்றங்கள் நம்மையும் வருத்துபவை. ஆனால் அவர்கள் அதை இயல்பாய் எடுத்துக் கொள்பவர்களாக, வாழ்க்கையின யதார்த்தத்தை அதிர்ச்சி இன்றி ஏற்றுக்
கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாவலில் வரும் பிலோமிக்குட்டி ஒரு அற்புதமான பாத்திரம். முதலில் அவளது மனித நேயத்தைக் குறிப்பிட வேண்டும். பரதவப் பெண்களின் பாவப்பட்ட
வாழ்க்கையை எண்ணி அவள் வருந்துகிறாள். பரிதாபத்துக்குரிய பெண் கேதரின் அவளது கணவனால் தினமும் அடித்துக் கொடுமைப் படுத்தப்படுவதை, அவளது பெண்மை அவமதிக்கப்படுவதை - காணும்போது, 'இது எவ்வளவு பெரிய கொடுமை. இதையெல்லாம் அழிக்க முடியாமல் கடலம்மை பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கிறாள்?' என்று மறுகுகிறாள். அடுத்து அனைவரிடமும் அவள் காட்டும் நேசம். குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டு பிரிய மறுக்கின்றன. சிநேகிதிகளிடம் அவள் காட்டும் பிரியங்களும், அக்கறைகளும் பலனை எதிர்பாராதவை. அண்ணனால் வஞ்சிக் கப்பட்ட ரஞ்சியிடம் அவள் கொண்டுள்ள நட்பும், அவளது பிரசவத்துக்கு அருகிருந்து உதவுவதும் அவளது நேசத்துக்கு இன்னொரு சான்று. வாத்தியிடம் உறவு வைத்துக் கொண்டிருந்த அவளது அம்மாவையும் அவளால் நேசிக்க முடிகிறது. வாத்தியைப்
புரிந்து கொண்டு அவர் காட்டும் புதிரான அன்பை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
காதலன் சாமிதாஸைக் காண்பதே பெரிய இன்பமாகக் கருதும் அவள் அவனுடன் தனக்குத் திருமணம் நடக்காது என்று தெரிந்தவுடன் அதற்காக அதிர்ந்து போகாமல் அவனோடு உடலுறவு கொண்டதையே போதும் எனக் கொண்டு எல்லா இன்பங்களை யும் கண்டு தெளிந்தவளாகி விடுகிறாள். நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடம் இல்லை என்பதை அவள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாள். வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே உணர முடிந்தது அவளால். வாழ்க்கை சந்தோஷமானதாக இல்லாவிட்டாலும் அது சந்தோஷமானதுதான் என்று நம்புவதற்குத் தயாராகி விட்டாள். அதன் பிறகு அவளது உலகம் எல்லோரையும் நேசிக்கும் உலகமாகி விடுகிறது.

பிலோமிக்குட்டியின் அப்பா குரூஸ் மிக்கேலுக்கு கடல் அம்மையும் அதன் மச்சங்களும்தான் விசுவாசிகள். அவனது பிழைப்புக்கு உதவும் வள்ளம் அவன் அப்பன்
காலத்தது. அந்தமாதிரி ஜாதி மரமே கிடைக்காது என்பது அவனது தீர்மானமான எண்ணம். அந்த வள்ளம் தந்த மச்சங்களைக் கொண்டுதான் அவன் மகன் செபாஸ்தி
யான் படித்து வாத்தி வேலைக்குப் போனான். அந்த நன்றி விசுவாசமில்லாமல் அந்தப் பரம்பரைச் சொத்தை விற்கும்படி மகன் மல்லுக்கு நிற்பதை அவனால் சகித்துக்
கொள்ள முடியவில்லை. தான் பிறந்த மணப்பாடு வீட்டை விட்டுவிட்டு மகனுடன்
நகரத்துக்குப் போக அவனுக்க விருப்பமில்லை. மணப்பாட்டுக் கோயில் கல்லறைத்
தோட்டத்தில்தான் அவனது பிணத்தை அடக்கம் செய்யவேண்டும் என்பதில் அவன்
பிடிவாதமாக இருந்தான். பிறந்த மண்ணின்மீதான அவனது பாசம் அப்படி. மனைவி
மரியம்மையிடம் அளவுகடந்த ஆசை கொண்டிருந்தான். ஆனால், அவள் அவனுக்குத் துரோகம் செய்யாதுபோனாலும் வாத்தியோடு சினேகம் வைத்திருப்பதில் அவனுக்கு வெறுப்பு. சமயத் தில் அதற்காக அவளை அடித்து நொறுக்கி இருக்கிறான். ஆனாலும் அவளை ஒருநாளும் ஒதுக்க அவனால் முடியவில்லை. அவள் அதிகம் குடித்து விட்டு இடறி விழுந்து இறந்த போது அவனுக்குத் தாளவில்லை. அவன் அதிகமும் பாசம் வைத்திருந்த மகள் பிலோமியின் கல்யாணம் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் அதை அவன் நிறைவேற்று முன் லாஞ்சிக்காரர்களுக்கும் படகுக்காரர்களுக்கும் ஏற்பட்ட
மோதலில் உயிர்ப்பலி விழவும் அவனுக்கு இனி அங்கு வாழ்க்கை சாத்தியமில்லை என உணர்ந்து தான் பிரிய மறுத்த வீட்டையும் வள்ளத்தையும் விற்றுவிட்டு மகனுடன் போக முடிவு செய்தபோது, வாங்கியவர்கள் பணம் தராது ஏமாற்றிவிட மனம் பிறழ்ந்தவனாய் மகளுக்குப் பாரமாகிப் போகிறான்.

மரியம்மையும், நாவலில் கொஞ்சமே வந்தாலும் மறக்க முடியாதவள். அவள் கணவனுக்குத் துரோகம் செய்யவில்லை என்றாலும் அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத வாத்தியுடனான உறவை அவள் சாகும்வரை விடவில்லை. 'அவளது ஆசைகள் என்ன
தான் என்று குரூஸ் அறியான். ஒருவேளை இதுபற்றி அவளுடைய வாத்திக்குத் தெரிந்திருக்கலாம்'. அவளுக்கு, நகரத்துப் பெண்கள் மாதிரி புதுப்புது உடைகள் உடுத்தி
சிங்காரித்துக் கொண்டு கோயிலுக்கும், கடைகண்ணிக்கும் சினிமாவுக்கும் போவதை
விட்டுவிட்டு நாத்தம் பிடித்த மீன்களைத் தொட்டுக்கொண்டிருப்பதா என்று ஆதங்கம். அதனால் மகனுடன் நகரத்துக்குச் செல்லவே விரும்புகிறாள். 'அவளது மரணம்தான் அவள் மீது மற்றவர்கள் கொண்டிருந்த பிரியத்தைக் காட்டிக் கொடுத்தது. அவள் இருந்தவரைக்கும், தன்னை யாருக்கும் பிடிக்காது வாத்தியைத் தவிர என்றுதான்
நினைத்திருந்தாள்'. குரூஸ் அவளது மரணத்தால் எவ்வளவு சோகமுற்றான் என்பது அவளுக்குத் தெரியாது. 'எனக்கு இந்த மண்ணுல இனிமே என்ன ஒறவு இருக்கு? அவளே போய்ட்டா...' என்று உண்ணாமல், கடலுக்குப் போகாமல் நிறையக் குடித்து
விட்டு துக்கத்தை மறக்க முயன்றான். 'அவளைக் கொடுமைக்காரி என்று அவன் ஒரு
நாளும் நினைத்தில்லை. அவளுக்கென்று ஒருஅழகு இருந்தது. அது அவளுடைய உடம்புதான். அவளுடைய மடியில் தலைசாய்த்துக் கிடந்தால் போதும், எந்த புருஷனுக்கும் மனசில் வீரமும் விவேகமும் விளையும். அவள் ஒரு அதிசயமான பறைச்சி' என்பதுதான் அவனது எண்ணம். பாவம் மரியம்மை! குரூஸ் அவள்மீது உள்ளுர அத்தனை பிரியமாய் இருந்ததை அறியாமலே போய்விட்டாள்.

முக்கிய பாத்திரந்தான் என்றில்லை - மரியம்மையின் சிநேகிதனான வாத்தி,
பிலோமியின் தோழி ரஞ்சி, கடற்கரையில் எது நடந்தாலும் சாட்சியாய் இருக்கிற தையல் வேலைக்காரி பெரிய மாமியா, எல்லோருக்கும் பிரியமான. மணப்பாட்டு
மக்களால் சேசுவுக்கு இணையாய் மதிக்கப்படுகிற கிராமத்தின் மூத்த ஜீவன் பவுலுப்
பாட்டா, கடன் கொடுத்து வாங்கினாலும் அனுசரணையுடன் பரதவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் மீன் தரகர் - எல்லோருமே கொஞ்ச நேரமே கதையில் வந்து போனாலும் மறக்க முடியாதவர்கள். வண்ணநிலவனின் பாத்திரப் படைப்புத் திறன் அப்படி.

மனிதர்கள் மட்டுமல்ல - கடலும் அதில் மிதக்கும் வள்ளங்களும், அங்கு
நடக்கும் பண்டிகைகளும்கூட வண்ணநிலவனின் கைவண்ணத்தால் நம்மால் மறக்க முடியாத இடத்தைப் பிடித்து விடுகின்றன. 'வள்ளம் ஒரு ஜீவனுள்ள சாட்சி. அது
பேசாது. அது சொல்லுகிற கதைகளைக் கேட்டால் பறைக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வள்ளங்களுக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், தங்களுடைய எஜமான் களுடைய நன்மையைக் கருதி பேசாமலிருக்கின்றன' என்று ஏதோ உயிருள்ள ஜீவனைப் போல வள்ளங்களைக் காட்சிப் படுத்துகிறார்.

கடல் அவர்களுக்கு தாய். கடலன்னையை அவர்களுடைய சேசுவுக்கும்
மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். பரதவக்குடி முழுதும் அவளது பிரியத்துக்
குரியவர்கள். 'அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய
வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது
கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்
தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு,
வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்கள் ஒழுக்கங்கள் சீரானதில்லைதான். ஆனால் கடலம்மை அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவளுடைய பிள்ளைகளின் மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு'. கடல் பற்றிய இத்தகைய
சித்திரத்தினூடே பரதவர் வாழ்க்கைமுறைகளையும் நம்பிக்கைகளையும் நமக்குச்
சொல்லுகிறார்.

இன்னும் 'நீர்க்காக்கைகள் கூட்டமாய் வலமிருந்து இடமாகப் பறந்து
போனால் கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை, மணப்பாடுக் கிராமத்துக் கோயில் மணி யாராவது இறந்து போனால் அவரது வயதின் எண்ணிகைக்கேற்ப அத்தனை முறை
ஒலிப்பது போன்ற எத்தனையோ தகவல்கள்! எல்லாமும் நமக்கு அலுக்க வில்லை.

தல வருணனைகளும், இயற்கை வருணனைகளும் நெஞ்சுக்கு இதமாய்
வாசிக்கச் சுகமாய் உள்ளன. உதாரணத்துக்கு: 'கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக
மேகங்கள் மேற்கே சென்று கொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல
வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது'; 'இப்போது வெயிலைக் கண்டு மஞ்சு விலக ஆரம்பித்திருந்தது. குச்சியால் கலக்கி விட்டது போல, திட்டுத்திட்டாய்
கலங்கிப் போய்க் கொண்டிருந்தது மஞ்சு'; 'வானத்தைப் பார்த்தாள். நிலவுத் துண்டு
மேகங்களினூடே நடந்து கொண்டிருந்தது.'

வண்ணநிலவனின் வெற்றிக்கு அவரது லகுவான, சிக்கலில்லாத எழுத்து
நடையும் ஒரு காரணம். மென்மையும் குளுமையும் உயிர்த்துடிப்பும் கொண்டது அவரது மொழிநடை. கடல்புரத்து ரசமான வட்டார மொழியும் வெகு இயல்பாக, நமக்கு முன்பே பரிச்சயமானது போல அமைந்துள்ளது. 'குரலை உயர்த்தாமல் கதை சொல்லும் பாங்கும், துல்லியமான விவரணைகளும் கச்சிதமான கதை வடிவமும் அவருக்கென்றே அமைந்தவை. அவர் எழுதியது குறைவுதான். ஆனால் அவை காட்டும் உலகம் மிகப் பெரியதும் மாறுபட்ட மனவெழுச்சிகளும் நுட்பங்களும் கொண்டவை. தான் வாழும்
காலத்தின் கலாச்சார மாற்றங்களுக்கான எதிர்க் குரலைப் பதிவு செய்துள்ள பெருங்கலைஞன் அவர்' என்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்த நாவல் எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவரது மற்ற படைப்புகளைப் போலவே இன்றைக்கும் வாசகர்களோடு அந்தரங்கமாய்ப் பேசிக்
கொண்டும் வாழ்வின் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டும் இருப்பதுதான் வண்ண
நிலவனின் சிறப்பு. இன்னும் பலகாலத்துக்கும் சிறந்த நாவலாகப் பேசப்படுவதாக
இது நிலைத்து நிற்கும்.

----- 0 ----

Sunday, November 16, 2008

நினைவுத்தடங்கள் - 39

பின்னாளில் எனக்கு நாடகக்கலையில் ஆர்வம் குறைந்து போனது
என்றாலும் இளமையில் நான் பார்க்க நேர்ந்த உள்ளூர், வெளியூர் தெருக்கூத்துகள்,
நாடகங்கள் தந்த ரசனையால் அக்கலையில் ஒரு மோகம் இருந்தது. அதன்
காரணமாய் எங்கள் கிராமத்து இளைஞர்கள் நாடகம் கற்றுக்கொண்ட போது
அவர்களுக்காக சில காட்சிகளை எழுதவும், கல்லூரி நாட்களில் விடுதி விழாக்
களுக்காக வானொலி நாடகங்கள் எழுதவும் நேர்ந்தது.

ஒரு டிசம்பர் விடுமுறையில் நான் ஊர் வந்திருந்தபோதுதான் ஆர்வ
மிகுந்த சில இளைஞர்கள் நாடகக்குழு ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். எங்கள்
எதிர் வீட்டுக்காரர் - நடுத்தர வயதைக் கடந்தவர் - ஒருவர்தான் அமைப்பாளர்,
வழிகாட்டி. அவர் எங்கு நாடகமோ, தெருக்கூத்தோ, டெண்ட் கொட்டகை
சினிமாவோ நடந்தாலும் அவற்றைத் தவறாது பார்த்துவிட்டு வந்து வசனம்,
பாடல்கள், நடிப்பு எல்லாவற்றையும் அச்சு அசலாய் ஊர் விடலைப் பையன்
களுக்குச் சொல்லிக் காட்டியவர். அதனால் அவர் பொறுப்பில் எல்லாவற்றையும்
விட்டிருந்தார்கள்.

'சிறுத்தொண்ட நாயனார்' கதை முதல் நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாடக வாத்தியாரையும் எங்கிருந்தோ அழைத்து வந்திருந்தார்கள். அவர்
தோற்றத்தில் நாடக ராஜபார்ட் போல பாகவதர் கிராப்புடன் இருந்தாலும் ஆசாமி
படுகிழம் என்பதில் இளைஞர்களுக்கு அவரிடம் நம்பிக்கை எழவில்லை. ஆனால்
அமைப்பாளர் அவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை நாடக சபாவில் நடிகர்களுக்கு வெகுகாலம் பயிற்சியளிப்பவராக இருந்தவர் என்றும் முதுமையால் அதிலிருந்து
விலகி விட்டதாவும் அவர் மிகுந்த அனுபவசாலி என்றும் சொல்லி அவர்களைச்
சமாதானப் படுத்தினார். ஆனாலும் அவர் சிவாஜிகனேசன், எம்.ஜி.ஆர் போன்றவர்
களுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக் கொடுத்திருப்பதாகச் சொன்னதை மட்டும்
அவர்கள் நம்பவில்லை. ஆனால் அப்புறம் சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜிகணே
சனின் மகளின் திருமண அழைப்பு அவருக்கு வந்த போது கொஞ்சம் அசந்துதான்
போனார்கள்.

நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவரவர்க்குரிய வசனங்கள் எழுதிக்
கொள்ளப் பட்டு ஒத்திகை ஆரம்பமானபோது என்னைப் பார்வையாளராக அமைப்
பாளர் அழைத்திருந்தார். அப்போதுதான் நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்
திருந்தேன். அதையும் எனது நாடக ஆர்வத்தையும் அறிந்திருந்ததால் என்னை
வந்துபார்த்து யோசனை சொல்லுமாறு அழைத்திருந்தார். நாடகத்தின் ஆரம்பக்
காட்சியில், பல்லவமன்னரிடம் சேனாதிபதியாய் இருந்த பரஞ்சோதி வாதாபிப்
போருக்குப் பிறகு சிவத்தொண்டு செய்யத் தன்னை விடுவிக்குமாறு கேட்டதையும்,
அதன்படி நரசிம்ம பல்லவர் அவரை விடுவித்து சிவத்தொண்டுக்கு அனுப்பியதையும்
சேர்க்கலாம் என்று சொன்னேன். அவர்களது நாடகப் பிரதியில் அது இல்லை.
அமைப்பாளர் அந்தக் காட்சியை நீயே எழுதிக்கொடு என்று கேட்டுக் கொண்டார். இப்படித்தான் எனது நாடக எழுத்து ஆரம்பமாயிற்று. அந்தக் காட்சியை எழுதிக்
கொடுத்ததோடு தர்பார் சீனில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியைச் சேர்க்கவும் யோசனை
சொன்னேன். அப்போது நடனம் ஆடுவதில் அதீத ஆர்வமும் திறமையும் கொண்ட
ஒரு வெளியூர் இளைஞருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்காக ஒரு
நாட்டியப் பாடலும் எழுதிக் கொடுத்தேன். அப்போது 'பராசக்தி' படம் வெளியாகி
அதன் பாடல்கள் பிரபலமாக இருந்த நேரம். அந்தப் படத்தில் வரும் 'ஓ ரசிக்கும்
சீமானே.......!' என்ற பாடல் மெட்டில் 'ஓ இனிக்கும் தமிழே...!' என்று தொடங்கும்
பாடலை எழுதித் தந்தேன். அதோடு நாடகத்தின் நடுவில் நகைச்சுவை நடிகன் பாட, ஏ.வி.எம்மின் 'வாழ்க்கை' படத்தில் வரும் 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம்
கொண்டாடுதே' என்ற மெட்டில்,

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் துன்பமிகவாகுதே
எண்ணைக்குத்தான் கோடைகாலம் போகுமிண்ணு தோணுதே
தண்ணித் தண்ணி தண்ணியின்னு தவியாய்த் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ்போட்ட ஆரஞ்சுன்னு கேட்குதே!'

என்று ஒரு பாடலும் எழுதிக் கொடுத்தேன். இதன் மூலம் பாடல் ஆசிரியராகவும்
ஆனேன்.

நாடக ஒத்திகையின்போது நாடகவாத்தியாரை மிகவும் படுத்திவிட்டார்கள். கிராமம் என்பதால் சமூக ஏற்றத்தாழ்வின் பிரச்சினையால் சின்னச் சின்ன சிக்கல்கள்
எழுந்தன. சிறுத்தொண்டர் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தவர், மேல்
ஜாதிக்காரர். நரசிம்ம பல்லவன் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் மேல்ஜாதி வீடுகளில் ஊழியம் செய்யும் கீழ்ஜாதிக்காரர். நரசிம்மபல்லவர், 'சேனாதிபதி!' என்று
விளிக்கும்போது, பரஞ்சோதி தலை வணங்கி, 'சக்கரவர்த்தி!' என்று பேசவேண்டும்.
ஆனால் மேல் ஜாதிக்காரரான நடிகர், 'ஏன் ராஜன்?' என்றுதான் கேட்பேன், 'இந்த .......ஜாதிப்பயலை 'சக்கரவர்த்தி' என்று அழைக்கமாட்டேன், தலைவணங்கியும் பேச
மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தார். பாவம் நாடக வாத்தியார்!. அவரால் சமாளிக்க முடியவில்லை. பிறகு நான் தலையிட்டு 'பரஞ்ஜோதி'க்கு அது நடிப்புதான், அதனால்
கௌரவப் பிரச்சினை இல்லை என்று சமாதானப் படுத்தினேன். இப்படி பல
இடைஞ்சல்கள் வாத்தியாருக்கு! வயிற்றுப் பிழைப்பை எண்ணி சகித்துக் கொண்டார்.

நாடகம் நடந்தபோது பரஞ்ஜோதியின் ஒப்பனையிலும் சம்பந்தப்பட்டவர்
ஒரு விசித்திரம் செய்தார். தலையில் தளபதிக்கான தலைப்பாகையை வைத்துக்
கொண்ட அவர், தளபதிக்கான அங்கிகளையும் அட்டைக் கவசங்களையும் அணிய
மறுத்து நாடகத்துக்காக அவர் மாமனார் தைத்திருந்த பேண்டும் புஷ் ஷர்ட்டும்
அணிந்து இடதுகையில் புதுவாட்சும் காலில் கட்ஷ¥வுமாய் தர்பார் சீனில்
நுழைந்தார். இப்படி ரசமான வினோதங்கள் நிறைய கிராமத்து நாடகங்களில்!

நாடகத்துக்கு இடையிடையே 'குறவன் குறத்தி' போன்ற துக்கடா
நிகழ்ச்சிகள் நடக்கும். இதை 'சில்லரை' என்பார்கள். மரபான இந்த 'சில்லரை'
களிலிருந்து ஒரு மாற்றமாய் உள்ளூர் ஆரம்பப்பள்ளி மாணவர்களை வைத்து நான்
எழுதித் தயாரித்திருந்த 'சாணக்கியன் சபதம்' என்கிற சின்ன ஒரங்க நாடகத்தை
மக்கள் மிகவும் ரசித்தார்கள். இதே போல நாடகம் நடந்த மூன்று நாட்களுக்கும்
கலைஞர் கருணாநிதி எழுதி சிவாஜி நடித்த 'சாக்ரடிஸ்', 'சாம்ராட் அசோகன்"
ஆகியவற்றையும் பள்ளிப் பிள்ளைகளைக் கொண்டு தயாரித்து இடைவேளைகளில்
மேடை ஏற்றினேன்.

அவற்றிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்ததால் முழு நேர நாடக
மாக ஒன்றை தனியாக ஒருநாள் நடத்திக் காட்ட ஆசைப்பட்டேன். அது நவீன
நாடகம் போல் மூன்று மணி நேரத்தில் சினிமா பாணியில் பாட்டு, நடனம் குறை
வாகக் கொண்டதாக நடத்த முடிவு செய்தேன். அப்போது கல்லூரிக் கோடை
விடுமுறைக்காலம் என்பதால் மூன்று மாத அவகாசம் கிடைத்தது. முன்பு சிறுவர்
களைக் கொண்டு நடத்திய சாணக்கியன் சபதம் செய்யும் காட்சியை மட்டும்
கொண்ட பிரதியை விஸ்தரித்து மூன்றுமணி நேர நாடகம் அளவுக்கு 'சாணக்கியன்
சபதம்' என்ற பெயரிலேயே எழுதி முடித்தேன். நடிகர்களுக்கு - நிறையப் பேர்
ஆசைப்பட்டும், ஓரளவு படித்தவர்களாகத் தேர்வு செய்தேன். அதுவரை நான் நடித்த
தில்லை என்றாலும் நானும் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க முடிவுசெய்தேன்.
நாடக வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டு ஒத்திகைக்குள் மனப்பாடம் செய்துவிட
நடிகர்களுக்குச் சொல்லி விட்டு ஒத்திகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதில்
முனைந்தேன். எங்களுக்குச் சொந்தமான கூரைக் கொட்டகை ஒன்று ஏர், கலப்பை முதலியவற்றைப் போட வைத்திருந்ததை ஒழித்துச் சுத்தம் செய்து தரையை சாண
மிட்டு மெழுகி புழங்கும் இடமாக ஆக்கினேன்.

நாடக ஒத்திகைத் தொடங்கியது. இரவு 8 மணிக்கே உணவை முடித்துக் கொண்டு நடிகர்களை வரச் செய்திருந்தேன். முதல் நாள் ஒத்திகையே வேடிக்கையும், ந¨ச்சுவையும் நிரம்பியதாக இருந்தது. சாணக்கியன் நடந்து வரும்போது கட்டைப்
புல் தடுக்கி விழும் காட்சி. சாணக்கியன் கோபத்துடன் தன்னை விழச்செய்த கட்டைப் புல்லைப் பிடுங்கி அதனிடம் உச்சுக் கொட்டியபடி "ஏ கட்டைப்புல்லே....!" என்று
பேசவேண்டும். சாணக்கியராக நடிப்பவர் கட்டைப்புல் கையில் இருக்கும் பாவனை
யுடன்,"த்சோ! த்சோ! ஏ கட்டைப்புல்லே....." என்றார். எனக்கு நான் எழுதியதாக இல்லாமல் வசனம் வித்தியாசமாகப் படவே, "இருங்க..இருங்க..! அதென்ன த்சோ..
த்சோ?'' என்றேன். "நீங்கதான் சார் எழுதி இருக்கீங்க" என்றார் நடிகர். "எங்கே
காட்டுங்க" என்று பிரதியை வாங்கிப்பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
உச்சுக் கொட்ட அடைப்புக் குறிக்குள் நான் எழுதிக் கொடுத்ததையும் அவர் மனப்
பாடம் செய்திருக்கிறார். இப்படியாக முதல் நாள் ஒத்திகை இரவு 12 மணிவரை
நடந்து முடிந்தது. "சரி, நாளைக்கும் இதே மாதிரி நேரத்துக்கு வந்து விடுங்கள்"
என்று எல்லோரையும் அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தேன் - மறுநாள் ஒத்திகை
நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல்.

நான் இரவில் திண்ணையில்தான் படுப்பதால் நான் நடுநிசிக்குமேல் படுக்க வந்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. காலையில் தாமதமாக எழுந்தபோது அப்பா வயல்காட்டுக்குப் போயிருந்தார்கள். பல்துலக்கி காபி சாப்பிடும்போது அம்மா
ஆரம்பித்தார்கள். ''ராத்திரி எப்ப படுக்க வந்தே?"

"ஏன்? பத்து மணிக்கு மேலே ஆயிட்டுது." என்றேன்.

"மணி பன்னண்டு வரைக்கும் நீ வராதத அப்பா பாத்துட்டு எங்கே
போயிருக்கேன்னு கேட்டாங்க. எங்கிட்ட சொல்லிட்டா நீ போனே? எனக்குத்
தெரியாதுன்னு சொன்னேன். ஆனா ஆரோ சொல்லித் தெரிஞ்சிருக்கு நீ நாடகம்
போடறது. அப்பா ரொம்ப வருத்தப்படுறாங்க"

"ஏம்மா! அதுலே என்னா?"

"அதுலே என்னாவா? நம்ம மானமே போயிடுச்சிங்கிறாங்க அப்பா. நம்ம குடும்ப கௌரவம் என்ன, அந்தஸ்து என்ன? இன்னார் வீட்டுப்பையன் கூத்தாடு
றான்னா....? ஊருக்குப் பெரிய குடும்பம், பரம்பரையா நாட்டாமக் குடும்பம் ஒன்னாலே கூத்தாடிக் குடும்பம்னு பேசணுமா? அப்பாவுக்குப் பிடிக்கலே! படிக்கிற வயசிலே
என்னா கூத்தாட வேண்டியிருக்குங்கிறாங்க. நீ கெட்டுப்போறதும் இல்லாமே ஊரான் வீட்டுப் பிள்ளைகளையும் கூத்தாடக் கூப்பிடுறதும் பேச்சுக்கு எடமாயிடும்னு அப்பா
வுக்குக் கவலையா இருக்கு. இன்னியோட அந்தக் கூத்தைத் தல முழுகிடு. அப்பா மனசு நோகிற மாதிரி பண்ணாதே"

எனக்கு இடி விழுந்தமாதிரி இருந்தது. என் ஆசைக்கு இப்படி ஒரு தடை
வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பா படித்தவர்கள்; முற்போக்கு எண்ணம் உடையவர்கள். அவர்களுக்கு எப்படி இதைக் கொச்சைப்படுத்த முடிகிறது?

மனம் கசந்து வெளியே வந்தேன். அப்போது நாடக முயற்சியில் எனக்கு
உறுதுணையாய் நிற்கும் நண்பர் வந்தார். அவரிடம் சொல்லி ஒரு பாட்டம் அழலாம்
என்று நிணைத்த போது அவரே ஆரம்பித்தார். நாங்கள் நாடகம் நடத்துவதைக் கௌரவக் குறைவாக, நடிக்கும் பையன்களின் பெற்றவர்கள் பலர் நினைப்பதாகவும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இனி அனுப்பமாட்டர்கள் என்றும் சொன்னார். நான்
நொந்து போனேன். அதோடு என் நாடக ஆசை அற்பாயுளில் மரித்தது.

--- 0 ---

Sunday, October 26, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 35. தாலமி.

=========
1. வேறு வார்த்தைகளில் வெளியிட முடியாத ஒன்றை' சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லத்தான் எழுத்தாளன் ஒரு சிறுகதையை எழுதுகிறான். அவனிடத்து ஒரு வாசகன், ''இதன் பொருள் என்ன?'' என்று விளக்கம் கேட்டால், ஒன்று அவன் எழுத்தாளனது திறமைக்குறைவை அல்லது வாசகர்களது வளர்ச்சியின்மையைக் குறிக்கும்.

2. தந்தி மூலம் வரும் செய்திகள் பல நம்மை அதிர வைக்கின்றன; அல்லது பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன. சிறுகதைகள் தந்தி மூலம ்வரும் செய்திகள். சொற்செட்டும், பொரூளட்செட்டும்் சிறுகதையின் இன்றியமையாத இலக்கியப் பண்புகள்.

3. ''அவன் கண்கள் நெருப்புப்போல் சிவந்தன,'' என்று எழுதுவதைக் காட்டிலும், நெருப்புப்போல் கண்கள் சிவந்துவிட்ட ஒருவன் சொல்லும், சொல்லத்தடுமாறும், சொல்லத்தவறிவிட்ட சொற்களை, அல்லது செய்யும், செய்ய நினைக்கும் செயல்களை உணர்த்துவதே, சிறுகதைப்பாங்கு. சிறந்த இலக்கியத்தில் உள்ளமும், உளநிலையும் சொல்லிலும், செயலிலும் பிடிபடுகின்றன.

4. சிறுகதை ஒரு நோக்குடன் அமைய வேண்டும். அது ஆசிரியனின் நோக்காவோ கதையில் வரும் பாத்திரத்தின் நோக்காவோ இருக்கலாம். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை எழுத்தாளன் செய்யக்கூடாது.

5. ஏனையக் கலைகளைப்்பொல்வே, அறிவுணர்வாலொ அல்லது சிந்தனை உணர்வாலோ தொடப்படாதொன்றத் தொடுவது சிறுகதை. அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. தீ்ர்ப்பது அதன் நோக்கமோ, ஆளுகையோ அல்ல. ஜோசப் கார்நாடின் ''இளமைய''யோ , கார்க்கியின் ''ஏதாவது ஒன்று செய்வதற்காக''வோ , ஹெமிங்வேயின் ''கொலைகாரர்''களோ , ஷெர்வுட் ஆண்டர்சனின் ''காட்டிலோ ஒரு சா''வ'ோ , எந்தப் பிரச்சினையத் தீர்க்கிறது?

6. துணிந்த சிறுகதை எழுத்தாளன், ஆஸ்்கார் ஒயில்டுவின் ''்எல்லாக் கலையும் பயனற்றது'', என்ற முடிவை ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும்.

7. சிறந்த சிறுகதைகளை எழுதுவதோ, , படிபதோ பொழுதுபோக்கல்ல. இரண்டுமே மனிதத்துவம் நிறைந்த செயல்கள்.



----- o -----

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 34.பிரபஞ்சன்

1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு. மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் ஒற்றைச் சித்தரிப்பு. ஒரு சிறு நிகழ்ச்சி, சிறுகதைக்குப் போதுமானது.

2. திட்டவட்டமாகப் பக்கக் கணக்கில் சிறுகதையை அடக்க முடியாது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரம்' இரண்டு பக்கங்களில் அமைந்த கதை. 'சாப விமோசனம்', 'சிற்பியின் நரகம்' ஆகிய கதைகள் பத்துப் பக்கங்களுக்கு மேலாகப் போகும். ஆகவே, பக்கங்களை வைத்துக் கணக்கிடலாகாது. உள்ளடக்கக் குணாம்சங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்.

3. ஒரு நாவல், சொல்ல வந்த விஷயங்களின் அல்லது விஷயத்தின் சகல பரிமாணங் களையும், சரித்திர, பொருளதார, மனோபாவ பரிமாணங்கள் அத்தனையையும் உள்ளடக்கி விவரிப்பது. சிறுகதைக்கு அத்தனை பரிமாணம் தேவையில்லை. விவரணங்களும் தேவையில்லை. ஒரு சிறு சம்பவமும், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரிப்பும் போதும். ஒன்றிரண்டு மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எவ்வாறு அதை எதிர்கொண்டு, எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பது ஒரு சிறுகதைக்குப் போதும். இன்னும் சொன்னால், அந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதேகூடப் போதுமானது.

4. சிறுகதை குறியை நோக்கி, ஒரு துப்பாக்கித் தோட்டா மாதிரி பயணம் செய்யும் தன்மையது. பள்ளிக்கூடப் பையன் மாதிரி பராக்குப் பார்க்கக்கூடாது. சிறுகதை ஆசிரியன், கண்பட்டை போட்ட குதிரை மாதிரி, மற்றதைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதவன். அவன் இலட்சியம் அவன் சொல்லத் தேர்ந்த விஷயம்!

5. சிறுகதைக்குரிய கருவை எங்கிருந்தும் பெறலாம். அது எங்கும் காற்றுப்போலவும், ஓளி போலவும் நிறைந்திருக்கிறது. பார்ப்பதற்குக் கண்களையும், உணருவதற்கு மனத்தையும் இயக்குவதொன்றே கருவைப் பெறும் வழி. உங்களுக்கு நேரும் அனுபவமே உங்களுக்குக் 'கரு' ஆகுமே!

6. சிறுகதை எந்த விஷயத்தையும் தொடலாம். வானமும், அதற்குக் கீழே இருக்கிற அனைத்தையும் அது தொடும். ஆனால், தொடும் விஷயம் நீங்கள் நன்கு அறிந்ததாய் இருக்க வேண்டும். விமானப் பயணம் செய்யாத எழுத்தாளன், விமானப் பயணம்செய்யும் தன் பாத்திரத்தின்அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியாது.

7. சிறுகதைகளில் சம்பவ ஓர்மை அவசியம். ஒரு நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிக்கு வழியமைத்து சொல்ல வந்த விஷயத்துக்கு இசைவாக இருத்தல் முக்கியம். கதை இறுக்கம் கொண்டு இலங்குவது நல்லது.

8. முதல் வாக்கியத்தில் கதை தொடங்கியிருக்க வேண்டும். கதை நேரான தளத்தில் மளமளவென்று நடக்க வேண்டும். தயக்கம் கூடாது. சொல்ல வந்த விஷயந்தான் தீர்மானம் ஆகிவிட்டதே அப்புறம் ஏன் தயக்கம்?

Sunday, October 05, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 33..அனுராதா ரமணன்.

1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும்.

2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில் அன்றையச் சம்பவங்களைச் சுவைபட எழுத முயலுங்கள். தவிர கதைக்
கருக்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒரு நோட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

3. கதையைப் பொறுத்தவரை நல்ல கருதான் அதன் ஜீவநாடி. ஒரு தொழிலுக்கு மூலப்பொருள் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கதைக்குக் கரு.

4. கதையின் கரு, ஏதோ ஒரு கால கட்டத்தில் நடந்த அல்லது நடக்கிற ஒரு சம்பவமாக இருக்க வேண்டும். சொல்ல வந்ததை சுவைகுன்றாமல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். முடிவு படீரென்று பொட்டிலடித்தாற்போல இருக்க வேண்டும்.

5. ஒரு நாளைக்குப் பத்துப் பக்கங்கள் நாம் எழுதுகிறோம் என்றால், ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு பக்கங்களாவது படிக்க வேண்டும். கையில் கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் படியுங்கள். நம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்த எழுத்தாளர்கள் படைப்புகளைப் படிப்பதனால், அவர்களது அனுபவங்களை மட்டுமின்றி உழைப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.

6. ஒரு நல்ல சிறுகதையைப் படித்தால், படிப்பவரின் நெஞ்சில் சுமார் இரண்டு நாட்களுக்காவது அதன் பாதிப்பு இருக்க வேண்டும்.

7. ஆரம்ப வரி - வாசகரைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தால்தான் முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்கிற உற்சாகம் கிளம்பும்.

8. முகத்துக்குப் பவுடர் பூசுவதும், பொட்டு வைப்பதும் ஓரளவுக்குப் புத்துணர்ச்சியையும்,
இயல்பான களையையும் தோற்றுவிக்கும். அது போலத்தான் வருணனையும்.

9. சிறுகதைக்கு வருணனை அவசியம்தான். அதைவிடவும் சம்பவத்துக்கு நாம் தரும்
முக்கியத்துவம் அவசியம்.

10. சிறுகதை தரம் மிகுந்ததாக இருக்கிறதா, எழுத்தில் இலக்கண இலக்கியம் உண்டா என்று துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் எழுதவே முடியாது.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 32 .ஹெப்ஸிபா ஜேசுதாசன்.

--------------------------------------------



1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி வைக்கிறதா? இந்தக்கதைக்குப் படம் எதற்கு விளம்பரம் எதற்கு என்று தோன்றுகிறதா? அப்பப்பா வாழ்கையில் அற்புதம் இத்தனையா என்று வியக்க வைக்கிறதா? அணுவை அண்டமாகவும், அண்டத்தை அணுவாகவும் மாற்றுகிறதா? கண்ணீர் விடவேண்டிய கட்டத்தில் ஆனந்த சிலிர்ப்பையும் மகிழ்ச்சியின் சிகரத்தில் கண்ணீரையும் தருகிறதா? சிறிய ஒரு விஷயம் பெரியதொரு உண்மையாகி விடுகிறதா? அப்படியானால் அடுத்தபடியான ஆராய்ச்சிக்கு அந்தச் சிறுகதை தகுதி பெற்றுவிட்டது.

2. இலக்கிய ஆசிரியனின் "டெக்னிக்", விமர்சனத்துக்குப் பாத்திரமாகிறது. கதை மட்டில்
"சப்"பென்று தூங்கிவழிந்து கொண்டிருந்தால் "டெக்னிக்"கின் புதுமை யாரைக் கவரப்போகிறது? சமையல் நன்றாயிருக்கலாம், உப்பு மட்டும் இல்லாவிட்டால்? டெலிவிஷனில் புதுமை இருக்கிறது. "டெக்னிக்" ஒன்றும் மட்டமில்லை. ஆனால் பொய்ச் சிரிப்புக் காட்டும் அந்த முகத்தை எத்தனை நாள் சகித்துக் கொள்கிறது? சில வேளைகளில் 'பொய்க்கால்" குதிரை ஆடுகிற சிறுவன் போடுகிற போடு எப்படி இருக்கிறது? அவன் உற்சாகமும்., பெருமிதமும் நம்மையுமல்லவா பிடித்துக்கொள்கிறது?
அவன் "டெக்னிக்" மிகப்பழையது. உற்சாகமோ மிகமிகப் புதியது!

3. சிறுகதை ஆசிரியன் வாசகனின் ஒரு தோழன் மாதிரி. சில வேளைகளில் அந்தத் தோழமை அற்புதமாகி விடுகிறது. வாழ்க்கைச் சகதியின் நடுவில் நின்றுகொண்டே, காணாதனவெல்லாம் காட்டி, தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறான்.ஆனால் சில வேளைகளில், ஊட்டி என்றும் கொடைக்கானல் என்றும் அழைத்துப் போனாலும் அங்கேயும் நம்மை "போர்" அடிக்கிறான். கொட்டாவி விட்டுக்கொண்டு காசு செலவழித்த உணர்ச்சியோடு திரும்புகிறோம். இப்பேர்ப்பட்ட தோழமை என்றும் வேண்டாம்! 'போர்" அடிக்கிற சிறுகதை உங்களுக்கு வேண்டாம்! அதைக் கீழே வைத்துவிடுங்கள்!

Saturday, October 04, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31. பேராசிரியர் கல்கி

1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாக
வுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.

கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று பாட்டி சொன்ன உடனேயே 'உம், அப்புறம்' என்று குழந்தைக்குக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இம்மாதிரி 'அப்புறம் என்ன?' என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலைக் கிளப்பக்கூடிய முறையில், ஏதாவது நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ சொன்னால், அதுதான் கதை. சரி, சிறுகதை என்றால் எவ்வளவு சின்னதாக இருக்க வேண்டும்? அது அந்தக் கதையின் போக்கையே பொறுத்தது.
சிறுகதையின் முக்கியமான அம்சம் அதில் ஒரு பிரதான சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்த சம்பவத்தை வெறும் வளத்தல் இல்லாமல் வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக்கொண்டு போனால், அது நாலு வரியிலிருந்தாலும் சிறுகதைதான். நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்.

2. பொழுதுபோக்கிற்காகப் படிப்பதுடன் பயனுக்காகவும் படிக்க வேண்டும். படித்த
பயன் எழுத்தில் தெரியவேண்டும். எதையும் எதிர் பார்த்தால்தான் துல்லியமாக இருக்கும். எழுத எழுதத்தான் சிந்தனை தெளிவடையும்.

3. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் துவைத்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலக்கணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியாக இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

4. எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும் அல்லது தூற்றவாவது வேண்டும். இரண்டுமில்லை என்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருந்து விடலாம்.

எழுத்துகலைபற்றி இவர்கள் - 30.விந்தன்

1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது உறங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்க¨ளை, அந்த மனிதாபிமானத்துக்கு விரோதமாயிருக்கும் - இருந்து வருகின்ற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் கதைகளை.....எழுதவேண்டும். இதுவே என் எண்ணம்.

2. எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்
என்பது நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துடுக் கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?

3. கதைகள் வாழும் மக்களைப்பற்றி எழுத வேண்டும். அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும்
துன்ப துயரங்களைப்பற்றி எழுத வேண்டும். மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்களைப்பற்றி எழுதி, படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி செய்ய வேண்டும்.

4. 'மனிதன்' - ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

5. 'நாவல் எப்படிப் பிறக்கிறது?' என்னைப் பொறுத்தவரை ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது.

6. இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை. வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கிறது.
கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டு. - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது.

Sunday, September 28, 2008

எழுத்துகலைபற்றி இவர்கள் - 30.விந்தன்

1. போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பார்க்கும் ரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக்காட்டி மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது உறங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்க¨ளை, அந்த மனிதாபிமானத்துக்கு விரோதமாயிருக்கும் - இருந்து வருகின்ற மனித மிருகங்கள் மேல் வெறுப்பைக் கக்கி உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் கதைகளை.....எழுதவேண்டும். இதுவே என் எண்ணம்.

2. எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும்
என்பது நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துடுக் கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்? படிப்பதில்தான் என்ன பயன்?

3. கதைகள் வாழும் மக்களைப்பற்றி எழுத வேண்டும். அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும்
துன்ப துயரங்களைப்பற்றி எழுத வேண்டும். மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கைப் போராட்டங்களைப்பற்றி எழுதி, படிப்பவர்கள் மனத்தில் பரிவு ஏற்படும்படி செய்ய வேண்டும்.

4. 'மனிதன்' - ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

5. 'நாவல் எப்படிப் பிறக்கிறது?' என்னைப் பொறுத்தவரை ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது.

6. இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை. வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கிறது.
கற்பனையிலிருந்து நான் கதைகளை மட்டும் சிருஷ்டித்தால் போதுமானது; அவற்றைப் படிப்பதற்கு வாசகர்களையும் கற்பனையிலிருந்தே சிருஷ்டிக்க வேண்டு. - என்னால் முடியாதய்யா, என்னால் முடியாது.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29.பி.எஸ்.ராமையா.

1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம்.

2. கதை என்று பொதுவாகச் சொன்னால் அதில் எல்லாக் கதைகளும் அடங்கிவிடும்.
சிறுகதை என்று சொன்னால் அதில் குறிப்பிட்ட இலக்கணங்கள் கொண்ட கதைகள் மட்டும்தான் அடங்க முடியும். அதாவது சிறுகதைக்கு ஒரு இலக்கணம் உண்டு.

3. சிறுகதைக்குத் தாய்ச்சரக்கு மனிதமனம் அல்லது உண்மை தான். மனிதமனப்
போக்குகள் அவற்றிற்கு ஆதாரமான உள்ளத்து உணர்ச்சிகள் இவற்றை மின்வெட்டுக்கள்போல எடுத்துக்காட்டுவதுதான் சிறுகதை.

4. கடல் போன்ற வாழ்க்கையில் ஒரு தனிமனித நிலையை, மனப்போக்கை ஒரு உணர்ச்சிவேகத்தை, அழகாக எடுத்துக்காடுவதுதான் சிறுகதை. நமது வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளில் அவரவர் மனப்போக்குக்கு ஏற்ப சிக்கி, உழன்று, அந்த நெருக்கடி ஓட்டத்தில் ஒரு சிறு நிகழ்ச்சியில் நம் கவனத்தை ஊன்றி வைத்து, அதன் காரண - காரிய தொடர்புகளை அலசிப் பார்த்து அடையும் அனுபவத்தை, பக்குவமாக, தேவையற்ற விவரங்களை வடிகட்டி ஒதுக்கிவிட்டு, சுண்டவைத்த கஷாயம்போல, சாரத்தை சுவையாகவும், கவர்ச்சிகரமாகவும் கொடுப்பதுதான் சிறுகதை.

5. ஒரு நல்ல உயர்ந்த சிறுகதையைப் படித்ததும் படிப்பவர் உள்ளம் உயர வேண்டும்.

6. மனிதனது வாழ்வில் பிறப்பும், வாழ்வும், இறப்பும் அவனைக் கட்டுப்படுத்தி விடுகின்றன.
அந்தக் கட்டுப்பாட்டை மீற, அவன் செய்யும் முயற்சிக¨ளையும், போராட்டங்களையும் அவற்றில் அவன் அடையும் வெற்றி தோல்விகளையும் எடுத்துகாட்ட முயல்வதுதான் சிறுகதை.

7. ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது லட்சியத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டாலும் அந்தக் கொள்கையிலும் லட்சியத்திலும் உண்மையின் பலம் இருக்க வேண்டும்.

8. சிறுகதையில் தொட்டுக் காட்டப்படும் மனநிலை குறுகிய, தற்காலிகமான தடைகளால் ஏற்படும் அனுபவங்களாக இருக்கக் கூடாது.

9. சமூக அநீதிகளை எதிர்த்து, திமிறி எழுந்து நியாயம் கிடைக்கச் செய்யக்கூடியதான மனோபாவம் வெளிப்படுத்தும் சிறுகதைகள் அமைக்கப்பட வேண்டும்.

10. சிறுகதைகளுக்குச் சுருக்கம் எழுத முடியாது, எழுதக் கூடாது. சிறுகதையில் ஒரு வரி விட்டுச் சொன்னால் கூட அதன் அழகு மூளியாகிவிடும். அது ஒரு வார்ப்பு.

Tuesday, September 23, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28..மாப்பசான்.

1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளிலும் எப்போதும் ரகசியம் பதுங்கிக் கிடக்கிறது.

2. மக்கள் கூட்டம் பலசுவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அவர்கள் நம்மை வேண்டிக் கேட்பவை இப்படி இருக்கின்றன:

"எனக்கு ஆறுதல் கொடு"
"என்னை மகிழ்ச்சிப்படுத்து"
"சோகத்தின் பிடியில் என்னைச் சிக்கவிடு"
"என் நெஞ்ச உணர்ச்சியைத் தொடு"
"என்னைக் கனவுலகத்திலே மிதக்க விடு"
"என்னக் கெக்கலி கொட்டிச் சிரிக்க வை"
"என்னை அச்சுறுத்து"
"என்னை அழ வை"
"என்னைச் சிந்திக்க வை".

3. இவற்றைத் தவிர ஏதோ மிகச் சிலர் இன்னொன்றைக் கூறுகிறார்கள்: "கலைஞனே! உனக்குப் பிடித்த முறையிலே - உன் உணர்ச்சி வெள்ளத்திற்கு இயைந்த வகையிலே எதையாவது நல்லதைக் கொடு" என்பதுதான். கலைஞன் இதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறான்; வெற்றி பெறுகிறான்; அல்லது தோற்றுத் தொலைகிறான்.

4. சிறுகதை என்பது ஒரு கெட்டுப் போன கலைக்குழந்தை.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்- .27.லியோ டால்ஸ்டாய்.

எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)


























எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)



























எழுத்துக்கலை பற்றி இவர்கள்- 27.
------------------------------------------------
- வே.சபாநாயகம்.

லியோ டால்ஸ்டாய்
================

1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று.
கடைசியாக 'டெக்னிக்'. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்'
என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில் வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

(இன்னும் வரும்)







































1. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது சிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது
அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக 'டெக்னிக்'.
முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் 'டெக்னிக்' என்பது தானாக வந்துவிடும்.

2. இலக்கியம் இரண்டு வகை, நல்ல இலக்கியம், நச்சு இலக்கியம். எந்த உணர்வோடு நாம் எழுதுகிறோமோ, அந்த உணர்வு வாசகன் மனதில் பதிந்தால் அது இலக்கியம். நல்ல உணர்வு
பதிந்தால் அது நல்ல இலக்கியம். நச்சு உணர்வு பதிந்தால் அது நச்சு இலக்கியம்.

3. ஒரு கதாநாயகனிடம் வாசகர்கள் அனுதாபம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் அந்தக் கதாநாயகனிடம் தங்களது நல்ல குணங்களையும், பலவீனங்களையும் காணவேண்டும்.

4. ஒரு கருத்து எழுத்தாளனின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அவன் என்னென்ன முயற்சி
செய்தாலும் உள்ளத்தை விட்டு வெளியேற மறுத்து, உள்ளுக்குள்ளேயே இடையறாது குடைந்து
குடைந்து உறுத்திக் கொண்டிருந்தால்தான் - அந்தக் கருத்தை எவ்வளவு சிறந்த முறையில்
வெளியிட முடியுமோ அவ்வளவு சிறந்த முறையில் வெலியிட்டாலன்றி அந்த உறுத்தலினின்றும் விடுபடமுடியாது என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் - ஒரு எழுத்தாளன் அதனை எழுதத்துணிய வேண்டும் என்பது என் நம்பிக்கை.

Saturday, August 16, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 26 ரா.ஸ்ரீ.தேசிகன்.

1. சிறுகதை ஒரு குறுகிய நாவலில்லை. அநேக பாத்திரங்களையும் அநேக சம்பவங் களையும் சித்தரிக்கவேண்டி இருப்பதால் ஒரு நாவலுக்கு அகன்ற சித்திரக்கிழி வேண்டும். ஒரு நிகழ்ச்சிதான் சிறுகதைக்குள்ள வட்டம். அவ்வட்டத்துக்குள் எவ்வளவு அலங்காரம் செய்யலாமோ அவ்வளவு அலங்காரம் செய்யலாம். ஒரு நாவலில் கூட்டலாம்; கழிக்கலாம்; ஆனால் கதாபாவம் கெட்டுப் போவதில்லை. ஒரு கதையில் ஒரு பதத்தை எடுத்தாலும் கதை பழுதுபட்டுப் போய்விடும்.

2. நாடகத்தைப் போலவே சிறுகதையிலும் ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு பயன் இருக்க வேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும். வர்ணனைக்காக வர்ணனையும், ஹாஸ்யத் திற்காக ஹாஸ்யமும் சிறுகதையில் இடம்பெற முடியாது. ஹாஸ்யமான விஷயம் கதைப் போக்கின் ரசத்தை அதிகப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதை அடியோடு தள்ளிவிடவேண்டும்.

3. கதையின் முடிவில் எழும் நாதத்திற்குக் கதை முழுதுமே எதிரொலி கொடுக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேச வைப்பதுதான் சிறுகதை.

4. கதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. சிறுகதைச் சைத்ரீகனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அவன் ஒரு கவி என்பது புலனாகும். கவியுள்ளம் படைத்தவன்தான் சரியான கதை எழுத முடியும். அகத்துறைக்கான ஒரு நிலையை (lyric) அடைந்து விடுகிறது உண்மையான சிறுகதை. 'அகத்துறைப்பா'வைப் போலவே சிறுகதையிலும் தெளிவாக உணர்ச்சி பொங்க வருணிக்கப்படும் ஓர் அனுபவத்தை மாற்றக்கூடிய அல்லது குழப்பக்கூடிய வேறு எந்த அம்சமும் இருக்க இடமில்லை.

5. நாவலை ஒரு வாழ்க்கைச் சித்திரமென்று மொழியலாம். வாழ்க்கையில் எவைகளைப் பார்க்கிறோம்? பிறப்பு, வளர்ப்பு, இவைகளைப்பற்றி சர்ச்சை செய்கிற மக்களின் பேச்சு, மக்களின் குணங்களுக்கேற்ற செயல்கள், மக்களின் போராட்டங்கள், உணர்ச்சிவேகங்கள், சிரிப்பு, அழுகை, உயர்ந்த லட்சியங்கள், அவைகளின், சிதைவு, வெற்றி, ஏமாற்றம், நல்லது, தீமை, மழை, வெயில், குளிர், வெப்பம், புயல், அமைதி - இவை அனைத்தையும் வாழ்க்கையின் விரிந்த காட்சியில் நோக்குகின்றோம்.

6. நாவல் வாழ்கையின் ஒரு விமர்சனமாய் இருக்கலாம், அல்லது வியாக்கியானமாய் இருக்கலாம். நாவலுக்குப் பொருள் வாழ்க்கை என்பதில் ஐயமில்லை. ஆதலால் எடுத்துக் கொண்ட விஷயம் எல்லா உள்ளங்களுக்கும் பொதுவானதாயும், உணர்ச்சி பாய்கின்ற ஆழ்ந்த உள்ளத்தைத் தொடுவதுமாயும் இருக்க வேண்டும். வெறும் கதைதானே என்ற எண்ணத்தில் எதையும் அதில் புகுத்திவிடலாம் என்ற தவறான எண்ணம் முளைக்கக் கூடாது. நாம் பார்த்த விஷயம், நாம் நுகர்ந்த அனுபவம், நாம் அகமனத்தின் ஆழத்தில் உணர்ந்த வாழ்க்கையின் உணர்ச்சிகள் இவைகளுக்கு உருக்கொடுக்க வேண்டும்.

7. முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் கதை. கதை, சொல்லத் தகுந்த கதைதானா? இது தீர்மானமாகுமானால், அதை அழகுபெறப் புனைகின்றோமா? - என்ற கேள்வி பிறக்கும். கதாபாத்திரங்கள் செவ்வனே படைக்கப்படுகின்றனவா? எடுத்துக்கொண்ட விஷயத்துக்கேற்றவாறு கதையின் அம்சங்கள், தொடர்புடையனவாய் அமைந்திருக்கின் றனவா? - என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

8. ஒரு நாவலில் மிகவும் முக்கியமாகக் கருதக்கூடியது கதாபாத்திரங்கள். நிதம் நம் முன் நடமாடும் பாத்திரங்களின் சித்திரங்களை அமைப்பீர்களா? அல்லது தைரியமாய் அமானுஷ்யமான பாத்திரங்களைச் சமைப்பீர்களா? விசித்திர உருவங்களைப் படைப்பீர்களா? எதைச் செய்வீர்களோ தெரியாது. புத்தகத்தை மூடினதும் கதையின் நிகழ்ச்சிகள் மறந்து போனலும், அமைக்கப்பட்ட பாத்திரங்கள் நம்முள் நடமாட வேண்டும்.

