Tuesday, November 20, 2007

'எனது களஞ்சியத்திலிருந்து - 26

'எனது களஞ்சியத்திலிருந்து - 26
==========================


உயர்வு நவிற்சி அணி;
------------------

கவிதைக்கு 'உயர்வு நவிற்சி ரு சிறப்பான அணியாகும். 'உயர்வு நவிற்சி'என்பது சொல்ல வந்த பொருளை அதீதமாக வருணித்து கேட்பதற்கு இன்பம் தருவதாக வியக்க வைப்பது.

எடுத்துக்காட்டாக கண்ணகியை விதந்து வருணிக்கிற கோவலன், எளிய சொற்களில் -

'கண்ணே, மணியே, கட்டாணி முத்தே, கட்டிகரும்பே.............

என்று இயல்பாகப் பேசுவதாகக் கவிஞர் எழுதி இருக்கலாம். ஆனால்
இளங்கோவடிகள் உயர்வு நவிற்சி அணி அழகோடு,

'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே
காசறு விரையே! கரும்பே! தேனே'

என்று வருணிக்கும்போது வாசிக்கும் நமக்கு 'ரு சிலிர்ப்பு ஏற்படுகிறதில்லையா?
அது கவிஞனின் கற்பனைத் திறத்தை எண்ணி வியக்க வைக்கிறது. அப்படிச் சில
கற்பனை நயத்தை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இப்படி அநேக உயர்வு நவிற்சி
அழகை அனுபவிக்கலாம்.

சுந்தரர் பரவை நாச்சியார் என்கிற அழகிய பெண்ணைக் கண்டு
காதல் கொள்கிறார். அவள் அவரது கண்களுக்கு எப்படிக் காட்சி தருகிறாள்
தெரியுமா?

கற்பக விருட்சத்தின் பூங்கொம்பு 'ன்று எதிரே நிற்கிறதாம்.
மன்மதனின் பெருவாழ்வே "ர் உருவெடுத்து எதிரே நிற்பதாகத் தோன்றுகிறதாம்.
புண்ணியம் அனைத்தும் சேர்ந்த புண்ணியம் அவர் எதிரே நிற்பதாகக் கருதுகிறார்.
கண்களாகக்குவளை மலரையும், செவ்விதழ்களாகப் பவளத்தையும், முகமாகச் சந்திரனையும்,
கூந்தலாகப் புயலினையும் சுமந்து வாசனைக் கொடியொன்று கண்முன் துவள்கிறது.
"ர் அற்புதம் அவர் கண்முன்னே சிறு களிநடம்புரிவதாக அதிசயிக்கிறார்.

இப்போது சேக்கிழாரது பாடலைப் பார்க்கலாம்;

''கற்பகத்தின் பூங்கொம்போ!
காமன்தன் பெருவாழ்வோ!
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ! புயல் சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ!
அற்புதமோ! சிவன் அருளோ!
அறியேன் என்று அதிசயித்தார்.''

சுந்தரர் மட்டுமா? நாமும் தான் சேக்கிழாரின் இனிய சந்த அழகுடனான
கற்பனைநயம் கண்டு அதிசயித்து நிற்கிறோம்.

'விறலி விடு தூது' என்னும் கவியின்பக் களஞ்சியத்தை ஆக்கிய
சுப்ரதீபக்கவிராயர் 'ரு மோகன முகத்தைப் பற்றிச் சொல்லும்பொது,

''சோலைப் பசுங்குயிலை, சொன்னப் பசுங்கிளியைக்
கோலப் பருவமுலைக் கோமளத்தை, வேலையன்ன
காம ரசதாழிக் கரும்பைச் செழுங்கனியைச்
தேமல் இளங் கொங்கைத் திரவியத்தைக் - காமுகர்க்கு
அற்புதத்தைத் தேனை அதிமோக ரஞ்சிததத்தைக்
கற்பகத்தைச் சர்க்கரையைக் கற்கண்டை''

என்று உயர்வு நவிற்சி அணியை அடுக்கிக் கொண்டே போகும் கற்பனைத்
திறம்எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

மேலும் வரும் வருணனைகள் உயர்வு நவிற்சியின் உச்சம் எனலாம்

''கம்மியன் கையால் அடித்துக்
காய்ச்சி வெட்டித் தீராமல்
செம்மலரோன் கைம் மலரால்
செய்து விட்ட பொற்பாவை
கையால் பிடித் தொருவர்
கட்ட இதழ் கன்றாமல்
மையார் குழலார்
மடியிருக்கும் பூமாலை
"ங்கு மலைக் காட்டின்
உள்ளிருந்து தூங்காமல்
தூங்கு சப்ர மஞ்சமிசைத்
தூங்கும் நவரசத் தேன்
மொய்த்த மலைக் காட்டு
முள்ளூடு அலையாமல்
மெத்தையின் மேலேறி
விளையாடும் தோகை மயில்
கொம்புதொறும் போய்த் தாவிக்
கூவித் திரியாமல்
அம்பொன்மணி ஊசலிருந்து
ஆடும் குயிற் பேடு
கொஞ்சி மொழி கூறிக்
கூட்டிற் கிடவாமல்
செஞ்சொல் மதனகலை
செப்புங் கிளிப் பேடு''

( பொற்பாவை - சிற்பி கையால் அடித்துச் செய்யவில்லை. பிரும்மா தன்
கையால்செய்த பாவை.

பூமாலை - பூத்தொடுப்பவர் கைபட்டு தொடுக்கும்போது கன்றிபோகாத
மாலை.

தேன் - உயர்ந்த மலைகளின் உயரத்தில் தூங்காமல் மெல்லிய
பூவணையில் தூங்குகிற சுவைமிக்க தேன்.

தோகைமயில்-மலைக்காட்டு முள்ளில் உலவாது மெத்தைமேல்
விளையாடும் மயில்.

குயிற்பேடு - பெண் குயில். இக் குயில் மரங்களில் தாவிக் குதித்துக்
கூவாது. இது ஊஞ்சலில் இருந்து ஆடுங் குயில்.

கிளிப்பேடு - பெண்கிளி. இது கூட்டினுள்ளே அடைபட்டுக் கிடந்து குழறி
மொழிபகராது. இக் கிளி மன்மதக்கலை பேசும் )

கம்பனது ராமகாவியத்தில் காணப்படும் எண்ணற்ற உயர்வு நவிற்சி
அணிகள் நம்மை இன்புறுத்துவன.

ராமனது பட்டாபிஷேகக் காட்சியில் 'ரு பாடலில் உயர்வு நவிற்சி
அணியை அமைத்திருக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.

மரகதமலை 'ன்று. அதன்மீது செந்தாமரை மலர்
காடாகப் பூத்திருக்கிறது. அம்மலையில் வேல்போன்ற கன்களை உடைய மயில் 'ன்று
வீற்றிருக்கிறது;

''மரகத சைலம் செந்தா
மரை மலர்க்காடு பூத்து
திரைகெழு கங்கை வீசும்
திவலையால் நனைந்து செய்ய
இருகுழை தொடரும் வேற்கண்
மயிலொடும் இருந்தது ஏய்ப்பப்
பெருகிய செவ்வி கண்டார்
பிறப்பெனும் பிணிகள் தீர்ந்தார்''

( சைலம் - மலை; திரை - அலை; திவலை - நீர்த்துளி; குழை - காது.
காதளவு நீண்ட கண்கள். இங்கே மரகதமலையாக ராமனையும், மயிலாக
சீதையையும் அலங்கரித்தது உயர்வு நவிற்சி. அம் மயிலோடு இருந்த மரகத
மலையைக் காணும் பேறு பெற்றவர்கள் பிறவி எனும் பிணிகள் தீர்ந்து பெருவாழ்வு பெற்றார்.)

இலக்கியக் கடலில் முத்துக் குளிப்பவர் இதுபோன்ற எண்ணற்ற
அழகுகளைக் கண்டு இன்புறலாம்.

- ஆதாரம் ; 'ராய.சொ' வின் 'காவிரி'

--- 0 ---

1 comment:

Sri Srinivasan V said...

Sir,
Relished & enjoyed your compilation on the great TAMIL verses.
Thank you sir.
Namaskarams,
srinivasan.