Sunday, February 01, 2009

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி

1. சிறுகதை வாமனாவதாரத்தைப் போன்ற கலை உருவம். நல்ல சிறுகதைக்கு
அடையாளம் ஒன்றே: அதைப் படித்து நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.

2. நாவல், குறுநாவல், சிறுகதை எதுவானாலும் எழுதும்போது, எழுத்தாளர்கள் தங்களது
படைப்பில் அழுத்தமான 'மாரல்' என்ற ஒன்று இருக்கும் விதத்தில் எழுத வேண்டும்.
'மாரல்' இல்லாமல் எழுதுவது கதையே இல்லை. அவர்கள் அப்படி எழுதுவதைவிட
எழுதாமல் இருப்பதே சிறந்தது.

3. சிறுகதை என்பபது பெருங்கதையை உடைத்தெடுத்த சிறிய துண்டு அல்ல. அது தனிப் பண்பும் முழுமையும் கொண்ட ஒரு இலக்கிய அமைப்பு. சிறிய அமைப்புக் குள்ளேயே அதற்குப் பிரத்தியேகமான ஒரு ஜீவன் உண்டு. ஒரே ஒரு நெருக்கடியை
மையமாக வைத்து அதைச் சுற்றிப் புனையப்படும் இலக்கியம் சிறுகதை. ஒரு குறிப்பிட்ட கருத்ததை அது பளிச்சென்று விளக்கும். இம்மாதிரியான சிறுகதைப் பாணியில்
உபநிஷங்களிலே ஆங்காங்கு காணலாம்.

1 comment:

நிலாமகள் said...

//ஒரே ஒரு நெருக்கடியை
மையமாக வைத்து அதைச் சுற்றிப் புனையப்படும் இலக்கியம் சிறுகதை.//

முத்தான கருத்து!