9. ஓர் ஆசிரியனுக்கு வாழ்க்கையைப்பற்றி தனித்த ஒரு தத்துவம் இருக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் தத்துவமான ஓர் உயர் குன்றின்மீது இத்தனையும் நோக்க வேண்டும். இப்படி நோக்கினால் நாவலுக்கே ஒரு தனிச்சிறப்பு ஏற்படும். உதாரணமாக:
ஹார்டி இரக்கமற்ற ஒரு குருட்டுச்சக்தி உலகத்தை ஆட்டிப் படைக்கிறது என்ற மூல
தத்துவத்தை அடிப்படையாக வைத்துக் கதைகளை அமைத்துக் கொண்டேபோகிறார். அவர் கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அக்கருத்து படைக்கப்படுகிற நாவலுக்கு ஒரு மூலசக்தியாய் நின்றுகொண்டு மற்ற அம்சங்களுக்கு ஓர் உயிர் அளிக்கிறது என்ற உண்மையை ஒருவராலும் மறுக்க முடியாது.

10. நாவல் எந்த அனுபவத்தையும் சித்தரிக்கும். அதற்கு விலக்கான அனுபவமே ஒன்று மில்லை. உதாரணமாக: அறிவைப்பற்றிய (intellect) நாவல்கள் போதும் அது வாழ்க்கையைக் குலைத்துவிடும்; உண்மையான உணர்ச்சிக்குத்தான் (instinct) நாம் வணக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையான தத்துவத்தைக் காட்டப் பல நாவல் களைப் புனைந்து தந்திருக்கிறார் டி.ஹெச்.லாரன்ஸ் என்பதை நாம் நன்கறிவோம்.

±ØòÐ츨ÄÀüÈ¢ þÅ÷¸û - 26

±ØòÐ츨ÄÀüÈ¢ þÅ÷¸û - 26
-------------------------------------------
- §Å.ºÀ¡¿¡Â¸õ.

á.‚.§¾º¢¸ý.
===========

1. º¢Ú¸¨¾ ´Õ ÌÚ¸¢Â ¿¡ÅÄ¢ø¨Ä. «§¿¸ À¡ò¾¢Ãí¸¨ÇÔõ «§¿¸ ºõÀÅí ¸¨ÇÔõ º¢ò¾Ã¢ì¸§ÅñÊ þÕôÀ¾¡ø ´Õ ¿¡ÅÖìÌ «¸ýÈ º¢ò¾¢Ã츢Ƣ §ÅñÎõ. ´Õ ¿¢¸ú¾¡ý º¢Ú¸¨¾ìÌûÇ Åð¼õ. «ùÅð¼òÐìÌû ±ùÅÇ× «Äí¸¡Ãõ ¦ºöÂÄ¡§Á¡ «ùÅÇ× «Äí¸¡Ãõ ¦ºöÂÄ¡õ. ´Õ ¿¡ÅÄ¢ø Üð¼Ä¡õ; ¸Æ¢ì¸Ä¡õ; ¬É¡ø ¸¾¡À¡Åõ ¦¸ðÎô §À¡Å¾¢ø¨Ä. ´Õ ¸¨¾Â¢ø ´Õ À¾ò¨¾ ±Îò¾¡Öõ ¸¨¾ ÀØÐÀðÎô §À¡öÅ¢Îõ.

2. ¿¡¼¸ò¨¾ô §À¡Ä§Å º¢Ú¸¨¾Â¢Öõ ´ù¦Å¡Õ À¾ò¾¢üÌõ ´Õ ÀÂý þÕì¸ §ÅñÎõ. Å¡÷ò¨¾¸Ç¢ø º¢ì¸Éõ §ÅñÎõ. Å÷½¨É측¸ Å÷½¨ÉÔõ, †¡ŠÂò ¾¢ü¸¡¸ †¡ŠÂÓõ º¢Ú¸¨¾Â¢ø þ¼õ¦ÀÈ ÓÊ¡Ð. †¡ŠÂÁ¡É Å¢„Âõ ¸¨¾ô §À¡ì¸¢ý úò¨¾ «¾¢¸ôÀÎòи¢È¾¡ ±ýÚ À¡÷ì¸ §ÅñÎõ. þøÄ¡Å¢ð¼¡ø «¨¾ «Ê§Â¡Î ¾ûǢŢ¼§ÅñÎõ.

3. ¸¨¾Â¢ý ÓÊÅ¢ø ±Øõ ¿¡¾ò¾¢üÌì ¸¨¾ ÓØЧÁ ±¾¢¦Ã¡Ä¢ ¦¸¡Îì¸ §ÅñÎõ. ÍÕí¸î ¦º¡ýÉ¡ø «Éó¾Á¡É ¾ó¾¢¸û «¼í¸¢Â Å¡ú쨸 Å£¨½Â¢ø ´Õ ¾ó¾¢¨Âô §Àº ¨ÅôÀо¡ý º¢Ú¸¨¾.

4. ¸¨¾ìÌõ ¸Å¢¨¾ìÌõ «¾¢¸ Å¢ò¾¢Â¡ºÁ¢ø¨Ä. º¢Ú¸¨¾î ¨ºò㸨Éì ¦¸¡ïºõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø «Åý ´Õ ¸Å¢ ±ýÀÐ ÒÄÉ¡Ìõ. ¸Å¢ÔûÇõ À¨¼ò¾Åý¾¡ý ºÃ¢Â¡É ¸¨¾ ±Ø¾ ÓÊÔõ. «¸òШÈì¸¡É ´Õ ¿¢¨Ä¨Â (lyric) «¨¼óРŢθ¢ÈÐ ¯ñ¨ÁÂ¡É º¢Ú¸¨¾. '«¸òШÈôÀ¡'¨Åô §À¡Ä§Å º¢Ú¸¨¾Â¢Öõ ¦¾Ç¢Å¡¸ ¯½÷ ¦À¡í¸ ÅÕ½¢ì¸ôÀÎõ µ÷ «ÛÀÅò¨¾ Á¡üÈìÜÊ «øÄÐ ÌÆôÀìÜÊ §ÅÚ ±ó¾ «õºÓõ þÕì¸ þ¼Á¢ø¨Ä.

5. ¿¡Å¨Ä ´Õ Å¡úì¨¸î º¢ò¾¢Ã¦ÁýÚ ¦Á¡Æ¢ÂÄ¡õ. Å¡ú쨸¢ø ±¨Å¸¨Çô À¡÷츢§È¡õ? À¢ÈôÒ, ÅÇ÷ôÒ, þ¨Å¸¨ÇôÀüÈ¢ º÷ ¦ºö¸¢È Áì¸Ç¢ý §ÀîÍ, Áì¸Ç¢ý ̽í¸Ù째üÈ ¦ºÂø¸û, Áì¸Ç¢ý §À¡Ã¡ð¼í¸û, ¯½÷§Å¸í¸û, º¢Ã¢ôÒ, «Ø¨¸, ¯Â÷ó¾ Äðº¢Âí¸û, «¨Å¸Ç¢ý, º¢¨¾×, ¦ÅüÈ¢, ²Á¡üÈõ, ¿øÄÐ, ¾£¨Á, Á¨Æ, ¦Å¢ø, ÌÇ¢÷, ¦ÅôÀõ, ÒÂø, «¨Á¾¢ - þ¨Å «¨Éò¨¾Ôõ Å¡ú쨸¢ý Å¢Ã¢ó¾ ¸¡ðº¢Â¢ø §¿¡ì̸¢ý§È¡õ.

6. ¿¡Åø Å¡ú¨¸Â¢ý ´Õ Å¢Á÷ºÉÁ¡ö þÕì¸Ä¡õ, «øÄРŢ¡츢¡ÉÁ¡ö þÕì¸Ä¡õ. ¿¡ÅÖìÌô ¦À¡Õû Å¡ú쨸 ±ýÀ¾¢ø ³ÂÁ¢ø¨Ä. ¬¾Ä¡ø ±ÎòÐì ¦¸¡ñ¼ Å¢„Âõ ±øÄ¡ ¯ûÇí¸ÙìÌõ ¦À¡Ðšɾ¡Ôõ, ¯½÷ À¡ö¸¢ýÈ ¬úó¾ ¯ûÇò¨¾ò ¦¾¡ÎÅÐÁ¡Ôõ þÕì¸ §ÅñÎõ. ¦ÅÚõ ¸¨¾¾¡§É ±ýÈ ±ñ½ò¾¢ø ±¨¾Ôõ «¾¢ø ÒÌò¾¢Å¢¼Ä¡õ ±ýÈ ¾ÅÈ¡É ±ñ½õ Ó¨Çì¸ì ܼ¡Ð. ¿¡õ À¡÷ò¾ Å¢„Âõ, ¿¡õ Ѹ÷ó¾ «ÛÀÅõ, ¿¡õ «¸ÁÉò¾¢ý ¬Æò¾¢ø ¯½÷ó¾ Å¡ú쨸¢ý ¯½÷¸û þ¨Å¸ÙìÌ ¯Õ즸¡Îì¸ §ÅñÎõ.

7. ӾĢø ¸ÅÉ¢ì¸ §ÅñÊ Ţ„Âõ ¸¨¾. ¸¨¾, ¦º¡øÄò ¾Ìó¾ ¸¨¾¾¡É¡? þÐ ¾£÷Á¡ÉÁ¡ÌÁ¡É¡ø, «¨¾ «Æ̦ÀÈô Ҩɸ¢ý§È¡Á¡? - ±ýÈ §¸ûÅ¢ À¢ÈìÌõ. ¸¾¡À¡ò¾¢Ãí¸û ¦ºùÅ§É À¨¼ì¸ôÀθ¢ýÈÉÅ¡? ±ÎòÐ즸¡ñ¼ Å¢„ÂòÐ째üÈÅ¡Ú ¸¨¾Â¢ý «õºí¸û, ¦¾¡¼÷Ò¨¼ÂÉÅ¡ö «¨Áó¾¢Õ츢ý ÈÉÅ¡? - ±ý¦ÈøÄ¡õ À¡÷ì¸ §ÅñÎõ.

8. ´Õ ¿¡ÅÄ¢ø Á¢¸×õ Ó츢ÂÁ¡¸ì ¸Õ¾ìÜÊÂÐ ¸¾¡À¡ò¾¢Ãí¸û. ¿¢¾õ ¿õ Óý ¿¼Á¡Îõ À¡ò¾¢Ãí¸Ç¢ý º¢ò¾¢Ãí¸¨Ç «¨ÁôÀ£÷¸Ç¡? «øÄÐ ¨¾Ã¢ÂÁ¡ö «Á¡Û‰ÂÁ¡É À¡ò¾¢Ãí¸¨Çî º¨ÁôÀ£÷¸Ç¡? Å¢º¢ò¾¢Ã ¯ÕÅí¸¨Çô À¨¼ôÀ£÷¸Ç¡? ±¨¾î ¦ºöÅ£÷¸§Ç¡ ¦¾Ã¢Â¡Ð. Òò¾¸ò¨¾ ãÊÉÐõ ¸¨¾Â¢ý ¿¢¸ú¸û ÁÈóÐ §À¡ÉÖõ, «¨Áì¸ôÀð¼ À¡ò¾¢Ãí¸û ¿õÓû ¿¼Á¡¼ §ÅñÎõ.

9. µ÷ ¬º¢Ã¢ÂÛìÌ Å¡ú쨸¨ÂôÀüÈ¢ ¾É¢ò¾ ´Õ ¾òÐÅõ þÕì¸ §ÅñÎõ. ¾ýÛ¨¼Â Å¡ú쨸ò ¾òÐÅÁ¡É µ÷ ¯Â÷ ÌýÈ¢ýÁ£Ð þò¾¨ÉÔõ §¿¡ì¸ §ÅñÎõ. þôÀÊ §¿¡ì¸¢É¡ø ¿¡ÅÖ째 ´Õ ¾É¢îº¢ÈôÒ ²üÀÎõ. ¯¾¡Ã½Á¡¸:
†¡÷Ê þÃì¸ÁüÈ ´Õ ÌÕðÎîºì¾¢ ¯Ä¸ò¨¾ ¬ðÊô À¨¼ì¸¢ÈÐ ±ýÈ ãÄ
¾òÐÅò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ ¨ÅòÐì ¸¨¾¸¨Ç «¨ÁòÐì ¦¸¡ñ§¼§À¡¸¢È¡÷. «Å÷ ¸Õò¨¾ ¬§Á¡¾¢ì¸ §ÅñÎõ ±ýÈ ¸ð¼¡Âõ þø¨Ä. ¬É¡ø «ì¸ÕòÐ À¨¼ì¸ôÀθ¢È ¿¡ÅÖìÌ ´Õ ãĺ쾢¡ö ¿¢ýÚ¦¸¡ñÎ ÁüÈ «õºí¸ÙìÌ µ÷ ¯Â¢÷ «Ç¢ì¸¢ÈÐ ±ýÈ ¯ñ¨Á¨Â ´ÕÅáÖõ ÁÚì¸ ÓÊ¡Ð.

10. ¿¡Åø ±ó¾ «ÛÀÅò¨¾Ôõ º¢ò¾Ã¢ìÌõ. «¾üÌ Å¢Äì¸¡É «ÛÀŧÁ ´ýÚ Á¢ø¨Ä. ¯¾¡Ã½Á¡¸: «È¢¨ÅôÀüȢ (intellect) ¿¡Åø¸û §À¡Ðõ «Ð Å¡ú쨸¨Âì ̨ÄòÐÅ¢Îõ; ¯ñ¨ÁÂ¡É ¯½÷ìÌò¾¡ý (instinct) ¿¡õ Žì¸õ ¦ºö§ÅñÎõ ±ýÈ «ÊôÀ¨¼Â¡É ¾òÐÅò¨¾ì ¸¡ð¼ô ÀÄ ¿¡Åø ¸¨Çô Ò¨ÉóÐ ¾ó¾¢Õ츢ȡ÷ Ê.¦†î.Ä¡ÃýŠ ±ýÀ¨¾ ¿¡õ ¿ý¸È¢§Å¡õ.

(þýÛõ ÅÕõ)

Saturday, June 21, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம். .

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.

2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்
பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.

3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப்
பிறருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.

4. இவ்வுலகில் எதிரிடையான எவ்வளவோ பொருள்களும் குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மை இருக்கிறது. கூடவே தீமையும் இருக்கிறது. அழகு இருக்கிறது. அதனுடனேயே அருவருப்பான விஷயமும் இருக்கிறது. கருணை இருக்கிறது. கொடுமையும் இருக்கிறது....இவற்றில் எழுத்தாளன், எப்படி எந்தெந்த அளவுக்கு, எந்தெந்த விஷயங்களைப் பொறுக்கி எடுத்துத் தன் சிருஷ்டித் தொழிலை செய்ய வேண்டியது? என்ன அளவுகோல்? எப்படி எடைபோட்டு விஷயங்களை எடுத்துக் கொள்வது? எந்தச் சல்லடைமூலம் தனக்கு வேண்டிய சாமான்களை சலித்து எடுப்பது?
........எழுத்தாளன் நல்லதோர் எண்ணத்தில், மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனையில், உள்ளத்தை உயர்த்தக்கூடிய அனுபவத்தில் நிலைத்து நிற்குமேயானால் அப்போது எழுத்தின் தன்மையும் தானே சிறந்தோங்கி விளங்குகிறது.

5. எழுத்து என்பதே சத்தியம்(truth), சுந்தரம்(beauty), சிவம்(goodness) இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையே உலகை இயக்குபவை. எழுத்திலே இவற்றையே பிரதிபலிக்க வேண்டும். தவிர ஒரு அடிப்படையான குறிக்கோளும் வேண்டும். அடிப்படையான லட்சியத்துடன் எழுதும், எழுதப்படும் எதிலுமே இவை மூன்றும் பிரதிபலிக்காமலிராது.

Sunday, June 15, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.
பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது இலக்கியம்.

2. இலக்கியம் தோன்றுவதற்கு எந்த அளவு கற்பனை தேவையோ அந்த அளவு வாழ்வும் தேவைப்படும். உலகத்தில், வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் இலக்கிய கர்த்தரின் மனது பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இப் பதிவுகளைத்தான் கற்பனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுகிறது. தள்ளுவதைத் தள்ளி வேண்டியவற்றைச் சேர்த்து, இலக்கிய சிருஷ்டியை உருவாக்குகிறது. அதனால்தான் வாழ்வுக்குப் போட்டியான உலகமாக அது அமைகிறது - திரிசங்குவின் உலகத்தைப் போல.

3. இலக்கியமென்பது ஒரு சிலருக்காக அல்ல. எல்லோருக்கும்தான் என்னும் அடிப்படை
ஒப்புக் கொள்ளப்படுமானால் இலக்கிய நடையைப்பற்றி அதிக விவாதத்துக்கு இடமில்லை. சாதாரன ஜனங்களுக்கு இலக்கியத்தின் மூலம், இன்பத்தையும் புது திருஷ்டியையும் உண்டாக்க விரும்பும் இலக்கியகர்த்தன் நடைமுறை பாஷையைப் புறக்கணிக்க முடியாத். புறக்கணித்தால் தன் நோக்கத்தில் வெற்றிகாண இயலாது.

4. பாம்பு அடிக்கடிசட்டை உரித்துக் கொள்வதுபோல எழுத்தாளன் - தன்னைப் புதிசுபடுத்திக் கொள்ள வேண்டும்.

5. எனக்கு எப்போதும் உனர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாம் இடந்தான்.

6. தன்னை அறியப் பல வழியுண்டு. எழுத்தும் ஒரு வழி.

7. எழுத்தின் மூலமாக வாழ்க்கையைப் போட்டோ பிடிப்பது முடியாத காரியம். எழுத்தாளனுடைய மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாய் மாறிவிடும்.

8. இலக்கியத்தைப் பிரசாரம் ஆக்க முயண்றாலும், பிரசாரத்தை இலக்கியமாக்க முயன்றாலும், 'விதைக்கும் ஆகாமல் கறிக்கும் உதாமல் போவது' என்பார்களே, அதைப் போன்ற நிலையைத்தான் தமிழ் இலக்கியம் அடையும்.....வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் இலக்கியத்துக்கு - மறுக்கும் சிருஷ்டித்திறனுக்கு அமரத்துவம் கிட்டுவது சந்தேகமே....

.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)

1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.

2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.

3. எழுதுவது என்பது மிக எளிய விஷயம். ஆனால் எழுதத் தொடங்குமுன் நிறைய மனத்தில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறைய யோசனை செய்து மனத்திலேயே கதையை உருவாக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

4. கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையைவிட அதிகம் என்றுகூடச் சொல்லலாம் - முக்கியமானது நடை, கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், சம்பாஷணைகளைச் சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் - எல்லாம் முக்கியமானவை.

5. நகைச்சுவை எழுதும்போது, சிலேடைகளைப் பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைச் சேர்க்க முடியும். அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

6. அதீதமும் நகைச்சுவையில் ஒரு முக்கிய அம்சம். இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

7. நகைச்சுவைக் கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, வக்கிரமான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம். எப்படி இருப்பினும், அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும்.

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22. எம்.டி.வாசுதேவன் நாயர்.

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.

2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு நாம் எழுத ஆரம்பிக்கும்போது, நாம் எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுவோம். அப்போது நமக்கு நம்பிக்கை ஏற்படும். தொடக்கத்தில் எழுதத் துவங்கும்போது மழை வெள்ளம் இழுத்துச் செல்லும் காகித ஓடம் போல் சில முன்னோக்கிப் போகும். பல மூழ்கும். நம்மால் எழுத முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நாம் எழுதப் போகும் விஷயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

3. 'எதைப்பற்றி எழுதவேண்டும்?' என, முதலில் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை முழுக்கக் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. வாழ்க்கை என்றாலே க¨தைகள்தானே! நாம் அடிக்கடி சொல்வோமே 'அவனுடைய கதை இதைவிட ரொம்பக் கஷ்டம்' என.

4. வாழ்க்கைப் பரப்பினூடே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்குரிய அம்சங்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. இவற்றுள் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்றுதான்.

5. இலக்கிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் இளம் இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய புதிய புதிய எழுத்து முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விடாமுயற்சி ஒன்றின் மூலமாக மட்டுமே இதை ஒருவரால் சாதிக்க இயலும். 'நாம் எழுதியது சரியல்ல' எனத் தோன்றுமானால் உடனே அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

6. இலக்கியப் படைப்பின்பொது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மொழியாகும். சாதாரண மனிதர்களுக்குப் புரியும்படியான மொழியிலேயே நாம் ஒரு படைப்பைப் படைக்க வேண்டும். ஒரு படைப்பாளி படைக்கும் படைப்பை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. அவர்களை வாசிக்குமாறு தூண்டிவிடவேண்டியது இலக்கியவாதி களின் கடமையகும். இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லத் தக்கதாக இருக்கவேண்டும் இலக்கிய வாதிகள் பயன்படுத்தும் மொழி. வாசகர்களின் இதயத்துக்குள் நுழைந்து, புதியதொரு சிந்தனையைக் கிளறிவிடும் தன்மையும் வலிமையும் அதற்கு இருக்க வேண்டும்.

7. நாம் எழுதிய கதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஏதாவது 'கைடு' களைத் தேடிப் போகும்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது. காரணம், அம்மாதிரி கதைகளை வாசகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எழுதி எழுதி அவற்றை நாமே கிழித்துப் போட வேண்டும். பிறகு அவற்றிலிருந்து சிறந்த உள்ளடக்கம் கொண்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த மொழியில் எழுதுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒரேஒரு வழி இது ஒன்றுதான். அதாவது, சோர்வடையாமல் திரும்பத் திரும்ப எழுதுவது.

8. இலக்கியப் படைப்பில் 'உருவம்' ஒரு மேல் சட்டை போன்றதல்ல. ஒரு தோல் போன்றது.
ஒரு படைப்பிற்கு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய எளிய சொற்களாலான மொழிதான் மிக வலிமையினையும் அழகினையும் அளிக்கிறது. எளிமையான மொழிக்குரிய சிறப்பும் இதுதான். வார்த்தைகளுக்கு இடையே காணப்படும் இடைவெளிகளுக்குக்கூட அநேக அர்த்தங்கள் இருக்கிறது. உலகில் எத்தனை ஊடகங்கள் வந்தாலும் சரி, இலக்கியம் நிலைத்து நிற்பது உறுதி. காரணம் மொழிக்கு அவ்வளவு வலிமை உண்டு.


9. படைப்பின்போது அதற்குத் தோதுவான வார்த்தைகள் கிடைக்காமல் தேடித் திரிவது பண்டைக்காலம் தொட்டே உள்ள சிக்கல்தான். வார்த்தைகள்தான் பணிபுரிவதற்குரிய ஆயுதமும் தரத்தை நிச்சயிப்பதுமாகும். வார்த்தைகளோடு இழுபறி ஏற்பட்டால் ஒரு படைப்பு நன்றாக அமையும்.

10. இனி ஒரு முக்கிய விஷயம். நாம் ஒவொருவரும் புத்தகங்களைக் காதலிக்க வேண்டும். எனக்கு எழுதுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த வாசிப்புதான்.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21. மகாகவி பாரதியார்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.

2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,
வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

4. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று.

5. உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

6. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.

7. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்தில் தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ்நடை எழுதும்.

Sunday, May 04, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 20 - அசோகமித்திரன்

1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'

2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு
மிகவும் அவசியம்.

3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.

4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.

5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான படைப்பாற்றலுக்கு அடையாளம்.

6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை.
அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது

Wednesday, April 23, 2008

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்'- 19 -கி.ராஜநாராயணன்

1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ்.
ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.

2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி வாக்கியம்தான் முக்கியம் - தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலை செய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கடேசியில் கண்களைத் திறக்கிற மாதிரி!

3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவே இல்லாமல்கூட கதை எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படி வேண்டுமானாலும் கூந்தலை முடிந்து காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள் அடக்கம்.

4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் எழுதப்பட்ட கருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம். இன்றைய தேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித் தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள் கொடுப்பேன்.

5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும். அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச் சுற்றி கிடப்பதுபோல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.

6. கருக்களில் நாலு வகை உண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில் எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாக அனுபவித்தது சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.

7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள் தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை.

8. ஒவ்வொரு மனுஷனிடமும் அவன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவலுக்கான கதை நிச்சயம் இருக்கும். தன்னுடைய வாழ்க்கையையே சுவாரஸ்யமாக - போரடிக்காமல் - சொன்னால் அதுவே ஒரு நாவலாகி விடும்.

9. நாவல் என்பது ஒரு பரந்த விஸ்தாரமான களம். எழுத்தாளன் அதில் ஓடியாடி இஷ்டம்போல் 'விளையாட'லாம். சிறுகதை போல, தீ வளையத்துக்குள் பாய்ந்து தீக்காயம் படாமல் வெளியே வருவதோ, இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டிலோ அல்லது மேலுங்கீழாகவோ வட்டமடிக்கிற சோலியே கிடையாது.

10. நாவலில் இன்னொரு முக்கிய அம்சம், நடை; மொழிநடை.. சரித்திர நாவல் என்றால் அதில் வருகிற அரசியும் அரசனும் தனிமையில் பேசும்போதுகூட அவர்களுக்குள் ஏட்டுத் தமிழ் நடையில்தான் பேசுவார்கள் என்கிற மடத்தனமான ஓர் எண்ணம் இருக்கிறது! (நம்முடைய வானொலி சரித்திர நாடகங்களைக் கேட்டிருக்கிறீர்களா?) இரண்டு புலவர்கள் சந்தித்து ஒருத்தருக்தொருத்தர் பேசிக் கொள்ளும்போதுஅப்படிப் பேசினார்கள் என்றால், தொலைந்து போகிறது என்று விட்டுவிடலாம்.; ராஜாவும் ராணியும் படுக்கை அறையில் ஏட்டுத் தமிழில் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குச் சரியயாகத் தோன்றவில

Thursday, April 10, 2008

எழுத்து க்கலை பற்றி இவர்கள்...........18 - வாசந்தி

1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது - நீங்கள் சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் - உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். - அவர்களிடையே இத்தகைய பாதிப்பை உங்கள் கதை ஏற்படுத்தவில்லையானால், தவறு உங்கள் அனுபவத்தில் இல்லை - அதை நீங்கள் சொன்ன விதத்தில்.

2. வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின் பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும் நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள் கிடையா.

3. கதையைச் சொல்லும் பாணி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சொல்லப் போகிற விஷயத்துக்குத் தகுந்தமாதிரி மாறுபடும். கதையை ஆரம்பிக்கும் விதமே வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கிரமப்படுத்தி எழுத முற்பட்டீர்களானால், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டைப் போல் ஆகிவிடும் - start with bang - எடுத்த எடுப்பிலேயே வாசகரின் பார்வையைக் கட்டிப் போட வேண்டும். நேராக விஷயத்துக்கு வந்து கதையைப் பின்னுங்கள்.

4. அனாவசிய, சுவாரஸ்யமற்ற சம்பாஷணைகள் அலுப்புத் தட்டுவதுபோல். சம்பஷணையே இல்லாத கதை ஓட்டமும் அலுப்புத் தட்டும்.

5. உங்களுடைய கருத்துக்களை, (தீர்மானமான கொள்கைகளைக் கூட) மண்டையில் அடிக்கிற மாதிரி 'ஆகையால் வாசகர்களே' என்று உபதேசிக்கிற தினுசில் புகுத்தாதீர்கள். அதை அப்படியே ஏற்கும் பாமரத்தனம் இப்போது எந்த வாசகருக்கும் இல்லை. உங்களுடைய நல்ல எண்ணங்கள் கதையில் ஒரு சுகந்தம்போல் வரவேண்டும்.
அதைக் கதாபாத்திரங்கள் மூலம் அல்லது சம்பவங்கள் மூலம் நாசூக்காகத் தெரிவிக்கலாம். அநேகம் சிறுகதைகள் சப்பென்று போவதற்கும், லேசாக எரிச்சலூட்டுவதற்கும், இந்த நாசூக்குத் தெரியாமல், எழுத்தாளர்கள் தங்களைக் கதைகளுக்குள் 'ப்ரொஜெக்ட்' செய்வதுதான் காரணம்.

