Sunday, January 18, 2009

எழுத்துக்கலைபற்றி இவர்கள் -38 -மாக்சிம் கார்க்கி.

1. கலைஞன் என்பவன் தன் நாட்டின், தன்னுடைய சமுதாயத்தின் செவியாக,
கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்.

2. எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கிய வரலாறு பற்றிய பரிச்சயம் இருக்க
வேண்டும்; எந்தக் கலையானாலும் அதன் வரலாற்றினையும் அதன் வளர்ச்சியினையும் அறிந்திருக்க வேண்டும்.

3. எந்த நூலானாலும் நேர்மையுடனும், மக்கள் மீதான நேசத்துடனும், நல்லெண்ணத் துடனும் எழுதப்படுமானால் அது பாராட்டினைப் பெறும்.

4. மனதின் தவறான புரிதலுடனும், தவறான மனஎழுச்சியுடனும் அமைந்தாலும்
எந்தவிதமான அறிவும் உபயோகமானதுதான்.

No comments: