Sunday, May 30, 2004

நினைவுத் தடங்கள் - 18

என் உடைக்காகக் கேல்¢ செய்த சக ஆசிரயர்கள் நாளடைவ்¢ல் பழகிப்போய் அதை அங்கீகரித்து விட்டார்கள். ஒரு மூத்த தமிழாசிரியர், தலை பொல்லென்று நரைத்து, எப்போதும் வெள்ளுடையில் இருப்பவர்- அதன் காரணமாகவே அவரிடம் எங்களுக்கெல்லாம் ஒரு மரியாதை ஏற்படுத்தியிருப்பவர்-மட்டும் ஒரு கருத்தைச் சொன்னார்.''கவர்ச்சியான உடைதான் மரியாதையை ஏற்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. மகாத்மா காந்தி இடுப்புத் துண்டோடுதான் இருந்தார்.
அவரது உடையாலா அவருக்கு மரியாதை ஏற்பட்டது?'' என்றார். நான் சொன்னேன்: "காந்தி
அடிகள் மகாத்மா ஆன பிறகுதான் தன் ஆடை பற்றிக் கவலைப் படவில்லை. அதற்கு முன் அவர் மேனாட்டு உடையில்தான் இருந்தார். நான் மஹாத்மா அல்ல". அதற்குப் ப்¢றகு என் உடை பற்றிய சர்ச்சை என் சகாக்களிடையே எழுவதில்லை.

வேறுவகையிலும் என்னை அதைரியப்படுத்தியவர் உண்டு. ஆனால் அது என்மீது கொண்ட
அக்கறையால்தான். நான் எப்போதும் உரத்துதான் பாடம் சொல்வேன். ஒரு வகுப்பின் பக்கத்து அறைதான் ஆசிரியர் ஓய்வறை. நான் பேசுவது அந்த அறையில் கேட்கும். நான் வகுப்பை முடித்துவிட்டு வந்து ஓய்வறையில் நுழைந்ததும், ஒரு மிக மூத்த ஆசிரியர்- நான் 6- 8 வகுப்பு வரை படித்த நடுநிலைப் பள்ளியில் எனக்கு ஆசிரியராய் இருந்தவர்- இப்போது சக ஆசிரியர், "ஏண்டா சபா, ஏன் இப்படித் தொண்டத்தண்ணிக் காயக் கத்துறே? உனக்கு மட்டும் ஜில்லா போர்டுலே நெய் அலவன்சா தர்ரான்? இப்பவே இப்படிக் கத்திப் பாடம் நடத்தினியானா
சீக்கிரமே செத்துப் போவே?' என்பார். 'அதுக்கில்லே, உரத்துப் பேசுலேன்னா கடைசி வரிசைப் பையன்கள் கவனிக்க மாட்டாங்க!' என்பேன். ''அவன் கவனிக்கணுங்கிறத்துக்காக எங்க தூக்கத்தக் கெடுக்கிறீரே- இது நியாயமா?" என்று கேட்பார் எப்போதும் அனந்தசயனத்தில் இருக்கும் ஒரு ஆசிரியர். உரத்துப் பேசுவதில் மாணவரிடையே ஒரு விழிப்புணர்வு இருப்பதைக் கண்டிருக்கிறேன். மேலும் நான் பாடம் நடத்தும்போது நாற்காலியில் உட்காருவதில்லை.
உட்கார்ந்து நடத்துவதால் பின் வரிசை மாணவர்கள் கவனிக்காமலும் விஷமம் செய்யவும் வாய்ப்புண்டாகும் என்பதால் என் பணிக்காலம் முழுதிலும் -36 ஆண்டுகளில்- ஒரு நாள் கூட
உட்கார்ந்து பாடம் நடத்தியதில்லை. இதுவும்கூட மாணவரிடையே எனக்கு மரியாதையை அதிகமாக்க்¢ற்று.

இன்னொரு வ்¢ஷயத்திலும் மாணவரிடயே ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அது என் நினைவாற்றல். அது நான் அண்ணாமலையில் பயின்றபோது எனது முதல்வர் பேராசிரியர் ஆர்.ராமானுஜாச்சாரி அவர்களிடம் கற்றது. "உனக்கு நிறைய நண்பர்கள் வேண்டுமென்றால்
அவர்களது பெயர்களை மறவாது பெயர் சொல்லி அழைக்க வேண்டும்''என்று யாரோ எழுதியதை நான் இன்றுவரை மறக்க வில்லை. இன்றும் - 40 ஆண்டுகளுக்குப் பிறகும் - என் பழைய
மாணவர்களைப் பார்க்கும்போது தடுமாறாமல் பெயர் சொல்லி விசாரிப்பேன். அவர்களது இனிஷியலைக்கூட, படித்த வகுப்புப் பிரிவு, உட்கார்ந்த இடம் முதற்கொண்டு சொல்லுவேன். அது அவர்களுக்கு ஆச்சரியத்தையும் மேலும் மரியாதையையும் உண்டாக்கும். வருகைப் பதிவு எடுக்கும்போதும் குனிந்தபடியே இராமல் பத்து பெயருக்கு ஒரு தடவை பார்த்துக் கொண்டு
தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிற மாதிரி பார்க்காமலே அழைப்பேன். இதெல்லாம் இளம் வயதில் மாணவர்க்கு பெரிய பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஆசிரியரிடம் ஒரு ஈடுபாட்டை
-யும் பிரமிப்பையும் ஏற்படுத்துபவை. ஆசிரி¢யர் தன்னை விட எல்லா வ்¢தத்திலும் பெரியவர்தான் என்று மாணவரிடையே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினால் தான் நமது போதனையில் அவர்களுக்குக் கவனமும் பிடிப்பும் ஏற்படும் என்பது என் அனுபவம்.