6. கதையில் ஒருஆச்சரியம் காத்திருக்க வேண்டும். நம்பும்படியான ஆச்சரியம் - அது அதிர்ச்சி தரலாம் அல்லது சிரிக்க வைக்கலாம் - எதுவாக இருந்தாலும் 'பூ, இவ்வளவுதானா!' என்று வாசகர் அலுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

7. என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் கடைசி பாராதான் மிகக் கடினமானது. அதிகம் கவனம் கொடுக்கப்பட வேண்டியது. ஏனென்றால் நமது நோக்கம் வாசகரின் பார்வையை ஈர்ப்பது மட்டுமல்லை - அவருடைய நினைவுப் பெட்டகத்தில் இடத்தைப் பிடிப்பதும்கூட - நமது கடைசிப் பாராவைப் பொறுத்திருக்கிறது, நமது கதையின் ஆயுள

Wednesday, April 02, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள் - (17 ) வி.ஆர்.எம்.செட்டியார்.

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள்,
சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில்
சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.

2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின் நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது.

3. சிறுகதையை எப்படி எழுதுவது என்று தயங்குவதில் யாது பயன்? வாழ்க்கையை நன்றாய்க் கவனிக்க வேண்டும். மனித இயல்பு எப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மின்சார வேகத்துடன் புரட்சியடைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; மனித குணமும் விதியின் குணமும் எப்படிப்
போரிடுகின்றன என்பதையும் நன்கு ஆராயவேண்டும்; உலகத்தின் சூழ்ச்சிகள் எப்படி
உலகத்தையே யுத்த அரங்கமாக்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்; எழுதும்
நடைக்கும் பேசும் நடைக்கும் உள்ள வித்தியாசங்களை நுட்பமாக அறிய வேண்டும்; கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி உயிர்ப் பாத்திரங்களாக, மெய்யுருவங்களாக அமைய வேண்டு மென்பதையும் ஆராய வேண்டும்.இவைகளே நல்ல சிறுகதையின் லட்சணங்களாகும்.

4. சிறுகதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சிறு நிகழ்ச்சிகளைச் சற்று
ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதிலிருந்து குறைந்தது இருபது சிறுகதைகளை எழுதிவிடலாம். நல்ல ஞாபகத்துடன், நிறைந்த நுட்பத்துடன் ஞாபக டைரியைப் புரட்ட வேண்டும். பல நண்பர்களு
டைய சுயசரிதையினின்றும், நியூஸ்பேப்பரில் கண்ட நிகழ்ச்சிகளிலிருந்தும், கடைத்தெருவிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், துறைமுகத்திலும், டிராமாக் கொட்டகைகளினின்றும், குடும்பங்களில் நிகழும் குறிப்புகளிலிருந்தும் மிகமிக அருமையான சுவைமிகுந்த சிறுகதைகள் எழுப்பலாம். ஒரு சிறுகுழந்தை அம்புலிக்கு அழுவது முதல், வறுமையால் வாடித்துடிக்கும் பிச்சைக்காரன் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மடிவதுவரை எதுவும் சிறுகதைச் சரக்குதான்; எம்.ஏ படித்துவிட்டு
வேலைக்கு அலைந்து கதறுவது முதல் தன் சர்டிபிகேட்டை நெருப்பில் போடுவதுவரை எதுவும்
சிறுகதையின் சீற்றம்தான். எல்லாம் எழுதும் சொல்வன்மையிலே சிறுகதைச் சித்திரம் இன்பமாய் வளர வேண்டும்.

5. கதையின் நடை விறுவிறுப்புடன் பாய வேண்டும். சிறுசொற்கள் காவிய வேகத்துடன் மனநிலையைச் சித்தரிக்க வேண்டும். இயற்கையின் சௌந்திரியத்தையும் மொழியின் இதயத்தில்
எழுப்ப வேண்டும். சொற்கள் கதிர்களாகவும், வர்ணங்களாகம்,அழகு கூட்டங்களாகவும் மின்ன வேண்டும். இதய ஒலியும், இதய ஒளியும், உள் இயற்கையும், வெளி இயற்கையும் மொழியின் மர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

(V.R.M Chettiar B.A ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் பிரபலமாய் இருந்த அறிஞர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியவர்; சிறந்த விமர்சகர்; 'My Shelly', 'Oscar Wilde's de profundis - An Appreciation','Lyric festoons', 'Tagore and Arabindo', 'Lucid Moments', 'Gems from Montaigne' ஆகிய நூல்களை எழுதியவர்.
திருச்சிக்காரர். நிறைய தமிழ் நூல்களும் எழுதி தானே வெளியிட்டவர்.)

Sunday, March 02, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள் ......(.16.) -தொ.மு.சி.ரகுநாதன்.

1. உள்ளத்தின் நேர்மையோடு, தன்னை இழந்து , கதாபாத்திரமாக மாறி எழுதும் ஆசிரியனின் பாத்திர சிருஷ்டிகள் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாத்திரங்களை விட, உண்மையாக உயிர் படைத்து உலவும் நபர்களாகத் தெரிவார்கள்.

2. வாழ்க்கையின் உன்னதம் அல்லது வீழ்ச்சிகளைப் பற்றியே எழுதவேண்டும் என்பதில்லை. சாதாரண மன நெகிழ்ச்சிகளையுமே மனோதர்ம நூலில் கோர்த்து அழகிய படைப்பாக்கி விடலாம்.

3. கதைக்கு வேண்டியது - உண்மைக்கு, எதார்த்த நிலைக்குப் புறம்போகாத கதை அம்சம். அதாவது நடைமுறை விஷயங்களைப்பற்றி எழுதுவது நல்லது.

4. உருவ அமைப்பு சிறுகதைக்கு மிகவும் முக்கியமானது. இலக்கியம் என்று வந்து விட்டால் அதற்கு ஒரு வரம்பு கிழித்துக் கொள்வது நல்லது. எந்தக் கதைக்கும் ஒரு ஆரம்பம், இடையிலே சம்பவங்கள் அல்லது மனோதர்மத்தினால் ஏற்பட்ட பின்னல், ஆரோகண அவரோகண கதிகள், முடிவு முதலியவற்றை ஆசிரியன் இஷ்டம்போல் கையாண்டு ஒரு பூர்ண உருவம் கொடுக்க வெண்டும்.

5. இலக்கியம் என்பது உள்ளடக்க அம்சத்தில் சமூகத்துக்குத் தேவையான, நன்மை பயக்கக்கூடிய நல்ல பல அம்சங்களையே பிரதிபலிக்க வேண்டும். துவராடை புனைந்தவர்கள் எல்லாம் துறவிகளாவதில்லை. அது போல அழகிய கலாரூபம், உருவ அமைதி அமைந்து விட்டால் மட்டும் ஒரு சிருஷ்டி இலக்யமாகி விடுவதில்லை. மக்கள் சமுதாயத்தை மறந்து எழுதுகிறவனை மக்களும் மறந்து விடுவார்கள்.

6. எல்லா இலக்கியங்களும் வாசகர்கள் மனதில் ஒரு கருத்தையோ, பல கருத்துக் களையோ பதிய வைக்கவே எழுதப்படுகின்றன. அந்த வகையில் எல்லா இலக்கியங்களும் பிரச்சார இலக்கியம்தான். அந்தக் கருத்துக்கள் கலையழகோடு கூடிய உருவ அமைதியோடு தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்றாலும் அந்தக் கருத்து சமூகத்துக்குப் பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டியதே அவசியமானது. அழகான உருவ அமைதியும் ஆரோக்கியமற்ற உள்ளடக்கமும் ஒரு இலக்கியப் படைப்பில் இடம் பெற்றிருக்கும் என்றால் அது குஷ்டரோகிக்குப் பட்டும் பீதாம்பரங்களும் போர்த்திக் கொலு அமர்த்திய கதையாகத்தான் இருக்கும்.

7. ஆசிரியன் தான் சொல்ல வந்த கருத்தைப் பச்சையாக பிறந்தமேனியாக வெளியிட்டாலும் அது இலக்கியமாகாது; அல்லது தனது கருத்தை வலியுறுத்து வதற்காக செருப்புக்குத்தக்க காலைத்தறிக்கும் கதை போல், யதார்த்த உண்மைகளைத் திரித்தோ, மறைத்தோ, மறுத்தோ எழுதினாலும் அந்நூல் இலக்கியமாகாது.

8. ஒரு இலக்கிய ஆசிரியனுடைய கருத்து எந்த அளவுக்கு இலைமறை காய்மறையாக இணைந்து நிற்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதன் இலக்கியத் தன்மையில் மேம்படுகிறது என்பது ஒரு உண்மை; அவ்வாறு இலைமறை காய்மறையாக இணைந்து பிணைந்து நிற்கும் அக்கருத்து வலிந்து புகுத்திவிட்டது போன்று அமையாமல், அந்த நூலில் பிரதிபலிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்தும் யதார்த்தத்துக்கு முரணற்ற வகையில் உருவாகி உரம்பெற வேண்டும் என்பது மற்றொரு உண்மை.

Thursday, February 21, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 15.-ஜெயமோகன்.

1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே.

2. நாவல் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டக் கூடிய காமிரா ஷாட்.

3. சிறுகதைக்கு கட்டுக் கோப்பு இருக்க வேண்டும் என்பது அதன் செவ்வியல் விதி. அதை மாற்ற முயன்று எழுதப்பட்ட சிறுகதைகளில் கலைவெற்றிகள் பல உண்டு ஆனால் அவை மெல்ல மெல்ல சிறுகதையின் வடிவத்தை இல்லாமல் ஆக்கி விட்டன.

3. சிறுகதையின் மௌனம் அது முடிந்த பிறகு உள்ளது.

4. நாவலின் மௌனம் அது விடும் இடைவெளிகளில் உண்டு. நிகழ்வுகள், சித்தரிப்புகள் நடுவே இடைவெளி.

5. கவிதையின் மௌனம் அதன் சொற்களுக்கும் படிமங்களுக்கும் இடையே ஆன இடைவெளியில் உள்ளது. இடைவெளி என்பது வாசகன் தன் கற்பனை மூலம் நிரப்பிக்கி கொள்ள வேண்டிய ஒன்று.

6. நாவல் ஒருமை கொள்ள முடியாது. ஏனென்றால் அது தன் பேசு பொருளை 'முழுமையாக' சொல்லிவிட வேண்டு மன்று முனைகிறது. அந்த எண்ணத்தை நம்மில் ஏற்படுத்துகிறது.

7. இலக்கண ரீதியாக நோக்கினால் ஒரு நாவலுக்கு சிறுகதையின் கூர்மை வந்துவிட்டதென்றாலே அது குறுநாவல் தான்.

8 .நாவலுக்கு உச்ச கட்டம் இருக்கலாம். ஆனால் இறுதி முடிச்சு இருக்குமென்றால் அதற்காகவே அதன் உடல் முழுக்க உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படியானால் அதன் உடலுக்குள் வாசக இடைவெளி நிகழ முடியாது. ஆகவே முடிவில் திருப்பங் கொள்ளும் நாவல்கள் சிறப்பாக அமைவதில்லை

Tuesday, February 19, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்............14- அ.ச.ஞானசம்பந்தன்.

1. ஒரு சிறுகதை நம் மனதில் தங்க வேண்டுமானால் இரண்டே வழிகள்தான் உண்டு. அதில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இன்றேல் அதில் வரும் பாத்திரங்கள் நாம் மதித்து விரும்பும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. ஆழமான உணர்ச்சியை வெளியிடுவதிலும் அதையும் சுருங்கச் சொல்லிப் பதிய வைப்பதிலும் சிறுகதை கவிதையை அடுத்து நிற்கிறது.

3. கதை உயிர் பெறுவது நிகழ்ச்சிகளால் அன்று ! அவற்றைக் கூறும் ஆசிரியன் பயன்படுத்தும் கற்பனைத் திறமும் கூறும் திறமுமே கதைக்கு உயிர் தருகின்றன. அவன் பொறுக்கிய நிகழ்ச்சிகள் கூறப்படும் முறையில் இருந்தே கதையின் உயர்வும் தாழ்வும் விளங்கும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சி சிறுகதையில் இருக்கக் கூடாது என்பதன்று. ஆனால், இரண்டு நிகழ்ச்சிகள் இருப்பின் அவற்றின் தொடர்பு நன்கு அமைக்கப் படல் வேண்டும். படிப்பவர் கவனம் இரண்டிலும் பட்டுத் தெறித்து விடாதபடி நிகழ்ச்சிகள் அமைக்கப்படல் சிறந்தமுறை. நிகழ்ச்சிகள அதிகப்படினும் ஒரு நடு நிகழ்ச்சி இருக்க, அதன் கிளைகளாக ஏனையவை அமைதல் நன்று.

5. சிறுகதைகளில் காணப்பெறும் நிகழ்ச்சி அன்றாடம் நாம் காணும் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால், வாழ்க்கைச் சூழலில் பட்டுக் 'கருமமே கண்ணாயினார்' என்று திரியும் நமக்கு அது பெரிதாகப் படுவதில்லை. ஆனால், தக்க சூழ்நிலையில் அதே நிகழ்ச்சி சிறுகதையில் இடம் பெறின் நம்மைக் கவர்ந்து விடுகிறது.

6. சிறுகதை எல்லைக்குள் அடங்கும் நிகழ்ச்சி வேண்டும். அந்நிகழ்ச்சியும் பூரணமாக அமைய வேண்டும். இனி அது வளர்க்கப்பட இயலாது; மேலும் வளர்த்துச் சென்றால் பயன் ஒன்றுமில்லை என்று கூறத் தக்க நிலையில் அது முழுவதாக அமைந்திருத்தல் வேண்டும். இம் முழுத்தன்மை கதையின் எல்லைக்குள் அமைந்து விட்டால் அன்றிச் சிறப்பில்லை.

7. சிறுகதை எந்த ஒன்றைப் பற்றி விவரிக்க எழுந்ததோ அது தவிர ஏனையவற்றில் நம் கவனத்தை ஈர்த்தல் கூடாது. குறிக்கோளிலும் அடைவிக்கும் பயனிலும் ஒருமைத் தன்மை இருப்பதே சிறுகதையின் சிறப்புக்கு அடையாளம்.

8. எங்கே ஒரு சொல்லானது கற்பனையைத் தூண்டும் சக்தியோடு காணப்படு கிறதோ, எங்கே ஒரு சொல் ஒரு சம்பவத்தை அல்லது படத்தை அப்படியே நினைவிற்குக் கொண்டு வருகிறதோ, எங்கே ஒரு சொல் கற்பனைச் சக்திக்கு விருந்தளிக்கிறதோ, அங்கே, அந்தச் சொல் தோன்றும் இடத்திலே, நாம் கவிதையைக் காண்கிறோம்.

Tuesday, February 12, 2008

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்.............13. புதுமைப் பித்தன்;

1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை.

2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கி விட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.

3. ஒரு தனிச் சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குணவிஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் லிரிக் என்ற கவிதைப் பகுதி போல் சிறுகதை. சிறுகதையின் ரூபம் எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது.

4. சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சிஅல்லது வீழ்ச்சிஎன்ற மூன்று பகுதிகள் உண்டு. இம்மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதைகளில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம், முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை திடீரென்று மத்திய சம்பவத்தின் உச்சஸ்தானத்தில் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்பதே கிடையாது. அதாவது, கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப் பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பக்கத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்யப் படாத காரியம்......கதைகளுக்குச் சம்பவம் அவசியமா? இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா? என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவருடைய சுவையையும் ரசனையையும்தான் பொறுத்தது. அவரவருடைய அனுபவத்திற்கும், ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்க முடியும்.

5. பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என்று ஒரு தத்துவம் இருப்பதாகவும் , அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவித சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றிப் பேசுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களரியையும், மனக் குரூரங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால் ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப் போகிறது? இற்றுப் போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப் போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே?

6. நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரம்மநாயகம் இத்தியாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு இவர்களது வழ்க்கைக்கு இடமளிக்காமல் காதல், கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

7. பயன் கருதாது தன்மயமாகி லயித்து ஒட்டிப் புளுகுவதுதான் கதை.

8. சிறுகதை வாழ்க்கையின் சிறிய சாளரம். வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பிக்கிறது.

(இன்னும் வரும்)

Tuesday, February 05, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள்..........12- க.நா.சுப்ரமண்யம்

1. 'கண்ணீத்துளி வர உள்ளுருக்குதல்' கலையின் ஒரு கோடிச் செய்கை. அசைந்து கொடுக்காமல் ஒதுங்கி நிற்கச் செய்வது கலையின் மறு கோடி.

2. இரண்டாந்தரம் படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல. இரண்டாம் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல புது அம்சங்கள் கண்ணில் படவேண்டும். கருத்தில் உறைக்க வேண்டும். அப்படிப் புதிதாக எதுவும் உறைக்கா விட்டால் அது தரமான நூல் அல்ல என்பது என் இலக்கிய அபிப்பிராயங்களில் ஒன்றாகும்.

3. ஒரு அனுபவத்தை விவரிக்கிற நல்ல கவியின் வார்த்தைகள் நமது ( அதாவது வாசகனின்) உள்ளத்தில் மறைவாகக் கிடக்கிற அனுபவங்களில் எதோ ஒன்றைப் பாதாளக் கரண்டி போலப் பற்றி இழுக்கிறது. எதொ புரிகிறமாதிரி தெரிகிறது. உடனடியாகவே இந்த அனுபவ எதிரொலிப்பு நிகழ்கிறபடியால் நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய செயல்., சிந்திப்பு எதுவும் இல்லாமலே, தானாகவே, ஒரு அனுபவம் இன்னொருவரின் அனுபவத்தை தட்டி எழுப்புகிற மாதிரி இருக்கிறது. அப்படித் தட்டி எழுப்பாது போனால், ஒரு அனுபவத்தைச் சித்தரிக்கிற வார்த்தைகள் படிப்பவன் உள்ளத்தில் எதிரொலியை எழுப்பாது போனால் அதை நல்ல கலை என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

4. கலை எனபது என்ன என்று யோசிக்கையில் அது சற்று சிரமமான விஷயந்தான். கடவுளை எடுத்துக் கொண்டு அதைச் சொல்லலாம் அல்லது கடவுளை மறுக்கிற வேதாந்தத்¨, பிரம்மவாதத்தை எடுத்துக் கொண்டு அதை நாம் தெளிவாக்கலாம். எந்த தெய்வத்தையுமே, எந்த நிர்க்குண பிரம்மத்தையுமே வார்த்தைகளில் அகப்படாதது என்று வர்ண்¢ப்பதுதான் நமது மரபு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட என்கிற நிர்குண பிரmமத்தையும், கடவுளையும் போன்றதுதான் இலக்கியமும்.

5. ஒருவகை மொழிகடந்த பொருள்தான் இலக்கியம். எனவே இலக்கியத்தை பூனை காலால் தூரத்தில் தொட்டுப் பார்ப்பது போல் தான் செய்ய முடியும்.

6.கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் ஒரு மயிரிழைதான் வித்தியாசம் இருக்கிறது.

7. இலக்கியம் ஒன்றும் (ஒன்றையும்) சொல்லாமலும் இருக்கலாம்.

8. எழுத்தாளன் அவனுடைய அரசியல், பொருளாதார, சமூகப் பின்னணியைப் பிரதிபலித்தே ஆக வேண்டும் என்பதில்லை. இந்த அம்சங்களோடு ஒத்துப் போகலாம். அல்லது எதிர்த்துக் கலகம் செய்யலாம். அது ஒரு பிரக்ஞா பூர்வமான செயல்.

Sunday, January 20, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள்.........(11 ) சி.சு.செல்லப்பா

1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப் பார்வை இருந்து ஏதாவது அதில் ஒரு நோக்கம் ஏற்ற முடியுமானால்தான் பேனாவைக் கையில் பிடிக்க வேண்டும்.

2. புதுமை, தன் தனிப்பார்வை, தொனிக்காக எழுத்துக்கு இடம் கிடைக்காது பிற்கால மதிப்பீட்டில். இன்று சூடாக விலை போவதை எண்ணி மகிழ்ந்து திருப்திப் பட்டுக் கொண்டுவிடக் கூடாது இளம் படைப்பாளி.

3. ஒரு நல்ல கலைப் படைப்பில், சிந்தனை, படிமம், உணர்ச்சி இவைகள் நெருங்கிக் கலந்து ஒரு முழுமை பெற்ற உருவம் அமைய ஏதுவாக இருக்கும்.

4. சிறுகதை ஆரம்பம் திடுதிப்பென 'காலப்' எடுத்த மாதிரியும் நாவல் ஆரம்பம் மெதுவாக முதல் எட்டு நகர்த்த ஆரம்பித்த மாதிரியும் நம் மனதில் படும். நாவல் களுக்கு ஆரம்பம் முடிவு சம்பந்தமாக சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் இன்றைய நாவல்கள் ஆரம்பமும் சிறுகதைக்கு ஏற்பட்டது போல புதிய சம்பிரதாயங்கள் பெற்று இருக்கின்றன. சிறுகதைகள் போலவே ஆரமப வரிகள் திடுதிப்பெனவும் ஆரம்பித்து இருக்கும். ஆனால் ஆரம்ப தொனி பொதுவாக சற்று சாவகாசமாகவேஇருக்கும். மந்தகதியிலே தகவல்கள் ஏறும். ஆகவே இந்த தொனியை வைத்துத்தான் வித்தியாசம்.

இன்னொரு விஷயமும் கூட. ஆரம்பம் சம்பந்தமாக வேறு சில குணங்களும் வேண்டி இருக்கிறது. சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களைக் கொடுப்பது ரொம்ப முக்கியமானது. நாவல் போல களம் விஸ்தீரணமாக இல்லை சிறுகதையில். காலம், இடம், நிகழ்ச்சி சம்பந்தமாக கதையம்சம் தாராளமாக யாத்திரை செய்ய அவகாசமும் இல்லை. ஒரே தொடர்ச்சியானாலும் நடுநடுவே தகவல்களுக்கு இடம் நாவல்களில் இருப்பது போல இல்லை. ஒரே தம், ஒரே மூச்சுப் பிடித்தல்தான். பலீன் சடுகுடுவில் ஒரே மூச்சில் போய் மறிப்பை எதிர்த்து காரியத்தை முடித்து விட்டு வரவேண்டும். கிளித்தட்டுக்குத் தங்கல்கள் உண்டு. கூட்டம் கூட்டமாகத் தங்கி மறிப்பைச் சமாளித்து ஒரு முடிவை எட்டலாம். ஆகவே சூசனையாகவும் ஊகையாகவும் தகவல்களை எடுத்த எடுப்பிலேயே கொடுத்து உணரச் செய்ய வேண்டும். அறாத ஓட்டம், தொடர்பு இருக்கிற பிரமை ஏற்படச் செய்ய வேண்டும்.
ஆரம்பத்துக்கு முன் ஏதேதோ நிகழ்ந்திருப்பதை எல்லாம் ஆரம்ப, தொடர்கிறவர் களில் சாயல் விழச் செய்ய வேண்டும். அப்போது நமக்கு நல்ல பகைப்புலம் உருவாகி நிற்கும்.

5. ஆசிரியர் கூற்றாகக் கதை சொல்வதில் தவறு இல்லை. அதுவும் ஒரு உக்திதான். ஆனால் ஆசிரியன் கதாபாத்திரங்கள் தங்கள் உயிர்த்துடிப்பைக் காட்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். நாவல்கள் போல பெரும் அளவுக்கு முடியாவிட்டாலும் குணச் சித்திரத்துக்கு சிறுகதையில் இடமுண்டு. நுணுக்கமாக முழு விவரமடங்கிய விவரிப்புக்கு இடமில்லாவிட்டாலும் உள்ளதாக எண்ணவும் இட்டு நினைக்கவும் ஏதுவாக பாவனையாக எழுதப் படத்தான் வேண்டும்.
'ஸீன் ஓ பயோலின்' சொல்வதுபோல் சவிஸ்தாரமான அதாவது முழுவிவரம் அடங்கியதாக செய்து விட்டால் பொம்மலாட்டப் பொம்மைகள் மாதிரி ஆகிவிடும். ஒரு வைக்கப்பட்ட நிலை, சம்பாஷணை, காட்டுகிற சமிக்ஞை, அவர்களது நினைப்போட்டம் இவைகளிலிருந்து அவர்களது குண விசேஷங்களை நாம் அறியலாம். கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும். தானே விளக்கிச் சொல்லிக்கொண்டே போக வாய்ப்பு இல்லை. அதுக்கு அவகாசமும் இல்லை.

Sunday, January 06, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்...........(10)த.ஜெயகாந்தன்

1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ் ஸெல்·ப்பீலிங்) இல்லை என்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அவனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெறவேண்டும். உருவம், உத்தி முதலிய நுணுக்கங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுத்தாயத்தின் வாழ்க்கைமுறையினால், ஏற்றத்தாழ்வுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன்.

2. சும்மாவானும் 'கிளி 'கீகீ' என்று கத்தியது, நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்று மந்தஹாசமாக வீசிக் கொண்டிருந்தது' என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட, எங்கெங்கே இதயங்கள் எப்படி எப்படியெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்கவேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.

3. வாழ்க்கை என்பது காதல் மட்டுமே அல்ல; ஏனென்றால் இங்கு நம்மில் பலர் வாழவே இல்லை. காதலென்பது நமது இளைஞர்களைப் பொறுத்தவரை வெறும் மனப் பிரமைதான். சமூகத்தில் 'வாழாதவர்களி'ன் வாழ்வுக்கு இலக்கியத்தில்கூட இடமே இல்லை. காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்க முடியாதவனைப் பற்றி யார் எழுதுவது? பூர்ண சந்திரனைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் அமாவாசை இருளில் அக்கம்பக்கத்தாருக்குத் தெரியாமல் சோரம்போகும் கைம்பெண்களைப் பற்றி யார் எழுதுவது?

4. கவிமனம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கவிதை தென்படும். அதுபோலவே, நீண்ட நெடிய இவ்வாழ்க்கைக்காதை சிறுகதை மனம் கொண்டவனுக்கு கதைகதைகளாய்ப் பூத்துச் சொரியும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.

5. ஓர் ஒலி, ஒரு சொல், யாரோ யாரிடமோ எதற்கோ சொன்ன அசரீரி போன்றதொரு வாக்கு, வேகமாய்ப் போகிற ஒரு வாகனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற போது, ஒரு நொடியில் கண்ணில் பட்டு மறைந்த காட்சி இவையாவும் ஒரு கவியின் உள்ளத்தில் பட்டுப் பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒரு வடிவமே நவீனகாலச் சிறுகதை ஆயிற்று; ஆகிவிடமுடியும்.

6. ஒரு நல்ல நோக்கமில்லாமல் எந்த நல்ல கலை வடிவமும் வர முடியாது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசையினால் எழுதப்படுவது சிறுகதை ஆகாது. வடிவ அமைப்பில் அது சிறுகதை என்று என்னதான் எழுதுபவனாலும், பத்திரிக்காரனாலும் நிறுவப்படினும், அது திரும்பவும் படிக்கத்தக்க சிறப்புடைய சிறுகதை ஆகாது. ஏன்? அதில் ஒரு நன்னோக்கமில்லை. அதன் நோக்கமே அது அதுவாக இருப்பது என்று அமைந்துவிட்டால், அது செயல் திறனற்ற சிறுகதையின் சிதைந்த வடிவமாகவே எஞ்சி நிற்கும்.

7. 'காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு' சேர்க்கும் சாத்திரம் சிறுகதை ஆகும்.இதில் கற்பனைக்கு இடமே இல்லை.