அதோடு என் 'நல்லொழுக்கக் கல்வி' (Moral education) வகுப்பில் மற்றவர்களைப் போல பாடம் நடத்தவோ, 'ஏதாவது படிங்க' என்றோ விட்டு விடுவதில்லை. பெரிய வகுப்புகளில், நான் படித்து ரசித்த எழுத்தாளர்களையும் அவர்களது கதைகளையும் கவிதைகளையும் சொல்லி இலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்தினேன். தமிழாசிரியர்கள் செய்யவேண்டியதை - அவர்கள் அக்கறை காட்டாததை - நான் செய்தேன். பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும், கல்கியும்,
புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், சுந்தர ராமசாமியும் என்னால் அறிமுகப்படுத்த பட்டார்கள்.
இது பெரிய ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்தியது. என் வகுப்பு இல்லை என்றாலும் மற்ற
வகுப்புகளில் யாராவது ஆசிரியர் வரவில்லை என்றால் எனக்கு ஓய்வாக இருந்தால் அந்த வகுப்பு மாணவர்கள் என்னை வந்து அழைத்துப்போய் இலக்கியம் பேசச் சொல்லுவார்கள். அப்படிக் கேட்டவர்களில் பலர் என் தாக்கத்தால் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பரிணமித்தார்கள். அவர்களில் குறிப்பிடத்த தக்க இருவர் கவிஞர் பழமலய்யும் கவிஞர் கலபனா
தாசனும் ஆவர்.

நான் வகுப்பாசிரியராக இருந்த ஒரு வகுப்பில் வெள்ளிக்கிழமை கடைசி பாடவேளை
நல்லொழுக்கக் கல்வி. அந்த வகுப்பில் நான் ஆண்டு முழுதும் கல்கியின் 'சிவகாமி சபதத்தை'
முக்கால் மணி நேரம் சுவாரஸ்யமாய்ச் சொன்னேன். மணி அடிப்பதற்குச் சரியாக, ஒரு சஸ்பென்ஸில் முடிகிறமாதிரி பார்த்துக் கொள்வேன். மனி அடித்ததும் 'மீதி அடுத்த வாரம்' என்று எழுந்து விடுவேன். 'சார் சார்! இன்னும் கொஞ்சம்" என்று பெண்கள் கெஞ்சுவார்கள்.
அந்த வகுப்பில் பாதிக்குமேல் அக்ரஹாரத்துப் பெண் குழந்தைகள். அவர்கள் வெள்ளிகிழமை கடைசிப் பாட வேளை என்றால் உயிரை விடுவார்கள். இப்படி நான் கணித ஆசிரியராக மட்டு மின்றி கதாசிரியராகவும் மாணவரிடையே புகழ் பெற்றேன். அதை இன்றளவும் மறக்காத மாணவிகளை இப்போதும் சந்திக்கிறேன்.

ஒரு தடவை, நான் அக்ரஹாரத்தில் வசித்த ஒரு வழக்கறிஞரை ஒரு வேலையாகப் பார்க்கச் சென்றேன். அவரது மகன் என்னோடு கல்லூரியில் படித்தவன். அதனால் உரிமையோடு என்னை ஒருமையில் அழைத்துப் பேசுவார். அவரது மகள்கள் இருவர் என் வகுப்பில் படித்தார்கள். நான் போனதும் அவர், "வாப்பா சபாநாய்க்கம்! ஆமா, அப்புறம் அந்த நாகநந்தி என்னானான்?'' என்றார். எனக்குப் புரியவில்லை. 'அதாம்பா! நீ என்னவோ வெள்ளி¢க் கிழம அன்னிக்கு கல்கியோட சிவகாமி சபதம் கதை சொலிண்டு வரயாம். எங்க அக்ரஹாரமே அன்னிக்கு சாய்ங்காலம் 'எப்படா பசங்க ஸ்கூல்லேர்ந்து வரும்'னு காத்திண்டிருக்கு!" என்றார். பிறகு கேட்டுத் தெரிந்து கொண்டேன் - என் மாணவிகள் என்னிடம் கதை கேட்டுவிட்டு வந்து அப்படியே அடிமாற்றாமல் அவர்கள் அம்மாக்களிடம் வந்து பிளேட் வைத்திருக்கிறார்கள் என்று.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: